The Seithikathir® @seithikathir Channel on Telegram

The Seithikathir®

@seithikathir


WELCOME! SUPPORT OUR JOURNALISM!

• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.

WE THANK YOU FOR YOUR TRUST IN US.

The Seithikathir® (English)

Are you looking for a reliable source of news and infotainment in Tamil? Look no further than The Seithikathir®! This Telegram channel is India's leading Tamil multimedia news platform on social media, providing breaking alerts and developing stories from India and around the world. Whether you are interested in current affairs, entertainment, or technology, The Seithikathir® has got you covered. With a team of dedicated journalists and content creators, we aim to keep our audience informed and entertained. Join us in supporting quality journalism and trust in The Seithikathir® for your daily dose of news and infotainment. Thank you for choosing us as your source of information!

The Seithikathir®

20 Feb, 13:38


இயக்குநர் சங்கரின் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கம்.

இயக்குநர் சங்கருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்பிலான 3 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

எந்திரன் படக்கதை விவகாரத்தை தொடர்ந்து நடவடிக்கை.

எந்திரன் படத்தின் கதை விவகாரத்தில் ரூ.11.5 கோடி பெற்றுள்ளார் சங்கர் - அமலாக்கத்துறை.

The Seithikathir®

20 Feb, 10:37


அண்ணா சாலைக்கு வர தயார்; இடத்தை குறிப்பிடுங்கள்; தனியாக வருகிறேன்; நீங்கள் தடுத்து நிறுத்திப் பாருங்கள் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

அறிவாலயத்திற்கு வருவதாக சொன்ன அண்ணாமலை தைரியம் இருந்தால் அண்ணா சாலை வரட்டும் என கூறியிருந்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

The Seithikathir®

20 Feb, 10:36


அண்ணா அறிவாலயத்திற்கு வருவதாக
சொன்னார்.

தைரியம் இருந்தால் அண்ணாசாலைக்கு முதலில் வர சொல்லுங்கள் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

The Seithikathir®

20 Feb, 10:34


திருப்பரங்குன்றம் தர்கா - பேரணிக்கு அனுமதி மறுப்பு.

திருப்பரங்குன்றம் தர்கா தொடர்பாக பேரணி நடத்த கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த போராட்டத்திற்கும் அனுமதி வழங்க முடியாது.

பொதுமக்கள் நலன் கருதியும் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டும் காவல்துறை அனுமதி மறுத்தது சரியே - உயர்நீதிமன்றம் மதுரை கிளை.

The Seithikathir®

20 Feb, 10:30


சாதிவாரி கணக்கெடுப்பு - சமூக நீதி கூட்டமைப்பு கட்சிகள் போராட்டம்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசை வலியுறுத்தி பாமக மற்றும் சமூக நீதி கூட்டமைப்பு கட்சிகள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடர் முழக்க போராட்டம்.

பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, அமமுக துணை பொதுச் செயலாளர் செந்தமிழன் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்பு.

The Seithikathir®

20 Feb, 10:26


அஞ்சலையம்மாள் சிலைக்கு விஜய் மரியாதை.

சென்னை பனையூர் அலுவலகத்தில் உள்ள தியாகி அஞ்சலையம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை.

படப்பிடிப்புத் தளத்திலிருந்து மதிய உணவு இடைவெளியின்போது தவெக அலுவலகம் வந்த விஜய், அஞ்சலையம்மாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, பின் மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு புறப்பட்டார்.

The Seithikathir®

20 Feb, 08:57


டெல்லி - 6 அமைச்சர்கள் பதவியேற்பு.

டெல்லியில் முதல்வர் ரேகா குப்தாவை தொடர்ந்து 6 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

அமைச்சராக பதவியேற்ற பர்வேஷ் வர்மா துணை முதல்வராக நியமிக்கப்படவுள்ளார்.

மன்ஜிந்தர் சிங், ஆஷிஷ் சூட், பங்கஜ் சிங், கபில் மிஸ்ரா, ரவீந்தர் சிங் ஆகியோர்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

The Seithikathir®

20 Feb, 08:53


தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் விளக்க மனு தாக்கல்.

சூர்யமூர்த்தி அதிமுகவைச் சேர்ந்தவர் அல்ல.

அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டவர்.

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக மனு அளிக்கவோ, வழக்கு தொடரவோ அவருக்கு உரிமை கிடையாது.

சூர்யமூர்த்தி என்பவர் அளித்த மனுவிற்கு தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்க மனு தாக்கல்.

The Seithikathir®

20 Feb, 07:45


💥 டெல்லியில் ஒன்பதாவது முதலமைச்சராக, பாஜகவின் ரேகா குப்தா இன்று பதவியேற்றார்

> செய்திக்கதிர்: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

டெல்லி சட்டமன்ற பாஜக தலைவராக ரேகா குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், டெல்லியின் முதலமைச்சராகவும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்ஸேனாவை நேரில் சந்தித்த ரேகா குப்தா, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

டெல்லியில் ஒன்பதாவது முதலமைச்சராக, பாஜகவின் ரேகா குப்தா இன்று பதவியேற்றார்.

இவர் அம்மாநிலத்தின் 4வது பெண் முதலமைச்சர் ஆவார்.

மேலும், 6 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பு ஏற்றனர்.

The Seithikathir®

20 Feb, 07:00


ஃபார்முலா 4 கார் பந்தயம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஃபார்முலா 4 கார் பந்தயம் செலவினத்தை தனியார் நிறுவனம் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.

தமிழக அரசுக்கு ரூ.42 கோடி வழங்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் உத்தரவு.

The Seithikathir®

20 Feb, 04:37


புதிய உச்சத்தை அடைந்த ஆபரணத் தங்கத்தின் விலை.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 உயர்ந்து ₹64,560க்கும் ஒரு கிராம் ₹8,070க்கும் விற்பனை.

The Seithikathir®

20 Feb, 04:08


💥 சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு - நாளை வரை அவகாசம்.

> செய்திக்கதிர்: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் (பிப்.21) முடிவடைகிறது.

மே 25ம் தேதி நடைபெறவுள்ள முதல்நிலை தேர்வுக்கு https://upsc.gov.in எனும் வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

பிப்.22 முதல் 28ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம்.

The Seithikathir®

20 Feb, 04:01


கொசுவை பிடித்துத் தந்தால் சன்மானம் - பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸில் கொசுவை உயிருடனோ அல்லது கொன்றோ தந்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கொசுவை உயிருடனோ, கொன்றோ கொண்டுவந்து தந்தால் 5 கொசுவுக்கு ரூ.1.50 வழங்கப்படும்.

பிலிப்பைன்ஸ் தலைநகரில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளூர் நிர்வாகம் நூதன முயற்சி மேற்கொண்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் இந்த ஆண்டில் மட்டும் 28,234 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

The Seithikathir®

20 Feb, 03:20


💥 பஞ்சாப் விவசாய போராளி சுக்விந்தர் சிங் கில் மீது வழக்குப் பதிவு!!

> செய்திக்கதிர்: https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

புகார் கொடுத்தவர்: 10 வரை படித்திருக்கும் ஜஸ்விந்தர்.

காரணம்: ரூ 45 லட்சம் வாங்கிக் கொண்டு, அமெரிக்காவில் குடியேற்றுவதாகச் சொன்ன சுக்விந்தர் சிங் கில், சட்டப்படி அழைத்துச் செல்லாமல், சட்டவிரோதமாக அழைத்துச் சென்றார். அங்கே அமெரிக்க அரசிடம் பிடிபட்ட ஜஸ்விந்தர் மீண்டும் பாரதம் திருப்பி அனுப்பப் பட்டார். தான் செலவழித்த 45 லட்சத்தை வாங்கித் தருமாறு வழக்கு பதிந்திருக்கிறார்.

விவசாய போராளி சுக்விந்தர் சிங் கில் ஒரு immigration சேவையும் செய்து வருகிறாராம்.

The Seithikathir®

20 Feb, 01:31


இன்றைய புத்தக மொழி
20/02/25
📚📚📚🌹📚📚📚

எதிரிகள் இல்லாத
வாழ்க்கையை வாழ்ந்தவன்
முழுமையாக வாழவில்லை
என்றே அர்த்தம்.

- சே குவேரா -

📚📚📚🌹📚📚📚

The Seithikathir®

20 Feb, 01:25


குறள் எண் : ௧௫௭(157)
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : பொறையுடைமை

குறள் :
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.


உரை :
கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது.

English :
Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue.

தி ஆ ௨௦௫௬ கும்பம் (மாசி -௮)
தமிழ் வாழ்க

The Seithikathir®

19 Feb, 18:12


🏏 சாம்பியன்ஸ் டிராபி - நியூசிலாந்து வெற்றி

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து

முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்களை எடுத்தது

பாகிஸ்தான் அணி 47.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்கள் எடுத்து தோல்வி

The Seithikathir®

19 Feb, 16:50


⚠️பயிற்சியின்போது பெண் பவர்லிஃப்டர் உயிரிழப்பு.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ராஜஸ்தான்: பவர்லிஃப்ட் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா(17), 270கி எடையைத் தூக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் கழுத்து உடைந்து உயிரிழந்த துயரம்.

பயிற்சியாளர் எடையை அவர் மீது விட்டபோது, அந்த எடையைத் தாங்க முடியாமல் அவர் நிலை தடுமாறியதில் மொத்த எடையும் அவர் மீது விழுந்தது.

The Seithikathir®

11 Feb, 10:48


💥 “ஏஐ தொழில்நுட்பத்தால் வேலையிழப்பு ஏற்படாது”

பாதுகாப்பான முறையில் ஏஐ தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கொண்டுசெல்ல வேண்டும்; உலகின் தென்பகுதி மக்களுக்கும் ஏஐ தொழில்நுட்ப பலன்கள் சென்று சேர வேண்டும்

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலையிழப்பு ஏற்படாது; அதன் இயல்பு மட்டுமே மாறும் - பிரதமர் மோடி

The Seithikathir®

11 Feb, 10:19


ரூ.7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு அனுமதி.

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ரூ.7,375 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு அனுமதி.

தமிழ்நாடு அமைச்சரவையின் ஒப்புதல் மூலம் சுமார் 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

உலகளாவிய திறன் மையங்கள், லெதர் அல்லாத காலணி, உணவுபடுத்தல் உள்ளிட்ட துறைகளில் தொழில்களுக்கு அனுமதி.

The Seithikathir®

11 Feb, 07:22


விஜயின் தவெக கட்சி நிர்வாகிகளுடன் அரசியல் வியூக வகுப்பாளர்
பிரசாந்த் கிஷோர் 2ஆம் நாளாக ஆலோசனை

The Seithikathir®

11 Feb, 07:06


சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3ஆம் இடம்- பிரதமர் மோடி.

3ஆவது பெரிய சூரிய மின் உற்பத்தி நாடாக இந்தியா உள்ளது; சூரிய சக்தி உற்பத்தித் திறன் 32 மடங்கு அதிகரிப்பு.

இந்தியாவின் புதைபடிவமற்ற எரிபொருள் ஆற்றல் திறன் 3 மடங்காக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் புவியியல் எரிசக்தி வர்த்தகத்தை எளிதாகவும், கவர்ச்சிகரமாகவும் மாற்றுகிறது.

எரிசக்தி துறையில் புதிய சாத்தியக்கூறுகளை உருவாக்கும் நிலைக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது.

இந்தியாவிடம் 500 மில்லியன் மெட்ரிக் டன் நிலையான மூலப்பொருள் உள்ளது.

மேக் இன் இந்தியா மூலம் உள்ளூர் விநியோகம், உற்பத்தியை வலுப்படுத்த இந்தியா கவனம்- பிரதமர் மோடி காணொளியில் உரை.

செங்கோட்டையன் மோதல் பின்னணி: https://youtu.be/dzWR3zoVqPA

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

The Seithikathir®

11 Feb, 06:25


The Seithikathir® pinned «🔴 இபிஎஸ் - செங்கோட்டையன் மோதலின் ரகசிய பின்னணி என்ன? WATCH: https://youtu.be/dzWR3zoVqPA யார் அந்த நபர்? பின்னணியில் டெல்லி? - பரபரப்பு தகவல்... ***»

The Seithikathir®

11 Feb, 06:25


🔴 இபிஎஸ் - செங்கோட்டையன் மோதலின் ரகசிய பின்னணி என்ன?

WATCH: https://youtu.be/dzWR3zoVqPA

யார் அந்த நபர்? பின்னணியில் டெல்லி? - பரபரப்பு தகவல்...

***

The Seithikathir®

11 Feb, 04:24


தொடர்ந்து உச்சம் தொடும் தங்கம் விலை.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.64,480க்கும், ஒருகிராம் ரூ.8,060க்கும் விற்பனை.

முதல்முறையாக தங்கம் விலை கிராமுக்கு ரூ.8 ஆயிரத்தை கடந்தது.

The Seithikathir®

11 Feb, 03:26


இன்றைய புத்தக மொழி
11/02/25
📚📚📚🌹📚📚📚

தெளிந்த உள்ளம்,
கடும் உழைப்பு,
பிறருக்காக பாடுபடும் பண்பு.
இவைதான் மகிழ்ச்சிக்கான
நிலைக்களன்கள்.

- ஹெலன் கெல்லர் -

📚📚📚🌹📚📚📚

The Seithikathir®

11 Feb, 02:34


பழனியில் தைப்பூசத் திருவிழா.

திண்டுக்கல்: தைப்பூசத்தையொட்டி பழனி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

பழனியில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.

வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமரவேல் வெள்ளி தேரில் எழுந்தருளி அருள் பாலித்தார்.

The Seithikathir®

11 Feb, 02:09


வடலூர் சத்தியஞான சபையில் 154 வது தைப்பூச ஜோதி தரிசன விழா.

கடலூர்: வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

6 மணிக்கு முதல் ஜோதி தரிசனத்தை கண்டு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்ற கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்.

இன்று காலை 10 மணி, மதியம் 1 மணி, மாலை 7 மணி, இரவு 10 மணி நாளை காலை 5:30 மணி என 6 காலங்களில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து இரவு முதல் குவிந்து தரிசனத்தை கண்டு களித்தனர்.

The Seithikathir®

11 Feb, 01:02


குறள் எண் : ௧௪௮(148)
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : பிறனில் விழையாமை

குறள் :
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.


உரை :
அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்.

English :
That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.

தி ஆ ௨௦௫௬ சுறவம் (தை -௨௯)
தமிழ் வாழ்க

The Seithikathir®

10 Feb, 16:41


🔴 BREAKING | THE SEITHIKATHIR

🎯 தலைநகர் முதல்வர் யார்? - செய்திக்கதிர் பிரத்யேக தகவல்

டெல்லி முதல்வராகிறார் பிரவேஷ் வர்மா!

புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பாஜகவின் பிரவேஷ் வர்மா, முதலமைச்சராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு.

செய்திக்கதிருக்கு கிடைத்த தகவலின்படி, பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல்.

பிரவேஷ் வர்மாவின் பெயர் குறித்து ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகவும், டெல்லி வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

The Seithikathir®

10 Feb, 16:37


JUSTIN

✈️ 3 நாள் சுற்றுப் பயணமாக பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி

AI உச்சிமாநாட்டை தலைமை தாங்குவதற்காக பிரான்ஸ் சென்றுள்ளார்.

The Seithikathir®

10 Feb, 16:22


💥 Exclusive Breaking News In 10:10PM

The Seithikathir®

10 Feb, 16:17


💥 51 பேர் பலி!

குவாத்தமாலா என்ற நாட்டில் பாலத்தின் மீது சென்ற பேருந்து தடுப்பு கம்பியை உடைத்துக்கொண்டு பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் 51 பேர் உயிரிழப்பு!

காயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி.

The Seithikathir®

10 Feb, 16:08


🚨 தகவல் பலகை..!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

📌 தைப்பூசத்தை ஒட்டி, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் நாளை (பிப்.11) ஆவணப் பதிவுகள் நடைபெறும் என பத்திர பதிவுத்துறை அறிவிப்பு!

📌 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா சந்திப்பு

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என உமர் அப்துல்லா வலியுறுத்தல்

📌 கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் நகரை நோக்கி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், அந்நகரை சுற்றியுள்ள பகுதிகளில் 300 கி.மீ தூரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல்.

பிரயாக்ராஜை அடைய ஒரு நாள் ஆவதாக பக்தர்கள் வேதனை

📌 தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டிக்கு, முன்னேறியது நியூசிலாந்து அணி.

பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும்.

📌 ரோஹித் ஒரு அற்புதமான, கிளாஸான வீரர். சாதனைகளை உடைத்தெறியும் அவரை வாழ்த்துகிறேன். சரியான தருணத்தில் அவர் Form-க்கு திரும்பியுள்ளார். நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல அவர் தலைமையிலான இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்”

-அசாரூதீன், இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன்

📌 69% இட ஒதுக்கீடு ரத்தானால் தமிழ்நாடு கலவர பூமியாகும்: அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேச்சு. Watch: https://youtu.be/OVB3wTFmlZU

The Seithikathir®

10 Feb, 15:50


💥 86,000 பேருக்கு பட்டா: முதல்வர் ஸ்டாலின்

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேருக்கு பட்டா.

மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள் -மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளோம்: முதல்வர் ஸ்டாலின்

The Seithikathir®

10 Feb, 15:09


The Seithikathir® pinned «🔴 தமிழ்நாடு கலவர பூமியா மாறும்: அன்புமணி ராமதாஸ் பகிரங்க எச்சரிக்கை! WATCH: https://youtu.be/OVB3wTFmlZU சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாவிட்டால்... அன்புமணி பரபரப்பு பேச்சு! ***»

The Seithikathir®

09 Feb, 01:27


கரிபியன் கடலில் 8.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

கேமன் தீவுகளுக்கு தென்மேற்கே 209 கி.மீ தொலைவில் கரிபியன் கடலில் 8.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

கேமன் தீவுகள், ஜமைக்கா, கொலம்பியா, போர்ட்டோ ரிக்கோ உள்ளிட்ட கரிபியன் கடலை ஒட்டிய தீவுகள் மற்றும் நாடுகளுக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது சர்வதேச சுனாமி தகவல் மையம்.

The Seithikathir®

08 Feb, 15:20


💥 திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இதில் கார்த்திகை தீப விழாவின்போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமி அன்றும் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

அதன்படி வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7.59 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் 12-ந்தேதி (புதன்கிழமை) இரவு 8.16 மணிக்கு நிறைவடைகிறது. 11-ந்தேதி இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரமாக கோவில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வருகிற 11-ந்தேதி தைப்பூசம் வருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், பவுர்ணமி கிரிவலம் செல்லவும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

The Seithikathir®

08 Feb, 15:15


💥 சென்னை ஆவடியில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் நடைபெறும் கண்டன பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாட்டின் உரிமையை காக்க ஒன்று கூடியுள்ளோம்

தமிழ்நாடு முழுக்க திமுக கொடி கம்பீரமாக பறக்கிறது

உங்களின் ஆதரவால், உழைப்பால் உருவானதுதான் திராவிட மாடல் ஆட்சி

The Seithikathir®

08 Feb, 14:54


💥 சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் WhatsApp Chatbot அறிமுகம்!

9445033364 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘Hi’ என மெசேஜ் அனுப்பி பேருந்து சேவைகள் பற்றிய தகவல்களை பெறவும், புகார் அளிக்கவும் பயன்படுத்தலாம்

MTC Chennai WhatsApp Chatbot is Here!

Need bus info, lost something, or have a grievance?

Just send ‘hi’ to 94450 33364 on WhatsApp and get instant assistance anytime, anywhere!

Quick, easy, and available 24/7!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29*💥 சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் WhatsApp Chatbot அறிமுகம்!*

9445033364 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘Hi’ என மெசேஜ் அனுப்பி பேருந்து சேவைகள் பற்றிய தகவல்களை பெறவும், புகார் அளிக்கவும் பயன்படுத்தலாம்

MTC Chennai WhatsApp Chatbot is Here!

Need bus info, lost something, or have a grievance?

Just send ‘hi’ to 94450 33364 on WhatsApp and get instant assistance anytime, anywhere!

Quick, easy, and available 24/7!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

The Seithikathir®

08 Feb, 14:54


💥 "வளர்ச்சி வெல்லும் நல்லாட்சி வெல்லும்"

டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு
டெல்லி சகோதரிகளுக்கு நான் தலைவணங்குகிறேன்

இந்த ஆசீர்வாதங்களை பெறுவதில் நாங்கள் தாழ்மையும், பெருமையும் அடைகிறோம்

டெல்லி வளர்ச்சியில் எந்த முயற்சியையும் விட்டுவிட மாட்டோம்

-பிரதமர் மோடி.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

The Seithikathir®

08 Feb, 14:26


💥 டெல்லி General administrative department ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்...

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்த பின் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை... அதாவது அவசர அறிக்கை..

டெல்லி மாநில தலைமை செயலகத்தில் இருந்து எந்த ஒரு கோப்பும் மற்றும் கம்ப்யூட்டர் பாகங்கள் - ஹார்ட் டிஸ்க் பென்டிரைவ் போன்றவற்றை எவரும் வெளியே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை..

காரணம் தோல்வி அடைந்தவர்கள், அரசாங்கத்தின் கோப்புகளை அழிக்க கூடும் என்பதற்காக...

ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை மறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை தடுக்க நடந்த நடவடிக்கை என டெல்லி அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது...

> சட்டவிரோத US குடியேற்றம் - அதிர்ச்சி தகவல்: https://youtu.be/O0r8qyRyib8

The Seithikathir®

08 Feb, 13:57


🔴 ஜோ பைடனுக்கு அதிர்ச்சி தந்த டிரம்ப்!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

டிரம்ப்: ‘JOE, YOU’RE FIRED. MAKE AMERICA GREAT AGAIN!'

“அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பாதுகாக்கப்பட்ட தகவல்கள் (classified information) எதையும் பகிரத் தேவையில்லை. பைடனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அனுமதிகளும் (Security Clearances), தினமும் வழங்கப்படும் புலனாய்வு விவரங்களும் (daily Intelligence Briefings) உடனடியாக நிறுத்தப்படுகின்றன!

2021இல் இதை எனக்கு ஜோ பைடன் செய்திருந்ததை முன்மாதிரியாக வைத்து நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். பைடனுக்கு நினைவு சரியில்லாத காரணத்தால் அவரிடம் முக்கியமான தகவல்களை (sensitive information) பகிர்வது நாட்டின் நலனுக்கு ஏற்புடையதல்ல. நாட்டின் நலன் கருதி இந்த முடிவை எசுத்திருக்கிறேன். ஜோ, யூ ஆர் ஃபயர்ட்”

பைடனுக்கு தரும் தகவல்கள் எல்லாம் ஹுசைன் ஒபாமா, ஹிலாரி கூட்டத்துக்குத் தான் போயிருக்கும் எனத் தகவல்!

> சட்டவிரோத US குடியேற்றம் - அதிர்ச்சி தகவல்: https://youtu.be/O0r8qyRyib8

There is no need for Joe Biden to continue receiving access to classified information. Therefore, we are immediately revoking Joe Biden’s Security Clearances, and stopping his daily Intelligence Briefings. He set this precedent in 2021, when he instructed the Intelligence Community (IC) to stop the 45th President of the United States (ME!) from accessing details on National Security, a courtesy provided to former Presidents. The Hur Report revealed that Biden suffers from “poor memory” and, even in his “prime,” could not be trusted with sensitive information. I will always protect our National Security — JOE, YOU’RE FIRED. MAKE AMERICA GREAT AGAIN

The Seithikathir®

08 Feb, 13:57


🔴 பணத்திற்கு ஆட்பட்டுவிட்டார் கெஜ்ரிவால் - அண்ணா ஹசாரே பரபரப்பு கருத்து!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ஒரு வேட்பாளரின் நடத்தை, எண்ணங்கள் சுத்தமானதாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறி வந்திருக்கிறேன். வாழ்க்கை- யாரும் குறை சொல்ல முடியாதபடி இருக்க வேண்டும். தியாகம் இருக்க வேண்டும். இந்தத் தகுதிகள்தான், ஒரு வாக்காளர் நம் மீது நம்பிக்கை வைப்பதற்கு அடிப்படையானவை.

- இதை நான் கேஜ்ரிவாலிடம் கூறி இருக்கிறேன். ஆனால் அவர் அதைக் கேட்கவில்லை. கடைசியில், மதுவில் தான் அவர் கவனம் செலுத்தினார். ஏன் இந்த பிரச்னை எழுகிறது. அவர் பணத்தின் செல்வாக்குக்கு ஆட்பட்டு விட்டார்

• கெஜ்ரிவால் கட்சி தொடங்க காரணமான பிரபல சமூக ஆர்வலர் 'அண்ணா' ஹசாரே கருத்து.

> சட்டவிரோத குடியேற்றம் - அதிர்ச்சி தகவல்: https://youtu.be/O0r8qyRyib8

The Seithikathir®

08 Feb, 11:34


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அபார வெற்றி.

திமுக தவிர தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி உட்பட 45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

The Seithikathir®

08 Feb, 11:30


“0” வில் ஹாட்ரிக் அடித்த காங்கிரஸ்.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து 3ஆவது முறையாக ஒரு தொகுதிகளில்கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை.

2015, 2020 தற்போது 2025 சட்டமன்றத் தேர்தலிலும் ஒரு தொகுதிகளில்கூட வெற்றி பெறவில்லை.

The Seithikathir®

08 Feb, 10:53


The Seithikathir® pinned «🔴 அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியது எப்படி? - அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்! WATCH: https://youtu.be/O0r8qyRyib8 அதிரடி காட்டும் டிரம்ப்... அதிர்ந்து போன நாடுகள்... சிக்கப் போகும் குடியேறிகள்... ***»

The Seithikathir®

08 Feb, 10:53


🔴 அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியது எப்படி? - அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்!

WATCH: https://youtu.be/O0r8qyRyib8

அதிரடி காட்டும் டிரம்ப்... அதிர்ந்து போன நாடுகள்... சிக்கப் போகும் குடியேறிகள்...

***

The Seithikathir®

08 Feb, 10:52


டெபாசிட்டை உறுதி செய்யுமா நாதக?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை உறுதி செய்ய 6,699 வாக்குகள் தேவை.

13 சுற்றுகளில் 19,078 வாக்குகள் பெற்றிருக்கிறார் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி.

டெபாசிட்டை உறுதி செய்ய நாதகவுக்கு மொத்தம் 25,777 வாக்குகள் தேவை.

The Seithikathir®

08 Feb, 09:53


டெல்லி சட்டமன்றத்தேர்தல் முடிவுகள்:

தொகுதிகள்: 70

பெரும்பான்மை: 36

பாஜக + 47

ஆம் ஆத்மி 23

காங்., 00

மற்றவை 00

The Seithikathir®

08 Feb, 08:17


டெல்லி சட்டப்பேரவை தேர்தலில், கல்காஜியில் போட்டியிட்ட முதலமைச்சர் அதிஷி வெற்றி.

பாஜக வேட்பாளர் ரமேஸ் பிதுரியை 989 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார் அதிஷி.

புது டெல்லியில் கெஜ்ரிவால், ஜங்புராவில் மணீஸ் சிசோடியா, ஷகுர் பஸ்தியில் சத்யேந்திர் ஆகிய ஆம் ஆத்மியின் பிற முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.

The Seithikathir®

08 Feb, 08:13


பாலியல் துன்புறுத்தல்: 4 மாத கர்ப்பிணியின் சிசு உயிரிழப்பு.

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்ற சோகம்.

இறந்த சிசுவை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் அறிவுரை என தகவல்.

The Seithikathir®

08 Feb, 08:04


அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி.

நியூ டெல்லி தொகுதியில் 3,182 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

The Seithikathir®

08 Feb, 07:34


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்:

திமுக+ 51,650

நாதக 10,897

The Seithikathir®

08 Feb, 07:30


டெல்லி சட்டமன்றத்தேர்தல் முடிவுகள்:

தொகுதிகள்: 70

பெரும்பான்மை: 36

பாஜக + 48

ஆம் ஆத்மி 22

காங்., 00

மற்றவை 00

The Seithikathir®

08 Feb, 06:14


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்:

திமுக+ 37,001

நாதக 7,668

The Seithikathir®

07 Feb, 08:32


நீதிபதிகள்: ஒரு மசோதா சரியல்ல என்று கூறி, முதல் நாளே குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுக்க முடியுமா?

மேலும், குடியரசுத் தலைவர் எந்த காரணத்தையும் அவ்வாறு கூறாமல், நான் நிறுத்துகிறேன் என்று கூறுகிறார் என்றால் என்ன ?

ஆளுநர் தரப்பு: ஒரு மசோதாவை ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைப்பது, அது சரியானது அல்ல (Repugnance) என்பதையே குறிக்கிறது

நீதிபதிகள்: அப்படியெனில் மசோதாவை நிராகரியுங்கள்

ஆளுநர் தரப்பு: மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது என்பதே நிராகரிப்புதான்

அட்டர்னி ஜெனரல் விளக்கத்தை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

நீதிபதிகள்: Repugnance என்பதற்கு உரிய விளக்கத்தை வரும் 10ம் தேதி இங்கு அளிக்கவேண்டும். அதற்கு மேல் அவகாசம் தர முடியாது

ஆளுநர் தொடர்பான வழக்கு வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு

The Seithikathir®

07 Feb, 07:24


"மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தேவை"

மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய கனிமொழி.

90 மீனவர்களும், 210 மீன்பிடிப் படகுகளும் இலங்கையின் பிடியில் உள்ளன.

மீனவர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகின்றனர் - மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு.

The Seithikathir®

07 Feb, 07:19


நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்.

தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு.

The Seithikathir®

07 Feb, 07:07


ஆளுநர் தரப்பு: மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது எதற்காக என்ற காரணத்தை ஒரு கட்டுரையாக ஆளுநர் எழுத தேவையில்லை

ஏனெனில், மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறார் என்றாலே, அது ஆளுநரின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இல்லை என்றுதான் பொருள்.

சிறிய குறிப்பாக குடியரசுத் தலைவர் முடிவுக்கு மசோதானை அனுப்புகிறேன் என அரசிடம் கூறியுள்ளார். அவ்வளவுதான்

The Seithikathir®

07 Feb, 07:04


ஆளுநர் தரப்பு: ஆளுநரின் பணிகள் என்பது அரசியலமைப்பின் அடிப்படையான கூட்டாட்சி தத்துவத்தின் ஒரு அங்கம் ஆகும். மேலும் ஆளுநருக்கு அனுப்பிய அனைத்து மசோதாக்களும் புதிய சட்டங்கள் அல்ல, மாறாக அவை சட்ட திருத்தங்கள்.

அதனை குடியரசு தலைவருக்கு முடிவுக்காக ஆளுநர் நிறுத்தி வைக்கிறார்

நீதிபதிகள்: பல்கலை.களின் தரம், துணைவேந்தர்கள் தேர்வு குறித்து கவலை கொண்டு அந்த மசோதாக்களை நிறுத்தி வைத்தால், அடுத்து என்ன?

The Seithikathir®

07 Feb, 06:56


💥 ஆளுநர் தரப்பு: ஆளுநர் சில முரணான காரணங்களுக்காக ஒப்புதல் வழங்காமல் இருப்பார் என்றால், அரசு மற்றும் ஆளுநர் என இரு தரப்பும் இணைந்து முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்.

குறிப்பாக, இதன் மீது முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு அனுப்புங்கள் என்று மாநில அரசே ஆளுநரை கேட்க வைக்கலாம். எனவே இதில் எதுவும் மாநில உரிமையை பறிப்பதாக கருத முடியாது

ஆளுநர் அரசியலமைப்பு பிரிவு 200ல் விதி 1ன் கீழ் முடிவெடுத்தே ஆகவேண்டும் என்று கூறுவது, பிரிவு 200ஐ முரணாக திரித்து கூறுவதாக ஆகும்

நீதிபதிகள்: கடந்த 2023ம் ஆண்டு மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட பின்னர், தற்போது வரை என்ன நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார்?

2 ஆண்டுகளாக மசோதாக்கள் அவரிடம் உள்ளதா? மாநில அரசுக்கும் அவருக்கும் இடையே தகவல் பரிமாற்றம் இருந்ததா?

அட்டர்னி ஜெனரல்: இல்லை, மசோதாக்கள் அனுப்பப்பட்ட 2 மாதங்களில் தனது முடிவை தெரிவித்து விட்டார். அதில் 7 மசோதாக்கள் மீதான ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்


> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

நீதிபதிகள்: குடியரசுத் தலைவரும் ஒப்புதலை நிறுத்தி வைக்கிறாரா?

நீதிபதிகள்: குடியரசு தலைவர் மசோதா மீது முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்தால் அடுத்து என்ன? முடிவெடுக்காத நிலையில் அது அப்படியே கிடப்பில் உள்ளதா?

ஆளுநர் தரப்பு: ஒப்புதல் இல்லாமல் குடியரசுத் தலைவரிடம் உள்ளதென்றால், அவர் அதற்கு மேல் எவரிடமும் கேட்க வேண்டியது இல்லை

நீதிபதிகள்: அப்படியெனில் அந்த மசோதா கிடப்பிலேயே இருக்குமா?

The Seithikathir®

07 Feb, 06:54


💥 சென்னையில் காற்று மாசுபாட்டை, கணிசமாக குறைக்க மின்சார பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டம்

இந்த ஆண்டு இறுதிக்குள் 625 புதிய மின்சார பேருந்துகளை வாங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு

டபுள் டக்கர் பேருந்துகளை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாகவும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தகவல்

The Seithikathir®

07 Feb, 06:54


💥 உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை தொடங்கியது

நீதிபதிகள்: ஆளுநர் எதுவும் விளக்கமளிக்காமல் மசோதாவை திரும்ப அனுப்பினால், அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது எப்படி தெரியும்?

சம்மந்தப்பட்ட மசோதாவில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்றால் அரசுக்கு எப்படி தெரியும்?

சம்மந்தப்பட்ட மசோதா மீது தான் ஒப்புதல் கொடுக்க முடியாது என்பதை எப்படி ஆளுநர் உணர்ந்தார்?

இந்த கேள்விகளுக்கு விளக்கம் அளியுங்கள் என ஆளுநர் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்

ஆளுநர் தரப்பு: துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த நடைமுறை மத்திய சட்ட விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. அவற்றுக்கு ஆளுநர் எவ்வாறு ஒப்புதல் அளிப்பார்?

நீதிபதிகள்: பல்கலை. மசோதா மத்திய சட்டத்துக்கு எதிராக இருந்தால் அடுத்த நடவடிக்கை என்ன? மாநில அரசு எப்படி செயல்படும் என்று நினைக்கிறீர்கள்? ஆளுநர் அரசுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். மசோதா விவகாரத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ஆளுநர் தரப்பு: பல்கலை. செயல்பாடு குறித்து ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சில துணைவேந்தர்களை அரசு அணுகியது.

UGC விதிகளின் கீழ் கட்டுப்பட்டு உள்ள துணைவேந்தர்கள் பொறுப்பை ஆக்கிரமிக்க மாநில அரசு முயற்சித்தது.

அரசியல் காரணங்களுக்காகவே துணைவேந்தர் மசோதாவை மாநில அரசால் கொண்டு வந்தது

The Seithikathir®

07 Feb, 05:44


சென்னையில் காற்று மாசுபாட்டை, கணிசமாக குறைக்க
மின்சார பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டம்

இந்த ஆண்டு இறுதிக்குள் 625 புதிய மின்சார பேருந்துகளை வாங்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு

டபுள் டக்கர் பேருந்துகளை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாகவும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தகவல்

The Seithikathir®

07 Feb, 05:43


நெல்லையப்பர் கோயிலில் வரும் நவம்பர் மாதத்திற்குள்
வெள்ளி தேர் ஓடும் - நெல்லை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நாங்குநேரி வட்டம் மறுங்கால்குறிச்சி
மற்றும் திருமலைநம்பிபுரம் கிராமங்களில் 2,291 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய சிப்காட்
வளாகம் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டிற்கு நிதியும் இல்லை நீதியும் இல்லை.

வெள்ள பாதிப்புக்கு, ரூ.37,907 கோடி நிதி கேட்டோம்; ஆனால் ரூ.276 கோடிகள் தான் கொடுத்தனர்.

பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை; மத்திய அரசு மீண்டும் மீண்டும் வஞ்சிக்கிறது.

திருநெல்வேலி அல்வா உலகமே பேமஸ்; ஆனால் தற்போது மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரும் அல்வா தான் அதைவிட பேமசாக உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

The Seithikathir®

07 Feb, 05:38


ரூ.1,679 கோடி பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலியில் முடிவுற்ற ரூ.1,679 கோடி திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ரூ.1,061 கோடியில் தாமிரபரணி- கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு கால்வாய் திட்டம் தொடங்கிவைப்பு.

வேளாண் மற்றும் உழவர் நலத் துறை சார்பில் கட்டப்பட்ட ரூ.77.02 கோடி மெகா உணவு பூங்கா திறந்துவைப்பு.

The Seithikathir®

07 Feb, 05:00


💥 ரூ1.86 லட்சம் கோடி வருமான வரி செலுத்திய "ரிலையன்ஸ்"

நாட்டிலேயே அதிகபட்சமாக ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடியை வருமான வரியாக செலுத்தியது ரிலையன்ஸ் நிறுவனம்

ஒட்டுமொத்த பட்ஜெட்டில் நான்கு சதவீத தொகையை வருமான வரியாக செலுத்தியதாக தகவல்

The Seithikathir®

07 Feb, 04:58


ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம்.

ரெப்போ வட்டி விகித குறைவால் வீடு - வாகன கடன்களின் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு.

வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு குறைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

கடந்த 11 முறை வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாத நிலையில், தற்போது 6.5 % இருந்து 6.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

The Seithikathir®

07 Feb, 03:32


💥 பாமக நிர்வாகிகள் கைது - அன்புமணி கண்டனம்

அரியலூர்: ஜெ.குருவின் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்க வந்த அமைச்சர் சிவசங்கரை நோக்கி “வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு என்ன ஆச்சு?” என முழக்கமிட்டதற்காக பாமக நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது;

பாமகவினர் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதற்கு பதிலாக தெலங்கானாவில் நடத்தப்பட்டது போன்று தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, சமூகநீதியை நிலைநாட்டுவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கவனம் செலுத்தலாம்

- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

The Seithikathir®

07 Feb, 03:32


ஆனாலும் இந்த வழக்கை பொறுத்த வரை, குறிப்பிட்ட அந்த நிலம் முழுவதும் கோவிலுக்கு சொந்தமானது என்று பிரிவி கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பிரிவி கவுன்சில் என்பது என்ன?

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், மன்னருக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும், வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காகவும் லண்டனில் உருவாக்கப்பட்டது தான் பிரிவி கவுன்சில். இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த கவுன்சில் தான், இறுதி அதிகாரம் படைத்த வழக்கு விசாரணை அமைப்பாக இருந்தது.

அதனால் இந்திய நீதிமன்றங்களில் தீர்க்க முடியாத வழக்குகள் பிரிவி கவுன்சிலில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டன. அப்படித்தான் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கையும் பிரிவி கவுன்சில் விசாரித்து தீர்ப்பளித்துள்ளது.

The Seithikathir®

07 Feb, 03:32


💥 திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கு: லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்பு விபரம் இதோ!

நன்றி: தினமலர்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை தொடர்பான விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பான பிரச்சனையை நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னதாகவே, லண்டன் பிரிவி கவுன்சில் விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

முதலில் இந்த வழக்கு மதுரை கீழமை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில், விவசாயம் செய்யப்படும் ஒரு பகுதி நிலம், தர்கா அமைந்துள்ள பகுதி ஆகியவை தவிர மொத்த மலையும் கோவில் சொத்து என்று வலியுறுத்தப்பட்டது. முஸ்லிம்கள் தரப்பில் தர்கா அமைந்துள்ள பகுதியும், நெல்லித்தோப்பு என்று அழைக்கப்படும் மலையின் ஒரு பகுதியும் தங்களுக்குச் சொந்தம் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மதுரை கீழமை நீதிமன்றம் 1923ம் ஆண்டு ஆகஸ்டில் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை அரசு தரப்பும், கோவில் தரப்பும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் முஸ்லிம்கள் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். 1926ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முஸ்லிம்களின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது. ஆனால் மலை முழுவதும் அரசுக்கு சொந்தம் என்று தீர்ப்பு அளித்தது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இதை எதிர்த்து லண்டன் பிரிவி கவுன்சிலில் கோவில் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த பிரிவி கவுன்சில் 1931ல் விரிவான உத்தரவை பிறப்பித்தது. மதுரை கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவே சரியானது என்பது தான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு. திருப்பரங்குன்றம் கோவிலின் வரலாற்றை விரிவாக ஆராய்ந்த பிரிவி கவுன்சில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தைய பல்வேறு ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கியது.

கோவில் தேரோட்டம் நடக்கும் வீதி கிரி வீதி என்று அழைக்கப்படுவதை குறிப்பிட்டும், பல்வேறு ஆவணங்களில் இதை மலை பிரகாரம் என்று குறிப்பிட்டுள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். கிரிவீதியில் சிறிய கோவில்கள் பலவும் அமைந்துள்ளன. பழங்கால மண்டபங்கள் அல்லது பக்தர்களுக்கான ஓய்வு விடுதிகள் அமைந்துள்ளன. இந்த கோவில்கள் அனைத்தும் பழமை வாய்ந்தவை. 13ம் நூற்றாண்டு அல்லது அதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை.

இந்திய தொல்லியல் துறையின் தலைவர் கொடுத்துள்ள அறிக்கையில், மலை முழுவதையும் சிவலிங்கமாக பக்தர்கள் வழிபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இத்தகைய தனித்துவம் வாய்ந்த வழிபாடு மதுரையில் தொடங்கி இருக்க வேண்டும் என்றும் நம்புவதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். பழைய ஆவணங்கள் பலவற்றில் இந்த மலையை சுவாமிமலை என்று குறிப்பிட்டுள்ளனர் என்றும் பிரிவி கவுன்சில் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவில் நிர்வாகத்தினர் நூறாண்டுகளுக்கு மேலாக இந்த மலையை சொந்தம் கொண்டாடும் வகையில், பாதுகாத்து பராமரித்து வந்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. சுவாமி தேரோட்டம் நடக்கும் கிரி வீதியை அகலப்படுத்த ஒரு வீட்டுமனையை விலை கொடுத்து வாங்கியுள்ளனர் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. இதற்கான ஆதார ஆவணங்கள் 1835ம் ஆண்டு முதல் உள்ளன. 1861ம் ஆண்டு மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்டதற்கான புகார் ஒன்று மதுரை மாவட்ட கலெக்டர் இடம் அளிக்கப்பட்டது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

அப்போது, ' மலை முழுவதும் கோவிலுக்கு சொந்தமானது என்பதால் மரங்கள் தொடர்பான விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். கோவில் நிர்வாகத்தினர், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதையும், அதை அவ்வப்போது பராமரித்து சரி செய்வதையும் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். பல இடங்களில் சிறு பாலங்கள், மண்டபங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களையும் செய்துள்ளனர்.

இந்த ஆதாரங்கள் அனைத்தும், கோவில் நிர்வாகத்தின் உரிமை மற்றும் பொறுப்பில் மலை இருந்ததற்கான ஆதாரங்கள் என்று கருதியே கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று பிரிவி கவுன்சில் சுட்டிக்காட்டி உள்ளது. அதன் அடிப்படையில் தான், மதுரை கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்வதாக தெரிவித்துள்ள லண்டன் பிரிவி கவுன்சில், கீழமை நீதிமன்ற உத்தரவை மாற்றுவதற்கு எந்த அவசியமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

கோவில் அமைந்துள்ள மலை, எல்லா காலத்திலும் கோவில் நிர்வாகத்தினர் வசமே இருந்துள்ளது என்பதும் ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரிவி கவுன்சில் தெரிவித்துள்ளது. புறம்போக்கு நிலம் என்பது பிரிட்டிஷ் அரசுக்கு சொந்தமானது என்பது பொதுவான கருத்து.

The Seithikathir®

07 Feb, 03:31


💥 இந்தியாவில் இனி ஆண்டுக்கு ரூ. 3000-ஐ சுங்கக் கட்டணம் செலுத்தி, நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம் - மத்திய அரசு தகவல்

இனி ஆண்டுக்கு ரூ. 3000-ஐ சுங்கக் கட்டணமாக செலுத்திவிட்டு, நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமின்றி சென்று வரலாம் என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகையிலும் சுங்கச் சாவடிகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச் சாவடி கட்டணம் செலுத்துதல் அல்லது ஒரே ஒருமுறை மொத்தமாக கட்டணம் செலுத்துதல் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

வாழ்நாள் கட்டணமாக 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 கட்டினால், அதன் பின்னர் அந்த காலகட்டத்திற்கு சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த தேவையில்லை. இந்த திட்டம் அமலானால் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் நேரடியாக பயன்பெறுவர்.

அத்துடன் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதும் தடுக்கப்படும். ரூ.340 கட்டணம் செலுத்தினால் மாதம் முழுக்கவும், ரூ.4,080 கட்டணம் செலுத்தினால் ஆண்டு முழுக்கவும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் செல்லலாம் என்ற திட்டத்தில் பயனடைந்தவர்களுக்கு இந்த புதிய திட்டம் மூலம் மாதம் ரூ.1,080 மிச்சமாகும்.

இத்திட்டம் மூலம் பல லட்சகணக்கானோர் பயன் பெறவுள்ளார்கள். புதிய திட்டம் மூலம் கட்டணம் செலுத்தி பெறப்படும் அட்டைகள், Fastag அட்டையுடன் இணைக்கப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

The Seithikathir®

07 Feb, 03:21


🚨 Come summer, Chennai Beach-Tambaram train ride to get cooler

The 12-rake AC train (ICF-made) seats 1,320 and carries 5,700 per trip. Trials start mid-February, with a March launch.

Tentative fare for Chennai Beach-Tambaram (28.6km) - Rs 95.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

The Seithikathir®

07 Feb, 01:48


“தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்”

11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இன்று (பிப்.07) தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அனைத்து தேர்வு மையங்களிலும் தடையற்ற மின்சாரம் கிடைக்க மும்முனை மின் இணைப்புகள் வழங்க வேண்டும்-அதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்.

பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யக்கூடாது.

மாணவர்கள் படிப்பதற்காக இரவு நேரங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு.

The Seithikathir®

02 Feb, 02:07


*குறள் எண் : ௧௩௯(139)
*பால் : அறத்துப்பால்
*அதிகாரம் : ஒழுக்கமுடைமை

*குறள் :
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.


*உரை :
மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.

*English :
Those who study propriety of conduct will not speak evil, even forgetfully.

தி ஆ ௨௦௫௬ சுறவம் (தை- ௨௦)
தமிழ் வாழ்க

The Seithikathir®

02 Feb, 01:23


அமெரிக்க அதிபர்‌ டிரம்ப்‌ விதித்த
புதிய இறக்குமதி வரி

கனடா, மெக்சிகோவில்‌ இருந்து இறக்குமதி செய்யும்‌ வாருட்களுக்கு
25% வரி, சீன பொருட்களுக்கு 10% வரி

சட்டவிரோத பொருட்கள்‌ இறக்குமதியை தடுக்க டிரம்ப்‌ அறிவிப்பு

The Seithikathir®

01 Feb, 17:22


நாளை பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்.

தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை (பிப்.2) பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிப்பு.

மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் அலுவலகங்கள் இயங்கும்.

ஆவணப் பதிவுக்கு, விடுமுறை நாள் கட்டணம் வசூலிக்கப்படும் என பதிவுத்துறை அறிக்கை.

The Seithikathir®

01 Feb, 16:22


💥 மத்திய பட்ஜெட்டில் அஷ்டலட்சுமிகள்!

2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில்
நிதிப்பற்றாக்குறை 4.4சதவீதமாகவும், வருவாய் பற்றாக்குறை 1.5சதவீதமாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரது பட்ஜெட்டில்
அஷ்ட லட்சுமிகளும் அணிவகுத்திருந்தனர்.

பாஜ கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலமான பீகாருக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள், கையில் தாமரையுடன் கடாட்சம் வழங்கும் ஆதி லட்சுமியாக உள்ளது.

பட்ஜெட்டின் வருமான வரிச்சலுகை பொன்,பொருள் வழங்கும் தனலட்சுமியாக உள்ளது.

வேளாண்மை ஊக்குவிப்பு திட்டங்கள் தானியலட்சுமியாக உள்ளன.

நிலையான நீடித்த வளர்ச்சித்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி நிலைத்திருமகள் எனப்படும் கஜலட்சுமியை குறிக்கிறது.

பாதுகாப்புத்துறைக்கு கிடைத்துள்ள கூடுதல் நிதி அஞ்சேல் என அருளும் தைரியலட்சுமியின் அருளை காட்டுகிறது.

வளரும் தலைமுறையினருக்கான அடல் ஆய்வகம், ஏஐ கட்டமைப்பு அறிவிப்புகளில் சந்தான லட்சுமி தெரிகிறார்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

மக்கள் நலத்திட்டங்களுக்கான பட்ஜெட் அறிவிப்புகள் சவுபாக்கிய லட்சுமியின் கடாட்சத்தை கூறுவதாக உள்ளது.

நாட்டின் வருவாயை அதிகரித்து தனித்திறனை பாதுகாக்கும் அறிவிப்புகள் வரலட்சுமியை நினைவுபடுத்துகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர் துவக்கநாளில் பிரதமர் நரேந்திரமோடி, நடுத்தர மக்களுக்கு அன்னை லட்சுமியின் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறேன் என்று கூறியிருந்தார்.
அடுத்தநாள் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அஷ்ட லட்சுமிகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

The Seithikathir®

01 Feb, 14:37


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அணிந்துள்ள புடவை மதுபானி புடவையாகும்.

மதுபானி கலை மற்றும் பத்ம விருது பெற்ற துலாரி தேவியின் திறமையை போற்றும் வகையில் சேலை அணிந்துள்ளார்

துலாரி தேவி 2021 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

மிதிலா ஆர்ட் இன்ஸ்டிட்யூட்டில் கிரெடிட் அவுட்ரீச் செயல்பாட்டிற்காக நிதி அமைச்சர் மதுபானிக்குச் சென்றபோது, ​​அவர் துலாரி தேவியைச் சந்தித்து பீகாரில் உள்ள மதுபானி கலையைப் பற்றிய எண்ணங்களை அன்புடன் பரிமாறிக் கொண்டார்

துலாரி தேவி புடவையை பரிசாக அளித்து நிலையில் பட்ஜெட் தனமான இன்று அந்த புடவையை நிதி அமைச்சர் அணிந்துள்ளார்.

பிகாரில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

The Seithikathir®

01 Feb, 14:34


💥 மத்திய பட்ஜெட் - தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம்

2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது.

உலகத்திலேயே வேகமாக வளர்கிற பொருளாதார நாடு இந்தியா என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் சராசரி வளர்ச்சி விகிதம் 6% தான் இருக்கிறது.

மத்திய பாஜக அரசு, ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கான அரசல்ல. உயர் வருமானம் பெறுகிறவர்களுக்கு ஆதரவாகத்தான் வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை வளர்ச்சியை அதிகரித்து, வேலை வாய்ப்பை பெருக்கி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துகிற நோக்கம் கொண்டதாக இல்லை.

மத்திய அரசுக்கானதாக இல்லாமல் பீகார் மாநிலத்திற்காக மட்டுமே இருப்பதைப்போல் அமைந்திருக்கிறது.

இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும். மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை ஒரு கானல் நீராகவே அமைந்துள்ளது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

The Seithikathir®

01 Feb, 14:32


💥 மீண்டும் புறக்கணிக்கப்படும் தமிழகம்: விஜய்

2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள், இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் ஒரு சில மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஆண்டிற்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை நான் உளமார வரவேற்கிறேன். இதன் மூலம் நடுத்தர மக்களுக்குக் குறிப்பிடும்படியான நிவாரணம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய பெட்ரோல் / டீசல் வரிக் குறைப்பு மற்றும் GST வரிக் குறைப்பு / எளிமைப்படுத்துதல் பற்றி எந்த ஓர் அறிவிப்பும் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.

முதல்முறையாகத் தொழில்முனைவோராக உருவாகும் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உள்ளடங்கிய முதல் 5 லட்சம் பேர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் உளமார வரவேற்கிறது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

அதே சமயம் விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் போதிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

குறிப்பாக, சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வாயிலாக இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலான திட்டங்கள் ஏதும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

புதிய ரயில் தடங்கள், சாலைகள், கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற தமிழ்நாட்டுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு எந்த ஓர் அறிவிப்பும் இடம்பெறவில்லை.

தமிழகத்தில் மிகத் தொன்மையான இரும்பு நாகரிகம் இருந்தது அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கின்ற கண்டுபிடிப்பாகும். இதற்கு உரிய அங்கீகாரமும் சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நிதியும் வழங்காதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

அணுஉலை மின் உற்பத்தி PPP (Public Private Partnership) மூலம் தனியார் மயமாக்கப்படுதலுக்கு இந்த நிதிநிலை அறிக்கை முக்கியத்துவம் வழங்கி இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்திக்கான தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்தக் காலக்கட்டத்தில் மீண்டும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் அணுமின் உற்பத்தி தொடர்பான அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

Asset Monetization வாயிலாகப் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகள், ஒரு சில பெரும் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குச் சென்று விடுமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒவ்வோர் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போதும், சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைக் கருத்தில் கொண்டு, அந்த மாநிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது மற்ற மாநிலங்களையும் அந்த மாநில மக்களையும் அவமதிப்பதாக உள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் ஒன்றிய அரசானது தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளது.

அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே ஒன்றிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். மாறாக, பாரபட்சத்தோடு நடந்துகொள்வது சரியான அணுகுமுறை இல்லை.

- விஜய் தலைவர், தமிழக வெற்றிக் கழகம்

The Seithikathir®

01 Feb, 14:31


💥"மத்திய பட்ஜெட் - மக்கள் பதிலடி கொடுப்பார்கள்''

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது

தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காமல் துரோகத்தை செய்துள்ளது

மெட்ரோ ரயில் திட்டம், சாலை பணிகள் திட்டம் உள்பட எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்கவே இல்லை

தமிழக மக்கள் மத்திய அரசுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்

- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

The Seithikathir®

01 Feb, 13:15


🔊 நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் சிறப்பானது: பிரதமர் மோடி புகழாரம்

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் சிறப்பானது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நடுத்தர மக்களின் மீது கவனம் செலுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. வருமான வரி குறைக்கப்பட்டுள்ளதால் நடுத்தர மக்களுக்கு பலன் கிடைக்கும்.

கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் கடன் கிடைக்கும். சுற்றுலா உள்ளிட்ட துறைகளுக்கு வளர்ச்சி அளிக்கும்
பட்ஜெட் சிறப்பானது என பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.

The Seithikathir®

01 Feb, 13:15


🔊 யானைப் பசிக்கு சோளைப்பொறி: பட்ஜெட் குறித்து பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

யானைப் பசிக்கு சோளைப்பொறி என பட்ஜெட் குறித்து பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். இந்தியாவுக்கு முக்கியமான ஒரு திட்டமாக இருப்பது நதிகள் இணைப்பு திட்டம், புல்லட் ரயில் திட்டம், GST வரியை குறைத்து அறிவிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகப்படியாக வேலை வாய்ப்புகளுக்கான எந்த ஒரு அறிவிப்பு திட்டம் இல்லை.

மாநிலங்களுக்கு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூபாய் 1.50 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் இந்த பட்ஜெட் ‘யானைப் பசிக்கு சோளப்பொறி” என்ற பழமொழிக்கு ஏற்ப அமைந்துள்ளது என தெரிவித்தார்.

The Seithikathir®

01 Feb, 13:14


🔊 மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது: வைகோ குற்றச்சாட்டு

மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு வைத்துள்ளார். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த உரிய அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. நடப்பு ஆண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.8 விழுக்காடு
என்பது குறைவாகும் என்றும் தெரிவித்தார்.

The Seithikathir®

01 Feb, 13:14


🔊 மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: பாமக நிறுவனர் ராமதாஸ் வருத்தம்

மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்விக்கு ரூ. 78,572.10 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது போதுமானது அல்ல. அதேபோல், ரயில் திட்டங்கள் குறித்தும், நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதியை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த வேண்டும் என தெரிவித்தார்.

The Seithikathir®

01 Feb, 13:14


🔊 பீகார் மாநில வரவு-செலவு நிதிநிலை அறிக்கை தான் இந்த மத்திய பட்ஜெட்!

தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை

-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

The Seithikathir®

01 Feb, 13:12


🔊 பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது இதுவே முதல் முறை!

-திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம்

The Seithikathir®

01 Feb, 10:30


பட்ஜெட் எதிரொலி - தங்கம் விலை உயர்வு.

மத்திய அரசின் பட்ஜெட் எதிரொலியால் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ₹62,320க்கும் ஒரு கிராம் ₹7,790க்கும் விற்பனை.

காலையில் சவரனுக்கு ₹120 உயர்ந்தநிலையில் மீண்டும் ₹360 உயர்வு.

The Seithikathir®

01 Feb, 08:40


சதுப்பு நிலங்களுக்கு சாகா வரம் வேண்டும்!

கட்டுரையாளா்: மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவா்.

நன்றி: தினமணி

எளிதாகவும், இயல்பாகவும் கிடைக்கும் எதற்குமே உரிய முக்கியத்துவம் கிடைக்காது என்பாா்கள். தமிழ்நாட்டுக்கு இயற்கை கொடுத்த வரமான சதுப்பு நிலங்களைப் பராமரிப்பதிலும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 18 சதுப்பு நிலங்கள் ராம்சாா் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. நமக்குக் கிடைத்த வரமான இந்த நிலங்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் வேதனையையும், ஆற்றாமையையும் ஏற்படுத்துகிறது.

உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநிலங்களைக் காப்பதற்கான உடன்படிக்கை ஈரான் நாட்டின் ராம்சாா் நகரில் 1971, பிப்ரவரி 2 -ஆம் நாள் எட்டப்பட்டது. அதுவே உலக சதுப்புநில நாளாக ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை (பிப்.2) உலக சதுப்பு நில நாள் கொண்டாடப்படுகிறது. ‘‘நமது பொதுவான எதிா்காலத்திற்காக சதுப்புநிலங்களை காப்போம்’’ என்பது தான் இந்த ஆண்டுக்கான உலக சதுப்புநில நாள் முழக்கமாகும். ஆனால், இந்த நோக்கம் தமிழகத்தில் மதிக்கப்படுவதில்லை.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

‘நீரின்றி அமையாது உலகு’ என்கிறாா் வள்ளுவா். உயிா்வாழ்க்கை, உணவு, பொருளாதாரம், பண்பாடு என அனைத்திற்கும் நீா் இன்றியமையாதது. உலகின் மொத்த நீா்வளத்தில் 97.5 % கடலில் உப்புநீராக உள்ளது. மீதமுள்ள 2.5 % மட்டுமே நன்னீராகும். அதிலும் 0.79 % நிலத்தடி நீராக உள்ளது. ஆறுகள், ஏரிகள், குளங்கள் என மேற்பரப்பில் உள்ள ஒட்டுமொத்த நீா்வளத்தின் பங்கு 0.01% மட்டுமே.

இந்தியாவின் நிலப்பரப்பில் தமிழகத்தின் பங்கு 4 %. ஆனால், தமிழகத்தின் நீா்வளம், இந்தியாவின் நீா் வளத்தில் 3% மட்டும் தான். கோதாவரி ஆற்றின் சில நாள் வெள்ளப்பெருக்கும், கங்கை ஆற்றின் சில மணி நேர வெள்ளப் பெருக்கும் தமிழ்நாட்டின் ஓராண்டு நீா்வளத்தை விட அதிகம்.

தமிழ்நாட்டில் தனிநபருக்குக் கிடைக்கும் நீரின் அளவு, வெறும் 590 கன மீட்டா் மட்டுமே. இது இந்தியாவின் சராசரியான 1508 கன மீட்டா், சா்வதேச சராசரியான 1700 கன மீட்டா் ஆகியவற்றில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் தான். இதே நிலை நீடித்தால், 2050 - ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தனிநபா் நீா் வளம் வெறும் 416 கன மீட்டராகக் குறைந்துவிடக்கூடும். காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளையும் கருத்தில் கொண்டு பாா்க்கும் போது, தமிழகத்தில் தண்ணீா்ப் பாதுகாப்பை உறுதி செய்ய நீா்வளங்களைக் காப்பாற்றுவது அவசியம். அதற்கு தமிழ்நாட்டின் சதுப்பு நிலங்கள் அனைத்தையும் மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நீா் தேங்கும் நிலப்பகுதிகள் சதுப்புநிலங்கள் எனப்படுகின்றன. நீா் வளத்தையும் நிலவளத்தையும் மேம்படுத்துதல், மாசுபாட்டை குறைத்தல், உயிரி பன்மமய வளத்தைக் காத்தல், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல் என எண்ணற்ற பலன்களை சதுப்புநிலங்கள் அளிக்கின்றன.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

உலகில் குறைந்தது 150 கோடி ஹெக்டோ் பரப்பளவு சதுப்புநிலங்கள் இருக்கலாம் என ராம்சாா் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இஸ்ரோ சதுப்பு நில வரைபடத்தின்படி இந்தியாவில் உள்ள 2.25 ஹெக்டேருக்கு கூடுதலான பரப்பளவு கொண்ட சதுப்புநிலங்களின் எண்ணிக்கை 2,31,195 ஆகும். இவற்றின் மொத்த பரப்பளவு 1,59,81,516 ஹெக்டோ். (15.98 மில்லியன் ஹெக்டோ்). இந்திய நிலப்பரப்பில் இதன் பங்கு 4.86 விழுக்காடு ஆகும். தமிழ்நாட்டில் இது முறையே 26,883 மற்றும் 9,25,712 ஹெக்டோ் ஆகும்.

சதுப்புநிலங்களின் பயன்கள் எண்ணற்றவை. நிலத்தடி நீா் அளவை அதிகரிப்பது, நிலத்தடி நீரின் உப்புத் தன்மையைக் குறைப்பது, வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது, கடல் அலைகளின் தாக்கத்தைச் சமாளிப்பது, கரியமில வாயுவை உறிஞ்சுவது, மண் அரிப்பைத் தடுப்பது, மீன் இனப்பெருக்கத்தை அதிகரிப்பது, பலவகை அரிய உயிரினங்களின் வாழிடமாகத் திகழ்வது, புயல் மற்றும் வெப்பத்தின் தாக்கத்தைக் கட்டுப் படுத்துவது போன்றவை சதுப்பு நிலங்களின் பயன்களுக்கு சில எடுத்துகாட்டுகள்.

இவை அனைத்துக்கும் மேலாக வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகள் மற்றும் உள்ளூா் பறவைகளின் சரணாலயமாகவும் சதுப்பு நிலங்கள் திகழ்கின்றன.

நீரியல் மற்றும் வேதியியல் சுழற்சிப் பணியை சதுப்பு நிலங்கள் செய்வதால் அவை நிலத்தின் சிறுநீரகங்கள் என்றும், உணவு வலைப்பின்னலுக்கும், உயிரி பன்மயவளத்தை மேம்படுத்தவும் உதவுவதால் அவை உயிரியல் பேரங்காடிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. சென்னை வளா்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, தமிழக சதுப்பு நிலங்களின் பொருளாதார மதிப்பு ஆண்டுக்கு சுமாா் ரூ.4,386 கோடியாகும்.

The Seithikathir®

01 Feb, 08:40


இவற்றை சீரமைத்து, பராமரித்தால் அவற்றின் பொருளாதார மதிப்பு ரூ.17,468 கோடியாக உயரும் எனத் தெரிவித்தது. ஆனால், இதை உணராமல் அரசும், தனியாரும் போட்டி போட்டுக் கொண்டு சதுப்பு நிலங்களை வீணடிப்பது தான் வேதனையளிக்கும் உண்மையாகும்.

சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பது மத்திய அரசின் நோக்கமாக இருந்ததால், 2017-ஆம் ஆண்டில் சதுப்பு நிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் வெளியிடப்பட்டன. இந்த விதிகளை தமிழ்நாட்டில் செயலாக்க வேண்டும் என பசுமைத் தாயகம் உள்ளிட்ட அமைப்புகள் கொடுத்த அழுத்தத்தைத் தொடா்ந்து, 2018-ஆம் ஆண்டில் தமிழ்நாடு சதுப்பு நிலங்கள் ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது.

ஆனால், அதன்பின் 6 ஆண்டுகள் 2 மாதம் 8 நாள்கள், அதாவது 2261 நாள்கள் கடந்துவிட்டன. ஆனாலும், தமிழ்நாட்டின் ஒரே ஒரு சதுப்புநிலம் கூட இதுவரை அறிவிக்கை செய்யப்படவில்லை. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சுற்றுச்சூழல் சட்ட விதியை தமிழ்நாடு அரசு மதிக்கவே இல்லை. இதனால், தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான சதுப்புநிலங்கள் அழிவுக்கு உள்ளாகின்றன.

இந்திய அரசின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 பிரிவு 4-இன் கீழ் நீா் நிலைகளை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. நீா் நிலைகளில் தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலை விரிவாக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து விதமான கழிவு மேலாண்மை விதிகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. திடக்கழிவுகளை கொட்டுவது, கழிவு நீரைக் கலப்பது, கட்டுமானங்களை மேற்கொள்வது என அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.

இவற்றுக்கெல்லாம் செயல்வடிவம் கொடுப்பது மிகவும் எளிதானது. மேற்கண்ட விதிகள் பிரிவு 7 (3)-இன் கீழ் தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான நீா் நிலைகளை அங்கீகரித்து, அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டால் அந்த நீா்நிலைகள் அனைத்தும் சட்டபூா்வமான முழு பாதுகாப்பைப் பெற்றுவிடும். ஆனால்,”தமிழ்நாட்டின் அதிகார வா்க்கத்தினரின் தனிநபா் லாபங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் காரணமாகவே சதுப்புநிலங்கள் அறிவிக்கை செய்யப்படவில்லை.

இன்னொருபுறம், இஸ்ரோ சதுப்பு நிலங்கள் வரைபடத்தில் இடம்பெற்றுள்ள 2.25 ஹெக்டேருக்கு கூடுதலான பரப்பளவு கொண்ட தமிழத்தின் 26,883 சதுப்பு நிலங்களின் எல்லைகளை மூன்று மாத காலத்துக்குள் வரையறை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த 11.12.2024-ஆம் நாள் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், அந்த ஆணையும் இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை.

தமிழ்நாட்டின் சதுப்பு நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், அதற்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

1. உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழத்தின் 26,883 நீா்நிலைகளின் எல்லைகளை 11.03.2025-ஆம் நாளுக்குள் வரையறை செய்ய வேண்டும்.

2. தமிழ்நாட்டின் 18 ராம்சாா் சதுப்பு நிலங்களையும் 2017 - சதுப்பு நில விதிகளின் அடிப்படையில்

அறிவிக்கை செய்ய வேண்டும்.

3. தமிழ்நாட்டின் அனைத்து சதுப்புநிலங்களையும் அதேபோல் அறிவிக்கை செய்ய வேண்டும்.

4. ராம்சாா் சதுப்புநில மாநகரங்கள் பட்டியலில் சென்னை மாநகரை இணைப்பதற்காக தமிழ்நாடு அரசு பரிந்துரைக்க வேண்டும்.

5. பழவேற்காடு தொடங்கி பள்ளிக்கரணை, கரிக்கிலி, வேடந்தாங்கல், கழுவேலி ஆகிய ராம்சாா் தளங்களை உள்ளடக்கிய - கிழக்குக் கடற்கரைப் பகுதிகளை பறவைகள் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

6. தமிழ்நாடு அரசின் உயா்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்டுள்ள 207 சதுப்புநிலங்களையும் பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும்.

7. தமிழ்நாட்டில் சதுப்புநில முன்னுரிமைக்கான அளவுகோல்கள் மற்றும் சதுப்பு நில கண்காணிப்புக்கான செயல்திட்டம் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிக்கையில் 141 சதுப்புநிலங்கள் முதன்மையாக அடையாளம் காணப்பட்டன. தமிழ்நாடு சதுப்பு நிலங்கள் இயக்கத்தால் 100 சதுப்புநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றையும் 2017 சதுப்பு நில விதிகளின் கீழ் அறிவிக்கை செய்ய வேண்டும்.

8. காலநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான பாரிஸ் உடன்படிக்கையின் கீழ், இந்திய அரசு அளிக்க வேண்டிய தேசிய அளவில் தீா்மானிக்கப்பட்ட பங்களிப்பு திட்டம் மற்றும் தேசிய தகவமைப்பு திட்டம் ஆகியவற்றில் தமிழ்நாட்டின் சதுப்புநிலங்களுக்கான இயற்கை சாா்ந்த தீா்வுகளை உள்ளடக்குவதற்கு தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் முன்வர வேண்டும்.

9. தமிழ்நாடு சதுப்பு நிலங்கள் ஆணையம், மாவட்ட அளவிலான சதுப்புநில மேலாண்மைக் குழுக்கள் ஆகியவை முழு அளவிலும், மக்கள் பங்கேற்புடனும், பொறுப்புடைமையை நிலைநாட்டும் வகையிலும் செயல்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

10. காலநிலை ஜனநாயகத்தையும், சுற்றுச்சூழல் சட்டத்தின் ஆட்சியையும் தமிழ்நாடு அரசு நிலை நாட்ட வேண்டும்.

இவற்றையெல்லாம் தமிழக அரசு செய்யுமா? கண்டிப்பாகச் செய்ய வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சதுப்பு நிலங்களுக்கு சாகா வரம் வழங்க வேண்டும்.

(நாளை (பிப்.2) உலக சதுப்புநில நாள்)

The Seithikathir®

01 Feb, 08:40


💥 சர்ச்சை ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டுமே நோக்கம்: நாவலாசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர் கண்டனம்!

சர்ச்சையாக வேண்டும் என்று திட்டமிட்டே இந்தப் படத்தின் டீஸர் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு பள்ளி மாணவிதான் கதாநாயகி. அவள் பார்வையில் அல்லது அனுபவத்தில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இஷ்டப்பட்டதை எல்லாம் செய்யும் சுதந்திரமே சந்தோஷம் தருவது.

அப்படி சுதந்திரமாக தன் சந்தோஷத்திற்காக அவள் செய்ய விரும்பும் காரியங்கள் தன் உடலைக் கெடுக்கும் மது, சிகரெட், பலருடன் உடலுறவு, கெட்ட வார்த்தை பேசுவது போன்றவை.

அவள் பார்வையில் மாரல்ஸ், வேல்யூஸ், எத்திக்ஸ் என்று எதை சமூகம் சொன்னாலும், குடும்பம் சொன்னாலும் அதெல்லாம் பெண்ணை அடிமைப்படுத்தும் விஷயங்கள்!

இப்படியான பெண்கள் இந்தச் சமூகத்தில் இல்லையா? இருக்கிறார்கள்தான். எத்தனை சதவிகிதம்? அந்த புறக்கணிக்கப்பட வேண்டிய கூட்டத்தில் ஒரு பெண்ணைக் கதாநாயகியாக்கி சமூகத்தில் உருவாக்க நினைக்கும் புதிய கருத்தியல்தான் என்ன?

> கண்ணியம் கெடுக்கும் Bad Girl: WATCH: https://youtu.be/h0xCh1fTRfk

இப்படியான சிந்தனைகளுடன் இருக்கும் ஒரு பெண் எந்தச் சமூகத்திலும் இருக்க முடியுமே.
குறிப்பிட்டு பிராமின்ஸ் குடும்பப் பின்னணி என்று காட்ட வேண்டிய அவசியம் என்ன?

இதன் இயக்குநர் ஒரு பெண். அவரின் மேடைப் பேச்சில் அத்தனை சிந்தனைக் குழப்பங்கள்.

நான் காட்டியுள்ள பெண்ணை ரோல் மாடலாக எடுத்துக்கொள்ள அவசியமில்லை.

பெண்கள் புனிதர்களாக இருக்க அவசியமில்லை. மனிதர்களாக இருந்தால் போதும்.

ஒரு பெண் என்பவள் பத்தினியாக இருக்க வேண்டும், தாய்மை என்றால் போற்றத்தக்கது போன்ற சமூகம் உருவாக்கியுள்ள கருத்துக்கள் பெண்களுக்கு பிரெஷராக இருக்கிறது.

நான் இந்தப் படத்தை எடுத்தபோதும், எடிட் செய்தபோதுமே என் சிந்தனைக் கோணங்கள் மாறிக்கொண்டே இருந்தன. நான் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருப்பவள்.

இதெல்லாம்தான் ஃபெமினிசத்தின் டிக்‌ஷனரி என்று சொல்லவில்லை.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ஆன்களில் குறைபாடுள்ள கதாப்பாத்திரங்களை நிஜத்திலும், திரையிலும் நிறைய பார்த்திருக்கிறேன். இந்தக் கதாநாயகியும் குறைபாடுள்ளவள்தான். ஆனால் பெண்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

அந்தப் புதிய இயக்குநருக்குதான் தன் சிந்தனையில் குழப்பங்கள் இருக்கின்றன. தயாரிப்பாளர் வெற்றிமாறனுக்குமா?

ஒரு படத்தைப் பார்த்துவிட்டு டேக் ஹோம் மெசேஜாக எதை எடுத்துக்கொள்ள வேண்டும்?

ஓட்டுப் போடவும், திருமணம் செய்யவுமே வயது தகுதி இல்லாத ஒரு குறைபாடுகள் கொண்ட பள்ளி மாணவியின் மூலம் என்ன கருத்தியல் சொல்வது நோக்கம்?

பெண்ணியம் குறித்து தமிழில் நச்சென்று பேசிய அவள் அப்படித்தான், சிறை, மனதில் உறுதி வேண்டும், நேர்கொண்ட பார்வை, இந்தியில் தப்பட் போன்ற படங்களை எல்லாம் இந்தப் புதுமுக இயக்குநர் பார்த்திருக்கிறாரா?

எது பெண்ணியம் என்று விவாதிக்கும், பேசும், வழிகாட்டும் நூற்றுக்கணக்கான தமிழ் படைப்புகளைப் படித்திருக்கிறாரா?

இந்தப் படத்தில் முடிவில் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.

ஆனால்.. டீஸரின் நோக்கம் சர்ச்சை ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டுமே.

அமரன், சூரரைப் போற்று போன்ற நிஜ மனிதர்களின் வாழ்க்கைப் படங்களில் கதாநாயகன் ஒரு பிராமின் என்று நேர்மையாகக் காட்டாத தமிழ் சினிமா..சர்ச்சைக்குரிய படங்களில் பிராமினை அடையாளப்படுத்தும் போக்கை நான் கண்டிக்கிறேன்.

The Seithikathir®

21 Jan, 14:04


பரந்தூர் விமான நிலையம்:தமிழக அரசு விளக்கம்.

பரந்தூர் விமான நிலைய திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மக்கள் பாதிக்கப்படாமல் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

பண்ணூரில் 1,546 குடும்பங்கள், பரந்தூரில் 1,005 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன.

விமான நிலையம் அமைவதால் தொழில், மருத்துவம், சுற்றுலா வளர்ச்சிபெறும் - தமிழ்நாடு அரசு

The Seithikathir®

21 Jan, 14:01


• செய்திக்கதிர் வளர்ச்சிக்கு உதவிய அன்பு உள்ளங்கள்.!

• Google Pay • UPI:
9842940657

• விருப்பம் உள்ள நண்பர்கள் மாதம் ரூ.1 முதல் ரூ.100 வரை தங்களால் இயன்ற நிதியை நன்கொடையாக தாருங்கள்.

--------------------------------------------------

➤ JANUARY 2025

01) மிதுன் பாபு ஏ
02) பாபு ஆர், மேக்னட் மீடியா டெக்னாலஜீஸ்
03) மனோகரன் ஜி
04) டொமினிக் சாவியோ எஸ்
05) அருள்குமார் பி.கே.
06) சாய் க்ருத்வி பி.வி.
07) சாய் ரிதேஷ் பி.வி.
08) சரவணன் ஆர்
09) குருநாதன் டி, பழனி
10) அருண்குமார் ஆர்

11) ஃபிராங்ளின் சாமுவேல் ஆர்
12) நரேஷ் பாபு ஜி
13) நிர்மல்ராஜ் டி
14) இரா.சண்முகம், ராதாபுரம்
15) வருண் கிருபாகரன் ஜி
16) முருகன் எஸ்
17) கண்ணன் ஜெ.எஸ்.
18) சரவணன் கே
19) ரமேஷ்குமார் ஆர்

SUPPORT OUR JOURNALISM! WE THANK YOU FOR YOUR TRUST IN US.

UPDATED: 16-01-2025 at 09:13 PM
--------------------------------------------------

The Seithikathir®

21 Jan, 13:42


திருத்தம்

💥 இன்ஸ்டாகிராமில் இனி 3 நிமிடங்கள் ரீல்ஸ் போடலாம்!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இன்ஸ்டாகிராமில் இனி 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் போடலாம் என்று புதிய அப்டேட்டை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் செயலி உள்ளது. கோடிக்கணக்கான பயனர்கள் புகைப்படங்கள், விடியோக்களை பகிர்ந்து லைக் பெறுவதற்கும், நண்பர்களுடன் உரையாடுவதற்கும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் இதற்கு முன் 90 நொடிகள் வரை ரீல்ஸ் விடியோக்களை பகிர்ந்து கொள்ளும் வசதி இருந்தது.

இந்த நிலையில், ரீல்ஸ் விடியோ நேரத்தை 3 நிமிடங்களாக நீட்டித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு ஒரே நேரத்தில் பதிவிடும் புகைப்படங்களின் எண்ணிக்கையை 10 இல் இருந்து 20 ஆக இன்ஸ்டாகிராம் நிறுவனம் உயர்த்தியது.

நாளுக்குநாள் இன்ஸ்டாகிராம் பயனர்கள் அதிகரித்து வரும் நிலையில், இளம் தலைமுறையினரை மேலும் கவரும் விதமாக புதுபுது அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர்.

> நாக சாதுக்கள் - மிரளும் உலகம்! Watch: https://youtu.be/N17HuUO9DQU

The Seithikathir®

21 Jan, 13:22


💥 கோமியம் விஞ்ஞான ரீதியிலான அமிர்த நீர் - அடித்துச் சொல்கிறார் மருத்துவர் தமிழிசை சவுந்திரராஜன்

விஞ்ஞான பூர்வ அமிர்த நீரான கோமியத்தை பற்றி பேசினால் குதி, குதி என்று குதிக்கிறார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவரும் மருத்துவருமான தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் அளித்த பேட்டி:

ஆராய்ச்சிப் பூர்வமாக கோமியத்தில் நுண்ணுயிர்களை தடுக்கும் சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தான் அதை வீட்டின் முன்பு தெளிப்பார்கள். மாட்டின் சிறுநீரான கோமியம் ஆயுர்வேதத்தில் மருந்து என எழுதப்பட்டுள்ளது. அதை, அமிர்த நீர் என்று குறிப்பிடுகிறார்கள். நம் தமிழ்நாட்டில் உள்ள சங்க இலக்கியத்தில் மாட்டுச் சாணம் பூசிய முற்றங்கள் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதா இல்லையா? மாட்டுச் சாணத்தில் கிருமிநாசினி இருக்கிறது என்றால், மாட்டின் சிறுநீரிலும் கிருமிநாசினி இருக்கும்தான்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

நான் ஒரு அலோபதி டாக்டர். நான் கோமியத்தை பற்றி பேசுகிறேன் என்றால், ஆயுர்வேதத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. விஞ்ஞான பூர்வமாக நிருபிக்கப்படவில்லை என்றால் நான் பேச மாட்டேன். ஆராய்ச்சி என்று சொன்னவுடன் அது நியாபகத்துக்கு வந்தது.

உண்மையில் நல்லதை தமிழகம் எடுத்து கொள்ள வேண்டும். மத்திய அரசு திட்டம் என்றாலும் எடுத்து கொள்ள மாட்டிங்க. உண்மையில் ஆராய்ச்சி செய்து இது நல்லது என்று சொன்னாலும் எடுத்து கொள்ள மாட்டிங்க. விஞ்ஞான ரீதியாக அது அமிர்த நீர் என்று ஆயுர்வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னால் உடனே குதி, குதி என்று குதிக்கிறீர்கள். கோமியம் குடிப்பதில் இவர்களுக்கு பிரச்னை இல்லை. டாஸ்மாக் குறைந்து விடுமோ? என்ற பயம் வந்து இருக்கலாம்.

மியான்மர், ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும் மாட்டின் சிறுநீரைப் பயன்படுத்துகிறார்கள். இதனை ஒட்டுமொத்தமாக புறந்தள்ள முடியாது. இது ஆய்வுப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 50 வகையான காய்ச்சல்களுக்கு கோமியம் மருந்தாக ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில், காமகோடி சொன்ன காய்ச்சலும் ஒரு வகையாக இருந்திருக்கலாமே. அறிவுப்பூர்வமாக, விஞ்ஞானப்பூர்வமாக ஒரு தொழில்நுட்பக் கல்லூரியை தலைமை தாங்குபவர் சும்மா எதையேனும் சொல்வாரா?.
என் உணவு, என் உரிமை என்று நீங்கள் பேசுகிறீர்கள். ஒரு இடத்தில் மாட்டிறைச்சியை அலுவலகத்தில் தூக்கி வீசுகிறீர்கள். ஆனால், விஞ்ஞானப் பூர்வமாக கோமியத்தை மருந்து எனச் சொல்லும்போது ஏன் அதை ஒத்துக்கொள்ள மறுக்கிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

> நாக சாதுக்கள் - மிரளும் உலகம்! Watch: https://youtu.be/N17HuUO9DQU

The Seithikathir®

21 Jan, 12:29


The Seithikathir® pinned «🔴 படை திரண்டு வரும் நாக சாதுக்கள்! யார் இவர்கள்? WATCH: https://youtu.be/N17HuUO9DQU மிரட்சியுடன் பார்க்கும் உலகம்... சிலிர்க்க வைக்கும் வரலாறு... ***»

The Seithikathir®

21 Jan, 12:29


🔴 படை திரண்டு வரும் நாக சாதுக்கள்! யார் இவர்கள்?

WATCH: https://youtu.be/N17HuUO9DQU

மிரட்சியுடன் பார்க்கும் உலகம்... சிலிர்க்க வைக்கும் வரலாறு...

***

The Seithikathir®

21 Jan, 11:50


💥 JUST IN

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் IPS தாக்கல் செய்த அவதூறு வழக்கில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பிப் 19- ஆம் தேதி நேரில் ஆஜராக
திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.

The Seithikathir®

21 Jan, 11:23


டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால், கடையின் அனைத்து ஊழியர்களும் பணியிடை நீக்கம் என்ற நிர்வாக சுற்றறிக்கையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கூடுதல் விலையை தடுக்க, மதுபான விற்பனை வரும் மார்ச் முதல் டிஜிட்டல் மயமாக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

டாஸ்மாக் நிர்வாக சுற்றறிக்கையை எதிர்த்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் வழக்கு முடித்துவைப்பு

The Seithikathir®

21 Jan, 11:22


ராணிப்பேட்டையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி.

ராணிப்பேட்டையில் உள்ள பணப்பாக்கம் சிப்காட்டில் அமையும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது.

முதல் கட்டமாக ₹914 கோடி மதிப்பில் தொழிற்சாலையை அமைக்கிறது டாடா நிறுவனம்.

இதன்மூலம் 5 ஆண்டுகளில் ₹9,000 கோடி முதலீடு மற்றும் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The Seithikathir®

21 Jan, 11:12


நிதி மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும்-இபிஎஸ்.

வாக்குகளைப் பெற மட்டும் திட்டங்கள் போடாமல் வளர்ச்சி திட்டங்களைத் தீட்ட வேண்டும்.

நிதி மேலாண்மையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கவனம் செலுத்த வேண்டும்.

நிதி மேலாண்மை குறித்து எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டியதில்லை-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

The Seithikathir®

21 Jan, 09:58


பள்ளிக்கல்வி எனும்போது இந்தியாவிலேயே வளர்ச்சி கண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

பள்ளிகளில் உட்கட்டமைப்பு, இடைநிற்றல் இல்லா மாநிலம் ஆகியவற்றில் இந்திய அளவில் தமிழ்நாடு தான் முதன்மையாக உள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கைதான், அதை மாற்ற முடியாது.

பள்ளி கல்வித்துறை மீதான விமர்சனம், பாராட்டு இரண்டையும் ஒன்றாகவே பார்க்கிறோம். தவறெனில் உடனே திருத்திக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் திட்டங்களை மற்ற மாநில அமைச்சர்களும், அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு தங்கள் மாநிலத்தில் செயல்படுத்துவது எங்களுக்கு பெருமைமாக உள்ளது - திருச்சியில் நடைபெற்ற நம்ம ஊரு நம்ம பள்ளி மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.

The Seithikathir®

21 Jan, 09:56


இந்திய அளவில் மக்கள் தொகையில் தமிழ்நாடு 6%. மாறாக, இந்திய அளவில் 21% பொறியியல் வல்லுநர்களை தமிழ்நாடு உருவாக்குகிறது - திருச்சி சிவா.

கல்விக்கு நிதியாக இந்திய முழுமைக்கும் 2.77% பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு 10% நிதியை கல்விக்கு ஒதுக்குகிறது.

இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கை என்பது 27% தமிழ்நாடு 48%.

தமிழ்நாட்டில் கல்வியின் நிலை செழித்து நிற்பதற்கு காரணம் திராவிட மாடல் அரசுதான் - திமுக திருச்சி சிவா.

The Seithikathir®

21 Jan, 08:43


திருப்பதியில் அன்ன பிரசாதத்துடன் இனி மசால் வடை.

திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்ன பிரசாதத்துடன் மசால் வடை வழங்க தேவஸ்தானம் முடிவு.

நாள்தோறும் வாழை இலையில் சாதம், சாம்பார், ரசம், மோர், பொறியல், சட்னி, சக்கரை பொங்கல் உள்ளிட்டவை வழங்கப்படும் நிலையில் வரும் பிப். 4ஆம் தேதி முதல் கூடுதலாக மசால் வடையும் வழங்கப்பட உள்ளது.

The Seithikathir®

21 Jan, 07:44


வளர் தமிழ் நூலகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர்.

சிவகங்கை: காரைக்குடி அழகப்பா பல்கலை. கலையரங்க வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘வளர் தமிழ்' நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த நிதி ரூ.12 கோடியில் நூலகம் கட்டப்பட்டுள்ளது.

அழகப்பா பல்கலை. நுழைவு வாயிலில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

The Seithikathir®

21 Jan, 07:38


மரண தண்டனை கோரி மேற்குவங்க அரசு முறையீடு.

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு.

குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியிருந்தது விசாரணை நீதிமன்றம்.

வழக்கை சிபிஐ சிறப்பாக கையாளவில்லை என முதலமைச்சர் மம்தா குற்றச்சாட்டு.

The Seithikathir®

21 Jan, 07:35


இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.5 ஆம் தேதி அரசு விடுமுறை -அரசாணை வெளியீடு

The Seithikathir®

21 Jan, 04:59


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவில் இருந்து இபிஎஸ் அவரை நீக்கிய நிலையில், நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார் செந்தில் முருகன்.

The Seithikathir®

21 Jan, 04:14


WHOல் இருந்து வெளியேறியது அமெரிக்கா.

உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்காவிடம் இருந்து பெரும் பங்கு நிதியினை பெற்றுக்கொண்டு கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களை சரிவர கையாள WHO தவறிவிட்டதாக அவர் தொடர்ச்சியாக பேசி வந்தார்.

முதல் ஆட்சியின் இறுதியிலும் இதே உத்தரவில் கையெழுத்திட்டு இருந்தார்.

The Seithikathir®

21 Jan, 01:52


"அமெரிக்காவில் இனி இரு பாலினம் மட்டுமே”

அமெரிக்காவில் ஆண் - பெண் என்ற இரு பாலினம் மட்டுமே இனி அங்கீகரிக்கப்படும் என அதிபராக பதவியேற்றதும் ட்ரம்ப் அறிவிப்பு.

சிறார் பாலின மாற்று அறுவை சிகிச்சை தடை, ராணுவத்தில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு தடை ஆகிய உத்தரவுகளில் கையெழுத்திட உள்ளதாக தனது முதல் உரையில் அவர் பேச்சு

The Seithikathir®

21 Jan, 01:51


பாரிஸ் ஒப்பந்தம் - 2வது முறையாக வெளியேறிய அமெரிக்கா.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் உத்தரவில், 2வது முறையாக அதிபராக பொறுப்பேற்றதும் மீண்டும் கையெழுத்திட்டார் ட்ரம்ப்.

அவரது முதல் ஆட்சிக்காலத்திலும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய நிலையில், 2020ல் பைடன் அதிபரானதும் அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்து இருந்தது.

The Seithikathir®

05 Jan, 03:12


அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்; பகல் பத்து திருமொழித்திருநாள்
ஆறாம் திருநாள்:

திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி பிரபந்திற்காக,
நம்பெருமாள் -
வெண்பட்டு அணிந்து
முத்து - ஆண்டாள் கொண்டை அணிந்து: அதில் நெற்றி சுட்டிப்பூ சாற்றி, கர்ண பத்திரம்; வைர அபய ஹஸ்தம் ; திரு மார்பில் பங்குனி உத்திர பதக்கம்; அதன் மேல் சந்திர ஹாரம் , அதனுள் ஸ்ரீ ரங்க நாச்சியார் பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, 18 பிடி (6 வட) முத்து சரம், தங்க பூண் பவழ மாலை ; பின்புறம் - புஜ கீர்த்தி ; அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம்; கையில் தாயத்து சரங்கள்; தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து ஆஸ்தான மண்டப சேவை ஆறாம் திருநாளில் சாதிக்கிறார்.

The Seithikathir®

05 Jan, 03:02


"தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையா?” என மார்க்சிஸ்ட் மாநாட்டில் அக்கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசிய நிலையில், திமுக நாளேடு முரசொலி கண்டனம்:

தி.மு.க. ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத் தொடங்கி இருக்கிறார் கே.பாலகிருஷ்ணன்....

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனின் பேச்சு தோழமைக்கு இலக்கணம் அல்ல -திமுக

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் கே.பாலகிருஷ்ணனுக்கு எதிராக வெளிவந்துள்ள கட்டுரை

"மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் பேசிய பேச்சு தோழமைக்கான இலக்கணமாக இல்லை"

தமிழகத்தில் அவசர நிலைப் பிரகடனமா? என அவர் பேசியதை தடுக்கவில்லை எனவும் முரசொலியில் விமர்சனம்

தமிழ்நாட்டில் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தப்படவில்லையா? நடக்கவே இல்லையா? எனவும் கேள்வி

தமிழ்நாட்டில் மாணவிகளுக்குப் பாதுகாப்பே இல்லை என உருவாக்கத் துடித்து குழப்பம் ஏற்படுத்தும் சிலருக்காக எதற்காக வக்கீலாக மாறுகிறார் பாலகிருஷ்ணன்?

பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் நின்று கொண்டுதான் அவரே பேசுகிறார்.

அவசர நிலை என்றால் என்ன என்றே தெரியாத நிலையிலா கே.பாலகிருஷ்ணன் இருக்கிறார்?

The Seithikathir®

05 Jan, 01:42


*குறள் எண் : ௧௧௭(117)
*பால் : அறத்துப்பால்
*அதிகாரம் : நடுவு நிலைமை

*குறள் :
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.


*உரை :
நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும், ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.

*English :
The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity.

தி ஆ ௨௦௫௬ சிலை (மார்கழி -௨௧)
தமிழ் வாழ்க

The Seithikathir®

04 Jan, 17:24


💥 "அண்ணா பல்கலை., மாணவி வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை, எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவை.

விசாரணை தொடர்பாக ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிட வேண்டாம். இவ்வாறான தவறான தகவல்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துவதுடன், புலன்விசாரணையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கக் கூடும்”

- தமிழ்நாடு காவல்துறை அறிக்கை

The Seithikathir®

04 Jan, 12:49


பொங்கல் திருநாள் கொண்டாடுவோரின் வசதிக்காக ஜன.17ஆம் தேதி விடுமுறை அறிவித்த தமிழக அரசு.

14,15,16 பொங்கல் விடுமுறை; 18, 19 சனி, ஞாயிறு விடுமுறை; இடைப்பட்ட 17ஆம் தேதியும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால் 6 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

ஜன.17-க்கு பதிலாக ஜன.25(சனிக்கிழமை) பணி நாள்.

The Seithikathir®

04 Jan, 10:40


பெஞ்சல் புயலை இயற்கை பேரிடராக அறிவித்தது அரசு.

பெஞ்சல் புயலை தீவிரமான இயற்கை பேரிடராக அறிவித்து அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.

அறிவிப்பு மூலம் பேரிடர் நிதியுடன் மற்ற நிதிகளையும் சீரமைப்பு பணிக்கு பயன்படுத்த முடியும்.

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் நவ.30இல் கரையைக் கடந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது.

The Seithikathir®

04 Jan, 08:03


5வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி.

The Seithikathir®

04 Jan, 08:03


விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 6 தொழிலாளர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி-முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

இறந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும்- முதல்வர்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

The Seithikathir®

04 Jan, 07:57


தமிழகத்தில் பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு.

திருப்பூரில் தாராபுரம், வெள்ளகோவில் பகுதியில் 2 மேம்பாலங்களுக்கு ரூ.9.22 கோடி ஒதுக்கீடு.

தேவகோட்டை - புதுக்கோட்டை சாலையில் மேம்பாலம் கட்ட ரூ.8.26 கோடி நிதி ஒதுக்கீடு.

அரியலூரில் கொடுக்கூர்- காடுவெட்டி சாலையில் பாலம் அமைக்க ரூ.5.89 கோடி ஒதுக்கீடு.

உப்பூர்- கோட்டையூர் சாலை, திருவாடானையில் உயர்மட்ட பாலம் அமைக்க ரூ.19.47 கோடி நிதி ஒதுக்கீடு.

விருதுநகரில் முதுகளத்தூர் - வீரசோழன் சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க ரூ.10.64 கோடி ஒதுக்கீடு- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

The Seithikathir®

04 Jan, 07:23


பட்டாசு ஆலை விபத்து: 6 பேர் உயிரிழப்பு.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு.

அப்பைய நாயக்கன்பட்டி பகுதியில் சாய்நாத் பட்டாசு ஆலையில் வெடி விபத்து, 4 அறைகள் தரைமட்டம்.

The Seithikathir®

04 Jan, 04:41


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 குறைந்து ₹57,720க்கும், ஒரு கிராம் ₹7,215க்கும் விற்பனையாகிறது.

The Seithikathir®

04 Jan, 04:38


5வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல்அவுட்.

இந்திய அணியில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

4 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை துவங்கும் இந்திய அணி, கேப்டன் பும்ரா காயம் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

The Seithikathir®

04 Jan, 03:40


சென்னையில் இருந்து டெல்லி, பெங்களூரு புறப்படும் விமானங்களின் சேவை ரத்து.

டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவையில் பாதிப்பு.

டெல்லி, பெங்களூரு உள்பட சுமார் 15க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக சென்னை வந்தன.

அந்தமான், விஜயவாடா, விசாகப்பட்டினம், ஹைதராபாத் உள்ளிட்ட விமானங்கள் வருகையில் தாமதம்.

விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி.

The Seithikathir®

04 Jan, 03:37


அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்; வைகுந்த ஏகாதேசி பெருவிழா பகல் பத்து ஐந்தாம் திருநாள்:

நம்பெருமாள் - மாந்துளிர் நிற பட்டு அணிந்து சௌரிக் கொண்டை அணிந்து: அதில் கலிங்கத்துராய்; நெற்றி சரம், சூர்ய- சூர்ய வில்லை சாற்றி, மகர கர்ண பத்திரம்; ரத்தின அபய ஹஸ்தம்- தொங்கல் பதக்கம்; ரத்தின கடி அஸ்தம் (இடது திருக்கை), திரு மார்பில் ஆபரணங்களுகே ஏற்றம் தரும் -ஸ்ரீ ரங்க விமான பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, 18 பிடி (6 வட) முத்து சரம் , காசு மாலை; அரைச் சலங்கை; பின்புறம் - புஜ கீர்த்தி ; அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம்; காசு மாலையும் தழைந்து வரும் படி சாற்றி ; கையில் தாயத்து சரங்கள்; தங்க தண்டைகள் திருவடியில் அணிந்து அணிந்து புறப்பாடு கண்டுருளினார்.

The Seithikathir®

23 Nov, 13:55


அவதூறு வீடியோக்கள், பதிவுகளை உடனடியாக நீக்குக. - ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்த எச்சரிக்கை நோட்டீஸ்.

இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், ஆஸ்கார் விருது வென்றவருமான ஏர்.ஆர். ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். இதனால் அவர்களுடைய 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இச்செய்தி ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பிரிவு தொடர்பாகப் பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில் தந்தை - தாய் பற்றி பரவி வரும் அவதூறுகள் வருத்தம் அளிப்பதாக அவர்களது 21 வயது மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டு இருந்தார்.

அதைத்தொடர்ந்து தற்பொழுது தன்னை பற்றி அவதூறு வீடியோக்களை பதிவிடுபவரை சட்டபடி தண்டிக்கப்படுவர் என அதிகார நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தன்னுடைய விவாகரத்து தொடர்பாக உண்மைக்கு புறம்பான, அவதூறான தகவல்களை கொண்ட சமூக ஊடக பதிவுகள், செய்தி கட்டுரைகள், யூடியூப் வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார். அப்படி அவதூறு பதிவுகள், வீடியோக்களை நீக்காவிட்டால் சட்டபூர்வமாக வழக்கு தொடரப்படும் என நோட்டீஸில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The Seithikathir®

23 Nov, 13:55


என் மீது வைத்த நம்பிக்கையை உறுதிசெய்வேன்: பிரியங்கா காந்தி

நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிக்க நன்றி, உங்கள் நம்பிக்கையில் நான் மூழ்கிவிட்டேன் என்று வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சுமார் 6 லட்சம் வாக்குகளுடன் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பிரியங்கா காந்தி, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

The Seithikathir®

23 Nov, 13:54


நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி.

மஹாராஷ்டிராவில் நல்லாட்சிக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது; கூட்டணி ஒற்றுமையும், வளர்ச்சியும் வெற்றி பெற்றுள்ளது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சிறப்புமிக்க வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி - பிரதமர் நரேந்திர மோடி.

ஜார்கண்ட் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற ஹேமந்த் சோரன் கூட்டணிக்கு வாழ்த்து.

ஜார்கண்டில் மக்கள் பிரச்சினைக்காக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும் - பிரதமர் நரேந்திர மோடி.

The Seithikathir®

23 Nov, 13:51


வயநாடு தொகுதியில் பிரியங்கா வெற்றி.

வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா, தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இமாலய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி 6.22 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் பெற்றுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மொகேரி 2,11,407 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். பாஜக வேட்பாளர் 1,09,939 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இதன் மூலம் 4.10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா தனது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.

The Seithikathir®

23 Nov, 13:50


மும்பையில் தமிழர் வெற்றி

மும்பையில் தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்றார் தமிழரான கேப்டன் தமிழ்ச்செல்வன்

சயான் கோலிவாடா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 7,500 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழ்ச்செல்வன் வெற்றி.

The Seithikathir®

23 Nov, 13:50


இன்ஸ்டாவில் 5.6 மில்லியன்... வாங்கிய ஓட்டுகளோ 155..!

மகாராஷ்டிரா - வெர்சோவா தொகுதியில் ஆசாத் சமாஜ் (கன்சிராம்) கட்சி சார்பில் போட்டியிட்ட இந்தி பிக் பாஸ் புகழ் அஜாஸ் கான் வெறும் 155 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி

இன்ஸ்டாகிராமில் சுமார் 5.6 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட இவர் நோட்டாவை விட குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார்.

The Seithikathir®

23 Nov, 13:38


🚨 Vilasrao Deshmukh Dynasty wiped out by BJP in Maharashtra.

His both sons Dhiraj and Amit defeated by BJP candidates.

🚨 NCP(SP) candidate Rohit Pawar who is grand nephew of Sharad Pawar defeated from Karjat Jamkhed by 300 votes by BJP candidate Ram Shinde.

📌 Maharashtra Congress President Nana Patole wins by slim margin of 500 votes from Sakoli constituency.

📌 All 7 BJP leaders who left party to join NCP(SP) defeated by NDA candidates by comfortable margin.

The Seithikathir®

23 Nov, 13:36


🚨 BJP & NDA performed 'BETTER' in Bypoll Election 🎯

BJP+ won -

UP 7/9
Assam 5/5
Bihar 4/4
CG 1/1
Gujrat 1/1
MP 1/2
Rajasthan 5/7
Uttarakhand 1/1

• Bjp get 1 extra MP from Nanded Loksabha

The Seithikathir®

23 Nov, 11:03


218 ரன்களுடன் இந்தியா முன்னிலை.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்தியாவின் இன்றைய ஆட்டம் நிறைவடைந்தது.

விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்து இந்திய அணி 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

The Seithikathir®

23 Nov, 10:58


பாஜக கூட்டணி தலைவர்கள் அவசர ஆலோசனை

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின், இல்லத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை

The Seithikathir®

23 Nov, 09:02


வயநாடு மக்களவை தொகுதியில் கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் ராகுல்காந்தி 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

தற்போது, இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையிலேயே 3.68 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தங்கை பிரியங்கா முன்னணி.

The Seithikathir®

23 Nov, 08:51


நவ.25 முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.

நவ 25ல் மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் நவ.27ல் விழுப்புரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

The Seithikathir®

23 Nov, 07:21


தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.

இது அடுத்த 2 நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

The Seithikathir®

23 Nov, 06:26


🚨 HUGE SHOCKER! Uddhav Thackeray's son Aditya Thackeray is trailing from Worli Constituency.

Milind Deora is leading by 597 votes after 5th Round 🎯

The Seithikathir®

23 Nov, 06:22


📌 HUGE! NDA in Bihar all sets to 'SWEEP' Bihar Bypoll

NDA all sets to 'SNATCH' 3 seats from Tejashwi Yadav led INDI alliance in Bihar. Poor performance from Prashant Kishore in bypoll.

Bihar (4/4): BJP 2, JDU 1, HAM 1 🎯

The Seithikathir®

23 Nov, 06:12


மகாராஷ்டிரா தேர்தல் - ஒரு மிகப்பெரிய சதி!

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் மக்களின் தீர்ப்பு அல்ல; மோடி, அமித்ஷா, அதானி இடையேயான கூட்டணி தான் வெற்றி பெற்றுள்ளது

-சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியின் சஞ்சய் ராவத் கடும் விமர்சனம்

The Seithikathir®

23 Nov, 06:11


சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2024: முன்னிலை நிலவரம்.

மகாராஷ்டிரா:

மொத்த தொகுதிகள் - 288 பெரும்பான்மைக்கு - 145

பாஜக+ 216

காங்கிரஸ்+ 59

மற்றவை 13

ஜார்க்கண்ட்: முன்னிலை நிலவரம்.

மொத்த தொகுதிகள் - 81
பெரும்பான்மைக்கு - 41

பாஜக+ 30

ஜெஎம்எம்+ 49

மற்றவை 02

கேரளா: வயநாடு இடைத் தேர்தல்- காங்கிரஸ் பிரியங்கா காந்தி முன்னிலை.

The Seithikathir®

23 Nov, 06:11


மராட்டியத்தில் மகாயுதி கூட்டணி முன்னிலை.

மராட்டியத்தில் மகாயுதி கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

மொத்தம் 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 215 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 62 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

The Seithikathir®

23 Nov, 06:10


ஜார்க்கண்ட் I.N.D.I.A கூட்டணி முன்னிலை.

ஜார்க்கண்டில் I.N.D.I.A. கூட்டணி – 52, NDA – 27, சுயேச்சை 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது.

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பார்ஹைட் தொகுதியில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் முன்னிலையில் உள்ளார்.

The Seithikathir®

23 Nov, 05:06


சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் முன்னிலை நிலவரம்

மேற்குவங்கத்தில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை.

உத்தரப் பிரதேசத்தில் 6 தொகுதிகளில் பாஜக, 2 தொகுதிகளில் சமாஜ்வாடி முன்னிலை.

கேரளாவில் ஒரு தொகுதியில் காங்கிரஸ், ஒரு தொகுதியில் சிபிஎம் முன்னிலை.

கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதிகளில் முன்னிலை.

The Seithikathir®

22 Nov, 13:57


💥 அதானி கைது வாரண்ட்டின் பின்னணி என்ன?

WATCH: https://youtu.be/fXrf1sJEQhg

The Seithikathir®

22 Nov, 13:10


67-க்கு 7 விக்கெட்டை இழந்த ஆஸி.

இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறியது
ஆஸ்திரேலியா.

முதல் நாள் முடிவில் பும்ரா 4 விக்கெட்டுகள், சிராஜ் 2 விக்கெட்டுகள் வீழ்த்த ஆஸ்திரேலியா 67 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

The Seithikathir®

22 Nov, 13:02


வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் (NIR Quota) தமிழ்நாட்டில் இந்தாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 6 பேரின் சேர்க்கை ரத்து.

போலியான சான்றிதழ் அளித்து அவர்கள் சேர்ந்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இந்த 6 இடங்களும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, வரும் 25ம் தேதி நடக்கும் சிறப்புக் கலந்தாய்வில் சேர்க்கப்படும் எனவும் தெரிவிப்பு.

6 பேர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கையில் தகவல்.

The Seithikathir®

22 Nov, 12:43


ரஜினிகாந்த் - சீமான் சந்திப்பின் போது நடந்தது என்ன?

நேற்று இரவு போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த்தின் இல்லத்தில் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திப்பு நடந்தது! உடன் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி இருந்தார்.

ஏறத்தாழ 2.15 மணி நேரம் நடந்த சந்திப்பில் சினிமா, அரசியல் என இருவரும் மனம் விட்டு பேசியுள்ளனர். தன்னை போன்றே எந்த பின்புலமும் இல்லாமல் உயர்ந்த இடத்தை நெருங்கி விட்டீர்கள் என ரஜினிகாந்த் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், முரட்டுகாளை, பாட்ஷா, வேட்டையன் படங்களின் காட்சிகள் குறித்து சீமான் சிலாகித்து பேசினார். தொடர்ந்து சினிமா துறையை சார்ந்த பலர் குறித்து சீமான் பேச பேச ரஜினிகாந்த் வியந்து கேட்டார்.

தற்போதைய அரசியல் குறித்தும், நாம் தமிழர் தனித்து போட்டியிடுவது ஏன் என்பது குறித்தும் ரஜினிகாந்த்திடம் சீமான் விளக்கினார். அதோடு நீங்கள் அரசியலுக்கு வராதது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தாகவும், இந்த சுழலில் சிக்காத காரணத்தால் உங்கள் முகத்தில் அமைதியையும் நிம்மதியையும் பார்பதாக சீமான் கூறினார்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

அரசியலில் உங்கள் வளர்ச்சி ஆச்சர்யப்படுத்துகிறது, மக்கள் உங்கள் மீது நம்பிக்கை கொள்ள துவங்கிவிட்டனர். உங்கள் மண் சார்ந்த பேச்சுக்களை நான் மிகவும் ரசித்து கேட்பேன். நீங்கள் அரசியலில் பெரிய இடத்திற்கு வரவேண்டும்! அதற்குரிய தகுதி உங்களுக்கு உள்ளது என்று சீமானை ரஜினிகாந்த் பாராட்டினார். அப்போது ரவீந்திரன் துரைசாமி உடனிருந்தார்.

பிறகு இருவர் மட்டும் தனியாக 45 நிமிடங்கள் பேசியுள்ளார்கள்.

மேற்கண்ட தகவலை இருவர் சந்திப்பில் உடனிருந்த ரவீந்திரன் துரைசாமி தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்!

The Seithikathir®

22 Nov, 11:21


2025 ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறை.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் (2025) 23 நாட்களுக்கு அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு.

ஜனவரி 14, 15, 16 ஆகிய நாட்களில் பொங்கல் விடுமுறை, அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் விடுமுறை.

அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி, விஜயதசமி ஆகியவை ஒரே நாளில் வருகின்றன.

2025ஆம் ஆண்டு அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகள் அரசு விடுமுறை நாட்கள்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

The Seithikathir®

22 Nov, 10:32


முதல் குற்றத்தில் ஈடுபடும் சிறார்களை சீர்திருத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்-உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவுரை.

செல்போன் திருட்டு வழக்கில் கைதான 19 வயது இளைஞருக்கு ஜாமின் வழங்கியது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.

ஒரு இளைஞன் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட உடன், போலீசார் வெவ்வேறு வழக்குகளில் சிக்க வைக்கப் போகிறார்கள் என்பதை புரிந்துகொண்டு தொடர்ச்சியாக குற்றங்களில் ஈடுபட முடிவு செய்கிறான்.

பின்னர் ஒரு கூட்டத்திற்கு தலைவனாகி சமூகத்திற்கே தொல்லையாக மாறிவிடுகிறான்; இதுதான் நம் நாட்டின் நடைமுறையாக உள்ளது.

முதல் முறை குற்றங்களில் ஈடுபடுவரை சீர்திருத்த சென்னையில் உள்ள ‘பாதை’ போன்ற அமைப்பு மாநிலம் முழுவதும் செயல்படுத்த வேண்டும்-நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

கைதான இளைஞர் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

8 வழக்குகள் நிலுவையில் உள்ளன என ஜாமின் வழங்க அரசுத் தரப்பு எதிர்ப்பு

எனினும், நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிபதி, மதுரை நீதித்துறை நடுவர் முன்பு ஆஜராகி தினசரி கையெழுத்திட உத்தரவு.

The Seithikathir®

22 Nov, 08:01


அண்ணா பல்கலை.யில் குத்தகை முறை ஆசிரியர்கள் நியமனம் கைவிடப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி: உண்மையை மூடி மறைக்க நிர்வாகம் முயலக் கூடாது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையான பேராசிரியர்களை தினக்கூலி/ மதிப்பூதியத்தின் அடிப்படையில் குத்தகை முறையில் மட்டும் தான் இனி நியமிக்க வேண்டும் என்று அதன் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டிருப்பதைக் கண்டித்து இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மட்டும் தான் குத்தகை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் நியமனத்தில் குத்தகை முறை கடைபிடிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

அண்ணா பல்கலைக்கழகம் அதன் தவறை திருத்திக் கொண்டதில் மகிழ்ச்சி தான். ஆனால், செய்த தவறை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கு பதிலாக மூடி மறைக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் குத்தகை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது உண்மை. அதற்கு நான் கண்டனம் தெரிவித்த பிறகு எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தான் அண்ணா பல்கலைக்கழகம் அதன் முடிவை மாற்றிக் கொண்டது.

ஆனால், நிதிக்குழு தீர்மானத்தில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் என்று மட்டும் தான் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், சுற்றறிக்கையில் தான் ஆசிரியர்கள் என்ற சொல் தவறுதலாக இடம் பெற்று விட்டது போன்றும் ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் முயன்றுள்ளது. அதுமட்டுமின்றி அதன் தவறு தெரிந்து விடக் கூடாது என்பதற்காக புதிய சுற்றறிக்கை நேற்றைய தேதியில் வெளியிடப்பட்டுள்ளது. இது அப்பட்டமான மோசடி ஆகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பழைய சுற்றறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி கண்டித்திருக்காவிட்டால், ஆசிரியர்கள் நியமனத்தில் குத்தகை முறை திணிக்கப்பட்டிருந்திருக்கும். ஆனால், குட்டு அம்பலமான பிறகு எதுவுமே நடக்காதது போன்று அண்ணா பல்கலைக்கழகம் நாடகமாடுகிறது. இது தவறு. ஓர் உயர்ந்த பல்கலைக்கழக நிர்வாகத்தில் இருப்பவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடக் கூடாது.

The Seithikathir®

22 Nov, 07:25


150 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரர் நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் அடித்தார்; ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

The Seithikathir®

22 Nov, 07:14


'தொகுப்பூதிய முறையில் பேராசிரியர்கள் நியமனம்' என்ற அறிவிப்பை திரும்ப பெற்றது அண்ணா பல்கலைக்கழகம்.

ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் மட்டுமே தினக்கூலி அல்லது தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படும் என்ற மறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

“ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும் அவுட்சோர்சி முறையில் எடுக்கக் கூடாது, முறையாக அறிவிப்பு வெளியிட்டு நிரந்தர பணியாளர்களாக எடுக்க வேண்டும்” என அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் கோரிக்கை.

The Seithikathir®

22 Nov, 07:10


The Seithikathir® pinned «🔴 அதானி சர்ச்சை தேவையில்லாத ஆனி! WATCH: https://youtu.be/fXrf1sJEQhg கைதாக வாய்ப்பில்லை! வழக்கு அப்படி... ***»

The Seithikathir®

22 Nov, 07:10


🔴 அதானி சர்ச்சை தேவையில்லாத ஆனி!

WATCH: https://youtu.be/fXrf1sJEQhg

கைதாக வாய்ப்பில்லை! வழக்கு அப்படி...

***

The Seithikathir®

22 Nov, 06:01


தமிழ்நாட்டில் 3வது பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாக உருவாகியிருக்கும் பட்டாபிராம் டைடல் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

5.57 லட்சம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஐடி வளாகத்தின் வாயிலாக 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

The Seithikathir®

22 Nov, 04:53


சென்னையில் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயர்ந்தது.

கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,225-க்கும் பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு பவுன் ரூ. 57,800-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2320 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The Seithikathir®

22 Nov, 03:30


"வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்"

அதானியுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லையென தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றம்சாட்டிய நிலையில் நெருப்பில்லாமல் புகையாது.

அதானி குழுமத்துடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஊழல் புகாரை மறைத்தாலும் உண்மை நிலை என்ன? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - தமிழக அரசுக்கு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்.

The Seithikathir®

22 Nov, 02:52


இன்றைய புத்தக மொழி
22/11/24
📚📚📚🌹📚📚📚

தேவைக்கு உதவுகிறவன்
நல்ல நண்பன்.
தேவையே இல்லாதிருப்பவன்
சிறந்த நண்பன்.

- பிராங்க்ளின் -

📚📚📚🌹📚📚📚

The Seithikathir®

22 Nov, 02:20


அமெரிக்காவுக்கு ரஷ்யா மறைமுக எச்சரிக்கை.

ரஷ்யா மீது தாக்குதல் நடத்த ஏவுகணைகளை வழங்கும் நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா மீது தாக்குதல் நடத்த தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கி உதவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையிலான போரை உலகப் போராக மேற்கத்திய நாடுகள் மாற்ற முயற்சி எனவும் குற்றச்சாட்டு.

The Seithikathir®

21 Nov, 12:04


ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொழில் ரீதியாக அல்ல, தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளது - சென்னை உயர் நீதிமன்றம்.

“தனிப்பட்ட காரணங்களுக்காக ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம்"

தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.

The Seithikathir®

21 Nov, 10:49


BREAKING: உக்ரைன் மீது சக்திவாய்ந்த ICBM ஏவுகணையை கொண்டு ரஷ்யா தாக்குதல்.

உக்ரைனின் நிப்ரோ நகரத்தை குறிவைத்து ரஷ்யா முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை கொண்டு (INTER CONTINENTAL BALLISTIC MISSILE) தாக்குதல்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி.

The Seithikathir®

21 Nov, 08:38


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25ம் தேதி தொடக்கம்.

நாளை (நவ. 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.

The Seithikathir®

21 Nov, 08:28


ஓசூரில் வழக்கறிஞர் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சாலை மறியல்.

என்.எஸ்.சி. போஸ் சாலையில் அமர்ந்து மறியல் செய்வதால் போக்குவரத்து பாதிப்பு.

The Seithikathir®

21 Nov, 07:20


டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பு.

அதானி மீது லஞ்ச புகார்கள் உள்ளபோதும் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் அவர் சுதந்திரமாக வலம் வருகிறார்.

இந்த புகாரில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக என சந்தேகங்கள் எழுந்துள்ளன.

தொழிலதிபர் கவுதம் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

தொழிலதிபர் அதானியை பிரதமர் நரேந்திர மோடி ஏன் பாதுகாக்கிறார்?

அதானி முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவை உடனே அமைக்க வேண்டும்- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

The Seithikathir®

21 Nov, 06:23


"அரியலூர் அழகேசா நீ ஆண்டது போதாதா, நாங்கள் மாண்டது போதாதா” - திமுகவின் கோஷத்தையே திமுக அரசுக்கு எதிராக திருப்பிவிட்ட அன்புமணி ராமதாஸ்!

வேலூரில் 13 வயது சிறுமி மது போதையில் இருந்த
மிருகங்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை: ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த மது போதையில் இருந்த 3 மனித மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. திராவிட மாடல் ஆட்சியில் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

இரவு நேரத்தில் இயற்கையின் அழைப்புக்காக வீட்டிற்கு அருகில் உள்ள புதர் பகுதிக்கு சென்ற சிறுமியை அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மூவர் தூக்கிச் சென்று அருகில் உள்ள கல்குவாரியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியைக் காணாமல் தேடிய அவரது தந்தை அருகில் உள்ள கல்குவாரியிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிச்சென்று காப்பாற்றியுள்ளார். இது குறித்து அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை அளிக்க புகாரை வாங்க மறுத்த காவலர்கள், இன்னொரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். அங்கும் புகார் பெற்றுக் கொள்ளப்படாத நிலையில், சிறுமியின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதற்கு பிறகு தான் முதல் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டுள்ளது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

திராவிட மாடல் ஆட்சியில் அரசு மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை, நீதிமன்றங்களில் வழக்காடும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவை அனைத்தையும் கடந்து 13 வயது சிறுமிக்கு அவர் வாழும் வீட்டுக்கு அருகிலேயே பாதுகாப்பு இல்லை என்றால் தமிழ்நாட்டில் எவ்வளவு மோசமான ஆட்சி நடைபெறுகிறது? அதை விடக் கொடுமை என்னவென்றால், இத்தகைய குற்றச்சம்பங்கள் நடக்காமல் தடுத்திருக்க வேண்டிய காவல்துறை, சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்த புகாரைக் கூட வாங்காமல் அவரது குடும்பத்தினரை அலைக்கழித்திருக்கிறது.

அனைத்துக் குற்றங்களுக்கும் மூல காரணம் மது மற்றும் போதைப்பழக்கங்கள் தான்; அதனால் அவற்றுக்கு முடிவு கட்டுங்கள் என்று தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஒருபுறம் போதையின் பாதையை தவிருங்கள் என்று கூறிக் கொண்டு இன்னொரு புறம் மது வணிகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது தான் மக்கள் நலன் காக்கும் அரசுக்கான இலக்கணமா? என்பது தெரியவில்லை. சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதுடன், மதுக்கடைகளை உடனடியாக மூடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. கூட்டுப் பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறுமியை பாதுகாப்பதற்குக் கூட திறனற்ற அரசு தொடர்ந்து பதவியில் நீடிக்க எந்தத் தகுதியும் இல்லை. தமிழக அரசுக்கு எதிராக மக்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கின்றனர். வெகு விரைவிலேயே அவர்கள் கொதித்தெழுவார்கள்.... அரியலூர் ரயில் விபத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அன்றைய ரயில்வேத் துறை அமைச்சர் அழகேசனுக்கு எதிராக திமுகவினர் முழக்கிய வாசகங்களை (அரியலூர் அழகேசா நீ ஆண்டது போதாதா, நாங்கள் மாண்டது போதாதா”) இன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் முழங்குவார்கள். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை.

The Seithikathir®

21 Nov, 06:22


மருத்துவ படிப்பு - நவ.25-ல் சிறப்பு கலந்தாய்வு.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 135 மருத்துவ இடங்களுக்கு நவ.25ஆம் தேதி சிறப்பு கலந்தாய்வு - மருத்துவக் கல்வி இயக்ககம்.

அன்னை மருத்துவ கல்லூரிக்கு 50 மருத்துவ இடங்களும், எம்ஜிஆர் மருத்துவ கல்லூரிக்கு 50 இடங்கள் கூடுதலாக ஒதுக்கி தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு.

The Seithikathir®

21 Nov, 05:05


தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் ரவி உத்தரவு.

டிசம்பர் 12ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில் நடவடிக்கை.

முந்தைய அதிமுக ஆட்சியின்போது பணம் பெற்றுக்கொண்டு உரிய கல்வித் தகுதி இல்லாத 40 பேரை பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களில் அமர்த்தியதாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

உரிய தகுதி இல்லாத அந்த 40 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளுநர் மாளிகையில் இருந்து துணைவேந்தர் திருவள்ளுவனிடம் இருமுறை விளக்கம் கேட்டதாகவும், அதற்கு முறையான பதிலை தராமல் காலம் கடத்தியதாலும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The Seithikathir®

21 Nov, 05:05


ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் ஆனந்தன், சத்யாவதி தம்பதி சிறையில் அடைப்பு.

ஆனந்தன் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவியையும் கைது செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீசார்.

The Seithikathir®

21 Nov, 04:45


தமிழகத்தில் நவ.26, 27 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை மையம்.

12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவுக்கு வாய்ப்பு என்பதால் நவ.25, 26 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (21.11.2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.

நவம்பர் மாதம் 26 மற்றும் 27ம் தேதிகளில் ஒருசில இடங்களில் மிககனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது.

நவ.25 முதல் பருவமழை வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The Seithikathir®

21 Nov, 04:42


சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானம், மோசமான வானிலையால் மதுரையில் அவசரமாக தரையிறங்கியது.

சென்னை – தூத்துக்குடி விமானத்தில் அமைச்சர் எ.வ.வேலு பயணம் செய்திருந்தார்.

விமானம் மதுரையில் தரையிறங்கியதை அடுத்து கன்னியாகுமரிக்கு காரில் புறப்பட்டுச் சென்றார் அமைச்சர் எ.வ.வேலு.

The Seithikathir®

21 Nov, 04:39


லஞ்சப் புகார் எதிரொலி - அதானி பங்குகள் விலை சரிவு.

அரசு அதிகாரிகளுக்கு ₹2,100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றம் குற்றச்சாட்டு எதிரொலி.

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்துள்ளன.

அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட், அதானி எனர்ஜி, அதானி பவர் நிறுவனங்களின் பங்குகள் விலை தலா 10 %க்கும் மேல் சரிந்து வர்த்தகம்.

The Seithikathir®

21 Nov, 04:37


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.57,160க்கு விற்பனை; கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,145க்கு விற்பனை.

The Seithikathir®

21 Nov, 02:39


இன்றைய புத்தக மொழி
21/11/24
📚📚📚🌹📚📚📚

எல்லாப் பிரச்சனைகளும்
தீர்வுகளைக் கோருவதில்லை.
சிலவற்றிற்கு சமாதானங்கள் போதும்.
இன்னும் சிலவற்றை
கேட்டாலே போதும்.

- ஈரோடு கதிர் -

📚📚📚🌹📚📚📚

The Seithikathir®

21 Nov, 02:35


மருத்துவ மாணவர் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் குறைப்பு.

மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் 2 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைப்பு.

அரசு மருத்துவமனைகளில், அரசு சாரா மருத்துவர்களாக பணி செய்யும் மருத்துவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் குறைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பட்ட மேற்படிப்பு பயில்வோர், 2 ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக பணி செய்ய வேண்டும் என விதி இருந்தது.

The Seithikathir®

21 Nov, 02:32


அதானி மீது அமெரிக்காவில் வழக்குப் பதிவு.

இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு.

சோலார் எனர்ஜி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களை அதானி லஞ்சமாக கொடுக்க சம்மதித்தார் என குற்றச்சாட்டு.

The Seithikathir®

21 Nov, 01:29


குறள் எண் : ௭௨(72)
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : அன்புடைமை

குறள் :
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.


உரை :
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும், தமக்கே உரிமை உடையதென வாழ்வர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் வாழ்வர்.

English :
Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.

தி ஆ ௨௦௫௫ நளி (கார்த்திகை -௬)
தமிழ் வாழ்க

The Seithikathir®

21 Nov, 01:21


ஹாக்கி: கோப்பையை வென்ற இந்தியா.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது.

இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது இந்திய அணி; இந்திய அணி 3ஆவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.

The Seithikathir®

20 Nov, 17:00


சிபிஎஸ்இ 10, +2 பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.4ஆம் தேதி வரையும்10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 18 ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெறுகிறது.

The Seithikathir®

11 Nov, 17:44


The Seithikathir® pinned «🔴 நம்பிக்கை மனிதர் வி.கே.டி.பாலன் காலமானார்... WATCH: https://youtu.be/oxy1TJNkqwk உழைப்பும் நம்பிக்கையும் வைத்து முன்னேறியவர்... ***»

The Seithikathir®

11 Nov, 17:44


🔴 நம்பிக்கை மனிதர் வி.கே.டி.பாலன் காலமானார்...

WATCH: https://youtu.be/oxy1TJNkqwk

உழைப்பும் நம்பிக்கையும் வைத்து முன்னேறியவர்...

***

The Seithikathir®

11 Nov, 15:51


தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு.

சுற்றுலாத்துறை மேலாண் இயக்குநராக இருந்த சமயமூர்த்தி, மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக மாற்றம்.

தேசிய சுகாதார ஆணைய திட்ட அதிகாரியாக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலாத்துறை இயக்குநராக நியமனம்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹூ, கால்நடை பராமரிப்புத்துறை செயலாளராக நியமனம்.

தொழிலாளர் துறை ஆணையராக இருந்த அதுல் ஆனந்த் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை முதன்மை செயலாளராக நியமனம்.

சமக்ரா சிக்ஷா திட்ட மாநில இயக்குநராக இருந்த ஆர்த்தி துணை முதல்வர் உதயநிதியின் துணை செயலாளராக நியமனம்-தமிழக அரசு.

The Seithikathir®

11 Nov, 15:24


விமான நிலையங்களிலும் மலிவு விலை உணவகங்கள்: மத்திய அரசு முடிவு

விமான நிலையங்களில், மலிவு விலையில் உணவு மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்வதற்கான விற்பனையகங்களை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நம் நாட்டில், விமான நிலையங்களில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் குளிர்பானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் பயணியர் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த விலை உயர்வால், விமான நிலையங்களில் சாப்பிடுவதையே பெரும்பாலான பயணியர் தவிர்க்கின்றனர்.

மத்திய அரசு முடிவு

காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம், கோல்கட்டா விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையில், ஒரு கப் டீ, 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விமான நிலையங்களில் உணவு மற்றும் குளிர்பானங்களை மலிவு விலையில் வழங்க, பொருளாதார மண்டல விற்பனையகங்களை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: விமான நிலையங்களில் மலிவு விலையில் உணவு மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்வது தொடர்பாக, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தலைமையில், சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இதன்படி, விமான நிலையங்களில் பொருளாதார மண்டல விற்பனையகங்கள் திறக்கப்பட உள்ளன. புதிதாக கட்டப்படும் விமான நிலையங்களில் இந்த விற்பனையகங்கள் முதலில் திறக்கப்படும்.

விரைவில் அமல்

மற்ற கடைகளை போல் அல்லாமல், இந்த விற்பனையகங்களில் இருக்கைகள் இருக்காது.

கவுன்டரில் பணம் செலுத்தி உணவை பெற்றுக் கொண்டு, மேஜையில் வைத்து சாப்பிட வேண்டும்.

இந்த புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வரும். அதற்கான வேலைபாடுகள் நடந்து வருகின்றன.

அதை தொடர்ந்து மற்ற விமான நிலையங்களிலும் இதுபோன்ற விற்பனையகங்கள் திறக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The Seithikathir®

11 Nov, 15:24


பூமியைப் போன்றே புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

இதுநாள் வரை பூமியின் இரட்டை சகோதரியாகக் கருதப்படும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்க ஏதுவான சூழல் நிலவுகிறதா, அங்கு தண்ணீர் உள்ளதா என்ற ரீதியில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த நிலையில், ஒரு பெரிய ஏரியே இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டது.

ஆனாலும், செவ்வாய் கிரகத்தின் மொத்த சுற்றுச்சூழலின் தன்மையை முழுமையாக ஆய்வு செய்து பார்த்தால், வெறும் தண்ணீர் மட்டும் இருந்துவிட்டால் மட்டுமே அங்கு மனித வாழ்க்கை சாத்தியப்படாது.

செவ்வாய் கிரகம் மிகவும் அதிகமான குளிர்ச்சி மற்றும் கதிர்வீச்சையும் கொண்டது என்றும், எனவே இது தொடர்பான ஆய்வுகள் இன்னும் தேவை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், மனிதர்கள் வசிப்பதற்கு பூமியை தவிர ஏற்ற வேறு கிரகம் உள்ளதா என விண்வெளி ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘நாசா’, இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. அது குறித்த புதிய கண்டுபிடிப்புகளும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

*பூமியைப் போன்ற புதிய கிரகம்.*

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

அந்த வகையில், தற்போது பூமியைப் போலவே மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையிலான மேலும் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாகவும், பூமியிலிருந்து சுமார் 4,000 ஒளி ஆண்டு தூரத்தில் இந்த கிரகம் அமைந்துள்ளதாகவும், பூமியின் எடையை இது ஒத்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த கிரகத்தை கண்டறிந்துள்ளனர்.

அதுதொடர்பான தகவல்கள், நேச்சர் அஸ்ட்ரானமி என்ற இதழில் வெளியாகி உள்ளது. சூரியனைச் சுற்றி வரும் பூமி உள்ளிட்ட கிரகங்கள் சூரியக் குடும்பத்தில் அடங்கும்.

அதேபோல், சூரிய குடும்பத்துக்கு வெளியில் உள்ளநட்சத்திரங்களை சுற்றி வரும் கிரகங்கள் அல்லது வெளிப்புற கோள்கள் (எக்ஸோபிளானட்ஸ்) என்றழைக்கப்பட்டு வருகின்றன.

*‘கெக்’ தொலைநோக்கி.*

அந்த வகையில், ஹவாயிலுள்ள ‘கெக்’ தொலைநோக்கி மூலம் இந்த கிரகம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிரகத்துக்கு ‘கேஎம்டி-2020-பிஎல்ஜி-0414’ என்று பெயர் வைத்துள்ளனர்.

சூரியனிலிருந்து பூமி இருக்கும் தூரத்தை போல 2 மடங்கு தூரத்தில் இந்த கிரகம் அமைந்துள்ளது.

*பூமியின் ஆயுள் இன்னும் எவ்வளவு ஆண்டுகள்?*

தற்போதைய நிலையில், ஒன்று முதல் எட்டு பில்லியன் ஆண்டுகள் வரை பூமியில் மனிதனால் வாழ முடியும் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.

ஒரு சிலர் ஒரு பில்லியன் ஆண்டே தாக்குப்பிடிக்க முடியும் என்று கூறுகின்றனர்.

ஆனாலும், அதிகரிக்கும் பருவநிலை மாறுபாடு, புவி வெப்பமடைதல், மாசு போன்ற பிரச்னைகளால் மழை, வெயில், பனி போன்ற சீதோஷ்ண நிலை சுழற்சி, ஒரே சீராக இல்லாமல் போய்விட்டது.

பருவம் தவறிய மழை, மழை காலத்தில் கோடை போன்ற வெப்பம் என இயற்கையின் போக்கு, ஒரு பில்லியன் ஆண்டுகளுக்காவது பூமியை விட்டு வைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இத்தகைய சூழலில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பூமியைப் போன்றகிரகம் மனிதகுலத்தின் உயிர்வாழ்வுக்கான புதிய வாசலாக இருக்கலாம் என்பதும், இந்த புதிய கிரகத்தில் மனிதகுலம் எதிர்காலத்தில் குடியேறும் நிலை வரலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

The Seithikathir®

11 Nov, 15:18


The Seithikathir® pinned «• செய்திக்கதிர் வளர்ச்சிக்கு உதவிய அன்பு உள்ளங்கள்.! • Google Pay • UPI: 9842940657 • விருப்பம் உள்ள நண்பர்கள் மாதம் ரூ.1 முதல் ரூ.100 வரை தங்களால் இயன்ற நிதியை நன்கொடையாக தாருங்கள். -------------------------------------------------- ➤ NOVEMBER 2024 01)…»

The Seithikathir®

11 Nov, 15:06


இந்தியாவில் தரம் குறைந்த உணவு பொருட்களை விற்கும் பன்னாட்டு நிறுவனங்கள்!

Nestle, PepsiCo, மற்றும் Unilever உள்ளிட்ட உணவு நிறுவனங்கள் இந்தியா போன்ற குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்வதாக ATNI அமைப்பு நடத்திய புதிய ஆய்வு தெரிவிக்கிறது

5-க்கு 3.5 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற உணவுப் பொருட்கள் ஆரோக்கியமானதாகக் கருதப்படும் வேளையில், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் வெறும் 1.8-ஆகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

The Seithikathir®

11 Nov, 15:05


இந்தியாவில் Starlink இணைய சேவை விரைவில் அறிமுகம்?

எலான் மஸ்க்கின் Starlink நிறுவனம், மத்திய அரசின் Data Localisation கொள்கை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை ஏற்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது

செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விதிகள் இறுதி செய்யப்பட்ட உடன் இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரமை ஒதுக்குவதில் Reliance Jio, Bharti Airtel, Vodafone Idea, Amazon, Starlink நிறுவனங்கள் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது

ஸ்பெக்ட்ரமை நிர்வாக ரீதியாக ஒதுக்கும் மத்திய அரசின் முடிவுக்கு Starlink ஆதரவாகவும், Reliance Jio எதிராகவும் உள்ளன

வரும் டிசம்பர் இறுதிக்குள் வெளியாகவுள்ள TRAI-இன் பரிந்துரைகளை பொறுத்து செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் எவ்வாறு ஒதுக்கப்படும் என்பதில் இறுதி முடிவு தெரியவரும் என கூறப்படுகிறது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

The Seithikathir®

11 Nov, 14:31


• செய்திக்கதிர் வளர்ச்சிக்கு உதவிய அன்பு உள்ளங்கள்.!

• Google Pay • UPI:
9842940657

• விருப்பம் உள்ள நண்பர்கள் மாதம் ரூ.1 முதல் ரூ.100 வரை தங்களால் இயன்ற நிதியை நன்கொடையாக தாருங்கள்.

--------------------------------------------------

➤ NOVEMBER 2024

01) மிதுன் பாபு ஏ
02) பாபு ஆர், மேக்னட் மீடியா டெக்னாலஜீஸ்
03) சாய் க்ருத்வி பி.வி.
04) சாய் ரிதேஷ் பி.வி.
05) டொமினிக் சாவியோ எஸ்
06) அருள்குமார் பி.கே.
07) மனோகரன் ஜி
08) சார்லஸ் சி, தாராபுரம்
09) சுரேஷ் பி
10) ஜெயக்குமார் எஸ்

11) சுடலை ஆர்
12) ஹரிகிருஷ்ணன் ஆர்
13) சரவணன் கே
14) சூர்யா ராஜன் ஆர்
15) சரவணன் ஆர்
16) சசிகுமார் சி
17) மோகன்ராஜ் ஆர்
18) காளிராஜ் எம்

நன்றி.

SUPPORT OUR JOURNALISM! WE THANK YOU FOR YOUR TRUST IN US.

UPDATED: 11-11-2024 at 09:25 PM
--------------------------------------------------

The Seithikathir®

11 Nov, 11:53


வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

அடுத்த இரண்டு தினங்களில் மேற்கு திசையில் தமிழ்நாடு இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

The Seithikathir®

11 Nov, 10:34


வாழும் சூழலுடன் நம்முடைய பால்வழி திரளில் மட்டும் 30 கோடி கோள்கள் இருக்கலாம்; நாசா விஞ்ஞானிகள் ஆச்சரியம்

பூமியை போல் வாழ்வதற்கு உகந்த சூழலுடன் 30 கோடி கோள்களை (Habitable exoplanets) பால்வழி திரள் (Milkyway galaxy) கொண்டுள்ளது என நாசா ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரிய தகவலை வெளியிட்டு உள்ளனர்.

பூமியில் உயிரினங்கள் தோன்றி, ஆட்சி அதிகாரம் செலுத்தும் அளவுக்கு மனித இனம் வளர்ந்துள்ள சூழலில் நாம் வாழும் இந்த அண்டம் தவிர்த்து வேறு வாழ்விடங்கள் உள்ளனவா? என விஞ்ஞானிகள் உலகம் ஆராய்ச்சியில் இறங்கியது.

இதில், ஹப்பிள் தொலைநோக்கி வெளியிட்ட தகவலின்படி, 10 ஆயிரம் கோடி கேலக்சி எனும் வின்மீண் திரள்கள் (அல்லது வின்மீண் பேரடைகள்) நமது அண்டத்தில் (universe) உள்ளன என தெரிய வந்துள்ளது. தொலைநோக்கி தொழில் நுட்பம் வளர்ந்த பின் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வின்மீண் பேரடைகள் ஒவ்வொன்றிலும் பல்லாயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன.

நாம் இருக்கும் வின்மீண் பேரடையான பால்வழி திரளில் பல்லாயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றில் சூரியனும் ஒன்று. நெருப்பு கோள் என கூறப்படும் சூரியன் நட்சத்திர வகையை சேர்ந்தது. நமது சூரிய குடும்பத்தில் பூமி உள்பட பிற கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. சூரியன் தவிர்த்து, பிற நட்சத்திரங்களை சுற்றி வரும் 4,500 கோள்கள் இதுவரை ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றில் உயிர்வாழ்வதற்கான பண்புகளை கொண்ட கோள்கள் குறைந்த அளவில் உள்ளன என நம்பப்படுகிறது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

நமது பூமியில் கோடிக்கணக்கான ஆச்சரியங்கள் உள்ளன. இதுதவிர, இதேபோன்ற வாழும் சூழலை கொண்ட பகுதிகள் விண்வெளியில் இருப்பது பற்றி ஆய்வு மேற்கொள்வதற்கான பணியின் ஒரு பகுதியாக கடந்த 2009ம் ஆண்டு கெப்ளர் தொலைநோக்கி விண்கலம் அனுப்பப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டில் எரிபொருள் தீர்ந்த நிலையில் தனது பணியை அது முடித்து கொண்டது.

இந்த விண்கலம் பூமிக்கு அனுப்பிய தகவல்களை அடிப்படையாக கொண்டு நடந்த ஆராய்ச்சியின் பயனாக சூரியனின் வெப்ப நிலைக்கு, 1,500 டிகிரி பாரன்ஹீட்டுக்கு சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வெப்ப நிலை கொண்ட சூரியனையொத்த நட்சத்திரங்கள் உள்ளன என தெரிய வந்துள்ளது.

அவற்றை சுற்றி மேற்பரப்பில் திரவ நீர் கொண்ட பாறைகளாலான கோள்கள் சுற்றி வருகின்றன. நமது சூரிய குடும்பத்தில் பாறாங்கற்கள், வாயுக்கள், நீர்மங்கள் போன்றவற்றை கொண்ட கோள்கள் உள்ளன. இந்த ஆய்வால், பால்வழி திரளில் வாழ்வதற்கு உகந்த சூழலுடன் 30 கோடி கோள்கள் உள்ளன என நாசா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

இந்த ஆய்வின் தலைமை விஞ்ஞானியான ஸ்டீவ் பிரைசன் கூறும்பொழுது, 100 கோடிக்கும் மேற்பட்ட கோள்கள் உள்ளன என கெப்ளர் முன்பே நமக்கு தெரிவித்து விட்டது. ஆனால், கற்கள் நிறைந்த, வாழ கூடிய தன்மை கொண்ட எண்ணற்ற கோள்களை நாம் இப்பொழுது அறிந்திருக்கிறோம்.

வாழ்வதற்கு தேவையான பல காரணிகளில் ஒன்றான நீர், கோள்களின் மேற்பரப்பில் காணப்படுவது, அதிக நம்பிக்கையை அளிக்கிறது என கூறியுள்ளார்.

கடந்த அக்டோபரில் வேறொரு ஆராய்ச்சியாளர்கள் குழு, வாழ்வியலுக்கு தேவையான சரியான சூழலை கொண்ட 24 கோள்களை கண்டுபிடித்து இருந்தனர்.

பால்வெளி (Milkyway)என்பது நம் சூரிய மண்டலத்தை உள்ளடக்கிய ஒரு விண்மீன் பேரடை (Galaxy) ஆகும்.

பால்வெளி

பால்வெளி எனும் சொல் இலத்தின் மொழிச்சொல்லான via lactea என்பதன் மொழிப்பெயர்ப்பு ஆகும்.பால் வெளியின் வட்டு வடிவ அமைப்பை அதன் உள்ளிருக்கும் புவியிலிருந்து நோக்குவதால் அது பட்டையாகத் தோற்றமளிக்கிறது. கலீலியோ கலிலி1610 ஆம் ஆண்டில் தன் தொலைநோக்கியைக் கொண்டு அந்த ஒளிர் பட்டையை தனித்தனி விண்மீன்களாகப் பிரித்து நோக்கினார். 1920ஆம் ஆண்டு வரை, பெரும்பாலான வானியலாளர்கள் பால் வழியில் அண்டத்தின் அனைத்து விண்மீன்களும் அடங்கியுள்ளதாகக் கருதி வந்தனர்.

பால்வழி என்பது 150,000 முதல் 200,000 ஒளியாண்டுகள் வரை விட்டம் கொண்ட ஒரு பட்டைச் சுருள் பேரடையாகும். இது 100–400 பில்லியன் விண்மீன்களைக் கொண்டதாக அறியப்படுகிறது. மேலும் இதில் குறைந்தபட்சம் 100 பில்லியன் கோள்கள் இருக்க வாய்ப்புள்ளது.

சூரிய மண்டலம், பால்வெளி மையத்தில் இருந்து 26,490 (± 100) ஒளியாண்டுகள் தொலைவில், வாயு மற்றும் தூசி ஆகியவற்றின் சுழல் வடிவ செறிவுகளில் ஒன்றான ஓரியன் சுருள்கையின் உள்விளிம்பில் அமைந்துள்ளது.

The Seithikathir®

11 Nov, 10:33


10-வது இந்திய சர்வதேச அறிவியல் விழா - பள்ளி மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பு

மத்திய அரசு சார்பில் 10-வது இந்திய சர்வதேச அறிவியல் விழா அசாம் மாநிலத்தில் உள்ள குவஹாத்தி ஐஐடியில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் சிந்தனையைத் தூண்டவும், அறிவியலை சாதாரண மக்களுடன் இணைந்து விஞ்ஞானிகள் கொண்டாடி மகிழவும் ஆண்டுதோறும் இந்திய சர்வதேச அறிவியல் விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவை மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகமும், மத்திய புவியியல் அமைச்சகமும் இணைந்து நடத்துகின்றன.

அந்த வகையில், 10-வது இந்திய சர்வதேச அறிவியல் விழா அசாம் மாநிலத்தில் உள்ள குவஹாத்தி ஐஐடியில் நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்கின்றனர். இதுதொடர்பாக முழு விவரங்களையும் www.iisf2024.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். பங்கேற்க தேர்வு செய்யப்படுவோருக்கு தங்கும் வசதி, உணவு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

The Seithikathir®

11 Nov, 10:24


தமிழக மீனவர்கள் மேலும் 23 பேர் கைது: இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களின் மூன்று விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. வங்கக்கடலில் கச்சத்தீவை ஒட்டிய பகுதிகளில் மீன் பிடிப்பதற்கு தமிழ்நாட்டு மீனவர்களுக்கு அனைத்து உரிமைகளும் இருக்கும் நிலையில் அவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு காரணம் அவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பது தான் என்று இலங்கை அரசின் சார்பில் கூறப்படுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதவை. தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் சூழலைப் பார்த்தாலே அதன் பின்னணியை புரிந்து கொள்ள முடியும். கடந்த 15 நாட்களில் தமிழக மீனவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

கடந்த 27-ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாகை மாவட்ட மீனவர்கள் 12 பேர் இரு நாட்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து இப்போது 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மீனவர்கள் எப்போதும் தங்கள் நாட்டு சிறைகளில் அடைபட்டு கிடக்க வேண்டும் என்று நினைக்கும் இலங்கை அரசு, அதற்கான சதித்திட்டத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்களை கைது செய்து வருகிறது.

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் கடந்த மாதம் 29-ஆம் தேதி மீனவர் பிரச்சினைக்கான இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதில் மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஆனால், கூட்டம் முடிந்து 13 நாட்களாகியும் அதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாதது வருத்தமளிக்கிறது.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், இந்திய - இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுகளை விரைந்து நடத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

The Seithikathir®

11 Nov, 06:37


உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு.

டெல்லி உச்சநீதிமன்றத்தின் 51ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சஞ்சீவ் கன்னா.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சஞ்சீவ் கன்னாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அடுத்த ஆண்டு மே 13ஆம் தேதி வரை சஞ்சீவ் கன்னா பதவி வகிப்பார்.

The Seithikathir®

11 Nov, 04:30


ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,220க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு சவரன் ரூ.57,760க்கு விற்பனையாகிறது.

The Seithikathir®

11 Nov, 04:02


ஆர்.பி.உதயகுமாரை தாக்க முயற்சி.

உசிலம்பட்டி அருகே முன்னாள் அமைச்சர்
ஆர்.பி.உதயகுமாரை தாக்க முயற்சி.

அமமுகவினர் 6 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

திருமங்கலத்துக்கு ஆதரவாளர்களுடன் ஆர்.பி.உதயகுமார் காரில் சென்று கொண்டிருந்தபோது தாக்க முயற்சி.

வாகனங்களை மறித்து நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அதிமுக நிர்வாகி அளித்த புகாரின்பேரில் வழக்கு.

The Seithikathir®

11 Nov, 03:42


சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு சூப்பர் வசதி அறிமுகம்.

Self Baggage Drop எப்படி செயல்படும்?

✈️பயணிகள் தானியங்கி இயந்திரத்தில் தங்களின் PNR எண்ணை பதிவு செய்து, போர்டிங் பாஸை பெற்றுக்கொள்ளலாம்.

✈️ பின் அந்த பாஸை மற்றொரு இயந்திரத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும்.

✈️ அதில் எந்நெத்த பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்ற விவரங்கள், தோன்றும்.

✈️ பின் அதில் OK கொடுத்து உடைமைகளின் எண்ணிக்கை குறித்து பதிவிட வேண்டும்.

✈️ அப்போது உடைமைகளின் மொத்த எடை ஸ்கிரீனில் தோன்றும். பின் உடைமைகளில் ஒட்டிக்கொள்வதற்கான Tag-கள் இயந்திரத்தில் இருந்து வெளியே வரும்.

✈️ Tag-ஐ நாமே ஒட்டி உடைமைகளை கன்வயர் பெல்டில் வைத்துவிட்டால் விமானத்தில் ஏற்றுவதற்கு கொண்டு செல்லப்படும்.

இதனால் பயணிகள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

The Seithikathir®

11 Nov, 02:48


இன்றைய புத்தக மொழி
11/11/24
📚📚📚🌹📚📚📚

இயன்றவரை
குறைவாகப் பேச வேண்டும்.
செயல்களில்
அதிகமாக ஈடுபடவேண்டும்.

- பவுரின் -

📚📚📚🌹📚📚📚

The Seithikathir®

11 Nov, 02:42


இலங்கை அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும்-இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக்க உறுதி.

போரினால் பாதிக்கப்பட்ட ஜாஃப்னா தீவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள், தங்களிடம் இருந்து பலவந்தமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்பதற்காகப் இன்றும் போராடி வருவதாக அவர் பொதுக்கூட்டத்தில் பேச்சு.

The Seithikathir®

11 Nov, 02:40


தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்.

அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகுக் கூடும்.

அதற்கடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழ்நாடு, இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

The Seithikathir®

03 Nov, 08:20


இரண்டாம் இடம் சென்றது இந்திய அணி.

உலக டெஸ்ட் சாம்பியன் போட்டி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டது.

இதுவரையில் முதலிடத்தில் இருந்து வந்து வந்த நிலையில் நியூசிலாந்து உடனான தோல்வியை தொடர்ந்து இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

புள்ளி பட்டியலில் முதல் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

The Seithikathir®

03 Nov, 08:07


கத்துக்குட்டி அணிகளை போல பேட்டிங் வரிசை அமைந்த தொடர்.

இந்திய அணியின் இந்த நியூசிலாந்து தொடரின் மிக மோசமான பேட்டி வரிசை.

The Seithikathir®

03 Nov, 08:02


24 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் ‘ஒயிட் வாஷ்’ ஆனது ரோஹித் தலைமையிலான இந்திய அணி.

நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி படுதோல்வி.

2000ல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் முதல்முறையாக ‘ஒயிட் வாஷ்’ ஆனது.

The Seithikathir®

03 Nov, 07:48


தவெக செயற்குழு கூட்டம்: 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

சென்னை பனையூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

வக்ஃபு வாரிய சட்டத்திற்கு எதிராக தீர்மானம், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம்; மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கொள்கை தீர்மானம், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பது உட்பட 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

The Seithikathir®

03 Nov, 07:05


வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் 2026-ஈபிஎஸ்

2026 சட்டமன்றத் தேர்தல், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்.

மக்களுக்கு நலம் தந்த அதிமுக அரசின் திட்டங்களை போல் இல்லாமல், தற்போது கடன் வாங்கி மகளிர் உரிமைத்தொகை, பேருந்துகளில் இலவசப் பயணம் போன்ற அறிவிப்புகளை மட்டும் செய்து வருகிறார்கள் - சேலம் வீரப்பம்பாளையத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.

The Seithikathir®

03 Nov, 06:52


‘பட்டமளிப்பு விழாக்கள் குறித்த நேரத்தில் நடந்தன’

19 அரசுப் பல்கலை.களுக்கான பட்டமளிப்பு விழாக்கள் குறித்த நேரத்தில் நடத்தப்பட்டன.

19 பட்டமளிப்பு விழாக்களிலும் ஆளுநர் பங்கேற்று பட்டம், பதக்கங்களை வழங்கினார்.

7,918 மாணவர்களுக்கு நேரிலும் 8.20 லட்சம் மாணவர்களுக்கு ஆளில்லா நிலையிலும் பட்டம்.

அக். மாத இறுதிக்குள் பட்டமளிப்பு விழாக்களை நடத்தியிருப்பது இதுவே முதல்முறை - ஆளுநர் மாளிகை

The Seithikathir®

03 Nov, 06:30


ப்ரீபெய்ட் மின்கட்டண மீட்டரை அறிமுகப்படுத்தி, மாதாந்திர கணக்கீட்டை நடைமுறைப்படுத்துங்கள்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் மின்சார பயன்பாட்டை கணக்கிடுவதற்காக ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதில் ப்ரீபெய்ட் மீட்டர் முறையையும் அறிமுகம் செய்ய வேண்டும் செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் யோசனையை ஏற்க தமிழக அரசு மறுத்திருக்கிறது. போஸ்ட் பெய்ட் மீட்டர் முறையை மட்டுமே நடைமுறைப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியிருக்கிறது. நுகர்வோர் நலனுக்கு எதிரான திமுக அரசின் இந்த நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது.

ப்ரீபெய்ட் மீட்டர் முறையை செயல்படுத்த முடியாது என்பதற்காக இரு காரணங்களை தமிழக அரசு கூறுகிறது. முதலாவது, ப்ரீபெய்ட் மீட்டர் முறையை அனைத்து நுகர்வோரும் ஏற்க மாட்டார்கள் என்பது. இரண்டாவது ப்ரீபெய்ட் மீட்டர் முறை கொண்டு வரப்பட்டால், 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்பதாகும். இந்த இரு காரணங்களுமே ஏற்றுக்கொள்ள முடியாதவை.

ப்ரீபெய்ட் மீட்டர் முறையை அறிமுகம் செய்வது தொடர்பாக பொதுமக்களிடம் விரிவான கருத்துக்கேட்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ப்ரீபெய்ட் முறையின் சாதகங்கள் எதுவும் இன்னும் மின் நுகர்வோருக்கு எடுத்துக்கூறப்படவில்லை. அதற்குள்ளாகவே ப்ரீபெய்ட் மீட்டர் முறையை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுவது தவறு. அதுமட்டுமின்றி, ப்ரீபெய்ட் மீட்டர் நடைமுறைக்கு வந்தால் இலவச மின்சாரம் வழங்க முடியாது என்பதும் தவறு. இன்றைய தொழில்நுட்பத்தில் முதல் 100 யூனிட்டுகளுக்கு சுழியக் கட்டணம் என்று மீட்டரில் பதிவு செய்வதன் மூலம் இலவச மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யலாம். அதற்கு வாய்ப்பில்லை என்றால், முதல் 100 யூனிட்டுக்கான கட்டணத்தை நுகர்வோரிடமிருந்து வசூலித்து விட்டு, அதை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி விடலாம்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ப்ரீபெய்ட் மீட்டர் முறையில் பல நன்மைகள் உள்ளன. இந்த முறையில் மின்சாரக் கட்டணம் முன்கூட்டியே செலுத்தப்பட்டு விடும் என்பதால் மின்சார வாரியத்திற்கு நிதி நெருக்கடி ஏற்படாது. அதுமட்டுமின்றி, ஒரு மாதத்தில் குறிப்பிட்ட தேதி வரை எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்தியிருக்கிறோம்; நாம் செலுத்திய பணத்திற்கு இன்னும் எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்த முடியும் என்பது நுகர்வோருக்கு தெரியும் என்பதால் அவர்கள் தேவையற்ற மின்சாரப் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள முடியும். இது நுகர்வோர், மின்சார வாரியம் ஆகிய இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும்.

2021-ஆம் ஆண்டு தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இரு மாதங்களுக்கு பதிலாக மாதம் ஒருமுறை மின்சாரப் பயன்பாட்டை கணக்கெடுக்கும் முறையை அறிமுகம் செய்வோம் என திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், அதன்பின் மூன்றரை ஆண்டுகள் ஆகியும் அந்த வாக்குறுதியை செயல்படுத்தவில்லை. அதுகுறித்து கேட்கும் போதெல்லாம், மாதந்தோறும் மின்சாரப் பயன்பாட்டை கணக்கிட போதிய பணியாளர்கள் இல்லை என்று கூறி வந்தது. ப்ரீபெய்ட் மீட்டர் முறை கொண்டு வரப்பட்டால், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கிட பணியாளர்கள் தேவையில்லை. அதனால் மாதந்தோறும் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மட்டுமே கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அதனடிப்படையில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என்பதால் ஒவ்வொரு இணைப்புக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 வரை மிச்சமாகும்.

எனவே, ப்ரீபெய்ட் மீட்டர் முறையை தமிழக அரசு எதிர்ப்பது நியாயமல்ல. போஸ்ட் பெய்ட் மீட்டர் முறை, ப்ரீபெய்ட் மீட்டர் முறை ஆகிய இரு முறைகளையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். மக்களுக்கு எது தேவையோ, அதை அவர்கள் தேர்வு செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். ப்ரீபெய்ட் மீட்டரைப் பயன்படுத்தி, மாதாந்திர மின்கணக்கீட்டையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

The Seithikathir®

03 Nov, 06:24


முன்பதிவு செய்து பயணிப்பவர்களின் எண்ணிக்கையில் புதிய உச்சத்தை தொட்டது தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை.

இன்று ஒரே நாளில் மட்டும் 75000 பயணிகள் பயணிக்க ஏதுவாக முன்பதிவு.

போக்குவரத்துத் துறை வரலாற்றில் இவ்வளவு பயணிகள் முன்பதிவு செய்து பயணிப்பது இதுதான் முதல்முறை.

கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்து பயணிக்கவும், அதற்கென தனி இணையதளம் மற்றும் அரசு செயலியை உருவாக்கி போக்குவரத்து துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The Seithikathir®

03 Nov, 06:23


அச்சுறுத்தும் காலநிலை!

WWF (World Wildlife Fund) 2024 லிவிங் பிளானட் அறிக்கை:-

1970-2020 காலகட்டத்தில் உலகின் விலங்கினங்கள் சராசரியாக 73% குறைந்துள்ளன.

நன்னீர் உயிரினங்கள் 85%, நிலவாழ் உயிரினங்கள் 69%, கடல் வாழ் உயிரினங்கள் 56% வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

இது உலகின் ஒவ்வொரு மூலையையும் பாதிக்கும் ஒரு பெரிய பிரச்சனை.

பூமி ஆபத்தான நிலையை நெருங்குகிறது, இது மனிதகுலத்திற்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

காரணங்கள்: இதற்கு மனித நடவடிக்கைகள், குறிப்பாக இயற்கை வாழ்விடங்களை அழித்தல், காலநிலை மாற்றம் போன்றவை முக்கிய காரணங்கள்.

பல்லுயிர்ச் சூழல் அழிவு: பூமியில் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கை மற்றும் வகைகள் வேகமாக குறைந்து வருகின்றன.

சுற்றுச்சூழல் சமநிலை பாதிப்பு: உயிரினங்களின் இழப்பு சுற்றுச்சூழல் சமநிலையை கடுமையாக பாதித்து, மனிதர்களின் உணவு, மருத்துவம், நீர் போன்ற அடிப்படை தேவைகளையும் பாதிக்கும்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

காலநிலை மாற்றம்: உயிரினங்களின் இழப்பு காலநிலை மாற்றத்தை மேலும் தீவிரமாக்கும்.

என்ன செய்யலாம்?

இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்: காடுகளை அழிப்பதை நிறுத்தி, புதிய காடுகளை உருவாக்க வேண்டும்.

சுத்தமான எரிசக்தி: புதைபடிவ எரிபொருட்களை குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

பசுமை நுகர்வு: சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

The Seithikathir®

03 Nov, 05:31


தவெக செயற்குழு கூட்டம்.

சென்னை பனையூரில் நடைபெறும் தவெக செயற்குழு கூட்டத்திற்கு விஜய் வருகை.

கட்சியின் உள்கட்டமைப்பு, அடுத்தக்கட்ட நகர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக தகவல்.

The Seithikathir®

03 Nov, 04:05


மதுரை, திருச்சியிலிருந்து சென்னைக்கு இன்று சிறப்பு ரயில்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக, இன்று மதுரை மற்றும் திருச்சியிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்கப்பட உள்ளன.

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சென்னையில் இருந்து பேருந்துகள், ரயில்கள் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த ஊர் சென்றனர்.

அவ்வாறு சொந்த ஊர் சென்ற மக்கள் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்புவர். அவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்கள் இரவு 7.15 மணிக்கு மதுரையிலிருந்தும், இரவு 10.50 மணிக்கு திருச்சியிலுருந்தும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

The Seithikathir®

03 Nov, 03:59


இன்றைய புத்தக மொழி
03/11/24
📚📚📚🌹📚📚📚

பிரச்சனையைச் சரியாக
புரிந்து கொண்டுவிட்டால் தீர்வு அதிலிருந்தே
கிடைத்து விடும்.
ஏனென்றால்
பிரச்சனையும் தீர்வும்
வெவ்வேறு அல்ல.

- ஜே. கிருஷ்ணமூர்த்தி -

📚📚📚🌹📚📚📚

The Seithikathir®

03 Nov, 03:38


உதகை மலை ரயில் இன்று ஒருநாள் ரத்து

மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையிலான மலை ரயில் போக்குவரத்து இன்று ஒருநாள் ரத்து

மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்ததால் தண்டவாளம் சேதம்

The Seithikathir®

03 Nov, 03:31


பிலுகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரிப்பு.

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலுகுண்டுலுவுக்கு நீர்வரத்து 6,500 கன அடியில் இருந்து 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழைபெய்து வருவதால் பிலிகுண்டுலு நீர்வரத்து அதிகரிப்பு.

The Seithikathir®

03 Nov, 01:41


குறள் எண் : ௫௪(54)
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்

குறள் :
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.


உரை :
கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால், மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?

English :
What is more excellent than a wife, if she possess the stability of chastity ?

தி ஆ ௨௦௫௫ துலை (ஐப்பசி -௧௭)
தமிழ் வாழ்க

The Seithikathir®

02 Nov, 16:05


இதுவரை இல்லாத புதிய உச்சம்; அக்டோபரில் ரூ.23.5 லட்சம் கோடி ஆன்லைன் பணப்பரிவர்த்தனை!

கடந்த அக்டோபரில் இதுவரை இல்லாத அளவிற்கு யு.பி.ஐ., மூலம் ரூ.23.5 லட்சம் கோடி மதிப்புள்ள பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது.

டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது ஒரு பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வரி செலுத்துதல், மருத்துமனைகள், கல்வி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி சில்லறை நேரடி திட்டங்களுக்கு, ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஒரே பரிவர்த்தனையில் செலுத்தலாம்.

இந்நிலையில், யு.பி.ஐ., மூலம் கடந்த அக்டோபரில், இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.23.5 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என தேசிய பணப்பரிவர்த்தனை ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, 1,658 கோடி, பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

பரிவர்த்தனைகள் எண்ணிக்கையின் அடிப்படையில், கடந்த செப்டம்பர் மாதத்தை விட 10 சதவீதம் அதிகம்.

பரிவர்த்தனைகள் மதிப்பின் அடிப்படையில் 14 சதவீதம் அதிகம் என தேசிய பணப்பரிவர்த்தனை ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

The Seithikathir®

02 Nov, 14:50


திருச்சியிலிருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு சிறப்பு முற்றிலும் முன்பதிவில்லாத ரயில் இயக்கம்

3/11/2024 ஞாயிறு இரவு 10.50 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு தஞ்சை, நீடாமங்கலம், திருவாரூர், பேரளம், மயிலாடுதுறை வழியாக தாம்பரத்திற்கு திங்கள் அதிகாலை 06.10 மணிக்கு சென்று அடைகிறது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

The Seithikathir®

01 Nov, 19:25


The Seithikathir® pinned «🔴 லாரி அடிச்சு செத்து போயிடுவ - விஜயை எச்சரித்த சீமான்! WATCH: https://youtu.be/5v8YPW7pVKM WHAT BRO... VERY WRONG BRO... விஜயை வச்சு செய்த சீமான்! ***»

The Seithikathir®

01 Nov, 19:25


🔴 லாரி அடிச்சு செத்து போயிடுவ - விஜயை எச்சரித்த சீமான்!

WATCH: https://youtu.be/5v8YPW7pVKM

WHAT BRO... VERY WRONG BRO... விஜயை வச்சு செய்த சீமான்!

***

The Seithikathir®

01 Nov, 15:38


திமுக அரசின் முடிவில் உடன்பாடில்லை: வேல்முருகன்

"தமிழ்நாடு" என்ற பெயரும், "தமிழகம்" என்ற பெயரும் பரிபாடல், புறநானூறு, அகநானூறு போன்ற சங்ககால இலக்கியங்களிலும் நிறையப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் தமிழர் இனம்; தமிழர்களின் தாயகம் தமிழ்நாடு என்ற பெயர்த் தொடர்ச்சி தமிழர்களுக்கே உரியது.

சங்கரலிங்கனார் "தமிழ்நாடு" எனப் பெயர் வைக்க வேண்டும் என்பதோடு பன்னிரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாநோன்பிருந்து 76ஆம் நாளில் உயிர் துறந்தார். இவையன்றிப் பல போராட்டங்கள் நடந்தன.

அதன் அடிப்படையில், அன்றைய முதலமைச்சர் அண்ணா 1967 சூலை 18 அன்று சட்டப்பேரவையில் "தமிழ்நாடு" பெயர் மாற்றுமாறு இந்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அனைத்துக் கட்சியினரும் ஆதரித்து அத்தீர்மானத்தை நிறைவேற்றினர்.

"தமிழ்நாடு நாள்" என்பதை ம.பொ.சி. மற்றும் தமிழ் உணர்வாளர்கள் நவம்பர் 1 என்று கடைபிடித்தார்கள். 1990களில் வெகுமக்கள் இயக்கமாக – கருத்தாக நவம்பர் 1ஐ தமிழ்நாடு நாள் என்று பரவச் செய்தது, ஐயா அருணாச்சலம் அவர்கள்.

இதற்கிடையில், சூலை 18ஆம் நாளையே தமிழ்நாடு நாள் என ஏற்க இருப்பதாகத் திமுக அரசு அறிவித்தது. ஆனால், அரசின் முடிவில், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு உடன்பாடில்லை.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ஏனென்றால், நவம்பர் 1 – தமிழ்நாடு நாள் என்றால், சங்க காலத்திலிருந்து தமிழர்கள் வாழ்ந்துவந்த தாயகம் நினைவுக்கு வரும். சங்க இலக்கியங்கள் நினைவுக்கு வரும். சேர, சோழ, பாண்டிய பேரரசர்கள் நினைவுக்கு வருவார்கள்.

தமிழ்நாட்டு எல்லைகளை மீட்கப் போராடிய போராளிகள் நினைவுக்கு வருவார்கள்; தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டம், கேரளத்தின் தேவிக்குளம் பீர்மேடு, கர்நாடகத்தின் கோலார் தங்கவயல் போன்ற பல பகுதிகளை, தெலுங்கர்கள் – மலையாளிகள் – கன்னடர்கள் பறித்துக் கொண்டது நினைவுக்கு வரும். இதன் மூலம், தமிழின உணர்ச்சி ஊறும்.

இவற்றையெல்லாம் மறைத்து மடைமாற்றத்தான் சூலை 18 என்பதாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கருதுகிறது. இது தமிழர்களிடையே நடத்தும் உளவியல் போராகவே தமிழக வாழ்வுரிமைக் கட்சி எண்ணுகிறது.

எனவே, இனம், மொழி அடிப்படையில் தமிழர்களின் தாயகம், இந்திய ஒன்றிய அரசால் சட்டப்படி வடிவமைக்கப்பட்ட நாள் 1956 நவம்பர் – 1ஆம் நாளே தமிழ்நாடு நாளாக கருத வேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு நாள் விழாவைத் தமிழ்நாடு அரசு மிக எழுச்சியாக-மக்கள் விழாவாக கொண்டாடும் வகையில் உருவாக்க வேண்டும். தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கலந்து பேசி, தமிழ் நாட்டிற்கென ஒரு கொடியை அறிவிக்க வேண்டும்.

அப்படி அறிவிக்கப்படும் கொடியைத் தமிழ்நாடு அரசு அலுவலகங்களில், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் அனைத்திலும் ஏற்றிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

-- வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி

The Seithikathir®

01 Nov, 15:37


நவம்பர் 1 தமிழ்நாடு நாள்: விஜய்

1956இல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1.

மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதைத் தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம்.

தியாகப் பெரும் பின்னணியில்
தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம்.

-- விஜய், தவெக தலைவர்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

The Seithikathir®

01 Nov, 15:37


இந்நிலையில், இதுவரை ஒன்றிய அரசால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்பதும், அதற்குத் தமிழர் இறையாண்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதும் இன்றியமையாததாகும். அதன்மூலம்
தமிழர் இறையாண்மையைப் பாதுகாக்கவும்
தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இந்நாளில் உறுதியேற்போம்!

இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

The Seithikathir®

01 Nov, 15:37


தமிழர் இறையாண்மையைப் பாதுகாக்கவும்; தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும் உறுதியேற்போம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

1956 ஆம் ஆண்டு நவம்பர் 01ஆம் நாள் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. எனவே ஆண்டுதோறும் நவம்பர் முதல் நாளை நமது அண்டை மாநில அரசுகளும் அம்மாநில மக்களும் ‘மாநிலம் உருவான நாளாக' மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இந்நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட இயலாத நிலை. ஏனெனில், நிலபரப்பு அடிப்படையில் தமிழ்நாடு புதிதாக உருவான மாநிலம் அல்ல.

தமிழ்நாட்டை மையமாகக் கொண்ட சென்னை மாகாணத்திலிருந்து மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பல பகுதிகளை நாம் அண்டை மாநிலங்களுக்கு இழக்க நேர்ந்துவிட்டது. எனவே, இந்த நாள் நமக்கு இழப்பு ஏற்பட்ட நாளாகும். எனினும் தமிழர்களின் அதிகாரப்பூர்வமான 'உரிமை நிலமாக' எல்லை வரையறைகளைப் பெற்றது. எனவே, இந்த நாளை "தமிழர் இறையாண்மை நாளாக" விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கருதுகிறது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

கடந்த 1956 ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதையொட்டி மாநிலம் உருவான பொன்விழா 2006 ஆம் ஆண்டு நடந்தது. அதற்கு முன்பாக அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சந்தித்து இனியாவது ஒவ்வொரு ஆண்டும் நாமும் நவம்பர் 01ஆம் நாளை நமது அண்டை மாநிலங்களைப் போல "மாநில நாளைக்" கடைபிடிக்கலாம் என்று கேட்டோம். “நாம் நமது நிலப்பகுதிகளை இழந்திருக்கிறோம். அதை எப்படிக் கொண்டாடுவது? அதனால் தான் அந்த நாளை எல்லைப் போராட்ட ஈகியர் நாளாக நாம் கடைப்பிடிக்கிறோம்” என்று அவர் விளக்கம் அளித்தார். அவர் கூறியது உண்மைதான் எனினும் இனிமேல் தமிழ்நாட்டிலிருந்து பறிபோன நிலப் பகுதிகளை மீட்பதற்கு வாய்ப்பில்லை; நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்போம் என்கிற அடிப்படையில் இந்நாளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘தமிழர் இறையாண்மை நாள்’ என அறிவித்து அதனைக் கடைப்பிடித்து வருகிறோம். அதாவது, ஒன்றிய அரசால் பறிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை மீட்பதற்கு உறுதி ஏற்கும் நாளே இந்தத் தமிழர் இறையாண்மை நாளாகும்.

தமக்கென அதிகாரங்களைக் கொண்ட மாநில அரசுகள், அவை சேர்ந்த ஒரு கூட்டரசுதான் இந்தியா - அதுதான் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றித்தந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் உள்ளிட்ட நம்முடைய முன்னோர்களுடைய முடிவு. ஆனால், அந்த முடிவுக்கு மாறாக இந்திய ஒன்றிய அரசுக்கென அதிகாரப்பட்டியலில் குறிப்பிடப்பட்ட அதிகாரங்களை மீறி, மாநிலப் பட்டியலில் இருக்கின்ற அதிகாரங்களில் தலையிடுகின்ற நிலை 1950 -களிலேயே துவங்கிவிட்டது.

1951ஆம் ஆண்டிலே இயற்றப்பட்ட தொழிற் சாலைகள் சட்டம், மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் 23 ஆவதாக வைக்கப்பட்டிருந்த அதிகாரங்களைக் குறைத்தது.1955ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ‘அத்தியாவசிய பண்டங்கள் சட்டம்’ மாநில அரசுகள் என்னென்ன பண்டங்களின்மீது வரிவிதிக்கலாம், அவற்றை எப்படிக் கையாளலாம் என்பதை தடுத்துச் சுருக்கியது. 1957இல் இயற்றப்பட்ட ‘கனிமவளங்கள் சட்டம்’ மாநில அரசுகளின் பொருளாதாரத் தற்சார்புக்கு வேட்டுவைத்தது.
இப்படி தொடர்ந்து மாநில உரிமைகள் குறுக்கப்பட்டதால், பறிக்கப்பட்டதால் நெருக்கடிக்கு ஆளான மாநிலக் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. அந்தக் குரல் முதலில் தமிழ் நாட்டிலிருந்துதான் எழுந்தது.

நாடு சுதந்திரம் அடைந்து பத்து ஆண்டுகள் வரை ஒன்றிய அரசை ஆண்ட கட்சியும், மாநிலங்களில் ஆண்ட கட்சியும் ஒரே கட்சியாக இருந்த காரணத்தினால் ‘மாநில உரிமைகள்’ என்கிற பிரச்சினை உட்கட்சிப் பிரச்சினையாக மட்மே முதலில் பார்க்கப்பட்டது. 1967ஆம் ஆண்டு தேர்தலில்தான் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் பல மாநிலங்களில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தன. அதன் விளைவாகத்தான் ‘மாநில சுயாட்சி’ முழக்கம் தமிழ் நாட்டிலிருந்து வீறுகொண்டு எழுந்தது .

அதுமட்டுமல்ல 1980க்குப் பிறகு ஒன்றிய அரசைக் கைப்பற்றி ஆட்சி செய்தவர்கள் பின்பற்றிய தாராளமய பொருளாதாரக் கொள்கை, அதனடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட ஒப்பந்தங்கள், அதனால் மாநில அரசுகளும், மக்களும் பாதிக்கப்பட்டார்கள். அந்த ஒப்பந்தங்களின் சுமை மாநில அரசுகளின் தலையில் விழுந்தது.

தாராளமய, தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகளும், இந்திய ஒன்றிய அரசாங்கத்தில் இருக்கின்றவர்கள் தொடர்ந்து அதிகாரங்களைத் தம்வசம் குவித்துக்கொண்ட போக்கும்; மாநில இறையாண்மை குறித்து வலியுறுத்த வேண்டியதன் தேவையை அதிகரித்துள்ளன.

ஒரே நாடு, ஒரே மதம் , ஒரே மொழி என இதுவரைப் பேசிவந்த பாஜகவினர் இப்போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனப் பேசத் தொடங்கியுள்ளனர். இந்தத் திட்டம் ஒட்டுமொத்தமாக மாநில அளவிலான அரசியல் கட்சிகளை ஒழித்துவிட்டு மாநில அரசுகளை ஒன்றிய அரசின் பிடிக்குள் கொண்டுவருவதாகும்.

The Seithikathir®

01 Nov, 15:34


தமிழரின் இனமானக் கடமை: சீமான்

தமிழ்நாடு என்கின்ற நம் உயிரினும் மேலான நமது தாயக நிலம் இந்திய ஒன்றிய அரசால் தனித்த மொழிவழி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட நாளையே தமிழ்நாடு நாளாக போற்றிக் கொண்டாடிட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் இனமானக்கடமையாகும்.

01-11-2024
இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்!

-- சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

The Seithikathir®

01 Nov, 15:34


தமிழகப் பெருமையை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்: அண்ணாமலை

நம் தமிழ் மொழிக்கான மாநிலமாக, இன்றைய எல்லைப் பகுதிகளோடு நம் மாநிலம் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தினமான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் @BJP4Tamilnadu சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மொழி வாரியாக மாநிலங்களின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, குமரி முதல் சென்னை வரை தமிழ் மொழி பேசும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பெருமை மிகுந்த தினமான இன்று, தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தும், கையாலாகாத திமுக அரசால் தனது பொலிவை இழந்து நிற்கும் தமிழகம் தன் பெருமையை மீட்டெடுக்க, உறுதியேற்போம்.

-- அண்ணாமலை, பாஜக மாநில தலைவர்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

The Seithikathir®

01 Nov, 15:33


தமிழ்நாடு நாளில், தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வளர்ச்சி மாடலை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும்!

-- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

சென்னை மாகாணம் என்ற பெயரிலான பெரு நிலப்பரப்பு 68 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் ஒன்றாம் நாளான இதே நாளில் தான் மொழிவாரி மாநிலங்கள் தத்துவத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்டது. அந்த வகையில் நவம்பர் ஒன்றாம் தேதி தான் உண்மையான தமிழ்நாடு நாள். இந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அதை நாம் சகோதர உணர்வுடன் ஏற்றுக் கொண்டோம்; நமது நிலப்பரப்பை சகோதர மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்தோம். நம்மிடமிருந்து நிலத்தை பெற்றுக் கொண்ட திராவிட மாநிலங்கள் எதுவுமே நமக்கு நீரைக் கூட தர மறுக்கின்றன. அதனால் தான் கூறுகிறேன்... மொழிவாரி மாநிலங்களால் நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம். நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க இந்த நாளில் உறுதியேற்போம்!

அரை நூற்றாண்டுக்கும் மேலாக திராவிடம் என்ற காலாவதியாகிப் போன தத்துவத்தைப் பேசி நமது உரிமைகளை இழந்து வருகிறோம். தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறோம். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தமிழ்நாடு அதன் திறனுக்குரிய வளர்ச்சியை எட்ட வேண்டும். அதற்காக வளர்ச்சி மாடல் அரசை உருவாக்க வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தவும் இந்த நாளில் நாம் உறுதி ஏற்க வேண்டும்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

The Seithikathir®

01 Nov, 15:32


தமிழ்நாட்டை விரைவில் மீட்போம்: எடப்பாடி பழனிசாமி

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தெக்கணத்திற் சிறந்த திராவிட நல்திருநாடாம் நமக்கான நற்றமிழ்நாடு கிடைத்த நாளான இந்நாளை "தமிழ்நாடு நாள்" என்று எனது தலைமையிலான அம்மாவின் அரசு அறிவித்ததை பெருமிதத்துடன் நினைவுகூர்ந்து, அனைவருக்கும் இனிய #தமிழ்நாடுநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன்,

தீயசக்தியின் விடியா ஆட்சியில் சிக்கியுள்ள நம் தமிழ்நாட்டை விரைவில் மீட்டு, பாரதியின் கூற்றைப்போல் "வான்புகழ் கொண்ட" தமிழ்நாடாக மீண்டும் மிளிரச் செய்திட உறுதியேற்போம்!

-- எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

The Seithikathir®

01 Nov, 15:32


தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1!

தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்!

-- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29*தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1!*

தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்!

-- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

The Seithikathir®

01 Nov, 14:43


அமெரிக்க அதிபர் தேர்தல் எப்படி நடக்கும்?

அமெரிக்காவில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் எந்த தேதியில் வாக்குப் பதிவு நடைபெறும்? எந்த தேதியில் புதிய அதிபர் பதவியேற்பார் என்பதும் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெறும். அதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி புதிய அதிபர் பதவியேற்பார்.

அமெரிக்காவில் மக்கள் நேரடியாக ஓட்டு போட்டு அதிபரை தேர்ந்தெடுப்பதில்லை. அதற்கு பதிலாக, அதிபரை தேர்ந்தெடுக்கக்கூடிய தேர்வுக் குழுவுக்கே வாக்களிப்பார்கள். தேர்வுக் குழுவினரே, ஓட்டு போட்டு அதிபரை தேர்வு செய்வார்கள். அந்த குழுவுக்கு எலக்டோரல் காலேஜ் (Electoral College) என்று பெயர். மக்கள் தொகையைப் பொறுத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட எலக்டோரல் காலேஜ் வாக்குகள் இருக்கும். மொத்தம் 538 வாக்குகள். இதில் 270 வாக்குகளுக்கு மேல் பெறும் வேட்பாளர் அதிபராக பதவியேற்பார்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

நாடாளுமன்றத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அதே எண்ணிக்கையிலான உறுப்பினர்களை தேர்வுக் குழுவும் கொண்டிருக்கும். தேர்வுக் குழுவுக்கும் நாடாளுமன்றத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அதிபரை தேர்ந்தெடுப்பதை பணியாகக் கொண்ட தேர்வுக் குழுவினரின் வாக்குகளைப் பெறுவதற்கு வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

யார் வெற்றி பெற வாய்ப்பு?: https://youtu.be/nH7ruxV3qfk

ஒருவகையில், வாக்காளர்கள் மாநில அளவில் கட்சிகளின் பிரதிநிதிகளைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். தேசிய அளவில் போட்டியிடும் வேட்பாளர்களை அல்ல.

மைனே மற்றும் நெப்ராஸ்கா மாநிலங்கள் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் 'வெற்றி பெற்றவர் அனைத்து வாக்குகளையும் எடுத்துக்கொள்வார்' என்ற விதி உள்ளது. அதாவது எந்த வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாக்குகளைப் பெறுகிறாரோ அவருக்கு அந்த மாநிலத்தின் அனைத்து எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் வழங்கப்படும். இதற்கு 'வின்னர் டேக்ஸ் ஆல்' என்று பெயர். அதனால்தான் 2016-ல் ஹிலாரி கிளிண்டன் தேசிய அளவில் மக்களின் வாக்குகளை அதிகம் பெற்றாலும், எலக்டோரல் காலேஜ் வாக்குகளை குறைவாக பெற்றதால் டிரம்பிடம் தோல்வியைத் தழுவினார். எனவே, தேசிய அளவில் அதிக வாக்குகளைப் பெற்றாலும் தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தேர்வுக் குழு உறுப்பினர்கள், தங்களது கட்சியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்பு கட்டாயமும் கிடையாது. அதிபர் தேர்தல் முடிந்து புதிய அதிபரை தேர்ந்தெடுத்தபின் தேர்வுக்குழு கலைக்கப்பட்டுவிடும்.

The Seithikathir®

01 Nov, 12:24


தமிழகத்தில் வரும் 7 முதல் 11 ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு-இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

நவம்பர் முதல் வாரத்தில் தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.

காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு பகுதியாக மாறி, நவம்பர் 2வது வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, 7 முதல் 11ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.

The Seithikathir®

01 Nov, 12:07


3வது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி ஆதிக்கம்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், (86/4) இந்திய அணி திணறல்.

முதல் நாள் ஆட்ட முடிவில் 149 ரன்கள் இந்தியா பின்னிலை; சுப்மன் கில் மற்றும் பண்ட் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

நியூசிலாந்து 235 ரன்களைக்கு ஆல் அவுட்; அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்கள், ஜடேஜா 5 விக்கெட்கள் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்கள் வீழ்த்தினர்.ம

The Seithikathir®

01 Nov, 09:17


"சநாதனிகளுக்காக குரல் கொடுப்பேன். மோதி ஜியோடு சேர்ந்து உழைப்பேன்" - டிரம்ப்!!

- வங்க தேசத்தில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மைனாரிட்டிகளுக்கு இழைக்கப்படும் கொடுமை தவறானது.

- என் ஆட்சியில் இதை நடக்க விட்டிருக்க மாட்டேன். பைடனும் - ஹாரீஸும் இந்துக்களின் அவல நிலையை கண்டு கொள்வதில்லை.

- அமெரிக்க ஹிந்துக்களையும் இடதுசாரி தீவிரவாதிகளிடமிருந்து காப்பேன்.

- எனது நிர்வாகத்தின் கீழ், பாரதத்துடனும் எனது நல்ல நண்பர் பிரதமர் மோதியுடனும் நல்லுறவை வலுப்படுத்துவேன்!!

> அதிபர் வாய்ப்பு யாருக்கு?: https://youtu.be/nH7ruxV3qfk

I strongly condemn the barbaric violence against Hindus, Christians, and other minorities who are getting attacked and looted by mobs in Bangladesh, which remains in a total state of chaos.

It would have never happened on my watch. Kamala and Joe have ignored Hindus across the world and in America. They have been a disaster from Israel to Ukraine to our own Southern Border, but we will Make America Strong Again and bring back Peace through Strength!

We will also protect Hindu Americans against the anti-religion agenda of the radical left. We will fight for your freedom. Under my administration, we will also strengthen our great partnership with India and my good friend, Prime Minister Modi.

Kamala Harris will destroy your small businesses with more regulations and higher taxes. By contrast, I cut taxes, cut regulations, unleashed American energy, and built the greatest economy in history. We will do it again, bigger and better than ever before—and we will Make America Great Again.

Also, Happy Diwali to All. I hope the Festival of Lights leads to the Victory of Good over Evil!

https://x.com/realDonaldTrump/status/1852033622494105832

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

The Seithikathir®

01 Nov, 06:06


கூடுதல் விலைக்கு மது விற்கப்பட்டால் சஸ்பெண்ட் - டாஸ்மாக்.

டாஸ்மாக் கடைகளில் மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் மேற்பார்வையாளர் உள்பட அனைவரும் பணியிடைநீக்கம்.

சில இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை.

The Seithikathir®

01 Nov, 06:04


திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் புதிய தலைவராக பொல்லினேனி ராஜகோபால் நாயுடுவை நியமித்து ஆந்திரப் பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோயிலுக்கு 24 அறங்காவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வாரியத்தின் உறுப்பினா்களாக ஆந்திர மாநிலத்திலிருந்து 3 எம்எல்ஏக்கள், தெலங்கானாவிலிருந்து 5 எம்எல்ஏக்கள், கா்நாடகத்திலிருந்து 3 எம்எல்ஏக்கள், தமிழகத்திலிருந்து 2 எம்எல்ஏக்கள், குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களிலிருந்து தலா ஒரு எம்எல்ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் பனபாகா லட்சுமி, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, பாரத் பயோடெக் இணை நிறுவனார் சுசித்ரா எல்லா ஆகியோரும் வாரியத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

The Seithikathir®

01 Nov, 05:43


நவ. 6இல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

சென்னை எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் நவ. 6ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது.

The Seithikathir®

01 Nov, 04:20


ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,385க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.59,080க்கு விற்பனையாகிறது.

The Seithikathir®

01 Nov, 04:10


புதுச்சேரி விடுதலை நாளை ஒட்டி காந்தி சதுக்கத்தில் நடந்த விழாவில் முதலமைச்சர் என்.ரங்கசாமி தேசியக் கொடியேற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்