பொது அறிவு தமிழில் @general_knowledge_tamil Channel on Telegram

பொது அறிவு தமிழில்

@general_knowledge_tamil


பொது அறிவை வளர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த டெலகிராம் சேனல் துவங்கப்பட்டுள்ளது.
போட்டி தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவ மாணவியருக்கு இந்த சேனல் உதவிகரமாக இருக்குமென நாங்கள் நம்புகிறோம்.
எங்களோடு இணைந்து பயன்பெறுங்கள்.
நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻

பொது அறிவு தமிழில் (Tamil)

பொது அறிவு தமிழில் என்று அழைக்கப்படும் இந்த டெலகிராம் சேனல், பொது அறிவை வளர்க்க வேண்டும் தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவ மாணவியருக்கு உதவும் முகமாக உள்ளது. இந்த சேனல் போட்டி முறையாக அறிவு மேம்படுத்த, அறிந்துகொள்ள, புதிய அறிவை கிடைக்க உதவுகிறது. மற்றும் இந்த சேனலில் உள்ள தகவல்கள் மாணவர்களுக்கு குறைந்த நேரம் செலவழிக்கையில் அறிவு மீளும். இணைந்து இசையமைக்கவும், புதிய அறிவு வாசிக்கவும் உதவும் இந்த டெலகிராம் சேனலை மற்றவர்களுடன் பகிரவும். உங்களுக்கு அறிவு மீள்கிறது என்பதை உறுதியாக அறிக்கிறோம். நாங்கள் உங்களோடு இணைந்து பயன்பெற காத்திருக்கிறோம். நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻

பொது அறிவு தமிழில்

19 Feb, 01:13


*பிப்ரவரி 19,*
*நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்*

உலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் 1473ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி போலந்து நாட்டின் தோர்ன் நகரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் மைகொலாஜ் கோபர்நிக். பல்கலைக்கழகத்தில் படித்தபோது, நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் என்று மாற்றிக்கொண்டார்.

எந்த தொலைநோக்கி கருவியும் இல்லாமலேயே இவரது ஆராய்ச்சிகள் நடைபெற்றன. வானியல் குறித்து அதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த புவி மையக் கோட்பாட்டை மறுத்து சூரிய மையக் கோட்பாட்டை வகுத்தார்.

இவரது காலத்துக்கு பிறகே இவரது கோட்பாடுகளை கலீலியோ உள்ளிட்ட பிரபல வானியலாளர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆன் தி ரெவல்யூஷன் ஆஃப் தி ஹெவன்லி ஸ்பியர்ஸ் என்ற நூலில் தனது ஆய்வுகள் குறித்து எழுதியுள்ளார். இதில் பூமி தனது அச்சில் சுழல்கிறது என்பதையும், பூமியை சந்திரன் சுற்றி வருகிறது என்றும் துல்லியமாக குறிப்பிட்டிருந்தார்.

வானியல் ஆய்வாளராக மட்டுமல்லாமல், சட்ட நிபுணர், மருத்துவர், பழங்கலை அறிஞர், மதகுரு, ஆளுநர், அரசு தூதர் என பல துறைகளில் தனது பங்களிப்பை வழங்கிய நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் தனது 70வது வயதில் (1543) மறைந்தார்.

பொது அறிவு தமிழில்

19 Feb, 01:07


*பிப்ரவரி 19,*
*உ.வே.சாமிநாத ஐயர்*

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் 1855ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி கும்பகோணத்துக்கு அருகே உத்தமதானபுரம் என்ற சிற்றூரில் பிறந்தார்.

பழந்தமிழ் ஏடுகள் பழையனவாக இருந்ததால் அவற்றைப் புதுப்பிக்க வேண்டும் என்று அழிந்து மறைந்து போகும் நிலையில் இருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றை தேடித் தேடி அச்சிட்டு பதிப்பித்தார்.

இதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகறியச் செய்தார். அவற்றை அழிவிலிருந்து காத்ததோடு அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கும் தமிழின் பெருமையை உணர்த்தியுள்ளார்.

தமிழ் இலக்கியத்துக்காக இறுதிவரை பணியாற்றிய இவர் 87வது வயதில் (1942) மறைந்தார்.

பொது அறிவு தமிழில்

18 Feb, 01:21


*பிப்ரவரி 18,*
*ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்*

இந்திய மக்களுக்கு ஆன்மீக ஞான ஒளியாய் திகழ்ந்த ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 1836ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி, இந்தியாவின் மேற்குவங்காள மாநிலத்தில் ஹூக்லி மாவட்டத்திலுள்ள காமர்புகூர் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் காதாதர் சட்டோபாத்யாயர்.

பொருளாதார நிலை காரணமாக, தன்னுடைய சிறு வயதில் கொல்கத்தாவிற்கு வேலைத் தேடி சென்றார் இராமகிருஷ்ண பரமஹம்சர். அங்கே தன்னுடைய அண்ணனுக்கு உதவியாக கோவிலில் வேலைப் பார்த்து வந்தார். அவர் இறந்தவுடன் அதே காளி கோவிலின் பூசாரியானார்.

இவர் ஆன்மீகச் சிந்தனைகளை உலகெங்கும் பரப்பினார். இவருடைய சீடர்களுள் ஒருவர் நரேந்தரநாத் தத்தா என அழைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் ஆவார்.

'கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்' என்பதை தெளிவுப்படுத்திய ராமகிருஷ்ண பரமஹம்சர் 1886ம் ஆண்டு தனது 50வது வயதில் மறைந்தார்.

பொது அறிவு தமிழில்

18 Feb, 01:16


(*18 பிப்ரவரி 1929*)

*ஆஸ்கார் விருது முதன் முதலாக அறிவிக்கப்பட்ட தினம்.*

ஆஸ்கார் விருதுகள் என்று பொதுவாக அழைக்கப்படும் அகாடமி விருதுகள் அமெரிக்காவின் திரைத்துறைக்கான மிக முக்கிய விருதுகளில் ஒன்றாகும்.

உலக அளவில் தொலைகாட்சி வாயிலாக காணப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விருது வழங்கும் விழாவாக இது கருதப்படுகிறது. 1929ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி தான் முதல் அகாடமி விருது வழங்கும் விழா நடந்தது.

இன்று உலக அளவில் இவ்விருதுகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உலக சினிமாவின் முதன்மையான விருதாக இது கருதப்படுகிறது.

பொது அறிவு தமிழில்

16 Feb, 02:47


*பிப்ரவரி 16,*
*தாதாசாஹேப் பால்கே*
*நினைவு தினம்*

பன்முகத்திறன் கொண்ட இவர், திரைப்படம் எடுப்பதை தன் லட்சியமாக வகுத்துக்கொண்டார். சினிமா பற்றி தெரிந்தவர், இவர் ஒருவர்தான் என்பதால் எழுத்து, இயக்கம், கேமரா என எல்லாவற்றையும் இவரே மேற்கொண்டார்.

1913ம் ஆண்டு இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ராஜா ஹரிச்சந்திராவை வெளியிட்டார். இதன்மூலம் இந்தியாவில் சினிமாவை அறிமுகப்படுத்திய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். ஹிந்துஸ்தான் பிலிம் கம்பெனியை தொடங்கினார்.

தனது சினிமா வாழ்க்கையில் மோஹினி பஸ்மாசுர், சத்யவான் சாவித்ரி, லங்கா தஹன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மற்றும் சில குறும்படங்களை தயாரித்துள்ளார்.

வாழ்நாள் முழுவதையும் திரைப்படத்துறைக்காகவே அர்ப்பணித்த இவர் 73வது வயதில் 1944ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி மறைந்தார். இவரது நினைவைப் போற்றும் வகையில், திரைத்துறையில் தாதாசாஹேப் பால்கே விருதினை இந்திய அரசு, 1969ம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.

பொது அறிவு தமிழில்

15 Feb, 02:21


உலகின் முதல் கம்ப்யூட்டர் ENIAC அமெரிக்கா
University of Pennsylvania ல் அறிமுகமான தினம் இன்று.
( *15 பிப்ரவரி 1946*)

(Electronic Numerical Intergrator Analizer and Computer -ENIAC) என்பது இரண்டாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்க ராணுவத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு மின்னணுவியல் கணினி ஆகும்.
ராணுவத்தின் ஏவுகணைதாக்குதல் சார்ந்த தேவைகளுக்காக இது வடிவமைக்கப்பட்டது.

இதுவே உலகின் முதல் முழுமையான மின்னணுவியல் கணினியாக கருதப்படுகிறது.

இக்கணினியின் எடை 30 டன், நீளம் 100 அடி,
உயரம் 08 அடி.
இதில் 17,468 வெற்றிடக் குழாய்கள்
(Vacuum Tubes) பயன்படுத்தப்பட்டன. இதன் காரணமாக இதனை இயக்க 200 கிலோவாட் மின்சாரம் தேவைப்பட்டது.
அத்தோடு மிக அதிகளவான வெப்பத்தையும் வெளியிட்டது.

பொது அறிவு தமிழில்

13 Feb, 01:19


*பிப்ரவரி 13,*
*உலக வானொலி தினம்*

ஐக்கிய நாடுகள் சபையில் 1946ம் ஆண்டு வானொலி நிறுவப்பட்டது.

யுனெஸ்கோவின் 36வது பொதுச்சபை கூட்டத்தில் 2011ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி உலக வானொலி தினமாக அறிவிக்கப்பட்டது.
பிறகு 2012ம் ஆண்டு முதல் ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13ம் தேதியை உலக வானொலி தினமாக அறிவித்தது.

வானொலி ஒலிபரப்பு சேவையை கொண்டாடவும், பல நாட்டு வானொலியாளர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாறிக் கொள்வதனை ஊக்குவிப்பதற்கும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பொது அறிவு தமிழில்

13 Feb, 01:17


*பிப்ரவரி 13,*
*சரோஜினி நாயுடு*

இந்தியாவின் 'கவிக்குயில்' என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு 1879ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார்.

இவருக்கு சிறுவயதில் இருந்தே கவிதை எழுதுவதில் நாட்டம் அதிகம். இவரது படைப்புகளால் கவரப்பட்ட ஹைதராபாத் நிஜாம், வெளிநாடு சென்று படிக்க உதவித்தொகை வழங்கினார்.

இவர் எழுதிய The Golden Threshold, The Bird of Time, The Broken Wing ஆகிய புத்தகங்கள் குறிப்பிடத்தக்கவை. 1905ம் ஆண்டு வங்கப் பிரிவினையின்போது இந்திய தேசிய சுதந்திர இயக்கத்தில் இணைந்தார்.

1925ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்திஜி இவரை செல்லமாக 'மிக்கி மவுஸ்' என்பார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, இவர் உத்தரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும், முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றார்.

பெண்களுக்கு பெருமை சேர்த்த சரோஜினி நாயுடு 70வது வயதில் (1949) மறைந்தார். 20ம் நூற்றாண்டின் இணையற்ற பெண்மணிகளில் ஒருவராக திகழ்ந்த இவரது பிறந்தநாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

பொது அறிவு தமிழில்

11 Feb, 02:11


நடனமாடும் செடி:

'டெஸ்மோடியம் கைரான்ஸ்' எனும் தாவரவியல் பெயர் கொண்ட செடி, 2 முதல் 4 அடி வரை வளரும்.
இச்செடிக்கு வெப்பம் அதிகம் தேவை.
இச்செடியில் உள்ள சிறிய இலைகள் சூரிய ஒளிக்கு ஏற்ப அனைத்து திசையிலும் நகர்கிறது.
இது பார்ப்பதற்கு நடனம் ஆடுவதை போல இருக்கும். இதனால் 'நடனமாடும் தாவரம்' என அழைக்கப்படுகிறது.
இச்செடியில் 'பிங்க்' நிற மலர்கள் பூக்கின்றன.
இவை வங்கதேசம், இலங்கை, பூடான், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், மியான்மர், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகின்றன.

பொது அறிவு தமிழில்

10 Feb, 01:37


பிரபல தொழிலதிபரும், கல்வியாளருமான
M. Ct. M. சிதம்பரம் செட்டியார்
முதன்முதலாக காரைக்குடியில் Indian Overseas Bank ஐ துவக்கிய தினம் இன்று.
( *10 பிப்ரவரி 1937*)

இதன் தொடர்ச்சியாக சென்னை, பர்மா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கையிலும் இதன் கிளைகள் துவங்கப்பட்டு தற்போது சுமார் 3500 கிளைகளுடன் சர்வதேச அளவில் இயங்குகிறது.

பொது அறிவு தமிழில்

09 Feb, 01:16


தர்மபுரி மாவட்டத்திலிருந்து பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டம்
உருவாக்கப்பட்ட தினம் இன்று.
( *09 பிப்ரவரி 2004*)

பொது அறிவு தமிழில்

08 Feb, 01:11


*பிப்ரவரி 08, ஜாகீர் உசேன்*

இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவரான ஜாகீர் உசேன் 1897ம் ஆண்டு பிப்ரவரி 08ம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தார்.

இவர் சுதந்திரப் போராட்ட இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார். ஆதாரக் கல்வி முறை குறித்தும், கல்வி வளர்ச்சி பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார். பிளேட்டோவின் 'குடியரசு' நூலை உருது மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

காந்திஜி அழைப்பின் பேரில் இந்திய உயர்நிலைப் பள்ளிக் கல்வி வாரியத் தலைவராக பொறுப்பேற்றார். கல்வி சீர்திருத்தத்திற்காக பல திட்டங்களை வகுத்தார். யுனெஸ்கோ நிர்வாக வாரிய உறுப்பினராக பணியாற்றினார்.

1956ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே பீகார் மாநில ஆளுநராகப் பதவியேற்றார். 1962ம் ஆண்டு குடியரசு துணைத் தலைவராகவும், 1967ம் ஆண்டு இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 'இந்தியா என் வீடு. இந்தியர்கள் அனைவரும் எனது குடும்பத்தினர்' என்று கூறியவர்.

இவருக்கு பத்ம விபூஷண் விருது (1954), பாரத ரத்னா விருது (1963) வழங்கப்பட்டுள்ளது.ஜாகீர் உசேன் தனது 72வது வயதில் (1969) மறைந்தார்.

பொது அறிவு தமிழில்

07 Feb, 01:20


*பிப்ரவரி 07,*
*தேவநேயப் பாவாணர்*

மொழிஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் 1902ம் ஆண்டு பிப்ரவரி 07ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தார். இவரின் இயற்பெயர் தேவநேசன்.

1925ம் ஆண்டு சிறுவர் பாடல் திரட்டு என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது. இவர் 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய இந்திய மொழிகள், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.

இவர் 1974ம் ஆண்டு தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின் (Tamil Etymological Project) முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்.

இவர் 'உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன்', 'தமிழ் திராவிட மொழிகளுக்கு தாய்' என்று கூறியவர். தமிழுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட தேவநேயப் பாவாணர் தனது 78வது வயதில் (1981) மறைந்தார்.

பொது அறிவு தமிழில்

06 Feb, 03:59


வில்லியம் கோட்டை என்ற பெயரில் இருந்த இந்திய ராணுவத்தின் கிழக்குக் கட்டளையின் தலைமையகத்தை 'விஜய் துர்க்' என்று இந்திய ராணுவம் பெயர் மாற்றியுள்ளது.

பொது அறிவு தமிழில்

06 Feb, 01:36


*பிப்ரவரி 06,*
*கான் அப்துல் கஃபார் கான்*

பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், எல்லைக் காந்தி என்றும் அழைக்கப்படும் கான் அப்துல் கஃபார் கான் 1890ம் ஆண்டு பிப்ரவரி 06ம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணம் உத்மான்ஜாய் என்ற கிராமத்தில் பிறந்தார்.

காந்திஜியின் அகிம்சை கொள்கைகளாலும், போராட்ட முறைகளாலும் கவரப்பட்டு அரசியலில் நுழைந்தார். இவர் மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர். அஞ்சுமான் என்ற அமைப்பை உருவாக்கிய இவர் அதன்மூலம் தன் மக்களுக்கு கல்வி கற்பித்தல், அன்பு வழியை போதித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டார்.

பின்பு தனது அமைப்பை காங்கிரஸுடன் இணைத்தார். 1929ம் ஆண்டு குதாய் கித்மத்கர் என்ற அமைதி இயக்கத்தை தொடங்கினார். சமூக சீர்திருத்தத்திற்கும், பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவும் இந்த அமைப்பு உதவியாக இருந்தது.

இவருக்கு பாரத ரத்னா விருது 1987ம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற முதல் வெளிநாட்டவர் இவர்தான். பாட்ஷா கான் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார் கான் தனது 97வது வயதில் (1988) மறைந்தார்.

பொது அறிவு தமிழில்

04 Feb, 01:19


உலகமே வியந்து பார்க்கும் சோழர்களின் கட்டிடக்கலை....
பிடித்து இருந்தால் பகிருங்கள்...
🔥💪🙏🇮🇳

பொது அறிவு தமிழில்

03 Feb, 14:15


2025 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஐசிசி U19 மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது. 🙌🏏

பொது அறிவு தமிழில்

02 Feb, 03:16


*பிப்ரவரி 02,*
*உலக ஈரநிலங்கள் தினம்*

ஈரநிலங்களைப் பாதுகாப்பதன் மூலம் பல்லுயிர் வளங்கள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிப்ரவரி மாதம் 02ம் தேதி 1971ம் ஆண்டில் ஈரான் நாட்டின் கரீபியன் கடற்பகுதியில் ராம்சர் (Ramsar) என்னுமிடத்தில் ஈரநிலங்களைப் பாதுகாத்தல் சம்பந்தமாக நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டே ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 02ம் தேதி அன்று சர்வதேச அளவில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் ஏறக்குறை 1112 ஈரநிலப்பகுதிகள் காணப்படுவதுடன் அவை மொத்தமாக 89.37 மில்லியன் ஹெக்டர் நிலப்பகுதிகளைக் கொண்டிருக்கின்றன.

சுற்றுலா தலங்களை உருவாக்குதல், ரியல் எஸ்டேட் தொழில்கள் ஆகியனவும் நமது நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளும், பராமரிப்பு இன்மையும் இந்த நிலங்களை பாழ்படுத்திவருகிறது. எனவே, இந்த நிலங்களை பாதுகாக்கவும் அதன் பயன்களை மக்களிடம் கொண்டு செல்லவும் இந்த தினத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

பொது அறிவு தமிழில்

01 Feb, 00:58


*பிப்ரவரி 01,*
*ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்*

விடுதலைப் போராட்ட வீரரும், சென்னையின் முன்னாள் முதல்வருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 1895ம் ஆண்டு பிப்ரவரி 01ம் தேதி திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் கிராமத்தில் பிறந்தார்.

இவர் மிக இளம்வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைப்பதில் பெரும் பங்காற்றினார்.

இவர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக மார்ச் 23, 1947ம் ஆண்டு முதல் ஏப்ரல் 06, 1949ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். இவரது ஆட்சிக்காலத்தில் தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குள் செல்வதற்கான முழு உரிமை அதிகாரச் சட்டம் 1947ம் ஆண்டு இயற்றப்பட்டது. ஜமீன்தார் இனமுறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார்.

முதல்வர் பதவியிலிருந்து விலகிய பிறகு இவரது மனம் ஆன்மீகத்திலும், சமூக சேவையிலும் நாட்டம் கொண்டது. வள்ளலாரால் ஈர்க்கப்பட்டு, சமரச சுத்த சன்மார்க்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். பல தொண்டு அமைப்புகளை நிறுவினார்.

நேர்மையும், துணிச்சலும் மிக்க அரசியல்வாதியாகப் போற்றப்படும் இவர், 1970ம் ஆண்டு தனது 75வது வயதில் மறைந்தார்.

பொது அறிவு தமிழில்

01 Feb, 00:56


இந்தியாவின் தேசியப்பறவையாக( National bird of India )
தேர்ந்தெடுக்கப்பட்ட தினம் இன்று.
( *01 பிப்ரவரி 1963*)

பொது அறிவு தமிழில்

29 Jan, 11:58


இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது 🇮🇳

GSLV-F15/ NVS-02 வெற்றிகரமாக NVS-02 வழிசெலுத்தல் செயற்கைக்கோளை சுமந்து சென்றது.

ஜெய்ஹிந்த்.

பொது அறிவு தமிழில்

29 Jan, 03:47


தேசிய நாளிதழ் தினம்:
ஜனநாயகத்தின் நான்காவது தூண் நாளிதழ். இவை உண்மை தகவல்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மாணவர்கள் தங்கள் அறிவை வளர்க்கவும், வாசிப்பு திறனை அதிகரிக்கவும் தினசரி நாளிதழ் படிப்பது அவசியம். 1780 ஜனவரி 29ல் 'ஹிக்கிஸ் பெங்கால் கெசட்' வார இதழ் கோல்கட்டாவில் வெளியானது. இது இந்தியா / ஆசியாவின் முதல் அச்சிடப்பட்ட செய்தித்தாள். ஜேம்ஸ் அகஸ்டஸ்ஹிக்கி இதை தொடங்கினார். இதை நினைவுப்படுத்தும் விதமாக இந்தியாவில் ஜனவரி29ல் தேசிய நாளிதழ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பொது அறிவு தமிழில்

28 Jan, 09:26


மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்:

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன.

10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin)

ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian)

இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.

8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian)

கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew)

இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.

6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic)

அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.

5 வது இடத்தில் சீன மொழி (Chinese)

சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.

4 வது இடத்தில் கிரீக் (Greek)

கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம். 3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian)

ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம். 2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit)

இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)

நமது தமிழ் மொழிக்கு அறிமுகம் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

இவ்வாறாக 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னிலையில் உள்ளது.

பொது அறிவு தமிழில்

28 Jan, 01:23


*ஜனவரி 28,*
*ராஜா ராமண்ணா*

இந்திய அணுவியல் நிபுணர் ராஜா ராமண்ணா 1925ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி கர்நாடகா மாநிலத்தில் பிறந்தார்.

எழுச்சியூட்டும் தலைவர், இசைக்கலைஞர், இலக்கியம் மற்றும் தத்துவங்களில் மேதை என பன்முகத்தன்மை கொண்ட ஓர் முழுமையான மனிதர் எனப் போற்றப்படுபவர்.

1974ம் ஆண்டு மே 18ம் தேதி இந்தியாவில் ராஜஸ்தான் பாலைவனத்தில் புவிக்கடியில் நடத்தப்பட்ட 'சிரிக்கும் புத்தர்' (Operation Smiling Buddha) என்ற மறைமுகச் சொல்லைப்பயன்படுத்தி முதல் அமைதியான ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்தியவர்.

இவர் பத்மஸ்ரீ விருது (1968), பத்ம பூஷண் விருது (1973) போன்ற பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இவரின் பல விஞ்ஞான வெளியீடுகள் பதிவாகியுள்ளன. அத்துடன் இவரது சுயசரிதையான, Years of Pilgrimage (1991), The Structure of Music in Raga & Western Systems (1993) என்னும் இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

இந்திய அணுஆற்றல் துறைக்கும் அதன் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றிய அணுக்கரு அறிவியலறிஞரான இவர் தன்னுடைய 79வது வயதில் (2004) மறைந்தார்.

பொது அறிவு தமிழில்

28 Jan, 01:20


*ஜனவரி 28,*
*லாலா லஜபதி ராய்*

இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட 'பஞ்சாப் சிங்கம்' லாலா லஜபதி ராய் அவர்கள் 1865ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி பஞ்சாபில் பிறந்தார்.

இவர் சுதேசி இயக்கம் மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் போராடினார். இவர் சுதந்திரப் போராட்டத்தின் லால்-பால்-பால் (லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால்) என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் ஒருவர்.

இவர் யங் இந்தியா, அன்ஹேப்பி இந்தியா, சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதை போன்ற நூல்களை எழுதியுள்ளார். 1928ம் ஆண்டு லாகூர் வந்த சைமன் குழுவுக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

இதில் படுகாயமடைந்த நிலையிலும் கூட்டத்தில் உரையாற்றிய லஜபதி ராய், 'என் மீது விழுந்த அடிகள், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கான சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணிகள்' என்று கூறினார். இவர் தன்னுடைய 63வது வயதில் (1928) மறைந்தார்.

பொது அறிவு தமிழில்

27 Jan, 13:30


*ஜனவரி 27,*
*சர்வதேச படுகொலை நினைவு தினம்*

இரண்டாம் உலக போரின்போது ஐரோப்பாவில் வாழ்ந்த யூத மக்களுக்கு எதிராக ஹோலோகாஸ்ட் எனப்படும் யூத இன ஒழிப்பு மற்றும் படுகொலையை நாஜிக்கள் செய்தனர்.

சுமார் 60 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1945ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அன்று நாஜி மரண முகாமில் மீதமிருந்த யூதர்களை சோவியத் படைகள் விடுவித்தது.

இதுபோன்ற இனப்படுகொலைகள் மீண்டும் நடக்காமல் இருக்க ஐ.நா.அமைப்பு 2005ம் ஆண்டிலிருந்து இத்தினத்தை கடைப்பிடிக்கிறது.

பொது அறிவு தமிழில்

27 Jan, 10:06


சிலந்தி அறிந்தும் அறியாததும்!

சிலந்திகளில் 40 ஆயிரம் வகைகள் உள்ளன. எல்லாமே வலை பின்னக் கூடியவை அல்ல. அழகாக வலை பின்னக் கூடியவை பெண் சிலந்திகள் தான். அத்துடன் சிலந்தியின் வலை மிக நுட்பமானது. கூர்ந்து பார்த்தால் அதில் கனமாகவும், மெல்லியதாகவும் நிறைய இழைகள் இருக்கும். வலை பலமாக இருப்பதற்காகத் தான் சிலந்திகள் இவ்வாறு செய்கிறது. அத்துடன் வலையில் சிக்கிய ஜந்துவை பார்க்க சிலந்திகள் தனியாக ஒரு பிரத்யேக வழியையும் அதன் வலையில் வைத்திருக்கும். ஒரு சிலந்தி வலை பின்னுவதற்கு 4 மணி நேரம் ஆகிறது. வலையில் படும் எந்தப் பூச்சியும் ஒட்டிக் கொண்டு விடும் தப்பவே முடியாது.

வலையில் ஏதேனும் பூச்சி சிக்கிய மறு கணம் சிலந்தி அதனிடம் சென்று தனது கொடுக்கினால் ஒரு திரவத்தைச் செலுத்தும். அதனால் அந்தக் குறிப்பிட்ட பூச்சி செயல் இழந்து மடிந்து போகும். பூச்சிகளை அந்தத் திரவம் கூழ் போல மாற்ற, சிலந்திகள் இறந்த உயிரினங்களை திரவமாக உட்கொள்கிறது.

அதேபோல பெண் சிலந்தி ஆணுடன் உறவு கொண்டதும் அதனைக் கொன்று விடுகிறது. இதற்காகவே சில ஆண் சிலந்திகள் தனது இனத்தை பெருக்க விந்தணுவை பெண் சிலந்திகளின் வலையில் விட்டு விடும். அது பெண் சிலந்திகள் உடல் மீது படும் சமயத்தில் அவை கருத்தரிக்கிறது. சில சிலந்திகள் 10 முட்டைகளை சராசரியாக இடும். காடுகளில் வாழும் காட்டு வகை சிலந்திகள் சில ஒரே சமயத்தில் 2000 முட்டைகள் கூட இடும். அதாவது இந்த சிலந்திகள் ஒரே ஒரு முறை தான் கூடும். அதிலேயே இத்தனை முட்டைகளை பெற்றுவிடும்.

பொது அறிவு தமிழில்

27 Jan, 01:32


பிரிட்டிஷ் இந்தியாவில் தற்கால மஹாராஷ்ட்ர மாநிலம் பம்பாயில் (Mumbai) பிரிட்டிஷாரால்
The Imperial Bank of India துவங்கப்பட்ட தினம் இன்று.
( *27 ஜனவரி 1921*)

இந்திய வங்கிகள் ஒரு பார்வை…………

1806 ல் Bank of Calcutta என்ற பெயரில் துவங்கப்பட்டு, 1809 ல்Bank of Bengal என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 1921 ல் Imperial Bank of India என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சுதந்திரத்திற்குப்பின் 1955 ல் State Bank of India என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதில் 1840 ல் துவக்கப்பட்ட Bank of Bombay மற்றும் 1843 ல் துவக்கப்பட்ட Bank of Madras இதனுடன் இணைக்கப்பட்டிருந்தது.

பொது அறிவு தமிழில்

26 Jan, 07:18


5,300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இரும்புக் காலம் தொடங்கியது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொது அறிவு தமிழில்

26 Jan, 04:11


12 தமிழர்களுக்கு பத்ம விருதுகள் - மத்திய அரசு அறிவிப்பு:

76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக சுகாதாரம், விளையாட்டு, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களை மத்திய அரசு பத்ம விருகளை வழங்கி கௌரவித்து வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டில் மொத்தமாக மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதில் பத்ம விபூஷன் விருதுகள் 7 நபர்களுக்கும் , பத்ம பூசன் விருதுகள் 19 நபர்களுக்கும், பத்ம ஸ்ரீ விருதுகள் 113 நபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து நடிகர் அஜித் குமார் , ஷோபனா சந்திரகுமார் , நல்லி குப்புசாமி செட்டி ஆகியோருக்கு கலைப் பிரிவில் பத்ம பூசன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் பத்ம ஸ்ரீ விருதுகள் ரவிச்சந்திர அஸ்வின்(கிரிக்கெட்) , எம்.டி.ஸ்ரீனிவாஸ்(அறிவியல்) , தாமோதரன் (சமையல் , குருவாயூர் துரை(கலை) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீனி விஸ்வநாதன்(கல்வி) , ஆர்.ஜி.சந்திர மோகன்(தொழில்), ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி (கலை), வேலு ஆசான்(கலை), புரிசை கண்ணப்ப சம்பந்தன் (கலை) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தாண்டு மொத்தமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 பேர் பத்மா விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பொது அறிவு தமிழில்

26 Jan, 01:37


குஜராத் நிலநடுக்கத்தில் (2001Gujarat earthquake)
சுமார் 20,000 பேர் பலியாகி சுமார் 2,00,000 பேர் வீடுகளை இழந்த தினம் இன்று.
( *26 ஜனவரி 2001*)

பொது அறிவு தமிழில்

26 Jan, 01:36


Doordarshan தொலைக்காட்சியில்
முதன்முதல் நிகழ்ச்சியாக
Krishi Darshan ஒளிபரப்பத் துவங்கிய தினம் இன்று.
( *26 ஜனவரி 1967*)

பொது அறிவு தமிழில்

26 Jan, 01:35


“ஹிந்தி” மொழி இந்தியாவின்
அலுவல் மொழியாக
அறிவிக்கப்பட்ட தினம் இன்று.
( *26 ஜனவரி 1965*)

பொது அறிவு தமிழில்

26 Jan, 01:34


( *26 ஜனவரி 1950*)

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து அனைவரும் ஏற்றுக் கொண்ட நாளே, குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தினத்தை விட குடியரசுத் தினமே மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது.

மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டு மக்கள் தாங்கள் விரும்பும் குடியாட்சியை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக உரிமைகளை வழங்கிய தினம் குடியரசுத் தினமாகும்.

குடியரசு தினவிழாவில் இந்திய அளவில் குடியரசுத் தலைவரும்; மாநில அளவில் கவர்னரும் தேசிய கொடியை ஏற்றுவார்கள்.

கொடியை,
கொடிக் கம்பத்தில் கட்டி அதன் கயிற்றை சுண்டி இழுத்து அவிழ்த்து கொடியை பறக்க விடுவது குடியரசுத் தினத்தில் கொடியை பறக்க விடும் மரபாகும்.

சுதந்திர தினத்தில் கொடியை, கொடிக்கம்பத்தின் கீழ்ப்பகுதியில் கட்டி கயிற்றை மேல் நோக்கி ஏற்றி கொடியை பறக்க விடுவார்கள்.

சுதந்திர நாட்டிற்கு தன்னுடைய சட்டம் தேவை. 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தாலும், நாம் ஆங்கிலேயரின் சட்டத்தைத் தான் பயன்படுத்திக்கொண்டிருந்தோம்.

நமது சட்டத்தை வரைவதற்காக, நமது முதல் சட்ட அமைச்சரான
திரு. அம்பேத்கர் அவர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

2 வருடங்களுக்கும் மேலாக இந்த குழுவினர் உழைத்து நமக்கு அரசியலமைப்பு சட்டத்தை அளித்தனர்.

1949ம் ஆண்டு நவம்பர் மாதம் நமது பாராளுமன்றம் இந்த அரசியலமைப்பு சட்டத்தை ஏற்று அதற்கு ஒப்புதல் அளித்தது.

இந்த சட்டம் 1950 ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த நாளையே நாம் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம்.

பொது அறிவு தமிழில்

26 Jan, 01:30


*ஜனவரி 26,*
*சர்வதேச சுங்க தினம்.*

சர்வதேச சுங்க அமைப்பு அமைக்கப்பட்டு, அதனுடைய முதல் நிர்வாகக் கூட்டம் ஜனவரி 26, 1953 ம் ஆண்டில் புருசெல்ஸில் நடைபெற்றது.
அதில் 17 ஐரோப்பிய நாடுகள் கலந்துகொண்டன.

அதன்பின்னர் 160க்கும் மேற்பட்ட சுங்க அதிகாரிகள் உள்பட சுங்கத்துறையினர் இந்த அமைப்பில் இணைந்தனர். அத்தகைய சுங்க அமைப்பு தொடங்கப்பட்ட ஜனவரி 26 ம் தேதி சர்வதேச சுங்க தினமாக கொண்டாடப்படுகிறது.

பொது அறிவு தமிழில்

25 Jan, 16:45


ஜனவரி 25 - மொழிப்போர் தியாகிகள் தினம்.

பொது அறிவு தமிழில்

25 Jan, 16:38


முன்னாள் கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்தது மத்திய அரசு.

பொது அறிவு தமிழில்

19 Jan, 16:01


அண்டார்டிகாவில் உள்ள இந்தியாவின் ஆராய்ச்சி மையம்

பொது அறிவு தமிழில்

19 Jan, 07:52


செயற்கைக்கோளை ஒன்றிணைத்தல்:
உலகின் நான்காவது நாடாக, சமீபத்தில் இரு செயற்கைக்கோளை ஒன்றிணைத்து இந்தியா சாதித்தது. உலகில் முதன்முதலாக 1966 மார்ச் 16ல் 'ஜெமினி 8' என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்க விண்வெளி மையம் 'நாசா', இரு செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஒன்றிணைத்தது. இதற்கடுத்து 1967 அக். 30ல் சோவியத் யூனியன் (ரஷ்யா), 'காஸ்மோஸ் 186', 'காஸ்மோஸ் 188' என இரு ஆளில்லா விண்கலத்தை இணைத்தது. மூன்றாவதாக சீனா, 2011 நவ. 2ல் சீனா அனுப்பிய 'ஷென்சு' ஆளில்லா விண்கலம், 'டியான்கங் 1' என்ற விண்வெளி மையத்துடன் இணைக்கப்பட்டது.

பொது அறிவு தமிழில்

19 Jan, 07:52


நீளமான 'ரோப்' கார்:
இரு மலைகளுக்கு இடையே, தரைப்பகுதியில் இருந்து மலையின் மேலே என பல வழிகளில் 'ரோப்' கார் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக 1960ல் பீஹாரின் ராஜ்கிர் மலைப்பகுதியில் 1 கி.மீ., தூரத்துக்கு ரோப் கார் அமைக்கப்பட்டது. உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் அவுலி பகுதியில் 4 கி.மீ., தூரத்துக்கு அமைக்கப்பட்ட ரோப் கார் தான் இந்தியாவில் நீளமானது. இது உலகளவில் 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் வியட்நாமின் பியூ கியூக் தீவில் உள்ள ரோப் கார் சேவை உள்ளது. நீளம் 7.8 கி.மீ.

பொது அறிவு தமிழில்

18 Jan, 09:10


நிறம் மாறும் உயிரினங்கள்:
சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றும் உயிரினம் பச்சோந்தி. இதற்கான உடல் அமைப்பை அது பெற்றுள்ளது. இதுபோல வேறு சில உயிரினங்களிடமும் இத்திறன் உள்ளது. பொன் ஆமை வண்டு, மைமிக் ஆக்டோபஸ், நண்டுச் சிலந்தி, பசிபிக் மரத் தவளை, சில கடல்குதிரைகள், கணவாய்மீன் போன்றவை சூழ்நிலைக்கு ஏற்பத் தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் உடல் அமைப்பைப் பெற்றிருக்கின்றன. இந்த நிறத்தை மாற்றிக்கொள்ளும் பண்பு மூலம், எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளவும், தேவையான இரையைப் பெற்றுக்கொள்ளவும் இந்த உயிரினங்களால் முடிகிறது.

பொது அறிவு தமிழில்

18 Jan, 09:06


குறுகிய கடல் எல்லை:
உலகில் 130க்கும் மேற்பட்ட நாடுகளில், கடல் எல்லை உள்ளது. உலகில் நீண்ட துார (2.65 லட்சம் கி.மீ.) கடல் எல்லையை கொண்ட நாடு கனடா. அட்லாண்டிக், ஆர்க்டிக், பசிபிக் என மூன்று கடல்கள், இதன் எல்லையாக உள்ளன. குறுகிய துார கடல் எல்லையை கொண்ட நாடு மேற்கு ஐரோப்பாவின் மொனாகோ. இதன் வடக்கு, கிழக்கு, மேற்கு என மூன்று பக்க எல்லையாக பிரான்ஸ் உள்ளது. தெற்கு பக்கம் மட்டும் 5.6 கி.மீ., துாரத்துக்கு எல்லையாக கடல் (மத்திய தரைக்கடல்) அமைந்துள்ளது. இது உலகில் பரப்பளவு அடிப்படையில் வாடிகன் சிட்டிக்கு அடுத்து 2வது சிறிய நாடு (பரப்பளவு 2.02 சதுர கி.மீ.).

பொது அறிவு தமிழில்

18 Jan, 07:40


ஜனவரி 16 அன்று SpaDeX செயற்கைகோள்களை விண்வெளியில் இணைத்து இஸ்ரோ மாபெரும் வரலாற்று சாதனை படைத்த தருணம்.

பொது அறிவு தமிழில்

17 Jan, 15:48


இந்திய ரயில்வேயின் உள்நாட்டு NaMo ஹைட்ரஜன் ரயில் (1,200 HP) உலகின் மிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் இயந்திரமாக இருக்கும்.

பொது அறிவு தமிழில்

17 Jan, 07:41


உலகின் உயரமான ஏரி:
வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில் இமயமலை தொடரில் உள்ளது 'குருதோங்மர்' ஏரி, இது இந்தியாவின், உலகின் மிக உயரமான ஏரி என அழைக்கப்படுகிறது. நன்னீர் ஏரியான இது சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் இருந்து 190 கி.மீ., தூரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 16,929 அடி. பரப்பளவு 132 ஹெக்டேர். ஹிந்து, சீக்கியர், புத்த மதத்தினருக்கு இது புனித நதியாக கருதப்படுகிறது. ஏப்ரல், மே, டிசம்பர் மாதங்களில் சுற்றுலாப்பயணிகள் இதை ரசிக்கலாம். இங்கிருந்து 5 கி.மீ., தூரத்தில் இந்தியா - திபெத் எல்லை அமைந்துள்ளது.

பொது அறிவு தமிழில்

17 Jan, 02:19


India creates HISTORY

ISRO has successfully docked SpaDeX satellites SpaDeX 01 & SpaDeX 02 🔥

Bharat becomes the 4th country to achieve successful space docking 👌

பொது அறிவு தமிழில்

16 Jan, 07:18


இந்தியா புது வரலாற்றை உருவாக்கியுள்ளது!!!!

இஸ்ரோ SpaDeX செயற்கைக்கோள்களான SpaDeX 01 மற்றும் SpaDeX 02 ஐ வெற்றிகரமாக இணைத்துள்ளது.

இதன்மூலம், அமேரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் European Space Agency(ESA) ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, விண்வெளியில் docking ஐ செயல்படுத்திய 5வது நாடாக இந்தியா திகழ்கிறது🥳🥳

இந்த இணைப்பு மிகவும் துல்லியமாக இருந்தது, இறுதி கட்டத்தில் அவை 8 மிமீ/வி வேகத்தில் சென்றன. இந்த வேகத்தை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம், குறிப்பாக SpaDeX இயக்கத்தின் மிக இலகுவான விண்கலம்.

ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

பொது அறிவு தமிழில்

16 Jan, 01:41


டயர்களுக்கு கறுப்பு நிறம் ஏன்?
வாகனங்களில் அதன் நிறங்கள் வேறுபட்டாலும், அவற்றின் சக்கர டயர்கள் கறுப்பு நிறத்தில் தான் இருக்கும். துவக்க காலத்தில் வெள்ளை நிறத்தில் டயர் தயாரிக்கப்பட்டது. ஆனால் அவை நீண்டகாலம் உழைக்கவில்லை. அதனால் துாய்மையான ரப்பருடன் 'கார்பன் பிளாக்' வேதி சேர்மத்தை கலந்து டயர்கள் தயாரிக்கப்பட்டன. இதனால்தான் டயர் கறுப்பாக உள்ளது. உராய்வு காரணமாக டயரில் ஏற்படும் வெப்பத்தை 'கார்பன் பிளாக்' கடத்துவதால், டயருக்கு நீண்டஆயுள் கிடைக்கிறது. சூரியனின் புற ஊதாக்கதிர்களை ஈர்த்து, வாகனத்தின் மற்ற பகுதி வெப்பமாகாமல் தடுக்கிறது.

பொது அறிவு தமிழில்

15 Jan, 09:30


ஆரம்பகாலம் முதல் கி.பி 1789 வரை பிரான்ஸ் நாட்டின் அரசர்களின் பெயர்கள்:

மெரோவிஞ்சிய வம்சம் (Merovingian Dynasty)
1. கிளோவிஸ் I (Clovis I) – 481–511
2. கிளோதைர் I (Chlothar I) – 511–561
3. சிக்பெர்ட் I (Sigebert I) – 561–575
4. கிளோதைர் II (Chlothar II) – 584–629
5. டகோபெர்ட் I (Dagobert I) – 629–639
(மற்ற பல சிறிய அரசர்கள் இடைச்சேர்ந்தனர்)

காரோலிஞ்சிய வம்சம் (Carolingian Dynasty)
1. பேபின் III (Pepin the Short) – 751–768
2. சார்ல்மேன் (Charlemagne) – 768–814
3. லூயி I (Louis the Pious) – 814–840
4. சார்ல்ஸ் II (Charles the Bald) – 840–877
5. லூயி II (Louis II) – 877–879
6. சார்ல்ஸ் III (Charles the Fat) – 885–888

கேபேசியன் வம்சம் (Capetian Dynasty)
1. ஹ்யூ கேப்பெட் (Hugh Capet) – 987–996
2. ராபர்ட் II (Robert II) – 996–1031
3. ஹென்றி I (Henry I) – 1031–1060
4. பிலிப் I (Philip I) – 1060–1108
5. லூயி VI (Louis VI) – 1108–1137
6. லூயி VII (Louis VII) – 1137–1180
7. பிலிப் II (Philip II Augustus) – 1180–1223
8. லூயி VIII (Louis VIII) – 1223–1226
9. லூயி IX (Louis IX / Saint Louis) – 1226–1270
10. பிலிப் III (Philip III) – 1270–1285
11. பிலிப் IV (Philip IV) – 1285–1314

வலொயி வம்சம் (Valois Dynasty)
1. பிலிப் VI (Philip VI) – 1328–1350
2. ஜான் II (John II) – 1350–1364
3. சார்லஸ் V (Charles V) – 1364–1380
4. சார்லஸ் VI (Charles VI) – 1380–1422
5. சார்லஸ் VII (Charles VII) – 1422–1461

போர்பன் வம்சம் (Bourbon Dynasty)
1. ஹென்றி IV (Henry IV) – 1589–1610
2. லூயி XIII (Louis XIII) – 1610–1643
3. லூயி XIV (Louis XIV) – 1643–1715
4. லூயி XV (Louis XV) – 1715–1774
5. லூயி XVI (Louis XVI) – 1774–1789

கி.பி 1789 - பிரெஞ்சு புரட்சி ஆரம்பமாகி, மன்னராட்சி முடிவுற்றது.

https://t.me/General_Knowledge_Tamil

பொது அறிவு தமிழில்

15 Jan, 07:49


இஸ்ரோவின் புதிய தலைவராக டாக்டர் வி நாராயணன் பொறுப்பேற்றார்.

பொது அறிவு தமிழில்

15 Jan, 03:15


*ஜனவரி 15,*
*இந்திய ராணுவ தினம்.*

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ம் தேதி இந்திய ராணுவ தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளை ராணுவ தினமாகத் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக ஜெனரல் கே.எம். கரியப்பா
(K.M. Cariappa) 1949ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதிதான் பதவி ஏற்றார்.

அதற்கு முன்புவரை பிரிட்டிஷ்காரர்களே தளபதிகளாக இருந்து வந்தார்கள். இவர் ராணுவ வாழ்க்கையில் தனது இறுதி மூச்சு வரை நாட்டிற்காக தன்னலமற்ற சேவை புரிந்தவர்.

பொது அறிவு தமிழில்

15 Jan, 03:15


*ஜனவரி 15,*
*மார்ட்டின் லூதர் கிங்*

அமெரிக்காவில் அடிமை முறையையும், நிற வேறுபாட்டையும் ஒழிக்க முதன் முதலாகக் குரல் கொடுத்த மார்ட்டின் லூதர் கிங் 1929ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் பிறந்தார்.

இவர் காந்திய வழியில் வன்முறையற்ற அறப்போராட்டங்களை நடத்தியதால், அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார். 1964ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மார்டின் லூதர் கிங்குக்கு வழங்கப்பட்டது.

உலகம் முழுவதும் புகழ்பெற்ற மார்டின் லூதர் கிங் தன்னுடைய 39வது வயதில் (1968) மறைந்தார்.

பொது அறிவு தமிழில்

14 Jan, 16:41


கலைச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொற்கள்:

Technology & Digital:

1. இணையம் - Internet 
2. குரல்தேடல் - Voice Search 
3. தேடுபொறி - Search Engine 
4. தொடுதிரை - Touch Screen 
5. செயற்கை நுண்ணறிவு - Artificial Intelligence 
6. ஆய்வு - Research 
7. மீத்திறன் கணினி - Super Computer 
8. செயற்கைக் கோள் - Satellite 
9. நுண்ணறிவு - Intelligence 
10. மின் நூலகம் - E-Library 
11. மின் புத்தகம் - E-Book 
12. மின்படிக்கட்டு - Escalator 
13. மின் இதழ்கள் - E-Magazine 
14. மின்தூக்கி - Lift 
15. கையாளன் - Robot 
16. குறுந்தகடு (CD) - Compact Disk 
17. கேள்வித்தொகுப்பு - FAQ 
18. அஞ்சல் - Mail 
19. விண்ணோக்கி - Telescope 
20. மின்னணுக் கருவிகள் - Electronic devices 
21. மென்பொருள் - Software 
22. உலவி - Browser 
23. இணையவெளி - Cyberspace 
24. வையக விரிவு வலை வழங்கி - Server 
25. உறை - Folder 
26. மடிக்கணினி - Laptop 
27. பதிவிறக்கம் - Download 
28. காணொலிக் கூட்டம் - Video Conference 
29. ஏவு ஊர்தி - Launch Vehicle 
30. ஏவுகணை - Missile 
31. கடல்மைல் - Nautical Mile

Geography & Environment:

1. கண்டம் - Continent 
2. தட்பவெப்பநிலை - Climate 
3. வானிலை - Weather 
4. வலசை - Migration 
5. புகலிடம் - Sanctuary 
6. புவிஈர்ப்புப்புலம் - Gravitational Field 
7. இயற்கை வளம் - Natural Resource 
8. காடு - Jungle 
9. வன விலங்குகள் - Wild Animals 
10. வனவியல் - Forestry 
11. வன பாதுகாவலர் - Forest Conservator 
12. பல்லுயிர் மண்டலம் - Bio Diversity 
13. தீவு - Island 
14. புயல் - Storm 
15. பெருங்கடல் - Ocean 
16. கடற்பயணம் - Sea Voyage 
17. கலங்கரைவிளக்கம் - Lighthouse 
18. துறைமுகம் - Harbour 
19. துறைமுகங்கள் - Ports 
20. இளநீர் - Estuaries 
21. களர்நிலம் - Saline Soil 
22. நீர் மேலாண்மை - Water Management 
23. பாசனத் தொழில்நுட்பம் - Irrigation Technology

Science & Medicine:

1. ஓளத்தம் - Medicine 
2. பக்கவிளைவு - Side Effect 
3. மூலிகை - Herbs 
4. நுண்ணுயிர் முறி - Antibiotic 
5. மரபணு - Gene 
6. நோய் - Disease 
7. ஞாயிறு நிலா - Solar Eclipse 
8. நரம்பியல் - Neuroscience 
9. புவியியல் - Geography

Culture, Art, & Literature:

1. இலக்கியம் - Literature 
2. கலைக்கூடம் - Art Gallery 
3. மெய்யுணர்வு - Knowledge of Reality 
4. கருணை - Mercy 
5. கலைஞர் - Artist 
6. சிற்பங்கள் - Sculptures 
7. வெண்சம் - Sculpture 
8. கைவினைப் பொருள்கள் - Crafts 
9. அஞ்சல் - Mail 
10. பொம்மலாட்டம் - Puppetry 
11. கவிஞர் - Poet 
12. இயற்கை நிலவு - Natural Moon 
13. மனிதம் - Humane 
14. ஆளுமை - Personality 
15. செவ்வியல் இலக்கியம் - Classical Literature 
16. நாட்டுப்புற இலக்கியம் - Folk Literature 
17. எழுத்துச் சீர்திருத்தம் - Reforming the letters 
18. எழுத்துரு - Font 
19. கட்டிலாக் கவிதை - Free Verse 
20. உருவக அணி - Metaphor 
21. உவமையணி - Simile 
22. கவிதை - Poetry 
23. பேச்சாற்றல் - Elocution 
24. உரையாடல் - Dialogue

Politics, Government, & Society:

1. அரசியலமைப்பு - Constitution 
2. சட்ட மன்ற உறுப்பினர் - Member of Legislative Assembly 
3. முதலமைச்சர் - Chief Minister 
4. அரசியல் மேதை - Political Genius 
5. சமத்துவம் - Equality 
6. சமய - Religion 
7. தத்துவம் - Philosophy 
8. சமூக சீர்திருத்தவாதி - Social Reformer 
9. தன்னார்வலர் - Volunteer 
10. நற்பண்பு - Courtesy 
11. மக்கள் பெருங்கலை - People's Art 
12. தேசத்தினரானர் - Nationalist 
13. இளம் செஞ்சிலுவைச் சங்கம் - Junior Red Cross 
14. பயணியர் பெயர்ப் பதிவு - Passenger Name Record 
15. நிலையான சர்வதேச விருப்பம் - Permanent International Choice

https://t.me/General_Knowledge_Tamil

பொது அறிவு தமிழில்

13 Jan, 10:15


'எவரெஸ்ட்' பெயர் எப்படி வந்தது?
கடல்நீர் மட்டத்துக்கு மேல், உலகின் உயரமான சிகரம் எவரெஸ்ட். இதன் உயரம் 29,031 அடி. இது இமயமலைத்தொடரில் நேபாளத்தில் அமைந்துள்ளது. 1852ல் இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அரசு, இதை ஆராய்வதற்கு ஜார்ஜ் எவரெஸ்ட் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. இக்குழுவில் இருந்த கணிதவியல் நிபுணர் ராதாநாத் சிக்தார், சிகரத்தின் உயரம் உள்ளிட்ட பல தகவல்களை சேகரித்து அளித்தார். தகவல்களை பரிசீலித்த அரசு, குழுவை பாராட்டி அதன் தலைவர் எவரெஸ்ட் பெயரையே சிகரத்துக்கு சூட்டியது.

பொது அறிவு தமிழில்

13 Jan, 02:36


*ஜனவரி 13,*
*ராகேஷ் ஷர்மா*

விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ராகேஷ் ஷர்மா 1949ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்தில் பிறந்தார்.

இவர் 1970ம் ஆண்டு இந்திய விமானப் படையில் பயிற்சி பைலட்டாகப் பணியேற்றார். ஒரு விண்வெளி வீரராக அவருடைய பயணம் 1982ம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று தொடங்கியது.

இதன் விளைவாக ராகேஷ், 1984ம் ஆண்டு ஏப்ரல் 02 அன்று சரித்திரத்தின் சாதனைப் பக்கத்தில் இடம் பிடித்தார். பிறகு சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பைலட்டாக இருந்த அனுபவத்தின் காரணமாக 1984ம் ஆண்டில் விமானப் படைப்பிரிவின் ஒரு குழுவுக்கு ராகேஷ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவரும், ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி 11 விண்கலத்தில் விண்வெளிக்குப் பயணம் சென்றார்கள். சல்யூட் 7 என்னும் விண்வெளி மையத்தில் இவர் எட்டு நாட்கள் தங்கியிருந்தார். ராகேஷ் சர்மா அவர்களின் பணிகளை பாராட்டி அசோகா சக்ரா விருது கிடைத்தது.

பொது அறிவு தமிழில்

12 Jan, 00:53


*ஜனவரி 12,*
*தேசிய இளைஞர் தினம்*

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ம் தேதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

1984 ம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை "தேசிய இளைஞர் நாளாக" அறிவித்தது.

அதைத்தொடர்ந்து 1985-ல் ஜனவரி 12-ம் தேதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

பொது அறிவு தமிழில்

11 Jan, 16:51


யானையின் பிளிறல் எவ்வளவு தூரம் கேட்கும்?

நிலத்தில் வாழும் மிகப் பெரிய உயிரினமான யானையைப் விரும்பாதவர்கள் இருக்க முடியாது. சிங்கம் நேருக்கு நேர் தாக்க வந்தால் யானை வென்றுவிடும். அதனால் சிங்கம் யானையின் பின்னால் இருந்துதான் தாக்கும். அவ்வளவு வலிமையானது யானை.

யானைகள் பெரும்பாலும் கூட்டம் கூட்டமாகவே வசிக்கும். அந்தக் கூட்டங்களுக்குப் பெண் யானைகளே தலைமை வகிக்கின்றன. பொதுவாக அம்மா யானையோ அல்லது மூத்த பெண் யானையோ கூட்டத்தின் தலைவியாக இருக்கும். ஆண் யானைகள் தனியாக வாழ்ந்து, சில நேரம் மட்டுமே கூட்டத்துடன் வந்துசேர்கின்றன.

காட்டுக்குள் இப்படிப் பல யானைக் கூட்டங்கள் வசித்து வருகின்றன. அவை தங்களுக்குள் பேசிக்கொள்ளும் மொழியே நமக்குப் பிளிறலாகக் கேட்கிறது. குட்டி யானைகள் குறும்பானவை. அவற்றைக் கட்டுப்படுத்த, சில நேரம் பெரிய யானைகள் பிளிறும். பல கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மற்ற யானைகளுடன் அவை எப்படித் தொடர்பு கொள்கின்றன தெரியுமா? நாம் பக்கத்தில் இருப்பவர்களிடம் மெதுவாகவும், தொலைவில் உள்ளவர்களிடம் உரக்கவும் பேசுவோம். இந்த விஷயத்தில் யானைகள் நமக்கு நேர் எதிர்.

மனிதர்களால் இருபது Hzக்குக் குறைவான அதிர்வில் இருக்கும் ஒலியைக் கேட்க முடியாது. யானைகள் அப்படி அல்ல. தொலைவில் உள்ள யானைகளுடன் பேசக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளை எழுப்புகின்றன. இந்த அதிர்வுகள் 14-35 Hz என்கிற அளவில் இருக்கும். இதற்கு ‘இன்ஃப்ராசோனிக் அதிர்வுகள்' என்று பெயர்.

இந்த ‘இன்ஃப்ராசோனிக்’ அதிர்வுகள் நீண்ட அலை நீளம் கொண்டவை. இதனால் அவை, அடர்ந்த காடுகளில் எந்தத் தடையும் இல்லாமல் பயணம் செய்ய முடியும். மலைகளைச் சுற்றி வளைந்து செல்ல முடியும். சுற்றுப் புறச்சூழல் சாதகமாக இருந்தால், பத்து கி.மீ வரை இந்த அலைகள் செல்லும்.

காற்று வழியாகச் செல்வதுபோல், நிலத்தின் வழியாகவும் பல கிலோமீட்டர் தூரம் இந்த அலைகள் பயணம் செய்யும். நிலத்தின் வழியே செல்லும் இந்த அதிர்வுகள் யானைகளின் கால்கள் வழியாக உடலுக்குள் சென்று, தோள்பட்டைகள் வழியாக நரம்பு மண்டலத்தை அடைந்து, மூளைக்குச் செல்கின்றன. தும்பிக்கையை நிலத்தில் வைத்தும் அதிர்வுகளை உள்வாங்குகின்றன. மூளை அந்த அதிர்வுகளைச் செய்தியாக உணர்கிறது.

அதுமட்டுமன்றி எந்த யானை, எந்த மனநிலையில் இதை அனுப்பியுள்ளது என்று மற்ற யானைகளுக்குத் தெளிவாகத் தெரியும். இந்த அதிவுகள் மூலம் வழி தவறிப்போன குட்டியானைகளை அழைக்கின்றன. ஆபத்து வரும்போது மற்ற யானைக் கூட்டங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றன. தேவைப்படும் போது உதவியும் கேட்கின்றன.

ஒலி, அதிர்வு மட்டுமல்ல, தொடுதலும் ஒருவிதமான தகவல் பரிமாற்றம்தான். அதில் யானைகளின் தும்பிக்கை ஒரு முக்கியமான தகவல் பரிமாற்றக் கருவி!

அம்மா யானை குட்டி யானையின் மேல் தும்பிக்கையை வைத்து, அன்பைப் பரிமாறும். விளையாடவும் அதே தும்பிக்கைதான். நீண்ட வரிசையில் வால்களைப் பிடித்தபடி செல்லும் யானைகளைப் பார்த்து இருப்பீர்கள் அல்லவா? அதற்கு அர்த்தம், ‘நாங்க எல்லாம் நெருங்கிய உறவினர்கள், பாதுகாப்பா இருக்கிறோம்’ என்பதே.

காதுகள் கேட்பதற்கு மட்டுமல்ல. காது மடல்களின் அமைப்பின் மூலம் தன் உணர்வுகளையும் யானை வெளிப்படுத்துகிறது. விரிந்த காதுகள் என்றால் ஆபத்து அல்லது எச்சரிக்கை என்று அர்த்தம். தளர்வான காதுகள் என்றால் அமைதியான மனநிலையில் இருக்கிறது. காதுகளை அடிக்கடி அசைத்தால்,யானை பரபரப்பு அல்லது மன அழுத்தத்தில் இருக்கிறது. கவனமாக இருக்கிறேன் என்பதற்கு அடையாளமாக அதன் காதுகள் முன்னோக்கி நீட்டி இருக்கும்.

இப்படி ஒலிகள் மூலம் மட்டுமல்லாமல் வெவ்வேறு வழிகளிலும் யானைகள் பேசுகின்றன.

பொது அறிவு தமிழில்

11 Jan, 01:50


*ஜனவரி 11,*
*தேசிய சாலை பாதுகாப்பு வாரம்*

இந்திய அளவில் ஜனவரி 11 முதல் 17ம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

விபத்துகளைக் குறைப்பது, விபத்துகள் ஏற்படாமல் தவிர்ப்பது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.

பொது அறிவு தமிழில்

10 Jan, 16:47


செய்தித்தாள் மற்றும் அதன் நிறுவனர்:

கேள்வி 1. 1780 (கல்கத்தா) இல் வங்காள கெஜட்டை நிறுவியவர் யார்?
பதில் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி

கேள்வி 2. 1818 (கல்கத்தா) இல் சமாச்சார் தர்பனை நிறுவியவர் யார்?
பதில் ஜே. சி. மார்ஷ்மேன்

கேள்வி 3. 1853 (கல்கத்தா) இல் இந்து பேட்ரியாட்டை நிறுவியவர் யார்?
பதில் கிர்ச்சந்திர கோஷ்

கேள்வி 4. 1859 (கல்கத்தா) இல் சோம் பிரகாஷை நிறுவியவர் யார்?
பதில் துவாரகநாத் வித்யாபூஷண்

கேள்வி 5. 1861 (கல்கத்தா) இல் இந்திய மிரரை நிறுவியவர் யார்?
பதில் தேபேந்திரநாத் தாகூர்

கேள்வி 6. 1868 (கல்கத்தா) இல் அம்ரித் பஜாரை நிறுவியவர் யார்?
பதில் மோதிலால் / ஷிஷிர் கோஷ்

கேள்வி 7. தி இந்து 1878 (மெட்ராஸ்) நிறுவனர்?
பதில் வீர் ராகவாச்சாரி

கேள்வி 8. கேசரி 1881 (பம்பாய்) நிறுவனர்? பதில் பால கங்காதர திலகர்

கேள்வி 9. இந்தியாவின் நிறுவனர் 1890 (பம்பாய்)?
பதில் தாதாபாய் நௌராஜி

கேள்வி 10. தி இந்தியன் ரிவியூ 1900 (மெட்ராஸ்) நிறுவனர்?
பதில் ஏ. தேசம்

கேள்வி 11. இந்தியன் ஒபினியன் 1903 (தென்னாப்பிரிக்கா) நிறுவனர்?
பதில் மகாத்மா காந்தி

கேள்வி 12. யுகந்தர் 1906 (கொல்கத்தா) நிறுவனர்?
பதில் பூபேந்திரநாத் தத்

கேள்வி 13. பங்கா தர்ஷன் 1873 (கொல்கத்தா) நிறுவனர்?
பதில் பங்கிம்சந்திர சட்டர்ஜி

கேள்வி 14. தி லீடர் 1918 (அலகாபாத்) நிறுவனர்?
பதில் மதன் மோகன் மாளவியா

கே_15. சுதேஷ் மித்ரம் 1882 (மெட்ராஸ்) நிறுவனர்?
பதில் ஏ.எம். எஸ். ஐயர்

கே_16. 1918 (அலகாபாத்) இந்திய தொழிலாளர்களின் நிறுவனர்?
பதில் கோபால கிருஷ்ண கோகலே

கே_17. சுதந்திரா 1919 (அலகாபாத்) நிறுவனர்?
பதில் மோதிலால் நேரு

கே.18. நவஜீவன் 1919 (அகமதாபாத்) நிறுவனர்?
பதில் மகாத்மா காந்தி

கே_19. யங் இந்தியா 1919 (அகமதாபாத்) நிறுவனர்?
பதில் மகாத்மா காந்தி

கே-20. ஹிந்துஸ்தான் டைம்ஸ் 1924 (பம்பாய்) நிறுவனர்?
பதில் முடக்கப்பட்டது. எம். பணிக்கர்

கே_21. ஹரிஜன் 1933 (புனே) நிறுவனர்?
பதில் மகாத்மா காந்தி

https://t.me/General_Knowledge_Tamil

பொது அறிவு தமிழில்

10 Jan, 16:41


ரயில் இஞ்சினில் உள்ள எழுத்துக்கள் சொல்வது என்ன?

ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?

ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!! அப்படி என்றால் என்ன அர்த்தம்?

WDP 3A

முதல் எழுத்து:

முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்

W - அகன்ற இருப்பு பாதை (Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்) Y - மீட்டர் இருப்புப் பாதை (Metre Gauge - 1000 மில்லி மீட்டர்) Z - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 762 மில்லி மீட்டர்) N - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)

WDM 2

இரண்டாம் எழுத்து:

இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும்.

D - டீசல் இஞ்சின் A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction) C - மின்சக்தி - நேர் மின்னாட்டம் (DC traction) CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction) B - பேட்டரி சக்தி

இவற்றில் எதுவும் இல்லாமல் கீழ்காணும் மூன்றாம் எழுத்தில் உள்ள எழுத்துகள் இருந்தால், அது நீராவி இஞ்சின்.

YG

மூன்றாம் எழுத்து:

மூன்றாம் எழுத்து ரயிலின் பயன்பாட்டைக் குறிக்கிறது. (நீராவி இஞ்சினில் இரண்டாம் எழுத்து)

G - சரக்கு ரயில் (Goods) P - பயணிகள் ரயில் (Passenger) M- சரக்கு & பயணிகள் ரயில் U - புறநகர் ரயில்

சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து எல்லா இஞ்சின்களிலும் மூன்று எழுத்துகளுக்குப் பிறகு, நான்காவதாய் ஒரு எண் மட்டும் இருக்கும். அந்த எண் இஞ்சினின் மாடல் எண்ணைக் குறிக்கிறது

( WAP 5 என்றால் அந்த இஞ்சினின் மாடல் எண் ஐந்து!)

WAP 1 மேலே "சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து" என்று சொன்னேன் அல்லவா? அந்த சில இஞ்சின்களில் மட்டும் நான்காவதாய் ஒரு எண்ணும், அதன் பிறகு ஒரு எழுத்தும் இருக்கும்.

இவை இரண்டும் அந்த இஞ்சினின் சக்தியைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இஞ்சின்களாகும். WDM1 மற்றும் WDM2 ஆகிய இஞ்சின்கள் மட்டும் இதில் வராது!!

WDG 3A

நான்காம் எண்ணை ஆயிரத்தால் பெருக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவதாய் இருக்கும் எழுத்திற்கு இணையான எண்ணை (A - 1; B - 2; C - 3; D - 4; E - 5; F - 6) எழுதி அதை நூறால் பெருக்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்தால் கிடைப்பது தான் அதன் சக்தி (குதிரைச்சக்தியில்).

எடுத்துக்காட்டாக, WDM 3E இஞ்சினின் சக்தி = 3*1000+ 5*100 = 3500 hp ஆகும். அதன் பிறகு எதுவும் குறியீடுகள் இருந்தால் அவை அந்த ரயில் இஞ்சினின் சிறப்பம்சங்களைக் (Technical Features) குறிக்கும். பெரும்பாலும் சரக்கு ரயில்களில் தான் அவை இருக்கும்.

WAG 5

சில ரயில்களில், குறிப்பாக வடநாட்டு ரயில்களில், ஆங்கிலத்தைப் பார்க்க இயலாது. இந்தியில் குறியிட்டு இருப்பர். அதை (இந்தி தெரிந்தவர்கள்) எழுத்துக் கூட்டிப் படித்தால், மேற்கண்ட குறியீடே வரும்!! அதாவது, ஆங்கிலத்திற்குப் பதில் அப்படியே இந்தியில் எழுதி இருப்பார்கள்.

https://t.me/General_Knowledge_Tamil

பொது அறிவு தமிழில்

09 Jan, 01:20


( *09 ஜனவரி 1921*)

புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது.

புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George), இந்தியாவில் ஆங்கிலேயர்களின் முதலாவது கோட்டையாகும்.

பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639 ம் ஆண்டில் கரையோர நகரான மதராஸில் (இன்றைய சென்னை நகரம்) கட்டத் தொடங்கப்பட்டது.

வெறுமனே கிடந்த இப்பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக்கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும்.

இந்த கோட்டையில் தான் தமிழகத்தின் முதல் சட்டசபை 1921ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்றுபெயர்.

இந்த சட்டமன்றத்தின் கூட்டம் முதல்முறையாக புனித ஜார்ஜ் கோட்டையில் 1921ம் ஆண்டு ஜனவரி 09ந் தேதி கூடியது.
கன்னாட் கோமகன் (Duke of Connaught) இதை தொடங்கி வைத்தார்.

பொது அறிவு தமிழில்

09 Jan, 01:18


*ஜனவரி 09,*
*வெளிநாடு வாழ் இந்தியர் தினம்.*

இன்று வெளிநாடுகளில் வாழும் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஜனவரி 09ம் தேதியும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியரின் ஆக்கப்பூர்வமான செயல்கள், பொருளாதார வளர்ச்சி, உதவும் மனப்பான்மை ஆகியவற்றை பாராட்டும் வகையிலும் அங்கீகாரம் வழங்கும் வகையிலும் மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகத்தின் சார்பில் இந்த வெளிநாடுவாழ் இந்தியர் தின விழா கொண்டாடப்படுகிறது.

ஒரு வெளிநாட்டில் வாழும் இந்தியராக தென் ஆப்பிரிக்காவில் 20 ஆண்டு வசித்து வந்த மகாத்மா காந்தி 1915-ம் ஆண்டு ஜனவரி 09-ந் தேதி நாடு திரும்பினார்.

இதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 09-ந் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது.

பொது அறிவு தமிழில்

08 Jan, 16:48


மும்பை விமான நிலையம் ACI (ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல்) மூலம் வாடிக்கையாளர் அனுபவத்திற்கான 'லெவல் 5' அங்கீகாரத்தைப் பெற்ற இந்தியாவின் முதல் விமான நிலையமாகவும், உலகளவில் 3 ஆவது இடமாகவும் மாறியுள்ளது.

பொது அறிவு தமிழில்

08 Jan, 12:23


இஸ்ரோவின் புதிய தலைவராக டாக்டர் வி நாராயணன் நியமனம் 🇮🇳

திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குநரான வி நாராயணன்,, விண்வெளித் துறையின் செயலாளராகவும், விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும் இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது,

ஜனவரி 14, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது.

பொது அறிவு தமிழில்

08 Jan, 07:19


இந்தியா இப்போது 1,000 கிமீ செயல்பாட்டு மெட்ரோ நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது, இது சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய நெட்வொர்க் ஆகும் .

மேலும் 1,000 கிமீ மெட்ரோ கட்டுமானம் மற்றும் திட்டமிடல் நிலைகளில் உள்ளது.

பொது அறிவு தமிழில்

08 Jan, 07:17


இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை நியமித்தது மத்திய அரசு.

கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் வி.நாராயணன்.

திருவனந்தபுரம் வலியமலாவில் உள்ள LPSCயின் இயக்குனராக பணியாற்றியவர்.

நாராயணன் வரும் ஜனவரி 14ஆம் தேதி இஸ்ரோ தலைவராக பதவியேற்கிறார்.

பொது அறிவு தமிழில்

08 Jan, 06:55


பூமி சுழற்சி தினம்:
சூரியனை பூமி தினமும் சுற்றுகிறது. ஜனவரி 8ல் பூமி சுழற்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது. பூமி தன் சுற்றுவட்டப்பாதையில் சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 நாட்கள் ஆகின்றன. தன்னைத்தானே ஒருமுறை சுற்றுவதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இந்நிலையில் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என 1851ல் முதன்முதலாக உலகிற்கு செயல்முறை விளக்கம் செய்து காட்டியவர் பிரான்ஸ் விஞ்ஞானி லியோன் பவுல்காட். இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக இத்தினம் உருவாக்கப்பட்டது. ஒளியின் வேகத்தை கண்டறிந்தவரும் இவரே.

பொது அறிவு தமிழில்

08 Jan, 01:36


Hello everyone! 🌟
Introducing our Telegram channel, General Knowledge Tamil(பொது அறிவு தமிழில்), dedicated to fostering a community of knowledge seekers! Our mission is to empower students preparing for competitive exams, and we believe our channel will be a valuable resource for them. Please share General Knowledge Tamil with your friends and peers, and join us in our pursuit of knowledge! We look forward to having you as part of our community! Thank you for your support! 🙏🏻

https://t.me/General_Knowledge_Tamil

பொது அறிவு தமிழில்

08 Jan, 01:36


பொது அறிவு தமிழில்.
பொது அறிவை வளர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த டெலகிராம் சேனலானது துவங்கப்பட்டுள்ளது.
போட்டி தேர்வுக்கு ஆயத்தமாகும் மாணவ மாணவியருக்கு இந்த சேனல் உதவிகரமாக இருக்குமென நாங்கள் நம்புகிறோம்.
உங்களின் நண்பர்களுக்கும் இந்த சேனலை பகிருங்கள்.
இதுவரை சேனலில் இணையாத நண்பர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கி இந்த சேனலில் இணைந்து கொள்ளலாம். 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
https://t.me/General_Knowledge_Tamil
👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻 இணைந்து பயன்பெறுங்கள்.
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

பொது அறிவு தமிழில்

08 Jan, 01:35


*ஜனவரி 08,*
*கலிலியோ கலிலி நினைவு தினம் இன்று*

நவீன வானியலின் தந்தை என்றும் நவீன இயற்பியலின் தந்தை என்றும் அழைக்கப்படுபவர் கலிலியோ கலிலி.

தனது கண்டுபிடிப்புகளால் உலகத்தை அதிரச் செய்தவர். வானின் நட்சத்திரங்கள், கோள்களைப் பற்றி ஆராய தொலைநோக்கியைப் பயன்படுத்திய முதல் நபரும் இவர்தான். வியாழன் கிரகத்தின் நிலவுகள், சனி கிரகத்தைச் சுற்றியிருக்கும் வளையம் உள்ளிட்ட முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்.

ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலத்தில் இவரது கண்டுபிடிப்புகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. சூரியனை பூமி உள்ளிட்ட கிரகங்கள் சுற்றிவருகின்றன என்று சொன்ன நிக்கோலஸ் கோபர்நிகஸின் கூற்றை ஆதரித்து கலிலியோ எழுதிய ஆய்வுக் கட்டுரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது கத்தோலிக்க திருச்சபை பாதிரியார்கள் மக்களிடம் கட்டமைத்திருந்த மூடநம்பிக்கையை உடைத்தது. இதில் வெறுப்புற்ற மதகுருமார்கள் தங்கள் மத அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் மூலம் கலிலியோவை வீட்டுச்சிறையில் வைத்தனர்.

1642ம் ஆண்டு ஜனவரி 08ந்தேதி இறக்கும்போதும் வீட்டுச்சிறையிலேயே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது அறிவு தமிழில்

08 Jan, 01:13


*ஜனவரி 08,*
*தேசிய ஆம்புலன்ஸ் தினம்.*

உயிருக்கு போராடும் நோயாளியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ் இன்று முதலுதவி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்துகள் என "மினி மொபைல் ஆஸ்பத்திரி'யாக வலம் வருகிறது.

108 ஐ குறிக்கும் வகையில், ஆண்டின் முதல் மாதமான இந்த ஜனவரியில், 08 ம் தேதியான இன்று ஆம்புலன்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

பொது அறிவு தமிழில்

07 Jan, 06:34


பொதுவாக நமது வீடுகளில் இருக்கும் சுவிட்ச் பாக்ஸ்களில் தொலைக்காட்சி அல்லது செல்போன் சார்ஜர் போன்ற தற்காலிக இணைப்பு பயன்பாடுகளுக்கு பிளக்குகள் இருக்கும்.

அவை பெரும்பாலும் 3 பின் பிளக்குகளாகத்தான் இருக்கும்.
எதற்காக 3 பின்? 3 Pin என்பது எர்த் இணைப்புடன் வருவது.

நாம் பயன்படுத்தும் கிரைண்டர் மிக்ஸி அல்லது மற்ற மின்சார பொருட்களில் மின்கசிவு ஏற்பட்டால் அது உடனே நாம் பயன்படுத்தும் பொருள் மீதுதான் பாயும். அதன் மேல் பக்கம் பிளாஸ்டிக் இல்லாமல் உலோகத்தால் உருவாக்கப்பட்டிருந்தால் அதன் மீது பாயும்.

அதன் மேல்பக்கம் எர்த் உடன் இணைக்கப்பட்டு இருந்தால் எர்த் இணைப்பு மூலம் மின்சாரம் பூமிக்குள் பாயும். இதன் லோடு தாங்காமல் MCB
உடன் டிரிப் ஆகி அல்லது பியூஸ் போய் நம்மை காப்பாற்றும்.

எர்த் இணைப்பு இல்லாமல் இருந்தால் மின்சாரம் உலோகபொருளின் மேல் பாய்ந்து கொண்டிருக்கும். நாம் அதைத் தொட்டவுடன் நமது உடலை மின்கடத்தியாக பயன்படுத்தி நம் உடல் மூலம் மின்சாரம் பூமிக்கு பாயும்.

ஒவ்வொருவரரின் உடல் வலிமையை பொருத்து குறிப்பிட்ட அளவு வோல்டேஜ்வரைதான் தாங்கும். அதற்கு மேல் மின்சாரம் பாய்ந்தால் உடல் தாங்காது நமது உடல் கருகிவிடும்.

எனவேதான் பாதுகாப்புக்காக 3 பின் பிளக்குகள் அமைத்து இருப்பார்கள். அதில் மேல் பக்கம் இருக்கும் பெரிய துளைதான் எர்த் இணைப்பு.
பிளக்கில் இருக்கும் மூன்று பின்களில் கீழ்பக்கம் இருக்கும் இரண்டு பின்களை (Connector) விட மேல்பக்க பின் கொஞ்சம் பெரிதாக, நீளமாகத்தான் இருக்கும்.

அதை பிளக்குக்குள் சொருகும் பொழுது முதலில் எர்த் இணைப்புதான் முதலில் மின்சாதனபொருளுக்கு கிடைக்கும். அதன் பின்புதான் மின்சார இணைப்பு கிடைக்கும்.

காரணம் மின்சாரம் பாயும் பொழுது அங்கு எர்த் இணைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும், மின்கசிவு இருந்தால் உடனடியாக ஃபியூஸ் போய்விட வேண்டும் என்பதற்காக உலகம் முழுதும் இப்படிப்பட்ட பாதுகாப்பு முறையை கடைப்பிடிக்கிறார்கள்.

எர்த் இணைப்பு தேவைப்படும் கருவிகளுக்கு 3 பின் பிளக் கொடுத்திருப்பார்கள்.

எர்த் தேவைப்படாத மின்சாதன பொருட்களுக்கு தயாரிப்பு நிறுவனங்களே 2 PIN இணைப்பு தருவாங்க. உதாரணம் சார்ஜர், இப்பொழுது வரும் நவீன தொலைக்காட்சிகள்.

எனவே எக்காரணம் கொண்டும் நாமாக 3 PIN பிளக்கை 2 PIN ஆக மாற்றக்கூடாது.

மேலும் நிறைய வீடுகளில் கூலி குறைவாக கேட்கிறார்கள் என்பதற்காக அனுபவமற்ற நபர்களைக் கொண்டு ஒயரிங் செய்திருப்பார்கள்.

அவர்கள் ஒவ்வொரு மின்னிணைப்புக்கும் எவ்வளவு மின்சுமை (லோடு) தேவைப்படும்? ஒவ்வொரு அறைக்கும் தேவைப்படும் இணைப்புகளுக்கு தனித்தனியாக எப்படி மின் இணைப்புகளை பிரித்து தருவது ?
அதற்கு எந்த வகையான சுவிட்சுகளை பொருத்த வேண்டும்? என்பதெல்லாம் தெரியாமல் கண்டபடிக்கு பொருத்தி வைத்திருப்பார்கள்.

இதன் மூலம் லோடு தாங்காமல் அடிக்கடி ட்ரிப்பாகிக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் ஒயர்கள் கருகி தீப்பிடித்து விடும்.

மேலும் அவர்கள் எர்த்தெல்லாம் தேவையில்லாத விஷயம் என்று கூறி அதை தவிர்த்து விடுவார்கள். அல்லது அதை முறையாக பூமிக்குள் பதிக்காமல் நேரடியாக மின் கம்பத்தில் இருந்து வரும் நியூட்ரலையே எர்த்தாக கொடுத்து விடுவார்கள். இது ஆபத்தாகிவிடும்.

எனவே வீடு, அலுவலகம், தொழிற்சாலை எதாக இருந்தாலும் எல்லா இடங்களிலும் முறையாக பூமிக்குள் பதிக்கப்பட்ட எர்த் இணைப்பு அவசியம் இருக்க வேண்டும்.

கூலி கொஞ்சம் அதிகமானாலும் முறையாக பயிற்சி பெற்ற நன்கு அனுபவம் உள்ள எலக்ட்ரீசியன்களை வைத்துதான் வேலை செய்ய வேண்டும்.

இது நமது உயிரையும், பொருளையும் காப்பாற்றும். மின் கசிவு ஏற்பட்டு தீ பிடிக்காமல் காப்பாற்றும்.

https://t.me/General_Knowledge_Tamil

பொது அறிவு தமிழில்

06 Jan, 16:16


முக்கியமான தேசிய மற்றும் சர்வதேச நாட்கள்:

   •  இராணுவ தினம்-15 ஜனவரி
   • குடியரசு தினம் - 26 ஜனவரி
   • தியாகிகள் தினம் - 30 ஜனவரி

   • சர்வதேச மகளிர் தினம்-8 மார்ச்
   • உலக பேச்சு தினம்-21 மார்ச்
   • உலக தண்ணீர் தினம்-22 மார்ச்
   • உலக காசநோய் தினம் - மார்ச் 24

   • உலக சுகாதார தினம் - ஏப்ரல் 7

   • உலக தொழிலாளர் தினம்-1 மே
   • செஞ்சிலுவை தினம் - 8 மே
   • உலக செவிலியர் தினம் - 12 மே
   • உலகத் தொலைக்காட்சி தினம் - 17 மே
   • உலக புகையிலை எதிர்ப்பு தினம் - 31 மே

   • உலக சுற்றுச்சூழல் தினம்-5 ஜூன்
   • உலக சாதனை தினம் - ஜூன் 15
   • தேசிய ஆவண தினம்-29 ஜூன்

   • உலக மக்கள் தொகை தினம்-11 ஜூலை

   • உலக மார்பக தினம்-1 ஆகஸ்ட்
   • சுதந்திர தினம்-15 ஆகஸ்ட்
   • தேசிய விளையாட்டு தினம்-29 ஆகஸ்ட்

   •ஆசிரியர் தினம்-5 செப்டம்பர்
   •சர்வதேச திரைப்பட தினம்-8 செப்டம்பர்
   • இந்தி தினம்-14 செப்டம்பர்
   • ஓசோன் அடுக்கு முன்பதிவு நாள் - 16 செப்டம்பர்
   • உலக சுற்றுலா தினம் - செப்டம்பர் 27

   • சர்வதேச முதியோர் தினம் - அக்டோபர் 1
   • உலக வனவிலங்கு தினம் - அக்டோபர் 6
   • திவாஸ் தினம் - அக்டோபர் 8
   • உலக அஞ்சல் தினம் - அக்டோபர் 9
   • உலக உணவு தினம்-16 அக்டோபர்
   • ஐக்கிய நாடுகள் தினம்-24 அக்டோபர்

   • குழந்தைகள் தினம்-14 நவம்பர்
   • உலக சர்க்கரை நோய் தினம்-14 நவம்பர்

   • உலக விளம்பர தினம் - டிசம்பர் 1
   • கடற்படை தினம் - 4 டிசம்பர்
   • குடிமைத் தற்காப்பு தினம் - டிசம்பர் 6
   • கொடி நாள் - டிசம்பர் 7
   • சர்வதேச மனித உரிமைகள் தினம் - டிசம்பர் 10
   • உழவர் தினம்-23 டிசம்பர்
   • தேசிய நுகர்வோர் தினம் - 24 டிசம்பர்

https://t.me/General_Knowledge_Tamil

பொது அறிவு தமிழில்

06 Jan, 15:00


'விண்வெளியில் வாழ்வு'..முளைக்க தொடங்கிய காராமணி விதை..இஸ்ரோ மகிழ்ச்சி!

விண்வெளியில் தாவர வளர்ப்பு சோதனையில், விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட காராமணி விதைகள் முளைவிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது

பொது அறிவு தமிழில்

06 Jan, 10:31


பனித்துளி உருவாவது எப்படி?
காலையில் புல், மற்றும் செடியில் பனித்துளியை பார்த்திருப்போம். இது மழைத்துளி போல வானில் இருந்து விழுவதில்லை. ஒரு காலி பாத்திரத்தில் பனிக்கட்டியை வைத்தால், பாத்திரத்தைச் சுற்றி நீர்த்துளி உருவாகும். வெப்பக் காற்றில் கலந்திருக்கும் நீராவி குளிர்ந்த பரப்பைத் தொடும்போது, குளிர்ந்து நீர்த்துளிகளாக உருமாறுகிறது. தாவரங்கள் மீதும் பனித்துளி இவ்வாறுதான் உருவாகிறது. பொதுவாக காற்றில் ஓரளவு நீராவியும் (ஈரப்பதமும்) கலந்திருக்கும். இரவில் தாவரம் குளிர்ந்திருந்து, அவற்றை வெப்பக் காற்று தொடும்போது, காற்றிலிருக்கும் நீராவி குளிர்ந்து பனித்துளி உருவாகும்.

பொது அறிவு தமிழில்

06 Jan, 00:56


தமிழ்நாட்டில் வாணியம்பாடி அருகில் காவலூர் ஜவ்வாது மலையில் ஆசியாவின் மிகப்பெரிய
தொலைநோக்கி அமைந்துள்ள வானாராய்ச்சி
அமைப்பான “வைணு பாப்பு வானாய்வகம் “
(Vainu Bappu Observatory)
பிரதமர் ராஜீவ் காந்தியால்
திறந்துவைக்கப்பட்ட தினம் இன்று.
( *06 ஜனவரி 1986*)

இது புகழ்பெற்ற இந்திய வானியியலாளர் Manali Kallat Vainu Bappu ன் முயற்சியால் உருவாக்கப்பட்டதால், இவர் காலமானபின் இது திறக்கப்பட்டதால் இவரது பெயரே இதற்கு சூட்டப்பட்டது. இங்குள்ள 2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வைணு பாப்பு தொலைநோக்கி எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி பார்வையாளர்களுக்கு காட்டப்படும், வானம் தெளிவாக இருப்பின் 15 செ.மீ தொலைநோக்கி மூலம் இரவில் வானம் எவ்வாறு உள்ளது என காட்டப்படும்.

இங்கு கண்டுபிடிக்கப்பட்டவைகள்:-

வியாழன் (Jupiter) கோளின் நிலவான Ganymede வளிமண்டலம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

சூரியக்குடும்பத்தில் உள்ள யுரேனஸ் (Uranus) கோளைச்சுற்றி வளையங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பொது அறிவு தமிழில்

06 Jan, 00:53


*ஜனவரி 06,*
*சர்வதேச வேட்டி தினம்.*

இன்று உலக வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது.
தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டி, ஆனால் இன்றைய தலைமுறையினர் வேட்டி கட்டும் வழக்கத்தை அரிதாக்கி கொண்டுள்ளனர்.

பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஜனவரி 06 உலக வேட்டி தினமாக அனுசரிக்கப்படும் என யுனெஸ்கோ அறிவித்தது.
இதனை அடுத்து மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் இன்று சர்வதேச வேட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சர்வதேச வேட்டி தினம் அனுசரிக்கப்படுவதன் நோக்கம் கைத்தறி நெசவு தொழிலை காப்பது, இளைஞர்களிடம் வேட்டி அணியும் பழக்கத்தை ஊக்குவிப்பதும் ஆகும்.

பொது அறிவு தமிழில்

01 Jan, 02:09


உலகில் புத்தாண்டைக் கொண்டாடும் முதல் இடம் கிரிட்டிமாட்டி தீவு. (KIRITIMATI ISLAND).

இது பசிபிக் பெருங்கடலில் காணப்படும் கிரிபாட்டி (KIRIBATI REPUBLIC) குடியரசின் ஒரு பகுதியாக உள்ளது.
இது கிறிஸ்துமஸ் தீவு என்றும் குறிப்பிடப்படுகிறது.

இந்திய நேரப்படி டிசம்பர் 31ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கே கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்துவிடும்.

அதேபோன்று
உலகில் கடைசியாக புத்தாண்டு பிறக்கும் இடம்:

பசிபிக் பெருங்கடலில் ஹவாய் தீவிற்கு தென்மேற்கே உள்ள பேக்கர் தீவு மற்றும் ஹவ்லாண்ட் தீவில்தான் உலகில் கடைசியாக புத்தாண்டு பிறக்கும் இடமாகும்.

இந்திய நேரப்படி ஜனவரி 01ம் தேதி மாலை 5.30 மணிக்குதான் பேக்கர் தீவில் புத்தாண்டு பிறக்கிறது.

பொது அறிவு தமிழில்

01 Jan, 02:08


ஜனவரி 01 -ஆங்கிலப் புத்தாண்டு என்று நம்மில் பலரும் அழைக்கும் இது கிரிகோரியன் நாட்காட்டியின் படியான புத்தாண்டு ஆகும்.

இது (Gregorian calendar) என்பது உலக அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும். மேலும் மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்பெறுகிறது.
சர்வதேச தபால் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றினால் அங்கீகரிப்பட்டுள்ளது.

இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும்.

இது 1582 ல் அப்போதைய திருத்தந்தை பதின்மூன்றாம் கிரிகோரியன் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாகப் பின்னாளில் இந்நாட்காட்டிக்கு "கிரகோரியன் நாட்காட்டி" என்னும் பெயர் வழங்கலாயிற்று.

சூரியனை பூமி ஒரு முறை சுற்றிவரும் காலத்தை சரியாக ஒரு வருடம் என்று உணர்ந்து ஏற்றுக் கொண்டதற்கேற்ப இந்த திருத்தப்பட்ட காலண்டரின் மாதங்கள், தேதிகள் உருவாக்கப்பட்டன.

ஆங்கிலேயர்கள் இக்காலண்டரை அறிமுகப்படுத்தினார்கள் என்பதால் இந்திய மக்கள் இதனை ஆங்கில புத்தாண்டு என்று அழைக்கின்றனர்.

பொது அறிவு தமிழில்

01 Jan, 02:02


கன்னியாகுமரியில்
133 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட
திருவள்ளுவர் சிலை,
தமிழக முதல்வர்
கலைஞர் மு.கருணாநிதி
திறந்து வைத்த தினம் இன்று.
( *01 ஜனவரி 2000*)

இச்சிலை சர்வதேசப்புகழ்பெற்ற சிற்பி கணபதி ஸ்தபதியால் உருவாக்கப்பட்டது.

பீடத்தின் 38 அடி உயரம் திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலை திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.

உட்புற மண்டபச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

பொது அறிவு தமிழில்

01 Jan, 01:58


உலக வணிக அமைப்பு
(World Trade Organization)
உருவான தினம் இன்று.
( *01 ஜனவரி 1995*)

உலக வணிக அமைப்பு (WTO ) என்பது ஒரு சர்வதேச நிறுவனமாகும், சர்வதேச மூலதன வணிகத்தினை தாராளமயமாக்கி அதை மேற்பார்வையிடும் நோக்குடன் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் Geneva, Switzerland ல் உள்ளது.

பொது அறிவு தமிழில்

31 Dec, 05:43


என்னது உண்மையாகவே புத்தாண்டு என்று ஒன்று கிடையாதா? அறிவியல் சொல்லும் விளக்கம்!

இன்று இரவுடன் 2024 முடிவடைகிறது. அதற்கு பிறகு புத்தாண்டு பிறக்கிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது உண்மை இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பூமி ஓரிடத்திலிருந்து தொடங்கி சூரியனை சுற்றி மீண்டும் அதே இடத்திற்கு வரும்போது ஓராண்டு முடிவடைகிறது என்று நாம் கருதுகிறோம். ஆனால், புத்தாண்டு ஒரு கற்பனைதான். ஏனெனில் சூரியன் ஒரே இடத்தில் இருப்பதில்லை. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சூரியன் சுமார் 8.28 லட்சம் கி.மீ வேகத்தில் இந்த பால்வெளி அண்டத்தை சுற்றி வருகிறது.

அப்படியெனில் சூரியனை சுற்றிக்கொண்டிருக்கும் பூமியும் பால்வெளி அண்டத்தை சுற்றி வருகிறது. இப்படி வரும்போது நமது பூமி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்துக்கொண்டே இருக்கிறது. எனவே மீண்டும் அந்த இடத்திற்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை. அப்படியெனில் புத்தாண்டு என்று ஒன்று கிடையாது.

புத்தாண்டு எப்படி உருவானது?:

தொடக்கத்தில் யாருக்கும் நேரம் என்பது முக்கியமானதாக தெரியவில்லை. ஆனால் காலம் என்பது மிக முக்கியமானதாக இருந்தது. உதாரணத்திற்கு நாம் ஆதி மனிதர்களாக இருந்த போது, பழங்களையும், சின்ன சின்ன பூச்சிகளையும் உண்டு வாழ்ந்து வந்தோம். அப்போது எந்த காலத்தில் எந்த பகுதியில் உள்ள காய்கள் பழங்களாக மாறும் என்பது நமக்கு தெரிந்திருந்தது. இதுவே நாம் கொஞ்சம் வளர்ச்சியடைந்த போது, கோடை காலத்தில் சாப்பிட என்ன கிடைக்கும்? குளிர் காலத்தில் என்ன கிடைக்கும் என்பதை தெரிந்து வைத்திருந்தோம்.

இன்னும் கொஞ்சம் வளர்ந்து விவசாயம் செய்ய தொடங்கியபோது, எந்த காலம் மழைக்காலம்? எது பனிக்காலம் என்பது தெரிந்திருந்தது. எனவே அதற்கேற்ப பயிர்கள் விதைக்கப்பட்டன. இப்படித்தான் மாதங்களும், நாட்களும் உருவாகின. அப்போதுதான் ரோம் காலண்டர் பின்பற்றப்பட்டது. இதில் மொத்தம் 10 மாதங்கள் இருக்கும். முதல் மாதம் மார்ச்தான். மார்ச் 1 வந்தால் இந்த காலண்டரை பின்பற்றுபவர்கள் புத்தாண்டை கொண்டாடுவார்கள்.

ஆனால் இதில் இருந்த மாதங்களும், வருடத்தின் மொத்த நாட்களையும் கூட்டி பார்த்தால் கணக்கு சரியாக வரவில்லை, எங்கோ இடித்தது. எனவேதான் ஜூலியஸ் சீசர், ஜூலியன் காலண்டரை உருவாக்கினார். இதில்தான் முதன் முறையாக ஜனவரி எனும் மாதம் வந்தது. மட்டுமல்லாது 12 மாதங்கள் இருந்தன. எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் ஏறத்தாழ ஓராண்டு வந்தது. ஆனாலும் இதில் ஒரு பிரச்சனை இருந்தது. அதாவது இது ஏறத்தாழதான் சரியாக இருந்ததே தவிர துல்லியமாக இருக்கவில்லை.

காலப்போக்கில் துல்லியமான நேரத்திற்கான தேவை எழுந்தது. இதனையடுத்து 1582ம் ஆண்டு, 13ம் போப் கிரிகோரி என்பவர் பழைய காலண்டரை பட்டி டிங்கரிங் பார்த்து, கொஞ்சம் நாட்களை கூட்டியும், சிலவற்றை கழித்தும் புதுசாக ஒரு காலண்டரை கையில் கொடுத்தார். அதுதான் இப்போது வரைக்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில்தான் நாம் புத்தாண்டை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் புத்தாண்டு என்று ஒன்று உண்மையில் கிடையாது. இப்போதும் கூட சீனா போன்ற நாடுகள் நிலவை அடிப்படையாக கொண்ட லூனார் காலண்டரை பயன்படுத்திதான் புத்தாண்டை கொண்டாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பொது அறிவு தமிழில்

31 Dec, 01:41


(*31 டிசம்பர் 1879*)

உலகத்திற்கு ஒளி கிடைத்த நாள் இன்று.
ஆம், முதல் ஒளிவிளக்கு உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

18 ம் நூற்றாண்டில் வாயு விளக்குகளே பயன்பாட்டில் இருந்த காலத்தில், மின் விளக்கு கண்டுபிடிப்பது பலரது கனவாகவே இருந்தது.

1879ல் பிளாட்டினம் கம்பிச்சுருளை, வெற்றிட பல்ப் ஒன்றில் பயன்படுத்தி கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில்,
உலகின் முதல் மின்விளக்கை உட்டன் என்பவருடன் சேர்ந்து எடிசன் கண்டுபிடித்தார்.

பொது அறிவு தமிழில்

29 Dec, 16:24


அர்த்தங்கள் அறிவோம்.!
முன்றுறை - துறைமுகம்.
முரண்டல் - பகைத்தல்.
புயங்கம் - பாம்பு.
பாவல் - மிதியடி.

பொது அறிவு தமிழில்

28 Dec, 09:40


*டிசம்பர் 28, 1885*

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி துவக்கப்பட்டது.

இந்தியாவின் வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள்
72 பேர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை ஆரம்பிப்பதற்கு பம்பாயில் கூடினர்.

உமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, ஆலன் ஆக்டவியன் ஹியூம், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவராக, உமேஷ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தொடக்க காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. அப்போது இதன் குறிக்கோள் கல்வி கற்ற இந்தியர்களுக்கு அரசில் பெரும்பங்கு வாங்கி தருவது தான்.

பொது அறிவு தமிழில்

28 Dec, 09:39


*டிசம்பர் 28, 2007*

நேபாளத்தின் இடைக்கால நாடாளுமன்றம் நாட்டை குடியரசாக அறிவித்து மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.

நேபாள ஜனநாயக இயக்கத்தின் தொடர் போராட்டம் காரணமாக, மன்னர் ஞானேந்திரா நேபாள நாட்டின் முடியாட்சியை துறந்து, நேபாள நாட்டின் ஆட்சியை மக்களிடம் ஒப்படைத்தார்.

முடக்கப்பட்டிருந்த நாடாளுமன்றம் 24 ஏப்ரல் 2006ல் மீண்டும் செயல்படத் துவங்கியது. 18 மே 2006இல் நேபாள நாடாளுமன்றம் கூடி, மன்னரின் அனைத்து அதிகாரங்களை பறித்து, நேபாளத்தை மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.

28 டிசம்பர் 2007 அன்று நேபாள அரசியல் சட்டத்தின் பிரிவு 159ல் திருத்தம் மேற்கொண்டு, நேபாள நாட்டை, கூட்டுக் குடியரசு நாடாக அறிவித்து, முடியாட்சி முடிவுக்கு வந்தது.

பொது அறிவு தமிழில்

28 Dec, 07:22


😍🌱இந்தியாவின் முக்கிய நதிகளின் கரையில் அமைந்துள்ள முக்கிய நகரங்கள்

🌸 லுனி நதி - அஜ்மீர்

🌸 மந்தாகினி நதி - கேதார்நாத்

🌸 சரயு நதி - அயோத்தி

🌸 சம்பல் நதி - கோட்டா, குவாலியர்

🌸 கோதாவரி நதி - நாசிக்

🌸 காவேரி ஆறு - ஸ்ரீரங்கப்பட்டினம்

🌸 பிரம்மபுத்திரா நதி - சோகோவா காட், திப்ருகார், குவஹாத்தி

🌸 சட்லஜ் நதி - ஃபிரோஸ்பூர், லூதியானா

🌸 மகாநதி - கட்டாக், சம்பல்பூர்

🌸 ஹூக்ளி நதி - கொல்கத்தா

🌸 கோமதி நதி - லக்னோ, ஜான்பூர், துவாரகா

🌸 நர்மதா நதி - ஜபல்பூர்

🌸 அலக்நந்தா நதி - பத்ரிநாத்

🌸 துங்கபத்ரா நதி - கர்னூல், சிம்லா

🌸 யமுனை நதி - மதுரா, ஆக்ரா, டெல்லி, அலகாபாத்

🌸 கங்கா நதி - அலகாபாத், ஹரிதர், கான்பூர், பாட்னா, வாரணாசி (பனாரஸ்)

🌸 ஜீலம் நதி - ஸ்ரீநகர்

🌸 தப்தி நதி - சூரத்

🌸 முசி நதி - ஹைதராபாத்

🌸 கோல்டன் ரேகா நதி - ஜாம்ஷெட்பூர்

🌸 சபர்மதி நதி - அகமதாபாத்

🌸 கிருஷ்ணா நதி - விஜயவாடா

🌸 பீமா நதி - பந்தர்பூர்

🌸 ராமகங்கா நதி - பரேலி

🌸 பெட்வா நதி - ஓர்ச்சா

🌸 ஷிப்ரா அல்லது க்ஷிப்ரா நதி - உஜ்ஜைனி

🌸 கங்கை மற்றும் மகன் நதி - பாட்னா

https://t.me/General_Knowledge_Tamil

பொது அறிவு தமிழில்

28 Dec, 07:20


நிலவின் நிறம் என்ன?
பூமியின் ஒரே துணைக்கோள் நிலவு. இது 3.84 லட்சம் கி.மீ., துாரத்தில் உள்ளது. நிலவின் ஈர்ப்பு விசை தான், பூமியை அதன் அச்சில் வைத்திருக்க உதவுகிறது. மேலும் அதன் ஈர்ப்பு விசையால் தான் கடலில் அலைகள் தோன்றுகின்றன. நிலவு என்பது பாறைகள், தாதுக்கள், சிலிகேட்டுகளால் ஆனது. வளிமண்டலம் கிடையாது. நிலவில் பள்ளங்கள், மலைகள் உள்ளன. பூமியில் இருந்து பார்க்கும் போது, நிலவு வெள்ளை நிறத்தில் பிரகாசிக்கிறது என நினைக்கிறோம். ஆனால் சூரியனின் ஒளியையே நிலவு பிரகாசிப்பதால், அருகில் சென்று பார்த்தால் அடர் சாம்பல் நிறத்தில் காணப்படும்.

பொது அறிவு தமிழில்

27 Dec, 01:36


டிசம்பர் 27,

‘ஜனகண மன’ தேசிய கீதம் முதன்முதலாக இசைக்கப்பட்ட நாள் இன்று.

1911 ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடக்கும்போது பாடப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.

1950 ம் ஆண்டு ஜனவரியில்தான் ‘ஜனகண மன’ இந்தியாவின் தேசிய கீதமாக இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது.

பொது அறிவு தமிழில்

27 Dec, 01:32


*டிசம்பர் 27 லூயி பாஸ்டர்*

நோய்க் கிருமிகள் பற்றிய ஆராய்ச்சிகள் மூலம் மனித குல நன்மைக்காகப் பாடுபட்ட பிரான்ஸ் விஞ்ஞானி லூயி பாஸ்டர் 1822, டிசம்பர் 27ல் பிரான்ஸில் பிறந்தார்.

இவர் 1856ல் தன்னுடைய நண்பரான ஒயின் தயாரிப்பாளருக்கு உதவி செய்ய ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டு ஒயினை புளிக்கச்செய்வது ஒருவகை பாக்டீரியா கிருமி என்பதைக் கண்டறிந்தார். தற்போது பால் மற்றும் உணவுப் பொருள் பதப்படுத்தும் நிலையங்களில் இந்த தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது. இது அவரது பெயரால் 'பாஸ்ச்சரைசேஷன்' என்று அழைக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, மனித உடலில் நுண்ணுயிரிகள் புகுவதை தடுக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உயிர்க்கொல்லி என்று கருதப்பட்ட காசநோய்க்கும் மருந்து கிடைத்தது. கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோய்க்கும் மருந்தை கண்டறிந்தார். மேலும் ரேபிஸ் நோய் பற்றி ஆராய்ந்து பல சோதனைகளை மேற்கொண்டு அதற்கான தடுப்பு மருந்தையும் கண்டறிந்தார்.

இவர் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். விண்ணில் உள்ள சில கோள்கள் மற்றும் நிலவிலுள்ள பள்ளங்களுக்கும் இவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானி லூயி பாஸ்டர் 72வது வயதில் (1895) மறைந்தார்.

பொது அறிவு தமிழில்

26 Dec, 17:27


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்:

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று (டிச. 26) காலமானார். அவருக்கு வயது 92.

உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று மாலை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், உயிர் பிரிந்தது.

1991 - 96 வரை முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான ஆட்சியில், நிதித் துறை அமைச்சராக செயல்பட்டார். கல்வியாலும், நிதித் துறை நிர்வாக அனுபவத்தாலும் பொருளாதாரவியல் வல்லுநரான மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் தொடக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார்.

2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தார். சுமார் 33 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார்.

பொது அறிவு தமிழில்

26 Dec, 13:10


தெரிந்து கொள்வோம் !!
வருமான வரி இல்லாத நாடுகளுள் குவைத் நாடும் ஒன்று.

Kuwait is one of the country without Income tax.

இந்தியாவின் முதல் பாதுகாப்பு அமைச்சர் பல்தேவ் சிங் ஆவார்.

Baldev Singh was the first defence Minister of India.

கலகாரிப் பாலைவனம் தென்னாப்பிரிக்காவில் உள்ளது.

The Kalahari Desert is in South Africa.

தெலுங்கானா மாநிலம் 2 ஜூன் 2014 அன்று அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது.

The state of Telangana was officially formed on 2 June 2014.

இந்திய ரயில்வே 1951 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது.

Indian Railways Nationalised in the year 1951.

நெல்சன் மண்டேலா 1990 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதைப் பெற்றார்.

Nelson Mandela was awarded Bharat Ratna in the year 1990.

அறுவை சிகிச்சையின் தந்தை சுஷ்ருதா ஆவார்.

Father of Surgery was Sushrutha.

சர்வதேச நீதிமன்றம் நெதர்லாந்திலுள்ள ஹேக் பகுதியில் அமைந்துள்ளது.

International Court of Justice is situated at The Hague, Netherland.

தாய்லாந்தில் வெள்ளை யானைகள் காணப்படுகின்றன.

White Elephants are found in Thailand.

https://t.me/General_Knowledge_Tamil

பொது அறிவு தமிழில்

26 Dec, 10:10


அஞ்சல் தலை வெளியீடு :

1960 - பாரதியார்

1976 - காமராஜர்

1978 - பெரியார்

1995 - முத்துராமலிங்க தேவர்

2000 -  இரட்டைமலை சீனிவாசன்

2004 - திருப்பூர் குமரன்,  மருது சகோதரர்கள்

2005 - அயோத்திதாசர், திரு.வி.க,  கவிமணி,  தீரன் சின்னமலை

2006 - உ.வே.சா, தேவநேயப் பாவாணர், ம.பொ.சிவஞானம்

2007 - மறைமலை அடிகள்

2008 - வேலு நாச்சியார்,  தில்லையாடி வள்ளியம்மை, செய்குதம்பி பாவலர்

பொது அறிவு தமிழில்

26 Dec, 00:58


*டிசம்பர் 26,*
*சார்லஸ் பாபேஜ்*

கணினியின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் பாபேஜ் 1791ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி லண்டனில் பிறந்தார்.

1810ம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் இணைந்தவர், கணிதத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார். 1834ம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை இவர் உருவாக்கினார்.

தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் (Analytical Engine) மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை (Difference Engine) வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ்.

இவர் நியமத் தொடருந்துப் பாதை (Difference Engine) அளவுக்கருவி, சீரான அஞ்சல் கட்டண முறை என பல கருவிகளை கண்டுபிடித்துள்ளார். இவர் தன்னுடைய 79வது வயதில் 1871ம் ஆண்டு மறைந்தார்.

பொது அறிவு தமிழில்

26 Dec, 00:55


பண்பலை (FM radio) வானொலியை கண்டுபிடித்த அமெரிக்காவைச் சேர்ந்த,
மின் பொறியியலாளர், Edwin Armstrong, FM radio வுக்கான காப்புரிமம் பெற்ற தினம் இன்று.
( *26 டிசம்பர் 1933*)

பொது அறிவு தமிழில்

24 Dec, 01:26


*டிசம்பர் 24,*
தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்.

இந்தியாவில் ஆண்டுதோறும் நுகர்வோர் விழிப்புணர்வை வலியுறுத்தி டிசம்பர் 24ம் தேதி தேசிய நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

1986ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (Consumer Protection Act) இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. சந்தையில் விற்பனையாளர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உறுதி செய்வதற்கும், நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த சட்டம் வர்த்தகர்கள் மற்றும் சேவை வழங்குவோர் தங்களது வணிகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடை செய்யவும், மேலும் எந்தவொரு பொருள் வாங்கினாலும் ரசீதையும் கேட்டு வாங்க வேண்டும். அப்போதுதான் ஏதாவது பிரச்சனை என்றால் உரிமையோடு போராட முடியும் என்பதற்காக உருவாக்கப்பட்டது.

பொது அறிவு தமிழில்

22 Dec, 04:05


*டிசம்பர் 22, 1851*

இந்தியாவின் முதல் சரக்கு ரயில், உத்தரகண்ட் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.

அப்போதைய உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரூர்கிக்கும் (Roorkee) பிரன் காலியர் (Piran Kaliyar) என்ற ஊருக்கும் இடையில் ஓட்டப்பட்டது. இந்தியாவின் முதல் ரயில் வண்டியும் இதுதான்.

அதற்கு இரண்டு ஆண்டுகள் பின்னர் தான் பம்பாய்க்கும் தானேவுக்கும் இடையில் இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் விடப்பட்டது.

1838-ல் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட ஏவ்ரி டிசைன் ரோட்டரி இன்ஜின் இந்தப் பாதையில் ஓட்டப்பட்டது. அவ்வாறு முதலில் ஏற்றிச் செல்லப்பட்ட சரக்கு - சாலை போடத் தேவையான சரளைக் கற்கள் ஆகும். ஓடிய தூரம் 10 மைல்கள்.

பொது அறிவு தமிழில்

21 Dec, 16:25


தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் சிறப்பு பெயர்கள்

1)   அரியலூர்  /   சிமெண்ட் சிகரம்

2)   இராமநாதபுரம்    /   புனித பூமி

3)   ஈரோடு   /   மஞ்சள் நகரம்

4)   கடலூர்   /   புயல் பூமி

5)   கள்ளக்குறிச்சி    /   தமிழக அரிசி கிண்ணம்

6)   கரூர்   /   நெசவாளர்களின் வீடு

7)   கன்னியாகுமாரி   /    இந்திய தென்நிலை எல்வை

8)   காஞ்சிபுரம்  /   ஏரி மாவட்டம்

9)   கிருஷ்ணகிரி   /    நவ கண்டம்

10)   கோயம்பத்தூர்   /   தென்னிந்தியாவின்  மான்செஸ்டர்

11)   சிவகங்கை    /   சரித்திரம் உறையும் பூமி

12)   சென்னை    /   தென்னிந்தியாவின் கலாச்சார நுழைவாயில்

13)   செங்கல்பட்டு    /   பல்லவர் பூமி

14)   சேலம்   /   மாம்பழ நகரம்

15)   தஞ்சாவூர்    /   நெற்களஞ்சியம்

16)   தருமபுரி   /    தோட்ட பயிர் பூமி

17)   திண்டுக்கல்   /    பூட்டு நகரம்

  18)   திருச்சி   /   மலைக்கோட்டை
  நகரம்

19)   திருநெல்வேலி   /   தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட்

20)   திருப்பூர்   /   தமிழ்நாட்டின் பின்னலாடை தலைநகரம்

,21)   திருப்பத்தூர்   /    தோல் சாம்ராஜ்யம்

22)   திருவண்ணாமலை    /   தீப நகரம்

23)   திருவாரூர்    /   மத்திய பல்கலைக்கழகத்தின் மாவட்டம்

24)   திருவள்ளூர்    /   திருத்தல மாவட்டம்

25)   தூத்துக்குடி    /   முத்து நகரம்

26)   தென்காசி    /   அருவிகள் ஆட்சி

27)   தேனி    /   இயற்கை விரும்பிகள் பூமி

28)   நாகப்பட்டினம்    /   சமய நல்லிணக்கத்தின் பூமி

29)   நாமக்கல்    /   முட்டை நகரம்

30)   நீலகிரி    /   மலைகளின் ராணி

31)   புதுக்கோட்டை    /   சமணர்களின் வரலாற்று பூமி

32)   பெரம்பலூர்    /   நெல் உயிரி எச்சத்தின் களஞ்சியம்

33)   மதுரை    /   தூங்கா நகரம்

34)   மயிலாடுதுறை    /   நவகிரக நகரம்

35)   ராணிப்பேட்டை   /   கனிம சுரங்கம்

36)   விருதுநகர்    /   வியாபாரி நகரம்

37)   விழுப்புரம்   /   கிழக்கு மலைத் தொடர்ச்சியின் தொட்டில்

38)   வேலூர்   /    கோட்டைகளின் நகரம்

https://t.me/General_Knowledge_Tamil

பொது அறிவு தமிழில்

21 Nov, 01:21


*நவம்பர் 21,*
*உலக மீனவர்கள் தினம்*

கடலில் மீனவர்களுக்கு ஏற்படும் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் 40 நாடுகளின் மீனவப் பிரதிநிதிகள் 21-11-1997ம் ஆண்டு டெல்லியில் கூடி விவாதித்தனர்.

அப்போது உலகளவில் இணைந்து மீனவர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்துப் போராடுவதற்காக மீன்பிடி தொழிலாளர்கள் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினர்.

இதன்மூலம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பிரச்சனைகள், பாரம்பரிய மீனவர்களின் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதிப்பால் கடல் மாசடைந்து மீன்வளம் குன்றி மீன்பிடித் தொழில் அழிவுப் பாதையில் செல்வது உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நவம்பர் 21ம் தேதி உலக மீனவர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது.

பொது அறிவு தமிழில்

19 Nov, 09:50


🌟 சர்வதேச ஆண்கள் தினம் ஆண்டுதோறும் *நவம்பர் 19ம் தேதி* கொண்டாடப்படுகிறது. இது 1999ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. இத்தினம் அகில இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம் (AIMWA) சார்பில் இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

🌟 உலகில் ஆண்களை கௌரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருதியும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்நாள் நினைவுப்படுத்தும் நாளாகவும் அமைகிறது.
*சர்வதேச ஆண்கள் தினம் வாழ்த்துகள்....!*

பொது அறிவு தமிழில்

17 Nov, 01:00


*நவம்பர் 17,*
*சர்வதேச மாணவர்கள் தினம்*

சர்வதேச மாணவர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இத்தினம் மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.

1939ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி செக்கோஸ்லோவாக்கியாவின் (ஐரோப்பா) தலைநகர் பிராக்கில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டத்தின் முடிவில் ஜான் ஓப்ளெட்டல் மற்றும் மாணவர் தலைவர்கள் ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்ட சம்பவம், செக்கோஸ்லோவாக்கியா ஆக்கிரமிப்பு போன்ற நிகழ்வுகளை இந்நாள் நினைவூட்டி வருகிறது.

இத்தினம் முதன்முதலில் 1941ம் ஆண்டு அனைத்துலக மாணவர் அமைப்பினால் லண்டனில் கொண்டாடப்பட்டது.

பொது அறிவு தமிழில்

17 Nov, 00:57


*நவம்பர் 17,*
*உலக குறைப்பிரசவ குழந்தைகள் தினம்*

உலக குறைப்பிரசவ குழந்தைகள் தினம் நவம்பர் 17ம் தேதியான இன்று கடைபிடிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் ஆண்டிற்கு 15 மில்லியன் குறைப்பிரசவ குழந்தைகள் பிறக்கின்றன.
அதாவது 10ல் ஒரு குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் தொற்றிக்கொள்ளும்.

எனவே, அந்நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பொது அறிவு தமிழில்

16 Nov, 03:12


நிறமற்ற வாயு:
ஹீலியத்தின் அணு எண் 2. இது பிரபஞ்சத்தில் ஹைட்ரஜனுக்கு அடுத்து அதிகமுள்ள தனிமம். இது மந்த வாயுக்களில் ஒன்று. நிறமற்றது, மணமற்றது. அனைத்து வேதிப்பொருட்களுடனும், இது எளிதில் வினைபுரிவதில்லை. எம்.ஆர்.ஐ. ஸ்கேனர்களிலும் கடலடிக்கு நீந்திச் செல்லும் ஸ்கூபா டைவிங்கிலும் ஹீலியம் உதவுகிறது. நஞ்சற்றதாகவும் எளிதில் அழுத்தப்படக் கூடியதாகவும் இருப்பதால், ஆழ்கடல் நீந்துதலுக்கான சிறப்பு சுவாசக் கருவிகளில் ஹீலியம் சேர்க்கப்படுகிறது. நட்சத்திர மண்டலங்களை உருவாக்குவதில் ஹீலியம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பொது அறிவு தமிழில்

16 Nov, 01:28


*16 நவம்பர் 1945*

*யுனெஸ்கோ நிறுவனம் உருவானது*

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று.

1945 ம் ஆண்டு நவம்பர் 16 ம் தேதி உருவான இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது.

பொது அறிவு தமிழில்

16 Nov, 01:26


*நவம்பர் 16,*
*சர்வதேச சகிப்புத் தன்மை தினம்*
(International Day for Tolerance)

யுனெஸ்கோ அமைப்பு தனது 50 வது ஆண்டு விழாவை 1995 ம் ஆண்டில் கொண்டாடியது.

யுனெஸ்கோ தனது சகிப்புத் தன்மை கோட்பாடு மற்றும் திட்டங்களை தயாரித்து நவம்பர் 16 ல் வெளியிட்டது.

உலக அமைதியை உருவாக்கியது மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் சட்ட ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தவே 1996 ம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது.

பொது அறிவு தமிழில்

15 Nov, 04:38


*நவம்பர் 15, 1937*

Short Hand என அழைக்கப்படும் சுருக்கெழுத்து முறையை சர். ஐசக் பிட்மென் வெளியிட்டார்.

பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்தி சின்னஞ்சிறு பத்திகளில் தகவல்களையும், பேச்சுகளையும், விவரங்களையும் பதிவு செய்துகொள்ளும் முறையே சுருக்கெழுத்தாகும். விரைவாக எழுதும் இம்முறையில் பயிற்சி பெற்றவர்களைச் சுருக்கெழுத்தர் (stenographer) எனக்கூறுவர்.

Stenography என்பது கிரேக்க மொழிச் சொல்லாகும். 'Steno' என்றால் குறுகிய (அ) சுருக்கிய, 'graphy' என்றால் எழுதுதல் என்பது பொருளாகும்.

பொது அறிவு தமிழில்

15 Nov, 04:37


நீண்டகால தலைமை நீதிபதி:
இந்தியா குடியரசு நாடான 1950 ஜனவரி 26ல் இருந்து இதுவரை 51 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளனர். முதல் தலைமை நீதிபதி எச்.ஜே.கனியா. 1 ஆண்டு, 284 நாட்கள் பதவி வகித்தார். இதில் நீண்டநாட்கள் பதவி வகித்தவர் 16வது தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் (1978 பிப்., 22 - 1985 ஜூலை 11). 7 ஆண்டுகள், 139 நாட்கள் பதவியில் இருந்தார். இரண்டாவது அதிகபட்சமாக, 6வது தலைமை நீதிபதி புவனேஷ்வர் பிரசாத் சின்ஹா, 4 ஆண்டு 122 நாட்கள் பதவி வகித்தார். குறைந்த நாட்கள் பதவி வகித்தவர் 22வது தலைமை நீதிபதி கமல் நரைன் சிங் (17 நாட்கள்).

பொது அறிவு தமிழில்

14 Nov, 00:14


*14 நவம்பர் 1999*

"உழவர் சந்தை திட்டம்"

விவசாயிகள் பயிரிடுபவற்றை அவர்களே நேரடியாக விற்பனை செய்யும் திட்டமான 'உழவர் சந்தை திட்டம்' மு.கருணாநிதியால் மதுரை அண்ணா நகரில் தமிழகத்தின் முதல் “உழவர் சந்தை” துவக்கி வைக்கப்பட்ட தினம் இன்று.

புத்தம்புதுக் காய்கறிகள்,
இடைத்தரகர்கள் கிடையாது,
கடை வாடகை கிடையாது,
விளைப் பொருட்களை ஏற்றிவர அரசு பேருந்தில் கட்டணம் கிடையாது.

தொடர்ந்து இத்திட்டத்தின்படி "உழவர் சந்தைகள்" தமிழகம் முழுவதும் துவக்கி வைக்கப்பட்டது.

பொது அறிவு தமிழில்

14 Nov, 00:09


*நவம்பர் 14,*
*ஜவஹர்லால் நேரு*

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1889ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் பிறந்தார்.

இவர் குழந்தைகளின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால், இவரது பிறந்த நாள் இந்திய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இவர் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் (1919), காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் (1920) மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1945) ஆகிய சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டார்.

இவர் சிறந்த ஆங்கில எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் எழுதிய ஆங்கில நூல்கள் 'தி டிஸ்கவரி ஆப் இந்தியா', 'க்ளிம்ப்ஸ் ஆப் வேர்ல்ட் ஹிஸ்டரி' மற்றும் 'டுவார்ட்ஸ் ப்ரீடம்' ஆகியவை ஆகும்.

நேரு, ஆகஸ்ட் 15, 1947ம் ஆண்டுமுதல் மே 27, 1964ம் ஆண்டு வரை பிரதமராக பணியாற்றினார். இவர் 1951ம் ஆண்டு, இந்திய திட்டக்குழுவை உருவாக்கி, சுதந்திர இந்தியாவின் முதல் ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்கினார்.

நேரு, 1964ம் ஆண்டு, மே 27ம் தேதி மறைந்தார்.

பொது அறிவு தமிழில்

12 Nov, 00:57


*நவம்பர் 12,*
*சலீம் அலி*

இந்திய பறவையியல் வல்லுநர் சலீம் அலி 1896ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி மும்பையில் பிறந்தார்.

இவர் மும்பை இயற்கை வரலாற்று கழக நிர்வாகி மில்லர்ட் என்பவரை சந்தித்து, அவரிடம் இருந்து பறவைகளைப் பற்றிய பல விஷயங்களை அறிந்துகொண்டார்.

பறவையியலில் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஜெர்மனி சென்று டாக்டர் இர்வின் ஸ்ட்ராஸ்மனிடம் பயிற்சி பெற்று நாடு திரும்பினார். தூக்கணாங்குருவியின் வாழ்க்கை முறை பற்றி 1930ம் ஆண்டு ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு புகழ் பெற்றார். இவர் 'கேரளப் பறவைகள்' என்ற நூலை எழுதி வெளியிட்டார்.

இவர் பத்மபூஷண், பத்மவிபூஷண் மட்டுமின்றி பல நாடுகளில் இருந்தும் பல்வேறு விருதுகள், சிறப்பு பட்டங்கள் மற்றும் பரிசுகளைப் பெற்றுள்ளார்.

மக்கள் இவரை 'பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக் களஞ்சியம்' என்றே அழைத்தனர். இவர் தன்னுடைய 90வது வயதில் (1987) மறைந்தார்.

பொது அறிவு தமிழில்

01 Nov, 08:25


இந்தியாவில் பதிவு அஞ்சல் சேவை தொடங்கி இன்றுடன் 175 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

1849ம் ஆண்டு நவ.1ல் லண்டனில் தொடங்கப்பட்ட அதே நாளில்தான் கொல்கத்தாவிலும் பதிவுத் தபால் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

வெள்ளையர் ஆட்சியில் சாதாரண தபால்களில் முக்கிய ஆவணங்களை அனுப்பி வைக்க தொடங்கப்பட்ட இந்த சேவை இன்று சுதந்திர இந்தியாவிலும் ட்ராக்கிங் வசதி கொண்ட நம்பிக்கைக்குரிய சேவையாக தொடர்கிறது என்றால் மிகையில்லை.

பொது அறிவு தமிழில்

01 Nov, 06:15


*நவம்பர் 01, 1956*

கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவிலிருந்து பிரிக்கப்பட்டு தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டது.

1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது. கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது.

இந்நிலையில் "குமரித் தந்தை " என அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி தலைமையில் கன்யாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்கக் கோரி பல போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து 1956 நவம்பர் முதல் நாள் குமரி மாவட்டம் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறியது.
இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக திருமலை என்பவர் நவம்பர் 01, 1956 அன்று பொறுப்பேற்றார்.

பொது அறிவு தமிழில்

01 Nov, 06:11


*நவம்பர் 01-1954*

புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் மற்றும் சந்தர்நகோர் ஆகிய பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைத்த பகுதிகளாக மாறின.

1963 ம் ஆண்டு சந்தர்நகோர் பகுதி மேற்கு வங்க மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

புதுச்சேரி, காரைக்கால், மஹே மற்றும் ஏனாம் பகுதிகள் ஒருங்கிணைந்து புதுச்சேரி யூனியன் பிரதேசம் உருவாகியது. பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டு வந்த இதன் பெயர் 20 செப்டம்பர் 2006 அன்று புதுச்சேரி என மாற்றப்பட்டது.

பொது அறிவு தமிழில்

01 Nov, 02:10


*நவம்பர் 01,*
*ஆல்ஃபிரெட் வெஜினர்*
(Alfred Wegener)

கண்டங்களின் பெயர்ச்சி பற்றிய கோட்பாடுகளை வகுத்த ஆல்ஃபிரெட் வெஜினர் 1880ம் ஆண்டு நவம்பர் 01ம் தேதி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பிறந்தார்.

இவர் வளிமண்டலம், பூமியின் காலநிலை மாற்றங்கள் போன்ற ஆய்வுகளில் அதிகம் ஆர்வம் காட்டினார். துருவ காலநிலை குறித்த ஆராய்ச்சிகளுக்காக கிரீன்லாந்தில் 1906 முதல் 2 ஆண்டுகாலத்துக்கு பயணம் மேற்கொண்டார். இவ்வாறு மொத்தம் 4 முறை இப்பயணத்தை இவர் மேற்கொண்டுள்ளார்.

கண்டங்களின் இடப்பெயர்ச்சி என்ற தனது கோட்பாட்டை 1912ல் வெளியிட்டார். இதுதான் பிற்காலத்தில் 'கண்டப் பெயர்ச்சி' எனக் குறிப்பிடப்பட்டது. தி ஆரிஜின் ஆஃப் கான்டினன்ட்ஸ் அண்ட் ஓஷன்ஸ் என்ற தனது பிரபலமான கட்டுரையை 1915ல் வெளியிட்டார். கண்டங்கள் ஒரு காலத்தில் இணைந்திருந்தது பற்றிய தனது விரிவான ஆராய்ச்சி முடிவுகளை இதில் வெளியிட்டார்.

வாழ்நாளின் இறுதிக்காலம் வரை பல கோட்பாடுகளை கண்டறிந்த இவர் தனது 50வது வயதில் (1930) மறைந்தார்.

பொது அறிவு தமிழில்

01 Nov, 02:08


*நவம்பர் 01*
*உலக சைவ தினம்*

ஒவ்வொரு ஆண்டும்
நவம்பர் 01-ந்தேதி உலக சைவ தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகெங்கிலும் உள்ள சைவ உணவு உண்பவர்கள் உலக சைவ தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். இந்த சைவ தினம், இறைச்சி, முட்டை அல்லது பிற விலங்கு பொருட்களை மட்டும் தவிர்க்கும் சைவர்களுக்கு (Vegetarian) இல்லை. பால், தயிர், பன்னீர் போன்ற பால் பொருட்களையும் தவிர்த்து முழு பச்சை உணவை மட்டும் சாப்பிடும் சைவர்களுக்கானது (Vegan).

1944-ம் ஆண்டு நவம்பர் மாதம் உருவாக்கப்பட்ட சைவ சங்கத்தின் 50வது ஆண்டு பொன்விழா 1994-ம் ஆண்டு நவம்பர் 01-ந்தேதி இங்கிலாந்தில் வைத்து நடந்தது.

இந்த பொன்விழாவைக் குறிக்கும் வகையிலேயே
நவம்பர் 01-ந் தேதி உலக சைவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சைவ உணவினை எடுத்துக்கொள்வதால் மேம்படும் ஆரோக்கியம் மற்றும் அதன் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதை மேம்படுத்தவும் உலக சைவ தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பொது அறிவு தமிழில்

31 Oct, 03:29


*அக்டோபர் 31,*
*சர்தார் வல்லபாய் படேல்*

இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் 1875ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி குஜராத்தில் பிறந்தார்.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒற்றுமை தினமாக மத்திய அரசு அனுசரிக்கிறது. நம் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் விஷயங்களை எதிர்த்து நிற்கவும், நமக்குள் இருக்கும் உள்ளார்ந்த வலிமையை, எதிர்த்து நிற்கும் திறனை உறுதி செய்ய, இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

அகமதாபாத்தில் தன் வக்கீல் தொழில் மூலம் உள்ளூர் மக்களின் பிரச்சனைகளுக்கு உதவி, பிரபலமானார். 1917ம் ஆண்டு அகமதாபாத் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றார். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், முதல் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.

சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்ட இவர் 75வது வயதில் (1950) மறைந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

பொது அறிவு தமிழில்

30 Oct, 07:31


உலக சிக்கன தினம்:
வாழ்க்கையில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என தெரியாது. எதிர்கால வாழ்க்கைக்கு சேமிப்பு மிக அவசியம். சம்பாதிப்பதை விட அதை சேமிப்பது அவசியம். சேமிப்பு என்பது பணத்தை சேமிப்பது மட்டுமல்ல. மின்சாரம், உணவு, குடிநீர், இயற்கை வளங்கள் என பலவற்றை உள்ளடக்கியது. சிக்கனமும் சேமிப்பும் ஒரு குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பங்கு வகிக்கிறது. சேமிப்பை வலியுறுத்தி அக். 30ல் உலக சிக்கன தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1924ல் இத்தாலியில் சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மாநாட்டில் இத்தினம் உருவாக்கப்பட்டது.

பொது அறிவு தமிழில்

30 Oct, 07:31


பூமி நீல நிறமாக தெரிவது ஏன்?
வானம் ஏன் நீல நிறமாக இருக்கிறது என்பதை கண்டுபிடித்தவர் நோபல் பரிசு வென்ற சர்.சி.வி.ராமன். நிறப்பிரிகை காரணமாக சூரிய ஒளியில் இருந்து வரும் நிறங்களில் நீல நிறம் தவிர மற்ற நிறங்களை துாசி மண்டலம் கிரகித்து கொள்வதால் வானம் நீல நிறமாக காட்சியளிக்கிறது என நிரூபித்தார். அதன்படி வெளியிலிருந்து பூமியைக் காண நேர்ந்தால், வானத்தின் நீலம், பூமியின் 70 சதவீதம் படர்ந்திருக்கும் கடல் நீர் மண்டலம், அந்த நீல நிறத்தை பிரதிபலிக்கிறது. அதனால் விண்வெளியில் இருந்து பார்த்தால் பூமி நீல நிறமாக தோற்றமளிக்கிறது.

பொது அறிவு தமிழில்

30 Oct, 01:36


*அக்டோபர் 30,*
*பசும்பொன் தேவர்*

சுதந்திரப் போராட்ட வீரர், தலைசிறந்த பேச்சாளர், ஆன்மிகவாதியான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1908ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பிறந்தார். இவர் சொந்த முயற்சியில் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.

முதுகுளத்தூர் அடுத்த சாயல்குடியில், விவேகானந்தர் பெயரில் தொடங்கப்பட்ட நூலகத் திறப்பு விழா 1933-ல் நடந்தது. தலைமைப் பேச்சாளர் வராததால், இவரைப் பேச அழைத்தனர். மேடையேற்றம் இவருக்கு முதல்முறை. ஆனால், விவேகானந்தரின் தத்துவங்கள் பற்றி 3 மணி நேரம் மடைதிறந்த வெள்ளம்போலப் பேசி, பாராட்டு பெற்றார்.

காங்கிரஸில் இருந்து 1948-ல் விலகிய இவர், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார். நேதாஜி என்ற வாரப் பத்திரிக்கையை தொடங்கினார். இவர் தேர்தலில் வெற்றி பெற்று மதராஸ் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

விடுதலைக்காக போராடிய முத்துராமலிங்கத் தேவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு 55-வது வயதில் (1963) தனது பிறந்த நாளன்றே மறைந்தார்.

பொது அறிவு தமிழில்

29 Oct, 01:18


*அக்டோபர் 29, கவிஞர் வாலி*

கவிஞர் வாலி 1931ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன் ஆகும்.

1958ம் ஆண்டு 'அழகர் மலைக் கள்வன்' என்ற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலை எழுதினார். 1963ம் ஆண்டு 'கற்பகம்' என்ற திரைப்படத்தில் இவர் எழுதிய பாடல்கள் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

ராமானுஜ காவியம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் என பதினைந்து புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். மேலும் கலியுகக் கண்ணன், காரோட்டிக் கண்ணன், ஒரு செடியில் இரு மலர்கள் என சுமார் பதினைந்து திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் பொய்கால் குதிரை, சத்யா, பார்த்தாலே பரவசம், ஹே ராம் என நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 2007ம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1973ஆம் ஆண்டு பாரத விலாஸ் திரைப்படத்தில் 'இந்திய நாடு என் வீடு' என்ற பாடலுக்காக தேசிய விருதை வென்றுள்ளார்.

திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய இவர் தனது 81வது வயதில் (2013) மறைந்தார்.

பொது அறிவு தமிழில்

28 Oct, 09:51


TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது.


Result Link
https://tnpscresults.tn.gov.in/

பொது அறிவு தமிழில்

28 Oct, 04:10


*அக்டோபர் 28,*
*சகோதரி நிவேதிதா*

சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும், சமூக சேவகியுமான சகோதரி நிவேதிதா 1867ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி அயர்லாந்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள்.

ஒருமுறை தோழியின் வீட்டில் சுவாமி விவேகானந்தரின் உரையைக் கேட்டார். அதில் கவரப்பட்டவர், அவரது பேச்சுகளை அடிக்கடி கேட்கத் தொடங்கினார். அவர்தான் தன் குரு என்று தீர்மானித்தார்.

ஒரு சமயம் இந்தியப் பெண்களின் நிலை பற்றி பேசிக் கொண்டிருந்த விவேகானந்தர், 'எங்கள் தேசத்துப் பெண்கள் கல்வி பெற நீ உதவ முடியும் என நம்புகிறேன்' என்றார். இதை அரிய வாய்ப்பாகக் கருதியவர், உடனே புறப்பட்டு இந்தியா வந்தார்.

வந்தே மாதரம் தேசியப் பாடலாக அங்கீகரிக்கப்படாத காலகட்டத்திலேயே அதை தன் பள்ளியில் காலை வணக்கப் பாடலாகப் பாடச் செய்தார். பெண் உரிமைக்காகப் போராடத் தூண்டுகோலாக இருந்த இவரை தன் குருவாக குறிப்பிட்டுள்ளார் பாரதியார். சகோதரி நிவேதிதா 43-வது வயதில் (1911) மறைந்தார்.

பொது அறிவு தமிழில்

27 Oct, 05:18


*அக்டோபர் 27*
*காலாட்படை தினம்.*

காலாட்படை தினம் அக்டோபர் 27ம் தேதி இந்திய ராணுவத்தால் கடைபிடிக்கப்படுகிறது.

சுதந்திரம் பெற்ற பின் 1947ம் ஆண்டு இதே நாளில், காலாட்படையினர் காஷ்மீர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர்.

காலாட்படையினரின் வீர செயலை போற்றும் வகையில் இந்திய காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது.

பொது அறிவு தமிழில்

26 Oct, 03:30


*அக்டோபர் 26, 1947*

காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க மன்னர் ஹரி சிங் ஒப்புதல் அளித்த தினம் இன்று.

சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்ற முடிவெடுக்கும் சுதந்திரம் சமஸ்தானங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

ஜூனாகத், ஐதராபாத், காஷ்மீர் தவிர, ஏனைய சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைந்தன. காஷ்மீர் மகாராஜா இந்தியா, மற்றும் பாகிஸ்தானுடன் சேராமல் தனியாகவே இருக்க விரும்பினார். இந்த சூழலில், காஷ்மீர் எல்லையையொட்டிய பகுதிகளில் இருக்கும் பழங்குடியினர் மூலமாக காஷ்மீர் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த, மன்னர் ஹரி சிங் இந்தியாவின் ராணுவ உதவியை நாடினார். இதன் பின்னரே அவர் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ஒப்புதல் அளித்தார்.

பொது அறிவு தமிழில்

25 Oct, 01:27


*அக்டோபர் 25,*
*பிக்காசோ*
(Pablo Picasso)

20ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஓவியரான பாப்லோ பிக்காசோ 1881ம் ஆண்டு அக்டோபர் 25ம் தேதி ஸ்பெயினின் மலகாவில் பிறந்தார்.

ஜார்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாக கியூபிசம் என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார்.

தனது ஏழு வயதிலேயே ஒரு தேர்ந்த ஓவியனைப் போல ஓவியங்களை வரைந்த இவர், தன் பதினான்கு வயது நிறைவடைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும், பிளாஸ்டர் மண்ணில் தத்ரூபமான சிற்பங்கள் செய்யவும் நன்கு கற்றுக்கொண்டார்.

தன் வாழ்நாளில் பிக்காசோ 1885 சிற்பங்கள், 1228 ஓவியங்கள், 2880 பீங்கான் மண்பாண்ட சிற்பங்கள், 12000 சாதாரண சித்திரங்கள் மற்றும் 12000 திரைச்சீலை வேலைப்பாடுகள் உட்பட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை உருவாக்கியுள்ளார்.

அமைதிச்சின்னமான புறாவையும், ஆலிவ் இலைகளையும் பிரபலப்படுத்தியவர் பிக்காசோ தான். வரலாற்றில் தனக்கென்று நீங்காத தனி இடத்தைப் பிடித்த பிக்காசோ தனது 91வது வயதில் (1973) மறைந்தார்.

பொது அறிவு தமிழில்

24 Oct, 14:42


பல்வேரு துரைகளின் தந்தைகள்:

ஏவுகணைத் திட்டத்தின் தந்தை - APJ அப்துல் கலாம் (அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்)

பொருளாதாரத்தின் தந்தை - ஆடம் ஸ்மித்

நவீன கணினியின் தந்தை - ஆலன் டூரிங்

சார்பியல் தந்தை - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

டிஎன்ஏ கைரேகையின் தந்தை - அலெக் ஜான் ஜெஃப்ரிஸ் - லால்ஜி சிங் (இந்தியா)

தொலைபேசியின் தந்தை - அலெக்சாண்டர் கிரஹாம் பெல்

உடற்கூறியல் தந்தை - ஆண்ட்ரியாஸ் வெசாலியஸ்

நவீன வேதியியலின் தந்தை - அன்டோயின் லாவோசியர்

நுண்ணுயிரியல்/மைக்ரோஸ்கோபியின் தந்தை - ஆண்டனி பிலிப்ஸ் வான் லீவென்ஹோக்

நகைச்சுவையின் தந்தை - அரிஸ்டோபேன்ஸ்

உயிரியல்/ விலங்கியல்/ கருவியல்/ அரசியல் அறிவியலின் தந்தை - அரிஸ்டாட்டில்

சமூகவியலின் தந்தை - அகஸ்டே காம்டே

மின்சாரத்தின் தந்தை - பெஞ்சமின் பிராங்க்ளின்

பேலியோபோடனியின் தந்தை - அடால்ஃப்-தியோடர் ப்ரோங்னியார்ட் - பீர்பால் சாஹ்னி (இந்தியா)

நவீன உயிர் வேதியியலின் தந்தை - கார்ல் அலெக்சாண்டர் நியூபெர்க்

வகைப்பாட்டின் தந்தை/ வகைபிரித்தல் தந்தை - கார்ல் லின்னேயஸ்

கணினியின் தந்தை - சார்லஸ் பாபேஜ்

பரிணாமத்தின் தந்தை - சார்லஸ் டார்வின்

உடலியலின் தந்தை - கிளாட் பெர்னார்ட்

சினிமாவின் தந்தை - தாதாசாகேப் பால்கே (துண்டிராஜ் கோவிந்த் பால்கே) (இந்தியா)

நவீன சினிமாவின் தந்தை - டேவிட் வார்க் கிரிஃபித்

ஆயுர்வேதத்தின் தந்தை - தன்வந்திரி

கால அட்டவணையின் தந்தை - டிமிட்ரி மெண்டலீவ்

இந்திய அரசியலமைப்பின் தந்தை - டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் (பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்)

https://t.me/General_Knowledge_Tamil

பொது அறிவு தமிழில்

24 Oct, 14:42


Fathers:

Father of Vaccination/ Father of immunology - Edward Jenner

Father of Biodiversity - Edward O Wilson

Father of Hydrogen Bomb - Edward Teller

Father of Nuclear Physics - Ernest Rutherford

Father of Geometry - Euclid

Father of Modern Finance - Eugene F. Fama

Father of Modern Ecology - Eugene P. Odum

Father of Humanism - Francesco Petrarca

Father of Eugenics - Francis Galton

Father of Scientific Management - Frederick Winslow Taylor

Father of Gene Therapy - French Anderson

Father of Modern Physics - Galileo Galilei

Father of English Poetry - Geoffrey Chaucer

Father of Computer Science - George Boole and Alan Turing

Father of Aviation - George Cayley

Father of Railways - George Stephenson

Father of Genetics - Gregor Mendel

Father of Homeopathy - Heinemann

Father of History - Herodotus

Father of Western Medicine/Modern Medicine - Hippocrates

Father of Blue Revolution - Hiralal Chaudhari

Father of Nuclear (Indian Nuclear science)/Atomic Program - Homi J.Bhabha

Father of Mutation theory - Hugo De Vries

Father of Architecture - Imhotep

Father of Classical mechanics - Isaac Newton

Father of Radio Science in India - J C Bose

Father of Civil Aviation - J. R. D. Tata (Jehangir Ratanji Dadabhoy Tata)

Father of Atom Bomb - J. Robert Oppenheimer

Father of Modern Geology - James Hutton

Father of the American Constitution - James Madison

Father of Modern Education - John Amos Comenius

Father of Modern Democracy - John Locke

Father of Artificial Intelligence - John Mccarthy

Father of Robotics -Joseph F. Engelberger

Father of Biotechnology - Karl Ereky

Father of Blood Groups - Karl Landsteiner

Father of Bacteriology - Louis Pasteur

Father of Indian Phycology/ Father of Algology in India - M. O. P. Iyengar (Mandayam Osuri Parthasarathy Iyengar)

Father of Modern Economics - Paul Samuelson

Father of Modern Economic Reforms (India) - Manmohan Singh

Father of Nuclear Science - Marie Curie and Pierre Curie

Father of Mobile Phone - Martin Cooper

Father of Quantum mechanics - Max Planck

Father of Electronics - Michael Faraday

Father of Peasant Movement - N. G. Ranga (Gogineni Ranga Nayukulu)

Father of Modern Political science - Niccolo Machiavelli

Father of Modern Astronomy - Nicolaus Copernicus

Father of the Green Revolution/Father of Agriculture - Norman Ernest Borlaug

Father of Nuclear Chemistry - Otto Hahn

Father of Sanstrik Grammar - Panini

Father of Genetic Engineering - Paul Berg

Father of Agronomy - Peter – De- Cresenji

Father of Modern Management - Peter Georg Ferdinand Drucker

Father of Television - Philo Farnsworth

Father of Modern Olympic - Pierre De Coubertin

Father of Modern Dentistry - Pierre Fauchard

Father of Linguistic Democracy - Potti Sreeramulu

Father of Numbers - Pythagoras

Father of Modern India - Raja Ram Mohan Roy

Father of Indian Ecology - Ramdeo Mishra

Father of Email - Ray Tomlinson

Father of Philosophy - Rene Descartes

Father of Nanotechnology - Richard Smalley

Father of Cytology - Robert Hooke

Father of Thermodynamics - Sadi Carnot

Father of India’s Communication Revolution - Sam Pitroda

Father of New France - Samuel de Champlain

Father of Veterinary Science - Shalihotra (India)

Father of Psychoanalysis - Sigmund Freud

Father of Plastic Surgery - Sir Harold Gillies

Father of Civil Engineering - John Smeaton - Sir Mokshagundam Visvesvaraya (India)

Father of Air Force - Subroto Mukerjee (IAF)

Father of Surgery - Sushruta

Father of Botany - Theophrastus

Father of Endocrinology - Thomas Addison

Father of White Revolution - Verghese Kurien

Father of Space Program - Vikram Sarabhai

Father of Pentium Chip - Vinod Dham

Father of Internet - Vint Cerf

Father of American Football - Walter Chauncey Camp

Father of Psychology - Wilhelm Wundt

Father of Blood Circulation - William Harvey

பொது அறிவு தமிழில்

24 Oct, 03:10


*அக்டோபர் 24,*
*உலக போலியோ தினம்*

உலக போலியோ தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

இளம்பிள்ளை வாத நோய்க்கு முதன்முறையாக தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் டாக்டர் ஜோனஸ் சால்க் ஆவார்.

இளம்பிள்ளை வாத நோயானது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது.

இத்தினத்தின் முக்கிய நோக்கம், போலியோவை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், இதை ஒழிக்க உலகளவில் முயற்சி எடுக்கப்பட வேண்டும் என்பதாகும்.

பொது அறிவு தமிழில்

24 Oct, 03:10


*அக்டோபர் 24,*
*உலக தகவல் வளர்ச்சி தினம்*


வளர்ச்சியின் மீதான பிரச்சனைகளின் மீது உலகின் கவனத்தை ஈர்க்கவும், அதை சரி செய்வதற்கு சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான அவசியத்தை உலகில் பரப்பவும் உலக தகவல் வளர்ச்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24ம் தேதி, அனுசரிக்கப்படுகிறது.

எனவே, 1972 ம் ஆண்டு அக்டோபர் 24 ம் தேதியை ஐ.நா.சபை உலக தகவல் வளர்ச்சி தினமாக அறிவித்தது. இத்தினம் 1973 ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.

பொது அறிவு தமிழில்

24 Oct, 03:08


*அக்டோபர் 24,*
*ஐக்கிய நாடுகள் தினம்*

1945 ம் ஆண்டு அக்டோபர் 24 ம் தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

இத்தினமானது 1948 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24 ம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது.

இத்தினத்தின் முக்கிய நோக்கம் ஐ.நா.வின் நோக்கங்களையும், சாதனைகளையும் உலகெங்கும் எடுத்துக் கூறுவதாகும்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக சமாதானம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றிற்காக சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒன்று சேர்ந்த சுதந்திர நாடுகளின் ஒரு தனித்துவமான அமைப்பாகும்.

பொது அறிவு தமிழில்

22 Oct, 02:01


( *22 அக்டோபர் 2008*)

இந்தியா சந்திரனை நோக்கிய சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது.

இதன் முக்கிய நோக்கம் நிலவுப்பரப்பில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழு நிலவுப் பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடமாக்கலும் ஆகும்.
இப்பணித்திட்டத்தின் தலைவராக மயில்சாமி அண்ணாதுரை பணியாற்றினார்.

பொது அறிவு தமிழில்

22 Oct, 02:00


அக்டோபர் 22,
உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்.

உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம் அக்டோபர் 22 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் 1998 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

திக்குவாய்க்கு எதிரான கண்ணோட்டம் பலரிடம் உள்ளது. உலக மக்கள் தொகையில் 1 சதவீதம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதால், இதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

பொது அறிவு தமிழில்

21 Oct, 10:36


நேரத்தைக் கூற நாம் வழக்கமாக பயன்படுத்தும் AM மற்றும் PM என்பதன் அர்த்தம் என்ன?
24 மணிநேர கடிகாரத்தின் அடிப்படையில்
நேரத்தைக் கூற AM, PM பயன்படுத்தப்படுவதில்லை
நண்பகல் 12 மணி முதல் நள்ளிரவு 11.59 மணி வரையிலான நேரம் PM என்றும் அதற்குப் பிந்தைய நேரம் AM என்றும் அழைக்கப்படுகிறது. AM என்றால் 'Ante Meridiem' மற்றும் PM என்றால் 'Post Meridiem' என்று பொருள். இவை லத்தீன் வார்த்தைகளாகும். 'Meridiem' என்றால் 'நண்பகல்', 'Ante' என்றால் 'முன்' மற்றும் 'Post' என்றால் 'பின்' எனப்படுகிறது. AM மற்றும் PM என்பது நண்பகலுக்கு முன் மற்றும் பிந்தைய நேரத்தைக் குறிக்கிறது.

https://t.me/General_Knowledge_Tamil

பொது அறிவு தமிழில்

21 Oct, 02:02


*அக்டோபர் 21,*
*ஆல்ஃபிரட் நோபல்*
(Alfred Nobel)

நோபல் பரிசினை உருவாக்கிய ஆல்ஃபிரட் நோபல் 1833ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி ஸ்வீடனில் பிறந்தார்.

இவர் 1857-ல் எரிவாயு மீட்டர் குறித்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்றார். மேலும் வெடிபொருட்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு, 1863-ல் வெடி மருந்தைக் கண்டுபிடித்தார்.

பல முயற்சிகளுக்குப் பிறகு டைனமைட்டையும், சேஃப்டி பவுடரையும் 1867-ல் இவர் கண்டுபிடித்தார். 1875-ல் பிளாஸ்டிக் ஜெலட்டினைக் கண்டுபிடித்தார். சிறிய ஆயுதங்களுக்குத் தேவைப்படும் புகை வெளியிடாத பாலிஸ்டைட் வகை கன் பவுடரையும் கண்டுபிடித்தார்.

இவர் போஃபர்ஸ் என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளரானார். இவரது நினைவாக நோபலியம் என்று ஒரு தனிமத்துக்கு பெயரிடப்பட்டது. இவர் சர்வதேச அளவில் 350 காப்புரிமைகளைப் பெற்றார்.

உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளை, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட காரணமாக இருந்த ஆல்ஃபிரெட் நோபல் தனது 63-வது (1896) வயதில் மறைந்தார்.

பொது அறிவு தமிழில்

21 Oct, 01:59


அக்டோபர் 21,
உலக அயோடின் தினம்.

உலக அயோடின் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

அயோடின் பற்றாக்குறை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

அயோடின் சத்துக் குறைபாட்டால் இளம் வயதினரின் அறிவுத்திறன் பாதிக்கப்படும். பெரியவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்படும்.

எனவே தினமும் அயோடின் கலந்த உப்பினைப் பயன்படுத்த வேண்டும் என்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

7,804

subscribers

845

photos

30

videos