விவசாய செய்திகள் @vivasayaseithigal Channel on Telegram

விவசாய செய்திகள்

@vivasayaseithigal


விவசாய செய்திகள் (Tamil)

விவசாய செய்திகள் என்பது ஒரு உணர்வுப் பேனல், செய்தி வார்த்தைகள், பொருள் மற்றும் பயிற்சி பற்றி அறிய அல்லது கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு நல்ல செய்திகள், அப்டேட்ஸ், அறிவுகள் மற்றும் அந்தரங்க அறிவித்தல்களை ஒரு இணைய உரையாடலில் வழங்குகிறது. இந்த சேனல் விவசாய தொழில் வளர்ச்சிக்கு உதவும் முக்கிய அறிவைக் கொண்டுள்ளது. இதில் உள்ள துவக்கங்கள், காரணங்கள், நன்மைகள் மற்றும் முக்கிய அறிவை பங்குகொள்கின்றன. மேலும், விவசாய செய்திகள் வேறு சேனல்கள் மற்றும் ஆவணங்களுடன் இணையத் தொடர்பு வாங்குகிறது, இது ஒரு அருமையான அனுபவம் நீங்கள் வேண்டும் பயிற்சி அல்லது பரிச்சரணத்தை கிடைக்கத் தயாராகக் கொண்டால். இந்த சேனல் ஒரு அழகான சேனல் என்பது உறுதியானது, அதன் பெயரை அழகாக்கும் செய்திகள் மற்றும் அறிவை வெளிப்பாக தெரிந்து கொள்கிறது.

விவசாய செய்திகள்

27 Jan, 01:55


நன்றி
பிரிடோ ராஜ்
நெல் பயிர் இயற்கை முறையில் வளர்ப்பதற்கான அட்டவணை  வயது : 105 லிருந்து 110 நாள் வரை

1. விதை சான்று பெற்ற தரமான விதை நெல் வாங்கலாம். பாரம்பரிய நெல் என்றால் ஏற்கனவே அறுவடை செய்ததிலிருந்து 90 நாள் ஆன தரமான விதைநெல் பயன்படுத்தவும்.

2. நெல்லை விதை நேர்த்தி செய்த பின்பு மட்டுமே நாற்றங்களில் இடலாம்.

3. நாற்றுக்களை குறைந்த நாள் வயதில்(14 லிருந்து 18 நாள்)  நடவு செய்வதால் பக்க கிளைப்புகள் மிக அதிகமான எண்ணிக்கையில் உருவாகும்.

4. நாற்றங்கால், தூர் வெடிக்கும் பருவம், பூக்கள் எடுக்கும் பருவம், கதிர் முற்றும் பருவம் போன்ற நேரங்களில் நிலத்தில் ஈரம் குறையாமல் பார்த்துக் கொள்ளவும். எந்த நேரத்திலும் நிலத்தில் வெடிப்பு விழும் அளவுக்கு காய விடக்கூடாது.
பூ எடுத்த பின்பு 2 சென்டிமீட்டர் அளவுக்கு மட்டும் பாசன நீரை தேக்கி வைக்கலாம்.

5. பின்வரும் குறிப்புகளில் உள்ள திரவங்களை முன்கூட்டியே தயாரித்து அல்லது வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

6. நடவு நிலத்தில் அடியுரமாக ஏக்கருக்கு 200 கிலோ ஊட்டமேற்றிய தொழு உரம், 200 லிட்டர் ஜீவாமிர்தம், 2 லிட்  சூடோமோனாஸ், 2 லிட் அசோஸ்பைரில்லம், 1 லிட் பாசவோ பாக்டீரியா, 1 லிட் பொட்டாஷ் பாக்டீரியா பாசனநீரில் கலந்து விட்டு பறம்பு ஓட்டி நிலத்தை சமன்படுத்த வேண்டும்.
நாற்றுக்களை  24 நாளாம் நாட்களுக்குள் நடவு போட்ட பின்னர், நிலத்தில் லேசான இறுக்கம் வந்த பின்னர் தண்ணீர் பாய்ச்சுவதால், நாற்றின் வேர்பிடிப்புதிறன் சிறப்பாக இருக்கும்.

நாற்றங்கால் பராமரிப்பு:

3 ம் நாள்
பாசன நீரில் ஜீவாமிர்தம் 100 லிட் அல்லது 200 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் மீன் அமிலம் கலந்து கொடுக்கலாம்.
10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகாவியா அல்லது ஈயம் கரைசல் கலந்து தெளிக்கலாம்.

10 வது நாள் --  மீன்அமிலம்  தரைவழி நாற்றங்காலுக்கு 2 லிட்டர் தரை வழியும் பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகாவியா தெளித்தும் கொடுக்கலாம்.

16வது நாள் -- மீன்அமிலம்  தரைவழி ஏக்கருக்கு நாற்றங்காலுக்கு 2 லிட்டர் தரைவழி மற்றும் 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி பஞ்சகவ்யம் கலந்து தெளிக்கலாம்.

நாற்றுக்களை பிடுங்கும் முந்தைய தினம் நாற்றங்காளில் 100 லிட்டர் தண்ணீருடன் 1 லிட் மீன் அமிலம் கலந்து வேர்களில் படுமாறு ஊற்றி விடலாம்.

16-18  ஆம் நாள் நடவு.

20 வது நாள் --  பஞ்சகாவியா அல்லது இ .எம் கரைசல்10 லிட்டருக்கு 200 மில்லி கலந்து தெளிக்கலாம். மாலையில் இஎம் கரைசல் அல்லது மீனமிலம் தரைவழி 3 லிட் + பாஸ்போ பாக்டீரியா 1 லிட் + டிரைக்கோ டேர்மா விரிடி 1 லிட் + 1 லிட் பேசிலோமசிஸ் கலந்து கொடுக்கலாம்.

28 வது நாள் -- ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் கலந்து தரைவழி கொடுக்கலாம்.

35 வது நாள் -- கோனோவீடர் (கோனோவீடர் வாய்ப்பு இல்லை என்றால்  ஆட்களை வைத்து கைக்களை எடுக்க வேண்டும் அல்லது காலில் மிதித்து விடலாம்) 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி வேப்ப எண்ணெய் அல்லது100 மில்லி பேசலஸ் துரிஞ்சி என்சிஸ் கலந்து தெளிக்கவும். தரை வழியாக 3 லிட்டர் மீன் அமிலம் கொடுக்கலாம்.

38 வது நாள
பஞ்சகாவியா 10 லிட்டருக்கு 200 மில்லி கலந்து தெளிக்கலாம்.

42 வது நாள் -- கோனோ வீடர் பயன்படுத்தலாம். பின்பு  ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் கலந்து தரைவழி கொடுக்கலாம்.
இ.எம் கரைசல் பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கலந்து தெளிக்கலாம்.

48 வது நாள் பத்து லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி கலந்து மூலிகை பூச்சிவிரட்டி அல்லது அக்னி அஸ்திரம் அல்லது வெள்ளை வேல மரப்பட்டை கரைசல்  தெளிக்கலாம்.

56 வது நாள் -- காலையில் பஞ்சகாவியா 10 லிட்டருக்கு 100 மில்லி கலந்து தெளிக்கலாம். மாலையில் ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் + 1 lit வாம் கலந்து தரைவழி கொடுக்கலாம்.

65 வது நாள் --
10 லிட்டருக்கு 100 மில்லி சூடோமோனஸ் தெளிப்பாக தரலாம். மாலையில் மீன் அமிலம் தரைவழி  2 லிட்டர் கொடுக்கலாம்.

70 வது நாள் --
10 லிட்டருக்கு 500 மில்லி தேமோர் கரைசல் அல்லது 200 மில்லி  இ.எம் கரைசல்+ 100 மில்லி சூடோமோனஸ் உடன் கலந்து தெளிக்கலாம்.
மீன் அமிலம் 200 லிட்டரில் 3 லிட்டர் கலந்து பாசனத்தின் வழி கொடுக்கலாம்.

78 வது நாள்
10 லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் தேமோர் கரைசல் அல்லது 200 மில்லி ஈயம் கரைசல்+ 100 மில்லி பேசிலெஸ் குறிஞ்சி என் சி எஸ் கலந்து தெளிக்கலாம்.

83 வது நாள் --  
10 லிட்டருக்கு 120 மில்லி கற்பூர கரைசல் அல்லது 100 மில்லி மெட்டாரைசியம்+100 மில்லி பேஸிலர்ஸ் குறிஞ்சி என்சிஎஸ் கலந்து தெளிக்கலாம்.
மாலையில் மீன்அமிலம்  தரைவழி ஏக்கருக்கு 2 லிட்+1 லிட்டர் மெட்டாரைசி யம் பாசனத்துடன் கொடுக்கலாம்.

88 வது நாள் --
மீன் அமிலம்  தரைவழி ஏக்கருக்கு 2 லிட். கொடுக்கலாம்.

விவசாய செய்திகள்

27 Jan, 01:55


குறிப்பு:
1. நடவு நட்ட 45 வது நாளுக்கு பின்பு சாணம் சார்ந்த இடு பொருள்களை தரைவழி கொடுப்பதை தவிர்க்கவும்.
2. மாதம் ஒரு முறை தரை வழியாக ஒரு லிட்டர் ட்ரைகோ டேர்மா விறிடி அல்லது சூடோமோனாஸ் கொடுக்கவும்.
3. 70 வது நாளிலிருந்து, பூக்கும் நேரம் முதல் மணிகள் மற்றும் நேரம் வரை கதிர் நாவாய் பூச்சி இடம் இருந்து பாதுகாக்க மிளகாய் கரைசல் தெளிக்கலாம் அல்லது மெட்டாரைசியம் என்ற திரவத்தை 10 லிட்டருக்கு 100 மில்லி கலந்து 4 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம்.

இது போன்ற திட்டமிட்ட பயிர் வளர்ப்பு நமக்கு இரசாயன விவசாயத்தின் விளைச்சலை காட்டிலும் இன் இருமடங்கு இலாபத்தையும், விளைச்சலையும் அள்ளி தரும்.

@நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

விவசாய செய்திகள்

20 Jan, 14:08


https://www.facebook.com/reel/2490216697845529?mibextid=rS40aB7S9Ucbxw6v

விவசாய செய்திகள்

03 Jan, 06:12


பயிர் காப்பீடு செய்யுங்கள்,பாதுகாப்பு கவசத்தைப் பெறுங்கள்!

விவசாய செய்திகள்

13 Dec, 16:51


https://www.facebook.com/CauveryKookuralMannKappom/videos/484137124132950/?mibextid=rS40aB7S9Ucbxw6v

விவசாய செய்திகள்

07 Dec, 15:40


இயற்கை நமக்கு கொடுக்கும் செலவில்லாத தொழில் நுட்பங்கள்

1. ஆமணக்கு வெளியடுக்கு
ஆமணக்கை பூச்சிகளின் பதிவேடு என்று கூறலாம், எந்த பூச்சி வந்தாலும் முதலில் ஆமணக்குச் செடியைதான் நாடும். இதை ஆங்கிலத்தில் TRAP CROP என்று கூறுவார்கள். ஆமணக்குச் செடிகளை வயலின் ஓரத்தில் நடலாம், எண்ணிக்கை குறைவாகவே நடவேண்டும். ஆமணக்குச் செடியை அடிக்கடி பரிசோதித்து, தீமைசெய்யும் பூச்சிகளைக் கண்டால் அப்பூச்சிகளை சேகரித்து அழித்து விட வேண்டும். அதிகமாக ஆமணக்கு நடக்கூடாது, நெருக்கமாகவும் இருக்கக்கூடாது, வயலின் நடுவிலும் நடக்கூடாது.
2. தட்டை பயிரிடுதல்
தட்டைச் செடிகளை வரப்போரங்களில் அல்லது ஊடுபயிராக நடலாம். இவை அசுவினிப் பூச்சிகள் வளர்வதற்கு ஏற்ற செடியாகும். அசுவினிப்பூச்சிகள் ஒரளவு வந்தவுடன் அசுவினியை உண்ண பொறிவண்டுகள் மற்றும் பல நன்மை செய்யும் பூச்சிகள் வருகின்றன.
3. மக்காச்சோளம்
மக்காச்சோளத்தில் இறைவிழுங்கிகள் அதிகம் தங்கியிருக்கும். இதை வரப்பைச் சுற்றியோ அல்லது ஊடுபயிராகவோ பயிர் செய்யும்போது நிறைய இறைவிழுங்கிகள் உற்பத்தி செய்யப்பட்டு அவை பயிரைத்தாக்கும் பூச்சிகளை அழிக்கிறது.
மேலும், மக்காச்சோளம் பறவைகள் உட்காருவதற்கு உதவியாக இருக்கும். பூச்சிவிழுங்கிப் பறவைகள் இதில் அமர்ந்து பயிரைத்தாக்கும் பூச்சிகளைப் பிடித்து உண்ணும்.
4. மஞ்சள் வண்ணப்பூச்செடிகள்
செண்டு மல்லி எனப்படும் துலுக்க சாமந்தியின் வேர்களில் இருந்து சுரக்கும் திரவங்கள் நூற்புழுக்களைக் கொல்லக்கூடியவை. இந்த திரவங்கள் ஒரு சதுர மீட்டர் பரப்பளவிற்கு செல்லக்கூடியவை. எனவே பயிர்களுக்கு அருகிலேயே துலுக்க சாமந்தியை நடவேண்டும்.
5. வேப்பங்கொட்டைக் கரைசல்
பாரம்பரியமாக நாம் பயன்படுத்தும் வேம்பில் 18 வகையான ஆல்கலாய்டு உள்ளது. இதில் முக்கியமானது அஸாடிராக்டின் என்ற ஆல்கால்ய்டு. இதனால் வேப்பங்கொட்டையில் எடுக்கப்படும் வேப்பெண்ணை சிறந்த இயற்கைமுறைப் பூச்சி மருந்தாகவும், நோய்களை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. வேப்பிலையில் 10 வகையான ஆல்கலாய்டுகளும், வேப்பம்பட்டையில் 8 வகையான ஆல்கலாய்டுகளும், வேப்பங்கொட்டையில் 18 வகையான ஆல்கலாய்டுகளும் உள்ளன.
கடைகளில் கிடைக்கும் வேப்பெண்ணை இரும்பு செக்கில் அரைக்கப்படுவதினால், வெப்பத்தினால் ஆல்கலாய்டுகள் சிதைந்து விடுகின்றன, இதனால் 18 வகையான ஆல்கலாய்டுகள் இருக்கவேண்டிய வேப்பெண்ணெயில் 8 வகையான ஆல்கலாய்டுகள் மட்டுமே உள்ளன.
இதனால் வேப்பெண்ணையை பயன்படுத்துவதை விட, வேப்ப முத்துக்களை சேகரித்து அதை இடித்து பயன்படுத்துவதுதான் சிறந்தது, இதனால் 18 வகையான ஆல்கலாய்டுகளும் முழுமையாகக் கிடைக்கிறது.
வேப்பங்கொட்டைக் கரைசலை பயிர்களுக்கு தெளிக்கும்போது, வேப்பங்கொட்டைக் கரைசல் பயிர்களின் மேல் படிகிறது. பூச்சிக்கட்டுப்பாடு மற்றும் நோய்க்கட்டுப்பாடு இரண்டிற்கும் வேப்பங்கொட்டைக் கரைசல் நல்ல தீர்வாக உள்ளது.
பூச்சிக்கட்டுப்பாடு
1. வேம்பின் வாசனை பூச்சிகளை விரட்டும்.
2. வேம்பின் கசப்புச் சுவையால் பூச்சிகள் பயிரை சாப்பிடாது.
3. கசப்புச் சுவையையும் மீறி உண்ணும் பூச்சிகளின் வயிறு மந்தம் அடைகிறது.
4. தொடர்ந்து உண்ணும் பொழுது பூச்சிகளுக்குப் பக்கவாதம் ஏற்பட்டு அவை இறந்துவிடுகிறது.
5. இறக்காத பூச்சிகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டு, இனப்பெருக்கம் செய்ய இயலாத நிலையை அடைகின்றன.
6. பெண் பூச்சிகளின் முட்டை உற்பத்தியும், முட்டையிடுதலும் தவிர்க்கப்படுகிறது.
நோய்க் கட்டுப்பாடு
1. பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதால் பூச்சிகளின் மூலம் பரவும் வைரஸ் நோய்களையும் கட்டுப்படுத்துகிறது.
2. வேப்பங்கொட்டைக் கரைசல் அடித்த பயிரில் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களின் ஸ்போர்கள் (விதை போன்றவை) முளைத்து வளர இயலாது.
நெல் பயிருக்கு பயிர் நட்டு 25 நாள்களில் தெளிக்கலாம், அடுத்து 7 நாட்களுக்கு ஒரு முறை தேவையைப் பொருத்து அடிக்கலாம்.
வேப்பங்கொட்டை கரைசல் செய்முறை:
ஒரு ஏக்கருக்கு தேவையான பொருள்கள்:
1. வேப்பங்கொட்டை 5 கிலோ
2. நாட்டுரகப் பூண்டு 500 கிராம்
இரண்டையும் தனித்தனியே ஆட்டுக்கல்லில் ஆட்டி பசை போல் செய்து கொள்ளவேண்டும். இதைப் பழைய பருத்தித் துணியில் கட்டி 10 லிட்டர் கோமியத்தில் ஊறவிட வேண்டும்.
வேப்பங்கொட்டையின் சாறு சிறிது சிறிதாக கரைந்து கோமியத்தில் கலக்கும், இரண்டு முதல் நான்கு நாட்களுக்குள் வேம்பின் சத்து கோமியத்துடன் ஊறிவிடும், இந்தச் சாற்றை வடிகட்டி அதனுடன் நூறு கிராம் காதி சோப்பைக் கரைத்து கரைசல் தயார்செய்ய வேண்டும்.
இக்கரைசலை 1:10 என்ற விதத்தில் தண்ணீருடன் கலந்து பயன்படுத்தலாம். மாலை மூன்று மணிக்கு மேல் தெளிப்பது நல்லது, காலையில் கரைசலை அடிக்கும்போது கரைசலில் உள்ள ஆல்கலாய்டுகள் சூரிய ஒளியினால் அழிந்து விடுகிறது. இதனால் வேப்பங்கொட்டைக் கரைசல் அடித்ததற்கான பலன் இல்லாமல் போகும்.

விவசாய செய்திகள்

07 Dec, 15:36


Photo from PONNUSAMY K

விவசாய செய்திகள்

01 Dec, 15:52


https://www.facebook.com/reel/1212972189973475/?mibextid=rS40aB7S9Ucbxw6v

விவசாய செய்திகள்

30 Nov, 17:23


மயில்: தமிழ்நாட்டில் 6 மடங்கு அதிகரித்த மயில்கள் – என்ன காரணம்? விவசாயிகளுக்கு பாதிப்பா? - BBC News தமிழ்
https://www.bbc.com/tamil/articles/ckg0mmynkjjo.amp#amp_tf=From%20%251%24s&aoh=17329847795015&csi=0&referrer=https%3A%2F%2Fwww.google.com

விவசாய செய்திகள்

25 Nov, 15:04


Photo from PONNUSAMY K

விவசாய செய்திகள்

06 Nov, 01:44


https://www.facebook.com/reel/1942182156166866?mibextid=rS40aB7S9Ucbxw6v

விவசாய செய்திகள்

14 Oct, 04:34


Photo from PONNUSAMY K

விவசாய செய்திகள்

20 Aug, 14:30


Photo from PONNUSAMY K

விவசாய செய்திகள்

12 Aug, 13:23


https://www.facebook.com/reel/425367169876065/?mibextid=rS40aB7S9Ucbxw6v

விவசாய செய்திகள்

11 Aug, 11:01


https://www.dinamani.com/india/2024/Aug/11/prime-minister-narendra-modi-release-109-high-yielding-varieties-of-crops

விவசாய செய்திகள்

11 Aug, 10:59


Photo from PONNUSAMY K

விவசாய செய்திகள்

05 Aug, 16:04


Document from PONNUSAMY K

விவசாய செய்திகள்

04 Aug, 03:24


https://newsclouds.in/news/8163/do-you-want-training-to-grow-mushrooms-

விவசாய செய்திகள்

02 Aug, 12:37


வேளாண்மை அறிவியல் நிலையம் பாப்பாரப்பட்டியில் ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டய படிப்பு இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளது 2024-25, இந்த வகுப்பு ஆனது சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடத்தப்படும் மேலும் இந்த வகுப்புக்கான கட்டணமாக ரூ.25,100 செலுத்தப்பட வேண்டும் 18 வயது பூர்த்தியான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் இந்த *ஓராண்டு* *வேளாண் இடுபொருள் பட்டிய படிப்பில்* கலந்து கொண்டு உரக்கடை சுயதொழில் ஆரம்பிக்க இந்தப் படிப்பானது உதவும், தொடர்புக்கு 9677565220 நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமோ தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்து விண்ணப்பிக்கும் முறையை தெரிந்து கொள்ளவும்

விவசாய செய்திகள்

02 Aug, 12:37


Registration Link👇🏻 https://forms.gle/a3bSNu1q1UY5oAfm6

விவசாய செய்திகள்

26 Jul, 14:55


*திரு பிரிட்டோராஜ் வேளாண் பொறியாளர் அவர்களின் இயற்கை விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை குறித்த இந்த வார பயிற்சி விபரம்*:

1. *நாள்: 27.07.2024* நேரம் : காலை 10 மணி முதல் 2 மணி வரை
இடம்:
*கொங்கு மஹால், *தலைவாசல்*
சேலம் மாவட்டம்
தொடர்புக்கு
+919965262373

2. *27.07.2024 (சனிக்கிழமை)*
மாலை: 5-7 மணி
இடம்: *தமிழ் நாடு ஹோட்டல் காவேரி அரங்கில்*
மத்திய பேருந்து நிலையம் அருகில்
*திருச்சி*
தொடர்புக்கு:
9442816863

*அனுமதி இலவசம்*

பாரம்பரிய நெல் விதைகள், இடு பொருள்கள், வேளாண் இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

விவசாய செய்திகள்

06 Jun, 06:36


Photo from PONNUSAMY K

விவசாய செய்திகள்

06 Jun, 04:04


Photo from PONNUSAMY K

விவசாய செய்திகள்

05 May, 13:47


பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம் பிள்ளையார்பட்டியில் மே மாத இலவச பயிற்சி விவரம்

14.05.2024 பினாயில் சோப்பு ஆயில் மற்றும் சோப்பு பவுடர் தயாரித்தல்

18.05.2024 தேனீ வளர்ப்பு

21.05.2024 NLM 50%மானியத்தில் ஆடு வளர்ப்பு

22.05.2024 மாம்பழம் மதிப்பு கூட்டல் பயிற்சி

23.05.2024 ஆடு, கோழி வணிக ரீதியிலான தீவனம் தயாரித்தல்

24.05.2024 பாலில் இருந்து மதிப்பு கூட்டல் பொருட்கள் தயாரித்தல்

28.05.2024 காளான் வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பயிற்சி

15.05.2024-16.05.2024 சாம்பிராணி,ஊதுபத்தி மற்றும் பூஜை பொருட்கள் தயாரித்தல் செய்முறை பயிற்சி

29.05.2024-30.05.2024 சிறு தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டல் பொருட்கள் தயாரித்தல் செய்முறை பயிற்சி

ஒருவார பயிற்சி
20.05.2024-28.05.2024 வாழை நாரில் இருந்து கலை பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டல் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி

கீழே கொடுக்கப்பட்டுள்ளதொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 9488575716
9042973060

விவசாய செய்திகள்

29 Apr, 01:36


https://www.facebook.com/100035105062680/posts/1168494790997345/?mibextid=rS40aB7S9Ucbxw6v

விவசாய செய்திகள்

28 Apr, 11:18


https://www.facebook.com/FullyNewsy/videos/737150805281779/?mibextid=rS40aB7S9Ucbxw6v

விவசாய செய்திகள்

07 Apr, 05:42


Photo from PONNUSAMY K

விவசாய செய்திகள்

07 Apr, 05:41


வேளாண்மை அறிவியல் நிலையம் காட்டுப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்
வருகின்ற
16 மற்றும் 17 ஏப்ரல் 2024 அன்று காலை 10.00 மணியளவிலிருந்து இயற்கை விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி நடைபெற உள்ளது. விருப்பமுள்ள விவசாய பெருமக்கள் , பண்ணை மகளிர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெற கீழ் காணும் எண்ணிற்கு வாட்சப் மூலமாக முன்பதிவு செய்யுமாரு கேட்டு கொள்ள படுகின்றது.

9442091883
9150272508

விவசாய செய்திகள்

27 Mar, 15:43


அன்புடையீர்
வணக்கம்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகம் புதுக்கோட்டை மண்டல ஆராய்ச்சி  மையத்தில் இறைச்சிக்கான நாட்டுகோழி குஞ்சுகள் NCB3புதிய ரகம் விற்பனைக்கு உள்ளது
மொபைல் எண் 8122536826
04322271443

விவசாய செய்திகள்

25 Mar, 09:42


DOC-20240325-WA0003