ஆரோக்யமும் ஆன்மீகமும் @arogyaaanmeegam Channel on Telegram

ஆரோக்யமும் ஆன்மீகமும்

@arogyaaanmeegam


தீதும் நன்றும் பிறர் தர வார

ஆரோக்யமும் ஆன்மீகமும் (Tamil)

ஆரோக்யமும் ஆன்மீகமும் என்ற தெரிவு உங்களுக்கும், உங்கள் உடலும் உயிரும் குறித்து அறிந்துகொள்ள உதவும் ஒரு உதடுகளைக் கூட்டுத்தளம். இந்த தளம் 'தீதும் நன்றும் பிறர் தர வார' என்ற தெரிவுடன் வாய்ப்புகளை அறிந்துகொள்ள, அறிவை நிரப்பும் முகவரி அமைந்துவிட்டது. இது அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை பற்றிய அறிவுறுதி, ஆன்மீகம் மற்றும் மன அழகு குறிப்பிட்ட அறிவைப் பகிரும் சேனல் ஆகும். 'ஆரோக்யமும் ஆன்மீகமும்' உங்கள் உடலும் உயிரும் ஒன்று செய்வது எப்படி என்பதை பெற உதவும் தளம் ஆகும். அதன் மூலம், உங்கள் வாழ்க்கையில் புதிய முறைகளை உருவாக்க, உங்கள் ஆதர்ஷங்களை அதிகரிக்க உதவும். இந்த சேனல் விரைவில் உங்கள் முகவரியை அணுக, இணைந்து உங்கள் உணர்வுகள் மூலம் செஞ்சுக்கின்றன. இது உங்கள் உடலும் உயிரும் அறிந்து கொள்வதற்கான ஒரு அசத்தம் வாய்ப்பு ஆகும்.

ஆரோக்யமும் ஆன்மீகமும்

19 Feb, 03:02


"கடவுள் நமக்குத் தேவையா?"

"எதற்காக ஒருவன் கடவுளை நேசிக்க
வேண்டும் என்ற கேள்விக்குப் பதில்
கண்டுபிடித்தாக வேண்டும்".

இதை நாம் அறிந்துகொள்ளாத வரையில்,
எதுவுமே புரிந்து கொள்ள முடியாது.

ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுப்பட்ட
இரண்டு இலட்சியங்கள் வாழ்க்கையில்
உள்ளன.

எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாயினும்,
எந்த மதத்தை பின்பற்றுவர்கள் ஆனாலும்
எல்லோரும் அறிந்த ஓர் உண்மை, மனிதன்
உடல் மட்டுமல்ல, ஆன்மாவும் கூட என்பதாகும்.

ஆனால் மானிட வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பதில் பல்வேறு கருத்துவேறுபாடுகள் உள்ளன.

மேலை நாட்டினர் பொதுவாக மனிதனின்
உடல் விஷயங்களில் அதிக அக்கறை காட்டினர்.

இந்தியாவின் பக்தி ஆச்சாரியர்கள்அவனது ஆன்மாவிற்கு முக்கியத்துவம் கொடுகிறார்கள்.

இந்த வேறுபாடு கீழ்த்திசைக்கும் மேல்திசைக்கும்
இயல்பாக அமைந்துள்ளது போல் தோன்றுகிறது.

அன்றாட பேச்சு வார்த்தைகளிலும் இதையே நாம்
காண்கிறோம்.

இங்கிலாந்தில் மரணத்தைக் குறிப்பிடும்போது, அவன் உயிரைத் துறக்கிறான் என்று சொல்கிறார்கள்.

இந்தியாவிலோ, அவன் உடலைத்
துறக்கிறான் என்று குறிப்பிடுகின்றனர்.

மனிதன் என்பவன் உடல், அதில்
ஆன்மா உள்ளது என்பது முதல் கருத்து.
மனிதன் ஆன்மா, அந்த ஆன்மாவிற்கு உடல்
உண்டு என்பது இரண்டாவது கருத்து.
இதிலிருந்து சிக்கலான பிரச்சனைகள் பல
எழுகின்றன.

மனிதன் ஓர் உடல், அதில் உயிர் உள்ளது என்ற கொள்கையினர் உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

மனிதன் ஏன் வாழ்கிறான் என்று அவர்களை கேட்டால், உடைமைகள், சொத்து, உறவு முதலியவற்றால் இன்பம் பெறுவதற்கே என்று அவர்கள் பதில் சொல்வார்கள்.

இதைவிட மேலானது ஒன்று உள்ளது என்பதை சொன்னாலும் மனிதன் புரிந்து கொள்ள
மாட்டான்.

அதனை அவனால் கனவுகூடக் காண முடியாது.

இந்த இன்ப நுகர்ச்சியின் தொடர்ச்சியே எதிர்கால
வாழ்க்கை என்பதுதான் அவனது கருத்து.

அந்த இன்பங்களை அனுபவித்தவாறு எப்போதும்
இங்கேயே தொடர்ந்து இருக்க
முடியவில்லை, உலகை விட்டுப் பிரிய
வேண்டியிருக்கிறதே என்று அவன்
மிகவும் வருந்துகிறான்.

எனவே எப்படியாவது இதே இன்பம் தொடர்ந்து கிடைக்கக் கூடிய ஓரிடத்திற்கு தான்
போகக்கூடுமென்று கருதுகிறான்.

அங்கு அதே இன்பங்கள், இதே புலன்
நுகர்ச்சிகள இன்னும் அதிகமாக உயர்ந்த
அளவில் தனக்கு கிடைக்கும் என்று நம்புகிறான்.

இந்த இலக்கை அடையக் கடவுள்தான் வழி.

எனவே அவரை வழிபட விரும்புகிறான்.

அவனுடைய வாழ்க்கையின் லட்சியம் புலனின்பம் தான்.

இந்த இன்பங்களை நீண்ட காலக் குத்தகைக்கு தருபவர் இறைவன் என்று நம்புவதால் அவரை வழிபடுகிறான்.

ஆனால் வாழ்க்கையின் லட்சியம் இறைவன்.

அவருக்கு அப்பாற்பட்டது வேறு ஒன்றுமில்லை.

இப்பொழுது அனுபவிக்கும் புலனின்பங்கள், எதிர்காலத்தில் மேலான ஒன்றைப் பெறுவோம் என்ற நோக்குடன் தற்காலிகமாக அனுபவித்து கொண்டிருப்பவையே--

இது இந்தியர்களின் கருத்து.

அது மட்டுமல்ல; இந்த புலனின்பங்களே எல்லாம்
என்று எண்ணினால் அது மிகவும் பயங்கரமானது,
அழிவிற்கே வழிவகுப்பது ஆகும்.

புலனின்ப நாட்டம் குறையும் அளவிற்கு மனிதனின் வாழ்க்கைத் தரம் உயர்கிறது என்பதை நாம் அன்றாட
வாழ்க்கையில் காண்கிறோம்.

"அறிவோம் ஆன்மீகம்"

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

ஆரோக்யமும் ஆன்மீகமும்

18 Feb, 04:14


மனிதனாகுக..!

உண்பதும், உறங்குவதும், இனவிருத்தி செய்வது மட்டும்தான் மனிதனின் வேலையா ?


மிருகங்களும் இதைத்தானே செய்கிறது!

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது!

என ஔவையார் கூறியது எதற்க்காக?

அறிய வேண்டாமா?

குறைவின்றி நல்ல படியாக பிறந்த நாம் பிறவிப்பயனை அடைய வேண்டாமா பிறந்தது

சாவதற்கா?

வாழ்வதற்கா?

பிறந்து செத்து! பிறந்து செத்து!

இப்படியே போனால் அறிவு-பகுத்தறிவு உள்ளவன்- மனிதன் என்று கூற முடியுமா?

மனிதன் என்பவன் யார்?

மனதை இதம் செய்ய – பக்குவப்படுத்த தெரிந்தவனே மனிதன்!

அதற்குத்தான் பகுத்தறிவு!

எப்படி பக்குவபடுத்துவது?

இதை சொல்லித்தரும் குருவை தேடு!

நாம் சாகப் பிறக்கவில்லை!

வாழ பிறந்திருக்கிறோம்!

எப்படி வாழவேண்டும்?

பஞ்சமா பாதகங்கள் பொய் – கொலை – களவு – கள் – காமம் புரியாது நல்ல பழக்க வழக்கம் – ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்!

மீன், முட்டை, இறைச்சி உணவுகளை உண்ணாதே!

உடலை கெடுக்காதே!

மது, புகை முதலிய போதை பொருட்களை உபயோகிக்காதே!

நோய்க்கு இடங்கொடேல்!

எல்லா உயிர்களிடமும் அன்பாயிரு!

எப்போதும் உண்மையே பேசு!

“ஒருவனுக்கு ஒருத்தி” என வாழு!

மண், பெண், பொருள் ஆசையை விடு!

இறைவன் திருவடியில் சரண் புகு!

அப்போதுதான் நீ மனிதனாவாய்!

சிந்திப்பவனே மனிதன்:

பினாமி பெயரில் பூமியிலே சொத்துக்களை வாங்கி குவிக்கும் கனவான்களே, சுனாமி வந்தால் கண் இமைக்குமுன் கைலாசம் போய்விடுவீர்கள்.

“மரக்கறி உணவே மனிதகுல உணவு”. காய்கறி, கனி உண்டு வாழ்ந்தாலே நமக்கு கனிவு பிறக்கும்.

சக்தி பிறக்கும். சாத்வீகமே, அன்பே, கருணையே நம்மை கடவுளிடம் சேர்பிக்கும்.

அறிவை மயக்கும் மது, புகையிலை வகையறாக்களை தவிர்ப்பதே அறிவுடைமை!

“பரிபூரண அறிவே ஞானம்”

“கொல்லான், புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”

அன்பும் பண்பும் உள்ளவனிடமே அறிவு இருக்கும்.

அறிவுள்ளவனே மனிதன். இறைவன் எங்கோ எட்டாத உயரத்தில் இல்லை!

நமக்கு எட்டுகிற இடத்தில்! எட்டாக – இரண்டாகவே உள்ளான்!

நாம் அவனை எட்டிப்பிடிக்க வேண்டும்!

தட்டிப் பாருங்கள் உணர்வால்!

சிந்தனையை தட்டி சிறகடித்து பறக்காமல் சிந்தனையை அடக்கி “சும்மா இருக்க” வழி பாருங்கள்.

விழியை பாருங்கள்! விழித்திருந்து தான் பார்க்க வேணும்!

கண்ணை மூடினால் மரணம்.

கண்ணாடி போன்ற நம் கண்ணே எந்தப் பற்றுமின்றி நம் இறைவனான ஆத்மாவை சுமந்து கொண்டுள்ளது.

கண்ணின் மணியை கருதிப் பார்ப்பதே ஞானம் பெற வழி பசித்திரு, தனித்திரு, விழித்திரு.

கண்ணின் மணியில் கலந்து ஒளியாய் நின்ற அவனே நம் கண்கண்ட தெய்வம்.

முதலில் நாம் காணவேண்டிய தெய்வம்.

கண்ணாடி கண்டு தொழுதால் கலி தீரும்.

கண்ணாடி போன்ற கண்ணை கண்டு அதில் துலங்கும் ஒளியை தொழுதால் கலியாகிய நம் இருவினைகளும் தீரும்.

பிறவியாகிய பிணி நீங்க – நம் இரு வினைகள் அகல வேண்டும்.

அதற்கு கண்ணில்-மணியில் – ஆடும் ஜோதியை உணர்ந்து சும்மா இருப்பதுவே ஒப்பற்ற ஞான வழி.

சும்மா இருப்பதுவே சுகம்.

சாமியார்களின் உபதேசங்களை விட்டுத்தள்ளுங்கள்.

நம்மை நாம் உணர, சாமியே சொன்ன உபதேசம்! வழி! செயல்படுங்கள்.

சனகாதி முனிவர்களுக்கு தட்சிணாமூர்த்தியாக வந்து இறைவன், இருந்ததனை இருந்தபடி இருந்துதானே உணர்த்தினார்!

சொல்லாமல் சொன்னவரை, சும்மா இருக்க சொன்னவரை, உணர்த்தியவரைத் தான் நாம்தொடரவேண்டும்.

முருகப்பெருமானே அருணகிரிநாதருக்கு
உபதேசித்தது, சும்மா இரு என்று தானே!

ஆறாயிரம் திருவருட்பாக்களை பாடி ஆறாகவே இரும் என நமக்கு சொல்லி விழியை இன்றும் உணர்த்தும் வள்ளலார் முதல் பாடலே சும்மா இருக்கும் சுகம் இன்று வருமோ என்று தானே!

எனவே சும்மா இருங்கள்..!

*வாழ்க வளமுடன்..!*

ஆரோக்யமும் ஆன்மீகமும்

17 Feb, 04:18


மகா சிவராத்திரி விரதம்....!

இந்த இரவில் , மனித உடலின் சக்தி ஓட்டம் இயற்கையாகவே மேல்நோக்கி எழும்பும் வகையில் கோள்களின் அமைப்பு இருக்கிறது.

இந்த இரவு முழுவதும் கண் விழித்து, உடலை செங்குத்தான நிலையில் வைத்துக்கொள்வது ஒருவரின் உடல்நலம் மற்றும் ஆன்மநலனுக்கு மிக உகந்தது.

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும்
மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.

இப்படிப்பட்ட மிக அருமையான மகா சிவராத்திரி தினம் இந்தாண்டு வரும் பிப்ரவரி 26 ஆம் நாள் புதன்கிழமை 26-02-2025 ல் வருகிறது.

நம் பகுதியில் உள்ள பழமையான சிவன் கோவிலுக்கு சென்று இந்த புண்ணிய சிவராத்திரி விரதம் இருப்பது நல்லது...

நாம் சிவராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், நாம் செய்த பாவங்களையும், நமக்கே தெரியாமல் செய்த பாவங்களையும் நீக்கி அருளுவார் என்பது ஐதீகம்.

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

https://youtu.be/pZcYcwR1KjM

சிவ ராத்திரியின் புராண கதை:

பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் படைக்கப்பட்ட எல்லா ஜீவ ராசிகளும் அழிந்து விட்டன.

அந்த சூழலில் இரவு பொழுதில் அன்னை உமாதேவி, ஈசனை நினைத்து பூஜித்து வந்தார்.

இரவில் நான்கு ஜாமங்களில் ஆகம விதிப்படி சிவனுக்கு அர்ச்சனை செய்தார். வழிபாட்டின் முடிவில் அம்பிக்கை சிவனை வணங்கி வேண்டிக்கொண்டார்.

தான் பூஜித்த இந்த இரவு, ‘சிவ ராத்திரி’ என்று கொண்டாட வேண்டும் என வேண்டிக் கொண்டார்.

https://youtu.be/pZcYcwR1KjM

அப்படிப்பட்ட உன்னத நாள் தான் தேவர்களும், மனிதர்களும் இன்றும் சிவ ராத்திரி என்ற பெயரிலேயே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

சிவராத்திரியின் சூட்சமம் :

சிவ ராத்திரி தினத்தன்று சூரியன் மறந்த முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் காலம் வரை சிவ பெருமானை பூஜை செய்து வழிபடுபவர்களுக்கு அனைத்து வித பாக்கியங்களும் தந்து, இறுதியில் மோட்சம் தர வேண்டும் என மகேஸணை உமா மகேஸ்வரி வேண்டிக் கொண்டாள்.

அதன் படி சிவ ராத்திரி தினத்தில் யாரெல்லாம் சிவ பெருமானை நினைத்து வழிபடுவோருக்கு அனைத்து இன்னல்களும் நீங்கி மோட்சமும் கிட்ட வேண்டும் என சிவ பெருமானிடம் வரம் பெற்றார் என்பதம் ஐதீகம்.

தன்னை அறியாமல் மோட்சம் பெற்ற வேடன் :

https://youtu.be/pZcYcwR1KjM

ஒரு வேடன் காட்டில் வேட்டையாட சென்றிருந்தான். அன்றைய தினம் பல முயற்சிகள் செய்தும், பல இடங்களில் அலைந்து திரிந்தும் எந்த ஒரு விலங்கையும் வேட்டையாட முடியவில்லை. சூரியன் மறையக்கூடிய நேரம் வந்தது.

அப்போது ஒரு புலி அவனருகே வந்துவிட்டது. பயந்து போன அவர் அவனருகே இருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான்.

புலியோ அவனை திண்றுவிட வேண்டும் என்ற ஆவலில் வேடன் இருந்த வில்வ மரத்தை சுற்றி சுற்றி வந்தது.

சூரியன் மறைந்து இருண்டது. ஆனால் புலி மரத்தை விட்டு நகலவில்லை.

தூக்கம் காரணமாக கண் அசர்ந்து கீழே விழுந்துவிட்டால், புலிக்கு இறையாகி விடுவோமே என்ற பயத்தில், மரத்தில் இருந்த ஒவ்வொரு இலையாக பிடுங்கி கீழே போட்டுக்கொண்டே இருந்தான்.

அது அவனுக்கே தெரியாமல் மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது அந்த வில்வ இலைகள் விழுந்து அது வில்வ அர்ச்சனையாக மாறியிருந்தது.

https://youtu.be/pZcYcwR1KjM

சிவ ராத்திரியாக அமைந்திருந்த அன்றைய தினம் இரவு முழுவதும் அவனுக்கு தெரியாமலேயே, கொஞ்சம் கூட தூங்காமல் சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்ததால், அந்த வேடனுக்கு ஈசன் முக்தி அளித்து மோட்சத்தை அருளினார் என்கிறது புராணக்கதை.

இந்த காரணத்தால் மகா சிவராத்திரி தினத்தில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களை போக்கி மோட்சம் எனும் நல்லருளை வழங்குவார்.

இந்த இரவில் , மனித உடலின் சக்தி ஓட்டம் இயற்கையாகவே மேல்நோக்கி எழும்பும் வகையில் கோள்களின் அமைப்பு இருக்கிறது.

இந்த இரவு முழுவதும் கண் விழித்து, உடலை செங்குத்தான நிலையில் வைத்துக்கொள்வது ஒருவரின் உடல்நலம் மற்றும் ஆன்மநலனுக்கு மிக உகந்தது.

*ஓம் நமச்சிவாய....!*

https://youtu.be/pZcYcwR1KjM

ஆரோக்யமும் ஆன்மீகமும்

16 Feb, 03:46


"திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும்"

ஆன்மாவானது யாது? உயிர் பிரிந்தது
என்று கூறுகிறோமே அப்படி நமது
உடலை விட்டு என்ன பிரிந்தது ?

திருமூலர்....

நமது உடலில் இருந்து விந்துவாக கருவுக்குள் சென்று எது உயிரானதோ அதுவே நமது உடலில் இருந்து பிரிந்துவிட்டால் பிண்டமாக கருதப்படுகிறது (இறப்பு).

https://youtu.be/kw7Csy17vvA

“ஆக்குகின்றான் முன்பிரிந்த இருபத்தஞ்சு
ஆக்குகின்றான் அவன் ஆதி எம் ஆருயிர்
ஆக்குகின்றான் காப்பக்கோளகை யுளிருந்து
ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே” (தி.ம 451)

பொருள்:

இறைவன் நமது இறப்பின் போது பிரித்த இருப்பத்தைந்து தத்துவங்களையும் தோற்றுவிக்கிறார்.

பிரிந்த 25 தத்துவங்களையும் விந்துவின் வாயிலாக அன்னையின் கருப்பையில் சேர்த்து உயிர் கொடுக்கிறார்.

அவர் உடல் வளர்ச்சிக்கு தேவையானவற்றை அறிந்தே படைக்கிறார்.

https://youtu.be/kw7Csy17vvA

25 தத்துவங்கள்:

பஞ்ச பூதம்(5) : பிருதிவி - (பூமி - நிலம் - மண்), அப்பு - (ஜலம் - நீர் - புனல்), தேயு - (அக்னி - நெருப்பு - அனல்), வாயு - (கால் - காற்று - கனல்), ஆகாயம் ( வெளி - வானம் - விசும்பு).

பஞ்ச தன் மாத்திரை(5): சுவை (ரசம்), ஒளி (ரூபம்), ஊறு (ஸ்பரிசம்), ஓசை (சப்தம்), நாற்றம் (கந்தம்).

பஞ்ச ஞானேந்திரியம்(5):மெய், வாய், கண், மூக்கு, செவி.

பஞ்ச கன்மேந்திரியம்(5): வாக்கு (வாய்), பாணி (கை), பாதம் (கால்), பாயுரு (மலவாய்), உபஸ்தம்(கருவாய்).

https://youtu.be/kw7Csy17vvA

நான்கு அந்தக்கரணம்(4): மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.

புருடன்(1): அறிவு.

இந்த 25 தத்துவங்கள் சேர்ந்ததுதான் நமது ஆத்மா. இந்த 25 தத்துவங்களைக் கொண்டதுதான் நமது உயிரணு.

இதை இன்றை அறிவியல் நவீன ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளது. ஆனால் திருமூலர் ஈசன் அருளிய ஞானத்தால் நமக்கு என்றைக்கோ சொல்லிவிட்டார்.

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

https://youtu.be/kw7Csy17vvA

ஆரோக்யமும் ஆன்மீகமும்

14 Feb, 03:54


ஞானமும், யோகமும், பக்தியும், கர்மமும்...!

ஒரு ஆன்மீகவாதி என்பவன் எனக்கு இது தகும் இது தகாது என்று வேற்றுமை பாராது, சூழலுக்கு ஏற்ப எதையும் செய்யும் துணிவுடன் இருத்தல் வேண்டும்.

பொதுவாகவே பக்தர்கள் யோகா மார்கத்தை சேர்ந்தோரையும், ஞான மார்கத்தை சேர்ந்தோரையும் தாழ்த்தி பேசுவதும், அவ்வாறே ஞானவான்களும், யோகிகளும் ஒருவருக்கொருவர் பரிகாசம் செய்துகொள்வதையும் பலவிடங்களில் காணமுடியும்.

இவர்கள் அனைவருமே ஆயிரம் நதிகளும் ஒரே கடலில்தான் கலக்கிறது என்று அறியாத அறிவிலிகள்!!

நூறு பாதையுமே ஒரே மலை உச்சியைதான் சென்றடையும் என்று புரியாத புரிதல் அற்றவர்கள்.

ஞானமும், யோகமும், பக்தியும், கர்மமும் அனைத்துமே ஒரே பரத்திடம்தான் நம்மை சென்று சேர்க்கின்றது.

பண்டைய காலங்களில் யோகத்தையும், ஞானத்தையும், பக்தியையும், கர்மத்தையும் தனித்தனியே சிரத்தையுடன் பயின்று மக்கள் முக்திப்பேறு அடைந்தனர்.

அவர்களுக்கு அதற்கேற்ற காலமும் நேரமும் அன்று இருந்தது.

ஆனால் இன்றைய இயந்திர வாழ்கையில் அது சாத்தியமற்றது.

எனவே பயிற்சிக்கு என நேரம் கட்டாயம் ஒதுக்கவே முடியாது.

ஆகவே கிடக்கும் நேரத்தையும், சந்தர்பத்தையும் பயன்படுத்தி முறையே யோகத்தையும், ஞானத்தையும், பக்தியையும், கர்மத்தையும் ஒன்றுசேர பயில கட்டாயம் பலன் கூடும்.

நம் இலக்கு பிறவாநிலை, முக்திப்பேறு. அவ்வளவே. இதைமற்றும் என்றும் மறவாதீர்.

பக்தர்களுடன் ஆலயத்தில் கூடும்போது பக்திப்பெருகி பாடல்களும், துதிகளும் பாடி பக்தியை பெருக்கி, நேரம் கிட்டும் சமயத்தில் யோக அப்யாசம் செய்தும், செய்யும் செயலை கவனமாக எண்ணங்களை சிதறவிடாமல் திறம்பட செயலை முடித்து அதையே யோகாப்யாசமாக்கி, உடல் உழைக்காத சமயத்தில் மனதை கவனித்து மனதை அதன்போக்கில் செல்லவிடாமல் நம் கட்டுப்பாட்டில் வைத்து ஞான விசாரம் செய்தும்,

எந்த செயல் செய்யநேர்ந்தாலும் அதை விருப்போ வெறுப்போ இன்றி செயலில் பலன் எதிர்பாராமல் கர்மவானாக இருந்து வாழ்வை முழுமையாக வாழ்ந்தால் இப்பிறவியிலேயே நாம் வீடுபேற்றை அடைவது திண்ணமன்றோ!!!

*ஓம் நமச்சிவாய...*

*யோகம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!*

*"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்
"*

ஆரோக்யமும் ஆன்மீகமும்

13 Feb, 03:28


சுட்ட பழமும் சுடாத பழமும்..!

ஒரே ஊரில் தொடர்ந்து தங்கி இருக்கும் இயல்பு ஒளவையாருக்குக் கிடையாது. அவர் பல ஊர்களுக்குச் சென்று தமது புலமைத் திறத்தால் அறக்கருத்துகளைப் பரப்பி வந்தார்.

ஒருமுறை ஒளவையார் ஓர் ஊரிலிருந்து வேறோர் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அவ்வாறு சென்ற வழியில் ஒரு காடு இருந்தது.

அந்தக் காட்டில் வெயில் அதிகமாகக் காய்ந்து கொண்டிருந்தது. வெயிலில் நடந்து வந்த ஒளவையாருக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அருகில் நின்ற நாவல் மர நிழலில் அவர் அமர்ந்தார்.

அந்த நாவல் மரத்தின் மேல் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் இருந்தான். நாவல் மர நிழலில் களைப்புடன் இருந்த ஒளவையாரை அவன் பார்த்தான்.

‘பாட்டீ....! நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்... நாவல் பழம் சாப்பிடுகிறீர்களா?’ என்று ஒளவையாரைப் பார்த்துக் கேட்டான்.

ஆடு, மாடு மேய்க்கும் அந்தச் சிறுவனை ஒளவையார் மிகவும் சாதாரணமாகக் கருதினார். எனவே, ‘சரி... அப்பா.... நாவல் பழங்களைப் பறித்துப் போடு!’ என்றார்.

ஒளவையாரின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட அந்தச் சிறுவன் ‘பாட்டீ.... உங்களுக்குச் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என்று கேட்டான்.

ஒளவையாருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘நாவல் பழத்தில் சுட்ட பழம், சுடாத பழம் என்று எதுவும் கிடையாதே!’ என்று எண்ணினார். என்றாலும் இந்தச் சிறுவனிடம், சுட்ட பழத்திற்கும் சுடாத பழத்திற்கும் விளக்கம் கேட்பது தமது புலமைக்கு இழிவு என்று அவர் கருதினார்.

‘சுட்ட பழமாகவே நீ பறித்துப் போடப்பா.....’ என்று ஒளவையார் கூறினார். மரத்தில் இருந்த சிறுவன் நன்கு பழுத்த நாவல் பழங்களைப் பறித்து மண்ணில் வேகமாகப் போட்டான்.

மண்ணில் கிடந்த நாவல் பழங்களை ஒளவையார் ஒவ்வொன்றாகக் கையில் எடுத்தார். அவற்றில் நிறைய மண் ஒட்டி இருந்தது. அந்த மண்ணைத் துடைப்பதற்காக ஒளவையார் ‘ஃபூ..... ஃபூ’ என்று ஊதினார்.

ஒளவையார் பழத்தை ஊதுவதை மரத்தின் மேலிருந்த சிறுவன் கண்டான்.

‘பாட்டி....! பழம் சுடுகிறதா? நன்றாக ஊதிச் சாப்பிடுங்கள்!’ என்று கூறினான்.

அப்போதுதான் ஒளவையாருக்குச் ‘சுட்ட பழம் எது? சுடாத பழம் எது?’ என்பது புரிந்தது.

ஆடு மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன், தன்னை வென்று விட்டானே என்று வெட்கப்பட்டார்.

தனது வெட்கத்தை நினைத்து வருந்திய ஒளவையார் பின்வரும் பாடலைப் பாடினார்.

கருங்காலிக் கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலித் தண்டுக்கும் நாணும் - பெருங்கானில்
கார்எருமை மேய்க்கின்ற காளைக்குநான் தோற்றது
ஈரிரவு துஞ்சாது என்கண்

(கருங்காலிக் கட்டை = ஈட்டி மரக்கட்டை, நாணா = கலங்காத, கோடாலி = கோடரி, கதலித்தண்டு = வாழைத்தண்டு, ஈரிரவு = இரண்டு இரவு, துஞ்சாது = தூங்காது)

கருங்காலிக் கட்டை மிகவும் உறுதியானது. அதை எளிதில் பிளக்கக் கூடிய கோடரி, வாழைத்தண்டை வெட்டும்போது சறுக்கும். அதுபோல நானும் எருமை மாடு மேய்க்கின்ற சிறுவனிடம் தோற்றுவிட்டேன். எனவே இரண்டு இரவுகள் எனக்குத் தூக்கம் வராது என்று வருந்தினார்.

ஆடு, மாடு மேய்ப்பவனாக வேடம் தாங்கி அங்கே இருந்தவன் முருகன் ஆவான். ஒளவையாரின் மனவருத்தத்தைப் போக்க அவன் கருதினான். எனவே, அவன் தனது உண்மை வடிவுடன் ஒளவையாருக்குக் காட்சி அளித்தான்.

‘முருகன்தான் ஆடு, மாடு மேய்ப்பவன் போல் வேடமிட்டு வந்து தனது கர்வத்தைப் போக்கினான்’ என்பதை அறிந்த ஒளவையார் மனம் தெளிந்தார். முருகனை வணங்கினார்.

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..!

ஆன்ம ஞானத்தை அடைய ஞானிகள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

12 Feb, 03:09


"நவக்கிரக தோத்திரம்"

சூரியன்:

சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி!
சூரியா போற்றி! சுந்தரா போற்றி!
வீரியா போற்றி! வினைகள் களைவாய் போற்றி!

சந்திரன்:

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி! திருவருள் தருவாய்
சந்திரா போற்றி! சற்குணா போற்றி!
சங்கடந்தீர்ப்பாய் சதுராய் போற்றி!

அங்காரகன் (செவ்வாய்)

சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கள செவ்வாய் மலரடி போற்றி!
அங்காரகனே அவதிகள் நீக்கு!

புதன்:

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி!
பதந்தந்தாள்வாய் பண்ணொளியானே
உதவியே யருளும் உத்தமா போற்றி!

குரு:

குணமிகு வியாழக் குருபகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய் ;
பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
கிரகதோஷமின்றி கடாஷித்தருள்வாய்

சுக்கிரன்:

சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய்
வக்ரமின்றி வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே

சனி:

சங்கடந் தீர்ககுஞ் சனி பகவானே!
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சனீஸ்வரத் தேவே
இச்சகம் வாழ இன்னருள் தா தா

ராகு:

அரவெனும் ராகு அய்யனே போற்றி!
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆகஅருள் புரி அனைத்திலும் வெற்றி
ராகுக்கனியே ரம்மியா போற்றி!

கேது:

கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி! பாவம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேதுத்தேவே கேண்மையாய் ரஷி

*ஓம் நவகிரக தேவாய நமக....!*

ஆரோக்யமும் ஆன்மீகமும்

11 Feb, 03:01


மனிதனும் தெய்வமாகலாம்..!

இறைவன் என்றால் “சச்சிதானந்தம்” என்று பொருள். அதாவது, சத் – இருப்பு அல்லது உண்மை. சித் – அறிவு, ஆனந்தம் – பேரின்பம் என்லாம்.

அதாவது, அறிவின் இருப்பில் ஆனந்தம் இருக்கின்றது என்பதையே ‘இறைவன்’ என்கிறோம்.

அந்த இறை நிலையையை மனிதனும் அடைய முடியும் என்பதினால்தான் அன்றைய பெரியோர்கள் ‘மனிதனும் தெய்வமாகலாம்!’ என்று கூறி வைத்தனர்.

அந்த தெய்வீக நிலையை ஒருவன் அடைய வேண்டுமானால், அவனது மனம் இருமைகளில் இருக்கக் கூடாது.

அதாவது, உயர்வு – தாழ்வு, நல்லது – கெட்டது, சரி – தவறு, மகிழ்ச்சி – துக்கம் என்பன இருக்கக்கூடாது என்கின்றது ஆன்மவியல் பாடங்கள்.

மனம் இருமைகளை இழந்தால், இறைவ(தன்)னை அறியலாம் என்பதினால், பெரும்பாலானவர்களுக்கு இதில் உடன்பாடு இருப்பதில்லை.

காரணம், மகிழ்ச்சி – துக்கம் என்ற இருமைகளில் இந்த இரண்டையும் இழக்க வேண்டுமானால், ஒருவருக்கும் ஒப்புதல் இருக்காது.

ஆம் அனைவருமே துக்கத்தை வேண்டுமானால் விட்டுவிட தாயராக இருப்பார்கள். ஆனால், மகிழ்ச்சியை விட்டுவிட வேண்டும் என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஆன்மவியல் கல்வியைக் கற்பதினால், கட்டாயம் இருமைகள் இல்லாமல் போகும், ஒருமை நிலை உண்டாகி ஆன்மசொரூபம் விளங்கும் என்றவுடன் எவருக்குமே இதுப்போன்ற பாடங்களைப் படிப்பதில் ஆர்வம் உண்டாவதில்லை.

எனெனில், மகிழ்ச்சி வேண்டித்தானே எல்லோரும் இங்கும், அங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களைப் பார்த்து, இந்தப் பாடங்கள் மூலமாக மகிழ்ச்சியும் போய்விடும் என்றால், எவர்தான் படிக்க வருவார்கள்?

அவர்கள் மகிழ்ச்சி என்பதை இனிப்பு சாப்பிடுவதும், திரைப்படம் பார்ப்பதும், நண்பர்களுடன் ஊர் சுற்றுவதும் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் ஆன்ம ஞானம் அடைந்தவனுக்கு அவைகள் எல்லாம் போய்விடுமே என்றால் எப்படி இந்த ஆன்மவியல் பாடங்களைப் படிக்க விரும்புவார்கள் என்பதே எல்லோருடைய சந்தேகமாக இருக்கின்றது.

ஒருவன் ஆன்ம ஞானம் அடைந்து, இருமைகளிலிருந்து விடுபட்டு, அந்த ஏக அறிவுடன் ஏகாந்தமாக இருக்க முடியும் என்பதை எப்படிப் புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், ஒருவனுக்கு ஒரு வேலையின் மூலம் மாதச் சம்பளம் ஒரு இலட்சம் ரூபாய் வந்துக் கொண்டிருக்கின்றது.

அதிர்ஷ்டவசமாக அவனுக்கு மற்றொரு வேலைக் கிடைத்து, அதிலே மாதம் மூன்று இலட்சம் ரூபாய் சம்பளமாக கிடைக்கின்றது.

அந்த வேலை அவனுக்கு கிடைத்தவுடன் ஐய்யய்யோ! மாதம் ஒரு இலட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்த வேலை போய் விட்டதே என்று புலம்புவானா?

அப்படி அவன் புலம்பினால் அவனை என்னவென்று கூறுவது?

ஒரு இலட்சம் ரூபாய் சம்பளம் வருகின்ற வேலை போனால் என்ன? அந்த ஒரு இலட்சம் ரூபாயும் இந்த மூன்று இலட்சம் ரூபாய் சம்பளத்தில் அடக்கம் அல்லவா?

ஆகவே, முன்பு கிடைத்த மகிழ்ச்சி போய்விட்டது என்று யாராவது புலம்புவார்களா?

ஆகவே, ஒருவன் எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியை வேண்டுகின்றான் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

அதுப்போல, ஆன்ம ஞானம் கிடைத்தவுடன் வருகின்ற மகிழ்ச்சி இருக்கின்றது அல்லவா? அது அவன் இதுவரை அனுபவித்து வந்த அத்தனை மகிழ்ச்சிகளையும் உள்ளடக்கியது என்பதினால், அதில் இருமைகள் இருக்காது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஆகவே, ஆன்மவியல் கல்வி என்பது அவனை அவனுக்குக் காட்டிக் கொடுக்கும் கல்விகளுக்கெல்லாம் தலையாய கல்வி என்றால் அது மிகையாகாது.

ஆன்மாவை உணர்ந்தவன் ஆனந்தத்தை உணர்வான் அதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை என்பதினால், இருமைகள் இல்லாத ஏக இறைவ(தன்)னை அறிவதே ‘ஆன்ம ஞானம்’ எனப்படுகின்றது.

அத்தகைய ஆன்ம ஞானத்தை அடைந்தவனின் மனம் ஆனந்தம் நிறைந்த திருப்தியுடன் கூடிய திவ்ய நிலையாகிய தெய்வீக நிலையை அடைகின்றது.

ஓம் தத் ஸத்!

ஆன்ம ஞானத்தை அடைய ஞானிகள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

10 Feb, 03:22


வைட்டமின் மாத்திரைகள் நல்லதா? கெட்டதா?

வைட்டமின் மாத்திரைகள் சில நேரங்களில் நல்லது!!!!?? பல நேரங்களில் கெட்டது!!!!!??

வைட்டமின் மாத்திரைகள் சந்திர மண்டலத்திற்கு ராக்கெட்டில் செல்லும் பொழுது சாப்பிடலாம். நல்லது, ஏனென்றால் அப்பொழுது பழங்கள், காய்கறிகள், உணவுகளை எடுத்துச் செல்ல முடியாது. எனவே நல்லது.

ராக்கெட்டில் செல்லாத மற்ற அனைவருக்கும் தேவையில்லை. உலகில் அனைத்து நாடுகளிலும் பழங்கள், காய்கறிகள், உணவுகள் தாராளமாக கிடைக்கிறது குறைந்த விலையில் கிடைக்கிறது. அதில் அனைத்து வைட்டமின்களும் உள்ளது. அப்படி இருக்கும் பொழுது வைட்டமின் மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை.

பழங்களில், காய்கறிகளில், உணவில் கிடைக்கும் வைட்டமின்களே நல்ல வைட்டமின்கள்.

கடைகளிலும், ஆங்கில மருந்து கடைகளிலும், டிவியில் விளம்பரம் வரும் வைட்டமின்களில் தேவையில்லாத கெட்ட கெமிக்கலை உள்ளடக்கியவை. எனவே அதை சாப்பிடக் கூடாது. அது நல்லதல்ல.

இந்த வைட்டமின் மாத்திரை விற்கும் சுயநல வியாபாரிகள் வேண்டுமென்றே உணவிலுள்ள சத்துப் பொருட்கள் உடலுக்குப் போதுமானதாக இருக்காது எனவே விட்டமின் மாத்திரைகள் சாப்பிடுங்கள் என்று உங்களுக்கு தவறான ஒரு கருத்தை பரப்பி வருகிறார்கள்.

பழங்களை, காய்கறிகளை, உணவுகளை ஒழுங்காக எப்படி சாப்பிட்டால் நல்ல வைட்டமின்களை பெற முடியும் என்ற முறைகளை இந்த மருத்துவர்களும், வியாபாரிகளும் எப்போதுமே சொல்லிக் கொடுப்பதே இல்லை.

இவர்கள், தன் பொருளை விற்பனை செய்வதில் குறியாக இருக்கிறார்கள்.

எனவே என்னைப் பொறுத்தவரை வைட்டமின் மாத்திரைகள் தேவையே இல்லை.

அப்படியே ஒரு வேளை நீங்கள் ராக்கெட்டில் சந்திர மண்டலத்திற்கு போக வேண்டுமென்றால், பழங்கள், காய்கறிகள், உணவுகளில் உள்ள சத்துப் பொருட்களை எப்படி இயற்கையான முறையில் பல வருடம் கெடாமல் "புரோபயாடிக்" " Probiotic" என்ற முறைப்படி பாதுகாப்பாக எடுத்துச் செல்வது என்பதை நாம் உங்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன். விரைவில் "புரோபயாடிக்" என்ற தலைப்பில் முழுமையான தெளிவான ஒரு பதிவை வெளியிட இருக்கிறேன் காத்திருங்கள்.

"வைட்டமின் A" வேண்டுமென்றால், பசுமையான காய்கறிகள், பழங்கள், வெண்ணை, கேரட் ஆகிய பொருள்களில் இருக்கிறது. இவைகளை நமது முறைப்படி சாப்பிட்டால் கண்பார்வை அதிகரிக்கும், பற்கள் உறுதி பெறும், உடல் வளர்ச்சி அடையும்.

"வைட்டமின் B1" வேண்டுமென்றால், கோதுமை, பீன்ஸ், பட்டாணி, பசும்பால், பழங்கள் ஆகியவற்றில் உள்ளது. இவைகளை நமது முறைப்படி சாப்பிட்டால் நரம்பு உறுதி, நல்ல பசி, ஜீரண சக்தி, உடல் வளர்ச்சி ஆகியவை கிடைக்கும்.

"வைட்டமின் B2" வேண்டுமென்றால், கோதுமை, கீரை வகைகள், பாலிஷ் செய்யாத அரிசி ஆகியவற்றில் இருக்கிறது. இவற்றை நமது முறைப்படி சாப்பிட்டால் உடல் வளர்ச்சி, நரம்பு உறுதி, கண்பார்வை அதிகரிப்பு ஆகியவை கிடைக்கும்.

"வைட்டமின் B6" வேண்டுமென்றால் பச்சை காய்கறிகள், முழுதானிய பொருள்கள் ஆகியவற்றில் இருக்கிறது. இவற்றை நமது முறைப்படி சாப்பிட்டால் மூளைச் சக்தி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு திறன், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

"வைட்டமின் B12" வேண்டுமென்றால் பட்டாணி, பசும்பால், பழைய சாதத்தில் இருக்கிறது. இதை நமது முறைப்படி சாப்பிட்டால் இரத்தவிருத்தி, நரம்பு உறுதி, எதிர்ப்பு சக்தி, நினைவாற்றல் அதிகரிக்கும்.

"வைட்டமின்-C " வேண்டுமென்றால், புளிப்புச் சாறுள்ள பழங்கள், தக்காளி, பச்சை மிளகு, காலிபிளவர், கீரைகள், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் ஆகியவற்றில் இருக்கிறது. இதை நமது முறைப்படி சாப்பிட்டால் காயத்தை ஆற்றுதல், பற்கள் உறுதி, நோய் எதிர்ப்பு சக்தி, உடல் பலம் ஆகியவை கிடைக்கும்.

"வைட்டமின் D" வேண்டுமென்றால், பால், எண்ணெய் குளியல், சூரிய வெளிச்சம், சூரியக்குளியல் ஆகியவற்றில் கிடைக்கும். இவற்றை ஒழுங்காக எடுத்துக் கொண்டால் எலும்பு உறுதி, உடலுக்கு சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை கிடைக்கும்.

"வைட்டமின் E "வேண்டுமென்றால், தாவிர எண்ணைகள், தானிய பொருட்கள், ஆப்பிள், திராட்சை, வெண்ணெய், வாழைப்பழம், கேரட் பீன்ஸ், கீரை வகைகள் ஆகியவற்றில் இருக்கிறது. இவற்றை நமது முறைப்படி சாப்பிட்டால் இருதயத்திற்கு உறுதி, இனப்பெருக்கத்தை வளர்ச்சி, விந்து கெட்டி படுதல் ஆகியவை கிடைக்கும்.

"வைட்டமின் K " வேண்டுமென்றால், காலிஃப்ளவர், தக்காளி, பட்டாணி உருளைக்கிழங்கு ஆகியவற்றை நமது, முறைப்படி சாப்பிட்டால் ரத்தத்தை சுத்தமாக்கும், வளர்ச்சித் திறனை அதிகரிக்கும்.

எனவே இனிமேல் சத்து மாத்திரைகள் ஆகிய வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவதை விட்டுவிட்டு இயற்கையான பழங்கள்' காய்கறிகள், கீரை, உணவு ஆகியவற்றில் உள்ள சத்துக்களை ஜீரணம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

ஆரோக்யமும் ஆன்மீகமும்

10 Feb, 03:22


பழங்கள், காய்கறிகளை முறையாக சாப்பிடுவதை கற்றுக் கொடுத்து விட்டால், தனது மருந்துகளை விற்க முடியாது என்ற ஒரே காரணத்திற்காக, வியாபார மருத்துவர்களும், மருந்து வியாபாரிகளும் எப்பொழுதுமே உண்மையை மாற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

எந்த உணவை எப்படி சாப்பிட்டால் நல்ல வைட்டமின்கள் கிடைக்கும் என்பதை உணவு என்ற தலைப்பில் 63 நிமிடங்களும், சுவை வைத்தியம் என்ற தலைப்பில் 68 நிமிடங்களும் பேசியுள்ள ஆடியோவை கீழே டெலிகிராமில் இணைக்கிறேன். கேளுங்கள் புரியும்.

எனவே இனிமேல் சத்து மாத்திரை எனப்படும் வைட்டமின் மாத்திரைகளை புரோபயாடிக் டெக்னிக் தெரியாதவர்கள் ராக்கெட்டில் போகும் மட்டும் பயன்படுத்தலாம். மற்ற அனைவருக்கும் தேவை இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இயற்கைக்குத் திரும்புவோம், இயற்கையாக வாழ்வோம்.

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

08 Feb, 23:32


மகிழ்ச்சி..!

இந்த உலகில் தோன்றிய ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியை மட்டுமே விரும்புகின்றான். அந்த மகிழ்ச்சி என்பது அவனுடைய இயல்பு. ஆனால், அந்த மகிழ்ச்சி நிலையாக இல்லாமல் இருப்பதற்கு, மனம் அமைதியில்லாமல் அலைபாய்வதே காரணமாகும்.

மனதிற்கும், அமைதிக்கும், நெருங்கிய நட்பு உண்டு. அதனால்தான் மனம் சலனமடையும் போது அமைதி பறிபோகின்றது. அமைதி போனவுடன் மகிழ்ச்சி சென்றுவிடுகின்றது.

மகிழ்ச்சி என்பது மனதின் அடிப்படையில் உருவாகும் விஷயம். மனதில் தோன்றும் எண்ணங்களை வைத்து மகிழ்ச்சி முடிவு செய்யப்படுகின்றது.

மகிழ்ச்சி என்றுமே நிலைத்திருக்க விரும்பினால், நம்முடைய செயல்கள் நல்லதாக இருக்க வேண்டும். பிறரை மகிழ்விக்கக்கூடிய செயல்கள் இருக்க வேண்டும். செயல் தூய்மையாக இருக்க வேண்டுமெனில், நம் மனம் தூய்மையாக இருக்க வேண்டும். மனம் தூய்மையாக இருக்க எண்ணங்கள் நல்லவைகளாக தோன்ற வேண்டும்.

செய்யும் செயல்களினால் வருகின்ற நன்மை, தீமைகளை அந்த செயல் செய்தவன் அடைந்தாக வேண்டும் என்பது பிரபஞ்சநியதி.

நம் ஒவ்வொரு எண்ணங்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான், அதில் நல்லது, கெட்டதை பிரித்து அறியமுடியும். நல்லது, கெட்டதை அறிந்து செயல் நடைபெற்றால், அந்த செயலின் விளைவாக கிடைக்கும் பலன்கள் நமக்கு சாதகமாக இருக்கும்.

பலன்கள் நமக்கு சாதகமாக இருந்தால்தான், நாம் மகிழ்ச்சியை அடையமுடியும்.

ஆகவே, ஒருவன் தன்னுடைய மனதினை நல்ல எண்ணங்களால் நிரப்பினால், அவன் நல்லவனாக அனைவராலும் விரும்பப்படுகிறான். அதுவே, அவன் தீய எண்ணங்களால் நிரப்பினால், அவன் கெட்டவனாக அனைவராலும் வெறுக்கப்படுகிறான்.

எவன் ஒருவன் நல்லவனாக வாழ விரும்புகின்றானோ, அவனே மகிழ்ச்சியுடன் வாழ்வான்.

மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அன்பு மிகுந்த பாரதத்தை உருவாக்குவோம்.....!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

08 Feb, 02:48


மனிதன் மட்டும் ஏன் காமத்தை ஒதுக்க வேண்டும் ?

பட்டினி கிடப்பது, தூக்கம் விழிப்பது, தாம்பத்யத்தை விலக்குவது இதெல்லாம் இயற்கைக்கு முரணில்லையா ?

அந்த சிவனே மன்மனதனின் பாணத்திற்கு ஆளானவர் தானே?


https://youtu.be/91s5Qn-qEJU

ஆரோக்யமும் ஆன்மீகமும்

07 Feb, 01:13


இந்த உலகம் எவ்வாறு உருவானது ?

என்ற கேள்விக்கு நான்கே வரிகளில் பதில் சொல்லும் திருமூலர்:

இந்த கேள்வியை தற்போதுள்ள எந்த அறிவியல் அறிஞர்களிடம் கேட்டாலும் பக்கம் பக்கமாக விளக்கம் சொல்வார்கள்.
ஆனால் திருமூலரோ நான்கே வரிகளில் அற்புதமாக பதில் சொல்லிவிடுவார்.

”மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே” (திருமந்திரம் – 385)

பொருள்:

நம் பெருமானிடம் இருந்து முதலில் வானம் தோன்றியது, வானத்தில் இருந்து காற்று தோன்றியது. காற்று வளர்த்தத் தீயில் இருந்து நீர் தோன்றியது. பிறகு கடினத்தன்மை கொண்ட நிலம் தோன்றியது. இந்தப் பிரபஞ்சம் என்னும் பூவில் உள்ள தேன் தான் படைப்புக்கள் அனைத்தும். அந்த அனைத்துப் படைப்புக்களும் ஐந்து பூதங்களால் ஆனவையே!

அறிவியல்:

காற்றானது பெருவெடிப்பின் போது உண்டான ஆற்றலால் பிறந்தது. அந்த ஆற்றலால் பேரொளியில் (சூரியன்) இருந்து தூக்கி விசப்பட்ட நெருப்பு பிண்டம்தான் பூமி. அந்த நெருப்பில் இருந்து நீராவி மூலம் நீர் பிறந்தது அந்த நீரானது மேகமாகி மீண்டும் பூமிக்கு வந்தது. நீரானது பூமியை நிரப்பி நெருப்பை தனித்து நீருலகமாய் மாறியது. குளிர்ந்த நீர் பாறையாக (Magma) வெளிப்பட்டது. பாறையில் இருந்து மண் உருவானது. மண்ணில் இருந்து புல், பூண்டு உருவானது. இதில் இருந்துதான் மற்ற பரிமானங்களும்.

உலகம் எவ்வாறு உருவானது என்று கேட்டால் பொத்தாம் பொதுவாக இறைவன் படைத்தார் என்று கூறாமல் அனைவருக்கும் புரியும் வகையில் அறிவியல் சார்ந்த கருத்துகளை முன் வைத்தார் திருமூலர்.

இதுதான் சனாதனத்தின் மாண்பு..

நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”

ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

06 Feb, 03:48


உண்மையை உணர்வோம்.!

தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும்..!

பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றம் எடுக்க வேண்டும்..!

காய் கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்..!

நவ தானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும்...!

ஆக எது கெட்டு போகிறதோ..!

புழு வண்டு வைக்கிறதோ..!

எது அழுகி நாற்றம் எடுக்கிறதோ..!

எது ஊசிப் போய் வீணாகிறதோ..!

எது குப்பைக்கு போகிறதோ..!

அவைகள் மட்டுமே இயற்கையின் விதிப்படி நல்ல தரமான தீங்கு இல்லாத உணவுப் பொருள்கள்..!

3 மாதம் ஆனாலும் புழு வைக்காமல் இருக்கும் பாட்டில் வாட்டர் கேன் வாட்டர் எப்படி நல்ல தண்ணீர் ஆகும்??

பழமுதிர் நிலையகளிலும் ரிலயண்ஸ் பிரஸ் களிலும் மெகா சூப்பர் மார்கெட்டிலும் பூச்சி மருந்து தெளித்து இரண்டு வாரம் ஆனாலும் கெடாமல் அழுகாமல் இளமை மங்காது பள பளப்பாக விற்கப்படும் பழங்கள் காய்கறிகள் நல்ல தரமான பொருட்களா ?? சிந்திப்பீர்...

இரண்டு மூன்று மாதத்தில் வீட்டில் அரைக்கப் படும் மிளகாய் பொடி, இட்லிப் பொடியிலேயே கடும் காரத்தை உள்வாங்கி புழு வந்து வைத்து கெட்டுப்போகிறது...

பூச்சிக் கொல்லி மருந்து கலந்து பல மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது மணமாக விற்பனை செய்யப்படும் சக்தி மசாலா, ஆச்சி மசாலா போன்ற பாக்கெட்டுகள் நல்ல பொருளா??

இல்லவே இல்லை...!

ரெடி மேடு உணவு பொருள் பாக்கெட் எல்லாமே நஞ்சு தான்..!

டி.வி. விளம்பரம் பார்த்து எந்த உணவு மற்றும் அழகு சாதனப் பொருட்களை வாங்கினால் அதை விட மடமையும் முட்டாள் தனமும் வேறு எதுவும் இல்லை...

கெட்ட உணவுப் பொருள்களை மெகா கடைகளில் வாங்குவது
ஒரு பொழுது போக்காகவும் - சமூக கௌரவமாக மாறி விட்டது...

அதை விடக் கொடுமை..!

நோயைப் பற்றியும்..
மெகா மருத்துவமனை சிகிச்சைகள் பற்றியும்..
அதன் செலவுகள் பற்றியும்
உரத்து பேசி அதையே ஒரு சமூக கௌரவமாக கருதப்படும் இந்த
அவலமான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்...

உணவு முறை, நோய், நலம், மருத்துவம், சமூகம்
பற்றிய புரிதல் கோளாறே இதற்கெல்லாம் காரணம்.

வரை முறையற்ற நுகர்வு பண்பாடும் இதற்கு அடிப்படைக் காரணம்...!

உண்மையை உணர்வோம்..!

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

05 Feb, 03:33


தீய எண்ணங்களே மனதில் எழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

பதில் - நல்ல எண்ணங்களை எண்ண வேண்டும்.

நம் மனதில் இன்ன எண்ணங்கள்தான் எழ வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரமும், அதற்கான திறமையும் இயல்பாகவே நமக்கு அமைந்திருக்கிறது.

நம் உள்ளத்தில் எழுகின்ற எந்த எண்ணமும் தானாக எழுவதில்லை. அது ஏற்கனவே சம்ஸ்காரங்களாக, நம் எண்ணங்கள் மற்றும் வினைகளின் வித்துக்களாக நம் சித்தத்தில் புதைந்து கிடக்கின்றன.

இனி இப்பொழுது நாம் எண்ணும் எண்ணங்களும் அழுத்தம் பெறும் பொழுது சித்தத்தில் போய் பதிகின்றன. ஆனால், அவை தானே வலிய வந்து எண்ணங்களாக ஆவதில்லை. நம் புற மனதின் செயல்பாடுகள் மற்றும் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் வாழ்க்கைச் சூழல்கள் இவற்றிற்கு ஏற்பதான் அவை எண்ணங்களாக எழுகின்றன.

https://youtu.be/twy5xP-52Cc

அல்லாத பட்சத்தில் இந்த சம்ஸ்காரங்கள் முளைக்காத விதைகள்தான். இதில் ''அழுத்தம் பெறும் பொழுது'' என்று சொல்வது எதனால் என்றால், நம் வாழ்க்கை என்கிற குறிப்பிட்ட வட்டத்திற்குள் பெரும்பாலும் சில குறிப்பிட்ட எண்ணங்களையே மீண்டும் மீண்டும் எண்ணுகிறோம்.

மீண்டும் மீண்டும் எண்ணுவதே அழுத்தம் பெறுவது என்கிறோம். இதைப் பழக்கம் என்பார்கள். இந்த பழக்கமே எண்ணங்கள் வாயிலாக நம் இயல்பாக அமைகின்றது. எனவே உயர்வான எண்ணங்களை எண்ணப் பழகிக் கொண்டால், அதுவே நம் இயல்பாக ஆகி விடும்.

''உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.'' என்று வள்ளுவர் குறிப்பிடுவது இதற்காகத்தான்.

எனவே நல்ல எண்ணமோ, தீய எண்ணமோ நம் விருப்பமின்றி நம் மனதில் தோன்றுவதில்லை. மற்றவர்கள் வலிந்து அதை நம் மனதில் திணிக்க முடியாது. நாம் நமது சுயநலம் மற்றும் சுகபோக இச்சைகளுக்கு ஆசைப்பட்டு தீய எண்ணங்களுக்கு இடம் கொடுக்கிறோம்.

https://youtu.be/twy5xP-52Cc

ஒரு பொருளை நாம் வாங்க வேண்டும் என்றால் விலை குறைவாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறோம்.

அதுவே நம்மிடம் இருக்கும் ஒரு பொருள் மட்டமானதாக இருந்தாலும் ஏதேதோ பொய்களைச் சொல்லி அதை அதிக விலைக்கு விற்க நினைக்கிறோம். பெரும்பாலானவர்கள் மன நிலை இவ்வகையில்தான் இருக்கிறது.

இங்கே சுயநலம் மனதில் தீய எண்ணங்களுக்கு வித்திடுகிறது. அதாவது நமக்கு நல்ல எண்ணங்களை எண்ணக் கூடிய அதிகாரமும், சுதந்திரமும் இருந்தும், அவற்றைப் பயன்படுத்தாமல் லாபம் அடையும் சுயநல நோக்கில் தீய எண்ணங்களை எண்ணுகிறோம். சிலர் பேசும் பொழுது ''நல்லவனுக்கு ஏது காலம், தீயவர்கள்தான் வாழ்வில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்'' என்று சொல்லக் கேட்கிறோம்.

இந்த எண்ணம் தவறானது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். நீ நல்லவனாக, உயர்ந்த எண்ணம் உடையவனாக இருந்தும் வாழ்வில் உயர்ந்த நிலை வாய்க்கவில்லை என்று உன் எண்ணங்களை மாற்றிக் கொள்ளாதே.

நிச்சயமாக அதன் பலன் கிடைக்காமல் போகாது என்பதை உறுதி செய்கிறார்.

https://youtu.be/twy5xP-52Cc

நல்ல எண்ணங்களை மட்டுமே மனதில் எண்ணுவேன் என்று நாம் உறுதியாக இருந்தால் தீய எண்ணங்கள் உள்ளே நுழையவே முடியாது.

நல்ல எண்ணங்களைத் தவிர எதிர்மறையான சிந்தனைகளுக்கு மனதில் இடங்கொடுக்க மாட்டேன் என்று நமக்கு நாமே மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். ''உன் வாழ்க்கை உன் கையில் என்பார்கள்.'' அதாவது நம் வாழ்க்கைக்கு அடித்தளமாக விளங்குவது நம் எண்ணங்களே.

அந்த எண்ணங்களை நல்ல விதமாக இருப்பதும், தீயைவைகளாக இருப்பதும் நம் கையில்தான் இருக்கிறது என்பதே அதற்குச்சரியான அர்த்தமாகும்.

நாம் பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்படும் இயல்பைப் பெற்றவர்கள்.

எனவே நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள், நல்ல வார்த்தைகள் என்று பழகிக் கொண்டோமென்றால் தீய எண்ணங்கள் மனதில் எழுவதில்லை.

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

https://youtu.be/twy5xP-52Cc

ஆரோக்யமும் ஆன்மீகமும்

04 Feb, 01:09


*ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!*

ஆரோக்யமும் ஆன்மீகமும்

04 Feb, 01:09


உலகின் முதுமொழி தமிழ் மட்டுமே!

சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு அப்படி என்ன வலிமை?


சமஸ்கிருதம் என்பது மொழியா?

சமஸ்கிருதத்திற்கு இருக்கும் ஒலி வலிமை தமிழுக்கு இல்லையா?

வாருங்கள் விஞ்ஞான (Scientific Proceedure) ரீதியாக நாம் இதற்கு விடை காணலாம்!

முதலில் இந்த மொழிப்போரானது திராவிடத்தின் தோற்றத்திற்கு பின்பே நடக்க ஆரம்பித்தது என்பதை நாம் நன்கு உணர வேண்டும்!

மொழிக்கும் ஒலிக்கு உள்ள வித்தியாசத்தை நாம் உணர்ந்தால் இங்கு ஏற்படும் பாகுபாட்டை நாம் நிவர்த்தி செய்துவிடலாம்!

மொழி வேறு ஒலி வேறா?

ஒலி என்பது மூலப் பொருள், மொழி என்பது ஒலியின் வடிவாக்கமே!

ஆக இங்கே ஒலிக்கு எந்த மொழியும் சொந்தம் கொண்டாட முடியாது.

ஒலியே ஆதியாகும். அதில் இருந்து பிறந்தவை தான் மொழி. நம் முன்னோர்கள் நமக்கென்று நமது வாழ்வாதாரத்திற்கு என்று பல ஒலியின் மகத்துவத்தை நமக்குத் தந்துள்ளனர்.

அந்த ஒலியானது எந்த மொழிக்கும் சொந்தமானது அல்ல. அந்த ஒலியானது இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவன்களுக்குமானது.

உதாரணத்திற்கு பிரணவ மந்திரமான “ஓம்” “அம்” “லம் “ஹம்”, ”ரம்” “ஆம்” எந்த மொழிக்கு சொந்தமானது?
இதற்கான விடையை யாராவது தர இயலுமா?
இவை அனைத்தும் பீஜ மந்திரத்தின் ஒலிகள்!

பீஜம் என்றால் விதை என்று பொருள்!
இதில் இருந்துதான் இந்தப் பிரபஞ்சமே தோன்றியது!

உலகின் முதுமொழி யாது?

உலகின் முதுமொழி யாதெனில் அது எம் தமிழ் மட்டுமே!
அப்போ சமஸ்கிருதம் என்ன? என்று நீங்கள் கேட்பது அடியேனின் காதுகளில் விழுகிறது.

சமஸ்கிருதம் தான் ஒலியின் வடிவம் ஆயிற்றே! அது எவ்வாறு மொழியான தாய் தமிழுடன் போட்டிக்கு நிற்க முடியும்?

சமஸ்கிருதத்திற்கென்று தனித்துவமாக எழுத்துக்கள் கிடையாது. அதுபோல சமஸ்கிருத ஒலியில்லாமல் இவ்வுலகில் எந்த மொழியும் கிடையாது இதுவே நிதர்சனமான உண்மை!

சமஸ்கிருதம் என்பது பீஜ மந்திரங்களின் கூட்டு. அந்த சப்தங்களே பஞ்ச பூதங்களின், அண்ட சராசரங்களின் ஆதாரம்!
இதை எந்த மொழிக்குள் அடக்குவீர்கள்?

திருமூலர் கூறுவது என்ன?

“அண்டமே பிண்டம், பிண்டமே அண்டம்” என்பார் என் ஐயன் திருமூலர். அதற்கு அர்த்தம் அளப்பறியது.

இந்த நான்கு வார்த்தைகளுக்கு இந்த அண்ட சராசரமும் அடங்கும்.

நமது பாரம்பரிய மருத்துவத்தின் படி நமது உடலானது 7 சக்கரங்களைக் கொண்டது. அந்த ஏழு சக்கரங்களும் பஞ்ச பூதங்களின் கூட்டாகும். இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும் பஞ்சபூதத்தின் ஆட்சியின் கீழே இயங்குகிறது.

1. மூலாதாரம் - (சப்தம் - லம்) - பூமி
2.ஸ்வாதிஸ்டானம் - (சப்தம் - வம்) - தண்ணீர்
3. மணிப்பூரம் - (சப்தம் - ரம்) - நெருப்பு
4. அனாஹத்தம் - (சப்தம் - யம்) - காற்று
5. விஷுக்தம் - (சப்தம் - ஹம்) - ஆகாயம்
6. ஆஞ்ஞா - (சப்தம் - ஆம்) - பூமி, ஆகாயம்
7. சஹஸ்ரதளம் - (சப்தம் - ஓஹும்) - பஞ்சபூதம்

இந்த சப்த சக்கரங்களுக்குமான மந்திர ஒலியை அடியேன் இப்பதிவோடு இனைத்துள்ளேன்.

ஒன்றன் பின் ஒன்றாக கேட்கவும்.

இந்த மந்திர ஒலிப்படி அச்சு பிசகாமல் முழு ஈடுபாட்டோடு நாம் அதிர்வுகள் ஏற்படும் வண்ணம் ஒலித்துவந்தால் அந்தந்த சக்கரங்களுக்கான உருப்பிகளின் உள்ள நோய்கள் நம்மை விட்டு விலகிப் போகும் என்பது திருமூலர் வாக்கு ஆகும்.

ஒரு வலிமையான சனாதனவாதியால்:

சர்வ பீஜ மந்திரங்களையும் கற்ற தூய்மையான சனாதனவாதியால் இந்த பீஜ மந்திரங்கள் துணை கொண்டு பஞ்ச பூதங்களையும் செயல்படுத்த முடியும்.

அப்பேர்பட்ட வல்லமை படைத்த பலர் நம்முடன் வாழவே செய்தனர். ஒவ்வொரு பீஜ மந்திரமும் ஒவ்வொரு பஞ்ச பூதத்திற்கும் வலு சேர்க்கும்.

நம் கல்வி முறையை இலந்துவிட்டதால் இப்பேர்பட்ட கலைகளை எல்லாம் நாம் தொலைத்துவிட்டு நிற்கிறோம்.

கோவிலும் சமஸ்கிருதமும்:

கோவிலில் இருக்கும் ஒவ்வொரு விக்கிரகங்களுக்குள்ளும் ஒவ்வொரு ஒலி அடக்கமாகும். அந்த ஒலியை நாம் எழுப்பும் போது அந்த விக்கிரகங்கள் கோவிலும் கூடும் பக்தர்களுக்கு நன்மையைத் தரும்.

இதை ஆங்கிலத்தில் Sound Healing, Stone Healing என்று கூறுவர்.

உதாரணங்கள்:

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோல்கள் நட்சத்திரங்கள், அண்ட வெளி அனைத்திலும் நிறைந்திருப்பது “ஓம்” என்ற பிரணவ பீஜ மந்திரமே.

இதை பல அயல்நாட்டு அறிஞர்களும் ஒத்துக் கொண்டவையே. இதை பல சோதனைகள் மூலம் அவர்களே நிருவியும் உள்ளனர்.

அடியேன் அத்தகைய காணொளிகளையும் இப்பதிவுடன் இனைத்துள்ளேன்.

இவ்வாறெல்லாம் ஒலியின் மகத்துவத்தை உணர்ந்த நம் முன்னொர்களால் வடிவமைக்கப்பட்டதே பீஜ மந்திரங்கள்!

இதை மொழியை காரணம் காட்டி நமது அடுத்த சந்ததியினருக்குக் கிடைக்கவிடாமல் செய்வது எந்த விதத்தில் நியாயம்!

இப்படியே நாம் எத்தனை பாரம்பரியத்தை இலக்கப் போகிறோம்?

*ஓம் பரப்பிரம்ம பஞ்சபூத பிரபஞ்ச சக்தியே போற்றி...*

*நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”*

ஆரோக்யமும் ஆன்மீகமும்

03 Feb, 03:13


நீண்ட ஆயுளும் குறைவற்ற செல்வமும் கிடைக்க. ரத சப்தமி விரதம் 2025..!

நோய் நொடிகளின்றி நீண்ட ஆயுளோடு வாழ சூரியனை வழிபடுங்க...

நாளை 04-02-25 செவ்வாய்க்கிழமை ரத சப்தமி திருநாள்..!

சூரிய தேவன் உலகிற்கு எல்லாம் ஒளி கொடுக்கும் கடவுள்.

சூரிய வழிபாடு காலம் காலமாக கொண்டாடப்படுகிறது.

தை முதல் நாளில் தமிழர் திருநாளாக சூரியனை வழிபடுகின்றனர்.

தை அல்லது மாசி மாதம் வளர்பிறையில் ஏழாம் நாள் சப்தமி திதி ரத சப்தமியாக கொண்டாடுகிறோம்.

இதனை சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடுகின்றனர்.

இந்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ரத சப்தமி கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் விரதம் இருந்து சூரியனை வழிபட்டால் நீண்ட ஆயுளும் குறைவற்ற செல்வமும் பரிபூரணமாக கிடைக்கும்..

அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து நீராடவேண்டும்.

ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கைகளில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து ஸ்நானம் செய்வது வழக்கம்.

காலை 5.00 லிருந்து 7.00 க்குள் ஸ்நானம் பண்ண வேண்டும்.

தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.

ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு.

இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள்.

இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.

முதலில் ரதசப்தமி என்றால் என்ன என்று பார்ப்போம்..?

பூமி சற்றே ( 23.5 *) சாய்ந்த நிலையில் தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. நாம் ரயிலில் பயணிக்கும்போது, நாம் நிலையாக இருப்பது போலவும் வெளியே மரம் மலை முதலானவை ஓடுவது போல மாயத்தோற்றம் ஏற்படுவது போல பூமி சுழன்றாலும் சூரியன் நகர்வது போன்ற மாயத்தோற்றம் உண்டாகிறது. இப்படியான சூரியனின் பயணம் ஆறுமாதம் வடக்கு நோக்கியும் அடுத்த ஆறுமாதம் தெற்கு நோக்கியும் இருப்பதாக உணர்கிறோம்.

வடக்கு நோக்கிய பயணம் உத்தராயணம் ஆகும். அதாவது தெற்கே மகர ரேகையிலிருந்த சூரியன் வடக்கேயுள்ள கடக ரேகை நோக்கி பயணிக்கும் காலம் உத்தராயணம் ஆகும். மேல்நாட்டினர் கணக்குப்படி மகர ரேகையில் இத்திருப்பம் நடைபெறுகிறது !! இந்துக்கள் ஐதீகப்படி தைமாதம் முதல் நாளன்றே உத்தராயணம் துவங்கி விட்டாலும் உண்மையிலேயே சூரியனின் ரதம் தைமாத வளர்பிறை சப்தமி திதியன்று தான் திரும்புகிறது. இதனால்தான் இந்த சப்தமி திதிக்கு தனிச்சிறப்பு !!

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/Yd54EJaK5Hg

சரி !! அன்றைக்கு ஏன் எருக்கிலை வைத்து குளியல் செய்ய வேண்டும் ?? அதற்கான ஐதீகம் இதோ !!!

மகாபாரதப்போரின் பத்தாம் நாள் அர்ஜுனனின் அம்புகளால் துளைக்கப்பட்ட கௌரவ சேனாதிபதி பீஷ்ம பிதாமகர் அம்பு படுக்கையில் சாய்கிறார். அந்நேரம் தட்சணாயனம். தட்சணாயனத்தில் இறந்தால் முக்தி (மோட்சம்) கிட்டாது. பீஷ்மருக்கு அவர் விரும்பும் நேரத்தில் உயிர்விடும் வரம் உண்டு. எனவே அவர் உத்தராயணத்தில் உயிரை விட விரும்புகிறார். ஆனால் தைமாதம் பிறந்து உத்தராயணம் துவங்கியும் கூட அவர் உயிர் பிரியவில்லை. பீஷ்மரை உடல் வேதனையுடன் மனோவேதனையும் வாட்டுகிறது. தன்னைக்காண வந்த வேத வியாசரிடம் தனக்கு ஏனிந்த வேதனை எனக் கேட்கிறார்.

அதற்கு வியாசர் ‘ ஒருவர் தானாக செய்யும் துர்செயல் எவ்வளவு பாவமோ அவ்வளவு பாவம் ஒரு துர்செயல் நடக்கும்போது அதை தடுக்க முடிந்தவர் அப்படி தடுக்காமல் இருப்பதும்’ என்கிறார். பீஷ்மருக்கு புரிகிறது. அன்று அஸ்தினாபுரத்து அரசவையில் பாஞ்சாலி இழுத்துவரப்பட்டு துகிலுரியப்பட்ட போது செயலற்று வாளாவிருந்த பாபம் தன்னை சுற்றியுள்ளதை உணர்கிறார்.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/Yd54EJaK5Hg

இந்த பாபம் அகல ஏதும் பிராயச்சித்தம் உண்டா என வியாசரை கேட்கிறார். ‘பாபங்களை பொசுக்கும் சக்தி சூர்ய சக்தியே. சூர்யனுக்கு அர்க்கன் என்று இன்னொரு பெயருமுண்டு. அர்க்கனுக்கு உகந்தது அர்க்க பத்திரம் என்ற எருக்கிலை. சூர்யசக்தி முற்றிலும் எருக்கிலையுள் அடங்கியுள்ளது ‘ எனக்கூறிய வியாசர் தான் கையுடன் கொணர்ந்த எருக்கிலைகளால் பீஷ்மரின் தலை, கண்கள், வாய், கைகள் மற்றும் கால்கள் ஆகிய அங்கங்களை அலங்கரிக்கிறார்.

பீஷ்மரின் பாபங்கள் பொசுக்கப்பட்டு, அவரது உடல்,மன வேதனைகள் அகன்று நிம்மதியாக உயிர்விடுகிறார்.

ஆரோக்யமும் ஆன்மீகமும்

03 Feb, 03:13


சூரியனாருக்கு உகந்த தானியம் கோதுமை. எனவே நைவேத்தியத்தில் கோதுமை உணவு இருப்பது உத்தமம். அவருக்குப் பிடித்த செந்தாமரை மற்றும் செந்நிற மலர்களால் அர்ச்சித்து அவரை வழிபடுவது விசேஷம்.

ஆலயங்களுக்குச் சென்று சூரிய பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம் வழங்கி தரிசித்தால், பாவமெல்லாம் பறந்தோடிவிடும்.

சூரிய வழிபாட்டிற்கு மந்திரம் தெரியாவிடில் பரவாயில்லை. எளிமையாக, “ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா’ என்று காலை சூரியனைப் பார்த்துக் கூறி, மூன்று முறை வணங்க வேண்டும்.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/Yd54EJaK5Hg

சூரிய பகவானை, ரத சப்தமி நன்னாளில் பூஜித்து வழிபட்டால், ஏழு ஜென்மப் பாவமும் விலகிவிடும். அடுத்தடுத்து ஏழு தலைமுறையினரும் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் ரத சப்தமி நன்னாள்.

சூரிய உதயத்தின் போது, கிழக்குப் பார்த்தபடி நீராடுங்கள். வாழ்வில், ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம். அந்த நாளில் செய்யப்படுகிற தான தருமங்கள், நூறு மடங்கு புண்ணியங்களைச் சேர்க்கும் என்கிறது சாஸ்திரம்!

முக்கியமாக, நாம் ஆத்மார்த்தமாக வழங்குகிற தானங்களை, சூரிய பகவான் அந்த ரதத்தில் எடுத்துச் சென்று, நம் முன்னோர்களுக்கு வழங்குகிறார்.

இதனால் பித்ருக்களின் ஆசியும் நமக்கு கிடைத்து நம்மை மேன்மைப்படுத்துவது நிச்சயம்..

இந்த அற்புதமான ரத சப்தமி விரதத்தை நாம் அனைவரும் கடைபிடிக்க முயற்சி செய்வோம்..

உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்..

ஓம் சூர்ய தேவாய நமக..!

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/Yd54EJaK5Hg

ஆரோக்யமும் ஆன்மீகமும்

01 Feb, 05:25


இறைவனை நோக்கி....

நமக்குள் எப்போதும் உண்மையைக் குறித்த கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.

விடை காண முயற்சி செய்யாதவர்கள் அப்படியே வாழ்ந்து விட்டுப் போய் விடுகிறார்கள்.

ஆனால், விடை என்ன என்றுத் தேட முனைபவர்கள் நிலையோ வேறு.

அவர்கள் ஒன்றிலிருந்து ஒன்று என்று தேடித் தேடி சூக்கும நிலையை உணரத் தலைப்படுகிறார்கள்.

இதில் உணர்ந்தவர்கள் ஞானிகள்.

முயற்சியில் இருப்பவர்கள் யோகிகள், பக்தர்கள், மகான்கள் எனப்படுகின்றனர்.

இவர்களின் இந்நிலைகளின் பூரணத்தில் ஞானம் துலங்கும்.

இந்த உடல், மனம் இரண்டிற்கும் ஆதாரமாக விளங்குகின்ற வஸ்து எது ? என்கிற விசாரத்திலேயே இடைவிடாது நிலைத்திர்ப்பவர்களுக்கு முடிவில் ஒருநாள் ஆன்ம தரிசனம் வாய்க்கிறது.

அப்போது அறிகின்ற ஜீவனும், அறியப்படும் ப்ரஹ்மமும் வேறல்ல என்பது உணர்வுக்கு வருகின்றது. அந்த ஒருமை நிலையில் நீடித்திருப்பதே ஞானம் எனப்படுகிறது.

ஒரு சிலருக்கு பரமாத்மாவோடு கலந்து கரைந்து போவதை விட கொஞ்சம் விலகி இருந்து அவரிடம் அன்பு செலுத்தி வாழ்வதில் ஆனந்தம் தோன்றுகிறது.

இதுவே பக்தி நிலை. இதில் மனதைக்கடந்த நிலை ஞானம். மனதால் பற்றிக் கொண்டிருப்பது பக்தி.

இந்த இரண்டிலும் இருந்து மாறுபட்டு இந்த உடலால் செய்யும் அனைத்து காரியங்களையும் தனக்கென்று மட்டும் செய்யாமல் எல்லாவற்றையும் இறை சொரூபமாகக் கண்டு, செய்யும் அனைத்து காரியங்களையும் அந்த இறைவனுக்கே அர்பணித்து அவனுக்காகவே, அவனாகவே வாழ்வதில் நிறைவும், ஆனந்தமும் காண்பது கர்ம நிலை.

இப்படிப்பட்ட தீவிர ஆன்ம விசாரத்திற்கும், கர்ம நிலைக்கும் உலகாய வாழ்வில் நிறையத் தடைகளும் அதனால் கால விரையமும் ஆவதாலும், மனம் எளிதில் வசப்பட மறுப்பதாலும், மூச்சைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் மனதைக் கட்டுப்படுத்தி, நம் உடலில் உள்ள பிராணனை வசப்படுத்தி, அதை நம் உடலில் சமநிலைக்குக் கொண்டு வந்து இணைப்பை ஏற்படுத்த முனைவது யோக நிலை.

எவர் எந்நிலையில் முனைந்தாலும் ஞானத்தின் வழியேதான் இணைப்பைப் பெற முடியும். இது உறுதியான இறுதி நிலை.

ஞானம் பெற்றவர்கள் தங்கள் நிலைகளை விளக்கிச் சொல்ல இயலாது. எனென்றால் புலன் கடந்த, மனமற்ற நிலைக்குப் போய் மீண்டவர்களிடத்து அதற்கான எந்தப் பதிவுகளும் இருப்பதில்லை.

தூய்மையான வெட்டவெளி போன்ற பூரண நிலையை என்னவென்று விளக்க முடியும்? அப்படியே அவர்கள் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள நம்மால் இயலாது. எனவே அதை அடைவது மட்டுமே ஒரே வழி. வேறு எந்த வழியும் இல்லை.

புதியதாக ஏதோ நம்மிடம் இல்லாத ஒன்றைத் தேடியோ, அடையவோ நாம் முயற்சிப்பதில்லை. நம் நிஜ சொரூபம் எதுவோ, அதை உணர்வதே ஞானம். மனிதனின் நிஜ சொரூபம் ஆனந்தமேயாகும்.

பரம்பொருளும் எங்கும், எப்பொழுதும் ஆனந்தமயமானதே. எனவே இரண்டிற்கும் பேதமில்லை. இதை எப்படி எற்றுக் கொள்வது ?

மனிதன் ஆனந்தமயமானவன் என்பதற்கான அத்தாட்சி என்ன ?

ஆழ்ந்த உறக்க நிலையே அதற்கு அத்தாட்சி. ஆழ்ந்த உறக்க நிலையில்தான் மனிதன் தன் ஆனந்தமயமான நிஜ சொரூபத்தில் இருக்கிறான்.

அதனால்தான் உறங்கி எழுந்தவுடன் ஆனந்தமாகத் தூங்கினேன் என்கிறான். அப்போது மனம் இயங்காமல் இருக்கிறது. நான் என்ற உணர்வு மட்டும் இருக்கிறது.

முக்குணங்களின் ஆளுமை அங்கில்லை. இந்திரியங்களின் கட்டு அங்கில்லை. மனிதனின் யதார்த்த நிலை என்பது அதுதான்.

இதே நிலையை இந்த சுஷுப்தியின் நிலையை ஜாக்கிரதாவஸ்தையிலும் ஒருவன் பெறுவானேயாகில் அவனே ஞானி. வேறொன்றுமில்லை.

அர்த்தமுள்ள இந்து தர்மம்

ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

31 Jan, 03:03


நடப்பதை ஏற்கும்

பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அதை மாற்ற முயலும் போது, மேலும் மேலும் துன்பத்தையும் சோகத்தையுமே பலனாகப் பெறுகிறோம்.

எதற்கும் நிதானமும் பொறுமையும் தேவை. நமக்கு நடக்கும் நடக்கப்போகும் நல்லதை யாராலும் கெடுக்க முடியாது.
அதேபோல் தீமையையும் கொடுக்க முடியாது.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா"

நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”

ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

31 Jan, 03:03


"தீதும் நன்றும் பிறர் தர வாரா"

கர்ம வினை...!


உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு. ஆனால் எதோ ஒரு குறிப்பிட்ட நபர் நமக்கு துணைவராக அல்லது துணைவியாக அமைவது ஏன் ?

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம்.

அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.

சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம். சிலருக்கு நல்லது செய்கிறோம்.
பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறோம். இந்த கொடுக்கல் வாங்கலே "ருண பந்தம்" எனப்படுகிறது.

சிலருடைய உறவுகள் ஆனந்தத்தைக் கொடுக்கிறது. சிலருடைய வருகை மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சிலர் கூடவே இருந்து தொல்லைப் படுத்துகிறார்கள். சிலரின் வருகை துக்கத்தை ஏற்படுத்துகிறது.

பல சமயங்களில் இது ஏன் நிகழ்கிறது என்று தெரியாமலேயே தன் போக்கில் நம் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கனவில் கூட காண முடியாத பல ஆச்சர்யங்கள் நமக்கு சிலசமயங்களில் ஏற்படுகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் ?

ஏன் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ?

நாமே நம் தாயை, தந்தையை, சகோதர சகோதரிகளை, நண்பர்களை, மனைவியை, கணவனை, பிள்ளைகளை, தேர்ந்தெடுப்பதில்லை.

நண்பர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யாரேனும் கூறலாம். ஆனாலும் அதுவும் தானே நிகழ வேண்டும்.

நம்மால் உருவாக்க முடியாது. முயற்சி மட்டுமே நம்முடையது. முடிவு ?

ஒரு சிலர் நம் வாழ்க்கையிலிருந்து திடீரென்று காணாமல் போய்விடுவர். அது இறப்பால் மட்டும் அல்ல , பல காரணங்களினால் நிகழும். அதே நபர் மீண்டும் நம் வாழ்வில் வேறு கோணத்தில் வேறு பார்வையில் தோன்றுவர்.

எதோ ஒன்று நம்மை அடுத்தவர் பால் ஈர்க்கிறது, அல்லது அடுத்தவரை காரணம் இல்லாமல் வெறுக்க வைக்கிறது. அது என்ன ?

சமன் செய்யாமல் மிச்சம் வைத்திருக்கும் கர்ம கதிகளின் எச்சங்களே அவ்வாறு ஒரு ஈர்ப்பை அல்லது வெறுப்பை ஏற்படுத்துகிறதா ?

இதற்கெல்லாம் தெரிந்த ஒரே காரணம் நம்முடைய "கர்ம வினை" தான்..

இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் கொண்டிருக்கிறோம். அத்தனைப் பிறப்பிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்திருக்கிறோம்.

அந்தக் கூட்டின் பெயரே "சஞ்சித கர்மா" எனப்படுகிறது.

அதன் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் அனுபவிக்க கொடுக்கப்படுகிறது.

அதுவே 'பிராரப்தக் கர்மா' எனப்படுகிறது.

இந்த பிராரப்தக் கர்மா நிறைவடையாமல் நம்முடைய இந்தப் பிறவி முடிவடையாது.

நாம் இவ்வுலக வாழ்க்கையிலிருந்து விடுதலைப் பெற முடியாது.
இந்த வாழ்க்கை நடைமுறையில் நாம் ஒவ்வொருவரிடமும் ஏதேனும் ஒன்றை கற்கிறோம் அல்லது கற்றுக் கொள்கிறோம். இதில் நாம் அனைவரும் அதிகமாக கற்பது அல்லது கற்பிப்பது நம் துணையுடன் மட்டுமே.

இது தவிர 'ஆகாம்ய கர்மா' என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல - கெட்ட செயல்களால் ஏற்படுவது.

யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது. அவரவர்கள் செய்வினையின் பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும்..

துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும், ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும், அவரவர்கள் கர்ம கதியே.

இதைத் தான் "தீதும் நன்றும் பிறர் தர வாரா"
என நம் மதம் போதிக்கிறது.

நம்முடைய நல்ல கெட்ட காலங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பு.

அப்படி என்றால் ஆகாமி கர்மா நம்முடைய கையிலேயே இருக்கிறது.

இந்தப் பிறவியில் யார் எப்படி இருந்தாலும், நீ எப்படி இருக்கப் போகிறாய் என்பது உன் கையிலேயே உள்ளது. நீ செய்யும் நற்செயல்களையும், வினைச்செயல்களையும் நீ மட்டுமே எதோ ஒரு பிறவியில் அனுபவிக்கப் போகிறாய் என்பதை உணர்ந்தால், நீ என்ன செய்யப் போகிறாய் ? எப்படி நடந்து கொள்ளப் போகிறாய் ? எது போன்ற வாழ்க்கைத் தடத்தை ஏற்படுத்திக்கொள்ளப் போகிறாய் என்பது உனக்குப் புலப்படும்.

இதை போதிப்பது தான் " ஹிந்து மதம் ".

There is NO cancellation of GOOD and BAD deeds .

பாவ புண்ணியங்களுக்கு கூட்டல் கழித்தல் கிடையாது.

இரண்டையும் நாம் அனுபவித்தே ஆகவேண்டும். பணம் மட்டுமே எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்று ஒரு சித்தாந்தம் உள்ளது.

ஆனால், பணமே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட தன்னுடைய வாழ்க்கையில் பல சமயங்களில் சந்தோஷமாக இருக்கிறான். அதேபோல பெரும் பணக்காரர்களையும் 'துக்கங்கள்' விடுவதில்லை.

சர்க்கரை ஆலை அதிபரானாலும் Diabetic ஆக இருந்தால் இனிப்புப் பண்டங்களை உண்ண முடியாது. பல கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் தன கால்களையே நடை பயிற்சிக்கு நம்ப வேண்டியதாக உள்ளது.

'வினை விதைத்த வழியில் விதி நடக்கும்'

'விதி வகுத்த வழியில் நாம் நடக்க வேண்டும்'

நமக்கு விதிக்கப்பட்டது நம் கடமையைச் செய்வது மட்டுமே. பலனை ஆண்டவனிடம் விட்டுவிடுவோம்.

ஆரோக்யமும் ஆன்மீகமும்

30 Jan, 03:57


அன்பு செய்ய விரும்புவோம்..!

இந்த உலகம் எதை ஆதாரமாகக் கொண்டு சுழலுகிறது? என்று ஒருவன் ஒரு ஞானியைப் பார்த்து வினவினான்.

அதற்கு அந்த ஞானி அளித்த பதில் 'உயிர்களின் மனதில் உள்ள அன்பை ஆதாரமாக் கொண்டே இந்த உலகம் சுழலுகிறது' என்றார்.

அன்பு ஒன்றே உலகில் அனைத்திலும் உயர்ந்தது என கூறுகின்றன அனைத்து நூல்களும்.

இந்த உலகில் பிறந்த புத்தர், வள்ளுவர், காந்தி என அனைவரும் வலியுறுத்தி கூறியது அன்பு ஒன்றே.

அன்பிற்கு பல பெயர்கள். கடவுளிடம் வைக்கும் அன்புக்குப் பெயர் பக்தி.

சம வயதினரிடம் காட்டும் அன்பு சிநேகிதம், நட்பு என்றும் கூறலாம்.

பெரியவர்களிடம் வைக்கும் அன்பு மரியாதை; குழந்தைகளிடம் காட்டும் அன்பு வாத்சல்யம்; கதாநாயகன் -கதாநாயகியின் அன்பு சிருங்காரம்; சாதாரண மனிதர்கள் அவர்களைவிட கஷ்டப்படுபவர்களிடம் காட்டும் அன்பு பரிவு; நம்மைவிட பெரியவர்கள் நம்மிடம் காட்டும் அன்பு அருள், கிருபை என்றும் சொல்லலாம்.

கடவுளின் அருள் நமக்கு இருக்குமானால், அந்த அன்பிற்கு இறைவனின் கருணை என்றும் கடவுளின் அனுகிரகம் என்றும் சொல்லப்படும்.(காஞ்சி மகா பெரியவா ஆற்றிய உரையிலிருந்து)

பல பெயரிட்டு அழைத்தாலும் அனைத்திற்கும் அடிப்படை அன்பு ஒன்றே.

அன்பு இல்லாமல் செய்யும் எந்த செயலும் பலன் தராது.

"என்பே விறகா இறைச்சி யறுத்திட்டுப்
பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம் குழைவார்க் கன்றி
என்போல் மணியினை எய்த ஒண்ணாதே"

என்று கூறுகிறார் திருமூலர்.

உடலை வருத்தி நோன்பு, தவம் இயற்றினாலும் அன்பினால் உள்ளம் உருகாவிட்டால் இறை அருளை பெற இயலாது என்கிறார்.

மற்ற மனிதர்களின் மேல் அன்பு செய்யத் தெரியாதவர்கள் இறைவன் மேல் மட்டும் எப்படி அன்பு செலுத்த முடியும்?.

பிறகு இறை அருளுக்கு எப்படி பாத்திரமாக இயலும்?.

அன்பு மட்டுமே ஒன்றைக் கொடுத்தால் ஆயிரம் மடங்காக திரும்பக் கிடைக்கக் கூடியது.

*அன்பு செய்யப் பழகுவோம்...*

*அன்பே சிவம்... ஓம் நமச்சிவாய...*

*அன்பான வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!*

ஆரோக்யமும் ஆன்மீகமும்

29 Jan, 03:21


மனமே ஞானத்தை விரும்புபவனுக்கு எதிரி..!

ஞானத்தை அடைய விரும்புபவனுக்கு உள்ள ஒரே எதிரி அவனுடைய சொந்த மனமே.

தன்னையே வென்றவன் தனக்குத் தானே நண்பனாகிறான்.

உன்னைக் காட்டிலும் உனக்கு சிறந்த நட்பு ஒருவனும் கிடையாது.

உனக்கு கொடிய பகைவனும் நீயே.

இந்த இரு தன்மைகளும் நம் மனத்திடையே உள்ளன.

மனம் நமக்கு நட்பாகும் போது. உலகமே நட்பாகத் தோன்றும்.

நம்மை நாமே வெறுக்கும் போது அது பகையாக தெரியும்.

கற்புடைய மனைவியைக் காதலித்து அறவழியில் நடந்தால் இப்பூமியிலேயே சுவர்க்கத்தைக் காணலாம்.

ஒருவனுக்கு தன் வீடே சிறந்த வாசஸ்தலம்.

மலை, காடு என்று சுற்றித் திரியத் தேவையில்லை.

வீட்டிலே தெய்வத்தைக் காணத் திறமையில்லாதவன் மலைச்சிகரத்திற்குச் சென்றாலும் கடவுளைக் காணமுடியாது.

உயிர்களுக்கு தீங்கிழைப்போர் உண்மையான பக்தராக மாட்டார்.

எந்த உயிரையும் வெறுப்போரும் கடவுளின் தொண்டர் அல்ல.

மாமிசம் புசிப்போரும் கடவுளை நெருங்க முடியாது.

ஜீவஹிம்சை செய்பவரை கடவுள் மன்னிக்க மாட்டார்.

உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையை கீதை ஆதாரமாகக் கொண்டது.

தீமைகளை எதிர்த்து போராடி, நன்மையை நிலைநாட்ட வேண்டும்.

கடவுளிடம் சரணாகதி அடைதலே யோகம்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்..!

நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”

ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

28 Jan, 00:14


ஒன்று பிறப்பு மற்றொன்று இறப்பு.

இல்லற வாழ்வைப் பொருத்த வரை பற்றும், பாசமும் அவசியமானதாக இருக்கிறது.


நம் முன்னோர்கள் துறவறத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்தார்களோ அதைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், புனிதமானதாகவும் இல்லறத்தைப் போற்றினார்கள்.

ஏனென்றால், ஞானத்தை அடைவதோடு சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் துறவிகளை ஆதரிப்பதோடு தங்கள் இல்லற தர்மத்தையும் சீரோடும், சிறப்போடும் நடத்தி மேன்மையடைபவர்கள் இல்லறத்தார்தான்.

நம் பாரத தேசத்தின் சனாதன தர்மம் மனிதனின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது.

அது இந்த உலகில் இருந்து இயற்கையாக மனிதன் அடையும் எந்த இன்பத்தையும் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்று சொல்வதே இல்லை.

அந்த இன்பங்களை அதிகமாகப் பெறுவதற்கே வழி வகைகளைக் கற்றுத் தருகிறது.

ஆனால், அந்த இன்ப நுகர்ச்சியே பெருந் துன்பத்திற்கும் காரணமாக அமைந்து விடக் கூடாது என்பதிலும் மிகுந்த கவனமாக இருக்கிறது.

அதாவது, படகானது தண்ணீரில் மிதக்கும் வரை இன்பம்.

அதே படகுக்குள் தண்ணீர் புகுந்தால் விளைவது துன்பம் என்றும் எச்சரிக்கிறது.

படகானது எப்படி தண்ணீரில்தான் மிதக்க வேண்டுமோ அதுபோல மனிதனின் வாழ்க்கைப் படகானது ஆசையெனும் தண்ணீரின் மேல்தான் மிதக்கும்.

ஆனால், அந்த ஆசையே வாழ்க்கையெனும் படகை ஆக்கிமித்து விடுமானால் நிலைமை கவலைக்கிடமாகி விடும்.

படகுக்கு ஆதாரமாக தண்ணீர் விளங்குவது போல, ஆசைகளை ஆதரமாகக் கொண்டே வாழ்க்கை நகருகிறது.

எனவே, அந்த ஆசைகளானது மனித வாழ்வை மேலும் மேலும் உயர்த்துவதோடு, பிறவியின் நோக்கத்தை நிறைவேற்றும் தன்மையுடையவைகளாகவும் இருக்க வேண்டும்.

இந்த வாழ்க்கை நித்தியமானதல்ல என்பதை மனிதன் உணராத போதுதான் மனிதனின் ஆசைகள் பேராசையாக ஆகி விடுகின்றன.

நம் வாழ்வைப் பொறுத்த வரை சாஸ்வதமானவைகள் இரண்டே விஷயங்கள்தான்.

ஒன்று பிறப்பு மற்றொன்று இறப்பு.

மற்ற எதுவும் சாஸ்வதமானதல்ல என்பதை உணர்ந்தவர்கள் தேவையற்ற ஆசைகளின் பாற்பட்டு தவறிழைக்க மாட்டார்கள்.

இத்தகைய உணர்வுடையவர்கள் வாழ்வை நேசிப்பார்களேயன்றி அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு வாழ்வை இழக்க மாட்டார்கள்.

படகை மேற்கோள் காட்டியது போல நம் முன்னோர்கள் தாமரை இலையையும் இதற்கு உதாரணமாகச் சொல்கிறார்கள்.

தாமரை இலைக்கு ஆதரமாக விளங்குவது தண்ணீர்தான் என்றாலும், அந்தத் தண்ணீரைத் தாமரை இலை தன் மீது ஒட்ட விடுவதில்லை.

இந்த கோட்பாட்டையே நம் வாழ்வியலுக்கும் முன் வைக்கிறது நம் சனாதான தர்மம்.

இல்லற வாழ்வைப் பொருத்த வரை பற்றும், பாசமும் அவசியமானதாக இருக்கிறது.

எனினும் அதிலேயே மூழ்கி மனிதன் தன் வாழ்க்கை நிலையாமையை மறந்து விடக் கூடாது.

இத்தகைய ஞானம் உடைய மனிதனே இன்ப துன்பங்களை சமமாகப் பாவிக்கின்ற மனப்பான்மையைப் பெறுவதோடு தேவையற்ற ஆசைகளையும் துறந்து விடுவான்.

இந்த பழக்கமே அவனுக்கு முதுமையில் மேற்கொள்ளும் துறவறத்திற்கு அடித்தளமாக அமைகிறது.

*அர்த்தமுள்ள இந்து தர்மம்*

*ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!*

ஆரோக்யமும் ஆன்மீகமும்

27 Jan, 00:48


மனமும் பஞ்ச பூதங்களும்...!

மனிதன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் முதலில் மனதை நெறிப்படுத்த வேண்டியது அவசியம்.

எந்த நீதி நூல்களைப் படித்தாலும் இந்த கருத்தே வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.

ஏன் மனதிற்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது?.

இதை புரிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் இந்த உலகம் எப்படி தோன்றியது என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களைக் கொண்டது. நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களின் சேர்க்கையே இவ்வுலகம்.

இந்த உலகம் எப்படி உருவானது என்பதை நமது புராணங்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

பிரபஞ்சம் முழுதும் நிரம்பி இருக்கக் கூடிய ஆகாயம் என்ற வெற்றிடத்திலிருந்து காற்று தோன்றியது.

காற்றிலிருந்து நெருப்பு தோன்றியது.

நெருப்பிலிருந்து நீர் தோன்றியது.

நீரிலிருந்து மண் தோன்றியது.

இந்த பிரபஞ்சம் என்பது அழிவை சந்திக்கும்போது, நான்கு யுகங்களும் முடிந்து உலகம் அழிந்து புதிய உலகு உருவாகும் போது அழிவு என்பது எப்படி தோன்றியதோ அப்படியே மறையும்.

கடல் பொங்கி இந்த நிலம் முழுவதையும் நீர் சூழும்.

ஒரு பெரு நெருப்பு எழுந்து நீரையும் மண்னையும் ஆவியாக்கும்.

மிகப்பெரும் சூராவளிக்காற்று எழுந்து நெருப்பை உள் வாங்கும்.

இவற்றை அப்படியே ஆகாயம் தன்னுள் இழுத்து அடக்கிக் கொள்ளும்.

இது சாத்தியமாவது அதன் வலிமையை சார்ந்ததாக இருக்கிறது.

மண்னை அப்படியே கிடக்கும். மண்னை விட தண்ணீர் சூட்சும சக்தி வாய்ந்தது. அது பக்கவாட்டில் பரவும். தண்ணீரை விட நெருப்பு சூட்சும சக்தி வாய்ந்தது. பக்கவாட்டில் மட்டுமல்லாது சிறிது மேலேயும் எழும்பும். நெருப்பை விட காற்று சூட்சும சக்தி வாய்ந்தது. எல்லா இடங்களிலும் பரவும். காற்றை விட ஆகாயம் சூட்சும சக்தி வாய்ந்தது. ஆகாயம் என்ற வெற்றிடம் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறது.

சரி! மனதிற்கும் இந்த உலகம் உருவானதற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா.

அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது.

மனித உடலும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையே.

ஆகாயத்திலிருந்து செவியும், காற்றிலிருந்து மெய்யும், நெருப்பிலிருந்து கண்ணும், நீரிலிருந்து சுவைக்கும் நாக்கும் நிலத்திலிருந்துமூக்கும் உருவாக்கப்பட்டன.

நாம் சாப்பிடும் உணவு, பருகும் நீரில் இருந்து மண் சத்தும் நீர் சத்தும் கிடைக்கிறது. வயிற்றில் உள்ள அமிலமானது நெருப்பாக செயல் புரிந்து உண்ணும் உணவை எரித்து உடல் இயங்க தேவையான வெப்பத்தை வழங்குகிறது.

சுவாசிப்பதாலும், உணவிலிருந்தும்,நீரிலிருந்தும் பிராண சக்தி கிடைக்கிறது. இதில் அதிக அளவு சுவாசத்திலிருந்து பெறப்படுகிறது.

நமது உடலில் மொத்தம் ஒன்பது விதமான வாயுக்கள் உள்ளனவாம். இதில் ஐந்து வாயுக்கள் பிராண வாயு, அபாண வாயு,சமான வாயு, உதான வாயு மற்றும் வயான வாயு என்ற ஐந்தும் பஞ்சபூதங்களின் கூட்டமைப்பில் தோன்றியவை.

நமது உடல் ஆகாய சக்தியை இந்த பிரபஞ்சத்தில் இருந்து பெற்றுக் கொண்டே இருக்கிறது. ஆனால் நமக்கு ஆகாய சக்தியை மீட்டுத் தருவது உறக்கம்.

ஆழ்ந்த உறக்கத்தில் ஆகாய சக்தி மீட்டெடுக்கப்படுகிது. எப்போது ஆகாய சக்தி உடலில் குறைகிறதோ அப்போது சோர்வு ஆட்கொண்டு தூக்கத்திற்கு இட்டுச்செல்கிறது.

ஆகாய சக்தியை மீட்க மற்றொரு வழி தியானம் மற்றும் மனம் ஒருமித்து செய்யக்கூடிய செயல்கள்.

மனம் என்பது நம்மில் இருக்கும் ஒரு சூட்சும பொருள். இதனை இயக்குவதற்கு சூட்சும சக்தியான ஆகாய சக்தி தேவைப்படுகிறது.

எப்போது மனதில் எண்ண ஒட்டங்கள் அடங்குகிறதோ அப்போது உடலின் ஆகாய சக்தியின் சேமிப்பு அதிகரிக்கிறது.

ஆகாய சக்தி சரியான அளவில் இருக்கும்போதுதான் கற்பதை கிரகிக்க முடிகிறது.

மனதில் அளவிற்கும் அதிகமான துக்கம் போன்றவற்றால் ஆகாய சக்தி அதிக அளவில் உடலில் குறைவதையே நவீன மருத்துவத்தில் depression என்று அழைக்கிறார்கள்.

இதற்கு அளிக்கப்படும் மருந்துகள் மனதை சரி செய்யாது அதற்கு பதிலாக தூக்கத்தை அளித்து ஆகாய சக்தியை மீட்டெடுக்கும் பணியை மட்டுமே செய்கிறது.

எனவே மனதை அமைதியாக வைத்துக் கொண்டால் தான் வாழ்வில் முன்னேற்றங்களை காண இயலும்...

*ஓம் பரப்பிரம்ம பஞ்சபூத பிரபஞ்ச சக்தியே போற்றி...*

*ஆனந்தமான வாழ்வுக்கு பஞ்சபூத பிரபஞ்ச சக்தி பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் புரியவைத்து அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்..*

ஆரோக்யமும் ஆன்மீகமும்

25 Jan, 02:48


"எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லை"

அது என்ன ”எட்டிரண்டு”....?


யோக ஞானம் பயில்வோர் ஒவ்வொருவரும் அறிந்து தெளிய வேண்டிய தத்துவம்தான் இந்த எட்டிரண்டு.

ஆதி முதல் அந்தம் வரை அனைத்துக்குமே ஆதாரம் இந்த எட்டிரண்டு தத்துவம்தான்.

அண்ட சராசரங்கள் முழுதும் நீக்கமற நிறைந்திருப்பது இது ஒன்றுதான்.

இதன் மகத்துவம் உணர்ந்து தெளிந்தவர்களுக்கே சித்தரகசியம் சித்திக்கும்.

எட்டிரண்டின் பெருமையினை அநேகமாக எல்லா சித்தர்களும் உபதேசித்திருக்கின்றனர்.

"எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லை"
என்கிறார் இடைக்காட்டு சித்தர்.

எட்டுமிரண்டையும் ஒரத்து மறை எல்லாம்
உனக்குள்ளே ஏகமாய் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
வெள்ளத்தில் மூழ்கி மிகு களி கூர்ந்து
என்கிறார் கடுவெளி சித்தர்.

"எட்டும் இரெண்டும் இனிதறிகின்றலர்
எட்டும் இரெண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரெண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே!"

என்கிறார் திருமூலர்.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/9X5Gd_EBYE4?sub_confirmation=1

எல்லாம் சரிதான், அது என்ன எட்டிரண்டு?

ஆங்கில எண்கள் புழக்கத்திற்கு வருவதற்கு முன்னர் பழந் தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களே எண்களை குறிக்க பயன் படுத்தப்பட்டன.

இதில் எட்டு என்ற எண்ணைக் குறிக்க "அ " என்ற எழுத்தும் இரண்டு என்ற எண்ணைக் குறிக்க "உ " என்ற எழுத்தும் பயன் படுத்தப் பட்டது.

இந்த அ, உ என்ற இரண்டு உயிரெழுத்துக்களையே சித்தர்கள் தங்களின் பாடல்களில் மறை பொருளாக எட்டிரண்டு என குறிப்பிட்டனர்.

இத்தனை முக்கியத்துவம் கொடுத்து மறைபொருளாக சித்தர்கள் பாடியது எதனால்?

இயற்கையின் ஓசைகள் அனைத்துமே இந்த அ, உ என்கிற சப்தத்தை கொண்டு தான் இயங்குகின்றன.

இந்த அகார, உகார நாதத்தில் இருந்துதான் அனைத்துமே தோன்றின.

அனைத்து ஒலிகளுக்கும் மூல ஆதாரமே இந்த எட்டிரெண்டுதான்.

வேதம், இசை, மந்திரம், யந்திரம், தந்திரம் என அனைத்திலுமே இவை இரகசியமாக அமைந்துள்ளது.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/9X5Gd_EBYE4?sub_confirmation=1

இந்த அட்சரங்கள் பற்றியும், அதன் இயக்கம், தொழிற்பாட்டு முறைகள் பற்றி ஆத்ம சுத்தியுடன் தெளிவாக உணர்ந்து தெரிந்து கொள்வோருக்கு மட்டுமே ஞானம் சித்திக்கும்.

இதன் மகத்துவத்தின் பொருட்டே சித்தர்கள் இதனை மறைவாய் வைத்தனர்.

இத்தனை மகத்துவமான எட்டிரண்டை பூரணமாய் அறிந்து தெளிந்தோர் பெரியோர்.

அவர் வழி நிற்போருக்கு குறையேதுமில்லை.

உண்மையை உணர்வோம்.! தெளிவடைவோம்.!

ஓம் நமச்சிவாய...

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/9X5Gd_EBYE4?sub_confirmation=1

ஆரோக்யமும் ஆன்மீகமும்

24 Jan, 00:12


அடி முடி காண முடியாதவன் என்றால் என்ன ஐயா ?

ஆரம்பமும், முடிவும் இல்லாத எல்லையற்ற பரம்பொருள் என்பது பொருள்.

இந்த உலகில் எல்லையற்றது எது ? சற்று சிந்திப்போம். உனக்கு சலிப்பே ஏற்படாத ஒரு விஷயம் எது என்று என்னிடம் யாராவது கேட்டால், நான் யோசிக்காமல் சொல்வேன் 'ஆகாயம்'' என்று.

ஆம் !! ஆகாயத்தை, எல்லையே இல்லாத அந்த பிரம்மாண்டத்தை ரசிப்பதில் இனம் புரியாத ஆனந்தம் ஏற்படுவதாக நான் உணர்கிறேன். பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இரவு நேரத்தில் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு, பரந்து விரிந்த அந்த ஆகாயத்தை பார்த்துக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.

மேகமே இல்லாத அமாவாசை இரவில் மல்லாந்து படுத்துக் கொண்டு ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பதில் ஒரு அலாதியான சுகம் எனக்கு. இருண்ட வானம், பூக்களை நாலா பக்கமும் தூவி விட்டது போலச் சிதறிக் கிடக்கும் நட்சத்திங்கள் இடைவிடாமல் கண் சிமிட்டி வா வா என்று அழைத்துக் கொண்டே இருப்பது போலத் தோன்றும்.

இவற்றிற்கிடையே சற்றும் மினு மினுக்காமல் ஒளிரும் கோள்கள். இவற்றை எல்லாம் எத்தனை தடவை பார்த்தாலும் அந்த ஆகாயத்தின் பிரம்மாண்டம், அதனால் ஏற்படும் பிரமிப்பு மட்டும் குறைவதேயில்லை.

நமக்கு மேலேயும் ஆகாயம், நமக்கு கீழேயும் ஆகாயம், திரும்பும் திசைகளெங்கும் ஆகாயம். கோடிக் கணக்கான நட்சத்திரங்களுக்கு அப்பாலும் ஆகாயம்தான். ஆகாயம் ஆகாயம் ஆகாயம்தான். பற்றுவதற்கு எதுவும் இல்லாத ஆகாயம்.

அதற்கு ஆரம்பம் எது ? முடிவு எது ? யாராலும் விடை காண முடியாது. ஆனால், நாம் பார்ப்பது என்னவோ, வானத்தில் பிரபஞ்ச வெளியின் ஒரு சிறு பகுதியை மட்டும்தான். நாம் இருக்கும் பூமியும் மற்ற கோள்களும் சுற்றிக் கொண்டிருக்கும் பால் வெளி மண்டலம் என்பது எல்லையற்ற ஆகாயத்தில் ஒரு சிறு தூசியைப் போன்றது. இது போல இன்னும் எத்தனை எத்தனையோ அற்புதங்கள் காண முடியாத நிலையில், தூரத்தில் பரந்து, விரிந்து கிடக்கின்றன.

அவற்றில் காணப்படுகின்ற பொருட்கள் அனைத்திலும் மூலக் கூறுகள், அணுக்கள், பல்வேறு துகள்கள் யாவும் தனக்குத் தானே சுழல்வதும், கர்ணமடிப்பதும், மோதுவதும், மோதுவது போல நெருங்கி வந்து, பின்பு மோதாமல் விலகிச் செல்வதுமாக விளாயாடிக் கொண்டிருக்கின்றன. இந்த அற்புதமான, அதிசயமான திருவிளையாடல்களைப் பற்றி விஞ்ஞானத்திற்கு இன்னும் ஒரு தெளிவான முடிவு கிடைக்கவில்லை.

நமது சூரியனைப் போலப் பல மடங்குப் பெரிய, நெருப்பைக் கக்குகிற விண்மீகள் இருக்கின்றன என்று இப்பொழுது விஞ்ஞானிகளும் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். இது இத்தோடு முடிந்து விடுவதில்லை. மேலும் மேலும் பல அற்புதமான, அதிசமான தகவல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.

நமது ஆகாய கங்கை எனப்படும் பால்வெளி மண்டலத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவே இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகும். அதற்குப் பிறகும் அது முடிந்து விடுமா என்ன ? முடியாது. அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி போல, புதிது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டே இருப்பார்கள்.

நான் ஏற்கனவே சொன்னது போல, மிகச் சிறிய இந்த பகுதியை ஆராய்ந்த போதே மனிதன் இவ்வளவு அபரிதமான விஞ்ஞான முன்னேற்றத்தை அடைந்து இருக்கிறான் என்றால், இந்த பிரபஞ்சம் தாண்டி, பால்வெளி மண்டலத்தைத் தாண்டிப் போனால் மனிதனின் நிலைமை எப்படி இருக்கும் ?

இதையெல்லாம் மெய்ஞானத்தால் உணர்ந்த நம் முன்னோர்கள், ஆகாயம்தான் அனைத்திற்கும் மூலம். அந்த ஆகாயத்தில் இருந்துதான் அனைத்தும் தோன்றின. எனவே ஆகாயமாகிய வெட்ட வெளியே சிவனாகிய இறைவன். அவரது தலை உச்சியாகிய ஆரம்பத்தையும், காலடியாகிய முடிவையும் யாராலும் காண முடியாது என்று சொன்னார்கள்.

ஓம் பரப்பிரம்ம பஞ்சபூத பிரபஞ்ச சக்தி தாயே போற்றி..

தென்னாடுடைய சிவனே போற்றி..
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!!!
போற்றி ஓம் நமச்சிவாய..

ஆரோக்யமும் ஆன்மீகமும்

23 Jan, 00:20


"தன்னையறிந்தவன் எல்லா வினைகளையும் கடக்கிறான்"

நான் இந்த உடல், நான் மனிதன், நான் சத்ரியன், நான் சூத்திரன் என்று அறியாமையால் எண்ணுவது ஜீவன்.

நான் இந்த உடலல்ல, நான் சத்ரியனுமல்ல, சூத்திரனுமல்ல, நான் மனிதனே அல்ல என்ற எண்ணத்தில் தீர்மானமாக பற்றறுந்த நிலையில் நான் பிரம்மம், நான் வேறு பிரம்மம் வேறல்ல என்ற நிலையில் இருப்பவன் ஜீவன் முக்தன்.

இனி, ஆதியில்லாதது அவித்தை என்பார்கள்.

அதாவது அவித்தையின் காரணமாக ஜீவன் பிறப்பதால் அவனுக்கு ஆதியில்லை என்பார்கள்.

அவித்தையின் நிமித்தம், பல பிறவிகளையும், பல சரீரங்களையும் எடுத்து இரு வினைகளையும் புரிந்து கொண்டேயிருக்கிறான்.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணமும், ஒரு பயனும் உண்டு.

காரணம் என்பது நோக்கம். பயன் காலப் போக்கில் எற்படக் கூடியது. அது எந்த நோக்கத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறதோ, அதற்கேற்ற வண்ணம் நுண்மையான வடிவில் எதிர்ச் செயலாகிய ஊழ்வினை அமைகிறது. இதையே கர்மம் என்கிறோம்.

பிராப்த கர்மத்தின் விளைவாக பிறப்பெடுத்த ஜீவன் பயனை அனுபவத்துக் கொண்டே தன் உடலாலும், மனதாலும்(நான் செய்கிறேன்) செய்யும் இரு வினைகளும் ஆகாமிய கர்மம் எனப்படும்.

இப்பிறவி முடியும் நிலையில் ஆகாமிய கர்மங்கள் சஞ்சித கர்மங்களாக மாறி விடும். இவை எதிர் காலத்தில் பயன் தரக்கூடியவை.

கடந்த பல பிறவிகளிலும் செய்யப்பட்ட கோடிக்கணக்கான வினைகளும் விதை வடிவாய் இருந்து கொண்டு கோடிக்கணக்கான பிறவிகளைத் தோற்றுவிப்பதாய் இருக்கக் கூடிய கர்மங்களுக்கு சஞ்சித கர்மம் என்று பெயர்.

எடுத்துக் கொண்ட பிறவியில் சஞ்சிதத்திலிருந்து அனுபவிக்க கொண்டு வரும் கர்மங்களே பிராப்தம். இதை அனுபவித்தே ஆக வேண்டும். அந்த அனுபவங்கள் இரு வினைகளின் பலனாகவே இருக்கும்.

ஜீவன் முக்தர்களின் நான் ப்ரம்மம் என்கிற ஞானத்தால் சஞ்சித கர்மம் நசிந்து விடுகின்றது.

ஆகாமிய கர்மமும் ஞானாக்னியால் பொசுங்கிப் போய் விடுகின்றது. இனி மீதமுள்ள பிராப்த கர்மத்தை அனுபவிக்கும் வரை அவர் வாழ்ந்து வருவார்.

இப்போது ஒரு கேள்வியை முன் வைத்து லாஜிக் இல்லையே என்கிறார்கள்.

அப்படியானால் ஜீவன் முக்தர் தான் செய்யும் தற்போதைய கர்மங்கள்(ஆகாமிய) என்னாகும் ?

இதைத்தான் சொன்னேன் ஞானாக்கினியால் ஆகாமியம் பொசுங்கி விடும் என்று. ஏனென்றால் நான் கர்த்தா என்கிற எண்ணம் இல்லாமல் போய்விடுவதால் அவர் தாமரை இலைத் தண்ணீராகவே வாழ்ந்து வருவார். எனவே ஆத்ம ஞானம் பெற்ற ஜீவன் முக்தர்களை ஆகாமிய கர்மம் அடைவதில்லை.

அப்படியானால் அவர் புரியும் கர்மா என்னவாகும் ?

அவரை உணர்ந்து, அவர் மனதோடு தங்கள் மனதை ஒன்றச் செய்து போற்றி வழிபடுபவர்களுக்கு ஞானியால் செய்யப்பட்ட நல் வினைகள் போய்ச் சேரும்.

அவரை அறியாமலேயே அவர் செய்யும் பாவப் பலன்கள் அவரைத் தூற்றி, இகழ்ந்து, துன்புறுத்துபவர்களைப் போய்ச் சேரும்.

எனவேதான் சிவனடியார்களையும், ஞானிகளையும் இகழ்ந்து பேசக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.

தன்னையறிந்தவன் எல்லா வினைகளையும் கடக்கிறான் என்பது வேத வாக்கு. அந்த அடிப்படையில் ப்ரம்மஞானம் பெற்ற அளவில் ஜீவன் முக்தர்கள் கர்ம பந்தங்களில் இருந்து விடுதலை அடைந்திடுவார்கள்.

வினைக்கட்டே பிறப்பிறப்புக்குக் காரணமாக அமைகிறது. இந்த சரீரத்தின் ப்ராப்தமல்லாது மற்ற எல்லா கர்மங்களிலிருந்தும் ஜீவன் முக்தர் விடுபட்டு விடுகிறார்.

அவருக்கு இனி கர்ம்ப் பிணிப்பு இல்லை. தூங்கி எழுந்தவனை எப்படி கனவின் வினைகள் பாதிப்பதில்லையோ, அது போல விழிப்பு நிலையிலிருந்து விழிப்படைந்து துரியத்தை அடைந்து விட்ட ஜீவன் முக்தர்கள் வினைகளைக் கடந்து வினைகளில் இருந்து விடுதலை அடைந்து விடுகிறார்கள்.

அவித்தையை ஞானம் அழித்து விடுகிறது.

ஞானாக்கினியால் வெந்து போன விதை இனி முளைக்காது.

*அர்த்தமுள்ள இந்து தர்மம்*

*ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!*

ஆரோக்யமும் ஆன்மீகமும்

22 Jan, 05:49


பிரம்ம ஞானத்தை தேடு .....!

கங்கைக்கரை பகுதி.....


மெல்லிய தேவலோக இசை போன்ற பாடல் காற்றில் கசிந்து வந்தது....

ஒளிரும் தேகமும் ஞானம் ததும்பும் முகமுடன் பிரம்ம ஞானி அமர்ந்திருந்தார்.

அவரின் ஆசனத்தை சுற்றி சிஷ்யர்களும் பொதுமக்களும் ஆனந்தமயமான நிலையில் இருந்தனர்...

இறைநாமத்தை சங்கீதமாக ஒரு குழு இசைத்துக் கொண்டிருந்தது..

இவை அனைத்தையும் மெளன சாட்சியாக ரசித்துக்கொண்டிருந்தாள் கங்கை..

தேவலோகத்திலிருக்கும் அனைவரும் தங்கள் இடத்தை விட்டு அங்கு வந்துவிடலாம் என எண்ணும் அளவிற்கு தெய்வீக சூழ்நிலையை அங்கு காண முடிந்தது..

தன்முன்னே ஓர் உருவம் நிழலாடுவதை கண்ட ஞானகுரு கண்களை திறந்தார்..

எதிரில் பட்டுவேஷ்டி அணிந்து உடல் முழுவதும் சந்தனம் பூசிய நிலையில் ஒருவர் வணங்கி நின்றார்.

கைகளில் தங்கத்தால் ஆன தட்டும் அதில் வைரம் வைடூரியம் என விலைமதிக்க முடியாத பொருட்கள் நிறைந்து வழிந்தது..

பணக்கார தோரணை கொண்ட அந்த மனிதர் ஞானகுருவை பார்த்து..”

உலக மக்களை உயர்நிலைக்கு அழைத்து செல்லும் குருவே...

உங்களிடம் எத்தனையோ முறை பிரம்ம ஞானத்தை உபதேசிக்க கேட்டேன் ஆனால் நீங்கள் மனம் இளகவில்லை.

என்னிடம் இருக்கும் விலைமதிக்க முடியாத செல்வத்தை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன்.

எனக்கு பிரம்ம ஞானத்தை உபதேசியுங்கள்...” என கேட்டார்..

ஞான குரு மெல்ல எழுந்து தனது காவி துணியில் அனைத்து செல்வங்களையும் போட சொன்னார்.

அவரின் காவித்துணியில் அனைத்தும் போடப்பட்டதும் அதை மூட்டையாக கட்டி, தலைக்கு மேல் உயர்த்தி யாரும் எதிர்பாராத வண்ணம் கங்கையில் எறிந்தார்...!

இதை சற்றும் எதிர்பார்க்காத பணக்காரர் கங்கை நீரில் பாய்ந்து அந்த மூட்டையை பிடிக்க நீந்தினார்.

கங்கையின் வேகத்திற்கு மூட்டையும் அவரும் அடித்துச்செல்லப்பட்டார்கள்.

அதுவரை கண்களை மூடி அமர்ந்த்திருந்த சிஷ்யர்கள் நீரில் செல்வந்தர் குதித்த சப்தம் கேட்டு கண்களை திறந்து பார்த்தனர்..

குழப்பம் கொண்ட சிஷ்யர்கள் குருவிடம் கேட்டார்கள்...

குருதேவா என்ன நடக்கிறது?

அவர் கங்கையில் குதித்து என்ன தேடிக்கொண்டிருக்கிறார்..?

தனது ஆசனத்தில் அமந்த ஞான குரு புன்புறுவலுடன் சிஷ்யர்களை பார்த்து கூறினார்...

”அவர் பிரம்ம ஞானத்தை தேடுகிறார்”

*ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்....*

நம்மில் பலர் ஆன்மீக உயர்வு நிலையை பணத்தை வழங்குவதன் மூலம் பெறலாம் என எண்ணுகிறார்கள்...

செல்வந்தருக்கு விலைமதிக்க முடியாத செல்வம் பிரம்ம ஞானத்திற்கு ஈடாக தெரிந்ததால் குருவும் அது பணக்காரனின் பிரம்ம ஞானம் என குறிப்பிடுகிறார்...

கடவுளை பார்க்க கோவிலில் “சிறப்பு” நுழைவாயில் வழியாக செல்லுவதிலிந்து ஆரம்பிக்கிறது நமது ஆணவ செருக்கு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது..

"என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான்உ ணர்ந்து கொண்டெனே."

*ஓம் நமச்சிவாய...*

"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

ஆரோக்யமும் ஆன்மீகமும்

21 Jan, 00:35


"நீங்கள் இப்பிரபஞ்சமாக இருக்கும் போது யாருக்காக உழைக்கிறாய்?..."

உன் தேவைதான் என்ன?

இப்பிறப்பின் நோக்கத்தை மறந்து புறத்தே திரிகிறாய்.

புறத்தேடல் அஞ்ஞானியாக்கும்.

அகத்தேடல்தான் உனக்கான இறுதி கேள்வி வரைக்கும் பதில் தரும்.

ஒரு முறை உன் தளத்தை மாற்றி, இன்னொரு தளமான அகத்திற்குள் திருப்பு.

நீ யார் என்று கேள்வி எழுப்பு, அந்த கேள்விக்குள் ஆழ்ந்து போ, உனக்கான பதிலின் திறவுகோல் கிடைத்தே தீரும்.

பகவான் ஓஷோ தன்னை யார் என உணர 2லட்சம் புத்தகங்கள் தேவைப்பட்டன.

பட்டினத் தாருக்கு தன்னை யாரென்று உணர்வதற்கு ஒரு கீற்று ஓலைச்சுவடி தேவைப்பட்டது.

இரமணர் தன்னை உணர ரீபு கீதை என்ற ஒரு புத்தகம் தேவைப்பட்டது.

"உனக்கானத் தேடலை விதை நாளை உனக்குள் பயணம் செய்ய ஏதாவது ஒன்று அகப்படலாம்"

அர்த்தமுள்ள இந்து தர்மம்

ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

20 Jan, 00:18


நீ இங்கு எதுவும் செய்யவில்லை..!

அனைத்தும் சுய அறிவில் (Consciousness) தானாக நிகழ்கிறது.

நீ பார்க்க மட்டுமே செய்கிறாய்!...

ஆம். நீ இங்கு எதுவும் செய்யவில்லை!

அதாவது, மூச்சு விடுவது, இதய துடிப்பு, இரத்த ஓட்டம், உடலில் நடைபெறுகின்ற வளர்சிதை மாற்றங்கள்.... போன்ற அனைத்து வடிவத்தினுள் நிகழும் அனைத்து செயல்களும், அந்த ஒரே சுய அறிவிவில் (Consciousness) தானாக நிகழ்கின்றது.

நீ ஏதாவது இரத்தத்தையோ, அல்லது எலும்பையோ உண்டாக்க முயற்சி செய்கிறாயா?

அவ்வாறே, சூரிய உதயம், அஸ்தமனம், மழை, மற்றும் ஒட்டு மொத்த உலகத் தோற்றங்களும், அதன் செயல்பாடுகளும் தானாகவே சுய அறிவில் (Consciousness) நிகழ்கிறது.

நீ ஏதாவது முயற்சி செய்கிறாயா?

உன் இருப்பு (Existence) என்பது, (I am ness) “நான்” எனும் சுய அறிவில் தான் அறியப்படுகிறது.

உன்னுடைய இருப்பினால்தான் சுய அறிவு தானாகவே தோன்றுகிறது. அத்தகைய விழித்த நிலை முழுவதும், சுய அறிவே ஆகும்.

அதுவே, அனைத்து வடிவங்களிலும் செயல் ஆற்றி, அனைத்தையும் நிஜம் என நம்ப வைக்கின்றது.

அதுவே உனக்கு உறக்கம் வந்ததும் சுய அறிவு தற்காலிகமாக மறைகிறது.

நீ ஏதாவது முயற்சி செய்கிறாயா?

ஆகவே, சுய அறிவே (Consciousness) அனைத்து வடிவங்களிலும் செயல் படுகிறது.

பொதுவாக அனைத்து வடிவங்களும், அதன் இயக்கமும் சுய அறிவினாலே மட்டுமே அறியப்படுகிறது.

ஆக, அந்த அறிவின்றி வடிவமேது.

அனைத்தும் சுய அறிவென்றால், அனைத்தையும் பார்ப்பது எது?

நீயே அது!
(YOU ARE THAT)

இப்பொழுது ஒப்புக் கொள்கிறாயா!
அனைத்தும் * சுய அறிவில், அறிவால்! மட்டுமே இருக்கிறது.

உண்மையில் நீ பார்க்க மட்டுமே செய்கிறாய்!.

குறிப்பு:-
^^^^^^^^^
இங்கு கூற வருவது... சுய அறிவு! (Consciousness).

ஏற்றி வைத்துக் கொண்ட பொருள் சார்ந்த அறிவு (Konowledge) அல்ல!

(Consciousness = சுய அறிவு, தன்னுணர்வு, விழிப்புணர்வு, அறிவு, சுய இருப்பு, இருப்பு அல்லது இறைவன்).

நன்றி! 🙏

ஆனந்தமான வாழ்வுக்கு ஆழ்மனதின் அற்புத சக்தி பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் புரியவைத்து அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

19 Jan, 01:19


எதை அறிந்துக் கொண்டால், எல்லாம் அறிந்ததாகுமோ, அதை அறிந்துக் கொள்வதே அறிவு”

அவன் எதை தேடுகின்றானோ, அதற்கேற்ற குருவும் அவ்வாறே அவனுக்கு அமையும்..!

குருவும், சிஷ்யனும்.!ஆசிரியரும், மாணவனும்.!


https://youtu.be/bugr9rOLuhg?sub_confirmation=1

ஆரோக்யமும் ஆன்மீகமும்

18 Jan, 00:05


உள்ளுணர்வு..!

நாம் ஒவ்வொருவரும் ‘நான் இன்னார்' என்று நம்பிக் கொண்டிருப்பது, நினைவுகளும், புத்தியும், கற்பனையும் சேர்ந்து மனத்தளத்தில் உருவாகியிருக்கும் ஒரு பிம்பம்.

தனிமனங்களைக் கடந்த அந்த பேருணர்வு பிரக்ஞையின் சுயப்பிரகாச ஒளி அந்தப் பிம்பத்தின் மீது பட்டுப் பிரதிபலிக்கும்போது, அந்தப் பிரதிபலிப்பின் வழியாக உடலும், மனமும் சுயப்பிரக்ஞை கொண்டு இயங்குகின்றன.

உண்மையின் இயல்பான அந்த உள்ளுணர்வு யாருக்கும் சொந்தமானதல்ல.

அது எல்லையும், வடிவமுமற்ற ஒரு உணர்வுவெளி. அது, அகண்டாகாரமானது.

பிரபஞ்ச ரீதியானது. உடலைக் கொண்டு வாழும் ஒவ்வொரு ஜீவனின் பிரக்ஞையிலும் அது பிரதிபலிக்கிறது. இதை நமது சனாதன தர்மம் “பிரக்ஞானம் ப்ரஹ்ம” என்று எடுத்துரைக்கிறது.

இதையறியாத ஒவ்வொரு ஜீவனும் தன் அறியாமையினால், அந்தப் பிரதிபலிப்பைத் தனியான ஒரு ‘நான்' என்று நினைத்துக் கொள்கிறது. ஒரு ஜீவனின் மரணத்தின்போது ‘மனம்’ என்னும் அறிவு மண்டலம் செயலற்றுப் போய்விடுகிறது.

அதனால் அதில் பிரபஞ்ச ரீதியான ‘நான்' பிரதிபலிப்பதில்லை.

அந்த உடலிலும், மனதிலும் இயங்கிய சுய உணர்வு என்ற ‘உள்ளுணர்வு’ மறுபடியும், இந்த பிரபஞ்ச பேருணர்வு மண்டலத்தில் போய்க் கலந்துவிடுகிறது.

இந்தக் காரணத்தால் நம் அனைவரின் பின்னாலும் இருந்து இயங்கும் ‘நான்', ஒரே ‘நான்'தான். பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே ஒரு ‘நான்'தான் இருந்துக் கொண்டுள்ளது. அதுவே இறைவன். அதுவே ப்ரஹ்மம்.

தன்னுணர்வை தனித்தறிய முடியாத நிலையில், ஜடப்பொருளாக உள்ள பாறையின் நிலையிலிருந்து மனிதன் வெகுதூரம் முன்னேறி வந்து விட்டான்.

ஆனால், அவனாலும் தன்னுள்ளே உள்ள அந்த முழுப்பிரக்ஞையை முழுமையாக உணர்ந்துக்கொள்ள முடிய வில்லை.

அதற்குக்காரணம், அவன் புறத்திலிருந்து ஏற்றி வைத்துக் கொண்ட ஏராளமான எண்ணங்களை “அறிவு” என்று கருக்கொண்டு, அந்த எண்ணங்களின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளான்.

அதாவது, முழுப்பிரக்ஞை இல்லாத நிலையில், நம்மை நாம் அறிய முடியாதவாறு, நம்முடைய ஆறாம் அறிவுக்கு கீழே உள்ள பல பரிமாண தளங்கள் நமக்குள்ளே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பது, நமக்குப் புரிந்துக் கொள்ள முடியாதவாறு அறியாமைகள் சூழப்பட்ட சூழலில் மனம் சிக்கிக் கொண்டுள்ளதால், உள்ளுணர்வை முழுமையாக உணர முடிவதில்லை.

அதேசமயம், பெரும்பாலான மனிதர்கள் ஏற்றி வைத்துக்கொண்ட எண்ணங்களினால் உண்டான தெரிந்ததை வைத்துக்கொண்டு, அதிலே தெரியாத விஷயங்களையும் தெரிந்தது போல் பாவனை செய்துக்கொண்டு, தவறான கருத்துகளின் மூலம், பல தவறான முடிவுகளை எடுப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

அதற்குக்காரணம், அவர்கள் ஏற்றி வைத்துக்கொண்ட அஹங்காரத்தின் வெளிப்பாடாக, நம் தன்மானம் என்ன ஆவது? என்று பயப்படுகிறார்கள்.

அதனால், அவர்கள் வாழ்க்கை மிகவும் சிக்கல் வாய்ந்ததாக மாறி விடுகிறது.

அதாவது, எனக்கு எதுவுமே ஒழுங்காகத் தெரியாது! என்பதையே, பலரும் தெரிந்து வைத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.

ஒவ்வொரு மனிதர்களின் ஞாபகங்கள் என்று, ஏற்றி வைக்கப்பட்ட ஏராளமான எண்ணப்பதிவுகள், அவர்களது ஆழ்மனதில் அப்படியே இருக்கின்றன.

அந்த சேகரிக்கப்பட்ட எண்ணங்களெல்லாம் கோப, தாபங்களாகவும், வன்முறைகளாகவும், விருப்பு, வெறுப்புகளாகவும், போட்டி, பொறாமைகளாகவும், சுயநலம், சுயப்பச்சாதாபங்களாகவும், சண்டை, சச்சரவுகளாகவும் ஆகி, ஏராளமான எதிர்மறை உணர்ச்சிகள் நிறைந்த நிலையில் இன்றைய மனிதர்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள்.

அவர்களது ஆழ்மனதில் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது? என்பதைப் பற்றிய தெளிவு எவருக்கும் இல்லை.

அவர்கள் விழித்துக் கொண்டிருக்கும்போது மட்டுமல்லாமல், தூக்கத்திலும் இந்த தீய எண்ண சக்திகள், கனவுகளாக அவர்களை அலைக்கழித்துத் துன்புறுத்துகின்றன.

இதுவரையில், இந்த மனித இனம் சந்தித்த பல்வேறு சரித்திரம் சார்ந்த சங்கடங்கள் எல்லாவற்றிலும், மனிதன் தனக்கு அனுபவம் கொண்ட உணர்ச்சிகளாக பயம், வன்முறை, அதிர்ச்சிகள், சிக்கல்கள் போன்றவைகளை பிரக்ஞையின் அடித்தளத்தில், ஆழ்மனதில் இன்னும் தொடர்ந்து அழுத்தி வைத்துக் கொண்டிருக்கிறான்.

அவனது, அந்த ஆழ்மன இருளிலுள்ள உயிர் மட்டும் உள்ளே துடித்துக் கொண்டிருக்கிறது. அந்த உயிருணர்வின் உதவியால், மனமாக வெளிப்படும் வெவ்வேறான எதிர்மறை உணர்ச்சிகள் அவனது உறவுகளைச் சீர்குலைக்கின்றன.

என்ன செய்வது? என்று அவனுக்குத் தெரிவதில்லை. அந்தச் சக்திகளோடு போர் புரிந்து, அவன் நிச்சயமாக வெற்றி பெற முடியாது. அவனைவிட அவைகள் அதிகம் சக்தி வாய்ந்தவைகள்.

அவன் இந்த அடிமன இருளை வென்று கடந்து, உள்ளுணர்வை உணர்ந்து, உள்ளொளி பெற்று, தெளிவுடன் வாழ வேண்டுமானால், அதற்கான சில அடிப்படை விஷயங்களை மனிதனாகப் பிறந்த அனைவரும், அவசியம் அறிந்துக் கொண்டாக வேண்டும்.

நன்றி! குருவே சரணம்..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

17 Jan, 01:15


உடலும் உயிரும்..!

உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால் அந்த உடலுக்கு யாதொரு மதிப்பும் கிடையாது.

ஒன்று உடலைச் சுட்டெரித்து விடுகிறோம் அல்லது புதைகுழிக்குப் போகிறது.

ஆக உயிர் தங்கி இருக்கும் வரையில்தான் இந்த உடலுக்கு அவசியமும், தேவையும், மரியாதையும் இருக்கிறது.

இப்படிப் பட்ட இந்த உடலும், உயிரும் எப்போது எப்படித் தோன்றுகின்றன?

எது முதலில் உருவாகிறது?, உடலா?, உயிரா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அகத்தியர் தனது

"அகத்தியர் ஆயுள் வேதம்” என்ற தனது நூலில் பதில் வைத்திருக்கிறார்.

"சென்மமனிதர் தாமுஞ் சென்மிக்கும்வாறு கேளாய்
இன்னமுஞ் சுக்கிலத்தில் பிராணவாய்வதுவுஞ் சென்று
தின்னமாய் பிராணவாயுவு சென்றது கோபமுற்றி
யுன்னுமாமி ரத்தஞ்சூழ்ந்து வுதாரணவாய் வளர்க்கம்
சூழ்ந்து சுக்கிலதில் சுரோணிதங் கலக்குமென்று
பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திடும் குமிழிபோல
ஏந்தியே திரளுமேழிலீரேழு தன்னிலூர்க்கு மாய்ந்த
நாளிருபத்தைந்தி லருங்முளை போற்றோன்றும்"

- அகத்தியர்.

ஆணின் சுக்கிலத்தில் பிராணவாயு சென்றடைந்து கிளர்ச்சியுற்று உயிரணுக்கள் வளர்ச்சி அடையும்.

இந்த சமயத்தில் ஏற்படும் உறவினால், பெண்ணின் சுரோணியத்துடன் ஆணின் சுக்கிலம் கலந்து வாத, பித்த, கபம் என்று சொல்லப்படும் மூன்று விகற்பங்களும் அதனுடன் சேர்ந்து சிறு குமிழி போலாகி கருப்பையின் உட்சென்று தங்கி வளரத் துவங்கி, இருபத்தி ஐந்து நாளில் முளை போல தோன்றும் என்கிறார்.

இது உயிரற்ற ஒரு நிலை.

"முந்திய திங்கள்தன்னில் கருமுளைத்தது கட்டியாகும்
பிந்திய திங்கள் தன்னிற் பிடரிதோள் முதுகுமன்றி
யுதிக்கும் மூன்றாந்திங்க ளுடல்விலா யரையுங்கால்கள்
ளுந்திக்கு யுயிரும்வந்தே யிணைந்திடுமென்றே."

- அகத்தியர்.

முதல் மாதத்தின் முடிவில் உருவான இந்த முளை பின்னர் வளர்ந்து ஒரு கட்டிபோல உருவாகுமாம்.

இரண்டாவது மாதத்தில் பிடறி, தோள், முதுகு ஆகிய பாகங்கள் உருவாகுமாம்.

மூன்றாவது மாதத்தில் உடல், விலா, இடுப்பு போன்றவைகள் உருவாகும்.

அந்த கட்டதில் தான் கருவிற்கு உயிரும் வந்து இணையும் என்கிறார்.

ஆக,கருவானது மூன்றுமாத வளர்ச்சியின் பின்னரே உடலில் உயிர் வந்து சேருகிறது.

அதன் பிறகே மற்ற அவயங்கள் வளரத்துவங்குகிறது.

இந்த தகவல்கள் எல்லாம் அறிவியல் வளராத பலநூறு வருடங்களுக்கு முன்னரே நமது முன்னோர்களால் தீர ஆராய்ந்து சொல்லப் பட்டிருக்கின்றன என்பதில்தான் இந்த தகவலின் மகத்துவமே அடங்கி இருக்கிறது.

உடற்கூறியியலில் சித்தர் பெருமக்களின் ஆழ்ந்த அறிவு இன்றைய நவீன அறிவியலின் தெளிவுகளுக்கு கொஞ்சம் குறைந்ததில்லை என்பது நாம் பெருமிதத்துடன் நினைவு கூற வேண்டிய ஒன்று.

"குரு திருவடிகள் சரணம்"

நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”

ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

15 Jan, 02:48


இனிய ஆரோக்கிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!

பழையன கழிதலும்
புதியன புகுதலும் நலமே...


வாழையடி வாழையாய் நம்மை காத்த
இயற்கையை வணங்குவோம்... விவசாயம் காப்போம்...!

தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில்....

மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது....!

தை பிறந்தால் வழி பிறக்கும்
தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
நினைவுகள் நிஜமாகும்
கதிரவன் விழிகள்
விடியலை கொடுக்கும்
அவலங்கள் அகலும்..

"இயற்கையை வணங்கி விவசாயம் காப்போம்"

என்ற நம்பிக்கையில்...

என் இதயம் கனிந்த உழவர் திருநாள் வாழ்த்துகள்…!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

13 Jan, 21:46


திருப்பள்ளியெழுச்சி மார்கழி 30

"புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித்
திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்!
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே!

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/PFQA3cpYIfY

பொருள்:

திருப்பெருந்துறையில் வசிக்கும் சிவனே! பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ள படுகிறார்கள். ஆனால், நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது உந்தித்தாமரையில் பிறந்த மலரவனான பிரம்மாவும் வருந்துகின்றனர். எனவே நீ, உண்மையான கருணையுடன் இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனாய் இருக்கிறாய். எவருக்கும் கிடைக்காத அமுதமே! நீ பள்ளி எழுந்தருள்வாயாக!

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/PFQA3cpYIfY

Thirupalliyehuchi tamil lyrics... திருப்பள்ளியெழுச்சி..!

https://youtu.be/56tb_7nzrMk?sub_confirmation=1

ஓம் நமச்சிவாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

13 Jan, 21:45


திருப்பாவை மார்கழி 30

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை-
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே சொன்ன
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/1BypSZqIAbo

பொருள்:

அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/1BypSZqIAbo

திருப்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் பாசுரம் 1 to 30, Thiruppavai songs in Tamil,  Thiruppavai Padalgal..!

https://youtu.be/NNjUtLHs4ywsub_confirmation=1

ஓம் நமோ நாராயணாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

13 Jan, 00:09


திருப்பள்ளியெழுச்சி மார்கழி 29

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே!
வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே!
கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்
எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய்!
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே!

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/PQHyeqEEKk0

பொருள்:

விண்ணுலகிலுள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத சிறந்த பொருளான சிவபெருமானே! உன்னை வணங்கும அடியவர்களுக்காக நீ இந்த மண்ணுலகிற்கு வந்து அருள்செய்து வாழ வைத்தாய்.

வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிப்பவனே! பரம்பரை பரம்பரையாக உனக்கு பணிவிடை செய்யும் அடியவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியும் இனிய தேனே! பாற்கடலில் கிடைத்த அமுதமே! கரும்பே! உன்னை அணுகும் அடியவர்களின் எண்ணங்களில் நீக்கமற நிறைந்திருப்பவனே! நீயே இந்த உலகின் உயிர். எம்பெருமானே! நீ கண் விழித்தால் இந்த உலகம் வாழும்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/PQHyeqEEKk0

Thirupalliyehuchi tamil lyrics... திருப்பள்ளியெழுச்சி..!

https://youtu.be/56tb_7nzrMk?sub_confirmation=1

ஓம் நமச்சிவாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

13 Jan, 00:07


திருப்பாவை மார்கழி 29

சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/AsgMkhBhaYY

பொருள்:

கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம்.

அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழுபிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும்.

எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களைஎல்லாம் நீயே அழித்து விடு.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/AsgMkhBhaYY

திருப்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் பாசுரம் 1 to 30, Thiruppavai songs in Tamil, Thiruppavai Padalgal..!

https://youtu.be/NNjUtLHs4ywsub_confirmation=1

ஓம் நமோ நாராயணாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

12 Jan, 00:41


திருப்பள்ளியெழுச்சி மார்கழி 28

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார்!
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே!

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/-ct1eRcNpmg

பொருள்:

என்னை ஆட் கொண்ட ஆரமுதான சிவனே! மெல்லிய விரல்களையுடைய பார்வதியுடன் அடியவர்களின் பழைய வீடுகளுக்கு வந்தருளும் பரமேஸ்வரனே! நீயே உலகத்தைப் படைத்தமுதல்வன்,எல்லாருக்கும் நடுநாயகமானவன். அழிக்கும் தெய்வமும் நீயே! பிரம்மா, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் என்னும் போது மற்றவர்களால் உன்னை எப்படி அறிய முடியும்? உன்னை அறிய முற்பட்ட போது நீ நெருப்பாக நின்றாய். திருப்பெருந்துறை கோயிலை என் கண்ணில் காட்டினாய். அந்தணரின் வேடத்தில் வந்து என்னை ஆட்கொண்டாய். இத்தகைய சிறப்புகளை உடையவனே! நீ துயில் எழுவாயாக.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/-ct1eRcNpmg

விளக்கம்:

இறைவன் எளிமையானவன். அவன் பங்களாவாசிகளுக்கு மட்டுமல்ல, ஓலை குடிசைகளை உடமையாகக் கொண்டவர்கள் வீட்டுக்கும் பவனியாக வருவான். அவனை வணங்க எதுவுமே வேண்டாம். நல்ல உள்ளம் இருந்தால் மட்டும் போதும் என்பது இப்பாடலின் உட்கருத்து.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/-ct1eRcNpmg

Thirupalliyehuchi tamil lyrics... திருப்பள்ளியெழுச்சி..!

https://youtu.be/56tb_7nzrMk?sub_confirmation=1

ஓம் நமச்சிவாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

12 Jan, 00:38


திருப்பாவை மார்கழி 28

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/pxru80HwjfA

பொருள்:

குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள்.

எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது.

விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/pxru80HwjfA

விளக்கம்:

குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட் டது போலவும் தோற்ற மளிக்கிறது.

அவனுக்கு என்ன குறை? ராமாவதாரத்தில், ராமபட்டாபிஷேகம் நடந்த போது, இந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ் ஞர், கவுதமர், விஜயர் என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட் டார். ராமனுக்கு இது ஒரு குறை. இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்துஜெயித்தோம்.

அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே! அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே! அவனோடு நம்மை ஒப்பிடலாமா? என்ற குறை இருந்ததாம். கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் சீற்றமடைந்து மழை பெய்யச் செய்தான்.

கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்த கண்ணனின் காலில் அந்த இந்திரன் விழுந்தான். ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால், ஆயர்குலப் பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/pxru80HwjfA

திருப்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் பாசுரம் 1 to 30, Thiruppavai songs in Tamil, Thiruppavai Padalgal..!

https://youtu.be/NNjUtLHs4ywsub_confirmation=1

ஓம் நமோ நாராயணாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

11 Jan, 00:00


திருப்பள்ளியெழுச்சி மார்கழி 27

"அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
அரிதென, எளிதென", அமரும் அறியார்,
"இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே;
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திருஉத்தர கோச
மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;
எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே!

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/GtX3OucCsUo

பொருள்:

தேன்சிந்தும் மலர்களையுடைய சோலைகளைக் கொண்ட உத்தரகோசமங்கை தலத்தில் எழுந்தருளிய சிவனே! திருப்பெருந்துறையில் வசிக்கும் தலைவனே! உன் பெயர் சொன்னால் அது பழம் போல் இனிக்கிறது.

பால் போல் சுவையாக இருக்கிறது. உன்னைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது சிரமமானது. உன்னை எளிதாகப் பிடித்து விடலாம் எனச் சொல்கிறார்களே தவிர, தேவர்களால் கூட அதைச் செய்ய முடியாது. உன்னுடைய வடிவம் என்ன? இவன் தான் அவனோ? என்று அனுமானிக்கத் திணறும் தேவர்களுக்கே காட்சி தராத நீ, இதோ, என் நிஜ வடிவம் இதுவே எனச் சொல்லி, இதோ! எங்கள் முன்னால் இருக்கிறாய். எங்களை நீ என்ன செய்ய நினைக்கிறாயோ, அதைச் செய் என்றே உன்னிடம் கேட்போம். எம்பெருமானே! நீ எழுந்தருள்வாயாக.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/GtX3OucCsUo

விளக்கம்:

மிக அருமையான கருத்துடைய பாடல் இது. எது எமைப்பணி கொள்ளும் ஆறு அது கேட்போம் என்ற வரி மிகுந்த சிறப்பைக் கொண்டது. கடவுளிடம் அதைக் கொடு,. இதைக் கொடு என்று கேட்பதை விட, எது சரியென்று படுகிறதோ, அதைச் செய் என்று கேட்பது மேலான கோரிக்கையல்லவா? அவனுக்கு தெரியுமே! நமக்கு என்ன தர வேண்டுமென்று! அதனால் நம்மை அவனிடம் ஒப்படைப்போம். அவன் தருவதை ஏற்றுக்கொள்வோம் என்பதே இப்பாடல் உணர்த்தும் கருத்து.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/GtX3OucCsUo

Thirupalliyehuchi tamil lyrics... திருப்பள்ளியெழுச்சி..!

https://youtu.be/56tb_7nzrMk?sub_confirmation=1

ஓம் நமச்சிவாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

10 Jan, 23:55


திருப்பாவை மார்கழி 27

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் (27)

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/NfklLYAwuXQ

பொருள்:

எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது.

கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/NfklLYAwuXQ

விளக்கம்:

கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது. இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும்.

சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது. விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள்.

பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். கண்ணா! உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு, என வேண்டுகிறார்கள்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/NfklLYAwuXQ

திருப்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் பாசுரம் 1 to 30, Thiruppavai songs in Tamil, Thiruppavai Padalgal..!

https://youtu.be/NNjUtLHs4ywsub_confirmation=1

ஓம் நமோ நாராயணாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

09 Jan, 23:48


திருப்பள்ளியெழுச்சி மார்கழி 26

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா!
செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே! (6)

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/CzncZYZjxLI

பொருள்:

பார்வதிதவியின் துணைவனே! செந்தாமரை மலர்கள் மலர்ந்த குளிர்ந்த வயல் கள் சூழ்ந்த திருப்பெருந் துறையில் வசிக்கும் சிவபெருமானே!

எம்பெருமானே! உன் அருள் என்னும் பெருந்தகைமையை உள்ளத்தில் உணரும் அடியவர்கள், குடும்பம், பந்தபாசங்களை உதறிவிட்டு உன்னைத் தரிசிக்க வந்துள்ளனர்.

கண்ணில் மை தீட்டிய பெண்மணிகளும் மனித இயல்புக்கு ஏற்ப வணங்க உன்னை வணங்க வந்துள்ளனர். எங்களுடைய பிறப்பை நீக்கி எங்களை ஆட்கொண்டு முக்தி நிலை தர உடனே விழித்தருள வேண்டும்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/CzncZYZjxLI

விளக்கம்:

சாதாரண மனிதன் எப்படி இறைவனை வணங்குவான்? பூ கொண்டு வருவான், கற்பூர ஆரத்தி செய்வான், தூபத்தைப் போடுவான், நெய் தீபம் ஏற்றுவான்... இதையெல்லாம் செய்து விட்டு, ஒரு கஷ்டம் வந்து விட்டால், இப்படியெல்லாம் செய்தும் என்னை சோதிக்கிறாயே! இது உனக்கே அடுக்குமா? என்று திட்டுவான்.

இப்படிப் பட்டவர்களும் கோயிலில் நிற்கிறார்கள். பந்தபாசமே வேண்டாமென்று அவனே கதியென சரணமடைய வந்தவர்களும் நிற்கிறார்கள். எப்படிப் பட்ட பக்தியாக இருந்தாலென்ன! உன்னை நம்பி அவர்கள் வந்து விட்டார்கள்.

அந்த இருதரப்புக்கும் பிறப்பற்ற நிலை தந்து பேரானந்தத்தில் திளைக்க வைக்க வேண்டும் என்று வேண்டுகிறார் மாணிக்கவாசகர். அறிந்தும், அறியாமலும் பக்திசெலுத்தும் இருதரப்பாரும் பாட வேண்டிய முக்கியமான பாடல் இது.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/CzncZYZjxLI

Thirupalliyehuchi tamil lyrics... திருப்பள்ளியெழுச்சி..!

https://youtu.be/56tb_7nzrMk?sub_confirmation=1

ஓம் நமச்சிவாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

09 Jan, 23:46


திருப்பாவை மார்கழி 26

மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய் (26)

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/qM1cqeiv0mc

பொருள்:

பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன் பிற்கு, உல கத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/qM1cqeiv0mc

விளக்கம்:

பாஞ்சஜன்யம் என்னும் சங்கை திருமால் ஏந்தியிருக்கிறார். இந்த சங்கின் கதையைக் கேளுங்கள்.

பஞ்சசன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் போய் மறைந்து கொண்டான். கிருஷ்ணர் அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். குருதட்சணையாக தன் மகனைக் கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் என சாந்தீபனி முனிவர் உத்தரவிட்டார்.

கிருஷ்ணரும் பஞ்சசனைக் கொன்று அவனைச் சங்காக மாற்றி தனது கையில் வைத்துக் கொண்டார். அசுரசங்கு என்பதால் தான் குரு÷க்ஷத்திரக்களத்தில் அதை ஊதும்போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/qM1cqeiv0mc

திருப்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் பாசுரம் 1 to 30, Thiruppavai songs in Tamil, Thiruppavai Padalgal..!

https://youtu.be/NNjUtLHs4ywsub_confirmation=1

ஓம் நமோ நாராயணாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

09 Jan, 00:09


திருப்பள்ளியெழுச்சி மார்கழி 25

பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே!

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/K1xxqXltPYs

பொருள்:

குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப் பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! சிந்தனைக்கு எட்டாதவனே! நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்துபூதங்களிலும் நீயே இருக்கிறாய். நீ எங்கும் போவதும் இல்லை, வருவதும் இல்லை.

இவ்வாறு புலவர்கள் உன்னுடைய சிறப்பியல்புகளை கீதங்களால் பாடுகிறார்கள், பக்தர்கள் இந்தப் பெருமைகளைச் சொல்லி ஆடுகிறார்கள். இப்படி பாடியாடுபவர்களும் உன்னை நேரில் பார்த்ததில்லை. உன் திருக்காட்சியைக் கண்டவர்கள் யாருமில்லை.

அப்படிப்பட்ட நீ எங்கள் முன்பாக வந்து, எங்கள் பாவங்களையெல்லாம் தீர்த்து எங்களை ஆட் கொள்ள வேண்டும். அதற்காக, உடனே துயில் நீங்கி எழுவாயாக.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/K1xxqXltPYs

விளக்கம்:

போக்கிலன் வரவிலன் என்று சிவபெருமான் போற்றப்படுகிறார். அதாவது, இறைவன் பிறப்பும் இறப்பும் இல்லாதவன் என்று இதற்குப் பொருள்.

அவன் நிரந்தரமானவன், அவனுடைய மூலத்தை அறிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் அறிவீனர்களாகவே இருக்க முடியும். எத்தனை நூல்களை ஆய்வு செய்தாலும், இதைக் கண்டு பிடிக்க முடியாது.

எனவே, நம் சக்திக்கு மீறிய அந்த பரமனைப் பாடி மகிழ்ந்தாலே அவன் நம் கண்ணுக்குத் தெரிந்து விடுவான் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/K1xxqXltPYs

Thirupalliyehuchi tamil lyrics... திருப்பள்ளியெழுச்சி..!

https://youtu.be/56tb_7nzrMk?sub_confirmation=1

ஓம் நமச்சிவாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

09 Jan, 00:05


திருப்பாவை மார்கழி 25

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய் (25)

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/fyrtWPJzQ2Q

பொருள்:

தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே!

அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே!

உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச்சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/fyrtWPJzQ2Q

விளக்கம்:

பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது.

உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை.

பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான். அவன் தூண் என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய் வெளிப்பட்டார்.

பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்த வரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/fyrtWPJzQ2Q

திருப்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் பாசுரம் 1 to 30, Thiruppavai songs in Tamil, Thiruppavai Padalgal..!

https://youtu.be/NNjUtLHs4ywsub_confirmation=1

ஓம் நமோ நாராயணாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

07 Jan, 23:21


திருப்பள்ளியெழுச்சி மார்கழி 24

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ;
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே!

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/KahM4wQNpAI

பொருள்:

திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! இந்த அதிகாலைப் பொழுதில் வீணைக்கலைஞர்களும், யாழ் வாசிப்பவர்களும் இசை மீட்டியபடி ஒருபுறம் உன் பக்தியில் லயித்து நிற்கிறார்கள். ரிக் உள்ளிட்ட வேதங் களால் உன்னை வணங்குவோரும், தமிழ் தோத்திரப்பாடல்களைப் பாடுவோர் ஒருபுறமும் உன் சிறப்பைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நமசிவாய என்ற நாமத்தை சொல்லியபடி கையில் மலர்மாலைகளுடன் பக்தர்கள் ஒருபுறம் நிற்கிறார்கள். வணங்குவோரும், கண்களில் கண்ணீர் மல்க பிரார்த்திப்போரும், உன்னை நினைத்து நெகிழ்ந்து மயங்கியவர் களு மாக ஒருபுறம் இருக்கிறார்கள்.

தலையில் கைகூப்பி நீயே சரணாகதி என்று சொல்வோர் ஒருபுறம் காத்திருக்கிறார்கள். இவர்களது பக்தியின் முன் எனது (மாணிக்கவாசகர்) பக்தி மிகச்சாதாரணம். எனது இறை வனே! அப்படிப்பட்ட என்னையும் ஆட்கொள்ள, நீ பள்ளியில் இருந்து எழுந்தருள வேண்டும்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/KahM4wQNpAI

விளக்கம்:

பள்ளியறை என்ற வார்த்தை மிகவும் சிறப்புக்குரியது. இறைவன் கண் மூடினால் நிலைமை என்னாகும்? இருந்தாலும், அன்பின் காரணமாக அவனுக்கும் ஓய்வு கொடுப்பதாக நினைத்து பள்ளியறையில் உறங்க வைக்கிறோம்.

ஆனால் நிஜத்தில், பள்ளியறை என்றால் விழிப்புக்குரிய இடம். இதனால் தான் மாணவர்கள் படிக்கும் இடத்திற்கு பள்ளிக்கூடம் என்று பெயர் வைத்தார்கள். கல்வியில் விழிப்புடன் இருப்பவர்கள் உலகில் சிறப்பிடம் பெறுவார்கள். அதுபோல், பக்தியில் விழிப்பு நிலையில் உள்ளவன் இறைவனின் திருப்பாதத்தை அடைவான்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/KahM4wQNpAI

Thirupalliyehuchi tamil lyrics... திருப்பள்ளியெழுச்சி..!

https://youtu.be/56tb_7nzrMk?sub_confirmation=1

ஓம் நமச்சிவாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

07 Jan, 23:19


திருப்பாவை மார்கழி 24

அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய் (24)

பொருள்:

மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம்.

ராமாவதாரம் எடுத்த போது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம்.

கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம்.

பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/UFg0o3KEJs4

விளக்கம்:

இந்த பாசுரம் மிக முக்கியமானது. இதை தினமும் நாம் பாராயணம் செய்யலாம். இதை போற்றிப் பாசுரம் என்பர்.

இந்த பாசுரத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/UFg0o3KEJs4

திருப்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் பாசுரம் 1 to 30, Thiruppavai songs in Tamil, Thiruppavai Padalgal..!

https://youtu.be/NNjUtLHs4ywsub_confirmation=1

ஓம் நமோ நாராயணாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

06 Jan, 23:44


திருப்பள்ளியெழுச்சி மார்கழி 23

கூவின பூங்குயில்; கூவின கோழி;
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய்!
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய்!
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே! (3)

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/cA_5GB38J28

பொருள்:

திருப்பெருந்துறையில் குடிகொண்டுள்ள சிவபெருமானே! உதயத்தை அறிவிக்க குயில்களும், கோழிகளும் கூவிவிட்டன. குருகுப் பறவைகளும் கிரீச்சீடுகின்றன.

சங்குகள் முழங்கும் ஒலி கேட்கிறது. நட்சத்திரங்கள் சூரிய ஒளியில் கலந்து அதனுடன் ஒன்றிவிட்டது போல, நானும் மனதில் உன்னை மட்டுமே காண வேண்டும் என்ற விருப்பத்தை நிரப்பி வந்துள்ளேன். எனக்கு நீ உன் திருவடியைக் காட்டு. தேவர்களாலும் பிறராலும் அறிய முடியாதவனே! எனக்கு எளிமையாகக் காட்சி தருபவனே! எம்பெருமானே! உறக்கம் நீங்கி எழுவாயாக.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/cA_5GB38J28

விளக்கம்:

அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணும் ஆலய வழிபாடு கிடையாது.
பேசிக் கொண்டே இறைவனை வணங்குவது, கோயிலுக்குள் உலக விஷயங்களை அலசுவது போன்றவை நிச்சயம் பலன் தராது.

அங்கே, இறைவனின் திருநாமம் மட்டுமே கேட்க வேண்டும். மனதை இறைவனின் பக்கம் திருப்பி, அவனுடைய திவ்ய சரித்திரத்தை மனதில் நினைத்து வழிபட்டால் தான் பலனுண்டு என்பது இப்பாடலின் உட்கருத்து.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/cA_5GB38J28

Thirupalliyehuchi tamil lyrics... திருப்பள்ளியெழுச்சி..!

https://youtu.be/56tb_7nzrMk?sub_confirmation=1

ஓம் நமச்சிவாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

06 Jan, 23:40


திருப்பாவை மார்கழி 23

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய் (23)

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/xYSZLHpqrwI

பொருள்:

மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது.

நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய்.

வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/xYSZLHpqrwI

விளக்கம்:

எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு...என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது.

அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் சொல்ல வேண்டும்.

இதைத்தான் ஆயர்குலப் பெண் கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டது என்ன? அந்தக் கண்ணனையே கேட்டார்கள்.

அவனோடு கலந்து விட்டால் சோறு எதற்கு? வாகனம் எதற்கு? இதர வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அவனையே கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/xYSZLHpqrwI

திருப்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் பாசுரம் 1 to 30, Thiruppavai songs in Tamil, Thiruppavai Padalgal..!

https://youtu.be/NNjUtLHs4ywsub_confirmation=1

ஓம் நமோ நாராயணாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

05 Jan, 23:14


திருப்பள்ளியெழுச்சி மார்கழி 22

அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய்
அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக்
கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர்!
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே!
அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே!

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/wn6Qv_a2X0k

பொருள்:

திருப்பெருந்துறை சிவபெருமானே! சூரியனின் தேரோட்டியான அருணன் கிழக்கே வந்து விட்டான் (இந்திரனின் திசை கிழக்கு). உனது முகத்தில் காணும் கருணை ஒளியைப் போல சூரியனும் மெல்ல மெல்ல எழுந்து இருளை நீக்கி விட்டான். அண்ணலே! உனது கண்களைப் போன்ற தாமரைகள் தடாகங்களில் மலர்ந்து விட் டன.

வண்டினங்கள் அவற்றில் தேன்குடிக்க திரளாக வந்து கொண்டிருக்கின்றன. அருட்செல்வத்தை வாரி வழங்கும் ஐயனே! மலை போல் இன்பம் தருபவனே! அருட்கடலே! நீ கண் விழிப்பாயாக.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/wn6Qv_a2X0k

விளக்கம்:

இங்கே தாமரையை சிவனாகவும், அதைத் தேடி தேன் குடிக்க வரும் வண்டுகளை தேவர்களாகவும் உருவகம் செய்கிறார் மாணிக்கவாசகர்.

பிரம்மா, சரஸ்வதி, ருத்ரன், அம்பாள் உள்ளிட்ட பல தெய்வங்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவனின் தரிசனத்துக்கு காத்து நிற்கிறார்கள். இந்த தேவர்களே வண்டுக்கு ஒப்பிடப்படுகிறார்கள்.

நாமும், பிறப்பற்ற நிலை என்னும் தேன் அருந்த அந்த சிவபெருமானின் திருவடிகளை வண்டுகளைப் போல் பணிவோம்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/wn6Qv_a2X0k

Thirupalliyehuchi tamil lyrics... திருப்பள்ளியெழுச்சி..!

https://youtu.be/56tb_7nzrMk?sub_confirmation=1

ஓம் நமச்சிவாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

05 Jan, 23:08


திருப்பாவை மார்கழி 22

அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/jCMi-I9L2Sc

பொருள்:

கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம்.

எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும், தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/jCMi-I9L2Sc

விளக்கம்:

இறைவனின் கடைக்கண் பார்வை பட்டால் போதும். சாபங்கள் கருகிப்போகும். எப்படி அவனது பார்வையை நம் மீது திருப்புவது.

மிக எளிதாக ஆண்டாள் பாடிய திருப்பாவையின் பாடல்களையும் மார்கழியில் மட்டுமல்ல! எந்நாளும் பக்தியுடன் படித்தால் போதுமே! அதற்கு அவகாசமில்லையா! அவள் சொல்லியிருக்கிறாளே! இந்த பாவையில் கோவிந்தா, விக்ரமா போன்ற எளிய பதங்களை... அவற்றைச் சொன்னாலே போதுமே! அவனது பார்வை பட்டுவிடும்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/jCMi-I9L2Sc

திருப்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் பாசுரம் 1 to 30, Thiruppavai songs in Tamil, Thiruppavai Padalgal..!

https://youtu.be/NNjUtLHs4ywsub_confirmation=1

ஓம் நமோ நாராயணாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

05 Jan, 14:38


தூக்கமின்மைக்கு மருந்தில்லா மருத்துவம் - Yogic Science Astrological Healing Therapy..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

05 Jan, 00:51


திருப்பள்ளியெழுச்சி மார்கழி 21

போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே!
புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்;
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய்!
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே!

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/RMxK4ff-Dvw

பொருள்:

சேற்றில் பூத்த செந்தாமரை மலர்களைக் கொண்ட குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நந்திக்கொடியை உடையவனே! என்னையும் ஆட் கொண்டவனே! என் வாழ்வின் முதல் பொருளே! பொழுது புலர்ந்து விட்டது.

உனது பூப்போன்ற திருவடிகளில் மலர் தூவி வழிபட வந்துள்ளேன். எம்பெருமானே! உன் அழகிய முகத்தில் புன்னகை பூத்தபடி எனக்கு அருள் செய்வாயாக!

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/RMxK4ff-Dvw

விளக்கம்:

திருப்பெருந்துறை எனப்படும் ஆவுடையார்கோவிலில் ஆத்மநாதர் அருள்புரிகிறார்.
வாழும் காலத்தில் பல இன்பங்களை நாம் அனுபவிக்க வேண்டி இறைவனிடம் நாம் வேண்டுகிறோம்.

ஆனால், அவையெல்லாம் நம் உடலுக்கு தற்காலிக சுகமே தரும். ஆத்மாவுக்கு சுகம் வேண்டுமே! என்ன செய்வது! ஆத்மநாதராகிய சிவபெருமானைச் சரணடைந்தால் பேரின்பத்தை அடையலாம்.

மாணிக்கவாசகர் பாண்டியநாட்டின் மந்திரியாகவே இருந்தவர்! அவர் அனுபவிக்காத போகங்களா? ஆனால், இறைவன் அவரை என்ன செய்தான்? போர்ப்படைக்கு குதிரை வாங்கும் சாக்கில் தன் தலத்துக்கு வரவழைத் தான். உண்மையான இன்பம் என்ன என்பதை அறிய வைத்தான்.

அமிழ்தினும் இனிய திருவாசகத்தை எழுத வைத்தான். அவரை ஆட் கொண்டான். நாமும் அவரது கவியமுதத்தில் மூழ்கி எம்பெருமானின் திருவடிகளை அடைவோமே! இத்தலம் அறந்தாங்கி அருகில் உள்ளது.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/RMxK4ff-Dvw

Thirupalliyehuchi tamil lyrics... திருப்பள்ளியெழுச்சி..!

https://youtu.be/56tb_7nzrMk?sub_confirmation=1

ஓம் நமச்சிவாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

05 Jan, 00:47


திருப்பாவை மார்கழி 21

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் (21)

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/UHTRI3-TgAk

பொருள்:

கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக் களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே!

உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/UHTRI3-TgAk

விளக்கம்:

மன்னாதி மன்னர்களெல்லாம் உன் காலில் விழ காத்துக் கிடப்பது உன்னிடமுள்ள பயத்தால்! ஆனால், நாங்கள் அவர்களைப் போல பயந்த சுபாவம் உள்ளவர்கள் அல்ல! நாங்கள் வா என்று அழைத்தால் நீ வந்தாக வேண்டும்.

வர மறுத்தால், உன்னை எங்கள் அன்பென்னும் கயிறால் கட்டிப் போட்டு விடுவோம். அப்போது, நீ தப்பவே முடியாது என்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள்.

ஆம்...ஆண்டாள் மாலைக்குள் புதைந்து கிடந்த ஒரு தலைமுடியால் அவனைக் கட்டிப் போட்டு விட்டாளே! அந்த ரங்கநாதன் அவளிடம் வசமாக சிக்கிக் கொண்டானே! இதுதான் பக்தியின் உச்சநிலை. பகவானிடம் நம்மை அர்ப்பணித்து விட்டால், அவன் நம்மிடமிருந்து தப்பி ஓடமுடியாது என்பது இப்பாடலின் உட்கருத்து.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/UHTRI3-TgAk

திருப்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் பாசுரம் 1 to 30, Thiruppavai songs in Tamil, Thiruppavai Padalgal..!

https://youtu.be/NNjUtLHs4ywsub_confirmation=1

ஓம் நமோ நாராயணாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

04 Jan, 00:06


திருவெம்பாவை மார்கழி 20

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். 20

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/nF_TEwQF8ck

பொருள்:

சிவபெருமானே! எல்லாவற்றுக்கும் முதலாவதான உன் பாதமலர்களை வணங்குகிறோம். எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள உன் மென்மையான திருவடிகளை பணிகின்றோம்.

எல்லா உயிர்களையும் படைக்கின்ற உன் பொற் பாதங்களை சரணடைகின்றோம். எல்லா உயிர்களுக்கும் வாழும் காலத்தில் இன்பமான வாழ்வு தரும் மலரடிகளை பிரார்த்திக்கிறோம். உயிர்களை அழித்து இறுதிக்காலத்தை தருகின்ற இணையற்ற காலடிகளைப் போற்றுகின்றோம்.

திருமாலாலும், பிரம்மாவாலும் காண முடியாத தாமரை பாதங்களைக் காண்பதில் பெருமிதமடைகின்றோம். எங்களுக்கு பிறப்பற்ற நிலை தரும் பொன் போன்ற திருவடிகளை பற்றுகின்றோம். இவ்வாறு உன்னோடு ஐக்கியமாகி, உன் நினைவுகளுடன் நீர்நிலைகளில் நீராடி மகிழ்கிறோம்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/nF_TEwQF8ck

விளக்கம்:

திருவெம்பாவையின் கடைசிப்பாடல் இது.
இறைவனை வணங்கினால் போதுமா? மனம் ஓரிடத்திலும், கைகள் மட்டும் வணங்கிய நிலையில் இருப்பதால் என்ன லாபம்? மாணிக்கவாசகர் தன் பார்வையை இறைவனின் முகத்தின் மீது செலுத்தினாரா? அவரது திருவடியை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்.

அவனது பாத தரிசனம் கிடைத்தால் போதும்! வாழும் போதும் இன்பம்! மறைவுக்குப் பிறகும் இன்பம் என்கிறார்.நாளை முதல் திருப்பள்ளியெழுச்சி பாடுவார் மாணிக்கவாசகர்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/nF_TEwQF8ck

Thiruvempavai tamil full lyrics.. திருவெம்பாவை பாடல்கள்...

https://youtu.be/BO5a6Weadvs?sub_confirmation=1

ஓம் நமச்சிவாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

25 Dec, 23:20


திருவெம்பாவை மார்கழி 11

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 11

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/vl5GOsEaOXY

பொருள்:

கரிய நிற குவளை மலர்கள் குளத்தின் நடுவிலே உள்ளன. அருகில் சிவந்த நிறத்தில் தாமரை மலர்கள் முளைத்துக் கிடக்கின்றன. நீர் காக்கைகள் நீரில் மிதக்கின்றன.

இந்தக் குளத்தில் தங்கள் அழுக்கை களைய மக்கள் வருகிறார்கள். அவர்கள் நமசிவாய என சொல்லி சப்தம் எழுப்புகிறார்கள். இந்தக் காரணங்களால், இந்தக் குளம் எங்கள் சிவனையும், பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது.

தாமரை மலர்கள் நிறைந்த இந்த தெய்வீக குளத்தில், நம் சங்கு வளையல்கள் சலசலக்க, கால் சிலம்புகள் கலகலவென ஒலியெழுப்ப, மார்புகள் விம்ம, பாய்ந்து நடுப்பகுதிக்கு சென்று நீராடுவோம்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/vl5GOsEaOXY

விளக்கம்:

கரிய நிறம் கொண்டவள் அம்பிகை. இதனால் தான் அவளை சியாமளா என்கிறோம். சியாமளம் என்றால் கருநீலம். சிவந்த நிறமுடையவர் சிவபெருமான்.

மாணிக்கவாசகர் தன் தெய்வீகப் பார்வையால் கரிய குவளை மலர்களை அம்பிகையாகவும், தாமரையை சிவனாகவும் பார்க்கிறார். சாதாரண குளத்தில் உடல் அழுக்கு நீங்கும். பக்தி குளத்தில் மன அழுக்கு நீங்கும் என்பது அவரது இனிமையான கருத்து.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/vl5GOsEaOXY

Thiruvempavai tamil full lyrics.. திருவெம்பாவை பாடல்கள்...

https://youtu.be/BO5a6Weadvs?sub_confirmation=1

ஓம் நமச்சிவாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

25 Dec, 23:17


திருப்பாவை மார்கழி 11

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய் (11)

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/EVf-X4-gwE0

பொருள்:

கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே! நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/EVf-X4-gwE0

விளக்கம்:

நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. தோழியோ எழுந்து வந்தபாடில்லை! நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? அவளை விட்டுவிட்டு, நீராடச் சென்றிருப்போம். ஆனால், பக்திநெறிக்கு இது அழகல்ல. பிறரை விட்டுவிட்டு, தான் மட்டும் இறைவனை அடைய முயன்றால் அது நடக்காத ஒன்று.

எல்லோருமாய் இறைவனை நாட வேண்டும், அவன் புகழ் பேச வேண்டும். அப்போது தான் அவனருள் கிடைக்கும். இதனால் தான் கூட்டுப் பிரார்த்தனைக்கு மகத்துவம் அதிகமாக இருக்கிறது.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/EVf-X4-gwE0

திருப்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் பாசுரம் 1 to 30, Thiruppavai songs in Tamil, Thiruppavai Padalgal..!

https://youtu.be/NNjUtLHs4ywsub_confirmation=1

ஓம் நமோ நாராயணாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

24 Dec, 23:26


திருவெம்பாவை மார்கழி 10

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 10

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/R_jGCJ4aEnY

பொருள்:

தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப்பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! நம் தலைவனாகிய சிவபெருமானின் சொல்வதற்கரிய பெருமையுடைய திருப் பாதங்கள் ஏழுபாதாள லோகங்களையும் கடந்து கீழே இருக்கிறது.

பல் வேறு மலர்களை அணியும் திருமுடியானது வான த்தின் எல்லைகளைக் கடந்து எல்லாப் பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது. சக்தியை மேனியில் ஒரு பாகமாகக் கொண்டதால் அவன் ஒருவனல்ல என்பது நிஜமாகிறது.

வேதங்களும், விண்ணவரும், பூலோகத்தினரும் ஒன்று சேர்ந்து துதித்தாலும் அவன் புகழைப் பாடி முடிக்க முடியாது. யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அவன் நண்பன். ஏராளமான பக்தர்களைப் பெற்றவன். அவனுக்கு ஊர் எது? அவனது பெயர் என்ன? யார் அவனது உறவினர்கள்? யார் அவனது பக்கத்து வீட்டுக்காரர்கள்? எந்தப் பொருளால் அவனைப் பாடி முடிக்க முடியும்? சொல்லத் தெரியவில்லையே!

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/R_jGCJ4aEnY

விளக்கம்:

சிவனின் பெருமையை உயர்த்திச் சொல்லும் பாடல் இது. போதார் புனை முடியும் என்ற வரிக்கு மலர்களை அணிந்தவன் என்ற பொருள் வருகிறது. சிவனுக்கு கொன்றை, ஆத்தி, தும்பை, எருக்கு, ஊமத்தை ஆகிய மலர்களை அணிவிக்கும் வழக்கமுண்டு. இதில் எதையாவது மனிதர்கள் பயன்படுத்துவதுண்டா? உனக்கு மல்லிகையையும், ரோஜாவையும் வைத்துக் கொள். உனக்கு பயன்படாத ஒன்றை எனக்கு அணிவி என்று தன் எளிமையை வெளிப்படுத்துகிறான் இறைவன்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/R_jGCJ4aEnY

Thiruvempavai tamil full lyrics.. திருவெம்பாவை பாடல்கள்...

https://youtu.be/BO5a6Weadvs?sub_confirmation=1

ஓம் நமச்சிவாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

24 Dec, 23:24


திருப்பாவை மார்கழி 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்.
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். (10)

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/zCJZTabyuFg

பொருள்:

முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக் கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான்.

முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/zCJZTabyuFg

விளக்கம்:

யாராவது நன்றாகத் தூங்கினால் சரியான கும்பகர்ணன் என்று சொல்வோம். இது ஆண்டாள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன ஜோக் என்பதை இந்தப் பாடல் தெளிவுபடுத்துகிறது. நகைச்சுவை உணர்வு ஆயுளை அதிகரிக்கும். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். ஆண்டாள் நமக்கு திருப்பாவையின் மூலம் ஆயுள்விருத்தியைத் தந்திருக்கிறாள்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/zCJZTabyuFg

திருப்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் பாசுரம் 1 to 30, Thiruppavai songs in Tamil, Thiruppavai Padalgal..!

https://youtu.be/NNjUtLHs4ywsub_confirmation=1

ஓம் நமோ நாராயணாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

23 Dec, 23:14


திருவெம்பாவை மார்கழி 9

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/BN_7BBAnTu4

பொருள்:

கோடி வருடங்களுக்கும் முற்பட்ட பழமையான பொருள் இது என்று சொல்லப்படும் பொருட்களுக்கெல்லாம் பழமையானவனே! இன்னும் லட்சம் ஆண்டுகள் கழித்து இப்படித்தான் இருக்கும் இந்த உலகம்என்று கணிக்கப்படும் புதுமைக்கெல்லாம் புதுமையான சிவனே!

உன்னை தலைவனாகக் கொண்ட நாங்கள், உனது அடியார்களுக்கு மட்டுமே பணிவோம். அவர்களுக்கே தொண்டு செய்வோம். உன் மீது பக்தி கொண்டவர்களே எங்களுக்கு கணவராக வேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை எங்களுக்கு கிடைத்த பரிசாகக் கருதி, மிகவும் கீழ்ப்படிதலுடன் பணி செய்வோம். இந்த பிரார்த்தனையை மட்டும் நீ ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற நிலையைப் பெறுவோம்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/BN_7BBAnTu4

விளக்கம்:

தனக்கு வரும் கணவன், சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும், வாகனம் வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் பிரார்த்திப்பர்வர்கள் பெருகி விட்ட காலம் இது! இந்த செல்வம் நிலைத்திருக்குமா! இந்த செல்வத்துக்கு சொந்தக்காரர்கள் ஒழுக்கசீலர்களாக இருப்பார்களா! பக்திமான் ஒருவன் எனக்கு கணவனாக வேண்டும் என்று கேட்பவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவிலாவது இன்று இருக்கிறார்களா? அன்றைய பெண்கள் தங்கள் கணவன் பக்திமானாக அமைய வேண்டுமென விரும்பினர். அதை இறைவனிடம் கேட்டனர். செல்வச்சீமான்களால் நிம்மதியைத் தர முடியாது. பக்திமான்களை மணந்தால் எளிய வாழ்க்கை அமையலாம். ஆனால், அதில் இருக்கும் மனநிம்மதி யாருக்கு கிடைக்கும்? என்பது இந்தப் பாடலின் உட்கருத்து.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/BN_7BBAnTu4

ஓம் நமச்சிவாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

23 Dec, 23:10


திருப்பாவை மார்கழி 9

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்
மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/2yHRYyWG4aU

பொருள்:

பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச, அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்!

அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/2yHRYyWG4aU

விளக்கம்:

உலக மக்கள் மாடமாளிகை, பஞ்சு மெத்தை என சொகுசு வாழ்க்கையில் சிக்கி சோம்பலில் கட்டுண்டு கிடக்கின்றனர். இதில் இருந்து அவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான வைகுண்டமே நிலையானது என்பதை அறிவுறுத்த வேண்டும். அந்த வைகுண்டத்தை அடைய பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/2yHRYyWG4aU

ஓம் நமோ நாராயணாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

23 Dec, 11:02


ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா..!

ஸ்ரீ கீதாபஜன் ஆஞ்சநேயர் திருக்கோவில் பெரியகுயிலி கோவை..

5 நாட்கள் நிகழ்ச்சி..

டிசம்பர் 28 சனிக்கிழமை,
டிசம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை,
டிசம்பர் 30 திங்கள்கிழமை,
டிசம்பர் 31 செவ்வாய்க்கிழமை,
ஜனவரி 1  புதன்கிழமை

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஹோமங்கள், சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள், பஜனைகள்,  வள்ளி கும்மி நிகழ்ச்சிகள், மற்றும் ஐந்து நாட்களும் தொடர் அன்னதானம் நடைபெற உள்ளது..

தாங்கள் அவசியம் குடும்பத்துடன் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறோம்..!*l

கீதாபஜன் - 8300112434 9894112434 9894012434 9994412434

ஆரோக்யமும் ஆன்மீகமும்

23 Dec, 01:11


திருவெம்பாவை மார்கழி 8

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய். 8

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/-790-DcJyN0

பொருள்:

தோழியை எழுப்ப வந்த பெண்கள், அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் இசைக்கப்படுகின் றன. நம் அண்ணாமலையார் கோயிலில் வெண் சங்குகள் முழங்குகின்றன.

இந்த இனிய வேளையில், உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அவனது பெரும் கருணையை எண்ணி வியக்கின்றோம். அவனது சிறப்புகளை பாடுகின்றோம். ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் தூங்குகிறாய்.

இந்த உறக்கத்துக்கு சொந்தமானவளே! இன்னும் பேசமாட்டேன் என்கிறாயே! வாழ்க நீ! பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலின் சிவபக்தியைப் பற்றி தெரியுமல்லவா? (அவர் வராக வடிவமெடுத்து சிவனின் திருவடி காணச்சென்றவர்). அப்படிப்பட்ட பெருமையுடைய உலகத்துக்கே தலைவனான சிவனை, ஏழைகளின் தோழனை பாடி மகிழ உடனே புறப்படு.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/-790-DcJyN0

விளக்கம்:

இறைவன் மனிதர்களின் உள்ள இருளைப் போக்குபவர். பனிபடர்ந்த இருள் சூழ்ந்த மார்கழி காலையை சூரியன் எப்படி பிரகாசமாக்குகிறானோ, அதுபோல் ஆணவம், பொறாமை, அறியாமை ஆகிய இருள் சூழ்ந்த மனதை சிவபெருமான் ஒளி வெள்ளமாக்குகிறார் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/-790-DcJyN0

Thiruvempavai tamil full lyrics.. திருவெம்பாவை பாடல்கள்...

https://youtu.be/BO5a6Weadvs?sub_confirmation=1

ஓம் நமச்சிவாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

23 Dec, 01:09


திருப்பாவை மார்கழி 8

கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய் (8)

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/6WOWR4_BOpA

பொருள்:

மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்டவளே! அழகுச்சிலையே! கிழக்கே வெளுத்து எருமைகள் மேய்ச்சலுக்காக புல் மைதானங்களில் நிற்கின்றன. எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து விட்டார்கள்.

அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். ஆனாலும் உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம்.

கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமான கிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் ‘ஆஆ’ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே கிளம்பு.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/6WOWR4_BOpA

திருப்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் பாசுரம் 1 to 30, Thiruppavai songs in Tamil, Thiruppavai Padalgal..!

https://youtu.be/NNjUtLHs4ywsub_confirmation=1

ஓம் நமோ நாராயணாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

22 Dec, 13:17


திருவெம்பாவை மார்கழி 7

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 7

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/ZUlZ9LP1tEU

பொருள்:

தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் இந்த தூக்கமும் ஒன்றோ? தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே சிவசிவ என்பாயே! அப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்லும்போது, தீயில்பட்ட மெழுகைப் போல் உருகி உணர்ச்சிவசப்படுவாயே! அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம்.

இதையெல்லாம் கேட்டும், இன்று உன் உறக்கத்துக்கு காரணம் என்ன? பெண்ணே! பெண்களின் நெஞ்சம் இறுகிப்போனதாக இருக்கக்கூடாது. ஆனால், நீயோ நாங்கள் இவ்வளவு தூரம் சொல்லியும் இன்னும் எழாமல் இருக்கிறாய். அந்த தூக்கத்தை நீ என்ன ஒரு பரிசாகக் கருதுகிறாயா?

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/ZUlZ9LP1tEU

விளக்கம்:

அதிகாலை வேளையில் தூங்கவே கூடாது. நம் பணிகள் காலை நாலரைக்கெல்லாம் துவங்கி விட வேண்டும். மார்கழியில் பனியடிக்கிறதே என்றெல்லாம் காரணம் சொல்லக்கூடாது.

எல்லா தட்பவெப்பங்களுக்கும் தகுந்தாற் போல், நம் உடலைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும். காலை தூக்கத்தில் இருந்து விடுபடுவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி. சூரியனைப் பார்க்காத ஒவ்வொரு நாளும் வீணே என்கிறது சாஸ்திரம்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/ZUlZ9LP1tEU

Thiruvempavai tamil full lyrics.. திருவெம்பாவை பாடல்கள்...

https://youtu.be/BO5a6Weadvs?sub_confirmation=1

ஓம் நமச்சிவாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

22 Dec, 13:16


திருப்பாவை மார்கழி 7

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய் (7)

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/7XBZbipJ3rc

பொருள்:

அறிவில்லாதவளே! ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும், அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா? வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை?

எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே! நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன? பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/7XBZbipJ3rc

விளக்கம்:

பெருமாளுக்கு பல திருநாமங்கள் உண்டு. இதில் கேசவா என்ற திருநாமத்தை ஏழுமுறை சொல்லிவிட்டு, அன்றாடப்பணிகளுக்கு கிளம்பினால், அன்றையப் பணிகள் தங்கு தடையின்றி முடியும் என்பது நம்பிக்கை. கேசவன் என்ற சொல்லுக்கே தடைகளை நீக்குபவன் என்று தான் பொருள்.

வாழ்வில் ஏற்படும் தடைகளைக் கடக்கும் இப்பாடலை, திவ்ய தேசங்களில் ஒன்றான ஆயர்பாடி (டில்லி-ஆக்ரா ரயில்பாதையிலுள்ள மதுராவில் இருந்து 12 கி.மீ.,) தலத்தை மனதில் கொண்டு ஆண்டாள் பாடியருளினாள்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/7XBZbipJ3rc

திருப்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் பாசுரம் 1 to 30, Thiruppavai songs in Tamil,  Thiruppavai Padalgal..!

https://youtu.be/NNjUtLHs4ywsub_confirmation=1

ஓம் நமோ நாராயணாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

21 Dec, 13:20


Yogic Science Astro Healing Therapy..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

20 Dec, 23:11


திருவெம்பாவை மார்கழி 6

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய். 6

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/YR1gVujnBtU

பொருள்:

மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ எங்களிடம், உங்களை நானே வந்து அதிகாலையில் எழுப்புவேன் என்றாய். ஆனால், நாங்கள் வந்து உன்னை எழுப்பும்படியாகி விட்டது.

உன் சொல் போன திசை எங்கே? மேலும், சொன்னதைச் செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா? உனக்கு இன்னும் விடியவில்லையா? வானவர்களும், பூமியிலுள்ளோரும், பிற உலகில் உள்ளவர் களும் அறிய முடியாத தன்மையை உடைய சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்த எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். அவனை நினைத்து உடலும் உள்ளமும் உருகாமல் இருப்பது உனக்கு மட்டுமே பொருந்தும். எனவே உடனே எழுந்து நாங்களும் மற்றையோரும் பயன்பெறும் விதத்தில் நம் தலைவனைப் புகழ்ந்து பாடு.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/YR1gVujnBtU

விளக்கம்:

இறைவனை தனக்காக மட்டுமின்றி பிறருக்காகவும் வணங்க வேண்டும் என்பதை பாடல் அடிகள் உணர்த்துகின்றன.

மேலும், வார்த்தைகளை விட செயலே உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதையும் இப்பாடல் சொல்கிறது. ஒன்றைச் சொல்லிவிட்டால், அதைச் செய்தே தீர வேண்டும், இல்லாவிட்டால் மற்றவர்களின் கேலிக்கு ஆளாகி தலைகுனிய நேரிடும் என்பதும் இப்பாடல் உணர்த்தும் தத்துவம்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/YR1gVujnBtU

Thiruvempavai tamil full lyrics.. திருவெம்பாவை பாடல்கள்...

https://youtu.be/BO5a6Weadvs?sub_confirmation=1

ஓம் நமச்சிவாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

20 Dec, 23:10


திருப்பாவை மார்கழி 6

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/PJmncfBnCno

பொருள்:

அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும்,

சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ண பிரானை யோகிகளும், முனிவர்களும் ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/PJmncfBnCno

விளக்கம்:

பூதகி என்ற அரக்கியை கம்சன் அனுப்பி வைத்தான். அவளை இம்சை செய்து கண்ணன் கொன்றிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. அவனுக்கு பால் தந்து தாய் ஸ்தானத்தை அடைந்து விட்டாளே!

அந்த தாய்மையைப் பாராட்டும் விதத்தில் அவளது மடியில் அமர்ந்து பாலைக் குடிப்பது போல் அமைதியாக உயிரைக் குடித்து அவளுக்கு மோட்சமளித்தான் எம்பெருமான். கேரளாவில் அம்பலப்புழையில் இருந்து 25 கி.மீ., தூரத்திலுள்ள திருவமுண்டூர் என்ற தலம் குறித்து இந்தப் பாடலை ஆண்டாள் பாடியதாகச் சொல்வர்.

*பாடல் ஆடியோ, வீடியோ*:-
https://youtu.be/PJmncfBnCno

திருப்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் பாசுரம் 1 to 30, Thiruppavai songs in Tamil, Thiruppavai Padalgal..!

https://youtu.be/NNjUtLHs4ywsub_confirmation=1

ஓம் நமோ நாராயணாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

20 Dec, 03:33


Audio from ச பாலகிருஷ்ணன், கோவை.

ஆரோக்யமும் ஆன்மீகமும்

20 Dec, 00:37


திருப்பாவை மார்கழி 5

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய். (5)

*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/HcPfnnKwjp8

பொருள்:

வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம்.

அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.

*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/HcPfnnKwjp8

விளக்கம்:

உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் என்பது ஒரு தாய்க்கு பிள்ளை செய்ய வேண்டிய கடமை.

தேவகி தாய்க்கு கண்ணனை பெற்றதால் பெருமை. "ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என்று அவள் பெருமைப்படுகிறாள். குழந்தைகள், பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும் என்பது இதன் உட்கருத்து.

*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/HcPfnnKwjp8

திருப்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் பாசுரம் 1 to 30, Thiruppavai songs in Tamil, Thiruppavai Padalgal..!

https://youtu.be/NNjUtLHs4ywsub_confirmation=1

ஓம் நமோ நாராயணாய..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

19 Dec, 04:17


*நமது ஆதி குருநாதர் ஶ்ரீ அகத்திய மாமுனிவர் பிறந்த நாள் இன்று மார்கழி ஆயில்யம்..!!*

*ஓம் ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளே சரணம்..!*

ஆரோக்யமும் ஆன்மீகமும்

07 Dec, 01:36


'நாகவல்லி’ எனப்படும் வெற்றிலை..!

மருத்துவரைக் கேளுங்கள்: “வெற்றிலை போடாதீர்கள்! அது கெடுதல் தரும் கேன்சரைக் கொண்டு வரும்” என்பார். ஆனால் அதில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன..!

வெற்றிலைக்குள் புதைந்திருக்கும் மருத்துவ குணங்கள்...!

அவசியம் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்..!


https://youtu.be/HBIzqhsIm-A

ஆரோக்யமும் ஆன்மீகமும்

06 Dec, 05:43


யோகம் - யோகத்தின் நிலைகள்...!

யோகம் எட்டு நிலைகளைக் கொண்டது. இதனை
”எட்டு படிகள்” என்கிறார், யோகத்தின் பிதாமகரான
பதஞ்சலி முனிவர். இந்த எட்டு நிலைகளும்
மனிதனின் வாழ்க்கையின் நெடுகில்
ஆத்மாவுக்கு உறுதுணையாக இருப்பவை..

இந்த எட்டு நிலைகளும் ஒன்றோடு ஒன்று
தொடர்பானவை.ஒரு நிலை முடியும் தருணத்தில்
அடுத்த நிலை துவங்கும்.

எனவே ஒவ்வொரு நிலையாகவே பயில வேண்டும். ஒரு நிலையில்
தேர்ச்சி பெறாமல் அடுத்தடுத்த நிலைகளை பழக
முடியாது.எனவே தொடர் பயிற்ச்சிகளின்
மூலமும், மனிதனை சூழ்ந்திருக்கும் எல்லா
விதமான ஆசைகளில் இருந்தும் மனதை
விடுவித்து வைப்பதன் மூலமும் இது
சாத்தியமாகும்.

யோகத்தின் எட்டு நிலைகளையும் திரு மூலரும்
தனது திருமந்திரத்தில் விரிவாக
குறிப்பிடுகிறார்.

"அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத்
தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்
புன்னெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே"

- திருமூலர் -

"இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே"

- திருமூலர் -

இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம்,
பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி.
ஆகியவையே யோகத்தின் எட்டு நிலைகளாக
கொள்ளப் படுகின்றன.

இயமம் என்பது வாழ்வியல் சார்ந்த நல்லொழுக்கத்தையும்,

நியமம் என்பது ஒழுக்கத்தின் மூலம் ஆத்ம சுத்தத்தையும்,

ஆசனம் என்பது உடற்பயிற்சி நிலைகளையும்,

பிரணாயாமம் மூச்சு கட்டுக்குள் கொணரும்
பயிற்சி முறைகளையும்,

பிரத்தியாகாரம் என்பது புலனடக்கத்தையும்,

தாரணை என்பது மன ஒருமைப்பாட்டையும்,

தியானம் என்பது பரமாத்மாவை உணரும் நிலையையும்,

சமாதி பரமாத்மாவுக்கு சமனான பேரின்ப நிலையை
அடவைவதையும் குறிக்கும்.

உண்பது,உறங்குவது,உழைப்பது என வாழ்வின்
அனைத்து கூறுகளையும் அளவுடனும்,
நிதானமாகவும் செயல்படவேண்டியது அவசியம்..

இத்தகையவர்களே யோகமார்க்கத்தில் இயல்பாக
வெற்றியடையலாம்.

வாழ்க வளமுடன்...!

யோகம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!

"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"

ஆரோக்யமும் ஆன்மீகமும்

05 Dec, 03:33


இது இருளில் இருந்து ஒளியை நோக்கிய பயணம்..!

இறையாற்றலின் பிரகாசத்தை அடைய நாம் என்ன செய்ய வேண்டும்?

அசுத்தமாகவும், நாற்றமாகவும் உள்ள இடத்தில் நாம் இருக்க விரும்புவதில்லையே..!


https://youtu.be/uKHW75iCbsY

ஆரோக்யமும் ஆன்மீகமும்

04 Dec, 03:46


மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி..!

அடியார் பெருமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அற்புதமான திருப்பள்ளியெழுச்சி பதிகங்களை பாடல் வரிகளுடன் பாடலாக பாடி கொடுத்துள்ளோம்.. இதை கேட்டு இறையருள் பெற வேண்டுகிறோம்..

https://youtu.be/56tb_7nzrMk

மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் (இன்றைய ஆவுடையார் கோவில்) எழுந்தருளியிருந்தபோது, விடியற்காலத்தில் இறைவனைத் துயில் எழுப்புவதாகத் திருப்பள்ளியெழுச்சி என்னும் இந்த பதிகங்களை அருளிச் செய்தார்.

திருப்பள்ளியெழுச்சி என்பது, "சுப்ரபாதம்" என்று வடமொழியில் அழைப்பர். வைகறையில் அதிகாலைப் பொழுதில் இருள் நீங்கீ ஒளி எழுவதுபோல, ஆன்மாக்களுடைய திரோதானமலம் அகல ஞானவொளி வெளிப்படுகின்ற முறைமையை இப்பாடல்கள் குறிக்கின்றன. மேலும், இது நம்முள் உறங்கும் இறைவனைத் துயில் எழுப்புவது போல் அமைந்துள்ளது..

திருச்சிற்றம்பலம்..!


https://youtu.be/56tb_7nzrMk

ஆரோக்யமும் ஆன்மீகமும்

03 Dec, 02:56


இதிலிருந்து உங்கள் உடற்பயிற்சி நேரத்தை உயர்த்திக் கொள்வது நல்லது.

உடற்பயிற்சிக்கு முன் உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது நலம்.

ஒன்றே செய், நன்றே செய் அதுவும் இன்றே செய்..

வெற்றி பெற்றவன் காரணத்தை தேடுவதில்லை. காரணத்தை தேடுபவன் வெற்றியை எட்டுவதேயில்லை...

"ஆரோக்ய வாழ்வுக்கு உடல்பயிற்சி அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/jvdmNUrDgRU

ஆரோக்யமும் ஆன்மீகமும்

03 Dec, 02:56


உடற்பயிற்சி.!

உடற்பயிற்சி என்பதை உச்சரிக்கும் பொழுதே உற்சாகம் கிடைக்கிறது...

ஒன்றே செய், நன்றே செய் அதுவும் இன்றே செய்...

அந்த உற்சாகம் தொடர வேண்டுமெனில் அதன் பலன் நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் அதை நடைமுறைப் படுத்துவது உடற்பயிற்சியை செயல் படுத்துவது முக்கியம்.

ஆனால் அதை நம்மில் எத்தனைபேர் வழக்கமாய் கொண்டு உள்ளோம் என்ற கேள்விக்கான பதில் சொற்பம், ஏன் இப்படி?

எண்ணமே வாழ்க்கை என்ற ஞானிகளின் கூற்றும், நீ எதுவாக மாற வேண்டும் என்று விரும்புகிறாயோ அதுவாகவே மாறுகிறாய், உன் எண்ணம் உண்மையாக இருந்தால் என்ற தன்னம்பிக்கை வித்தகர் விவேகானந்தர் வார்த்தைகளும் நிஜம் என்றால், நாளைக்கு காலையில் எழுந்தவுடன் மைதானத்திற்கு போகனும் என்ற வார்த்தை ஜாலங்களும், எனக்கு உடற்பயிற்சி செய்ய நேரமில்லை.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/jvdmNUrDgRU

நான் ரொம்ப பிஸி என அலட்சியம் காட்டும் இயலாத்தனமும், நான் காலையிலிருந்து ராத்திரி வரைக்கும் வேலை செய்கிறேன், மேலும் எதற்கு உடற்பயிற்சி என மருத்துவ உண்மையை ஏற்றுக் கொள்ளாத மனப்பாங்கும், தன்னுடைய உடலை சினிமா நடிகைகளைப் போல் ஆக்க வேண்டும் என்று இளம் பெண்கள் பட்டினி கிடந்து மெலிந்து கிடப்பதும்,

அதன் மூலம் உடலில் வரக்கூடிய பக்க விளைவுகளும் தொட்டதெற்கெல்லாம் மருந்துகளையும் மாத்திரைகளையும் நாடும் தாய்மார்களும் அதன் மூலம் குறையும் நோய் எதிர்ப்பு சக்தியும் நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் மேற்படி நபர்களின் சித்தாந்தங்கள்.

அவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதை விட பிரச்சனைகள் அதிகமாகவே ஆக்கும் என்பதை உங்களால் உணர முடியும்.

வெற்றி பெற்றவன் காரணத்தை தேடுவதில்லை. காரணத்தை தேடுபவன் வெற்றியை எட்டுவதேயில்லை இது பொன்மொழி.

ஒவ்வொரு நொடி தாமதமும் ஒவ்வொரு கோடி ரூபாய் இழப்புக்குச் சமம் என்ற நடைமுறை வாசகமும் நமக்கு உணர்த்துவது எதுவெனில், ஒன்றே செய், நன்றே செய் அதுவும் இன்றே செய்.

நான் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பவில்லை.
செல்வந்தனாக விரும்பவில்லை. அடுத்தவர் மதிக்கும் நபராக விரும்பவில்லை. என்று உலகில் எத்தனை வகை மனிதர் இருந்தாலும் ஒருவர் கூட நினைக்க மாட்டார்.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/jvdmNUrDgRU

இந்த விசயத்தில் மட்டும் அனைவர் எண்ணமும் ஒன்றாக இருக்கும். அது வெற்றி என்ற ஒன்றுதான். நீங்கள் எந்த துறையை சேர்ந்தவராக இருந்தாலும், நீங்கள் எந்த துறையில் சாதிக்க வேண்டும் என்று விரும்பினாலும் உங்கள் மூளையில் சுறுசுறுப்பும் உங்களுடைய உடல் தகுதியும் மிகவும் முக்கியம்.

நம்முடைய உடல் எடை இருக்க வேண்டிய அளவை விட அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அது நமது உடற் தகுதியை நேரடியாக பாதிக்கும்.

ஒவ்வொருவர் உடல் எடை அதிகரிக்கவும், குறையவும் அவர்களுடைய உணவு பழக்கமே முக்கிய காரணமாக அமைகிறது.

கொழுப்புச் சத்தான உணவுகளை குறைத்துக் கொள்வது உடல் உடையை குறைப்பதற்கான எளிய வழியாகும்.

நாம் ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவிலுள்ள புரத சத்தின் (கலோரியின்) அளவும் நாம் தினசரி வேலையின் காரணமாக செலவிடும் கலோரியின் அளவும் (உதாரணமாக 31லிருந்து 35 கலோரி முழுக்கத் தேவை.) சமமாக இருக்க வேண்டும்.

நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய கலோரியும், செலவிடக் கூடிய கலோரியும் அதில் உபரியாக இருக்கக்கூடிய கலோரியின் அளவே கொழுப்பு ஆகும். அதனை குறைப்பதற்கு நாம் அன்றாடம் உடற்பயிற்சியை கீழ்க்கண்டவாறு தொடங்கலாம்.

1. நடைப் பயிற்சி
2. ஓட்டப்பயிற்சி
3. நீச்சல் பயிற்சி
4. சைக்கிளிங்

எந்த ஒரு உடற்பயிற்சியும் நீங்கள் மெதுவாகவும், சீராகவும் தொடங்க வேண்டும்.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/jvdmNUrDgRU

மேற்குறிப்பிட்டுள்ள பயிற்சிகள் ஏரோபிக் என்று அழைக்கப்படும்.

ஏரோபிக் என்றால் ஆக்சிஜன் ஏரோபிக் உடற்பயிற்சி என்பது எந்த வகையான உடற்பயிற்சிக்கு அதிகப்படியான ஆக்சிஜன் தேவையோ அதனை ஏரோபிக் உடற்பயிற்சி என்கிறோம் எனவே நமக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்க நமது உடற்பயிற்சியை அதிகப்படுத்துவதே சிறந்த வழியாகும்.

சீராகவும் முறையாகவும்., தொடங்கும் உடற்பயிற்சி உங்களுக்கு 3-ம் மாதம் முதல் 1 வருடத்திற்குள் முறையான பலனை கொடுக்கத் துவங்கும்.

விரைவான பலனுக்கு கொழுப்புச் சத்து குறைந்த உணவு பழக்க முறையும் (எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவு வகைகள்) முக்கிய அம்சம், வாரத்திற்கு 4 நாட்களாவது உங்கள் உடற்பயிற்சி நடைமுறையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். குறைந்த பட்சம் 10 நிமிடங்களாவது அன்றாடம் உடற்பயிற்சி செய்வது நிறைந்த பலனைத் தரும்.

ஆரோக்யமும் ஆன்மீகமும்

02 Dec, 03:26


குண்டலினி - பகுதி 4 - மேலும் சில தெளிவுகள்.!

பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது நம்முடைய இந்த உடல் உடலின் உள்ளேயும் வெளியேயும் நின்று இயங்கும் ஆற்றலையே நாம் உயிர் என்கிறோம்.

உயிரின் படர் நிலைதான் மனம்.

மனத்திற்கு “ஞானம்”, “உறுதி” என இரண்டு முகங்கள் உள்ளது. இவை தனித்துவமானவை.

உணர்தல், உணர்த்துதல் என்கிற இரண்டு வேலைகளை மட்டுமே மனம் செய்திறது.

நம்முடைய உணர்தல் மற்றும் உணர்த்தும் நிலைமை மேம்பட விழிப்புணர்வு தேவைப் படுகிறது.

குண்டலினியை தூண்டுவதன் மூலம் இந்த விழிப்புணர்வினை உயர் தனித்துவ நிலைக்கு கொண்டு செல்லலாம்.

இதுதான் கடந்த வாரத்தின் நெடுகே நாம் பார்த்தவைகளின் சாராம்சம்.

இவை எதுவும் புதிய விஷயங்கள் இல்லை. நம்மில் பலரும் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். இருப்பினும் அடிப்படை கூறுகளின் மீதான புரிதலை உருவாக்கிட முந்தைய இந்த பதிவுகள் உதவி இருக்கும் என நம்புகிறேன்.

இன்று குண்டலினி பற்றி மேலும் சில அடிப்படை தகவல்களை அணுகிடுவோம்.

குண்டலினி என்பது உயிருடன் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் புதைந்து இருக்கும் ஒரு வகையான நிலையான ஆற்றல் என்கின்றனர்.

முந்தைய பதிவுகளில் நாம் பார்த்த நிலை ஆற்றல், இயக்க ஆற்றல் தத்துவம் இப்போது உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.

குண்டலினி எங்கே இருக்கிறது?

நமது கருவாய்க்கும், எருவாய்க்கும் இடையே இருப்பதாக கூறியிருக்கின்றனர். அதாவது நமது பிறப்பு உறுப்பிற்கும், ஆசன வாய்க்கும் இடையே நடுவில் புதைந்து இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த இடத்தையே மூலாதாரம் என்றும் அழைக்கின்றனர்.

ஏன் இந்த பெயர் வந்தது?

குண்டலினி என்பது காரணப் பெயர். குண்டம் என்றால் சேமிக்கப் பெறும் பொருட்களை தாங்கி, அவை எளிதில் வெளியேறிவிடாதபடி பாதுகாக்கும் இடம்.

இந்த குண்டத்தை நமது உடலுக்கு ஒப்பாக சொல்கின்றனர். அத்தகைய குண்டத்தில் தங்கி லயம் பெறுகிற இந்த ஆற்றலை குண்டலினி என்கின்றனர்.

யாரெல்லாம் இதை கற்கலாம்?,

எல்லோருக்கும் இது சாத்தியமாகுமா?

ஆர்வமும், விடா முயற்சியும் உள்ள எவரும் இதை கற்கலாம். தகுந்த குருவின் வழிகாட்டுதலில் கற்றுக் கொள்வதே சிறப்பு.

எத்தனை நாளில் குண்டலினி எழும்பும்?

மிக நிச்சயமாக ஒரே நாளில் எதுவும் சாத்தியமாகாது.

நிதானம், பொறுமை, கவனகுவிப்பு ஆகிய இம் மூன்றுமே இதை சாத்தியமாக்கும்.

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

ஆரோக்யமும் ஆன்மீகமும்

01 Dec, 05:14


குண்டலினி - பகுதி 3 - மனது..!

மனதினன் என்கிற பதமே மனிதன் என்றாகியது, என என்னுடைய தமிழாசான் கூறுவார். மனுஷன், மனிஷி என்ற வார்த்தைகளை அன்றாடம் நாம் பயன் படுத்திக் கொண்டுதானிருக்கிறோம்.

ஆக, மனது என்கிற ஒன்றுதான் நம்முடைய உண்மையான அடையாளமாகிறது. மற்றபடி பிறப்பால் வருகிற சாதி, மதம், இனம், பால் என்கிற அடையாளங்கள் எல்லாம் மாயத் தோற்றமே, அழியக் கூடியது.

மனமோ சூக்குமமானது, அழிவில்லாதது.
மனம் என்பதை உயிரின் ஒரு கூறாக சிலர் கூறுகின்றனர்.

ஆனால் சித்தர் பெருமக்கள் உயிர்வேறு, மனம் வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான் என்கின்றனர். உயிரின் படர் நிலைதான் மனம் என்கிறனர்.

மேலும் மனதிற்கு இரண்டு முகங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.ஒன்று தெளிவு எனப்படும் “ஞானம்”, மற்றது வலிமை எனப்படும் “உறுதி”. இவை இரண்டும் தனித்துவமானவை.

வலிமை இல்லாத ஞானத்தினாலோ அல்லது ஞானம் இல்லாத வலிமையினாலோ பயனில்லை. இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று இனைந்து செயல்படும் போது மட்டுமே மனம் முழுமையடைகிறது.

இப்படி ஒன்றோடு ஒன்று இனைந்து செயல்படும் மனதில் ஆற்றல் அளப்பறியது. இதன் வேகம் கணக்கிட முடியாதது. இன்னும் சொல்வதானால் இந்த பூமியை ஆண்டு கொண்டிருப்பதே இப்படியான மனங்கள்தான்.
எல்லாம் சரிதான், இந்த மனம் மனிதனுக்கு என்ன செய்கிறது?

எளிமையான பதில், உணர்கிறது... உணர்த்துகிறது.
அவ்வளவுதான்!

எப்படி உணர்கிறது?

தனது புலன்களின் வழியே உணர்கிறது. அதுவும் தனித்துவமான பாதைகளில்...

நாவின் சுவையை கண் அறியாது. செவியின் ஓசையை நாக்கு உணராது. இப்படி பன்னிரெண்டு புலன்களின் வழியே தனித்துவமான உணர்தல்கள் நடக்கிறது என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.

இது நாள் வரை ஐம்புலன்களைத்தானே கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் சித்தரியல் பன்னிரெண்டு புலன்களைச் சொல்கிறது. அது பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

ஆனால் இப்படி உணரப்படும் தகவல்கள் எல்லாம் மனம் என்கிற ஒன்றில் போய் குவிகிறது. இதை அடங்குகிறது என்றும் சொல்லலாம்.

நாம் ஏற்கனவே பார்த்த மனதின் இரண்டு முகங்களான ஞானமும், வலிமையும் இவற்றை எப்படி கையாளுகின்றன என்பதில்தான் ஒரு மனிதனின் தனித்துவம், திறமை, முயற்சி, வெற்றி எல்லாம் அமைகிறது.

தான் உணருகின்றவைகளை விழிப்புடன் கவனித்து அதன் மேல் காரியமாற்றும் தன்மை மனதிற்கு மட்டுமே இருக்கிறது.

அது இடும் கட்டளைகளை நிறைவேற்றுவதே மற்ற அவயங்கள்.

அப்படியானால், விழிப்பு நிலையில் செயல்பட மனதில் ஞானமும், உறுதியும் தயாராக இருக்க வேண்டுமல்லவா...

அதென்ன விழிப்பு நிலை?, அதை எப்படி அடைவது?

இதற்கு பதில்தான் குண்டலினி...

நாளைய பதிவில் தொடர்கிறேன்.

-"சித்தர்கள் இராச்சியம்"

குண்டலினி யோகம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!

"ஆரோக்ய வாழ்வுக்கு குண்டலினி யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"

ஆரோக்யமும் ஆன்மீகமும்

30 Nov, 03:34


குண்டலினி - பகுதி 2 - உணர்தல்?

உயிர் என்பது நமது உடலில் நிலை கொண்டிருக்கும் ஓர் ஆற்றல் மையம். அந்த ஆற்றலே நம் உடலை இயக்குகிறது. உயிர் ஆற்றல் ஓங்கும் போது உடல் ஆரோக்கியம் சிறக்கிறது.

உயிர் ஆற்றல் மங்கும் போது உடல் தளர்ந்து நோய் வாய்ப் படுகிறது. இதுதான் இதுவரை நாம் பார்த்த நமது வாழ்வியலின் அடிப்படை.

மனித உடலின் அளவுகளில் வேண்டுமானால் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் நம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உயிர்தான் வாய்த்திருக்கிறது.

அப்படி இருக்கையில் மனிதர்களில் ஏற்றத் தாழ்வு ஏன் உருவாகிறது. இதற்கு எளிமையான ஒரு பதில், தன்னை உணர்ந்து செயல்படுகிறவன் சிறப்புகளைப் பெறுகிறான். உணராதவன் துன்பத்தில் வீழ்ந்து உழல்கிறான்.

இந்த இடத்தில் உணர்தல் என்கிற வார்த்தை மிக முக்கியமானது. ஏனெனில் இதைப் பற்றிதான் இன்று பார்க்கப் போகிறோம். இந்த உணர்தல் என்கிற வார்த்தையின் தத்துவம் மிகப் பெரியது. அதில் நமக்கு தேவையானதை மட்டும் இங்கே பார்ப்போம்.

உணர்தல் என்பது ஒரு தொடர் நிகழ்வு. அநேகமாய் நமது கடைசி மூச்சு இருக்கிற வரையில் ஏதேனும் ஒரு வகையில் இந்த உணர்தல் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த உணர்தல்கள்தான் நமக்கு உணர்வுகளை கொடுக்கிறது.

இப்படி கொண்டு தரும் உண்ர்வுதான் நமக்கு முக்கியம். உணர்தல் ஒரு போதும் நமக்குள் தங்குவதில்லை. ஆனால் அவை தரும் உணர்வு நமக்குள் தங்கிவிடுகிறது.

இப்படி தொடர்ந்து நமக்கும் சேகரம் ஆகிக் கொண்டிருக்கும் உணர்வு ஒரு கட்டத்தில் நமக்கான உணர்தல் என்ன என்பதை தீர்மானித்து விடுகிறது. ஒரு கட்டத்தில் இவையே நம்மை வழி நடத்தவும் ஆரம்பித்து விடுகிறது.

ஒரு உதாரணம் இதை எளிமையாக விளக்கும். குழந்தையாக இருக்கிறீர்கள்.உங்கள் தாயார் உங்களை விழுந்து விழுந்து கவனிக்கிறார். பாதுகாக்கிறார். தாயாரின் அன்பை நீங்கள் உணர்கிறீர்கள்.

நன்றாக வளர்கிறீர்கள். இப்போது உங்கள் தாயார் உடல் தளர்ந்து மெலிகிறார். இப்போது உங்களுக்குள் சேகரமாகி இருக்கும் அம்மாவின் உணர்வு விழித்துக் கொள்கிறது.

இப்போது நீங்கள் அம்மாவை விழுந்து விழுந்து கவனிக்கிறீர்கள்.பாதுகாக்கிறீர்கள்.
இன்னொரு உதாரணமும் பார்ப்போம்.

நீங்கள் குழந்தையாக இருக்கிறீர்கள். ஒரு நபர் உங்களை அடித்து துன்புறுத்திக் கொண்டே இருக்கிறார். அவரின் மீது வெறுப்பு உணர்வு வளர்ந்து கொண்டே போகிறது. இப்போது நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் அந்த நபருக்கு வயதாகிவிட்டது. வலுவிழந்து விட்டார்.

இப்போது உங்களுக்குள் இருக்கும் வெறுப்புணர்வு என்ன செய்யும்? எப்படி வெளிப்படும்?

இதுதான் உணர்தலுக்கும், உணர்வுக்குமான தொடர்பு... இதையே சித்தர்கள் அனுபவம் என்கின்றனர்.

உடலைப் பற்றி உணர துவங்குகிறவர்கள் ஆரோக்கிய வாழ்க்கையின் அவசியம் பற்றிய உணர்வினைப் பெருகிறார்கள்.

அப்படி பெற்ற உண்ர்வு உடல் ஆரோக்கியமாய் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என உங்களைத் தூண்டுகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை தவிர்க்கச் செய்கிறது.

உடற்பயிற்சி செய்ய துவங்குகிறீர்கள், உணவுக் கட்டுப்பாடு செய்கிறீர்கள். பலன் உடல் வலிவும் பொலிவும் பெறுகிறது.

ஆக,நல்ல உணவும், நல்ல உடற்பயிற்சி என்கிற இரண்டும் உடலுக்கு வலிவையும்,பொலிவையும் தருகிறது.

உடலுக்கு சரி, உயிருக்கு என்ன செய்வது?

இதற்கான பதில், நாம் படித்த இரண்டு நெறிகள் பற்றி நினைவிருக்கிறதா?. ஆம், பக்தி நெறி, ஞான நெறி என்கிற இரண்டும்தான் நம் உயிரை வளர்த்து பாதுகாக்கப் போகிறது.

பக்தி நெறி என்பது கோவிலுக்குப் போய் பூசைகள் செய்து சடங்குகள், சம்பிரதாயங்களின் பின்னால் ஓடுவது என்றே நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

சமுக வாழ்வியலின் கவனச் சிதறல்களில் சிக்கி இருக்கும் நம்மை ஒரு ஒழுங்கமைவுக்குள் கொண்டு வருவதே பக்தி நெறியின் நோக்கம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.

இது முதல் நிலை.

இந்த நிலையை உணர்ந்து கொண்டால் அடுத்து யோக நிலை எளிதாய் கைகூடும்.

-"சித்தர்கள் இராச்சியம்"

குண்டலினி யோகம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!

"ஆரோக்ய வாழ்வுக்கு குண்டலினி யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"

ஆரோக்யமும் ஆன்மீகமும்

29 Nov, 03:45


குண்டலினி என்றால்... ஆற்றல்?

உடலும், உயிரும் சேர்ந்து ஒத்திசைந்து இயங்கினால்தான் உயிரினம். இதில் ஏதேனும் ஒன்று மற்றதைப் பிரிந்து போனால் என்னவாகும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இந்த உடலை காக்கவும்,வளர்க்கவும்தான் நம் வாழ் நாளைச் செலவு செய்கிறோம்.

உடலைக் காக்க இத்தனை சிரத்தை எடுக்கும் நாம், உடலின் ஆதாரமாய் இருந்து அதை இயக்கும் உயிருக்காக ஏதேனும் செய்தோமா, என்கிற கேள்வி நியாயமானதுதானே!.

உயிரின் மீது ஆசை இல்லாத மனிதர் நம்மில் யாரேனும் இருக்க முடியுமா?,

அப்படி விலை மதிப்பில்லாத இந்த உயிரை போற்றி பாதுகாக்கவும், அதை வளர்த்தெடுக்கவும், அதற்கு தேவையான ஓய்வு தந்து மெருகேற்ற ஏதேனும் வழி இருக்கிறதா என்ன?

நிச்சயமாக இருக்கிறது!,

அதுவும் மற்ற எந்த மரபியலையும் விட இந்திய மரபியலில் இதற்கு தெளிவான தீர்வுகள் இருக்கிறது.

அதை புரிந்து கொண்டதால்தான் மற்ற நாட்டினர் இந்திய மரபியல் செல்வங்களை நாடி ஓடி வருகின்றனர்.

நமது மரபியல் அளிக்கும் தீர்வுகளை இரண்டு படி நிலைகளாக அணுகலாம். ஒன்று “பக்தி நெறி”, மற்றது “ஞான நெறி”.

இதைப் பற்றி நாம் பின்னர் பேசுவோம். இப்போது உயிரைப் பற்றி மேலும் கொஞ்சம் பார்ப்போம்.

நமது உடலில் உயிர் எங்கே இருக்கிறது என்கிற கேள்வி நம் எல்லோருக்கும் வருவதுதான்.

என்னுடைய வாசிப்பனுபவம் மற்றும் புரிதலின் படி உயிரானது நமது உடலின் உள்ளும், உடலுக்கு வெளியிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒர் ஆற்றல் நிலை என்பதாகவே புரிந்திருக்கிறேன்.

ஆற்றல் இரண்டு வகையானது என நவீன அறிவியல் கூறுகிறது. ஒன்று “நிலை ஆற்றல்”, மற்றது “இயக்க ஆற்றல்”. நிலை ஆற்றல் கிளர்ந்து எழும் போது அது இயக்க ஆற்றலாக மாறுகிறது.

தொடர்ந்து கிளராவிட்டால் இயக்க ஆற்றல் வலுவிழந்து தேய்ந்து மறைந்து விடும். இது நிரூபிக்கப் பட்ட அறிவியல் தத்துவம்.

நான் சொல்கிறேன்!, நமது உயிர்தான் இயக்க ஆற்றல்.

அப்படியானால் நிலை ஆற்றல் என்பது என்ன?

அதுதான் குண்டலினி!

புரியத் துவங்கியிருக்கும் என நம்புகிறேன்.

-"சித்தர்கள் இராச்சியம்"

குண்டலினி யோகம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!

"ஆரோக்ய வாழ்வுக்கு குண்டலினி யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"

ஆரோக்யமும் ஆன்மீகமும்

28 Nov, 03:03


திருவெம்பாவை முழுதும், Thiruvempavai Tamil Full Lyrics..!

மாணிக்கவாசகர் அருளிய தேவாரம் திருவெம்பாவை..!

https://youtu.be/BO5a6Weadvs?si=5QxR8di_Zl5HN7X4

அடியார் பெருமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அற்புதமான திருவம்பாவை பதிகங்களை பாடல் வரிகளுடன் பாடலாக பாடி கொடுத்துள்ளோம்.. இதை கேட்டு இறையருள் பெற வேண்டுகிறோம்..

மார்கழி நோன்பு, Thiruvempavai, Thiruvasagam, TAMIL DEVOTIONAL, Thiruvempavai in Tamil..!


https://youtu.be/BO5a6Weadvs?si=5QxR8di_Zl5HN7X4

ஆரோக்யமும் ஆன்மீகமும்

27 Nov, 03:42


ருத்ராட்ஷம் சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் அணிய வேண்டுமா?

பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாதா? எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாமா?

திருமணம் ஆனவர்கள் ருத்ராட்ஷம் அணியலாமா?


https://youtu.be/ubZP-F5ar28?sub_confirmation=1

ஆரோக்யமும் ஆன்மீகமும்

26 Nov, 03:32


தசவாயுக்கள்...!

வாயுக்களாய் பிரிந்து நின்று, உடலின் செயல்பாடுகளில் பங்களிப்பதாக சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர்.

இவற்றில் ஏதேனும் ஒன்றின் செயல்பாட்டில் குறைபாடு உண்டானாலும் உடலின் ஆரோக்கியம் கெடும்.

அவை பற்றி சுருக்கமாய் இன்றைய பதிவில் காண்போம்.

பிராணன்

மூலாதாரத்தில் சேர்ந்து, இதயத்தில் நின்று மூக்கின் வழியே சென்று திரும்பி வரும் காற்று பிராணன் எனப்படுகிறது. இது மேல் நோக்கி இயங்கக் கூடியது. மற்ற ஒன்பது வகை காற்றுக்கும் ஆதார காற்று இதுதான்.

அபானன்

இது குதத்தை பற்றி நின்று நமது உடலின் கழிவுகளான மலம்,சிறு நீரை வெளியே தள்ளுகிறது. இது கீழ்நோக்கி இயங்கும் தன்மை உடையது.

வியானன்

நரம்புகளின் ஊடே நின்று உணர்வுகளை கடத்தும் வாயு வியானன் எனப்படுகிறது. மூளையின் கட்டளைகளை உறுப்புகளுக்கும், உணர்வுகளை மூளைக்கும் கொண்டு செல்லும் வாயு இது. இதனை தொழில் காற்று என்றும் கூறுவர்.

உதானன்

நமது நாபிக்கமலத்தில் நின்று, குரல் நான்களை அதிரச் செய்வதன் மூலம் ஒலியை எழுப்பும் காற்று உதானன் எனப்படும்.

சமானன்

நாம் உண்ணும் உனவினை ஜீரணித்து அதில் இருக்கும் சத்துக்களை பிரித்து இரத்தத்திற்கும்,உறுப்புகளுக்கும் தரும் காற்று சமானன் எனப்படும். இதற்கு நிரவல் காற்று என்றொரு பெயரும் உண்டு.

நாகன்

இது நமது உடலில் சேர்ந்த நச்சு உணவை புரட்டி வாய் வழியே வெளியே தள்ளும் காற்று இது. குமட்டல், வாந்தி போன்றவைகளை உருவாக்கிடும் காற்று நாகன் எனப்படுகிறது.

கூர்மன்

இது கண்ணில் நின்று அதன் இயக்கம் மற்றும் செயல்பாடுகளுக்கு துணை புரியும் காற்று.

கிரிதரன்

இது நமது உடலில் நோய் தொற்றை உருவாக்கும் கிருமிகள், தூசி, துரும்பு, மாசு போன்றவைகளை உடம்பில் நுழைய விடாமல் தடுக்கும் காற்று. இதற்கு தும்மல் காற்று என்று பெயர்.

தேவதத்தன்

மூளைக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைதல்,அல்லது இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு குறைதல், அல்லது நுரையீரலில் புழங்கிடும் காற்றின் அளவு குறைதல், உடல் உறக்க நிலைக்கு தயாராகும் போது ஏற்படும் காற்று இது. கொட்டாவி, விக்கல் போன்றவை தோன்ற இந்த காற்றே காரணமாகிறது.

தனஞ்செயன்

மேலே சொன்ன ஒன்பது காற்றுகளும் நமது உடலில் இருந்து வெளியேறிய பின்னர் செயல்படும் காற்று இது. நமது உடலில் நுண்ணுயிரிகளைத் தூண்டி உடலை அழுகச் செய்து உடல் உப்பி வெடித்து வெளியேறும் என்கின்றனர். இதனை வீங்கல் காற்று என்றும் அழைப்பர்.

இவற்றை முறையே பராமரிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியதந்த மேம்படுத்தி நீண்ட ஆயுளுடன் வாழ முடியும் என்பதை சுட்டிடவே இந்த தகவலை இன்று பகிர்ந்து கொண்டேன்.

ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

25 Nov, 03:19


எண்ணங்களின் பிடியிலிருந்து நீங்கள் நழுவி நிற்கும் பொழுது நீங்கள் நிற்கும் நிலை தியானம்..!

இழந்து விட்ட உங்களின் சொர்க்கம் உங்களுக்குள் இருக்கிறது

தவறவிட்ட சொர்க்கம் உங்களுக்குள் தான் இருக்கிறது

அதுதான் இருமைகள் அற்ற துரியநிலை

விருப்பு வெறுப்பு இரண்டையும் மனிதன் கடக்கும் போது அந்த சொர்க்கத்திற்குள் வந்து விடுகிறான்

தூய உணர்வு பரிசுத்த உணர்வு என்பது நல்ல எண்ணங்களை நிரப்பி கொள்ளுதல் என்பதாக அல்ல, நல்ல எண்ணங்களை நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொழுது கெட்ட எண்ணங்களும் உங்களை ஆக்கிரமித்துக் கொள்ளும் இரண்டிற்கிடையே விருப்பு வெறுப்பு வந்துவிடும் ஆக பரிசுத்த உணர்வு என்பது எண்ணங்கள் தான் அசுத்தம் அந்த எண்ணங்களின் விடியிலிருந்து நழுவி நிற்கும் பொழுது அதுதான் பரிசுத்தம்

உணர்பவன் வெறுமனே ஒரு கண்ணாடி கண்ணாடி தன்னில் வந்து விழும் எந்த உருவத்தையும் பிடித்து வைத்திருப்பதில்லை அதுபோல் இந்த உணர்வு தூய நிலை உணர்வு

எண்ணங்கள் சுதந்திரமாக வந்து சுதந்திரமாக போகின்றது என்றால் நமக்குள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றால் அதுவே சரியான உயர் ஆன்மிகநிலை.

நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”

ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

24 Nov, 07:43


Chiropractic therapy..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

23 Nov, 00:42


நோய்களை பரப்பும் வைரஸ்களை தடுக்கும் நமது பாரம்பரிய வாழ்க்கைமுறை...!

நோய்கள் வராமல் தடுக்கவும், வந்தால் பரவாமல் இருக்கவும் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகள் தான் நம் சம்பிரதாயம் என்பது.

உலகமே திரும்பி பார்த்து வியக்கும் நமது இந்துக்களின் பாரம்பரிய வாழ்க்கைமுறை...!


https://youtu.be/9bSlh0R8xXY

ஆரோக்யமும் ஆன்மீகமும்

22 Nov, 03:20


கார்த்திகை தீபம், Karthigai Deepam..!

தீபம் ஏற்றுவதற்கு காரணம் என்ன? அதற்கான அறிவியல் பின்னணி என்ன?

தீபம் ஏற்றும் முறை மற்றும் கார்த்திகை தீபம், பரணி தீபம், மகாதீபம் பற்றிய தகவல்கள்..!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் விளக்கம்..!


https://youtu.be/L_XcmwuHYB8?sub_confirmation=1

ஆரோக்யமும் ஆன்மீகமும்

21 Nov, 03:04


உண்மையான பிரேமை..!

அன்பர்களே..

பக்திக்கும்,பிரேமைக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தினை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


நிச்சயம் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.

உதாரணமாக சொல்லப்போனால் வெறும் பக்தியுள்ள ஒருவனுக்கு துன்பம் வருகின்றது என்று வைத்துக்கொள்வோம்.

அப்போது அவன் கடவுளிடம் சென்று எவ்வாறு தன் நிலையை எடுத்துரைக்கிறான் என்றால், "கடவுளே என்ன இது? எனக்கு இப்படி நேர்ந்து விட்டதே..

நீதான் இந்த துன்பத்தை போக்க வேண்டும்.

அல்லது அதை சமாளிக்கும் ஆற்றலையாவது அருள வேண்டும்"-என்று முறையிடுகிறான்.

ஆனால் பரம்பொருளை காதல் கொண்டு நேசிப்பவனோ அந்த துன்பத்தையே வேறு விதமாக பார்க்கிறான்.

"ஏ ப்ரபோ நீ எனக்கு இந்த கடினத்தை தந்துள்ளாய்..! அதை நான் பரிபூரணமாக ஏற்கிறேன்.

காரணம் இல்லாமல் நீ எனக்கு எதையும் நிகழ்த்த மாட்டாய்..!

ஏனெனில் எனது நலனில் என்னை காட்டிலும் அக்கரை உள்ளவன் நீ. எனவே அந்த இன்னலையும் நான் இனிமையாக ஏற்கிறேன்."

-என்று அந்த துன்பத்தையும் வரவேற்க்க தொடங்கிவிடுகிறான்.

இன்னும் சொல்லப்போனால் “பக்தியின் அதி உன்னத வளர்ச்சி நிலையே பிரேமை ஆகும்.”

இந்த வகையிலே பார்க்கின்றபொழுது ஓர் மன்னனுக்கு மகளாக பிறந்தும், இந்த பொய்யான பௌதீக உலகின் போகங்களை ஒதுக்கி, அந்த பரம்பொருளான கண்ணனிடம் அழிவில்லா காதல் கொண்ட "பக்த மீரா"-வின் சரித்திரம் அனைவருக்கும் பிரசித்தம்.

அவரின் திருவடியை பின்பற்றினால் நமக்கெலாம் நற்கதி நல்கும் என்பதில் ஐயமில்லை.

மேலும் இந்த நேரத்தில் நான் ஸ்ரீ சங்கரபகவத்பாதரின் பாஜ கோவிந்தத்தை நினைவில் கொள்கிறேன்.

இந்த பௌதீக உலகின் அவலங்களை மிக அற்புதமாக எடுத்துரைக்கிறார்.

அதிலிருந்து மீளும் வழியையும் அருள்கிறார். நீங்களும் அதனை பொருள் உணர்ந்து அறிந்து ஒழுக வேண்டுகிறேன்.

நாம் மற்றவர்களை பற்றி யோசிப்பதற்கு முன் நாம் நம்மை பற்றி யோசிக்க வேண்டும்.

நம்முள் இருக்கும் ஜீவாத்மாவை பற்றி யோசிக்க வேண்டும். அந்த பரமாத்மாவை பற்றி யோசிக்க வேண்டும்.

இரண்டிற்க்கும் உள்ள உறவைப்பற்றி யோசிக்க வேண்டும். என்று மீண்டும் அந்த பரமாத்மாவோடு ஜீவாத்மாவாகிய நான் சேர்வது என்கிற அற்புதத்தினை பற்றி யோசிக்க கொள்ள வேண்டும்.

இவைகளுக்காகத்தானே இந்த மானுட பிறவி எனும் அரிய வாய்ப்பை நமக்கு அவன் தந்துள்ளான்??

அதிலும் இன்று இருக்கும் உலகச்சூழலை பார்க்கவே பயமாக உள்ளது.

அதில் நடக்கும் சம்பவங்களை நோக்கும் போது மனம் பதைக்கின்றது.

இந்த பௌதீக-உலகின் பொய்யான நிகழ்வுகளை உண்மை என நம்பி மென்மேலும் தேவையற்ற செயல்களையும், அதனால் உண்டாகும் பாவங்களையும் சுமந்து கொண்டிருக்கும் அன்பர்கள் விழிக்க வேண்டும்.

அதற்க்கு நாம் அவர்களுக்கு விழிப்புணர்வு நல்க வேண்டும்.

அது அடியர்களாகிய நம் கடமையும் உரிமையும் ஆகும்.

*நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”*

*ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!*

ஆரோக்யமும் ஆன்மீகமும்

20 Nov, 03:28


நாம் இறப்பதற்கு முன்பே நம்முடைய உறுப்புகளை சாகடித்துவிடுவோம்.

"பாசிடிவ் உணவுகளை உண்ணுங்கள்"


நம்முடைய ஆரோக்கியம் நம் கையில்தான் உள்ளது.

நல்ல ஆரோக்கியம் என்பது நல்ல உணவு, நல்ல சுற்றுச்சூழல், நல்ல மனநிலை, முறையான பழக்கவழக்கங்கள் ஆகிய 4 அம்சங்களை சார்ந்துதான் இருக்கிறது.

எந்த உணவை சாப்பிட வேண்டும், எப்படி உண்ண வேண்டும் என்பதை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

முறையான உணவுப் பழக்கத்தை கடைபிடித்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால் நாம் இதை கடைபிடிப்பதே இல்லை.

உணவில் பாசிட்டிவ் உணவு, நெகட்டிவ் உணவு என்று 2 வகை உண்டு.

எளிதில் சீரணமாகக்கூடிய, வயிற்றுக்கு பிரச்னை தராத உணவுகள் - பாசிட்டிவ் உணவுகள்.

அதற்கு நேர்மாறானவை நெகட்டிவ் உணவுகள்.

பாசிட்டிவ் உணவுகளையெல்லாம் தவிர்த்துவிட்டு, மசாலா, அச்னோமோட்டோ, டால்டா போன்ற ஒவ்வாமை பொருட்கள் கலந்த நெகட்டிவ் உணவுகளையே இன்று நாம் பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறோம்.

தண்ணீருக்கு நிகராக வேறு ஒரு பானம் கிடையாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஆனால் தாகம் எடுக்கும் சமயங்களில் எல்லாம் நாம் பெரும்பாலும் ரசாயனம் கலந்த அன்னிய குளிர்பானங்களையே விரும்பி அருந்துகிறோம்.

இதனால் போதிய அளவு தண்ணீர் உடலுக்கு கிடைப்பதில்லை.

இதுபோன்ற காரணங்களால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு இன்னல் அடைகிறோம்.

காலையில் எழுந்தவுடன் பல் துலக்காமல் கூட காபி குடிக்கிறோம்.

மேலும் பன், பிஸ்கட் என்று சாப்பிடுகிறோம்.

நாள் முழுவதும் வடை, பஜ்ஜி என்று நொறுக்குத் தீனிகளை சாப்பிடுகிறோம்.

இன்றைய சூழலில் நம்முடைய உழைப்பு குறைவாகத்தான் இருக்கிறது.

ஆனால் எடுத்துக்கொள்ளும் உணவோ அதிகமாக இருக்கிறது.

இது ஆரோக்கிய வாழ்க்கைக்கு உகந்ததல்ல.

இந்த பழக்கம் தொடர்ந்தால் நாம் இறப்பதற்கு முன்பே நம்முடைய உறுப்புகளை சாகடித்துவிடுவோம்.

இதற்கு நம்முடைய நாக்கை முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.

நோய் வந்தால் நாம் சந்தோஷப்பட வேண்டும்.

ஏனென்றால் நம் உடலில் கழிவுத்தன்மையும், நச்சுத்தன்மையும் வெளியேறும் நிகழ்வுதான் நோய்ஆகும்.

நாம் உண்ணும் உணவு கழிவாக மாறிய பிறகு அது வெளியேற்றுகிறது.

கழிவுகள் அதிகமாக சேரும்போது மலக்குடல் சுத்தமாக இருப்பதில்லை.

அதுபோல நுரையீரலும் சுத்தமாக இருப்பதில்லை.

அதில் இருக்கின்ற 90,000 சிரைகளில் 60,000 சிரைகளில் கார்பன்-டை-ஆக்சைடு படிந்து விடுகிறது.

சருமத்தில் கூட கழிவுகள் தங்கிவிடுகின்றன.

இவையெல்லாம் வெளியேறுகிற நிகழ்வுதான் நோய்.

கழிவுகள் சேராமல் தற்காத்துக் கொள்வதுதான் ஆரோக்கியம்.

*"இதற்கு நம்முடைய நாக்கை முதலில் கட்டுப்படுத்த வேண்டும்.*"

*ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!*

ஆரோக்யமும் ஆன்மீகமும்

19 Nov, 03:09


ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்து இருந்தால் தான் ருத்ராட்சமே கிடைக்கும்..!

அவர்களுக்கு ருத்ராட்சம் பற்றி கேட்கவோ படிக்கவோ முடியும்..!

சிவ சொரூபமான ருத்ராட்ச மகிமை..!


https://youtu.be/lln6TTv4MN4?sub_confirmation=1

ஆரோக்யமும் ஆன்மீகமும்

18 Nov, 07:30


நாம் எல்லோருமே கடவுளின் சொரூபங்களே..!

மன அமைதியும் தவமும்..!


எவரிடத்தில் ஆன்ம நாட்டம் மிகுந்திருக்கிறதோ, எவரிடத்தில் அருள் தாகம் ஓங்கியிருக்கிறதோ, எவரிடத்தில் தியானத்தில் அதிக விருப்பமிருக்கிறதோ அவர் மெய்ப் பொருளை அடைந்திடுதல் திண்ணம்.

நாம் எல்லோருமே கடவுளின் சொரூபங்களே, நாம் அனைவருமே நடமாடும் கடவுளே என்ற பேதமற்ற மனப்பான்மை ஒருவருக்கு வளரும் மட்டும், அவர் தெய்வ சன்னிதியை நெருங்கி விட்டார் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இத்தகைய மனப்பான்மையோடு உடலின் தேவைகள் குறையக் குறைய முகத்தில் மலர்ச்சியைக் காணலாம்.

இந்த உடலின் தேவைகள் பெருகும் அளவுக்கு ஒருவருக்குத் தன்னைப் பற்றிய எண்ணம் மேலோங்கி விடுகின்றது.

நான், எனது, தனது என்ற எண்ணம் இல்லாதவர்கள் மூலம்தான் மிகப் பெரிய சாதனைகள் நிகழ்கின்றன.

ஆணவம் கொண்ட மனம் தொலைதூரத்தில் இருளில் மயங்கி நிற்கிறது.

ஆசை கொண்ட உள்ளம் அமைதியை இழந்து விடுகிறது. அது தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக இடைவிடாது போராடுகிறது.

ஆனால், இந்த ஆசையை எப்படி ஒழிப்பது ? அதற்கும் ஒரு உபாயம் உள்ளது.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/J_EXP0wqRw8?sub_confirmation=1

அது என்னவென்றால் நம் ஆசை தீயதாகவோ, நம் தகுதிக்கு மீறியாகவோ உள்ள போதுதான் அதை அடைவதற்கு கடும் மனப் போராட்டமும், உடலில் சக்தி விரையமும் ஏற்பட்டு துன்பப்பட நேரிடுகிறது.

அவ்வறில்லாமல் நம் வரம்பிற்கு உட்பட்ட துய ஆசையாக உள்ள போது மனமோ, உடலோ அதிகப் பிரயாசை அடைவதில்லை. மேலும் அந்த ஆசை நம்மை நல்வழிப்படுத்தி, நல்லோர் இணக்கத்தையும் ஏற்படுத்தித் தருகிறது.

ஏனவேதான் நம் முன்னர்கள் ஆசை தூயதாகவும், ஆழ்ந்ததாகவும் இருந்தால் அது நிச்சயமாக நிறைவேறும் என்றார்கள்.

பரநாட்டம், அருள் தாகம், பேதமற்ற நிலை, ஆணவமற்ற மனப்பான்மை, ஆசைகளை தூயதாக்கி நெறிப்படுத்திய நிலை, நல்லோர் இணக்கம் இவை அனைத்தும் கூடிய ஒருவரிடம் ஏற்படும் மாற்றமென்ன ?

அது என்னவென்றால், அவர் மனம் அமைதியடைந்து, அறிவின் பிரகாசம் ஓங்குகி விடுகிறது. இதனால் அவரின் மனத் தாமரையானது மலர்ந்து தெய்வ சக்தியை தன்னுள் ஏற்று தன்மயமாய் தவமியற்ற தயாராகி விடுகிறது.

அறிவு ஓங்கும் அளவிற்கு ஒருவரிடம் மௌனம் விளங்குகிறது.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/J_EXP0wqRw8?sub_confirmation=1

எனவே மௌனத்தால் மௌனத்தை அடைவது எளிதாக இருக்கிறது. இந்த உலகில் இருளுக்குள்ளே ஒளி பிரகாசிக்கிறது.

மரணத்திற்கிடையே உயிர் ஓங்குகிறது, பொய்களுக்கிடையே மெய் மேலிடுகிறது. துன்பங்களுக்கெல்லாம் நடுவில் இன்பமும் நிறைந்திருக்கிறது.

இப்படி எல்லாத் தீமைகளையும் இடைவிடாது நீக்கிக் கொண்டே இருக்கிற அந்த வல்லமையான சக்தியே நம் பிறப்படமும், இருப்பிடமுமாகும்.

அதை அடைய வேண்டும் என்பதே நம் உயிரின் இலட்சியமாகும்.

அது மட்டுமே நம் இலக்காகும். மற்ற எந்த இலட்சியங்களும் நம்மை மேன்மை படுத்தாது.

எனவே மீட்சிக்காண வழி மன அமைதியும், தவமும் மட்டுமே.

நன்றி - இராம் மனோகர்..

"ஆன்ம ஞானத்தை அடைய ஞானிகள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"


*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/J_EXP0wqRw8?sub_confirmation=1

ஆரோக்யமும் ஆன்மீகமும்

17 Nov, 03:19


Astrological healing therapy..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

15 Nov, 08:11


நாளை விஷ்ணுபதி புண்யகாலம்..!

கடுமையான கஷ்டமா?

கொடுமையான வாழ்க்கையா?

மன நிம்மதி இல்லையா?

தொழிலில் வளர்ச்சி இல்லையா?

பெரும் நஷ்டமா?கடனா??

திருமணம் சம்பந்தமான சங்கடங்களா?

குழந்தைகள் சம்பந்தமான பிரச்சனையா?

*வழிபடுங்கள்*

*விஷ்ணுபதி புண்ய காலத்தில்*

*16- 11-2024* *சனிக்கிழமை காலை 7-32க்கு மேல் மதியம் 1.30க்குள்*

இந்த நேரத்தில்-

பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மர நமஷ்காரம் செய்து 27 பூக்களை கையில் வைத்து கொண்டு 27 முறை கோவில் பிரகார வலம் வாருங்கள்..

ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை
கொடிமரத்திற்கு முன் வைத்து பக்தியுடன் வணங்குங்கள்..

27 சுற்று முடித்த பின்பு
மீண்டும் கொடிமர நமஸ்காரம் செய்து தியானியுங்கள்..

கொடிமரம் இல்லாத பெருமாள் கோவில்களில் பிரகாரம் வலம் வந்தாலே போதும்..

பின்பு தாயாரையும் பெருமாளையும் வழிபட்டு தங்களின் பிரார்த்தனையை மனமுருகிச் சொல்லுங்கள்..

தங்களின் நியாயமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த மூன்று விஷ்ணுபதி புண்ய காலம் முடிவடைவதற்குள்
*நிறைவேறியே தீரும்*
*நிறைவேறியே தீரும்*

கோவிலுக்குச் செல்ல வாய்ப்பில்லாதவர்கள்...

வீட்டிலேயே பெருமாள் படத்தை வைத்து மேலே சொன்ன முறையில் கொடிமர நமஸ்காரம் செய்வது போலவும்..

கோவில் பிரகாரம் வலம் வருவதைப் போலவும்...

*மானசீகமாக மனதினிலே* *தியானித்து* பெருமாளை வழிபாடு செய்யலாம்

அல்லது வீட்டில் உள்ள பெருமாள் படத்திற்கு அல்லது விக்ரகத்திற்கு முன் விளக்கேற்றி அதை 27 முறை சுற்றி வரலாம், நாளை காலை (சனிக்கிழமை) பெருமாள் கோவில் சென்று மேலே சொன்ன முறையில் வழிபாடு செய்தால் பெருமாளின் பேரருள் கிடைக்கும்.வாழ்க்கையில் நலம் கூடும்.

*துன்பத்தில் வாழும் மக்களுக்காக..!*

*ஓம் நமோ நாராயணாய..!*

ஆரோக்யமும் ஆன்மீகமும்

15 Nov, 05:52


பிராண சக்தி..!

பிராணாயாமம் என்றால் மூச்சைக் கட்டுப்படுத்துவது என்று பொதுவாகச் சொல்வார்கள்.

ஆனால் பிராணன் என்றால் மூச்சு அல்ல.

பிராணவாயுவுமல்ல. ஆனால் பிராண வாயுவின் மூலம் பெறக் கூடிய சக்தி அது.

சுவாசத்தைத் தூண்டுவதும், அந்த சுவாசத்திற்குள் சக்தியாக இருப்பதுவும் பிராண சக்தியே.

சில நூல்களில் இந்திரியங்களையும், மனதையும் கூட பிராணன் என்று சொல்வதுண்டு.

எது செயல்களின் மூலம் தோற்றத்திற்கு வருகிறதோ அதை சக்தி என்போம்.

ஆனால், பிராணனோ செயலாக பரிணமிக்காமல் அடிப்படை மூலசக்தியாகத் திகழ்கிறது.

இந்த உடலில் மட்டுமல்ல உலகில் கணப்படுபவை எல்லாம், இயங்குகிற எல்லாம் பிராணனின் சக்தியாலேயே இயங்குகின்றன.

எனவே பிராணன் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஆதாரசக்தியின் பொதுப் பெயர். பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றல்களின் தொகை பிராணன் எனப்படுகிறது.

பிரளய காலத்தில் ஒடுங்கியிருக்கிறது. சிருஷ்டியின் போது இயக்கத்துக்கு வருகிறது.

உயிர்களின் நாடி, நரம்புகளிலெல்லாம் செயலாகத் திகழ்வது பிராணனே. எண்ணமாக வடிவெடுப்பதுவும் பிராணனே.

அப்படியானால் இதுவே ஆதார சக்தியாக இருக்கும் போது, இது எதில் போய் ஒடுங்குகிறது ?

என்ற கேள்வி எழும். அது ப்ரம்மத்தில் போய் ஒடுங்குகிறது.

சிருஷ்டி காலத்தில் அந்த ப்ரம்மத்தின் சலிப்பில் எண்ணமாய் வெளிப்படும் ஆதி சக்தியே சிவனாகவும், சக்தியாகவும் வெளிப்படுகிறது.

சிவன் என்பது ஸ்தூல வடிவத்தின் வித்து, சக்தி என்பது சூக்கும சக்தியின் வித்து.

இந்த இரு பெரும் சக்திகளின் சேர்க்கையே இந்தப் பிரபஞ்சம்.

இந்த சிவமாகிய ஆகாசத்தோடு பிராணனாகிய சக்தியின் கூட்டுறவால் வந்ததே இந்தப் பிரபஞ்சம்.

நம் மானிட சரீரமும் அப்படி வந்ததே. நாம் நுகருகின்ற மற்ற பூதங்களும் ஆகாசத்திலிருந்து வந்தவையே.

அவற்றின் தன்மாத்திரையான சூக்கும சக்தியாக பிராணன் திகழ்கிறது.

இந்த சிவசக்தி ஐக்கியமாகி ப்ரம்மத்திலிருந்து வெளிவந்த நிலையையே பெண்ணாக உருவகப்படுத்தி ஆதிபராசக்தி என்று வணங்குவார்கள்.

இப்படிப்பட்ட சூக்கும, ஆதார மூல சக்தியாகத் திகழும் பிராண சக்தியைக் நம் உடலுக்குள் நிலை நிறுத்திக் கையாளுவதையே பிராணாயாமம் என்கிறோம்.

இதனால் நம் தூல சரீரமும், சூக்கும சரீரமும் பலப்படும். இந்த பிராணனே மனமாக விளங்குவதால் மனோசக்திகள் பெருகும்.

எனவே மனம் சலனமடையாமல் எளிதில் வசப்பட்டு ஒருநிலைப் பாங்கு வாய்க்கும். யோக சாஸ்திரம் அருளிய பதஞ்சலி முனிவர் இந்த பிராணாயாமத்தை வெகு சிறப்பாகச் சொல்லவில்லை.

சிறிதளவு பழகினால் போதும் என்கிற அளவே அவர் சொல்லியிருக்கிறார். அவருக்குப் பின்னால் வந்த சித்தர்களே பிராணாயாமம் குறித்து பல விவரங்களைக் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள்.

இந்த பிராண சக்தியை நம் தேகத்தில் நிலைநிறுத்தப் பழகும் போது நம் சிந்தனாசக்தி, கிரியாசக்தி, இச்சாசக்தி மூன்றும் நன்கு செயலாற்றுகின்றன.

நம் சித்தமானது பிராணனை ஏற்றுக் கொண்டு பல்வேறு சக்திகளாக அதை மாற்றுகிறது. எனவே உடலை அழியாமல் காக்க முடிகிறது.

பிராணசக்தியின் மூலம் உடலின் பல்வேறு இயக்கங்களையும், நாடி நரம்புகளையும் நாம் வசப்படுத்தலாம். இதையே சித்திகள் என்கிறோம்..

தொடரும்..!

"ஆன்ம ஞானத்தை அடைய ஞானிகள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

ஆரோக்யமும் ஆன்மீகமும்

14 Nov, 02:53


ஞானவிழிப்பு என்றால் என்ன?

நீங்கள் இரவு ஆழ்ந்த உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள் உங்களின் மனைவி என்னை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கத்துகிறார்

நீங்கள் உடனே எழுந்து என்னாச்சு என்று கேட்கும் பொழுது

கப்பலில் இருந்து கீழே விழுந்து விட்டேன்

கடலில் முதலை என்னை கவ்விக்கொண்டு இழுத்துச் செல்கிறது காப்பாத்துங்கள் காப்பாத்துங்கள் என்கிறார்

இப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒரு நீண்ட கத்தியை எடுத்துக்கொண்டு அவர் எந்த க் கடலில் விழுந்துவிட்டார் என கேட்டு அங்கு நீங்கள் சென்று அந்த முதலிடம் சண்டை போட்டு உங்கள் மனைவியை காப்பாற்றுவீர்களா?

அல்லது

அவரை உறக்கத்திலிருந்து எழுப்பி விடுவீர்களா?

நீங்கள் உறக்கத்திலிருந்து எழுப்பி விட்ட உடன் அந்த கப்பல் கடல் முதலை உடல் இவரின் உடல் சிந்திய ரத்தம் எல்லாம் மறைந்து போகிறது மாயமாகி போகிறது அல்லவா

மனித அவஸ்தை என்னும் அனுபவங்களில் இது வேறு ஒரு பரிமாணத்தில் நிகழக்கூடியது அந்த

கனவை நீங்கள் தீர்மானிப்பதில்லை உங்களின் மனமே கனவை தீர்மானித்துக் கொள்கிறது

இந்த கனவின் நுட்பத்தை சற்றுகூர்ந்து பாருங்கள்

ஒருவர் இந்த ஊரில் இந்த வீட்டில் இந்த மெத்தையில் படுத்துக்கொண்டு நான் ஒரு கனவே காண்கிறேன் என அவர் கனவை காண்பதில்லை

அதாவது கனவை காண்பவனான அந்த நபர் இங்கேதான் படுத்து உறங்குகிறார்

ஆனால் கனவில் உடல் எடுத்த அந்த *மனோ மய நான்* இன்பத்தில் சந்தோஷிக்கிறது துன்பத்தில் துடித்து துவள்கிறது இறைவா இறைவா என கதறுகிறது

ஆனால் கனவு காணும் இவர் எந்தவித துன்பத்திற்கும் ஆளாவதில்லை இவர் இங்கு சுகமாக உறங்குகிறார்

விழித்த பிறகு அது நிஜமில்லை என புரிந்து கொள்கிறார்

வாழ்வும் நீங்கள் தீர்மானித்தது போல் உங்களுக்கு தோன்றினாலும் அது மனதின் எதிர்வினை காரணிகளால் அமைக்கப்படுகிறது
அல்லது

எதிர்வினை தூண்டல்களால் அமைக்கப்படுகிறது

இந்த வாழ்வை அனுபவிக்க கூடிய அந்த ஆத்மா எந்தவித பாதிப்பும் இன்றி தன்னுள் சலனமற்றே இருக்கிறது

அனுபவிப்பவனாக தன்னை பாவித்து கொள்கிற *மனோமய நான்* என்ற இந்த முடிச்சு மட்டுமே துன்பத்தில் துவண்டு போகிறது இன்பத்தில் கூத்தாடுகிறது

தூக்கத்திலிருந்து விழிப்பு பெறுவது போல இந்த எதிர்வினை காரணிகளிலிருந்து விழிப்பு பெற்று விட்டால்

அதுவே

*ஞான விழிப்பு ஆன்ம விழிப்பு*
எனப்படுகிறது

இந்த வாழ்வு இன்பத்தையும் துன்பத்தையும் கடந்ததாக அனுபவம் ஆகிறது

இவ்வாறு விழிப்பு பெற்ற உணர்வு இன்பத்தை இன்பத்தால் தூண்டப்படுவதும் இல்லை துன்பத்தால் துன்பப்படுவதும் இல்லை அது சமநிலை பெற்று விடுகிறது

அப்பொழுது அது தனது சொந்த விருப்பு வெறுப்புகளை இழந்து விடுவதால் இறைவனில் லயமாகி போகிறது..

ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

13 Nov, 07:23


குருவின் வல்மையான ப்ராண சக்தியானது சீடனுக்குள் புகுந்து அவனை நல் வழியில் செலுத்த ஆரம்பிப்பதையே தீட்சை என்கிறோம்..!

வீடு பேற்றை அடைய வேண்டும் என்ற முனைப்பு உள்ளவர்கள் மனம் தீமையை இயல்பாகவே விலக்கி விடும்.

அவ்வாறு தீமையை விலக்குவதால் நன்மையும், உண்மையுமான இறைவனை நோக்கி மனம் திசை மாறும்.

இது இயல்பான இயம யோகமாகும்.

இந்த இயம நிலையில் உள்ளவர்களைத் தேடி குருவானவர் வருவார்.

வருவார் என்றால் அவர் நாம் இருக்கும் இடத்திற்கு வருவார்.

அதை நாம் புரிந்து கொண்டு, அவரை உணர்ந்து கொண்டு அவரை சரண் புகுந்து கொள்வோம்.

குரு என்றால் பெரியவர் அல்லது இருட்டை விலக்குபவர் என்று பொருளாகும்.

பொதுவாக மனிதனின் ஆதி குரு சிவன் என்பார்கள்.

ஆரம்ப குரு மாதாவும், பிதாவுமே. இதிலும் கூட ஒரு சூக்குமம் உள்ளது.

தாய், தந்தையர் ஸ்தூல உலகில் உலகாயத்தில் நமக்கு குருவாக இருப்பது உண்மைதான்.

ஆனால் உயிர்கள் என்ற பொதுவான நிலையில் மாயையான மாதா பரா சக்தியே சூக்கும நிலையில் குரு ரூபிணியாகத் திகழ்கிறாள்.

அவள், மீன் தனது முட்டையை கண்ணால் பார்த்தும், ஆமை தன் முட்டையை மனதால் நினைத்தும், கோழி தன் முட்டையைத் தொட்டும் அடைகாத்து அருள்வது போல் உயிர்களை மூன்று நிலைகளில் சூக்கும குருவாக நின்று பக்குவப்படுத்துகிறாள்.

இதையே மச்ச தீட்சை, குக்குட தீட்சை, கமட தீட்சை என்பார்கள்.

உலகுக்கே தந்தையான சிவனே ஆதி குருவாகத் திகழ்ந்தாலும் தன் மகனாகிய முருகனையே குருவாகக் கொண்டு உபதேசம் பெற்று சற்குருவின் தேவையை உலகுக்கு உணர்த்தியதால் அவர் ஆதி குரு மட்டுமல்ல, ஆச்சாரியன் என்ற நிலையையும் பெறுகிறார்.

ஆச்சாரியன் என்றால் நடந்து காட்டுபவர் அல்லது ஒரு சம்பிரதாயத்தில் இறங்கி வாழ்ந்து காட்டுபவர் என்று பொருள்.

குரு என்பவர் உள் மனம், தவம், அறிவு இவற்றை தெளிவிப்பவர். குருவானவர் பேச வேண்டும் என்ற அவசியம் கூடக் கிடையாது.

மௌனமாகவே இருந்தும் அதாவது சூக்கும நிலையிலும் கூட நல்வழிப் படுத்துவார்.

இதையே மௌனகுரு என்பார்கள்.

தக்ஷிணா மூர்த்தியும் கூட மௌனகுரு என்று சொல்லப்படுவதுண்டு.

சிவன் முருகனிடமும், பராசக்தி சிவனிடமும், ராமர் வசிஷ்டரிடமும், கண்ணன் சாந்தீபனிடமும் உபதேஷம் பெற்று குருவின் தேவையை உலகுக்கு உணர்த்தியதாகச் சொல்வார்கள்.

தாத்தாத்ரேயரோ ஒருபடி மேலே போய் உலகில் உள்ள சின்ன சின்ன விஷயங்கள், உயிரினங்களிடமிருந்தெல்லாம் பாடம் கற்று இயற்கையையே குருவாக அடையாளப்படுத்தினார்.

குருவுக்கும் சீடனுக்கும் ஏற்படும் தொடர்பே தீட்சை.

குருவின் வல்மையான ப்ராண சக்தியானது சீடனுக்குள் புகுந்து அவனை நல் வழியில் செலுத்த ஆரம்பிப்பதையே தீட்சை என்கிறோம்.

இது மந்திர ரூபமாகவோ, ஸ்பரிசமாகவோ, கண்பார்வை மூலமாகவோ, எண்ணத்தின் மூலமாகவோ நடை பெறும்.

குருவானவர் சீடனோடு சூக்குமத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வார்.

கேள்விகள் கேட்டுத் தெளிபவனை விட குருவின் உபதேஷத்தை எந்த வித மறுப்பும் இன்றி அப்படியே ஏற்றுக் கொள்பவன் விரைவில் மேன்மை அடைவான்.

ஓம் சற்குருவே போற்றி.

அவர் தம் கருணையே போற்றி.

சற்குரு பெருமானின் திருப் பாதங்களே சரணம்.

*"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"*

*"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"*

ஆரோக்யமும் ஆன்மீகமும்

12 Nov, 03:07


நமது உடலும் சூட்சும சக்திகளும்..!

1. நமது மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா? நாம் எதை நினைக்கிறோமோ அங்கு நமது மனம் செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.

நாம் தீயவர்களை நினைக்கும்போது நமது சூட்சும சக்தி அவர்களுடன் இணைந்து நமது வலிமை குறைகிறது. இறைவனை எண்ணும்போது சூட்சும சக்தி வலிமை பெற்று நம்மை காக்கிறது.

2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.

3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.

4. ஒவ்வொரு மனிதனுக்கும் சூட்சும சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.

5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.

6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.

7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.

8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.

9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.

10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.

11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல. அவனின் சூட்சுமசக்தி காந்தசக்தி போல அவனைச் சுற்றி பாதுகாத்து வருகிறது .

12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.

13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள தொடர்பின் பாதிப்பே ஆகும்.

14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.

15. நோயாளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.

16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.

17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.

18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.

19. ஒரு மனிதனை புண்படச் செய்வது நூதனமான கொலைக்கு சமம்.

20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.

21. நாம் விஞ்ஞான அறிவை மட்டும் பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.

22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.

23. வலி என்பது உடலின் மொழி. அதை ஒரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.

24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.

25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.

26. உடலின் உறுப்புக்கள் அனைத்தும் மனதுடன் சேர்ந்து இயங்குவதே ஆரோக்கியம். மனது நோயுற்ற பின்னரே உடல் நோயுறுகிறது.

27. விவசாய நிலத்தில் தாயின் கருவறையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.

28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.

29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.

30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.

31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.

32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.

33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய சக்திகள் நீங்கும்.

34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.

35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரீரத்தின் கவசம் பலம் பெறுகிறது.

36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.

37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடக்கவும்.

38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.

39. சூரிய ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.

40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரீரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.

41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.

42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.

43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.

44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.

45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.

46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.

47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.

48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.

49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.

50. தூக்கம் என்பது, விழிப்புணர்வு அற்ற தியானம்.
தியானம் என்பது, விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.

சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்!

வாழ்வில் வளம் பெறுவோம்!

ஓம் பரப்பிரம்ம பஞ்சபூத பிரபஞ்ச சக்தியே போற்றி.!

ஆனந்தமான வாழ்வுக்கு பிரபஞ்ச சக்தி பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் புரியவைத்து அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

11 Nov, 02:49


குளிப்பதற்கு முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

4⃣ 1 Glass of Water
              before going to
              Bed - 🕙 avoids
              Stroke  or Heart
              Attack.

இரவு படுக்கும் முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் பருகுவது மாரடைப்பு, பக்கவாதம் இவற்றிலிருந்து பாதுகாக்கும்.

      'When someone
       shares something of
       value with you and
       you benefit from it,
       You have a moral
       obligation to share it
       with others too.'
So..., DO yours!..

*யாராவது நமக்கு ஏதாவது நன்மை தரும் செய்தியை பகிர்ந்து, அதனால் நாம் பலனடைந்தால் அத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருவது நமது தார்மீகப் பொறுப்பாகும். எனவே தாங்களும் உங்களது  பங்கினை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.*

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கை முறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்

ஆரோக்யமும் ஆன்மீகமும்

11 Nov, 02:49


உடலின் மொழி..!

நமக்கு நாமே மருத்துவர்..!

கிடைத்தற்கரிய கொடையான நமது உடல் ஒரு முறை கெட்டுவிட்டால் சீர்செய்யவே இயலாது. உடலை கெடாமல் பாதுகாப்பது ஒன்றே மிகவும் எளிய வழியாகும்.

1. The *STOMACH*
     is injured when
     you do not have
     breakfast in the
     morning.

காலைச் சிற்றுண்டி உண்ணாவிட்டால் நமது இரைப்பை பாதிப்புறும்.

2. The *KIDNEYS*
     are injured when
     you do not even
     drink 10 glasses
     of water in 24
     hours.

தினசரி 2 லிட்டர் தண்ணீர் பருகாவிட்டால் நமது சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.

3. *GALLBLADDR*
    is injured when
    you do not even
    sleep until 11
    o'clock and do not
    wake up to the
    sunrise.

இரவு 11 மணிக்குமேல் விழித்திருந்தாலும் காலை சூரிய உதயத்திற்குள் விழிக்காவிட்டாலும் நமது பித்தப்பை பாதிப்புறும்.

4.  The *SMALL*
     *INTESTINE* is
      injured when you
      eat cold and stale
      food.

மிகவும் குளிர்ந்த மற்றும் பழைய கெட்டுப்போகும் தருவாயில் இருக்கும் உணவை உண்பது நமது சிறுகுடலுக்குத் தீங்கு.

5.  The *LARGE*
     *INTESTINES* are
      injured when you
      eat more fried
      and spicy food.

அதிக அளவில் பொரித்த உணவு மற்றும் அதிக காரம் நமது பெருங்குடலுக்குக் கேடு.

6.  The *LUNGS* are
      injured when you
      breathe in smoke
      and stay in
      polluted
      environment of
      cigarettes.

புகை மற்றும் சிகரெட் புகை சூழ்ந்துள்ள இடத்தில் சுவாசிப்பது நமது நுரையீரல்களைக் கெடுக்கும்.

7. The *LIVER* is
     injured when you
     eat heavy fried
     food, junk, and
     fast food.

துரித உணவு, அதிகநேரம் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவு முதலியன நமது கல்லீரலுக்குக் கேடு.

8. The *HEART* is
     injured when you
     eat your meal with
     more salt and
     cholesterol.

அதிக உப்பும் அதிக கொழுப்பும் இதயத்தை வெகுவாகப் பாதிக்கும்.

9. The *PANCREAS*
     is injured when
     you eat sweet
     things because
     they are tasty and
     freely available.

அதிக இனிப்பு நமது கணையத்தைச் சேதப்படுத்தும்.

10. The *Eyes* are
       injured when you
      work in the light
      of mobile phone
      and computer
      screen in the
      dark.

இருளில் செல்போன் மற்றும் கணிணியில் வேலை செய்வது கண்களுக்குக் கெடுதல் விளைவிக்கும்.

11. The *Brain* is
       injured when you
       start thinking
       negative
       thoughts.

எதிர்மறை எண்ணங்கள் நமது மூளையைப் பாதிக்கும்.

12. The *SOUL* gets
       injured when you
       don't have family
       and friends to
       care and share
       with you in life
       their love,
       affection,
       happiness,
       sorrow and joy.

நமது குடும்பம், நட்பு, உற்றார், உறவினர்களின் அன்பும் அனுசரணையும், பராமரிப்பும் இல்லையெனில் நமது உயிருக்கு நன்றன்று.

     *All these body parts are NOT available in the market.*

*நமது எந்த உள்ளுறுப்பும் சந்தையில் கிடைக்காது.*

So take good care and keep your body parts healthy. எனவே நல்ல கவனத்துடன் உடற்பயிற்சியையும் நாள்தோறும் தவறாது செய்து நமது உள்ளுறுப்புகளைப் பாதுகாப்போம்.

EFFECTS OF WATER     
தண்ணீரின் அவசியம்.            
💐 We Know Water is
       important but never
       knew about the
       Special Times one
       has to drink it.. !!

தண்ணீரின் முக்கியத்துவம் நமக்குத் தெரிந்திருப்பினும் எப்போது எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்ற விபரங்கள் தெரியாமல்தான் இருக்கின்றோம்.

       Did you???  உங்களுக்குத் தெரியுமா???

💦 Drinking Water at the
       Right Time
       Maximizes its
       effectiveness on the
       Human Body;

சரியான நேரத்தில் தண்ணீர் அருந்துவது நமது உடலின் பல பாகங்களையும் செவ்வனே செயல்பட வைக்கிறது.

       1⃣  1 Glass of Water
              after waking up -
             🕕 helps to
              activate internal
              organs..

காலை எழுந்தவுடன் 350 மிலி தண்ணீர் அருந்துவது நமது உள்ளுறுப்புகள் அனைத்தையும் ஊக்குவிக்கும்.

       2⃣  1 Glass of Water
              30 Minutes  🕧
              before a Meal -
              helps digestion..

உணவுக்கு 30 நிமிடம் முன்பு 300 மிலி தண்ணீர் பருகுவது செரிமானத்துக்கு நல்லது.

       3⃣ 1 Glass of Water
              before taking a
              Bath 🚿 - helps
              lower your blood
              pressure.

ஆரோக்யமும் ஆன்மீகமும்

10 Nov, 04:01


மூச்சு எனும் வாயுவைக் கட்டுப்படுத்தும் யோகிக்கு மனமும் கட்டுப்படும்.

"நம்மை அறியாமல் நாம் மூச்சு விடும் போது ஒலிக்கும் மந்திரம் ஒன்று உண்டு."

மூச்சு பிறக்குமிடத்தே மனமும் பிறக்கிறது.

மனம் பிறக்குமிடத்திலேயே மூச்சு பிறக்கிறது.

மனமெங்குண்டோ வாயுவங்குண்டு.

மனமெங்கில்லையோ வாயுவங்கில்லை என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த மூச்சு எனும் வாயுவைக் கட்டுப்படுத்தும் யோகிக்கு மனமும் கட்டுப்படும்.

மனம் உதிப்பதற்கு முக்கியக் காரணமாக இருப்பது ப்ராணவாயு என்கிற மூச்சுக் காற்றேயாகும்.

மனதின் கட்டுப்பாடே புலன்களின் கட்டுப்பாட்டுக்கு அடிப்படையாக அமைகிறது.

மனம் நசிக்காதவரை வினைகளும் நசிக்க மாட்டா.

வினைகள் என்கிற வாசனைகள் நசிக்காத வரை சித்தம் நசிக்காது.

சித்தம் நசிக்காத வரை தத்துவஞானம் உண்டாகாது.

தத்துவஞானம் உண்டாகும் வரையில் ஆசைகள் நசிந்து போகாது.

எனவே ஆத்ம தரிசனம் வாய்ப்பதற்கு மனதின் கட்டுப்பட்ட நிலை அவசியமாகிறது.

அதற்கான எளிய உபாயம் ப்ராணனைக் கட்டுப்படுத்துவது.

அதாவது ப்ராணனின் விரையத்தைக் கட்டுப்படுத்தி உடலில் ப்ராண சக்தியை அதிகப்படுத்திக் கொள்வது.

அதற்கு ஆழ்ந்து, இழுத்து , மெதுவாக மூச்சு விடுவது சிறந்த உபாயமாகும்.

இதனால் நாம் விடும் மூச்சின் எண்ணிக்கை குறைவதோடு, ஆயுள் அதிகரிப்பதோடு ஆரோக்யமும் அதிகரிக்கும்.

எல்லோருக்கும் ப்ராணாயாமம் கற்றுக் கொள்ள வாய்ப்பதில்லை. எல்லோரும் சந்தியா வந்தனம் செய்வதில்லை.

இவர்கள் என்ன செய்வது ?

கவலையே வேண்டாம். எப்போதும் மூச்சைக் கவனிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

அதாவது நடக்கும் போதும், கிடக்கும் போதும், உட்காரும் போதும், எதுவும் செய்யாமலிருக்கும் போதும் எப்போதும் மூச்சைக் கவனித்துக் கொண்டே இருப்பதோடு, மூச்சை இழுத்து, உள்நிறுத்தி, மெதுவாக வெளியற்றிப் பழக வேண்டும்.

ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாகத் தோன்றும். ஆனால் போகப்போக பழக்கத்துக்கு வந்து விடும். அதன் பிறகு அதுவே உங்கள் இயல்பாகி விடும்.

உறக்கத்திலும் தன்னிச்சையாகவே மெதுவாக மூச்சு விடும் பழக்கம் வந்து விடும். இதன் பலன் அதிகமாகும்.

இதன் நன்மைகளை நீங்கள் ஆறு மாத காலத்தில் உணர முடியும்.

நம்மை அறியாமல் நாம் மூச்சு விடும் போது ஒலிக்கும் மந்திரம் ஒன்று உண்டு.

அதை அஜபா மந்திரம் என்பார்கள்.

ஸோஹம் என்பதாகும் அந்த மந்திரம்.

மேலே குறிப்பிட்ட படி மெதுவாக இழுத்து மூச்சு விடும் போது, ஸோ என்று மனதில் உச்சரித்தபடி காற்றை உள்ளிழுக்க வேண்டும். சிறிது நேரம் உள்ளே வைத்திருப்பவர்கள் வைத்திருக்கலாம், இல்லையேல் மெதுவாக மூச்சை வெளியே விடும் போது ஹம் என்று மனதில் உச்சரித்தபடி விட வேண்டும்.

நமது மூச்சை பிரம்மசூத்திரம் என்றும், நூல் என்றும் கால் என்றும் பல பெயர்களில் குறிப்பிடுவார்கள்.

இந்த பிரம்மசூத்திரம் என்ற நூலினால் ஸோஹம் என்ற மந்திரத்தையும் மனதையும் சேர்த்து கட்டி ஜெபம் செய்து வந்தால் சம்ஸ்காரங்கள் அற்று மனம் அடங்கிவிடும்.

எனவே இந்த மந்திரத்தை ஆத்ம மந்திரம் என்பார்கள்.

ஹம்ஸ காயத்ரி என்றும் கூறுவார்கள்.

விடாமுயற்சியுடன் ஆறுமாத காலம் செய்து வந்தீர்களானால் இதன் பலனை அனுபவித்து உணர்வீர்கள்.

இதைவிட பெரிய உபதேஷம் இந்தப் பிரபஞ்சத்தில் வேறேதுமில்லை.

உலகத்தில் ராஜயோகம் என்பது இந்த ஸோஹம் மந்திர ஜெபமேயொழிய, இதைவிட மற்றொரு ராஜயோகம் இல்லை.

இதை யார் வேண்டுமானாலும் கடைபிடித்து மேன்மை அடையளாம்.

இதன் அடுத்த நிலைக்கு இயற்கையாகிய ப்ரகிருதியே உங்களை இட்டுச் செல்லும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஏனென்றால் இயற்கையான அஜபா மந்திரத்தையே நீங்கள் கையில் எடுத்துக் கொள்கிறீர்களல்லவா ?

"ஆன்ம ஞானத்திற்கும் ஆரோக்ய வாழ்வுக்கும் மூச்சுப்பயிற்சி அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்"

ஆரோக்யமும் ஆன்மீகமும்

09 Nov, 03:15


மூன்றாவது கண்..!

கேள்வி - மூன்றாவது கண் என்று ஒன்று இருக்கிறதா ?

பதில் - மூன்றாவது கண் என்பது ஞானம்.

ஞானம் என்பது அறிவில் தெளிவு அல்லது மெய்யறிவு விளக்கத்தைப் பெறுவது.

இதை அவரவர் அனுபவங்கள் மூலமாகத்தான் உணர முடியும். ஆனால், விஞ்ஞானம் இன்று அதற்கான கருவியை ஸ்தூல உடலில் துருவித் துருவி கண்டுபிடித்திருக்கிறது.

நம் மனித உடலில் மூளையின் இரண்டு அரைக் கோள வடிவங்களுக்கு அடியே, நடுவில் ஒரு சிறிய கொண்டை கடலை அளவில், கூம்பு வடிவத்தில் காணப்படும் பீனியல் சுரப்பிதான் அது.

முன்பு நெற்றிப் பொட்டிற்கு உட்பிறம் அமைந்துள்ள பிட்யூட்டரி சுரப்பிதான் தலைமை சுரப்பி என்றும், அதுதான் மூன்றாவது கண் என்றும் விளக்கப்பட்டது.

ஆனால், இப்பொழுது அந்த விஞ்ஞானக் கருத்து அடியோடு மாறி விட்டது. இப்பொழுது பீனியல் சுரப்பிதான் அது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/jBC83ENLDrI

இது சிறியதாக இருந்தாலும் கண் போன்ற அமைப்பு கொண்டு விளங்குகிறது. இதன் வெளிப்புறத்தில் ஒரு பளிங்கு லென்ஸ் இருக்கிறது என்றும், அதனுள்ளே ஒளி புகும் தன்மையுடைய vitreous எனப்படும் ஜெல்லி நிறைந்திருக்கிறது என்றும் ஆராய்ந்து கண்டுபிடித்து அறிவித்திருக்கிறார்கள்.

இது தவிர ஒளிக் கூருணர்வு கொண்ட செல்கள் நிறைந்த விழித்திரையும், இரத்தநாளப் படலங்களும், தனி நரம்பும் இருக்கிறது. மேலும், பெரு மூளையில் மட்டுமே காணப்படும் அஸ்ட்ரோசைஸ்டுகள் இதிலும் உள்ளன.

இது ஒரு வித ஹார்மோன்களை உற்பத்தி செய்து மூளையின் பகுதிகளான ஹைப்போதாலமஸ், ஹைப்போபிசிஸ் கூட்டு அமைப்பின் மீது வினை புரிகின்றது.

உடல் வளர்ச்சியின் தரத்தை நிர்ணயம் செய்கின்றது. பிட்யூட்டரி சுரப்பியுடன் கூட்டாகச் செயல் புரிகின்றது. அட்ரினல், தைராயிடு சுரப்பிகளின் பணிகளைப் பாதுகாக்கிறது.

நீர், உப்பின் சம நிலை, சர்க்கரை அளவு, குருதியின் அமைப்பு, உணவு செரிமாணம், பாலின உறுப்புகளின் வளர்ச்சி, பாலின நடவடிக்கைகள் அனைத்து நடவடிக்கைகளும் இதன் கட்டுப்பாட்டில்தான் உள்ளன.

மன நடவடிக்கைகளின் முழுமையான தன்மையை இதுதான் நிர்ணயிப்பதாகச் சொல்கிறார்கள். உடலின் தட்ப வெப்ப நிலைகளைச் சீராக வைக்கிறது.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/jBC83ENLDrI


மெலடோனின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்து சருமத்தின் நிற மாற்றங்களுக்குக் காரணமாகவும் அமைகிறது. வெளிப் புறத்தில் நடைபெறும் அனைத்தும் இதற்கு முன் கூட்டியே தெரிந்து விடும் என்று சொல்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக இதுதான் ஆன்மா இருக்கும் இடம் என்றும், உடலையும் உள்ளத்தையும் இணைக்கும் இணைப்பு என்றும் சொல்கிறார்கள். முன் ஜென்ம வினைகளின் கருவூலம் என்றும், பின் வரும் பிறவிகளுக்கான வித்து இங்குதான் உள்ளது என்றும் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/jBC83ENLDrI


அவர்கள் இதையே மனோன்மணி என்றார்கள். அவர்கள் இதை அருட் சுரப்பி என்கிறார்கள். இது சிறப்பாக இயங்கினால் ஞானம் விளையும் என்கிறார்கள்.

ஆழ்நிலை தியானம், குண்டலினி யோகம் போன்ற யோகங்களின் மூலம்தான் இதைத் தூண்டுதல் செய்ய முடியும். தமிழ் எழுத்துகளில் உள்ள ''ழ'' என்ற எழுத்தை சரியாக உச்சரிப்பவர்களுக்கு இந்த சுரப்பி தூண்டப்படும்.

நாக்கை மடித்து அன்னாக்கில் வைக்கும் பொழுது இந்த சுரப்பி தூண்டப்பட்டு அறிவு, மனோ சக்திகள் மேம்படுகின்றன.

சகஸ்ராரச் சக்கரத்தோடு நேரடியான தொடர்புடையதாக இந்த சுரப்பி விளங்குகிறது. இங்கிருந்துதான் அமிர்தம் எனப்படும் சோம்பானம் சுரக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

எனவே இதுதான் மூன்றாவது கண் என்றும், அதற்கான ஸ்தூலக் கருவி என்றும் இரண்டு வித கருத்துகள் உள்ளன.

-இராம் மனோகர்

ஓம் நமச்சிவாய..

நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”

ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/jBC83ENLDrI

ஆரோக்யமும் ஆன்மீகமும்

07 Nov, 01:27


நிவாரணம் பெறுகிறோம்.

பல காலமாக தேங்கிய இத்தகைய கழிவுகள்
திட வடிவம் (Solid State) பெறுகிறது.

இப்போதும் காய்ச்சல் மூலம் இவற்றை
கரைக்க நமது உடலானது முயற்சி செய்யும், நாம் இந்த முறையும்
காய்ச்சலை வியாதி எனக் கருதி மருத்துக்கள் உட்கொண்டு அவற்றை
தடுத்துவிடுகிறோம்.

பின்னர் தேங்கிய திடக் கழிவுகளுக்கு காசநோய்
(T.B Tuberculosis) என பெயர் சூட்டுகிறோம்.

இதற்கும் நாம் மருந்துக்களை உட்கொள்கிறோம். அந்த திடக் கழிவுகளை
கரைக்க முயற்சி மேற்கொள்ளும்போது வலி ஏற்படும். நமது நுரையீரலில்
வலி ஏற்படுகிறது என்று பரிசோதனை மேற்கொள்வோம்.

அப்போது
பயாஸ்பி (Biospy) எடுத்து புற்றுநோயா (Cancer) என சோதிப்பார்கள்.

Biospy
என்றால் அந்த திடக்கழிவில் இருந்து மாதிரி (Sample) எடுப்பார்கள்.

அந்த
மாதிரியில் ரத்த ஓட்டம் இருக்கிறதா என சரிபார்ப்பார்கள்.

கழிவின்
தேக்கத்தில் எங்கு இருந்து ரத்த ஓட்டம் வரும்? எனவே இதை புற்றுநோய்
கட்டி என்று கூறிவிடுவர்.

இது தான் நுரையீரல் புற்றுநோய் (Lungs
Cancer) என்று அழைகப்படுகிறது.

எனவே நமது உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்து கொள்வதே..

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/8dDrz14jNwg

ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்!

"நம் கையில் இருக்கும் ஒரு பொருளை உலகில் வேறு எங்கு
தேடினாலும் கிடைக்காது"

ஏனென்றால் அந்த பொருள் இருக்கும்
இடத்தை விட்டுவிட்டு இல்லாத இடத்தில் தேடுகிறோம்.

இவ்வாறாக
இன்றையதினத்தில் நாம் நமது ஆரோக்கியத்தை மருத்துவமனைகளில்
தேடுகிறோம்.

நம் சுவாச பாதையில் தேங்கும் கழிவுகளை நம் உடம்பானது எவ்வாறு
வெளியேற்றும்?

# தும்மல்,
# மூக்கு ஒழுகுதல்,
# சளி,
# இருமல்
# காய்ச்சல் மூலமாக வெளியேற்றும்.

இவற்றை நாம் வியாதி என கருதி அதை தடுக்க முயற்சிக்கும்போது இந்த
கழிவுகள் தேங்கி இருக்கும் இடத்திலேயே நமது உடலால் கட்டியாக்கப்படும்.

பிறகு நமது உடலின் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்போது காய்ச்சல்
என்கிற செயல்முறையின் மூலம் வெப்பத்தை அதிகப்படுத்தி அந்தக்
கட்டிகளை மற்றும் நமது உடலில் தேங்கிய இதர கழிவுகளையும்
எரித்துவிடும்.

காய்ச்சலை ஏற்படுத்த போதுமான சக்தி இல்லாதபோது நமது உடலின்
எஞ்சிய சக்தியை கொண்டு கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கும்போது அந்த இடத்தில் வலி ஏற்படும்.

சிலநேரம் நமது எதிர்ப்பு சக்தி
போதுமான அளவில் இல்லையென்றால் நமது உடலின் இயக்க சக்தி
தேவைப்படும்.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/8dDrz14jNwg

அப்போதுதான் தலைவலி ஏற்படும்.

தலைவலி ஏற்பட்டால்
நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம். அதற்குதான்
தலைவலி ஏற்படுகிறது.

யாரெல்லாம் தலைவலி வந்தால் மருந்துகளின்றி ஓய்வு
எடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபோதும் புற்றுநோய் வருவதில்லை.

யாரெல்லாம் காய்ச்சலுக்கு மருந்துகளின்றி மற்றும் பசிக்கவில்லை என
உணவின்றி ஓய்வு மட்டுமே எடுக்கிறார்களோ அவர்களுக்கு Typoid,
Jaundice, Chicken Guniya, Coma (விபத்துக்களால் ஏற்ப்படும் Coma அல்ல),
புற்றுநோய் (Cancer), ரத்த புற்றுநோய் (Blood Cancer) போன்ற தொந்தரவுகள்
ஏற்படுவதில்லை.

இவ்வாறு நமது உடலின் கழிவு வெளியேற்றத்துக்கு நாமே தடையாக
இருந்துவிட்டு வியாதிகள் பெருகிவிட்டது என கூறுகிறோம்.

நமது உடலின் அடிப்படையை கற்றுக்கொண்டு மருந்துகளின்றி
ஆரோக்கியமாக வாழ்வோம்.

ஆரோக்ய வாழ்வுக்கு நோய்கள் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்..!

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/8dDrz14jNwg

ஆரோக்யமும் ஆன்மீகமும்

07 Nov, 01:27


நோய்கள் என்றால் என்ன?

நமது உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை நமது உடலே
அழித்துவிடும் அல்லது வெளியேற்றிவிடும்.

இந்த
செயல்முறையின்போது (Process) நமது உடலில் ஏற்படும்
அசௌகரியங்களை (Inconvenience) நாம் நோய்கள் என்கிறோம்.

எதனால் சுவாசப் பாதையில் நோய்கள் ஏற்படுகின்றன?

நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை / கிருமிகளை தும்மல்
மூலமாக நமது உடல் வெளியேற்றும்.

அச் செயல்முறை நிகழும்போது
நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே.

அவ்வாறு
வெளியேற்றினால் தான் நமது சுவாசப் பாதையை நமது உடலால்
சுத்தமாக வைத்துக்கொள்ள முடியும்.

இதன்மூலம் நமது உடலுக்கு
பிராணவாயு கிடைப்பதில் எந்த தங்கு தடையும் இருக்காது.

இவற்றை நாம் வியாதி என புரிந்துக் கொள்ளும்போது ஏதாவது
மருந்துக்களை உட்கொண்டு தும்மலை உண்டுபண்ணும் சுரப்பியை
வேலை செய்ய விடாமல் தடுத்துவிடுகிறோம்.

இவ்வாறு
தடுக்கும்போது நிறைய தூசிகள் / கிருமிகள் நம் சுவாசப்பாதையில்
தங்கிவிடுகிறது.

இந்த சூழ்நிலையில் நமது உடலில் சைனஸ் (Sinus) என்னும் சுரப்பி, நிணநீர்
(Lympathic Fluid) மூலம் நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகள்
மற்றும் கிருமிகளை வெளியேற்றும் வேலையில் ஈடுபடும்.

இந்த
செயல்முறையின் போதுதான் நமக்கு மூக்கு ஒழுகுதல் (Running Nose)
ஏற்படும்.

இதையும் வியாதி என புரிந்துகொள்ளும் நாம் அவற்றை
தடுக்க மருந்துக்களை உட்கொள்கிறோம்.

இதனால் தான் மூக்கடைப்பு
ஏற்பட்டு கழிவுகள் மற்றும் கிருமிகளை வெளியேற்ற சுரந்த நிணநீர்
(Lympathic Fluid) நமது முகத்திற்குள் தேங்குகிறது.

இவற்றை தான் நமது உடல் கண்ணீர் மூலமும் வெளியேற்றும்.

இந்த நீரை
தான் பலர் கண்களில் நீர் தானாகவே வடிகிறது என கூறுவார்கள்.

பல
காலமாக தேங்கிய இந்த நீரானது திட வடிவமாக (Solid) மாறுகிறது.

இதை
தான் நாம் சைனஸ் கட்டிகள் Sinusitis (Sinus Infection) என்று அழைக்கிறோம்.

இந்த கட்டிகளை கரைக்க / எரிக்க நமது உடலானது காய்ச்சல்
செயல்முறையை நிகழ்த்தும்.

நாம் காய்ச்சலையும் வியாதி எனக் கருதி
அதை தடுக்கவும் மருந்துக்களை உட்கொள்கிறோம் என்பதை புரிந்துக்
கொள்ளுங்கள்.

நமது சுவாசப்பாதையில் தேங்கிய கழிவுகளை நிணநீர் (Lympathic Fluid)
மூலம் வெளியேற்ற முடியாதபோது நமது உடல் சளியின் (Mucus) மூலம்
வெளியேற்ற முயற்சி செய்யும்.

இந்த சளியானது நமது நுரையீரல்
மற்றும் சுவாசப்பாதையில் உள்ள கழிவுகளை அதனோடு சேர்த்துக்
கொண்டு நமது மூக்கின் மூலம் வெளியேறிவிடும்.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/8dDrz14jNwg

இந்த சளியையும்
நாம் வியாதி எனக் கருதி மருந்துக்களை உட்கொண்டு
தடுத்துவிடுகிறோம்.

அந்த மருந்துகள் சளியை கட்டியாக மாற்றி நமது
தொண்டையில் படியச்செய்யும்.

அவ்வாறு படியும் கழிவுகள் தான்
நமக்கு வறட்டு இருமல் மற்றும் குறட்டை ஏற்பட அடிப்படை காரணங்கள்.

வறட்டு இருமலுக்கு நாம் சிரப் (Syrup) வடிவில் மருந்துக்களை
உட்கொள்ளுவோம்.

அப்போது நமது தொண்டையில் படிந்த காய்ந்த
சளியானது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து நமது நுரையீரலில் (Lungs)
படிந்துவிடும்.

இவ்வாறு நமது நுரையீரலின் சிற்றறைகள்
அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் தடைபடும்.

இந்த நிலையை தான் மூச்சிறைப்பு (Short Breath / Wheezing) என்று
அழைக்கிறோம்.

இதுவே பெருவாரியான சிற்றறைகளில்
அடைபடும்போது நமது உடலுக்கு தேவையான காற்றோட்டம் மிக
குறைந்த அளவே இருக்கும்.

அப்போது இந்த மூச்சிறைப்பு அடிக்கடி
ஏற்படும். இந்த நிலையை தான் ஆஸ்துமா (Asthma) என்கிறோம்.

பொதுவாக நாம் ஓடும்போது நம் உடலுக்கு நிறைய பிராணவாயு
தேவைப்படும்.

அப்போது நாம் சுவாசம் முழுமையாக இல்லாமல்
வேகமாக இருக்கும்.

இந்த நிலையில் குறைவான நேரத்தில் அதிக
மூச்சுக் காற்றை சுவாசிப்போம் அது தான் மூச்சிறைப்பு.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/8dDrz14jNwg

நாம்
அமர்ந்துகொண்டு இருக்கும்போது உடலுக்கு அதிகமாக காற்றோட்டம்
தேவைப்படும் நேரங்களில் குறைவான சிற்றலைகள் மட்டுமே
திறந்திருக்கும் பட்சத்தில் இத்தகையதொரு நிகழ்வு ஏற்படும்.

பெரும்பகுதியான சிற்றலைகள் கழிவுகளால் மூடப்பட்டதே இதற்கு
அடிப்படை காரணம்.

இதை தான் கழிவுகளின் தேக்கம் வியாதி;
கழிவுகளின் வெளியேற்றம் குணம் என்று கூறுகிறோம்.

இப்போதும் ஒருவருக்கு ஏன் ஆஸ்துமா (Asthma) நிலை ஏற்பட்டுள்ளது
என்பதை அறியாமல் ஸ்டீராய்டு (Steroid) மருந்துக்களை கொண்டு
இன்ஹேலர் (Inhaler) மற்றும் நேபுளேசர் (Nebulizer) வடிவில் தற்காலிக

ஆரோக்யமும் ஆன்மீகமும்

06 Nov, 03:58


மரணத்திற்கு பிறகு..!

ஒருவர் மரணமடைந்தவுடன், அந்த உடலை வடக்கு தெற்காக வைப்பது, கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டுவது போன்ற சடங்கு களை எதற்காகச் செய்கிறார்கள்?

இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன் பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என் னென்ன செய்யலாம் என்று இந்தக் கலாசாரத்தில் பல வழிகள் சொல்ல ப்பட்டிருக்கின்றன.

ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண் டுமென்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டுபோய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள். ஏனெனில், ஒரு கட்டடத்து க்குள் இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. தலை வடக்கு நோக்கி வைக்கப் படும்போ து காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடலைவிட்டு எளிதாகப் பிரியும்.

மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழு வதும் அகன்றுவிடுவதில்லை. என வே, அந்த உயிர் உடலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால், உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும்போது அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, அந்த உடலைச்சுற்றிக்கொண்டு இரு ப்பது பயன் தராது என்று அந்த உயிருக்குத் தெரிந்துவிடுகிறது.

மற்ற சூழ்நி லைகளில் உயிரானது தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக் கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்ப டுத்தும். இது இறந்து போன மனி தருக்கும் நல்லதல்ல, வாழ்கிறவர்களு க்கும் நல்லதல்ல.

இன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின் இரண்டு கால் கட்டை விர ல்களும் ஒன்றாகக் கட்டப்படுவது. பொதுவாகவே மரணம் நிகழ்கிற போது கால்கள் அகலமாகத் திறந்து கொள்கின்றன.

அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன உயிர் அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உயிருக் கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல.

எனவே, கால் கட்டை விரல்க ளைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூட ப்படுகிறது.

யோகக் கிரியைகள் செய்வதற் காக நீங்கள் கால்கட்டை விரல் களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத் துவாரம் இயல்பாக வே மூடிக்கொள்ளும். இதையேதான் இற ந்தவர்களுக்கும் செய்கி றார்கள். எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின் முயற்சி இப்போது பலிக்காது.

மூலாதாரம் திறந்திருக்கிற போது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில ஆவிகளும் முயலக் கூடும்.

மாந்திரீகப் பயிற்சி மேற் கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்த க்கூடும். அப்படி அந்த உடல் வேறு வித த்தில் பயன் படுததப் பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன் புறுத்துவதாக இருக்கும். அதனால் தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன!

சத்குரு..

ஓம் நமச்சிவாய..

நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”

ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

05 Nov, 03:51


அரசமரம்..!

அரசமரத்தை சுற்றினால் குழந்தை பேறு கிடைக்குமா ?


பழங்கால மரபுகளுக்கு பின்னால் உள்ள
அற்புதமான விஞ்ஞான காரணங்கள் பற்றி
பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒவ்வொரு சடங்குகளுக்கு பின்னால்
இருக்கும் காரணங்களை தெரிந்து
கொள்வதில் அவ்வளவு சுவாரசியம்
உண்டாகும்.

வாங்க பார்க்கலாம்...

பொதுவாக அரசமரத்தை பயனற்ற மரமாக
பார்க்கின்றனர். அதனால் எந்த ஒரு கனியோ
அல்லது திடமான மரமோ கிடைப்பதில்லை.

இருந்தும் கூட அதனை பல இந்துக்கள்
வழிபடுகின்றனர். ஆனால், இரவு நேரத்தில்
ஆக்சிஜென் உண்டாக்கும் சில மரங்களில்
அரசமரமும் ஒன்று.

என்ன சுவாரசியமாக
உள்ளதா? அதனால், இந்த மரத்தை
பாதுகாப்பாக வைத்திடவே அதை புனித
மரமாக கருதுகின்றனர்.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/TqPqGQ5J16A

அரசமரத்தை சுற்றினால் குழந்தை
பேறுகிடைக்கும் என்பது ஒரு
நம்பிக்கை. இதன் காரணமாகவே “அரசினை
நம்பி புருசனை கைவிட்டாள்" என்ற
பழமொழி வழக்கத்தில் உள்ளது.

இது அறிவியல் பூர்வமாக
நிரூபிக்கப்பட்டுள்ளளது. அரசமரம்
வெளியிடும் காற்றில் பெண்களின்
மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான
சுரப்பிகள் சீரடைகின்றன என்று
நிரூபிக்கப்பட்டுள்ளது.

'அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத்
தொட்டுப்பார்த்தாள் "என்ற பழமொழி உண்டு.

இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச்
செய்யும் பிள்ளைப் பேற்றை உண்டாக்கும்.
சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான
நோய்களை போக்கும் என்பதே.
அரச மரத்தின்
காற்று கருப்பை கோளாறுகளை
போக்கும் தன்மையுடையது.

அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி,
மன அமைதியைக் கொடுக்கும் குணமும்
இதற்கு உண்டு.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/TqPqGQ5J16A

கருப்பை கோளாறு..

அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை
பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின்
அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் ( 1
மண்டலம் ) அருந்தி வந்தால் தாது
விருத்தியடையும். பெண்களுக்கு
கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

அரச மரத்தின் இலை, பட்டை, வேர், விதை
இவற்றை இடித்துபொடியாக்கி
வைத்துக்கொண்டு மாதவிலக்குக்
காலங்களில் கஷாயம் செய்து அருந்தி
வந்தால் மாதவிலக்கில் ஏற்படும்
பிரச்சனைகள் தீரும். கருப்பைக்
கோளாறுகள் நீங்கும்.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/TqPqGQ5J16A

பிராணவாயு..

நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை
வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள்
கண்டறிந்துள்ளனர்.

மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை
நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது
நாளமில்லா சுரப்பிகளில் செயல்
பாடுகளைத் தூண்டுகின்றன என்றும்
கூறுகின்றனர்.

இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம்
கொண்டது. அதிகளவு ஆக்ஸிஜனை
உற்பத்தி செய்யும் மரங்களுள் ஒன்றான அரச
மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம்
சந்ததியினரும் பெற வழி செய்வோம்..

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.!

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/TqPqGQ5J16A

ஆரோக்யமும் ஆன்மீகமும்

04 Nov, 03:30


"பட்டினத்தார்".

“வீடிருக்க தாயிருக்க வேண்டுமனை யாளிருக்க
பீடிருக்க வூணிருக்கப் பிள்ளைகளும் தாமிருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே!”

-ஆசான் பட்டினத்தார் -

உன்னுடைய வீடு இங்கே இருக்கிறது.

உன்னைப்பெற்ற தாயும், உனக்குக் கழுத்தை நீட்டிய மனைவியும் இங்கே இருக்கிறார்கள்.

நீ பெற்ற பட்டம், பதவி, பெருமைகள் எல்லாம் இருக்கிறது.

உனக்கான அடுத்த வேளை அறுசுவை உணவு தயாராக இருக்கிறது.

உன்னுடைய அருமைப் பிள்ளைகள் இங்கே இருக்கிறார்கள்.

உன் வீட்டுக் கொள்ளையில் மாடுகளும், அவை ஈன்ற கன்றுக்குட்டிகளும் இருக்கின்றன.

நீ தேடி வைத்த பொன், பொருள் எல்லாம் இருக்கிறன்றன.

உன் உடல் இருக்கிறது.

உன்னை மட்டும் காணவில்லையே ?

எங்கேயடா போனாய் நீ ?

என்று கேட்டு உடம்பை விட்டு ஆன்மா பிரிந்துபோன நிலையை மிகவும் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்.

உடம்பை விட்டு ஆன்மா நீங்கும் நிலைதான் மரணம்.

நாம் எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல !!

எத்தனை பேர்களுக்கு நம் வாழ்க்கை பயன்பட்டது என்பதுதான் முக்கியம் !!!

"நாம் முடிந்த வரை சேவை செய்வோம்"

"தாய்நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும்"

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

ஆரோக்யமும் ஆன்மீகமும்

31 Oct, 02:18


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்

"எனது இனிய ஆரோக்கிய தீபாவளி நல்வாழ்த்துகள்"


தாங்கள் எல்லாம் வல்ல இறைவன் அருளால் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்....

கலையாத கல்வியும், குறையாத வயதும், 
ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், 
குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,
சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், 
தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும், 
மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,
தொலையாத நிதியமும், கோணாத கோலும், 
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும், 
துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப், 
பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்;
அலைஆழி அறி துயில்கொள் மாயனது தங்கையே! 
ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! 
அருள் வாமி! அபிராமியே!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

30 Oct, 05:41


உடல் சுத்திகரிப்பு :- எண்ணைக் குளியல்
உடல் சுத்திகரிக்க நாம் முதல் பாகத்தில் குறிப்பிட்ட "மிளகு தைலம்" தேய்த்து வெந்நீரில் குளித்தல் இதனால் உடலில் தோல் பகுதிகளில் தோற்று நோய் பூஞ்சைகளை நீக்கி,தோலில் இரத்த ஓட்டத்தை சீர்படச் செய்கின்றது. உடலை எப்படி முறையாக சுத்திகரிக்க வேண்டுமென மிகத் தெளிவாக விளக்கமளித்துள்ளோம்.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/fzN1oyN6MEM

வசிக்கும் வீடு சுத்திகரிப்பு :- அகல் தீபம்
தீபாவளி எனும் சொல் "தீப - ஆவளி" என்ற இரண்டு வார்த்தைகள் இணைந்தது. ஆவளி என்றால் வரிசை, வரிசையாக தீபங்களை ஏற்றி வழிபடுதல் ஆகும்.

நிறைய அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வீடு முழுக்க வைத்தல்.இதனால் ஏற்படும் வெப்பம், ஒளியினால் வீட்டிலுள்ள பூஞ்சைகள் அழிகின்றன.

இதை நீங்கள் அனுபவப் பூர்வ மாகவே உணரலாம். மழை காலங்களில் வீட்டினுள் துணிகளில்,சுவர்களில் ஒரு துர்வாசனை இருக்கும் போது நிறைய எண்ணை தீபங்களை வீட்டின் அறைகளில் வைத்துப் பாருங்கள் துர்வாசனை அகன்று விடும்.

நம்மைச் சுற்றியுள்ள பகுதிகள் சுத்திகரிப்பு :- பட்டாசு ,வெடி வெடித்தல்
பட்டாசுகள்,வெடிகளின் மூலமாக போன்றவைகள் மூலமாக அதாவது வெடிப்பொருட்களில் உள்ள மருந்துகளான வெடியுப்பு,கந்தகம்,அலுமினிய தூள், போன்றவைகள் வெடிக்கும் போது அதில் வெளி வரும் புகை,சப்தம், தெரித்து விழும் மருந்துகள் மூலமாக சாக்கடை,நீர் தேங்கும் குழிகள்,செடி, கொடிகளில்,மரங்களில் மறைந்து வாழும் அனைத்து வகை கொசுக்களையும் அழிக்க தீபாவளி பண்டிகை ஒரு நல்ல காரணமாக உள்ளது.

தீபாவளிப் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய பின்பு அந்தப் பகுதிகளில் "கொசுக்கள் மற்றும் பூஞ்சைகள்" அழிந்து,அதன் தாக்கம் குறைந்து இவைகளால் ஏற்படும் நோய்களின் கொடுமையும் வெகுவாக குறைந்திருப்பதை கவனித்துப் பாருங்கள் உண்மை புரியும்.

"தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..."

நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”

ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!


*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/fzN1oyN6MEM

ஆரோக்யமும் ஆன்மீகமும்

30 Oct, 05:41


இந்த லேகியம் பலகாரங்கள் உண்ட பிறகு அரை டீஸ்பூன் அளவு சாப்பிட அனைத்தும் ஜீரணமாகி செரித்து விடும்.

இதுவரை ஆன்மீக விளக்கங்கள் அளிக்கப்பட்டது. ஆனால் இதில் வரும் புராணக் கதைகளை அறிவியலாளர்கள் ஏற்றுகொள்வதில்லை இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் முக்கியத் தேவையான தீபாவளி பண்டிகையின் அறிவியல் ஆய்வு விளக்கம்

"தீபாவளி பண்டிகை அறிவியல் விளக்கம்"

இந்தியா முழுவதிலும் அனைத்து மாநிலங்களிலும் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது.

மேலும் பல நாடுகளிலும் கூட கொண்டாடப் படுகின்றது.

தீபாவளிப் பண்டிகை புராணங்களில் கூறப்படும் "நரகாசுர வதம்" என்பதற்கு மட்டுமல்லாமல்,மகா லட்சுமி அவதரித்த தினமாகவும்,குபேரன் சிவபெரு மானை வழிபட்டு சித்தி அடைந்த தினமாகவும், இமாச்சலத்தில் கோ பூஜை யும்,உத்திரப்பிரதேசத்தில் அன்னபூரணி வழிபாடும், வங்காளத்தில் தாம்பூல திருவிழா, துர்கா பூஜாவாகவும், குஜராத்தில் குபேர பூஜையாகவும், மும்பை யில் லட்சுமி பூஜையாகவும் கொண்டாடப் படுகின்றது.

பொதுவாக நமது இந்து மத புராணங்களிலும்,இதிகாசங்களிலும்
அரக்கர்கள், அசுரர்கள் வாழ்ந்தார்கள் என்பதை குறிப்பிடுகிறார்கள் அவர்களின் தோற்றமும் உருவமும் மிகப் பிரமாண்டமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இக்கருத்தை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இருக்கும்.

உண்மை என்னவென்றால் மமனிதகுலத்தின் மக்களின் நல்வாழ்விற்கு தீங்கு விளைவிப்பவைகள் எதுவோ அதைத்தான் அசுரன், அரக்கன் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இப்போது தீபாவளியைப் பற்றி விளக்கங்களைப் பார்ப்போம்.

மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தில் தோன்றிய ஒரு அசுரனை பல்லாயிரம் வருடங்களுக்குப் பிறகு கிருஷ்ண அவதாரத் தில் தான் அழித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இக்கருத்தில் ஒரு மிகப்பெரிய உண்மை உள்ளது.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/fzN1oyN6MEM

பல்லாயிரம் வருடங்களுக்கு முன் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா நரகாசுனை அழித்ததைக் கொண்டாடும் விழாவே தீபாவளி என நினைத்துக் கொண்டு இருக்கின்றோம்.

உண்மை அதுவல்ல ஒவ்வொரு வருடமும் மக்கள் குலத்தை பெரும் துன்பத்தில் ஆழ்த்தும் நரகாசுரனை அழிக்கும் விழாவே தீபாவளி ஆகும்.

நரகாசுரன் விளக்கம் :- நரக - கொடிய + அசுரன் - வேதனைஅளிப்பவன்.

நரகாசுரன் வேறு விளக்கம் :- நரன் - மனிதன் +அசுரன் - கொடுமை செய்பவன்.

எனவே மனிதர்களுக்கு கொடும் துன்பம் செய்பவைகளை
அரக்கன், அசுரன் என வர்ணித்துள்ளனர்.

இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு நம் இனத்தினரை பெரும் துன்பங்களுக்கு உட்படுத்தி கொடுமை செய்து கொண்டிருக்கும் கொடிய அசுரனான "நரகாசுரனை"
உங்களால் அறிந்து கொள்ள முடிகின்றதா ?

நரகாசுரன் வேறு யாருமல்ல விச கிருமிகள், கொரானா கிருமிகள், கொசுக்கள் தான்.

இது வேடிக்கையாக சொல்லப்படும் கருத்தல்ல.

மிகப்பெரிய உண்மையும் அதுதான்.

புராணக்கதையை படித்து அதன் உள்அர்த்தத்தை ஆழ்ந்து கவனியுங்கள் உண்மை விளங்கும்.

இன்று அரசாங்கமும் இந்த அசுரனை அழிப்பதற்காகவும், இவனால் மக்களுக்கு ஏற்படும் துன்பங்களை போக்கவும் பல இலட்சக்கணக்காக பணம் செலவழித்து மக்களுக்கான விழிப்புணர்வும், கொரானா, டடெங்கு மற்றும் வைரஸ் நோய்களைப் போக்க மருந்துகளும் அளித்து வருகின்றது.

இது போன்ற பருவகால கொடிய நோய்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க நம் முன்னோர்களால் நமக்கு நாமே திட்டமாக தோற்றுவிக்கப்பட்டதுதான் தீபாவளித் திருநாள்.

பருவ காலங்களில் ஒன்றான "ஐப்பசியில் அடைமழை" எனும் இம்மாதத்தில் தான் கொடிய நோய்களான மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா,வைரஸ் காய்ச்சல் மற்றும் மழை கால நோய்கள் போன்றவைகளுக்கு மக்கள் பெருவாரியான துன்பங்களுக்கு ஆட்பட்டு உயிர் இழக்கும் அபாயத்திற்கு ஆளாகின்றனர்.

ஐப்பசி மாதத்தில் பெய்யும் தொடர் மழையால் வீட்டின் சுவர்ப்பகுதியிலும், வீட்டின் உட்புறங் களிலும், ஏராளமான பூஞ்சைகள் தோன்றி படிந்திருக்கும், இவை நாம் உடுத்தும் துணிகளிலும் படிந்து அதன் மூலம் உடலின் தோல்
பகுதிகளில் படிந்து வைரஸ் நோய்களை தோற்றுவிக்கும்.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/fzN1oyN6MEM

மேலும் மழை பெய்து தேங்கிய நீரில் கொடிய நோய்களைத் தோற்றுவிக்கும் பல்வேறு வகை கிருமிகள் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாகும்.

இவைகளைத் தான் "அசுர சக்தி" எனக்குறிப்பிட்டு இவைகளை அழித்தால் தான் மனித குலம் நிம்மதியாகவும்,
சந்தோசமாகவும் வாழமுடியும் என்பதால் இவைகளை அழிக்கும் சூட்சுமத்தைக் கொண்ட ஒரு விழாவாக, தீபாவளி பண்டிகையை நம் முன்னோர்கள் வடிவமைத்தனர்.

இதற்கு மூன்று வகையான சுத்திகரிப்பு அவசியம் என்பதை உணர்ந்தனர்.

1 - உடல் சுத்திகரிப்பு
2 - வசிக்கும் வீடு சுத்திகரிப்பு
3 - நம்மை சுற்றியுள்ள பகுதிகள் சுத்திகரிப்பு

ஆரோக்யமும் ஆன்மீகமும்

30 Oct, 05:41


ஆரோக்கிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

தீபாவளி பண்டிகையின் ஆன்மீக அறிவியல் விளக்கம்..!


இந்து மத கலாச்சார பழக்க, வழக்கங்களில் சாஸ்த்திரம்,சம்பிரதாயம், திருவிழாக்கள், பண்டிகைகள், போன்றவைகள் மனிதகுல வாழ்க்கையின் நல் வாழ்விற்காக உருவாக்கப்பட்டவைகள் ஆகும்..

ஆனால் அதன் உண்மையான அறிவியல் விளக்கங்களை மறைத்து இதிகாசம், புராணங்கள் போன்ற கதைகளாக வடித்துள்ளனர்.

இதனால் காலப்போக்கில் இதன் பெருமைகளும், மகத்துவங்களும் மறைந்து போவதற்கு இடமுண்டு.

இதில் இன்றைய கால சூழ்நிலையில் தீபாவளி பண்டிகையைப் பற்றி அறிவியல்பூர்வமான விளக்கங்கள் அளிப்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தில் இரண்யாசனை வதம் செய்து பூமாதேவியைக் காப்பாற்றி பூமியை வராகப் பெருமான் தன "தெற்றுப் பல்லால்" தூக்கி நிறுத்திய போது அவர் பல் பட்ட இடத்திற்கு "காம ரூபம்" என பெயர் வந்தது.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/fzN1oyN6MEM

பூமாதேவிக்கும், வராக மூர்த்திக்கும் பிறந்தவன் தான் "நரகாசுரன்" இவன் பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்து "அசுர பலம்" பெற்றான். பின்பு இந்திரனையும் வென்றான்.அதன் பின் “காம ரூபத்தில்" இருந்து கொண்டு மக்களை மிகவும் துன்புறுத்தி பெருத்த அழிவை ஏற்படுத்தி வந்தான்.

நரகாசுரனை யாருமே அழிக்க முடியாததால் பல்லாயிரம் வருடங்களாக இவனால் நரக வேதனையை அனுபவித்து வந்த மக்கள் "கிருஷ்ணவதார த்தில்" கிருஷ்ண பகவானிடம் முறையிட அவர் சத்தியபாமாவுடன் புறப்பட்டுச் சென்று கடுமையாக யுத்தம் செய்ததில் நரகாசுரன் மடிந்தான்.

பூமா தேவி தன் மைந்தன் இறந்த தினத்தை மக்கள் கடை பிடிக்க வேண்டும். அதே சமயம் அதை "துக்க தினமாக" இல்லாமல் "பண்டிகை தினமாக" கொண்டாட வேண்டுமென வரம் வாங்கினாள்.

எனவே நரகாசுரன் இறந்த தினம் ஐப்பசி மாதத்தில் கிருஷ்ண பட்ச சதுர்த்தசியில் சூரிய உதய காலத் தில் "நரக சதுர்த்தி" யாகக் கொண்டாடும் படி கேட்டுக்கொண்டாள்.

பொதுவாக எண்ணெய் குளியல் சூரிய உதயத்திற்கு முன் செய்யும் வழக்கம் இல்லை. ஆனால் நரகசதுர்த்தி அன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்கும்படி வரத்தை வாங்கினாள்.

மேலும் "நல்ல எண்ணையில் மகாலட்சுமியும்" "வெந்நீரில் கங்கையும்" இருக்க வேண்டு மென வரம் வாங்கினாள்.இவ்வாறு குளிப்பவர்களுக்கு அகால மரணமும்,நரக பயமும்,விலகும் என்று பகவான் அருளினார்.

வட நாட்டில் பல இடங்களில் தீபாவளி நாளை குபேர பூஜை யாகவும், மகா லட்சுமி பூஜை யாகவும்,கொண்டாடுகிறார்கள்.புது கணக்குகள் அன்று ஆரம்பிப்பார்கள். தீபாவளி நாளும்,அதை அடுத்த அமாவாசை நாளும் மிகமிகப் புனித நாளாகும்.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/fzN1oyN6MEM

உடலில் தேய்க்க எண்ணெய் :

100 -மிலி நல்லெண்ணையில், மிளகு 50 -எண்ணிக்கையில் போட்டு மித மாக காய்ச்சவும் மிளகு அனைத்தும் மிதந்து புகை வரும் சமயம் இறக்கி வடித்து சூடு ஆறியவுடன் தலை,மற்றும் உடல் முழுதும் தேய்த்து 15 - நிமிடம் கழித்து வெந்நீரில் குளிக்கவும்.

இதனால் உடலில் உஷ்ணம் நீங்குவதுடன்,தோலின் மேல் பகுதியில்
இரத்த ஓட்டம் நன்கு சீராகும்,பாக்டீரியாவினால் ஏற்ப்படும் தொற்று
அறவே நீங்கும்.

குளிக்க மூலிகை வெந்நீர் :

1 -ஆலம்பட்டை,
2 -அரசம் பட்டை,
3 -அத்திப்பட்டை,
4 -புரசம்பட்டை,
5 -மாவுலிங்கப்பட்டை

ஐந்து மரப் பட்டைகளையும் நாட்டு மருந்து கடைகளில் வாங்கி இடித்து வெந்நீர் காய்ச்சும் போது போட்டு வெந்நீர் கொதித்தவுடன் குளிக்கவும். இதனால் உடல் புத்துணர்ச்சி பெறுவதுடன்,நோய் எதிர்ப்பு சக்தி கிட்டும்.

பிறகு புத்தாடைகள் உடுத்தி முதலில் உண்ணும் "தீபாவளி லேகியம்"

செய்முறை :

1 - சுக்கு -50 -கிராம்
2 - சித்தரத்தை 25 - கிராம்
3 -ஓமம் 10 - கிராம்
4 - அரிசி திப்பிலி -25 - கிராம்
5 - கண்டந் திப்பிலி -25 -கிராம்
6 - விரலி மஞ்சள் -ஒரு துண்டு
7 -நெய் - 50 - கிராம்
8 - நல்லெண்ணெய் -50- கிராம்
9 - பனை வெல்லம் - 200 -கிராம்

மருந்து சரக்குகளை வெயிலில் நன்றாக உலர்த்தி அம்மியில் போட்டு இடி த்து பொடித்துக் கொள்ளவும்.வாணலியில் சிறிது நீர் விட்டு வெல்லத்தை தூள் செய்து போட்டு கரைந்ததும் பாகுபதம் வரும் போது மருந்து பொடியை போட்டு கிளறவும்.லேகியம் போல் இறுகி வரும் பொது நெய்,எண்ணெய் விட்டு கிளறவும்,சிறிது எடுத்து விரல்களில் உருட்டிப் பார்த்தால் ஒட்டாத பதத்தில் இறக்கவும்.

தீபாவளி அன்று அதி காலையில் எண்ணை ஸ்நானம் செய்ததும் புத்தாடை கள் அணிந்து கொண்டு முதலில் "தீபாவளி லேகியம்" ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து சுவைத்து சாப்பிடவும். இதனால் உடலில் குளிர்ச்சி சேராமல் தடுக் கும், ஜலதோஷம் பிடிக்காது. கடலை மாவு, நெய் சேர்ந்த பலகாரங்கள் உண் டாலும் வயிறு மந்தமோ, அஜீரணமோ ஏற்ப்படாது.

*இந்த பதிவின் வீடியோ*:-
https://youtu.be/fzN1oyN6MEM

ஆரோக்யமும் ஆன்மீகமும்

28 Oct, 01:55


செல்வம், ஆயுள், புகழ், கல்வி, ஆரோக்யம்,  மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு தரும் கந்த சஷ்டி விரதம்..!

கந்த சஷ்டி விரத மகிமைகளும், விரத முறைகளும், பலன்களும்..!

நீங்களும் தெரிந்து உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்..!


https://youtu.be/W15s5hX-DRo?sub_confirmation=1

ஆரோக்யமும் ஆன்மீகமும்

24 Oct, 04:14


தீபாவளி பண்டிகை பற்றிய அறிவியல் பூர்வமான விளக்கங்களும், புராண கதையும்..!

பட்டாசு வெடித்தல், தீபம் ஏற்றுதல், தீபாவளி லேகியம், எண்ணை குளியல், கங்கா ஸ்நானம், புத்தாடை அணிதல், போன்றவைகளின் அறிவியல் காரணங்கள் என்ன??

அனைவரும்தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்..!

https://youtu.be/fzN1oyN6MEM

இனிய ஆரோக்கிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

https://youtu.be/fzN1oyN6MEM

ஆரோக்யமும் ஆன்மீகமும்

23 Oct, 04:45


முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள்..!

"நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துக்களைக் கிரகித்துக்கொண்டு அவற்றை நீ உன்னுடைய வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி நிற்கச் செய்தால் ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பவனை விட நீயே அதிகம் கல்வி கற்றவன் ஆவாய்."

"வாழ்க்கையை உருவாக்கக் கூடிய, மனிதனை மனிதனாக்கக் கூடிய, நல்ல ஒழுக்கத்தை வளர்க்கக் கூடிய கருத்துக் களைக் கிரகித்து அவற்றை நாம் நம்முடையவை யாக்கிக் கொள்ள வேண்டும்.."

ஒவ்வொரு பணியும் மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும்.

"ஏளனம், எதிர்ப்பு, பிறகு கடைசியில் ஏற்றுக்கொள்ளப்படுதல். தனது காலத்தை விட்டு முற்போக்காகச் சிந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் தவறாகவே புரிந்துகொள்ளப்படுவான்."

எனவே எதிர்ப்பும் அடக்கு முறையும் வரவேற்கத்தக்கவையே.

ஆனால் நாம் மட்டும் உறுதியாகவும், தூய்மையாகவும், கடவுளிடம் அளவு கடந்த நம்பிக்கை உடையவனாகவும் இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் இந்த இடைஞ்சல்கள் எல்லாம் மறைந்து போய்விடும்.

ஒவ்வொருவனும் கட்டளையிடவே விரும்புகிறான்.

கீழ்ப்படிவதற்கு ஒருவரும் தயாராக இல்லை.

"முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக்கொள் பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாக வந்து சேரும்."

எப்போது முதலில் வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள்.

அதன் பின்பு எஜமானனாகும் தகுதி உனக்கு வந்து சேரும்.

பாமரர்களாகிய பொதுமக்களை வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாக இருக்க உதவி செய்யாத கல்வி உறுதியான நல்ல ஒழுக்கத்தையும், பிறருக்கு உதவி புரியும் ஊக்கத்தையும், சிங்கம் போன்ற மன உறுதியையும் வெளிப்படுத்தப் பயன்படாத கல்வி அதைக் கல்வி என்று சொல்வது பொருத்தமா?

"எத்தகைய கல்வி தன்னம் பிக்கையைத் தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால் களில் நிற்கும்படி செய்கிறதோ, அது தான் உண்மையான கல்வியாகும்."

"வீரத்துறவி சுவாமி விவேகானந்தர்"

"ஆன்ம ஞானத்தை அடைய ஞானிகள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

ஆரோக்யமும் ஆன்மீகமும்

22 Oct, 15:16


உலகம் என்பது ஐம்புல விஷயங்களிள் உருவமே. வேறல்ல.!

அந்த ஐந்து விஷயங்களும் ஐந்து இந்திரியங்களுக்கு (மெய், வாய், கண், மூக்கு, செவி) விஷயமாகும்.

இப்படிப்பட்ட உலகத்தை ஒரே மனம் ஐந்து இந்திரியங்களின் வழியாய் அறிவதால் மனத்தைத் தவிர வேறாக உலகம் என்று ஒன்றுமில்லையே”.

நம் கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், தீர விசாரிப்பதே மெய்”

என்று கூறப்படுகிற தல்லவா?

ஆம்; தீர விசாரிப்போம்.

உலகம் இருப்பதாக உணரும் புலனறிவு மனத்தால் போஷிக்கப்படுகின்றதன்றோ?

மனம் கிரகிக்காவிடில் கண் விழித்திருந்தும் பார்க்காது;
காது கேட்காது;
மெய் உணராது;
மூக்கு நுகராது;
நாக்கு சுவை காணாது;
ஏதேனும் ஓர் சிந்தனையில் ஊன்றியிருக்கும் போது நம்மில் பலருக்குக் கண்ணுக்கெதிரே நடப்பவை தெரியாது போவதில்லையா?

பிறர் பேசும் கேட்கப் படாமற் போவதில்லையா?

மனம் அப்பொழுது அந்தப் பொறிகளின் வழியே இயங்காததே இதன் காரணம்.

இது பலர்க்கும் அனுபவம்.

ஆகவே மனத்தால் புலனறிவு உண்டாகின்றது.

மனம் வேலை செய்யாத போது புலனறிவும், அதன் வடிவான உலக அனுபவமும் இல்லாததாகிறது.

மனமற்ற நித்திரையில் உலகம் தோன்றுவதில்லை. மனம் தொழில் புரியும் கனவிலும், விழிப்பிலும் (நனவிலும்) உலகம் தோன்றுகிறது.

ஆதலின் மனத்தையன்றி உலகம் உண்டோ?

“இல்லை” என்கிறார் ஸ்ரீ பகவான்.

“சத்தியம் எது என்று நிரூபிக்க லக்ஷணம் யாது?

"எது சாச்வதமாய் (நிலையாய்) ஸ்வதஸ்ஸித்தமாய் (தானாகவே இருப்பதாய்) சுயம் பிரகாசமாய் (எதனாலுமின்றித் தானே விளங்குவதாய்) நிர்விகாரமாய் (மாறாததாய்) இருக்கிறதோ அதுவே சத்தியம்".

உலகம் ஸ்வதஸ் ஸித்தமானதா?

மனதையன்றி உலகமுண்டா . . . . . ?

இல்லையே!

தர்க்கச் சாஸ்திரத்திற்குச் சம்மதமான முறையிலேயே நீ ஏன் உலகின் சத்தியத்தை நிர்மாணிக்கக் கூடும்.

“நான் இருக்கிறேன்” என்று உலகம் சொல்லுமா?

முடியாது.

ஆனால் “நான் இருக்கிறேன்” என்று நீ உன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளலாம்.

ஏனெனில் உன் இருப்பு வெறும் ஜட இருப்பல்ல.
அது அறிவோடு கூடியது.

உண்மையில் இந்த இருப்பும், அறிவும் ஒன்றே.

(இருப்பு=ஸத்து, அறிவு=சித்து) ஒன்றை விட்டு ஒன்று இருப்பதில்லை.

உலகம் தன் இருப்பை அறிவதுமில்லை.

அதாவது உலகம் ஸ்வதஸ்ஸித்தமோ சுயம் பிரகாசமோ அல்ல.

அப்படிப்பட்ட உலகம் மெய்யென்று எப்படிக் கூறுவாய்?

மேலும் இவ்வுலகம் எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கிறதே!

இடையறா மாறுதலே அதன் லக்ஷணம்.

ஆதலால் மற்றொன்றைச் சார்ந்ததாய், தன் உணர்வற்றதாய், நிலையற்றதாய், எப்போதும் மாறிக்கொண்டேயிருக்கும் உலகம் சத்தியமல்ல.

நீ சத்தியம் ஒன்றையே தேடுபவனாயிருந்தால் உலகம் உண்மையற்றது என்று அங்கீகரிப்பதைத் தவிர உனக்கு வேறு வகையில்லை என்றருள்கிறார் ஸ்ரீ பகவான்.

நாய் உண்மை என்று எண்ணும் வரை கல்லைக் காண முடியாது.

கல்லைக் கல்லாகத் தெரிந்து கொள்ளாதபோது கற்பித நாய் உண்மையாகவே தோன்றும்.

உலகமும் இவ்வாறே.

எனவே உலகம் உண்மையற்ற தென்பதை உணர்ந்தாலன்றி அது ஆன்மாவை மறைக்கும்.

அதன் உண்மையற்ற தன்மையை நாம் ஏன் நினைப்பதே இல்லை?

காரணம், மனமே உலகைத் தோற்றுவிப்பது.

தான்படைத்த உலகைத் தானே பொய்யென்று அது எப்படி ஒத்துக்கொள்ளும்!

கனவிற் காணும் உலகைப் போன்று நனவும் தன் திருஷ்டி தோஷமே என்றுணர வேண்டும்.

அதற்கு விவகரிக்கும் மனம் ஓய்ந்து துயில், கனவு, நனவு ஆகிய மூன்றவஸ்தைகளையும் பரிசோதித்து தன் உண்மையை அறிய வேண்டும்.

"வாழ்க வளமுடன்"

"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

ஆரோக்யமும் ஆன்மீகமும்

19 Oct, 02:14


பிரபஞ்சம் உங்களிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறது..!

பிரபஞ்சமானது , மக்கள், சம்பவங்கள் , சின்னங்கள் , சகுனங்கள், கனவுகள் , இவைகள் மூலமாக உங்களிடம் பேசிக் கொண்டேதான் இருக்கிறது.

சிலர் மட்டுமே அதன் குரலை கேட்கிறார்கள்.

நாம் எல்லோருமே அவ்வப் போது நடக்கும் பிரச்சனைகள் அல்லது பகல் கனவு காணுதல் அல்லது நமக்கு பிரபஞ்ச செய்தி
சொன்னவரிடமே வாக்கு வாதம் செய்தல் இப்படி செய்து பிரபஞ்ச செய்திகிடைப்பதை
தடுத்துக்கொள்கிறோம்!

பிரபஞ்ச ஆற்றல் என்பது காஸ்மிக் கதிர்கள்தான்.

இந்த காஸ்மிக் கதிர்கள் உலகில் மேலும் கீழும் பரந்து வியாபித்து சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறது.

நமது எண்ண அலைகள் இந்த காஸ்மிக் அலைகளின் பிரபாவத்தில் சேர்ந்து ஆற்றல்களை அதிகப்படுத்துகிறது,

நம் எண்ண அலைகள் நல்லவையாக இருப்பின்
நன்மையும, தீயவையாக இருப்பின் தீமையும் நமக்கு நடக்க செய்கிறது !

நம் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி, சுக துக்கங்களுக்குநம் எண்ணங்களே காரணம் !

"தீதும் நன்றும் பிறர் தர வார"

"வாழ்க வளமுடன்"

ஓம் பரபிரம்ம பஞ்சபூத பிரபஞ்ச சக்தி தாயே போற்றி போற்றி..!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

14 Oct, 03:17


இருமுடி தாங்கி.....

இருமுடி தாங்கி ஒரு மனதாகி
குருவுடனே வந்தோம்
இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும்
திருவடியைக் காண வந்தோம்!

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே!
-----பள்ளிக்கட்டு

நெய்யபிஷேகம் ஸ்வாமிக்கே
கற்பூர தீபம் ஸ்வாமிக்கே
ஐயப்ப மார்களும் கூடிக்கொண்டு
ஐயனை நாடிச் சென்றிடுவார்
சபரி மலைக்குச் சென்றிடுவார்
-----ஸ்வாமியே

கார்த்திகை மாதம் மாலையணிந்து
நேர்த்தியாகவே விரதமிருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே - உனைப்
பார்க்க வேண்டியே தவமிருந்து
இருமுடி எடுத்து எரிமேலி வந்து
ஒருமனதாகிப் பேட்டை துள்ளி
அருமை நண்பராம் வாவரைத் தொழுது
ஐயனின் அருள்மலை ஏறிடுவார்
-----ஸ்வாமியே

அழுதை ஏற்றம் ஏறும் போது
ஹரிஹரன் மகனைத் துதித்துச் செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார் - ஐயன்
வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
கருணைக் கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்த உடனே
பெருந்நதி பம்பையை கண்டிடுவார்
-----ஸ்வாமியே

கங்கை நதி போல் புண்ணிய நதியாம்
பம்பையில் நீராடி
சங்கரன் மகனைக் கும்பிடுவார்
சங்கடம் இன்றி ஏறிடுவார்
நீலி மலை ஏற்றம்
சிவபாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே - அருட்
காவலனாய் இருப்பார்

தேக பலம் தா - பாத பலம் தா
பாத பலம் தா - தேக பலம் தா
தேக பலம் தா என்றால் அவரும்
தேகத்தைத் தந்திடுவார்
பாத பலம் தா என்றால் அவரும்
பாதத்தைத் தந்திடுவார் - நல்ல
பாதையைக் காட்டிடுவார்
-----ஸ்வாமியே

சபரி பீடமே வந்திடுவார்
சபரி அன்னையைப் பணிந்திடுவார்
சரங்குத்தி ஆலில் கன்னிமார்களும்
சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரி மலைதனை நெருங்கிடுவார்
பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதியென்று அவனைச் சரணடைவார்
மதி முகம் கண்டே மயங்கிடுவார் - ஐயனைத்
துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார்

-----பள்ளிக்கட்டு

ஓம் சாமியே சரணம் ஐயப்பா..

ஆரோக்யமும் ஆன்மீகமும்

12 Oct, 03:32


ஸ்ரீ அகஸ்தியர்..!

அகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை!


படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். ஆறுவகைச் சமயத்தினரும் அகத்தியரைப் போற்றுகின்றனர்.

குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது, பார்வதி திருமணத்தைப் பொதிகையில் கண்டது, காவிரி கொணர்ந்தது போன்ற அகத்தியர் தொடர்பான வரலாறுகள் அனைத்திலும் அறிவியல் கூறுகள் பொதிந்துள்ளன.

சோதனைக்குழாய் குழந்தை..

உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் !

குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர்.

உயிர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது.

அவ்வாறு, செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை.

முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவானே உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.

தொலைக்காட்சி பார்த்தவர்...

முதன்முதலில் தொலைக்காட்சி பார்த்தவரும் அகத்தியரே !

பார்வதி – பரமசிவன் திருமணத்தைக் காண அனைவரும் இமயத்தில் கூடியதால் வடபுலம் தாழ்ந்தது.

அதனைச் சமன்செய்ய, சிவபெருமான், அகத்தியரை தென்னாட்டிற்கு அனுப்பினார். அனைவரும் காணப்போகும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை அடியேன் மட்டும் பார்க்க முடியாமல் போகுமே ? என்று வினவினார்.

அகத்தியர், இமயத்தில் நடைபெறும் எமது திருமண நிகழ்வுகளை உமக்குப் பொதிகையில் காட்டியருள்வோம் என்றார் ஈசன்.

அவ்வாறே, அகத்தியர் பார்வதி – பரமசிவன் திருமணக் காட்சியைப் பொதிகையில் கண்டு களித்தார்.

ஓரிடத்தில் நிகழும் நிகழ்ச்சியைப் பிறிதோர் இடத்தில் காணக்கூடிய சிந்திக்கத் தூண்டும் அறிவியல் கூறு இதில் அமைந்துள்ளது.

அகத்தியர் கண்டது நேரடி ஒளிபரப்பு ! (லைவ் டெலிகாஸ்ட்).

ஈசன் திருமணம் நடந்து பலநாட்கள் கழித்து அதனை மீண்டும் காண விரும்பினார்.

திருமால் ! சீர்காழியை அடுத்த ஒரு தலத்தில் சிவ பெருமான், திருமாலுக்குத் தனது திருமணக் கோலத்தை மீண்டும் காட்டியருளினான் ! திருமணத் திருக்கோலம் காட்டிய அந்தத் தலமே, திருக்கோலக்கா என்று பெயர் பெற்றது. இது பதிவு செய்த மறுஒளிபரப்பு!.

அணுவுருவில் நதிகள்...

அகத்தியர் தென்னாட்டிற்குப் புறப்பட்டபொழுது, காவிரியை, அணுவுருவாக்கிக் கமண்டலத்தில் அடைத்து எடுத்து வந்தார் என்பது வரலாறு.

மனிதன் தண்ணீர் இல்லாத வேறு கோள்களில் குடியேறும் காலத்தில், தண்ணீரை அணுவுருவாக்கி எடுத்துச் சென்று அங்கு, மீண்டும் தண்ணீரை உற்பத்தி செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்பது நவீன அறிவியல்.

நானோ – டெக்னாலஜி என்னும் தற்போதைய மூலக்கூறு தொழில் நுட்பத்திற்கு, இந்த சம்பவம் புராண ஆதாரம்.

ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளே சரணம்..!

"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

ஆரோக்யமும் ஆன்மீகமும்

10 Oct, 03:18


அருள் ஒளி கிடைக்காத புத்தி தன்னுடைய தெய்வத் தன்மையை இழந்து, மந்த நிலைக்கு ஆளாகி ராகத் துவேசங்களால் புறமனதில் இருந்து பிரிக்கப்பட்டு நிற்கும் பொழுது செய்யப்படும் செயல்களனைத்தும் கெடுதல்கள் ஆகி விடுகின்றது.

கோபத்தில் கொலை செய்து விட்டு ஜெயிலுக்குப் போகிறவன் புத்தியோடு தொடர்பற்ற புறமனதின் வயப்பட்டவனாவான். அதாவது ராகத்துவேசங்களால் மந்த மடைந்த புத்தியானது பேசாமல் இருந்திருக்கும் அல்லது கொலை செய்த பிறகு தவறு செய்து விட்டோமே என்று வருந்தியிருக்கும்.

புத்தியோடு புறமனதிற்கு தொடர்பிருந்திருந்தால் கொலை நிகழ்ந்திருக்காது. தடுக்கப்பட்டிருக்கும். இப்படி மனமானது புறமனமென்றும், புத்தியென்றும் இரண்டு நிலைகளில் இயங்கக் காரணமாக இருப்பது அஹங்காரமேயாகும் என்பதே முடிவு.
https://youtu.be/nXSvpP7gFYs?sub_confirmation=1

இதில் சித்தம் என்பது மனதின் மற்றொரு நிலைப்பாடு. அதாவது வினைகளைத் தன்னகத்தே தேக்கி வைத்துக் கொள்வது. எனவே இதுகாறும் பேசிக் கொண்டதிலிருந்து தெரிந்து கொள்வதென்னவென்றால் நான் என்கிற அஹங்காரமே மனம் தோன்றக் காரணமாக இருக்கின்ற மூலமலமாக இருக்கின்றது.

மேலும் புறமனம் என்றும், புத்தி என்றும், சித்தமென்றும் மனம் பிரிந்து கிடப்பதற்குக் காரணமும் நான் என்கிற அஹங்காரமேயாகும். அஹங்காரம் இருக்கும் வரை மனமானது இப்படி தனித்தனியாக பிரிந்து நின்று இயங்கி வினைகளைப் பெருக்கிக் கொண்டே இருக்கும்.

நான் அழிந்து போனால் மனமழிந்து போகும் என்பார்கள். ஆனால் மனம் அழிவதில்லை. அது ஒரே நிலையில் நின்று ஆன்மாவில் லயமாகி விடும்.

“வாழ்க வளமுடன்”

https://youtu.be/nXSvpP7gFYs?sub_confirmation=1

ஆரோக்யமும் ஆன்மீகமும்

10 Oct, 03:18


புலன்களை விட மனம் மேலானது. மனதைவிட புத்தி மேலானது. புத்தியை விட சித்தம் மேலானது, சித்தத்தை விட ஆன்மா மேலானது..!

கேள்வி – மனம் வேற புத்தி வேறன்னு சொல்றீங்க, ஓரிடத்தில் மனமும் புத்தியும் ஒண்ணுன்னு சொல்றீங்க, ஒரே குழப்பமா இருக்கு.....!!?? ஒரே மனம் ஏன் இப்படித் தனித்தனியாக இயங்க வேண்டும் ?

பதில் – வீட்டை வீடு என்றுதான் சொல்கிறோம். ஆனால், அதில் அஸ்த்திவாரம், கட்டிடம், மேல் மாடி, மொட்டை மாடி என்று பல நிலைகள் இருக்கின்றனவல்லவா ?

தேவைப்படும் பொழுது அந்தந்த பெயர்களை, உபயோகப்படுத்துகிறோம். மற்ற வேளைகளில் வீடு என்றுதான் சொல்கிறோம்.

அது போல தேகத்தை உடல் என்கிறோம், அதில் தோல், வாய், கண், மூக்கு, செவி, வயிறு, கால், கை என்று பல உறுப்புகளும், இன்னும் நம் உடலில் நாம் கண்டறியாத பல உள்ளுறுப்புகளும் கூட இருக்கின்றன. தேவைப்படும் பொழுதுதான் அவற்றின் பெயர்களைச் சொல்கிறோம்.

மற்ற வேளைகளில் பொதுவாக உடல் என்றோ, உடல் நலமில்லை என்றோதான் சொல்கிறோம். அது போல மனமானது நான்கு நிலைகளில் இயங்குகிறது. அவற்றை மனதின் அந்தகரணம் என்று சொல்கிறோம். பொதுவாகப் பேசும் பொழுது மனம் என்று சொல்லிக் கொள்கிறோம்.

ஒரு பைத்தியக் காரனை மனநிலை தடுமாறியவன், புத்தி பேதலித்தவன், சித்த சுவாதீனம் இல்லாதவன் என்றெல்லாம் கூறுவதும் இப்படித்தான். மனம் இயங்க ஸ்தூல உடலில் தேவைப்படும் கருவி மூளை என்பதால் மூளை கலங்கியவன் என்றும் கூட சொல்வதுண்டு.
மனம் இல்லை என்றால் புலன்களால் இயங்க முடியாது. நம் மனமானது தன்னிச்சையாக இயங்கக் கூடியது.

ஆனால், புத்தி அப்படியல்ல. ஒரு வரையரைக்குள் இயங்குவது. மனம் எதையும் ஆராய்ந்து பார்ப்பதில்லை. புத்தி அனைத்தையும் ஆராய்ந்து பார்க்கிறது. மனம் க்ஷண நேரத்தில் தோன்றி மறைந்து விடுகின்றது. புத்தி நிலையாக இருக்கிறது. எனவே மனம் வேறு, புத்தி வேறு என்று சொல்கிறார்கள். ஆனால் மனதின் வேறொரு நிலையே புத்தியாகும்.
https://youtu.be/nXSvpP7gFYs?sub_confirmation=1

கீதை புலன்களை விட மனம் மேலானது. மனதைவிட புத்தி மேலானது. புத்தியை விட சித்தம் மேலானது, சித்தத்தை விட ஆன்மா மேலானது என்கிறது. அதாவது சூக்கும நிலையை அடையும் அளவு ஒரு நிலையிலிருந்து ஒரு நிலை வேறுபடுகிறது, வலிமையடைகிறது.

புலன்களை கொண்டு இயங்கும் நிலையில் அது புறமனம் எனப்படுகிறது. புறமனமாகிய தன் செயல் சரியா, தவறா என்று ஆராயும் நிலையில் அது புத்தி எனப்படுகிறது.

எனவே மனம் வேறு புத்தி வேறு அல்ல. ஒவ்வொரு நிலையாகப் பரிணமித்து, அவை தனித்தனியே இயங்குகின்றன. ஆனால் அந்தகரணங்கள் அனைத்திற்கும் அடிப்படை ஒன்றுதான். புத்தி மனதின் இரண்டாவது சூக்கும நிலை அவ்வளவுதான்.

புத்தியின் தொடர்பின்றி புறமனம் இயங்கும் பொழுதுதான் தவறுகள் நேர்கின்றன. மனதை ஒரு வாகனமாகக் கொள்வோமேயானால் புத்திதான் அதில் பிரேக். நவீன மனோதத்துவம் மனதை இரண்டு நிலைகளாகவே காண்கிறது.
https://youtu.be/nXSvpP7gFYs?sub_confirmation=1

ஒன்று புறமனம் மற்றது புத்தி. புறப் பொருள்களை மனம் நுகரும். புத்தி அதை ஆராய்ந்து புலன்களுக்கு செயல்பட உத்தரவளிக்கும். பல நேரங்களில் புத்தியின் உத்தரவை எதிர்பார்க்காமலோ அல்லது புத்தியின் உத்தரவு கிட்டாமல் போய்விடும் பொழுதோ மனமே நேரடியாக உத்தரவளித்து விடுவதும் உண்டு. இவ்வாறு புத்தியின் தொடர்பின்றி நடக்கும் செயல்களே துன்பத்திற்கு காரணமாக அமைகின்றன.

இதைத்தான் ‘’புத்தியில்லாம செஞ்சிட்டான்’’ என்பார்கள். இப்படி புத்தியின் தொடர்பின்றி காரியங்களை புறமனமே செய்து விடுவதால், அதுவே பழக்கமாகி, இயல்பாகி விடும் பொழுது, புத்தி வேலை எதுவும் இன்றி மந்த நிலைக்கு ஆளாகி விடுகின்றது.

நம் முன்னோர்கள் சொல்வதென்னவென்றால்,புத்தியின் இந்த மந்த நிலைக்குக் காரணமாக அமைவது புறமனம் மட்டுமல்ல, நம் சித்தத்தில் பதிவாகியுள்ள பழைய வினை வித்துக்கள் மற்றும் அஹங்காரமுமாகும் என்கிறார்கள்.
https://youtu.be/nXSvpP7gFYs?sub_confirmation=1

இதில் புறச் சூழலை தீர்மானிப்பது புறமனமேயாதலால் பழைய வினைகள் கிளர்ந்தெழக் காரணமாக இருப்பது புறமனமேயாகின்றது. ஆனால், இந்த நான் என்கிற அஹங்காரம் மிகக் கொடியது. இது புறமனதிற்கும், புத்திக்குமிடையே வந்து விட்டால் மனிதன் நிலை அதோ கதிதான்.

புத்தியை சார்ந்து புறமனம் செயல்படுமளவு அதாவது புத்தி நிலையில் மனமானது இயங்கும் பொழுது ஒரு மனிதன் வாழ்வு மேம்படும். புத்தியும், மனமும் பிரிந்து தொடர்பற்று கிடக்குமேயானால் அம்மனிதனின் மந்த புத்தி உடையவனாக, புறமனச் சுழலில் அகப்பட்டுத் தவித்துக் கொண்டிருப்பான்.

இப்படிப் பிரிகின்ற சூழலை நான் என்கிற அஹங்காரம் ஏற்படுத்தி விடும். மனதின் புத்தி நிலை கண்ணாடி போன்றது. அது ஆன்மாவின் ஒளியை பிரதிபலிப்பது. ஆனால், பறமனதினால் விளையும் அனுபவங்களும், அஹங்காரமும் ஒரு புகை போல் பரவி புத்திக்கு ஆன்ம ஒளி கிடைக்க விடாமல் செய்கின்றன.
https://youtu.be/nXSvpP7gFYs?sub_confirmation=1

ஆரோக்யமும் ஆன்மீகமும்

09 Oct, 03:05


துன்பம் நீங்கி ஆனந்தம் அடைவோமாக..!

இந்தப் பிரபஞ்சம் ஒரு மாயா சமுத்திரம்.


இங்கே காணும் அனைத்தும் மாயையே.

செப்படிக்காரனின் வித்தைகள் மறைந்து போம். அவன் மட்டுமே இருப்பான்.

அது போல, உலகத் தோற்றம் பொய். எல்லாவற்றிற்கு ஆதாரமான பிரம்மம் மட்டுமே மெய்.

தான் பிரம்ம சொரூபம் என்று உணர்ந்து ஆனந்தத்தை அடைவதே வீடுபேறு.

சாதாரணமாக நாம் அடிக்கடி முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வோம்.

அதுபோல விஷத்தை விஷத்தாலும், இரும்பை இரும்பாலும், அம்பை அம்பாலும், அழுக்கை அழுக்காலும் மாய்ப்பர். அந்த முறையில் மாயையை மாயையால் தான் கெடுக்க முடியும்.

அது எப்படி ?

அதாவது அசுத்த மாயையை சுத்த மாயையால் கெடுக்க வேண்டும். இந்த சுத்த மாயை, அசுத்த மாயை பற்றி ஏற்கனவே விளக்கங்கள் தந்திருப்பதால் மேலே முன்னேறுவோம்.

சுத்த மாயை, அசுத்த மாயை என்கிற இரு மாயைகளாலும் ஜீவன்கள் அடைகிற அவஸ்தைகள் ஏழாகும்.

அவை அஞ்ஞானம், ஆவரணம், விட்சேபம், பரோட்சம், அபரோட்சம், துக்க நிவர்த்தி, தடையற்ற ஆனந்தம் என்பனவாகும்.

தான் பிரம்ம சொரூபம் என்பதை மறந்திருப்பதே அஞ்ஞானம்.

எல்லாம் பிரம்மத்தின் செயலே என்று தன் முயற்சியின்றி இருப்பது ஆவரணம்.

மக்கள் படும் துன்பங்களுக்குக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்து கண்டுபிடிப்பேன் என்று துணிவது விட்சேபம்.

குருவைப் பணிந்து, அவர் உபதேசத்தில் முழுமையான நம்பிக்கை வைப்பது பரோட்சம்.

முறைப்படி தற்பதம், துவம்பதம், அசிபதம் ஆகியவற்றின் பொருளை தக்க சான்றோர்களிடம் கேட்டு சிந்தித்துத் தெளிவதால் ஜீவ - ஈஸ்வர ஐக்கியம் உணர்தல் அபரோட்ச ஞானமாகும்.

ஐக்கியம் உணர்ந்த ஞானி பேதம் நீங்கி விடுவதால் இன்ப துன்பம் என்ற பேதமும் நீங்கி விடுவதால் துன்பமற்ற நிலையை அடைகின்றார்.

இதுவே துக்க நிவர்த்தி. எந்த வித பற்றுமின்றி நிஸ்காமிய கர்மத்தால் சாதனை புரிந்து ஜீவன் முக்தன் ஆதலே தடையற்ற ஆனந்தம் எனப்படும்.

இதை ஒரு சிறிய சம்பவத்தால் புரியும்படிக்கு உதாரணப்படுத்துகிறேன்.

ஒரு ஆற்றை பத்து நண்பர்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒருவர் பின் ஒருவராகக் கடக்கிறார்கள்.

மறுகரையை அடைந்த பின்பு ஒவ்வொருவரும் தன்னை விடுத்து எண்ணிப் பார்த்து விட்டு ஒன்பது பேர்தான் இருக்கிறார்கள் என்று வருந்துகிறார்கள்.

அப்போது எதிரே வந்தவர் நிலையை உணர்ந்து நீங்கள் பத்து பேர் இருக்கிறீர்கள், என்றும் அவரவரும் தங்களை விடுத்து எண்ணியிருக்கிறீர்கள் என்பதையும் விளக்கி விட்டுப் போகிறார்.

இதனால் மனந்தெளிந்த அனைவரும் துன்பம் நீங்கியவர்களாக மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இந்த சம்பவத்தை பொருத்தவரை பத்தாவது ஆள் தானே என்பதை மறந்த நிலை அஞ்ஞானம்.

பத்தாவது ஆள் தண்ணீரில் போய் விட்டான் போலிருக்கிறது. இருந்தால்தான் எண்ணும் போது தெரிந்திருக்குமே என்று முயற்சி எதுவும் இல்லாமல் இருப்பது ஆவரணம்.

ஐயஹோ நம் நண்பரில் ஒருவனைக் காணவில்லையே என்று தேடி அலைவது விட்சேபம்.

எதிரேவந்த ஒருவர் நீங்கள் பத்து பேர் இருக்கிறீர்கள்.

நான் எண்ணிக் காட்டுகிறேன் என்ற போது அவரை நம்புவது பரோட்சம்.

வந்தவர் சுட்டிக் காட்டியவுடன் அவர் சொல்லை நம்பி உணரந்து, தெளிந்து தன்னை உணர்வது அபரோட்சம்.

நல்ல வேளை ஒருவரும் தொலையவில்லை என்று கவலை நீங்குவது துக்க நிவர்த்தி. அதனால் உண்டான மகிழ்ச்சியே தடையற்ற ஆனந்தம்.

எனவே தத் ஆகிய ப்ரம்மத்தை, துவமாகிய ஜீவன்(நாம்) தக்க குருவின் மூலம் அறிந்து தெளிந்து அசியாகிய ஐக்கியம் அடைந்து துன்பம் நீங்கி ஆனந்தம் அடைவோமாக.

இராம் மனோகர்..

"ஆன்ம ஞானத்தை அடைய ஞானிகள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

ஆரோக்யமும் ஆன்மீகமும்

05 Oct, 03:27


சந்தனம் எங்கே மணக்குது..!

எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது
ஐயப்பன் சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது
என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது
இன்பமாக ஊதுவத்தி அங்கே மணக்குது!

என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது
வீர மணிகண்டன் சன்னதி நெய்யும் மணக்குது
ஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குது
அய்யன் மார்கள் உள்ளத்திலே அன்பு மணக்குது!

பள்ளிகட்ட சுமந்துவிட்டால் பக்தி பிறக்குது
அந்த பனி மலையில் ஏறிடவே சக்தி பிறக்குது
பகவான பார்த்துவிட்டால் பாவம் தொலையுது
பதினெட்டாம் படி தொட்ட வாழ்வும் இனிக்குது!

வேட்டி துள்ளி ஆடும் பொது மனமும் துள்ளுது
அய்யன் பேரழகை காண உள்ளம் ஆசை கொல்லுது
காட்டுக்குள்ளே சரண கோஷம் வானை பிளக்குது சுவாமியே சரணம் ஐயப்பா
வீட்டை மறந்து பக்தர் கூட்டம் காட்டில் இருக்குது!

பூங்கா வன தோப்புக்குள்ளே பவனி வருகிறான்
அய்யன் வேங்கையின் மேல் ஏறி வந்து வரமும் கொடுக்கிறான்
நோம்பிருந்து வருவோரை காத்து நிற்கிறான்
ஓங்கார நாதத்திலேயே எழுந்து வருகிறான்!

ஓம் சாமியே சரணம் ஐயப்பா.‌!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

04 Oct, 03:32


மூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )

மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும். நமது இடது நாசி சந்திரகலை.
அதில் வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும்.

வலது நாசி சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக இருக்கும்.

இரண்டு நாசிகளிலும் மூச்சுக் காற்று வந்தால் சுழிமுனை என்பர்.

பொதுவாக மழைக் காலங்களில் இயற்கையாகவே சூரியகலையில் ஓடும்.

அதிக வெயில்அடிக்கும் போது சந்திரகலையில் ஓடும்.
இது இயற்கையாகவே நடக்கும் அற்புதமாகும்.

ஏனெனில் உடலில் சூடும் குளிர்ச்சியும் சமநிலையில் இருக்க வேண்டும்.

இதில்எந்த குறைபாடு நேர்ந்தாலும் நமது உடலில் பல உபாதைகள் ஏற்படும்.

ஒருவருக்கு சூரியகலையில் சுவாசம் தொடர்ந்து மூன்று நாட்கள் ஓடினால் ஒரு வருடத்தில் மரணம் சம்பவிக்கும்.
ஒரே நாசியில் பத்து நாட்கள் தொடர்ந்து ஓடினால் மூன்று மாதங்களில் மரணம் சம்பவிக்கும்.

மூச்சுப்பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும்.

சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும்.
சுவாசத்தை அடக்குவதால் ஆமைகளும் பாம்புகளும் அதிக நாட்கள் உயிருடன் வாழ்கின்றன.

நாம் நடக்கும் போது 16 அங்குலமும், அமர்ந்திருக்கும் போது 12 அங்குலமும், ஓடும் போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடல்உறவு கொள்ளும் போது 64 அங்குலமும் சுவாசம் நடைபெறுகிறது.

சுவாசம்...

11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும்.
10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும்.
9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான்.
8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான்.
7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான்.
6அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான்.
5 அங்குலமாக குறைந்தால் காய சித்து உண்டாகும்.
4 அங்குலமாக குறைந்தால் அட்டமா சித்து உண்டாகும்.
3 அங்குலமாக குறைந்தால் நவ கண்ட சஞ்சாரம் உண்டாகும்.
2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல் சித்திக்கும்.
1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம், உதித்த இடத்தில் நிலைத்தல், சமாதி நிலை அன்னபாணம் நீங்கும்.

சந்திரகலை என்றால் என்ன?

இடது நாசிச்(.இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்( .வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலைஎனவும் அழைக்கப்படும்.

சந்திரகலையை மதி/இடகலை/
இடைக்கால்எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.
இங்கு ‘கால்’ என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது.
அதனால் தான் ‘காலனைக் காலால் உதைத்தேன்’ எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு.

இங்கு காலனாகிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.

‘விதியை மதியால் வெல்லலாம்’ என்பார்கள்.
இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன்.

16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும்.எனவே விதி முடிவும் விலகியே போகும்.

ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் .

உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம்.

இதுதான் பிராணாயாமத்தின்
சாராம்சம்.

நமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள்.
வலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் ‘ஸ்பாஞ்’ போல காற்றுப் பைகளால் ஆனது.

வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க ‘பிராணா’ சக்தி சீராகப் பரவுகிறது .

இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , ‘சந்திரகலை’. இது குளுமையானது .

வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , ‘சூரியகலை’. இது வெப்பமானது.

வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான ‘சந்திரகலை’ அதிகரிக்கும்.

இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்.

*"ஆரோக்ய வாழ்வுக்கு மூச்சுப்பயிற்சி அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்"*

ஆரோக்யமும் ஆன்மீகமும்

03 Oct, 01:19


மரணத்துக்குப் பிறகு உயிர் எங்கே போகிறது?

மரணம் பற்றிய மா்மங்கள்..!

ஏன் பேய்களின் கால்களும், தேவா்களின் கால்களும் நிலத்தில் படுவதில்லை ?

பஞ்ச கோசங்கள், தூல சரீரம், சூக்கும சரீரம், காரண சரீரம்..!

உயிரையும் உடலையும் பற்றிய விரிவான தகவல்கள்..!


https://youtu.be/1eTxvtL_bfE?sub_confirmation=1

ஆரோக்யமும் ஆன்மீகமும்

01 Oct, 03:25


பரப்பிரம்ம பஞ்சபூத பிரபஞ்ச சக்தி....

ஆகாயம் நீராமயமாய் ஒன்றும் இல்லாத வெட்ட வெளியாய் இருந்தது.

இதில் "ம்" என்ற சப்தம் மட்டுமே ஒலித்து கொண்டிருந்தது.

இதுவே ஆகாயத்தின் குணமாகும்.

இதில் "ம்" என்ற சப்த ஓசையிலிருந்து, காற்று உண்டாயிற்று.

"உஸ்" என்ற சப்தத்துடன் ஸ்பரிசம் உண்டாயிற்று.

இது காற்றின் இரண்டு குணங்களாகும்.

காற்றின் வேகம் அதிகரிக்க, அதிலிருந்து நெருப்பு உண்டாயிற்று.

இதில் "உஸ்" என்ற சப்ததும், பரிசமும், ரூபமும் உண்டாயிற்று.

இது நெருப்பின் மூன்று குணங்களாகும்.

நெருப்பின் ஜுவாலையால் ஆவி உண்டாக்கி, அது நீராவியாக மாறித் தண்ணீர் உண்டாயிற்று.

இதில் சலச்சல என்ற சப்ததும், ஸ்பரிசமும், ரூபமும், ரசமும் உண்டாயிற்று.

இது தண்ணீரின் நான்கு குணங்களாகும்.

தண்ணீர் நிறைந்த உடன் அதில் ஏடுகட்டி அடியாகி மண் உண்டாயிற்று.

இதில் கடக்கட என்ற சப்ததும், ஸ்பரிசமும், ரூபமும், ரசமும், கந்தமும் உண்டாயிற்று.

இது மண்ணின் ஐந்து குணங்களாகும்.

ஆகாயம், காற்று, நெருப்பு, தண்ணீர், மண் இவை ஐந்தும் சேர்ந்து உருண்டை வடிவமாக, உலகம் என்னும் இந்தப் பூமண்டலம் உருவாயிற்று.

இதுபோல் சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனி, யுரேனஸ், நெப்டியூன், நட்சத்திரங்கள் ஆகியவையும் தோன்றின.

இவை யாவும் பூமியைப் போல் பூ மண்டலங்களே.

இவை அத்தனையும் ஆகாயம் என்னும் வானவெளியில் சதா சுழன்று சுற்றிக் கொண்டிருக்கின்றன.

ஓம் நமச்சிவாய...

ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!

தொகுப்பு - கோவை ச.பாலகிருஷ்ணன்.

ஆரோக்யமும் ஆன்மீகமும்

30 Sep, 03:26


இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும்..!

சித்தர் சிவவாக்கியர்


“நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”

சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது அந்த உணவின் ருசியை உணர்ந்து கொள்ளாதது போலவே மனக்கோயிலினுள் இறைவன் இருப்பதை அறியாமல் வெறும் கல்லை நட்டு வைத்து தெய்வமென்று பெயரிட்டு பூக்களாலும் மந்திரங்களாலும் வழிபாடு செய்வது அறியாமையேயாகும் என்கிறார்.
https://youtu.be/LtnQn689XR0?sub_confirmation=1

“ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர்
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர்
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே”

நட்டு வைத்த கல்லை தெய்வம் என்று நினைத்து அக்கல்லின் மேல் மலர்களைச் சாத்திவிட்டு அதைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள்.

மொண மொண என்று ஏதோ மந்திரங்களையும் சொல்லுகிறீர்கள்.

அந்த மந்திரத்தால் என்ன பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா?
https://youtu.be/LtnQn689XR0?sub_confirmation=1

அட மூடர்களே, கடவுள் என்பவர்....
தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான்.

அப்படி இருக்கையில் நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ?

அடுப்பில் வைத்துச் சுடப்பட்ட சட்டியும் அதனுள்ளே இருக்கும் அகப்பையும் அதில் சமைக்கும் உணவின் ருசியை அறியாதது போலவே… நீர் செய்யும் புற வழிபாட்டினால் இறைவன் வெளித்தோன்ற மாட்டார்.

இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும்.

அவனை கல்லில் காண முடியும் என்று சொல்லுவது வெறும் பிதற்றலே என்கிறார்.

கடவுளின் பெயரால் விக்கிரகங்கள் செய்து வைத்து வணங்குவதும், அவைகளுக்குத் தினசரி பூசைகள், திருவிழாக்கள் செய்வதும் தொன்று தொட்டு நடந்து வருபவை.

இவைகளையெல்லாம் மூடப்பழக்கங்கள் என்று சாடுவதென்றால் எவ்வளவு துணிவு வேண்டும்?
https://youtu.be/LtnQn689XR0?sub_confirmation=1

புனிதமான அடிப்படைக் கொள்கையையே ஆட்டிப் பார்ப்பதென்றால் அதனை அறிந்து சொல்லும் பக்குவமும் வேண்டுமல்லவா?

இங்கு உருவ வழிபாடு தவறா என்ற வினாவுக்கும் ஒரு விளக்கம் தேவைப்படுகின்றது.

ஆழ்ந்த அறிவில்லாத பாமர மக்களை ஒரு கட்டுக்கோப்பிற்குள் கொண்டுவர, மற்றும் அவர்களை நல்வழிப்படுத்த உருவ வழிபாடு அவசியம் தேவைப்படுகின்றது..
https://youtu.be/LtnQn689XR0?sub_confirmation=1

சட்டத்துக்கும், சான்றோர் உரைகளுக்கும் கட்டுப்படாத சிந்தைத் தெளிவில்லாத மனிதர்களுக்கு, ஒரு வடிவத்தைக் காட்டி இதுதான் கடவுள், இவர் உனது பாவச் செயல்களைக் கண்காணித்து தண்டனை தரக் காத்திருக்கின்றார்.

ஆகவே தவறு செய்யாதே என்று கண்டித்ததால் அந்தக் கட்டளைக்கு அவர்கள் பணிகிறார்கள்.

மனதில் கடவுள் கட்டளையை மீறி நடக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்; கடவுளின் கட்டளை என்று சொல்லப்படும் வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகிறார்கள்.
https://youtu.be/LtnQn689XR0?sub_confirmation=1

அதனால் உருவ வழிபாடும் ஒரு வகையில் பயனாகிறது.

பலரை நல்வழிப்படுத்த உதவுகிறது.

இதனால் உருவ வழிபாடு தவறல்லை என்று ஆத்திகர்கள் வாதிடுகிறார்கள்..

உருவ வழிபாடு ஒரு விதமான மன நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

அதனால் மக்களிடம் பயபக்தி ஏற்படுவதை நாம் அனைவரும் கண்கூடாக பார்க்கிறோம்..
https://youtu.be/LtnQn689XR0?sub_confirmation=1

எங்கும் நிறைந்த கடவுளைக் கல்லில் இருப்பதாகவும், செம்பில் இருப்பதாகவும், மண்ணில் இருப்பதாகவும், மரத்தில் இருப்பதாகவும், உருவமைத்துக் காட்டுவது கடவுளையே அவமதிப்பதாகும் என்று வாதிடுகின்றனர்..

சித்தர்களின் இந்தக் கருத்தையொட்டியே சிவவாக்கியரும் மேற்கண்டவாறு உருவ வழிபாட்டை எள்ளி நகையாடினார்.

கல்லில் கடவுளின் வடிவம் செய்து அதைப் பல பெயர்களால் அழைப்பது அறிவின்மை; அறிவற்ற மூடர்கள்தாம் இவ்விதம் செய்வார்கள்.

உலகைப் படைத்துக் காத்து, அழிக்கவும் வல்ல ஒரு பொருள் கல்லிலா இருக்கிறது?
https://youtu.be/LtnQn689XR0?sub_confirmation=1

இல்லை அந்தக் கடவுளின் வடிவம் உள்ளத்தில் மட்டுமே இருக்கிறது.

அதனை உள்ளத்தால் அல்லவோ வழிபட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.

“இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும்”.

“நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்”

ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்..!

https://youtu.be/LtnQn689XR0?sub_confirmation=1

ஆரோக்யமும் ஆன்மீகமும்

28 Sep, 06:08


ஞானக் கனி பெற்ற புராண நிகழ்வு (உட்பொருள்):-

பரம்பொருளான இறைவன் ஆன்மாக்களாகிய நமக்கு அருள் புரியும் பொருட்டு பலப்பல திருவிளையாடல்களைப் புரிந்து அருளுகின்றான்.

இறை நிகழ்வுகளில் பொதிந்து உள்ள உட்குறிப்பை உய்த்து உணர்தல் அவசியம்.

ஞானக்கனி அளித்த நிகழ்வில் 'தாய் தந்தையரின் மேன்மை' வலியுறுத்தப் பட்டது. மேலும் இந்நிகழ்வின் மூலம் முருகக் கடவுள் பழனி மலையில் எழுந்தருளவும் திருவுளம் பற்றினார்.

ஒரு தந்தை தன் குழந்தையுடன் ஆடுவதும், பாடுவதும், அக்குழந்தையைத் தேடுவது போல் பாவனை புரிந்துப் பின் கண்டு கொண்டதாகக் காட்டிக் கொள்வதும், குழந்தைக்கு மகிழ்ச்சியான அனுபவங்கள் தரும் பொருட்டே. அது போல இறைவனின் திருவிளையாடல்கள் நமக்கு ஆன்மீக அனுபவங்கள் அளித்து அருளும் பொருட்டே நிகழ்கிறது என்ற தெளிவான புரிதலுடன் புராண நிகழ்வுகளை அணுகுதல் அவசியம்.

இனி 'பழம் பெற்ற நிகழ்வு' பற்றிய பரம குருநாதரான திருமுருக கிருபானந்த வாரியாரின் அருமையான விளக்கத்தைக் காண்போம்.

உலகத்தை வலம் வருபவருக்கு கனி தரப்படும் என்று சிவபெருமான் கூறி அருளினார்.. சிவத்திற்குள்ளே உலகமெலாம் அடங்கி இருக்கிறது என்று விநாயகர் சிவத்தை வலம் வந்தார்.

முருகவேள் புவியை வலம் வந்தார். ஞானமே வடிவாகிய முருகப் பெருமானுக்கு சிவத்திற்குள்ளே உலகமெலாம் அடங்கி இருக்கிறது என்பது தெரியும்.

1. இறைவன் எல்லா பொருளிலும் அடங்கி இருக்கிறான்.

2. எல்லா பொருள்களும் இறைவனிடத்திலே அடங்கி இருக்கின்றன.

விநாயகர் சிவத்திற்குள்ளே எல்லாவற்றையும் பார்த்தார். முருகன் எல்லாவற்றிற்குள்ளும் சிவத்தைப் பார்த்தார். எனவே எல்லாவற்றையும் சிவத்திற்குள் பார்க்கின்ற பார்வையும், எல்லாவற்றிற்குள்ளும் சிவத்தைப் பார்க்கின்ற பார்வையும் ஒன்று தான். ஒருவர் இரண்டும் எட்டும் பத்து என்று கூட்டினார்.

மற்றொருவர் எட்டும் இரண்டும் பத்து என்று கூட்டினார். விடை ஒன்று தானே?

கணேசர் உலகமேயாகிய இறைவனை அணுகி ஞானத்தை உடனே பெற்றார்; முருகன் இறைவன் எங்கும் படர்ந்துள்ள உலகத்தை அறிந்து, ஆராய்ந்து வலம்வந்து அவரே ஞானவடிவாகினார்.

ஞானமே வடிவாகிய கந்தனை பழநியப்பா என்று மனமுருகி பாடினார் ஔவையார்.

ஆகவே இறைவனை பக்தியோகத்தால் அணுகி ஞானம் பெறுவதும், இறைவனைப் பற்றி ஆராய்ந்து அறிந்து ஞானயோகம் மூலம் அடைவதும் ஒன்றே என்றாலும்;

பக்தி யோகம் விரைவில் ஞானமடைய வழிபுரியும்..

ஓம் நமச்சிவாய..

ஆன்மீக வாழ்க்கைக்கு நம் புராணங்கள் பற்றி அறிந்திருப்பது அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!

ஆரோக்யமும் ஆன்மீகமும்

27 Sep, 04:27


இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பாலுந்தலை விரைவில் தூண்டக் கூடிய விஷயங்கள் பல உள்ளன. இதுவே பல விரும்பத்தகாத நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.

இயற்கையாகவே இரு பாலினரின் உடலும், செயல்களும் ஒருவரை ஒருவர் கவரும் படியாகவே அமைந்துள்ளது.

இத்தகைய கவர்ச்சியில் தூய்மையும், தியாக உணர்வும் மேலோங்கி இருந்தால் அது காதல் என்றும், அத்தகைய உணர்வு குறைந்து போய்விட்டால் அதுவே காமம் என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்து.

காமம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்பத்தையே விளைவிக்கிறது.
https://youtu.be/62DXWEG89B0?sub_confirmation=1

காமம் பிட்யூட்ரி சுரப்பியின் செயல்களை முடக்குகிறது. காதல் அதன் சுரப்பு நீர்களின் உற்பத்தியை துரிதப்படுத்துகிறது.

திருமணம் ஆன தம்பதியரிடம் காதல் வளரும் போது காதலன் தன் காதலியிடமிருந்து அமைதியையும், பொறுமையையும் கற்றுக் கொள்கிறான்.

திருமணம் ஆன தம்பதியர்கள் காதலி தன் காதலனிடமிருந்து ஆற்றலைக் கற்றுக் கொள்கிறாள். இவ்வாறு திருமணம் ஆன தம்பதியர் இருவர் கூடி வாழ்ந்து பண்படுவதே தனிக் கல்வியாகும்.

உணர்வும் அறிவும் பண்பட்டு ஒத்த வளர்ச்சி பெற்று, அளவோடு இன்பம் துய்த்து நல்வாழ்வு வாழக் கூடிய வகையில் காதல் அவர்களுக்கு பயிற்சி நல்குகிறது.

இப்பயிற்சினால் இல்வாழ்வு அன்பும், அறனும் உடையதாகின்றது.
https://youtu.be/62DXWEG89B0?sub_confirmation=1

இதனால் தெரிவிக்கும் கருத்து என்னவென்றால் ப்ரம்மச்சரியம் என்பது பெண்மையை வாழ்விலிருந்து புறந் தள்ளுவதல்ல.

பெண்மையும் ஆண்மையும் சேர்வதில்தான் பூரணத்துவம் மலரும்.

அளவோடு இன்பம் துய்த்து உயிர் பொருளின் விரையத்தைக் கட்டுப்படுத்துவதே ப்ரம்மச்சரியம்.

வயலில் விளையும் நெல்லில் குறைந்த பகுதியையே விதைக்குப் பயன்படுத்துகிறோம்.

பெரும் பகுதியை உணவிற்காகவே பயன்படுத்துகிறோம்.
https://youtu.be/62DXWEG89B0?sub_confirmation=1

அது போல உயிர்ப் பொருளின் மிகக் குறைந்த பகுதியை இடமறிந்து, காலமறிந்து, தேவையறிந்து இனப் பெருக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும்.

எஞ்சியுள்ள பெரும் பகுதியை உள் ஒளிப் பெருக்கிற்குப் பயன்படுத்த வேண்டும்.

உயிர் பொருளை வீணே விரையம் செய்தால் உடல் பொலிவிழக்கும், புத்தி மந்தமாகும், நரம்புகள் தளரும், எல்லா நோய்களும் உண்டாகும்.

நடைபிணமாக வாழ நேரிடும்.

வாழ்க இல்லறத்தாரின் ப்ரம்மச்சரியம்.

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கைமுறை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!

2,990

subscribers

599

photos

13

videos