நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள் @letusthinkpositiveebooks Channel on Telegram

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

@letusthinkpositiveebooks


நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள் (Tamil)

நல்லதே நினைப்போம! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள் என்ற டெலிகிராம் சேனல் உங்களுக்கு வருகிறது. இந்த சேனல் உங்கள் உயிரை மாற்றவும், உங்கள் உயரத்தை அதிகரிக்கவும் உதவும் புத்தகங்களை கொண்டுள்ளது. letusthinkpositiveebooks என்ற பயனர் பெயருடன் இந்த சேனல் உங்களுக்கு புத்தகங்கள், மெம்ஸ், மனோகில்பி, மற்றும் பல சிறுபான்மையான உள்ளடக்கங்களை வழங்கும். புதுப்பிப்பின்களை ஏற்றுக்கொள்ள மற்றும் உங்கள் மனதை மெல்ல சம்பந்தப்படுத்த உதவுகின்றது இந்த சேனல். உங்கள் உயரத்தை அதிகரிக்க பேராசையை வெளிப்படுத்துவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தலாம். நல்லதே நினைப்போம! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள் சேனல் உங்களுக்கு பெருமை கொடுக்கப்படுகிறது.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

12 Feb, 01:56


சந்தோஷத்தின் சூட்சுமம் (தன்னம்பிக்கை கட்டுரைகள்)

18. எதையும் ஏற்றுக் கொள்

நன்றி - சபீதா ஜோசப்


“இனிக்கின்ற மாம்பழத்தில் கொட்டை இருப்பதுபோல, மணக்கின்ற ரோஜாச் செடியில் முள் இருப்பது போல, வாழ்க்கையில் துன்பம் கட்டாயம் இருக்கும். அதனை ஏற்று நடத்தும் வாழ்வுதான் உண்மையான வாழ்வு” என்கிறார் பேரறிஞர் அண்ணா.

இரவுக்குப் பின் வருவது பகல். துன்பத்திற்குப் பின் வருவது இன்பம். இன்பமும் துன்பமும் சேர்ந்தது தான் வாழ்க்கை என்பதை உணருங்கள். பணம் தேடுவது வாழ்க்கையின் முடிவா? இல்லை துன்பங்களுக்கு மாற்றம் காண்பதுதான் வாழ்க்கை.

நிகழ்காலத்தில் வாழத் தெரியாமல் வருங்காலத்தில் துன்பம், பயம், நம்பிக்கை என்னும் கயிறுகளிலே ஊசலாடுவது மனித குலத்தின் இயல்பு.

“என் வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை வாழ நேர்ந்தால், முன்பு வாழ்ந்தது போலவே வாழ்வேன். கடந்த காலத்தைப் பற்றிக் குறை கூறவோ, எதிர்காலத்தைப் பற்றி அச்சப்படவோ மாட்டேன்.” இது சிந்தனையாளர் வாழ்க்கை. காதலிப்பவர்களால் வாழ்க்கையை திறம்பட கையாள முடியும்.

நள்ளிரவு நேரம். அந்த சேவலுக்கு உடல் நலமில்லாமல் போனது. அப்போது அது தனக்குத்தானே கவலைப்பட்டுக் கொண்டு பேசிக்கொண்டது. “அய்யோ! எனக்கு திடீரென்று உடம்புக்கு முடியாமல் போய்விட்டதே. நாளைக் காலையில் என்னால் கூவ முடியாது போலிருக்கிறதே. பாவம் சூரியன் எப்படி உதிக்கும். பாவம் மனிதர்கள் எப்படி முழிப்பார்கள்” என்று கவலைப்பட்டுக் கொண்டது.

இதை ஒட்டுக் கேட்ட நட்சத்திரம் சொன்னது, “அட மடச்சேவலே! காலம் காலமாக, மக்கள் சேவல்களைக் கொன்று தின்று வருகிறார்களே. கணக்கெடுத்துப் பார், நட்சத்திரங்களைவிட பலியான சேவல்கள் அதிகமாக இருக்கும்.

ஆனால், ஒவ்வொரு நாளும் சூரியன் மட்டும் தவறாமல் உதித்து உலகிற்கு ஒளி வழங்குகிறது. மறுபடியும் மறைந்து எழுகிறது. இதைப் புரியாமல் உன்னால்தான் சூரியன் உதிப்பதாக சொல்கிறாயே” என்றது.

பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்றதாம். அப்படித்தான் சேவலும் நினைத்தது. ஒன்றுக்கும் உதவாத திறமை கொண்ட அற்பர்கள். இப்படித்தான் சிந்திப்பார்கள் என்கிறது ஒரு சீனக்கதை.

ஒரு மங்கோலியனிடம் ஒரு குதிரை இருந்தது. அது ஒருநாள் மலைக்காட்டுப் பக்கம் ஓடிவிட்டது. இதைக் கேள்விப்பட்ட பக்கத்து வீட்டுக்காரன் அனுதாபப்பட்டு சொன்னான்.

“இது உனக்கு போதாத காலம் போலிருக்கிறது” என்று.

அதைக் கேட்டு கலங்காத மங்கோலியன் சொன்னான். “விடு! எல்லாம் நன்மைக்கே”

சிலநாட்கள் சென்றதும் ஓடிப்போன குதிரை திரும்ப வந்தது. அது தனியாக வராமல் கூடவே காட்டிலிருந்து ஐந்து குதிரைகளையும் அழைத்து வந்திருந்தது. அன்று முதல் மங்கோலியன் ஆறு குதிரைகளுக்குச் சொந்தக்காரன் ஆனான். இதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன் வந்து சொன்னான். உனக்கு அதிர்ஷ்டம் அடிக்க ஆரம்பித்துவிட்டது என்று இதைக் கேட்டு மங்கோலியன் சந்தோஷமாய் சொன்னான். “எல்லாம் நன்மைக்கே”.

மறுநாள் காட்டுக் குதிரை ஒன்றின்மேல் மங்கோலியனின் மகன் சவாரி செய்ய ஏறினான். குதிரை அவனை கீழே தள்ளி விட்டது. கீழே விழுந்தவன் கால் உடைந்து படுத்த படுக்கையானான். அப்போது பக்கத்து வீட்டுக்காரன் வந்து அனுதாபத்துடன் கூறினான். உனக்கு கெட்ட நேரம் வந்துவிட்டது என்று. அதைக் கேட்டு கலங்காமல் மங்கோலியன் சொன்னான். ‘எல்லாம் நன்மைக்கே’ என்று புன்னகைத்தான்.

இதைக் கேட்டதும் அண்டை வீட்டுக்காரனுக்கு எரிச்சலானது. “எதற்கெடுத்தாலும் எல்லாம் நன்மைக்கே என்கிறாயே, கால் உடைந்து உன் மகன் கிடப்பது உனக்கு நன்மையா? இது ஒரு கெடுதல் என்று உனக்குத் தெரியவில்லை?” என்று கத்தினான். அதற்கும் அமைதியாக மங்கோலியன் ‘எல்லாம் நன்மைக்கே’ என்றான்.

சில நாட்கள் கடந்த நிலையில் அந்த நாட்டு அரசன், தனது படைக்கு ஆள் திரட்டுவதற்காக அந்த கிராமத்துக்கு வந்தான். இளைஞர்களையும், பையன்களையும் பட்டாளத்தில் சேர்ப்பதற்காக வலுக்கட்டாயமாக பிடித்துப் போனார்கள்.

அந்த கிராமத்தில் எல்லா வாலிபர்களும் இழுத்துச் செல்லப்பட மங்கோலியன் மகன் மட்டும் வீட்டில் இருந்தான். அதாவது கால் உடைந்து கிடந்ததால் அரசன் அவனை படைக்கு லாயக்கற்றவன் என்று விட்டு விட்டான். அப்போது பக்கத்து வீட்டுக்காரன் வந்து கேட்டான், இதுதான் எல்லாம் நன்மைக்கா!”

எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தால் கலக்கம் குழப்பம் வராது. நல்லது கெட்டது இரண்டையும் ஏற்றுக் கொள்ளும்போது சந்தோஷமே.

எல்லா பண்புகளும் ஒருவரிடமே குடியிருக்கும் என்று சொல்லமுடியாது. நல்ல பண்புகளை வளர்த்துக் கொண்டு வாழும்போது சந்தோஷமே மிஞ்சும்.

தொடரும்...

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

12 Feb, 01:56


நிகழ்காலத்தில் வாழத் தெரியாமல் வருங்காலத்தில் துன்பம், பயம், நம்பிக்கை என்னும் கயிறுகளிலே ஊசலாடுவது மனித குலத்தின் இயல்பு.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

06 Feb, 02:35


சந்தோஷத்தின் சூட்சுமம் (தன்னம்பிக்கை கட்டுரைகள்)

17. சந்தோஷமாக இருக்கும்போது வாக்கு கொடுக்காதீர்கள்

நன்றி - சபீதா ஜோசப்


முயற்சி இல்லாத அறிவாளி, பணம் இல்லாத காதலனைப் போன்றவன். அறிவில்லாத பயணி சிறகு இல்லாத பறவையைப் போன்றவன். கல்வி கற்கும் அனுபவமில்லாதவன் கனி தராத மரத்தைப் போன்றவன். எதையும் சந்தோஷமாய் மேற்கொள்ளாதவன் ஜன்னல் இல்லாத வீட்டைப் போன்றவன். தனி மனித ஒழுக்கமில்லாதவன் கடல் கொள்ளையனைப் போன்றவன். இதில் நீங்கள் எந்த ரகம்...?

ஒரு ஆடு தன்னுடைய குட்டிகளை ஒரு கொட்டியில் அடைத்துவிட்டு இரை தேடப் புறப்பட்டது. புறப்படும் முன் குட்டிகளிடம் “பிள்ளைகளே! நான் சென்று வரும்வரை நீங்கள் யாரையும் உள்ளே வர அனுமதிக்கக்கூடாது. நான் வந்து சத்தம் கொடுத்தால்தான் நீங்கள் கதவைத் திறக்க வேண்டும்” என எச்சரிக்கை செய்துவிட்டுச் சென்றது.

இதைப் பக்கத்தில் மறைந்து நின்று ஒட்டுக்கேட்ட ஒரு ஓநாய், ஆடு சென்றதும் மெதுவாக கொட்டின் முன்னால் போய் நின்றது. தன் குரலை ஆடுபோல மாற்றிக்கொண்டு, “பிள்ளைகளே உங்கள் அம்மா வந்திருக்கிறேன். கதவைத் திறவுங்கள்” என்றது ஓநாய். ஆட்டுக்குட்டிகள் கதவுத் துளையின் வழியாகப் பார்த்தன. பின்பு, “உன் குரல்தான் எங்கள் அம்மா மாதிரி உள்ளது. ஆனால் உனது கால்கள் ஓநாயினுடையதைப் போல் உள்ளது. அதனால் கதவைக் திறக்க முடியாது” என்றன.

தாய் சொல்லைத் தட்டாததால் அந்த ஆட்டுக் குட்டிகள் தப்பின. ஆனால் இன்றைக்கு பல பிள்ளைகள் தவறான வழிக்கு செல்லக் காரணம் சொல்பேச்சு கேளாமை.

சந்தோஷமாக இருக்கும்போது வாக்கு கொடுப்பதும், கோபமாக இருக்கும்போது வாக்கு மீறுவதும், சோகமாக இருக்கும்போது வாக்குத் தவறுவதும் உங்கள் மேல் நம்பிக்கை இன்மையை ஏற்படுத்திவிடும். எனவே எதையும் யோசித்துச் செய்யுங்கள்.

வாக்குக் கொடுப்பதில் கவனமாக இருங்கள். அப்படிக் கொடுத்தபின் அதை முடிந்தவரை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். அப்படிச் செய்யவில்லையென்றால், அடுத்த முறை நீங்கள் யார்மீது சத்தியம் செய்து வாக்குக் கொடுத்தாலும் அதற்கு மக்களிடம் மதிப்பு இருக்காது.

லுக்மான் ஹக்கீமிடம் ஒரு மனிதன் வந்துகேட்டான். “தாங்கள் யாரைக் கண்டாலும் மரியாதை செய்கிறீர்களே, இதை யாரிடம் இருந்து கற்றுக் கொண்டீர்கள்?” என்று.

“யாரைக் கண்டாலும் மரியாதை செய்யாத முட்டாள்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன்” என்றார். “அதெப்படி....” வந்தவன் புரியாமல் கேட்டான்.

“அந்த முட்டாள்கள் செய்யும் அவமரியாதைகளைத் தெரிந்துகொண்டு அவைகளை மட்டும் விட்டு விட்டேன்” என்றார் லுக்மான்.

‘மரியாதையுள்ளவனுக்கு புத்தி சொன்னால் ஏற்றுக்கொள்வான். முட்டாளுக்கு, மரியாதை தெரியாதவனுக்கு என்ன சொன்னாலும் கேட்கமாட்டான்’ என்கிறார் சிந்தனையாளர் சாஆதி.

ஒரு அம்மா கடைக்குப் புறப்பட்டாள். அப்போது தானும் கூட வருவதாக மகன் அடம்பிடித்தான். “அதெல்லாம் வேண்டாம் நீ நல்ல பிள்ளையாய் வீட்டிலேயே இரு. நான் திரும்பி வந்ததும் உனக்கு கோழிக்கறி சமைத்துத் தருவேன்” என்றாள். சிறுவனும் அமைதியானான்.

கடைக்குச் சென்று திரும்பி வந்தாள் அந்த அம்மாள். கோழியைப் பிடித்து வந்தான் அவள் கணவன். “உங்களுக்கென்ன பைத்தியமா சும்மா போங்க” என்றாள். கடைக்குப் போகுமுன் அவள் வாக்குக் கொடுத்ததை நினைவுபடுத்தினான் அவள் கணவன். “அதுவா, சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னது” என்றாள்.

“அதெப்படி, குழந்தையை இப்படி ஏமாற்றுவது..? குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது. பெற்றோர் பேசுவதை, செய்வதை குழந்தைகள் கவனிக்கிறார்கள். நீ அவனை ஏமாற்றும்போது அவனுக்கு பொய் சொல்ல பழக்கி வைக்கிறாய், ஏமாற்ற கற்றுக்கொடுக்கிறாய். எனவே சொன்னதைச் செய். அல்லது சொல்லாதே, பொய்யாக ஆசையூட்டாதே என்றான் அவள் கணவன்.

நம்முடைய குழந்தைதானே என்று பொய் வாக்குறுதி கொடுப்பதும் அதை மீறுவதும் அவர்களுக்கு அதை பழக்குவிப்பது போலாகும்.

குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருப்பவர்கள் அவர்களின் அப்பா, அம்மாதான். இதை நினைவில் வைத்து பெற்றோர் தங்கள் பிள்ளைகள்முன் நடந்து கொள்வது நல்லது. நல்ல பிள்ளைகளை உருவாக்குகிறவர்கள் எதிர்காலத்தில் சந்தோஷமாக இருப்பார்கள். அப்படி இல்லையென்றால் சங்கடம்தான் மிஞ்சும்.

“கவலைப்படாதே“ என்பது சிறந்த ஆறுதல்தான். ஆனால் அதைவிட மிகச் சிறந்த ஆறுதல். “எது வந்தாலும் நான் உன்னோடு இருப்பேன்” என்பதுதான். “கண்ணீர் இருக்கும் இடத்தில் யார் புன்னகையை வர வைக்கிறாரோ அவரே கடவுள் மாதிரி” என்கிறார் முகநூல் தோழி ராதாஸ்ரீ!

தொடரும்...

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

06 Feb, 02:34


குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருப்பவர்கள் அவர்களின் அப்பா, அம்மாதான். இதை நினைவில் வைத்து பெற்றோர் தங்கள் பிள்ளைகள்முன் நடந்து கொள்வது நல்லது. நல்ல பிள்ளைகளை உருவாக்குகிறவர்கள் எதிர்காலத்தில் சந்தோஷமாக இருப்பார்கள். அப்படி இல்லையென்றால் சங்கடம்தான் மிஞ்சும்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

31 Jan, 02:02


ஆக கசப்பு மதுவில் இல்லை. அவருடைய மனதில் அவருடைய எண்ணத்தில்தான் இருந்தது. இந்த எண்ணம் அவருக்குள் உருவாகக் காரணம் மூத்தவன் ஒஸ்தியாகவும், இளையவன் கேவலமாகவும் அவருக்குள் நுழைந்ததே. இரண்டு மகன்களையும் ஒரே பார்வையில் பார்த்திருந்தால் அவருக்கு மூத்த மகனின் மது இனிப்பாகவும் இளைய மகனின் மது கசப்பாகவும் தெரிந்திருக்காது.

அன்பு இல்லாவிட்டால் மனித வாழக்கை ஒளி இழந்து இருண்டுவிடும்.

“நான் நம்பி எடுத்த படம் 90 சதவீதம் தோற்றதே இல்லை. வெற்றி வரும்போதே தன்னம்பிக்கையும் வரும். நாம் சிரித்து, நாம் அழுது எடுத்த படங்கள் அனைத்தும் நிச்சயம் வெற்றி பெறும். வாழ்க்கையும் இப்படித்தான். நம்பிக்கை இருந்தால் ஜெயித்து விடலாம்” என்பது கமல்ஹாசனின் வாக்கு. ஆக வெற்றி சந்தோஷம் தருகின்றது. வெற்றி வாழ்வில் ஆர்வம் கொள்ள வைக்கின்றது.

தொடரும்...

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

31 Jan, 02:02


சந்தோஷத்தின் சூட்சுமம் (தன்னம்பிக்கை கட்டுரைகள்)

16. நம்பிக்கை இருந்தால் ஜெயிக்கலாம்

நன்றி - சபீதா ஜோசப்


“பணம் ஜாஸ்தி இருந்தாலும்கூட சினிமாவில் சுயமரியாதையுடன் இருப்பது கஷ்டம். எல்லா மனிதர்களுக்கும் நல்ல காலமும் வரும். கெட்ட காலமும் வரும். எதுவும் நிரந்தரம் இல்லை. ரஜினி அனுபவ வாக்கு இது. எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவசியம் என்பதை சூப்பர் ஸ்டாரின் உட்கருத்து.

காளையை எதிர்த்து அடக்குவதற்கு ஒரு இளைஞன் முன்வந்தான். காளைக்கு ஆத்திரம் பொங்கியது. கண்கள் சிவக்க, இளைஞனைக் கடுமையாகத் தாக்கித் தள்ளியது. இளைஞன் எதிர்க்கொண்டு தாக்குதலைச் சமாளித்தான். ஆனாலும் அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. காளையை வெல்வது ரொம்ப சிரமம் என்று முடிவுக்கு வந்திருந்தான்.

இவனை தூக்கிக் கடாசினால் வெற்றி தனக்குத்தான் என்று உணர்ந்த காளை, இறுமாப்புக் கொண்டது. இறுமாப்பு வந்ததும் அதன் செயலில் அலட்சியம் வந்துவிட்டது. அலட்சியமாக இளைஞனைத் தாக்கித் தள்ள முனைந்தது. காளை தலையை திருப்புவதற்குள், கத்தியை அதன் கழுத்தில் அவன் குத்தினான். காளை எதிர்பாராத தாக்குதலால் தடுமாறி தரையில் விழுந்தது.

காளையை வீழ்த்திய வெற்றிக் களிப்பில் பார்வையாளர்களைப் பார்த்து, கைகளை ஆட்டினான் உற்சாகமாக. அப்போது திடீரென்று கொம்பால் அவனைப் பின்னாலிருந்து தாக்கியது காளை. இளைஞன் தரையில் சரிந்தான்.

“அவமானம், கோழை மாதிரி, பின்னாலிருந்து தாக்கிவிட்டாயே” என்று குறைசொல்லி ஏசினான்.

“ஆமாம்! அவமானம்தான், எனக்கு மட்டுமா உனக்கும் அவமானம்தான். நான் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தபோது, அதை நீ சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாய், அதையேதான் இப்போது நான் செய்தேன்,” என்று காளை வாதிட்டது.

வீரத்துக்குப் பதிலாக அவமானம் விளைந்ததற்கு யார் காரணம்..? தோல்வியை சகித்துக் கொள்ளாமை தானே...

“மானமும் அவமானமும் எந்த ஒரு குறிப்பான காரியத்திலிருந்தும் விளைவதில்லை. உன் வாழ்க்கையை ஒழுங்காக வாழக் கற்றுக்கொள். உனக்கு மரியாதை தவிர வேறு எதுவும் வந்து சேராது” என்கிறார் போப்.

புறவாசல் வழியாக நுழைந்து பெறுகிற வெற்றி சந்தோஷத்தைத் தராது. அதனால் விளைவது சங்கடமே.

“மனித வாழ்வில் இரு துன்ப நிலைகள் சகஜமாகிவிட்டன. ஒன்று நீங்கள் விரும்பியது கிடைக்காததால் ஏற்படும் துன்பம். மற்றொன்று விரும்பியது கிடைத்ததால் ஏற்படும் துன்பம்” என்பார் பெர்னாட்ஷா.

“ஒன்றை அற்பமாக எண்ணுவதோ, வெறுப்பதோ, தவறாகக் கருதுவதோ ஒரு மனிதனின் தன்மையை உயர்த்துவதில்லை. அவன் உயர்வாக மதிப்பவை போற்றுகின்றவை, அன்பு வைக்கின்றவை ஆகியவை தான் அவன் மதிப்பை உயர்த்தும்“ என்பார் ஜான்ரஸ்கின்.

எதையும் யாரையும் அற்பமாக எண்ணுவதோ பேசுவதோ கூடாது. நேற்று நீங்கள் அற்பமாய் பார்த்தவர் இன்று உயர்ந்து நிற்கலாம் என்பதைத் தாண்டி, வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். அதை நிதானமாக கையாளப் பழகிக் கொண்டாலே எல்லோருக்கும் நண்பனாய் தெரிவோம்.

உயர்ந்த சிகரங்களின்மேல் மனிதன் ஏறிவிட முடியும். ஆனால் அந்த சிகரங்கள்மேல் அவனால் வாழ்ந்துவிட முடியாது. பாதையில் மேடு பள்ளம், கரடுமுரடு வருவதுபோல வாழ்க்கையில் இன்பம், துன்பம், சந்தோஷம், சங்கடம் வந்து போக வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையின் இனிப்பும், கசப்பும் தெரியும். இனிப்பையே சுவைத்துக் கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் அதுவும் சலித்துவிடும். கசப்பும், புளிப்பும் என எல்லா சுவைகளையும் ரசித்து, சுவைத்துப் பழகியவருக்கு எல்லாம் ஒரே மாதிரியாக தெரியும். அதுதான் பக்குவ மனசு.

அந்த மனிதருக்கு இரண்டு மகன்கள். அவர்களில் மூத்தவன் நன்றாகப் படித்து, திறமைசாலி என பெயர் பெற்று நல்ல வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதித்தான். இளையமகனோ படிப்பில் அதிக கவனம் கொள்ளாமல் திரிந்ததால், அவனால் படித்து அரசுப் பணியில் சேரமுடியவில்லை. கிடைத்த வேலையைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டினான்.

தந்தைக்குப் பிறந்த நாள் வந்தது. அப்போது மூத்த மகன் ஒரு கோப்பை மதுவைக் கொடுத்தான். அதை வாங்கிப் பருகியவர் “மிகவும் பிரமாதமாக இருக்கிறது” என்றார். அடுத்து இளைய மகனின் மனைவி அவருக்கு ஒரு கோப்பை மதுவைக் கொடுத்தாள். அதை அருந்தியதும் அவர் முகம் மாறியது. “என்ன கருமம் இப்படிக் கசக்கிறதே...? என்று அலுத்துக் கொண்டார்.

ஒருவேளை உண்மையாகவே கசப்பாகத்தான் இருக்குமோ என்று நினைத்த இளைய மருமகள், தனது கணவனின் அண்ணனிடம் கொஞ்சம் மதுவை வாங்கி, அதை கோப்பையில் ஊற்றி மாமனாரிடம் கொடுத்தாள்.

“ச்சே... இதுவும் கசக்கிறதே” என்று அவர் முகம் சுளித்தார். “உங்கள் மூத்த மகன் கொடுத்த அதே மதுதானே இது” என்றாள்.

“ஆமா! உன் கைபட்டதும், இனிப்பான அதுவும் கசப்பாகிப் போய்விட்டது” என்று திட்டினார் மாமனார்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

31 Jan, 02:02


எதையும் யாரையும் அற்பமாக எண்ணுவதோ பேசுவதோ கூடாது. நேற்று நீங்கள் அற்பமாய் பார்த்தவர் இன்று உயர்ந்து நிற்கலாம் என்பதைத் தாண்டி, வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். அதை நிதானமாக கையாளப் பழகிக் கொண்டாலே எல்லோருக்கும் நண்பனாய் தெரிவோம்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

28 Jan, 00:41


சோம்பல் உங்களை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு நாள் அனுமதி கொடுத்தால் அது அடுத்த நாளும் வந்து உட்கார்ந்து கொள்ளும், சுத்தமும் சுறுசுறுப்பும் உங்களுடன் இருக்கட்டும். அது உங்கள் வாழ்வில் சந்தோஷத்தை கொண்டுவந்து நிரப்பும்.

“சுறுசுறுப்பாய் இருங்கள். ஓடிக் கொண்டிருக்கும் நீரில் தான் ஆக்சிஜன் அதிகம்“ என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

தொடரும்...

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

28 Jan, 00:41


சந்தோஷத்தின் சூட்சுமம் (தன்னம்பிக்கை கட்டுரைகள்)

15. உனக்காக உண்ணு பிறருக்கு உடுத்துக்கொள்

நன்றி - சபீதா ஜோசப்


“உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்! ஆண்டவன் அழகை நேசிக்கிறான்” என்கிறார் உத்தமர் நபி. அழகாயிருப்பவரை அழகாய் உடுப்பவரை, அழகாய் நடப்பவரை, அழகாய் பேசுபவரை, அழகாய் சிரிப்பவரை உலகம், நேசிக்கிறது. அழகை உலகம் விரும்புகிறது.

உங்களுக்கு எத்தனை வயதானால் என்ன உங்களை அழகாய் வெளிப்படுத்துங்கள். அழகாக இருப்பதும் ஒரு பண்புதான் என்கிறது உளவியல்.

அழகு! சூழ்நிலையின் இறுக்கத்தை குறைத்துவிடும் ஆற்றல் பெற்றது. அதனால்தான் அழகானவர்களை வரவேற்பறைகளில் விழாக்களின் மேடையில் நாம் முன்நிறுத்துகிறோம்.

அழகாக உடுத்திக்கொண்டு வியர்வை நாற்றம் போக நறுமணம் பூசிக்கொண்டு ஓரிடத்திற்கு செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது போகும் வேலை பாதி முடிந்துவிட்டது போலத்தான். அழகாக எப்போதும் இருக்க சிரிக்க முயற்சியுங்கள், அழகால் வெற்றி நிச்சயம்.

மலர்களைப் பாருங்கள். அவற்றின் மணமும் அழகும் நிரந்தரமல்ல. மிகக் குறைந்த ஆயுள் கொண்டதுதான். ஆனாலும் அவற்றால் அழகான பெண்களைக் கவர்ந்துவிட முடிகிறதே. மலர்களின் அழகும் மணமும் எல்லாரையும் ஈர்க்கக் கூடியது. அவற்றைப்போல நாமும் அழகும் மணமும் கொண்டிருக்கும்போது எல்லோராலும் ரசித்துப் பார்க்கப்படுவோம்.

பூக்களைத் தாங்கி இருந்த பூச்செடி உடைந்து விட்டாலும், பூங்கொத்தின் வாசனை உடனே அகன்று விடுவதில்லை. அதே போன்று இளமையில் மட்டுமல்ல முதுமையிலும் அழகாய் உடுத்தி அழகாய் இருப்பவர்களை எல்லாரும் மதிப்பார்கள். அவர்களுடன் பேச பிரியப்படுவார்கள். அழகாய் இருப்பதன் மகத்துவம் அதுதான்.

கண்ணுக்கு மட்டும் அழகாய்த் தோன்றுவது உண்மையான அழகு அல்ல. எது நெஞ்சைக் கொள்ளை கொண்டு உங்களை ஆக்ரமித்துக் கொள்கிறதோ அதுவே அழகு. காந்திஜியின் ஆடை ஏழை விவசாயியின் ஆடையைப் போன்று அரை ஆடைதான். ஆனாலும் அது சுத்தமாக இருந்தது. உடுத்தும் முறையில் அழகு இருந்தது.

காந்தியடிகள் தன்னுடைய பொக்கைவாய்ச் சிரிப்பைக் கொண்டே எல்லோரையும் ஈர்த்தது எப்படி? அந்தப் புன்னகையில் கலப்படமில்லாத அழகும் கவர்ச்சியும் இருந்தது. அழகிய புன்னகை இல்லாத காந்தி படத்தை நீங்கள் பார்த்திருக்க முடியாது. அப்படிப் பார்த்தாலும் உங்கள் மனதில், கண்களில் முதலில் நுழைந்துவிட்ட பொக்கை வாய் புன்னகையே நினைவில் நிற்கும். நினைவுக்கு வரும்.

நேருவின் கோட்டில் சொருகிய ரோஜா ஒரு அழகு என்றால், அவர் உடை உடுத்திய விதமும், பேச்சில் இருந்த வசீகரமும், முகத்தில் மிளிர்ந்த புன்னகையும் அவரை ரசித்துப் பார்க்க வைத்தன.

மகாகவி பாரதியார் ஆளைப் பார்த்தால் நோஞ்சான் போல் இருந்தார். ஆனால் அவரது மீசை அவர் முகத்திற்கு அழகிய கம்பீரம் கொடுத்தது. அவருடைய கம்பீர நடை வீரத்தின் அழகாய் தெரிந்தது. அறிஞர் அண்ணாவுக்கு அழகாய் உடுக்கத் தெரியாது. ஒரு எளிய பாமரனைப் போன்றே உடுத்தினார். ஆனால் அவருடைய பேச்சில் அழகு அருவியாய் கொட்டும் அடுக்கு மொழி அழகு. எல்லா தமிழர்களையும் மயக்கியதே. அதற்காக நாட்டை ஆளும் பணியை அவருக்கு மக்கள் அளித்தார்களே!

“உனக்காக நீ உணவு அருந்த வேண்டும். பிறருக்காக நீ உடை உடுத்த வேண்டும்” என்கிறது பள்ளிப்பாடம். சுத்தம் சோறு போடும். அசுத்தம் நோயில் போடும். சுறுசுறுப்பு ஆரோக்கியமும் அந்தஸ்தும் கொடுக்கும். சோம்பேறித் தனம் சொங்கியிருக்கும் வறுமையை அளிக்கும்.

மேற்கண்ட வாசகங்களுக்கு பொருள் விளக்கம் தேவையில்லை. எளிதில் புரிந்துவிடும். ஒவ்வொருவரும் அவசியம் நினைவில் கொள்க. உங்களுடைய வயது, தொழில், வருவாய், வசதி போன்றவற்றுக்கேற்ற மாதிரி உடைகளும் இருப்பது சிறப்பு.

இளைஞன் முதியவர் போன்று. முதியவர் இளைஞனைப் போன்றும் உடை அணிவது கேலிக்குரியதாகும். உங்கள் நிறத்துக்கும், உடல்வாகுக்கும், ஏற்ற நிறத்தில் உடை இருப்பது நல்லது.

திருமணவிழா, பொதுவிழா, இறுதி ஊர்வலம் போன்ற நிகழ்வுக்கு ஏற்ற மாதிரி உடையைத் தேர்ந்தெடுத்து உடுத்திச் செல்வது சிறப்பு. பிறர் உங்களை கவனிக்கும் இடங்கள் இவை என்பதை நினைவில் வையுங்கள்.

ஒருவர் எவ்வளவு பெரிய மனிதனாக, பெரிய அதிகாரியாக இருந்தாலும் அவருடைய தோற்றம் அழகானதாக நல்ல தோற்றமாக தெரியவில்லை என்றால் யாரும் ரசிக்க மாட்டார்கள்.

வாழ்க்கையில் சிலர் தோல்வியடைவதற்கும், பிறரின் கவனத்தில் நிற்காமல் போவதற்கும் காரணம் அவர்கள் தங்கள் உடலையும், பற்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளாததும், திருத்தமாக அழகாக உடை அணியாததும் வியர்வை நாற்றமும், வாய்நாற்றமும் அழுக்கடைந்த விரல் நகங்களும் நகம் வெட்டாமையும் கொண்ட மனிதனை எவரும் நெருங்குவதில்லை. இப்படிப்பட்டவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் மக்கள் அவர்களை நெருங்கமாட்டார்கள். அதனால் அவர்கள் பதவி வகிக்கும் துறையும் நஷ்டமாகும்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

28 Jan, 00:41


சோம்பல் உங்களை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு நாள் அனுமதி கொடுத்தால் அது அடுத்த நாளும் வந்து உட்கார்ந்து கொள்ளும், சுத்தமும் சுறுசுறுப்பும் உங்களுடன் இருக்கட்டும். அது உங்கள் வாழ்வில் சந்தோஷத்தை கொண்டுவந்து நிரப்பும்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

24 Jan, 03:07


வீண் விவாதங்கள் நேரத்தையை தின்னுமே தவிர வேறு நன்மை தராது. அதனால் தான் ‘பயனில்லாத பேச்சு’ வேண்டாம் என்றார் வள்ளுவர்.

சந்தோஷமாக இருக்க விரும்பினால் வீண்பேச்சையும் புறம் பேசுவதையும் புறந்தள்ளி விடுங்கள். நல்லதை நாடு கேட்கும். நாமும் பேசுவோம். அது அனைவருக்கும் சந்தோஷமாய் அமையும்.

தொடரும்...

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

24 Jan, 03:07


சந்தோஷத்தின் சூட்சுமம் (தன்னம்பிக்கை கட்டுரைகள்)

14. வீண் விவாதம் தவிர்

நன்றி - சபீதா ஜோசப்


ஒருவரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லும்போது இதமாகவும், இனிமையாகவும் சொல்ல வேண்டும். பக்குவமாகச் சொல்லாவிட்டால், அந்த விஷயத்தின் மதிப்பு இல்லாமல் போகும். அதனால் கேட்பவனுக்கு அதன்மீது ஈர்ப்போ ஈடுபாடோ இல்லாமல் போகும். இந்த விஷயத்தால் பிறர்க்கு நன்மையும் உனக்கு பெருமையும் கிட்டும் என்று சொன்னால் யோசிப்பார். இதனால் உனக்கு சந்தோஷம் பிறருக்கும் சந்தோஷம் வாய்க்கும் என்றால் மகிழ்ந்து உடன்படுவார்.

“பேச்சில் திறமையானவர்கள் காரியத்திலும் தேர்ச்சியுடன் நடந்து கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. விவாதத்துக்குத் தகுந்தமாதிரி உன் பேச்சை ஒழுங்குபடுத்திப் பேசு. அல்லது மிருகத்தைப்போல மௌனமாக இருந்துவிடு” என்பார் சிந்தனையாளர் சாஅதி.

ஒரு ஊரில் மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் மூவரும் ஒரே பெரிய வீட்டில் இருந்தாலும் ஒற்றுமையில்லாமல் வாழ்ந்தார்கள். ஒருநாள் மூவரும் ஒன்றுகூடி ஒரு முடிவெடுத்தனர்.

“நாம் இருப்பதோ மூன்று பேர், நமக்குள் வாக்குவாதம் வேண்டாம். ஒற்றுமையாக வாழ்வோம். இனிமேல் எதிர்வாதம் செய்வதைத் தவிர்ப்போம். அப்படி மீறி நம்மில் ஒருவரை எதிர்த்து யார் பேசினாலும் பேசுபவருக்கு மூவாயிரம் காசு அபராதம் விதிக்கப்படும்” என்றான் மூத்தவன். அதற்கு மற்றவர்களும் உடன்பட்டார்கள்.

மறுநாள் பேசிக் கொண்டிருக்கும்போது மூத்தவன் சொன்னான். “நேத்து ராத்திரி முச்சந்தியில் இருந்த கிணறு திருடுபோய்விட்டது.”

“ஓ...! அதனால் தான் தெருவில் தண்ணீர் ஓடியதா-?” என்றான் இரண்டாமவன்.

“அதெப்படி கிணறு திருடு போகும். இதென்ன கதையா இருக்கு!” என்றான் மூன்றாமவன்.

“பார்த்தாயா? எதிர்வாதம் செய்கிறாயே... மூவாயிரம் காசு உனக்கு அபராதம். போய் எடுத்துவா” என்றான் மூத்தவன்.

பணம் எடுத்து வர தன் அறைக்குச் சென்றவன், நடந்ததை மனைவியிடம் விவரித்தான்.

“அப்படியா சங்கதி! நீங்கள் இங்கேயே இருங்கள். நான் போய் விசாரித்து வருகிறேன்” என்றாள் அவன் மனைவி. அவள் நேராக மூத்தவனிடம் போனாள். அறைக்குள் திரும்பியதும் “என் கணவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. சில நிமிடங்களில் குழந்தை பிறந்துவிட்டது. அவர் படுக்கையில் இருப்பதால் அவரால் நேரில் வந்து அபராதம் செலுத்த முடியவில்லை. அவருக்கு பதிலாக என்னை அனுப்பி வைத்தார்” என்று பக்குவமாகக் கூறினாள்.

இதைக் கேட்டதும் மூத்தவன் கொதித்தான்.

“அதெப்படி ஆணுக்கு குழந்தை பிறந்திருக்கும். இதை சொன்னால் யார் நம்புவார்கள்” என்று கேட்டான். “நீங்களும் எதிர்வாதம் செய்கிறீர்கள் பார்த்தீர்களா? எனவே நீங்கள் மூவாயிரம் காசு அபராதம் செலுத்த வேண்டும்” என்றாள்.

“மூத்தவன் முழித்தான்.”

“என் கணவர் செலுத்த வேண்டிய தொகையை அதற்கு ஈடாக வைத்துக் கொள்கிறோம்“ என்று வேகமாக நடந்தாள் மூன்றாம் தம்பியின் மனைவி.

குடும்பத்தில் மூத்தவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்துதான் அடுத்தவர்கள் நடந்து கொள்வார்கள். தான் ஏமாற்றப்படக்கூடாது என்று நினைப்பவர்கள் அடுத்தவர்களை ஏமாற்ற நினைப்பதில்லை.

அந்த மனிதர் ஒரு பூனையை ஆசையாக வளர்த்தார். அது மற்ற பூனைகளைவிட வித்தியாசமானது என்று நினைத்து அதற்கு, புலிப்பூனை என்று பெயர் சூட்டினார்.

ஒருநாள் அவரது வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்கு தம் பூனையை பெருமையாக அறிமுகப்படுத்தி வைத்தார்.

“புலி மாதிரி தைரியமாகத் தோற்றம் அளிக்கிறது. ஆனால், டிராகன் மாதிரி ஆக்ரோஷமாக இருக்கிறதே, அதனால் இதற்கு ‘டிராகன் பூனை’ என்று பெயர் சூட்டலாம்“ என்றார் ஒருவர்.

“புலியைவிட டிராகன் சீற்றமானதுதான்; ஆனால் டிராகன் வானத்தில் பறப்பதற்கு மேகங்களின் உதவி தேவை. ஆக டிராகனைவிட மேகங்கள் உசத்தி. எனவே இதை இதை மேகப் பூனை என்றழைக்கலாம். சரியாக இருக்கும் என்றார் இரண்டாம் நபர்.

மூன்றாம் விருந்தாளி சொன்னார். வானத்தை மேகம் கொள்ளும் என்றாலும் காற்று வீசியதும் மேகம் கலைந்து போகுமே. மேகத்தைவிட சக்தி வாய்ந்தது காற்று. எனவே ‘காற்றுப்பூனை’ என்று அழைக்கலாம் என்றார்.

காற்று எவ்வளவுதான் பலமானதாக இருந்தாலும், சுவர் இருக்கும் இடத்தில் அது தடைப்பட்டு ஆக வேண்டும். எனவே சுவர் பூனை என்பதே பொருத்தமாக இருக்கும் என்றார் நான்காம் விருந்தாளி. நான்கு பேர் பூனைக்கு புதுப்பெயர் சூட்டும்போது ஐந்தாம் நபர் சும்மா இருப்பாரா என்ன? அவரும் தன் பங்கிற்கு ஒரு பெயர் மொழிந்தார்.

“சுவர் எத்தனை உறுதியானதா இருந்தாலும், எலி அதில் துளைபோட்டுவிடும், ஓட்டைகள் நிறைந்த சுவர் பலமானதாக இருக்க முடியாதே. எனவே இதை எலிப்பூனை என்பதே சரியானது என்றார்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கிராமத்து முதியவரால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. பூனை என்பது எலியைப் பிடிக்கக்கூடியதுதானே? அதற்கு பொருந்தா பெயரை ஏன் சூட்ட வேண்டும். இதனால் எல்லாம் அதன் தனித்தன்மை போய்விடுமா என்ன? பூனையை பூனை என்பதே சரியானது என்று முதியவர் முணுமுணுத்துக் கொண்டார்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

24 Jan, 03:07


பேச்சில் திறமையானவர்கள் காரியத்திலும் தேர்ச்சியுடன் நடந்து கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. விவாதத்துக்குத் தகுந்தமாதிரி உன் பேச்சை ஒழுங்குபடுத்திப் பேசு. அல்லது மிருகத்தைப்போல மௌனமாக இருந்துவிடு.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

13 Jan, 01:00


அடுத்தவரைப் பார்த்தே உங்களை நினைத்துக் கொள்வதைவிட, உங்களிடம் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு செயல்பட்டால் சந்தோஷமே கிட்டும்.

தொடரும்...

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

13 Jan, 01:00


சந்தோஷத்தின் சூட்சுமம் (தன்னம்பிக்கை கட்டுரைகள்)

13. சந்தேகம் விடு! தெளிவு பெறு

நன்றி - சபீதா ஜோசப்


காற்று உள்ளே வந்தால் இதமாய் இருக்கும் என்பதைவிட உள்ளே இருக்கும் கொசு புழுக்கம் வெளியே போகும்.

சந்தேகம் மனிதனுக்குள் நுழைந்தால் சந்தோஷம் பின்பக்கமாய் வெளியேறும். “சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு” என்ற பாடல் பாடிப்பாருங்கள். இன்று எங்கும் சந்தேகம். எதிலும் சந்தேகம் என்கிற நிலைமை உள்ளது. சிலருக்கு எதிலும் நம்பிக்கை இல்லை. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், சில மனிதர்களுக்குத் தங்கள் மீதே நம்பிக்கை இருப்பதில்லை.

ஒருவர் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர், ஒவ்வொருவரும் பயணச்சீட்டு வாங்கி விட்டார்களா என சோதித்துக் கொண்டே வந்தார். நாம் குறிப்பிட்ட அந்த நபரிடம் வந்து, “எங்கே, உங்கள் டிக்கெட்டைக் காட்டுங்கள்” என்றார்.

உடனே அந்த மனிதர், ‘இடது பாக்கெட்டில் இருக்கிற டிக்கெட்டைக் காட்டவா? வலது பாக்கெட்டில் உள்ள டிக்கெட்டைக் காட்டவா?’ என்று கேட்டாராம். இது என்னடா வம்பாய் போய்விட்டது என்று நினைத்த டிக்கெட் பரிசோதகர், “இடது பாக்கெட்டில் இருக்கிற டிக்கெட்டைத்தான் காட்டுங்களேன்” என்றதும் உடனே அந்த மனிதர் எடுத்துக் காட்டினார். அது சரியான டிக்கெட்தான். இருந்தாலும், ஆவல் தாங்க முடியாத பரிசோதகர், “ஆமாம் டிக்கெட்தான் சரியாக இருக்கிறதே. அப்புறம் ஏன் இன்னொரு டிக்கெட் வாங்கி வலது பாக்கெட்டில் வைத்திருக்கிறீர்கள்” என்று கேட்டார்.

“இந்தா பாருங்க, நான் எதிலும் எச்சரிக்கையாக இருப்பேன். இப்போ யாராவது இந்த டிக்கெட்டை பிக்பாக்கெட் அடித்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது உடனே வலது பாக்கெட்டில் இருக்கிற டிக்கெட்டை எடுத்துக்காட்டி விடுவேன்” என்று தனது சாமர்த்தியத்தைத் தானே மெச்சிக்கொண்டு சொன்னாராம்.

“சரி இரண்டு டிக்கெட்களையும் யாராவது அடித்து விட்டால் என்ன செய்வாய்” என்று பரிசோதகர் கேட்டாராம். அதற்கு அந்தக் கெட்டிக்கார மனிதர் என்ன பதில் சொன்னார் தெரியுமா..?

“அப்படியும் நடக்கலாம் என்று தெரிந்துதான் மூன்றாவது டிக்கெட் வாங்கி என் கைப் பையில் வைத்திருக்கிறேன்” என்றானாம் பெருமை பொங்க. இவரை உஷார் பேர்வழி என்று சொல்லுவதா? தன்னம்பிக்கை இல்லாதவர் என்று சொல்லுவதா?

“தன் மீது நம்பிக்கை இல்லாத மனிதர்களுக்கு எவர் மீதும் நம்பிக்கை இருக்காது. இதுதான் உளவியல் உண்மை. தன்னை நம்பும் மனிதர்கள்தான் வாழ்வில் வெற்றிபெற முடியும். நிச்சயமாக உழைப்பால் நாம் உயர்வோம் என்ற நம்பிக்கையோடு செயல்பட வேண்டும். நாம் வெல்வோம் என்று நினைத்தால், நிச்சயமாக வெல்வோம். நாம் தோற்போம் என்று நினைத்தால் நிச்சயமாகத் தோற்போம். எனவே, வாழ்க்கையைப் பற்றிய நேர்மறைச் சிந்தனைகளோடு செயல்பட வேண்டும்!” இப்படி தன்னை நம்பும் மனிதர்கள் தன்னம்பிக்கையாளர்கள் வெல்வார்கள்.

இன்னும் சிலர் எதற்கு எடுத்தாலும் ஜோதிடம், ஜாதகம் பார்க்கும் மனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள். அவர்கள் முதலில் பார்த்து அறிய வேண்டியது. தன்னிடம் உள்ள ஆற்றலைத்தான் என்று அறிவதில்லை.

கோடைக்காலம் வந்ததும் சங்கரன்பிள்ளை, கிராமத்துக்குக் குடிபெயர்ந்தார். ஆறுபோகும் பாதை காய்ந்து, மணல் வெளியாக கிடந்தது. உடனே அங்கேயே ஒரு குடிசை அமைத்து மனைவி மக்களுடன் வசிக்க ஆரம்பித்தார். சில மாதங்கள் உருண்டு போனதும் மழைக்காலம் வந்தது.

ஆற்றில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வந்தது. அப்புறமென்ன, அது போகும் வழியில் இருந்த எல்லாவற்றையும் சுருட்டி அடித்துக்கொண்டு போனது. அது சங்கரன் பிள்ளை குடிசையையும் விட்டு வைக்கவில்லை. வெள்ளம் வடிந்தது, மறுபடியும் ஒவ்வொன்றாக சேகரித்து மறுபடியும் அதே இடத்தில் குடிசையை அமைத்தார். இயல்பான சூழ்நிலை திரும்பி வாழ்க்கையை ஓட்ட ஆறுமாதம் தேவைப்பட்டது அதற்குள் அடுத்த வருட மழை வந்ததும் மறுபடியும் பாய்ந்து வந்த வெள்ளம் குடிசையை அடித்துக்கொண்டு போனது. அப்புறமென்ன, சங்கரன் பிள்ளை மீண்டும் பல மாதங்கள் அலைந்து, போராடி அதே இடத்தில் குடிசையை எழுப்பினார். அதுவும் சிறிது காலத்துக்குள் அடுத்த மழை வெள்ளத்தில் குடிசையை அடித்துக் கொண்டு போனது.

உடனே சங்கரன் பிள்ளை ஒரு ஜோசியக்காரனைப் போய் பார்த்து, தனது ஜாதகத்தைக் கொடுத்து, “ஜோசியரே! என் குடிசையை இன்னும் எத்தனை வருடங்களுக்கு இப்படி ஆற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகும் என்று பார்த்துச் சொல்லுங்கள்” என்று கேட்டாராம்.

ஆற்றுத் தண்ணீர் புரண்டு வரும் பாதையில் குடிசையை அமைக்கக் கூடாது என்ற புத்திசாலித்தனம் இருந்திருந்தால் அவர் எதற்காக ஜோசியனைத் தேடிப் போகிறார்..?

தன்னை, தன் உழைப்பை நம்பி வாழ்கிறவன் எப்போதும் சந்தோஷமாக இருப்பான். தன்னை தன் உழைப்பை நம்பாதவன் ஜோசியனைப் தேடி அலைவான்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

13 Jan, 00:59


தன்னை, தன் உழைப்பை நம்பி வாழ்கிறவன் எப்போதும் சந்தோஷமாக இருப்பான். அடுத்தவரைப் பார்த்தே உங்களை நினைத்துக் கொள்வதைவிட, உங்களிடம் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு செயல்பட்டால் சந்தோஷமே கிட்டும்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

11 Jan, 00:46


அடுத்தவர் கருத்துக்கு மதிப்பு கொடுக்கும்போது சொன்னவரும் சந்தோஷப்படுகிறார். தன்னை திருத்திக் கொள்வதால் இவரும் சந்தோஷம் பெறுகிறார். நல்லதை வெளியே சொல்லத் தயங்காதே என்ற நம் முன்னோர் தான் கெட்டதை வெளியே சொல்லாதே என்றார்கள்.

நல்லதே நடக்கும் என்று நம்புங்கள். அந்த நம்பிக்கை உங்களை மாத்திரம் அல்ல. உங்களைச் சுற்றி இருக்கின்றவர்களையும் சந்தோஷமாக வைத்திருக்கும்.

தொடரும்...

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

11 Jan, 00:46


சந்தோஷத்தின் சூட்சுமம் (தன்னம்பிக்கை கட்டுரைகள்)

12. உண்மையை சொல்ல தயங்காதே

நன்றி - சபீதா ஜோசப்


சிலர் பெரிதாக எதிர்பார்த்து சின்னதாக கிடைத்ததும் தான் ஏமாற்றப்பட்டதாக முணுமுணுப்பார்கள். சிலர் கிடைத்தவரை போதும் என்று நன்றி செலுத்துவார்கள். எத்தனை விதமான மனிதர்களோ, அத்தனை விதமான மனங்கள்.

அடுத்தவன் நல்வாழ்வுக்கு என்று தன் பெயரையும், புகழையும் வெளியே காட்டாமல் உழைக்கின்றவன்தான் பெரிய மனிதன். அவனே முழு மனிதன். இந்தி இலக்கியத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் பிரேம் சந்த். (நம்முடைய ஜெயகாந்தன் போன்றவர்) அவர் ஒரு முறை மிகவும் நோய்வாய்ப்பட்டு உடல் நலமின்றிக் கிடந்தார்.

தினம் எழுதிப் பழகிய அவரால் சும்மா படுத்துக் கிடக்க முடியவில்லை. அந்த நிலையில் தனக்குத் தோன்றியதை சாய்ந்து உட்கார்ந்து எழுதினார். இதைக் கண்ட அவருடைய மனைவி, “ஏன் இந்த நிலையிலும்கூட எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். படுத்து நல்லா ஓய்வெடுத்து உடல் நலத்தைக் கவனிக்கக் கூடாதா? அதை வையுங்கள். எழுத்து எங்கேயும் ஓடிப்போகாது. இத்தனை காலமும் எழுதிக் கொண்டிருந்தீர்களே” என்றார் சற்று கோபமாக.

அதற்கு அந்த மக்கள் எழுத்தாளர் சொன்னார்.. “ஒரு விளக்கின் கடமை, வெளிச்சம் தருவதுதான். எண்ணெயும் திரியும் எவ்வளவு காலம் இருக்குமோ, அவ்வளவு காலமும் அது ஒளிவீசிக் கொண்டே இருக்கும். எண்ணெய் தீர்ந்த பின்தான் விளக்கு ஓய்ந்து போகும். அதைப்போல உடலில் உயிரும், சக்தியும் இருக்கும்வரை உழைப்புக்கு ஓய்வு கிடையாது” என்றார் பிரேம்சந்த்.

நாட்டுக்கு தான் சொல்ல நினைப்பதை எந்த நிலையிலும் மறந்துவிடாது இது போன்ற மனிதர்கள் உணர்த்தும் விஷயம் என்ன.. நாடு என்ன செய்தது எனக்கு என்று கருதாத மேன்மக்கள்.

சார்லஸ் லாம்ப் என்கிற தொழிலதிபர் மிகப்பெரிய மனிதர். அவர் பல தொழிற்சாலைகளுக்குச் சொந்தக்காரர். நிறைகுடம் தளும்பாது என்பதற்கு அவர் வாழ்வின் ஒரு உதாரணம்.

சார்லஸ் லாம்ப் ஒரு நாள் தன் தொழிற்சாலையைப் பார்வையிடச் சென்றார். பல தொழிலாளிகள் இயந்திரங்களுக்குப் பக்கத்திலேயே நின்றுகொண்டு புகைபிடித்தும் பேசிக்கொண்டும் இருந்தனர். அவர்கள் பணிபுரியும் இடத்தில் தலைக்கு மேலே ‘புகை பிடிக்காதீர்கள்’ என்ற அறிவிப்புப் பலகை இருந்தது. அதன் கீழ்தான் அவர்கள் ரயில் எஞ்சின்போல் புகைவிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இந்த அத்துமீறலைக் கண்டு ஆலை அதிபருக்கு ஆத்திரம் வரவில்லை. ‘உங்களுக்கு அறிவிருக்கா’ என்று கத்தவில்லை. மாறாக ஒன்று செய்தார். தன் பையிலிருந்த விலையுயர்ந்த -சுருட்டுப் பெட்டியை எடுத்து அவர்களுக்குக் கொடுத்து, ‘இது அருமையான சுருட்டு பிடித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். ஆனால் இதை இங்கே நீங்கள் புகைக்காமல் வெளியே சென்று புகைத்துப் பாருங்கள்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து போய் விட்டார். தொழிலாளர்கள் தங்கள் தவறை உணர்ந்தனர். அன்றிலிருந்து புகை பிடிப்பதென்றால் தொழிற்சாலைக்கு வெளியே சென்று வந்தார்கள். மன்னிக்கத் தெரிந்தவனே மற்றவர்களை மாற்றத் தெரிந்தவன்.

சீன தேசத்தில் அவர் சிறந்த ஓவியர். ஒருநாள் அவர் ஒரு ஓவியம் வரைந்தார். அதைப்பார்த்தவர்கள் எல்லாம் பாராட்டினார்கள். பெருமையாக புன்னகைத்துக் கொண்டார். இரண்டு காளை மாடுகள் சண்டை போடுவது போன்ற ஓவியம் அது. எனவே அந்த ஓவியத்தை பத்திரமாக சுருட்டி எடுத்து வைத்தார். ஓவியத்தை ரசிக்கத் தெரிந்தவர்கள் வந்தால் மட்டும் அதை வெளியே எடுத்துக் காட்டுவார்.

ஒருநாள், அலமாரியைச் சுத்தம் செய்வதற்காக, அந்த ஓவியத்தை எடுத்தார். கறையான் அரிக்காமல் இருப்பதற்காக அறைக்கு வெளியே சூரிய ஒளிபடும்படி தொங்க விட்டார். அப்போது, தற்செயலாக அந்தப்பக்கம் வந்த ஆடு மேய்க்கும் இடையன். ஓவியத்தைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தான்.

“ஓவியம் பற்றி, உனக்கு என்ன தெரியும்.. இவை உயிருள்ள காளைகள் போல் இருப்பது தெரியவில்லையா?” ஓவியர் கேட்டார்.

“அவை காளைகள் மாதிரிதான் இருக்கின்றன. ஆனால்...”

“என்ன ஆனால்? என் ஓவியத்தில் என்ன குறை உணர்கிறாய்?”

“மாடுகள் சண்டை போடும்போது கொம்புகளை முட்டி மோதிக் கொள்ளும்போது வாலை, இரண்டு கால்களுக்கு நடுவில் வைத்துக் கொள்ளும். ஆனால் உங்கள் ஓவியத்தில், மாடுகள் தங்கள் வாலை உயர்த்திக் கொண்டு, சண்டையிடுகின்றன. மாடுகள் இப்படிச் சண்டை போட்டு இதுவரை நான் பார்த்ததே இல்லை’ என்று விளக்கினான் இடையன்.

படிப்பறிவை சில இடங்களில் பட்டறிவு (அனுபவ அறிவு) முந்திவிடுவது இப்படித்தான். ஆக, நாம் என்னதான் விவரம் தெரிந்தவராக இருந்தாலும் நமக்குத் தெரியாதது இன்னொருவருக்குத் தெரியலாம். அதை ஏற்றுக்கொள்வதுதான் அழகு. இதைத் தான் ‘கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு’ என்றனர்.
அந்த மாபெரும் ஓவியர் உடனே தன் தவறைத் திருத்திக் கொண்டார். என் ஓவியத்திற்கு ஒரு மாடு மேய்ப்பவன் கருத்துச் சொல்வதா.. என்று சீறவில்லை. இதுதான் மேன்மக்கள் குணம்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

11 Jan, 00:45


நல்லதே நடக்கும் என்று நம்புங்கள். அந்த நம்பிக்கை உங்களை மாத்திரம் அல்ல. உங்களைச் சுற்றி இருக்கின்றவர்களையும் சந்தோஷமாக வைத்திருக்கும்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

08 Jan, 05:11


மற்றவர், "இல்லை! ஒருவேளை நாம் முதல்முறையாகச் சந்திக்கலாம்" என்று பதிலளித்தார்.

முதலாமவர் மறுபடியும் சொன்னார், "சார், நினைச்சுப் பாருங்க, நாம முதல் தடவையல்ல, மூணாவது தடவை சந்திக்கிறோம்".

இரண்டாவது நபர், "சரி, எனக்கு நினைவில்லை. இதற்கு முன் எப்போது சந்தித்தோம்?"

இப்போது முதல் நபர் சிரித்துக்கொண்டே, "இதற்கு முன்பு ஒரே ரயிலில் இரண்டு முறை சந்தித்திருக்கிறோம், வாழ்க்கையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று முதல் சந்திப்பில் சொன்ன அதே பிச்சைக்காரன் நான், இரண்டாவது சந்திப்பில் நான் யார் என்று சொன்னீர்கள். நான்."

"இதன் விளைவாக, இன்று நான் மிகப் பெரிய பூ வியாபாரி, அதே வியாபாரம் தொடர்பாக வேறு ஊருக்குச் செல்கிறேன்."

“முதல் சந்திப்பிலேயே இயற்கையின் விதியைச் சொன்னீர்கள்... அதன் படி நாம் ஒன்றைக் கொடுத்தால்தான் நமக்கு ஒன்று கிடைக்கும்.

இந்த பரிவர்த்தனை விதி உண்மையில் வேலை செய்கிறது, நான் அதை நன்றாக உணர்ந்தேன், ஆனால் நான் எப்போதும் என்னை ஒரு பிச்சைக்காரனாகவே நினைத்துக் கொண்டேன், அதற்கு மேல் உயர நினைத்ததில்லை.

நான் உங்களை இரண்டாவது முறை சந்தித்தபோது, ​​நான் ஒரு தொழிலதிபராக மாறிவிட்டேன் என்று சொன்னீர்கள். உங்களுக்கு நன்றி, அன்று முதல், எனது பார்வை மாறி, இப்போது நான் ஒரு தொழிலதிபராக மாறிவிட்டேன், நான் இனி பிச்சைக்காரன் அல்ல.

உன்னை அறிதல்’ என்பதை வலியுறுத்துதல்.

பிச்சைக்காரன் தன்னைப் பிச்சைக்காரனாகக் கருதும் வரை, அவன் பிச்சைக்காரனாகவே இருந்தான், அவன் தன்னை ஒரு வணிகனாகக் கருதியபோது, ​​அவன் ஒரு வணிகனாகவே மாறினான்.

நாம் எதை நம்புகிறோமோ அதுவாக மாறுவோம்...

படித்ததில் பிடித்தது!

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

08 Jan, 05:11


மனதை மாற்றிய மந்திரச் சொல்!

ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும்போது, ​​சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர் நன்றாக உடையணிந்திருப்பதைக் கவனித்தார்.

இந்த மனிதன் பெரிய பணக்காரனாக இருக்க வேண்டும், நான் அவரிடம் கேட்டால் அவர் நிச்சயமாக நல்ல பணம் தருவார் என்று அவர் நினைத்தார். எனவே அவர் சென்று அந்த மனிதரிடம் பிச்சை கேட்டார்.

அந்த மனிதர் பிச்சைக்காரனைப் பார்த்து, "நீங்கள் எப்பொழுதும் பிச்சையெடுத்துக் கொண்டே இருப்பீர்கள், யாரிடமாவது ஏதாவது கொடுக்கிறீர்களா?"

பிச்சைக்காரன், "ஐயா, நான் ஒரு பிச்சைக்காரன், நான் மக்களிடம் பணம் மட்டுமே கேட்க முடியும், நான் எப்படி யாருக்கும் எதையும் கொடுக்க முடியும்?"

அந்த மனிதர் பதிலளித்தார், "நீங்கள் யாருக்கும் எதையும் கொடுக்க முடியாதபோது, ​​​​அப்படி கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நான் ஒரு தொழிலதிபர் மற்றும் பரிவர்த்தனைகளை மட்டுமே நம்புகிறேன் - என்னிடம் கொடுக்க ஏதாவது இருந்தால், என்னால் கூட முடியும். பதிலுக்கு ஏதாவது கொடுங்கள்."

அப்போது, ​​ரயில் ஒரு ஸ்டேஷனுக்கு வந்தது, தொழிலதிபர் இறங்கிக் கிளம்பினார்.

பிச்சைக்காரன் அந்த மனிதன் சொன்னதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். அவனுடைய வார்த்தைகள் எப்படியோ பிச்சைக்காரனின் இதயத்தை எட்டின.

நான் யாருக்கும் எதையும் கொடுக்க முடியாததால், பிச்சையில் எனக்கு அதிக பணம் கிடைக்காது என்று அவர் நினைக்கத் தொடங்கினார். ஆனால் நான் ஒரு பிச்சைக்காரன், நான் யாருக்கும் எதையும் கொடுக்க கூட தகுதியற்றவன். ஆனால் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் எதையும் கொடுக்காமல் மக்களிடம் கேட்டுக்கொண்டே இருப்பேன்.

ஆழ்ந்து யோசித்த பிச்சைக்காரன், தனக்கு பிச்சை எடுக்கும் போது ஏதாவது கிடைத்தால், அதற்கு ஈடாக ஏதாவது ஒன்றை கண்டிப்பாக கொடுப்பேன் என்று முடிவு செய்தான்.

ஆனால் இப்போது கேள்வி என்னவென்றால், அவர் பிச்சை எடுப்பதற்கு ஈடாக மற்றவர்களுக்கு என்ன கொடுக்க முடியும்? நாள் முழுவதும் இதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தது, ஆனால் அவரது கேள்விக்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை.

மறுநாள் ஸ்டேஷன் அருகே அமர்ந்திருந்தபோது, ​​ஸ்டேஷனைச் சுற்றியிருந்த செடிகளில் பூத்திருந்த சில பூக்களில் அவன் பார்வை பட்டது. பிச்சைக்கு ஈடாக சில பூக்களை மக்களுக்கு ஏன் கொடுக்கக்கூடாது என்று அவர் நினைத்தார்.

அவர் இந்த யோசனையை விரும்பினார் மற்றும் அங்கிருந்து சில பூக்களை பறித்துக்கொண்டு ரயிலில் பிச்சை எடுக்க சென்றார்.

யாராவது அவருக்கு தானம் செய்யும் போதெல்லாம், அவர் அவர்களுக்கு சில பூக்களைக் கொடுப்பார். அந்த மலர்களை மக்கள் தங்களிடம் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டனர்.

இப்போது பிச்சைக்காரன் தினமும் பூக்களைப் பறித்து அந்த பூக்களை பிச்சைக்கு ஈடாக மக்களுக்கு விநியோகம் செய்கிறான்.

இப்போது நிறைய பேர் அவருக்கு தானம் செய்ய ஆரம்பித்து விட்டனர் என்பதை சில நாட்களிலேயே உணர்ந்தார். ஸ்டேஷன் அருகே உள்ள பூக்களை எல்லாம் பறித்து வந்தார். அவரிடம் பூக்கள் இருக்கும் வரை பலர் அவருக்கு தானம் செய்து வந்தனர். ஆனால் அவனிடம் இன்னும் பூக்கள் இல்லாதபோது, ​​அவனுக்கு அதிகம் கிடைக்காது. மேலும் இது ஒவ்வொரு நாளும் தொடர்ந்தது.

ஒரு நாள் அவர் பிச்சை எடுத்தபோது, ​​அதே தொழிலதிபர் ரயிலில் அமர்ந்திருப்பதைக் கண்டார், அதன் காரணமாக அவர் பூக்களை விநியோகிக்கத் தூண்டப்பட்டார்.

பிச்சைக்காரன் உடனே அவனிடம் கை நீட்டி, "இன்று உனக்கு தானமாக கொடுக்க என்னிடம் சில பூக்கள் உள்ளன" என்றார்.

அந்த மனிதன் அவனுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தான், பிச்சைக்காரன் அவனுக்கு சில பூக்களை கொடுத்தான். அந்த நபர் அவரது யோசனையை மிகவும் விரும்பினார் மற்றும் மிகவும் ஈர்க்கப்பட்டார்.

"அடடா! இன்று நீயும் என்னைப் போல் வியாபாரி ஆகிவிட்டாய்" என்றார். பிச்சைக்காரனிடம் பூக்களை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனில் இறங்கினான்.

ஆனால் மீண்டும் ஒருமுறை, அவன் வார்த்தைகள் பிச்சைக்காரனின் இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அந்த மனிதர் சொன்னதையே திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டு சந்தோஷப்பட ஆரம்பித்தார்.

அவரது கண்கள் இப்போது பிரகாசிக்கத் தொடங்கின, அவர் தனது வாழ்க்கையை மாற்றக்கூடிய வெற்றிக்கான திறவுகோல் இப்போது கிடைத்திருப்பதாக உணர்ந்தார்.

உடனே ரயிலில் இருந்து இறங்கி உற்சாகமாக வானத்தைப் பார்த்து, மிகவும் உரத்த குரலில், “இனி நான் பிச்சைக்காரன் இல்லை, நான் இப்போது தொழிலதிபர், அந்த மனிதரைப் போல நானும் ஆகலாம், பணக்காரனாகவும் ஆகலாம்.”

அவரைப் பார்த்ததும், இந்த பிச்சைக்காரனுக்கு பைத்தியம் பிடித்திருக்கலாம் என்று நினைத்தார்கள். மறுநாள் முதல் அந்த பிச்சைக்காரன் அந்த நிலையத்தில் மீண்டும் தோன்றவே இல்லை...

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அதே ஸ்டேஷனில் இருந்து சூட் அணிந்த இரண்டு ஆண்கள் பயணம் செய்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டபோது, ​​ஒருவரை ஒருவர் கைகூப்பி வணங்கி, "என்னை அடையாளம் தெரிகிறதா?"

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

08 Jan, 05:11


நாம் எதை நம்புகிறோமோ அதுவாக மாறுவோம்...

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

05 Jan, 11:04


துன்பமில்லாமல் இன்பமில்லை. சங்கடமில்லாமல் சந்தோஷமில்லை. ஒன்று முன்னே வந்தால் மற்றொன்று பின்னால் வரும் என்பது விதிபோலும் என்று இருந்துவிட்டால் குட்டையில் படுத்த எருமை போலாகி விடுவோம். அது சுகமல்ல சோம்பேறித்தனம்.

.

எதையும் புரிந்து கொண்டு செய்!

நன்றி - என்.கணேசன்


ஒரு காட்டில் பச்சைக்கிளிகளைப் பிடிக்கும் நோக்கத்தில் வந்த வேடன் ஒருவன் ஒரு மரத்தடியில் வலை விரித்து அதில் தானியங்களைத் தூவினான். அவன் எதிர்பார்த்தபடியே கிளிகள் பறந்து வந்து வலியில் சிக்கிக் கொண்டன. சிக்கிய பறவைகளைப் பிடிக்க வேடன் சென்றான்.

அப்போது அந்தப் பக்கம் ஒரு முனிவர் வந்தார். வலையில் சிக்கி இருந்த கிளிகளைப் பார்த்ததும் இரக்கப்பட்ட அவர் வேடனிடம் வேண்டிக் கொண்டார். ”வேடனே இந்தக் கிளிகளைக் கொல்லாதே”

வேடன் சொன்னான். “சுவாமி எனக்கு இன்று இந்தக் கிளிகளே உணவு. இவற்றிற்குப் பதிலாக வேறு ஏதாவது தந்தால் நான் இவற்றை விட்டு விடுகிறேன்.”

முனிவர் தன்னிடம் இருந்த உணவை அந்த வேடனுக்குத் தந்து அவனிடம் அந்தக் கிளிகளை விடுவிக்கச் சொன்னார். உணவைப் பெற்றுக் கொண்ட அந்த வேடனும் அந்தக் கிளிகளை விடுவித்து விட்டுச் சென்றான்.

அவன் சென்ற பின் முனிவர் “கிளிகளே! இவன் வேடன். இவன் வலை விரிப்பான், தானியங்களைத் தூவுவான். நீங்கள் பறந்து வந்து அவனது வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்” என்று அந்த கிளிகளுக்குப் புத்திமதி சொல்லி விட்டுப் போனார்.

சில நாட்கள் கழிந்து மீண்டும் வேடன் அதே இடத்திற்கு வலை விரிக்க வந்த போதும் அவை முன்பு கூறியதையே கூறவே வேடன் திகைத்துப் போனான். என்றாலும் அவன் “இன்று எனக்கு வேட்டையாடுவதற்கு வேறெந்த மிருகமும், பறவையும் கிடைக்கவில்லை. அதனால் இந்தக் கிளிகள் சிக்கா விட்டாலும் சரி வேறு ஏதாவது பறவைகள் என் வலையில் வந்து சிக்குகிறதா எனப் பார்க்கலாம்” என்று நினைத்தவனாய் அங்கேயே வலை விரித்து அதில் தானியங்களைத் தூவினான்.

வேடன் வலை விரிப்பதையும் தானியங்கள் தூவுவதையுமே பார்த்துக் கொண்டிருந்த கிளிகள் ”கிளிகளே! இவன் வேடன். இவன் வலை விரிப்பான், தானியங்களைத் தூவுவான். நீங்கள் பறந்து வந்து அவனது வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்” என்று சொல்லிக் கொண்டே பறந்து வந்து வலையில் சிக்கிக் கொண்டன.

அப்போது தான் அந்த வேடனுக்கு அவை சொன்னதையே சொல்லும் கிளிகள் என்றும் முனிவர் கூறியதையே சொல்ல முடிந்த அவைகளுக்கு அதன் அர்த்தம் புரிந்திருக்கவில்லை என்று புரிந்தது.

அந்த முனிவர் கிளிகள் மேல் உள்ள இரக்கத்தில் சொல்லி விட்டுப் போன புத்திமதி போல மனித குலத்தைக் காப்பாற்றவும் வழிநடத்தவும் கூடிய எத்தனையோ உயர்வான விஷயங்களை பெரியோர் பலர் நமக்காகச் சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள். அவற்றைப் படிப்பது சுலபம். கேட்பது சுலபம். மேற்போக்காகப் புரிந்து கொள்வதும் கூட சுலபம் தான். ஆனால் அவற்றிலேயே எல்லாம் தெரிந்து விட்டதாக எண்ணி விடுவது முட்டாள்தனம். அவற்றில் சில கோட்பாடுகளை மட்டும் எடுத்துக் கொண்டு அது எந்தக் காலத்தில் எந்த நோக்கத்தில் எந்த உள்நோக்கத்தில் சொல்லப்பட்டு இருந்தது என்பதைப் புரிந்து கொள்ளாமல் எந்திரத்தனமாய் பின்பற்றுவது மடமை. அப்படிச் செய்பவர்களுக்கும் இந்தக் கதையில் சொல்லப்பட்ட கிளிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை.

உண்மையான பரிட்சை, வலைகள் வீசப்படும் போது தான், நமக்கு நடக்கின்றது. வலியப் போய் வலையில் சிக்கிக் கொள்கிறோமா, சிக்காமல் எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்கிறோமா என்பது தான் நமக்கு நடக்கும் பரிட்சை. படித்ததும், கேட்டதும், புரிந்ததும் எந்த அளவில் இருந்திருக்கிறது என்பது அந்தப் பரிட்சையில் தான் தெரியும்.

தொடரும்...

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

05 Jan, 11:03


சந்தோஷத்தின் சூட்சுமம் (தன்னம்பிக்கை கட்டுரைகள்)

11. எதையும் புரிந்து செய்

நன்றி - சபீதா ஜோசப்


பிறருக்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை தேடிக் கொள்கிறான். பிறருக்குத் தீமை செய்பவன் தனக்கும் தீமையை தேடிக் கொள்கிறான். பிறரை சந்தோஷப்படுத்துகிறவன் அதில் தனக்கும் சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்கிறான். பிறரை சங்கடப்படுத்துகிறவன் தானே சங்கடத்தைத் தேடிக் கொள்கிறான்.

எது நமக்கு சந்தோஷம் தரும் செயல்? எது நம்மால் பிறர்க்கு சங்கடம் தரும் செயல்?

இதை குழப்பமில்லாமல் புரிந்துகொண்டாலே, வாழ்வும் எளிதாகும். மற்றவரும் நம் வசமாவார்கள்.

ஒரு மனிதர் ஒருமுறை ஒரு ஞானியினிடம் சென்று, தன் வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டுமென்று மன்றாடினார். அந்த ஞானியோ எப்போதும் மௌனத்திலேயே இருப்பவர். எனவே பல நாட்கள், பல வாரங்கள் அவரை சென்று பார்த்தும், அவரிடமிருந்து எந்த நல்ல வாக்கும் பெற முடியாமல் தவித்து, பொறுத்துக் கொள்ள முடியாமல், “எனக்கு ஒரே ஒரு உபதேசம் செய்யமுடியுமா.. முடியாதா..“ என்று கெஞ்சலும் மிஞ்சலுமாக கேட்டார்.

ஞானி அவரை அன்போடு பார்த்தார். “நல்ல காரியங்களைச் செய். ஆனால் அவற்றை கிணற்றில் வீசி விடு” என்று உபதேசம் செய்தார். ஞானியிடம் உபதேசம் பெற்ற அந்த மனிதர் சந்தோஷம் பெருக்கெடுத்து ஓட வெளியே வந்தார்.

சாலையைக் கடக்க தவித்துக் கொண்டிருந்த பார்வை இழந்த முதியவர் நிற்பதைக் கண்ட அந்த மனிதருக்கு ஞானி சொன்ன உபதேசம் நினைவுக்கு வந்தது. அந்த முதியவர் அருகில் சென்றார். அவரை அன்புடன் பிடித்து அழைத்துச் சென்று ஒரு கிணற்றில் தள்ளிவிட்டார். ஞானி சொன்ன உபதேசத்தை செய்துவிட்ட திருப்தியோடு அதை ஞானியிடம் சொல்லச் சென்றார்.

அந்த ஞானி சொன்னது என்ன..? “நல்ல காரியத்தை செய். ஆனால் அதை நான்தான் செய்தேன் என்ற உணர்வை உனக்குள் ஏற்றிக் கொள்ளாதே” அதை மறு வினாடியே மறந்துவிடு. தூக்கிப் போட்டு விடு, என்பதுதான். ஆனால் அந்த மனிதர் புரிந்து கொண்டது?

இப்படி எதையும் சரிவர புரிந்து கொள்ளாமல், தாமே ஒரு பொருள் கற்பித்துக் கொள்கிறவர்கள் இந்த நாட்டில் அனேகம் பேர் இருக்கிறார்கள்.

சீனாவில் சாவ் மாநிலத்தில் ஒரு பெரிய குரங்காட்டி மனிதன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு குரங்குகள் மீது கொள்ளைப் பிரியம், எனவே காட்டிலிருந்து வழி தவறி வந்த குரங்குகளை எல்லாம் தன் வீட்டில் உணவு கொடுத்து வளர்த்து வந்தான். அவனுக்கு குரங்குகளின் பாஷை தெரியும். அவனுடைய பாஷை அவைகளுக்குப் புரியும்.

இந்த சூழலில் நாட்டில் ஒரு பெரும் பஞ்சம் ஏற்பட்டது. உணவுக்கு மிகவும் சிரமப்படும் நிலை. எனவே குரங்குகளுக்கு தினசரி கொடுக்கும் உணவை குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.

ஒருநாள் குரங்குகளைப் பார்த்து, “இனிமேல் உங்களுக்கு காலையில் மூன்று பருப்புகளும், மாலையில் நான்கு பருப்புகளும்தான் தரமுடியும். அதை சாப்பிட்டு நீங்கள் திருப்தியடைய வேண்டும்“ என்றான். அதைக் கேட்டு குரங்குகளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. கத்தி ஆர்ப்பாட்டம் செய்தன.

உடனே குரங்காட்டி சொன்னான். “சரி சரி கோபம் வேண்டாம் காலையில் நாலு பருப்பும், மாலையில் மூன்று பருப்பும் தருகிறேன்” என்றதும் குரங்குகள் சந்தோஷமாய் தலையை ஆட்டி அமைதியானது. குரங்காட்டி முதலில் சொன்னதும் முடிவில் சொன்னதும் ஒன்றுதான் என்பது அவசரபுத்திக்குத் தெரியவில்லை. இப்படி சொன்னதை சரியாகப் புரிந்து கொள்ளாத பேதைகள் நிறைய உண்டு.

ஒருவனின் வீட்டுக் கொல்லைப்புறத்தில் இலைகள் உதிர்ந்துபோன மொட்டை மரம் ஒன்று இருந்தது. அதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன் கேட்டான். “இந்த மரத்தை ஏன் இப்படியே வைத்திருக்கிறீர்கள்?”

“அது வீட்டுக்குப் பின்னாடிதானே கிடக்கட்டும்‘னு விட்டுவிட்டோம்.”

“மொட்டை மரத்தை இப்படி விட்டு வைப்பது கூடாது. அது துரதிர்ஷ்டத்தையே தரும். ஏதாவது மோசமான சம்பவம் நடக்குறதுக்கு முன்னாடியே அந்த மரத்தை வெட்டிவிடு” என்றான் பக்கத்து வீட்டுக்காரன். அவனும் மறுநாள் மரத்தை வெட்டித் தள்ளினான்.

நல்ல வேலை செய்தாய்! என்று பக்கத்து வீட்டுக்காரன் தன் இரு மகன்களுடன் வந்து மரத்தின் கிளைகளை துண்டு துண்டாக வெட்டி அடுப்புக்கு விறகு கிடைத்தது என எடுத்துப் போனான். தண்ணீர் விட்டு மரம் வளர்த்தவன் பார்த்து முழித்தான்.

“மரத்தை வெட்டியதால் எனக்கு நல்லது எதுவும் நடக்கல. ஆனால் மரத்தை வெட்டச் சொன்ன பக்கத்து வீட்டுக்காரனுக்குத்தான் அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது” என்று மரத்துக்காரன் முணுமுணுத்தான்.

யார் எதைச் சொன்னாலும் உடனே நம்பிவிடக் கூடாது. ஏன், எதுக்குனு யோசிக்கணும். மொட்டை மரம் இருந்தால் இவனுக்கு துரதிர்ஷ்டம். வெட்டிப் போட்டால் அவனுக்கு அதிர்ஷ்டம்னு தெரியாமல் ஏமாறுவது வேறு. தெரிந்து ஏமாறுவது வேறு. இது இரண்டாம் வகை.

அவசரமாக முடிவெடுப்பதும், குழம்பிய நிலையில் முடிவெடுப்பதும் நம்முடைய சந்தோஷத்துக்கு நாமே ஊதுகின்ற சங்கு.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

05 Jan, 11:03


“நல்ல காரியத்தை செய். ஆனால் அதை நான்தான் செய்தேன் என்ற உணர்வை உனக்குள் ஏற்றிக் கொள்ளாதே” அதை மறு வினாடியே மறந்துவிடு. தூக்கிப் போட்டு விடு.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

03 Jan, 06:13


சந்தோஷத்தின் சூட்சுமம் (தன்னம்பிக்கை கட்டுரைகள்)

10. கற்பனையில் காலம் தள்ளாதே

நன்றி - சபீதா ஜோசப்


பிரம்மச்சரிய வாழ்வு சந்தோஷகரமானதும் அல்ல. திருமண வாழ்வு வருந்தத்தக்கதும் அல்ல. சந்தோஷமும் சங்கடமும் நீங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளும் முறையில் உள்ளது.

எத்தனையோ மலர்களின் அழகு பேசப்படாமலும் எத்தனையோ மலர்களின் நறுமணம் இன்னும் நுகரப்படாமலும் வீணாகிக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் மலர்கள் மலர்வதை நிறுத்திக் கொள்ளவில்லையே..

ஒரு அரசன்! தனக்காக ஒரு அழகான விலை உயர்ந்த வெள்ளைக் குதிரை வாங்கினான். அந்த குதிரையைப் பார்த்துக் கொள்வதற்காக விசேஷமாக ஒருவனை நியமித்தான். ஒருநாள் தமது குதிரையுடன் அரசன் வேட்டைக்குச் சென்றான். வேட்டை முடிய இரவு ஆகிவிட்டது. அங்கேயே ஒரு மரத்தின் கீழ் குதிரையைக் கட்டிவிட்டு படுப்பதற்கு முன்பு அந்த குதிரைப் பராமரிப்பாளனை அரசன் அழைத்துச் சொன்னான்.

“இத பாருப்பா, ராத்திரி பூரா தூங்காம ஜாக்கிரதையாக பார்த்துக்கோ. ஏதாவது பெரிய பிரச்னையை யோசிச்சிட்டிரு. அப்போதுதான் தூக்கம் வராது” என்று சொல்லிவிட்டு அரசன் தூங்கிவிட்டான். முதல் ஜாமம் முடிந்ததும் அரசன் விழித்துக் கேட்டான். “என்ன தூங்கிட்டியா? முழிச்சிட்டிருக்கியா. என்ன யோசிக்கிறே..?”

“கடல்ல உப்பு தானாக வந்ததா. இல்லே யாராவது கொண்டுவந்து போட்டார்களான்னு யோசிச்சிட்டிருக்கேன் அரசரே!”

“சபாஷ்! அப்படித்தான் யோசனை பண்ணணும்” என்று மறுபடியும் அரசன் தூங்கிவிட்டான்.

கொஞ்ச நேரம் சென்றதும் அரசன் மறுபடியும் எழுந்து கேட்டான். “என்ன பண்றே. யோசிக்கிறீயா?”

“வானத்துல நிலா அதுவா வந்ததா? இல்லே யாராவது கொண்டுவந்து வச்சாங்களா?” என்றான் வேலைக்காரன். “ம்.. அப்படித்தான் யோசிக்கணும்” என்று புன்னகை புரிந்தார். நமக்கு கிடைத்த வேலைக்காரன் பலே யோசனைக்காரன்தான் எனச் சொல்லியபடி அரசன் தூங்கிவிட்டான்.

அரசன் மறுபடியும் எழுந்தபோது, பொழுது நன்றாக விடிந்து போயிருந்தது. “என்ன இன்னும் யோசிக்கிறியா...?” கொட்டாவி விட்டுக்கொண்டே அரசன் கேட்டான்.
வேலைக்காரன் அமைதியாகச் சொன்னான். “குதிரை அதுவா ஒடிவிட்டதா? இல்ல யாராவது அவிழ்த்துக் கொண்டுபோய் விட்டார்களா...?” என்று.

அவன் ஓவரா யோசனை செய்ததோடு அதிலேயே மூழ்கிப் போனான். குதிரை இருக்கா? இல்லையா என்று பார்க்க மறந்துவிட்டான். சிலர் இப்படித்தான் கற்பனையிலேயே காலம் தள்ளுவர். விதைக்காமலே மரம் வளர்த்து மாம்பழம் சாப்பிடுவான். ஒரு வேலையும் செய்யாமல் வானத்திலேருந்து தேவதை வந்து தனக்கு வேண்டியதை கொடுப்பாள்னு நினைப்பான். கூரையைப் பிச்சிக்கிட்டு செல்வம் கொட்டும்னு காத்திருப்பான்.

அடுத்த முதல்வர் நானே என்று சில பிரபலங்கள் கனவு காண்பதுபோல முதல்வராக ரஜினியாக, கமலாக, அஜீத்தாக, விஜய்யாக தன்னை நினைத்துக் கொண்டு கற்பனையில் நயன்தாரா, த்ரிஷா அனுஷ்கா, ஹன்சிகாவுடன் எல்லாம் டூயட் பாடுவான். ஹனிமூன் போவான். கற்பனைக்கு எல்லை ஏது..

இப்படி கற்பனையிலே வாழ்ந்து, கற்பனையிலே பிள்ளை குட்டி பெற்றுக்கொண்டு சொகுசா வாழ்ந்து கொண்டிருப்பான். இவன் மாதிரி ஆட்கள் காலத்துக்கும் இப்படியே கிடந்து வீணாகிப் போக வேண்டியதுதான்.

அதற்காக கற்பனை செய்கிறவன் எல்லாம் வீணாகிப் போகிறான் என்பது அர்த்தமல்ல. என்ன செய்தால் வெற்றி பெறலாம்? எப்படி உழைப்பைப் பெருக்கினால் முன்னேற முடியும்? நம்முடைய நடத்தையில் உள்ள குறைபாடுகள் என்ன என்று யோசிப்பவன் ஜெயிப்பான். அதை விட்டு தேவையில்லாமல் யோசித்து கற்பனையிலேயே காதலிப்பவன் நிஜத்தில் டம்மி பீஸ்தானே.

“ஒரு கோழிக்குத்தான் ஒரு முட்டையின் வழியே மற்றொரு கோழியை உருவாக்கத் தெரியும்” மனிதனுக்கு அதை அவித்துச் சாப்பிடணும் என்றுதான் தோன்றும். “செல்வத்திலும் பதவியிலும் உங்களைவிட உயர்ந்தோரை நீங்கள் கண்டால், அப்பொழுது உங்களைவிடத் தாழ்ந்தோரை எண்ணி பாருங்கள்” என்கிறார் நபிகள் நாயகம்.

உலகில் செல்வம் ஏழ்மை இரண்டும் உண்டு. உனக்கு எது வேண்டும் என்று யோசனை செய். அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று செயல்படு. அதைவிட்டு கற்பனையாலே ஏழ்மையிலிருந்து செல்வந்தன் ஆகிவிட நினைக்காதே.

பிறருக்குக் கடுமையாக தோன்றுவதைச் செய்து முடிப்பவன் திறமைசாலி. திறமைசாலியாலும் செய்ய முடியாததைச் செய்து முடிப்பவன்தான் மேதை. நீங்கள் மேதையாக சாதிக்க விரும்புகிறீர்களா? பேதையாக கற்பனைகளுக்குள் முடங்கிப் போய்விடப் போகிறீர்களா.

“சந்தோஷம்... சந்தோஷம்... வாழ்க்கையில் பாதி பலம்.. சந்தோஷம் இல்லையென்றால் மனிதர்க்கு ஏது பலம்...” என்கிறது ஒரு திரையிசைப் பாடல். சந்தோஷமாய் மலர்ந்திருக்க விரும்புகிறவர்கள் முயற்சியும் உழைப்பும் கொண்டு செயல்பட வேண்டும். அதற்கான யோசனை எப்போதும் சந்தோஷமே கொண்டு வந்து சேர்க்கும்.

தொடரும்...

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

03 Jan, 06:13


உலகில் செல்வம் ஏழ்மை இரண்டும் உண்டு. உனக்கு எது வேண்டும் என்று யோசனை செய். அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று செயல்படு. அதைவிட்டு கற்பனையாலே ஏழ்மையிலிருந்து செல்வந்தன் ஆகிவிட நினைக்காதே.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

28 Dec, 13:33


எதையும் ஈடுபாட்டோடு செய்யும் பொழுது அந்தச் செயலும், நாமும் ஒரு மேன்மை நிலையை எட்டுகிறோம். ஈடுபாட்டோடும், அக்கறையுடன் உந்துத் திறனோடும் செய்தால் அதில் வெற்றி நிச்சயம். ஆனால் எதையும் விருப்பம் இல்லாமல் எனோதானோ என்று செய்தால் அது தோல்வியில் கொண்டு போய் சேர்த்து விடும்.

எந்தச் செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்வதை உங்கள் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். எதையும் முழு ஈடுபாடு கொண்டு செய்யும்போது செய்யும் தொழிலும் செழிக்கும், வருவாயும் பெருகும். எனவே எதையும் முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள். சந்தோஷம் உங்களைத் தேடிவரும்.

தொடரும்...

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

28 Dec, 13:33


சந்தோஷத்தின் சூட்சுமம் (தன்னம்பிக்கை கட்டுரைகள்)

9. எதையும் ஈடுபாட்டுடன் செய்யுங்கள்!

நன்றி - சபீதா ஜோசப் மற்றும் பொ.பாலாஜிகணேஷ்


இளமையில் சந்தோஷமுடன் வாழ முயற்சி செய்வோம்!

நாளை வாழ்ந்து காட்டுவேன் என்பவன் சோம்பேறி! ஏற்கெனவே காலதாமதமாகி விட்டதே.. எதையும் இன்றே செய்து பழகு! இன்றே ஈடுபாட்டுடன் வாழ்வதுதான் சந்தோஷத்தின் ஆரம்பம்! ஒன்றுக்குப் பிறகு ஒன்றாக தொடர்வதே வாழ்க்கை. நீ மண்ணுக்குத் திரும்புவதற்கு முன்பு இன்னும் மீதமுள்ள காலத்தைச் சரியாக பயன்படுத்து.

பி.ஆர்.பந்துலு ‘கர்ணன்’ படத்தை எடுத்தபோது என்னிடம் சொன்னது இரண்டே இரண்டு வரிகள்தான். “விசு.. இந்தப் படத்துல உங்களுக்கு வானமும் பூமியும்தான் எல்லை; புகுந்து விளையாடுங்கள்.”

“இப்படிப்பட்ட உரிமை கிடைத்தபோது எனக்கு சிறகடித்துப் பறப்பது போன்ற உணர்வு. பாடல் காட்சிகளை மிகச்சரியாக புரிந்து கொண்டிருந்தேன். எனக்கு மட்டுமல்ல. கண்ணதாசனும் அப்படியே. பெங்களூர் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ரூம் போட்டிருந்தார்கள். ஏழெட்டு நாட்களில் முடித்துவிட வேண்டுமென்று திட்டம், மூன்றே நாட்களில் கர்ணனுக்கான அத்தனை பாடல்களையும் எழுதிக் கொடுத்து அசத்திவிட்டார் கண்ணதாசன்.

அதிலும் ‘ஆயிரம் கரங்கள் நீட்டி’... என்ற கோரஸ் பாடலுக்காக அவர் ஏனோதானோ என்று வரிகளை எழுதிவிடவில்லை. பிராமணப் பண்டிதர்களை வரவழைத்து அவர்களிடம் சூரிய நமஸ்காரம் பற்றிய சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கான பொருளை நிறைவாகத் தெரிந்து கொண்டுதான் எழுதினார். அப்படியொரு ஈடுபாடு. ‘கர்ணன்’ படப் பாடல்கள் இன்றும் நிலைத்திருக்க அத்தகைய ஈடுபாடு அந்தக் காலத்தில் எல்லோரிடமும் இருந்ததுதான் காரணம்” இப்படி தொழில்மீது இருந்த ஈடுபாடுதான் தங்கள் வெற்றிக்குக் காரணம் என்கிறார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

ஹாத்திம் தாய் மிகப்பெரிய இஸ்லாமிய வள்ளல், அவரைப் பார்த்து ஒருவர், “உங்களால் மட்டும் எப்படி நல்லவர், கொடை வள்ளல் என்று பெயரெடுக்க முடிந்தது?” என்று கேட்டார். அதற்கு ஹாத்திம் தாய் புன்னகையுடன், “தொடக்கக் காலத்தில் என்னைச் சுற்றியிருந்தவர்கள் என் பெருமைகளைக் கூறிப் புகழ்ந்து கொண்டிருந்தனர். என் பிழைகளையும் தவறுகளையும் எனக்குக் கேட்காதபடி மறைக்க முயன்றனர். இதை அறிந்த நான் செவிடன்போல் நடித்தேன். அதை உண்மை என்று நம்பிய அவர்கள் என் கண் எதிரிலேயே என் குறைகளையும் தயபண்புகளையும் பேசிக் கொண்டார்கள். என் வாழ்நாளில் அவர்கள் எதை எதைக் குறை என்று சொன்னார்களோ அதைத் தவிர்க்க முயன்றேன். அதனால்தான் எனக்கு இத்தகைய நல்ல பெயர் கிடைத்தது” என்றார் ஹாத்திம் தாய். இது அவருடைய ஈடுபாடு.

அமெரிக்க ஜனாதிபதியான ரூஸ்வெல்ட் மிகுந்த நினைவாற்றல் கொண்டவர். அவர் 1932ல் முதல் தடவை தேர்தலுக்கு நின்றார். அப்போது அவர் நாடு முழுவதும் சுற்றிப் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களைச் சந்தித்தார். அதற்கும் அடுத்த முறை நடந்த தேர்தலுக்காக வாக்காளர்களைச் சந்திக்கச் சென்றபோது அத்தனை பேர் பெயரையும் தனித்தனியே சொல்லி அழைத்து ஆதரவு கேட்டார். இதனால் மாபெரும் வெற்றி பெற்றார். ஒரு ஜனாதிபதி குடிமக்களின் பெயரை நினைவில் வைத்து அழைத்ததைக் கேட்டு மக்களுக்கு ஆனந்தம். அந்த ஞாபக சக்திதான் ரூஸ்வெல்ட்டின் ஈடுபாடு.

வேலை செய்ய வேண்டியது நம் தலையெழுத்து என்று வேலை செய்கிறவன் அடிமை. வேலை செய்வதுதான் சுகம் என்று செய்யும் வேலையை சிறப்பாக செய்பவன் கலைஞன். தேவை இல்லாத வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறவன் அறிவிலி.

முழு மனதோடு செய்யும் எந்த செயலும் வெற்றியைத் தரும்!

நாம் ஒரு செயலை செய்யும் பொழுது பல நேரங்களில் அதை முழு மனதுடன் செய்வதில்லை. இப்படி செய்வதால் நாம் செய்யும் செயல்பாட்டால் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. நான் எந்த செயலை செய்தாலும் அது தோல்வியில்தான் முடிகிறது என்று சிலர் புலம்புவார்கள். அதற்கு காரணம் என்ன தெரியுமா? அந்த செயலை அவர்கள் முழு மனதோடு செய்வதில்லை என்பதுதான்.

மனித வாழ்வு அழகு பெறுவது செயல்களை மிக நேர்த்தியாய்ச் செய்து முடிப்பதால் மட்டுமல்ல. எந்தச் செயலைச் செய்தாலும் அதை மனமுவந்து, முழு ஈடுபாட்டுடன் செய்வதால் தான் அது அழகு பெறுகிறது.

நாம் என்ன செய்கிறோம் என்பது ஒரு பொருட்டு அல்ல. நாம் தரையைத் துடைக்கிறோமோ, ஒரு தொழிலை மேலாண்மை செய்கிறோமோ, எந்தச் செயலாக வேண்டுமானாலும் இருக்கட்டும். செய்யும் அந்தச் செயலை மனமுவந்து, முழு ஈடுபாட்டுடன் செய்தால், வேலை செய்வதே மிக அழகான ஒரு அனுபவமாக இருக்கும். நாம் நமது தொழில் பணி சார்ந்த எந்தச் செயல்களையும், நிகழ்வுகளையும் ஈடுபாட்டுடன் மனம் ஒன்றிச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யப்படும் செயல்கள் நமக்குப் பல வெற்றிகளை ஈட்டித் தரும். அதன் வெற்றி பல மடங்காகும். அதனால் நமக்குப் பலவிதமான நன்மையைத் தரும்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

28 Dec, 13:33


வேலை செய்ய வேண்டியது நம் தலையெழுத்து என்று வேலை செய்கிறவன் அடிமை. வேலை செய்வதுதான் சுகம் என்று செய்யும் வேலையை சிறப்பாக செய்பவன் கலைஞன். எனவே எதையும் முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள். சந்தோஷம் உங்களைத் தேடிவரும்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

27 Dec, 05:15


சந்தோஷத்தின் சூட்சுமம் (தன்னம்பிக்கை கட்டுரைகள்)

8. மென்மையாக கோபப்படு

நன்றி - சபீதா ஜோசப்


மனைவிக்கு கோபம் வந்தால் சமைக்காமல் படுத்துக்கொள்வாள். அம்மாவுக்கு கோபம் வந்தால் சமைத்து வைத்துவிட்டு சாப்பிடாமல் படுத்துக்கொள்வாள். கோபத்தின் நிறம் ஒன்றுதான். அதை வெளிப்படுத்தும் விதம் மென்மையாக இருப்பது நல்லது.

காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற மன்னர் அங்கே ஒரு மான் குட்டியை வேட்டையாடினார். அந்த மான்குட்டியை அரண்மனைக்கு எடுத்துப் போகும்படி தன்னுடன் வந்த வேலைக்காரனிடம் கூறினார். மான்குட்டியைத் தொடர்ந்து பதற்றமுடன் வந்தது அதன் தாய். அந்தத் தாயின் பாசத்தையும் பரிதவிப்பையும் பார்த்துப் பரிதாபப்பட்ட அந்த வேலைக்காரன் அந்த மான் குட்டியை தப்பிஓட விட்டுவிட்டான்.

அப்புறமென்ன, விஷயம் தெரிந்ததும் அரசன் ஆத்திரப்பட்டான். அவனது வேலையைப் பறித்து வெளியே துரத்தப்பட்டான். ஒரு வருடம் கடந்து போய்விட்ட நிலையில், ஒருநாள் அந்த ஏழை வேலைக்காரனுக்கு மன்னரிடம் இருந்து அழைப்பு வந்தது.

‘உன்னை இளவரசரின் ஆசிரியராக நியமிக்கிறேன்’ என்று மன்னர் அறிவித்தார். அந்த ஊழியனின் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது.
“மன்னா! முன்பு உங்கள் சொல்படி நடக்காத இவனுக்கு இந்தப் பணி கொடுத்திருக்கிறீர்களே...?” என்று மன்னருக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவர், காதோரம் முணுமுணுத்தார்.

“மான்குட்டி மீது பரிவு காட்டியவன், என் மகன் மீதும் பரிவு காட்டுவான். நன்றாகப் பார்த்துக் கொள்வான். என்று நம்புகிறேன்” என்றான் அந்த மன்னன்.

பிறர் மீது இரக்கப்படுபவர் இறைவனின் கருணையைப் பெறுபவர், என்பதற்கு இந்தக் கதை ஒரு சோற்றுப் பதம்.

பரிவு என்பது பன்னாட்டு மொழி. எல்லா தேசத்திலும் அந்த மொழியால் பேச முடியும். ஊமைகளாலும் அந்த மொழி பேச முடியும். செவிடர்களாலும் அந்த மொழியைக் கேட்க முடியும். நாமும் பரிவு என்னும் மொழியை அவ்வப்போதாவது பேசுவோம். அப்போதுதான் நம் சந்ததி பிறரின் பரிவு பெறும்.

“அன்பில் நம்பிக்கை வை, அது துயரில் கொண்டுபோய் விட்டாலும் பரவாயில்லை. இதயக் கதவுகளை மட்டும் மூடிவிடாதே! என்கிறார் தாகூர்.

சில காரணங்களுக்காகப் பலரையும் விரும்புகின்றோம். காரணத்தையும் மீறிச் சிலரை நேசிக்கின்றோம். அதற்கு பெயர்தான் அன்பு. அந்த அன்பு என்னும் பொக்கிஷம் உங்களிடம் இருந்தால் உங்கள்மீது பிறர் பார்வையும் இறைவனின் கனிவும் உங்களை நோக்கி இருக்கும்.

முன்பொரு காலத்தில் எந்த விலங்கும் இல்லாமல் மனிதர்கள் இருந்த காலத்தில் உலகம் முழுவதும் குதிரைகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்தன. ஓரிடத்தில் நிறைந்திருந்த புல்வெளியில் ஒரே ஒரு குதிரை மட்டும் மேய்ந்து வந்தது. அதனால் அந்த புல்வெளி முழுவதும் தனக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்துக் கிடந்தது.

ஒருநாள், எங்கிருந்தோ வந்த ஒரு மான் புல்லை மேய்ந்ததுடன் இங்கும் அங்கும் ஓடித் திரிந்து வயல்வெளியை, புல்வெளியை நாசப்படுத்தியது. அது அங்கு சுதந்திரமாக இருந்தது.

இதைக் கண்டு குதிரைக்கு கோபம் பொங்கியது. அந்த மானை எப்படிப் பழிவாங்குவது. அதை விரட்டி அடிக்க வழி என்ன என்று யோசித்தது. எனவே, இந்த விஷயத்தில் தனக்கு உதவும்படி பக்கத்து நிலத்துக்குச் சொந்தக்காரனிடம் கோரியது குதிரை.

‘அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. செய்து விடலாம். நீயும் உதவி செய்ய வேண்டும். முதலில் நான் சொல்கிறபடி செய்.

இதோ இந்தக் கடிவாளத்தை உன் வாயில் மாட்டிக் கொள். பிறகு உன் முதுகின் மேல் நான் உட்கார்ந்து கொண்ட பிறகு அப்படியே அந்த மானை அம்பால் வீழ்த்தி விடுவேன். சம்மதமா...?” என்று மனிதன் கேட்டான். ‘சரி’ என்று குதிரை ஒப்புக் கொண்டது.

குதிரையின் வாயில் முதல் முறையாகக் கடிவாளம் ஏறியது. அதன்மீது ஏறி அமர்ந்தான் அந்த மனிதன். மானைப் பார்த்து அம்பு விட்டான். மான் தப்பி ஓடிவிட்டது.
அடுத்து குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து விரட்டி இங்கும் அங்கும் ஓட்டினான். குதிரையும் அவன் கட்டளைப்படி ஓடியது. பிறகு, தனது தோட்டத்தில் குதிரையை பிடித்து கட்டி வைத்தான். குதிரை அவனுக்கு அடிமையானது. அதன் பிறகு குதிரைகள் இன்று வரை மனிதர்களுக்கு அடிமைகளாக அவனைச் சுமந்து திரிகின்றன.

பழிவாங்க நினைப்பது ஆபத்தானது. ஒரு கட்டத்தில் அது எதிரியை மட்டுமல்ல, நமக்கே பாதிப்பைத் தரும்.

விட்டுக்கொடு உனக்கு வேண்டியது கிடைக்கும். இதுதான் நட்பை, குடும்ப வாழ்வை சந்தோஷம் கொள்ளச் செய்யும் செயல்.

ஐந்து வினாடி நாம் புரியும் புன்னகை ஒரு புகைப்படத்தை அழகாக்கும் என்றால், எப்போதும் முகத்தில் புன்னகை கொண்டிருந்தால் அது வாழ்க்கையை எவ்வளவு அழகாக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.

தொடரும்...

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

27 Dec, 05:15


சில காரணங்களுக்காகப் பலரையும் விரும்புகின்றோம். காரணத்தையும் மீறிச் சிலரை நேசிக்கின்றோம். அதற்கு பெயர்தான் அன்பு. அந்த அன்பு என்னும் பொக்கிஷம் உங்களிடம் இருந்தால் உங்கள்மீது பிறர் பார்வையும் இறைவனின் கனிவும் உங்களை நோக்கி இருக்கும்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

26 Dec, 00:17


சந்தோஷம் தேவை என்று நினைப்பவர்கள் அது எப்படி பெறலாம். எங்கிருக்கிறது என்று ஒரு தேனீயைப் போல பார்த்து சேகரித்து எடுத்து வருவார்கள். தேனீயைப்போல சந்தோஷம் என்னும் தேன் கூட்டைக் கட்டுங்கள். அது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் வாழ்வில் தித்திப்புத் தரும் இனிய செயலாகும்.

தொடரும்...

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

26 Dec, 00:17


சந்தோஷத்தின் சூட்சுமம் (தன்னம்பிக்கை கட்டுரைகள்)

7. புத்திசாலித்தனமே சந்தோஷம்

நன்றி - சபீதா ஜோசப்


வாழ்க்கை வாழ்வதற்கே! அதிலும் குறிப்பாக சந்தோஷமாக வாழ்வதற்கே என்பதில் யாருக்கும் சந்தேகம் கிடையாது. ஆனால் சந்தோஷமாக வாழ்வது என்பது தனிக்கலை. அதைக் கற்றுத்தருவது சிரமம். சந்தோஷம் என்னும் கலையை அவரவரே கற்றுக்கொள்ள வேண்டும். அது அவரவரிடமே இருக்கும் ஒரு செயல்.

நீங்கள் சந்தோஷம் என்னும் வெளிச்சத்தை பிறர்மீது வீசும்போது சந்தோஷம் என்னும் வத்திக்குச்சியை உரசி ஆயிரம் வாலா பட்டாசு மீது போடும்போது அது தொடர்ச்சியாக ஒளிச்சிதறலைப் பாய்ச்சிக்கொண்டு படர்ந்து செல்லும். சந்தோஷமும் அப்படித்தான் தொட்டால் தொடரும்.

சந்தோஷம் என்பது ஒரு தொற்று வைரஸ்போல் அது விரைவில் மற்றவரையும் பற்றிவிடும். ஆனால் முட்டாள்களுக்கு சந்தோஷத்தைப் பற்ற வைக்கும் திரி எந்தப் பக்கம் இருக்கிறது என்பது தெரியாது. அவன் எல்லா பக்கமும் பற்ற வைக்க திரி தேடுவான்.

“இரண்டு பேர் யுத்தம் நடந்த பகுதிகளில் சிதறிக் கிடக்கும் பொருள்களைச் சுருட்டிச் செல்ல நினைத்தார்கள். அந்த இருவரில் ஒருவன் புத்திசாலி. மற்றவன் முட்டாள். முதலில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்தார்கள். அங்கே ஆட்டு ரோமம் கிடந்தது. அதை இரண்டு பேரும் மூட்டையாக கட்டிக்கொண்டு கிளம்பினார்கள்.

வரும் வழியில் ஜவுளி மூட்டைகள் கிடந்தன. புத்திசாலி கம்பளி மூட்டையை வீசிவிட்டு ஜவுளி மூட்டையை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். முட்டாள் கம்பளி மூட்டையோடு ஜவுளி மூட்டையையும் எடுத்துக் கொண்டு ரொம்ப சிரமப்பட்டு நடந்தான்.

சிறிது தூரம் சென்றதும் இன்னொரு இடத்தில் சட்டைகள், கோட்டுகள் போன்ற ஆடைகள் கிடந்தன. புத்திசாலி ஜவுளி மூட்டையை தூக்கிக் கடாசி விட்டு அந்த அழகிய ஆடைகளை மூட்டைகட்டி எடுத்துக் கொண்டான். அப்போது முட்டாள் இரண்டு மூட்டையையே சுமக்க முடியவில்லை இது வேறு எதற்கு என்று கிளம்பி விட்டான்.

இரண்டு பேரும் மேலும் நடந்தார்கள். வழியில் வெள்ளிப் பொருட்கள் சிதறிக் கிடந்தன. உடனே புத்திசாலி ஆடைகளின் மூட்டையைக் கீழே போட்டுவிட்டு வெள்ளிப் பொருட்களை மூட்டைக்கட்டிக் கொண்டு புறப்பட்டான். முட்டாள் தமது கம்பளி ஜவுளி மூட்டைகளுடனே சிரமத்துடன் நடந்தான். அவன் வெள்ளியை எப்படி எடுப்பது. எதில் வைத்து எடுத்துச் செல்வது என்று விட்டுவிட்டான். தொடர்ந்து இருவரும் நடந்தார்கள்.

வழியில் தங்க நகைகள் சிதறிக் கிடந்தன. புத்திசாலி வெள்ளி மூட்டையைக் கீழேபோட்டான். உடனே தங்க நகைகளை அள்ளி மூட்டையாகக் கட்டினான். முன்னை விட படு உற்சாகமாக நடையைக் கட்டினான். முட்டாளோ கம்பளி ஜவுளி மூட்டைகளை கீழே போடவில்லை. மேலும் இதை அள்ளி எதில் போடுவது என்று நினைத்துக் கொண்டு நடந்தான். வீட்டுக்குச் செல்லும் வழியில் பலத்த மழை பெய்தது. இருவரின் முட்டைகளும் நனைந்தன.

மழையில் நனைந்து கம்பளி மூட்டை மிகவும் கனமாகி விட்டது. ஜவுளிகள் மூட்டையும் மழையில் நனைந்து கனமாகி விட்டது. அதை சுமக்க முடியாமல் மூட்டைகளை கீழே கடாசிவிட்டு முட்டாள் வெறும் கையுடன் வீட்டுக்குச் சென்றான்.

புத்திசாலியோ தான் நனைந்தபோதும் சந்தோஷமாக தங்க மூட்டையுடன் வீட்டுக்குச் சென்று வசதியாக வாழ்ந்தான்” இது ரஷிய ஞானி லியோ டால்ஸ்டாய் கதை.
ஆக வாழ்க்கையில் எது முக்கியம், எது முக்கியமில்லை என்பத தெரிந்து தேவையானதை எடுத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். தேவையில்லாததைச் சுமந்து சென்று சிரமப்படாதே என்பதே இந்தக் கதை உணர்த்தும் பாடம். தேவையில்லாதது அதிகமானால் தேவையானதை இழக்க நேரிடும்.

நமக்கு எது முக்கியம் என்பது தான் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம். எது சந்தோஷம் தரும் என்று அந்த புத்திசாலி புரிந்து வைத்திருந்தான். எனவேதான் ஒவ்வொன்றாக பரிசீலித்து எடுத்தான். மற்றதைப் போட்டு விட்டான். அவன் எல்லாவற்றையும் எடுத்துச் செல்லவேண்டும் என்று பேராசைப் பட்டிருந்தால் அவனால் எதையுமே எடுத்துச் செல்ல முடியாமல் போயிருக்கும்.

எனவே தனக்கு மிக அவசியமானதை எடுத்ததும் புத்திசாலி மற்றவைகளை விட்டுத் தள்ளினான். ஆனால் முட்டாள் எது தேவை எது தேவையில்லை என்பது அறியாமல் உள்ளதையும் கீழே போட நேர்ந்தது.

ஒரு முட்டாள் தன்னுடன் வாழ முடியாமல் விட்டுப் போனவர்களை நினைத்து வருத்தப்படுவான்... ஆனால் ஒரு புத்திசாலி தன்னை விட்டுப் போனவர்கள் வருத்தப்படும் அளவுக்கு வாழ்ந்து காட்டுவான்...

“உங்களுடைய சொந்த சந்தோஷத்தைக் கடந்து, நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஒரு சேவையாகவும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடனும் எண்ணி வாழ்கின்றபோது உண்மையான சந்தோஷத்தை அடைய முடியும்“ என்கிறார் லியோ டால் ஸ்டாய்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

26 Dec, 00:17


“உங்களுடைய சொந்த சந்தோஷத்தைக் கடந்து, நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஒரு சேவையாகவும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடனும் எண்ணி வாழ்கின்றபோது உண்மையான சந்தோஷத்தை அடைய முடியும்“

- லியோ டால் ஸ்டாய்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

24 Dec, 08:51


சந்தோஷத்தின் சூட்சுமம் (தன்னம்பிக்கை கட்டுரைகள்)

6. பாராட்டிவிட்டு பேசுங்கள்


எந்த வார்த்தை சந்தோஷத்தைக் கொடுக்கும். எந்த வார்த்தை சங்கடத்தைக் கொடுக்கும் என்பதைத் தெரிந்து வார்த்தைகளைக் கையாள்பவன் புத்திசாலி. நெல்லிக்காய் மூட்டை அவிழ்ந்ததுபோல் வார்த்தைகளை அள்ளிக் கொட்டுகிறவன் முட்டாள்.

பிறரை சந்தோஷப்படுத்தும் வகையில் பாராட்டி பேசப் பழகுங்கள். அதனால் உங்களுக்கு நண்பர்கள், ஆதரவாளர்கள் பெருகுவார்கள். பிறரை விமர்சனம் செய்தே, குற்றம் கண்டுபிடித்தே பேசுகிறவனைக் கண்டாலே அலறி ஓடுவார்கள். அதற்காக பிறர் செய்த தவறைச் சுட்டிக் காட்ட வேண்டாம் என்று அர்த்தம் அல்ல. அவன் குற்றத்தை, தவறை அவனே ஏற்றுக்கொண்டு வருந்தும் வகையில் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துச் சொல்வது நல்லது.

மனிதர்களில் சிலரை ஜோதிடமும் கனவும் சிலநேரங்களில் படாதபாடுபடுத்தி விடுகிறது. அவர்களின் நம்பிக்கையான ஜோதிடத்திற்கு கனவுக்கு சரியான விளக்கம் கொடுத்தால் அன்றி அவர்களை திருப்திப்படுத்த இயலாது.

மனிதர்களின் தவறான புரிதல் சில நேரங்களில் விபரீதமாக இருக்கும். ஒரு மன்னன் இருந்தான். அவனுக்கு ஒருநாள் இரவு ஒரு கனவு வந்தது. அவனுடைய பற்கள் எல்லாம் விழுந்து விட்டதைப் போன்ற கனவு அது.

மன்னன் காலையில் விழித்ததும் அலறி அடித்துக் கொண்டு போய் கண்ணாடியில் பற்களை பிதுக்கி பார்த்தான். பற்கள் இருந்தன. ஆனாலும் அந்த கனவு குறித்த பயம் மன்னனை ஆட்கொண்டது. இந்தக் கனவினால் இனி என்ன நேருமோ.. என்ன விபரீதம் ஏற்படப் போகுதோ என்று நினைக்க ஆரம்பித்தான். உடனே ஜோதிடனை வரவழைத்து தான் கண்ட கனவை விளக்கி.. ‘இதனால பாதிப்பு ஏதேனும் உண்டாகுமா... பார்த்துச் சொல்லுங்கள்’ என்றான் மன்னன்.

அவன் ஓலைகளை ஆராய்ந்து பார்த்து. “இந்தக் கனவுப்படி பார்த்தால் உங்கள் உறவுகள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்” என்றான் ஜோதிடன். அதைக் கேட்டதும் மன்னன் கோபத்தில் கொதித்தான்.

“என் சொந்தங்கள் எல்லாம் எனக்கு முன்பே மரணித்து விடும் என்கிறாயா? அப்போ என் மனைவி என் குழந்தைகள் எல்லாம் எனக்கு முன்னால் இறந்து போய் விடுவார்கள் என்கிறாயா... என்ன ஜோசியன் நீ? நீயெல்லாம் பெரிய புடலங்காய் ஜோசியனா...?” என்று கத்தினான் மன்னன்.

“இந்த பரதேசிப் பயலை சிறையில் அடைத்து அவன் வாயிலேயே குத்துங்கள்” என்று கட்டளை இட்டான். சந்தோஷமாய் பரிசு பெற வந்த ஜோதிடனுக்கு சந்தோஷமான வார்த்தைகளைக் கொண்டு பேச்சை ஆரம்பிக்கத் தெரியாததால் மாட்டிக் கொண்டான். மன்னனுக்கு நேரம் சரியில்லை என்று சொல்ல வந்த ஜோசியனுக்கு நேரம் சரியில்லாமல் போய்விட்டது.

ஜோசியனுக்குத் தண்டனை கொடுத்து சிறையில் தள்ளிய பிறகும் மன்னனுக்குள் இருந்த கனவு பயம் மட்டும் போகவில்லை. ஒருவேளை அவன் சொன்னது உண்மையாக இருந்தால் என்ற புதிய பயம் மன்னனைப் பற்றிக் கொண்டது. உடனே இன்னொரு ஜோதிடனை வரவழைத்து தன் கனவைச் சொல்லி விளக்கம் கேட்டான்.

வந்த ஜோதிடன் அதே நாடி ஓலையை எடுத்தான். படித்தான். மன்னன் முகத்தைப் பார்க்காமல் சில வினாடிகள் கணக்குப் போட்டுப் பார்ப்பதுபோல யோசித்தான்.. பிறகு அவன் சொன்னான்! “மன்னா! தங்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கிறது. ரொம்ப காலத்துக்கு நீங்க இருப்பீங்க. அனைவருக்குப் பின்னரும் நீங்கள் வாழ்வீர்கள்! எனவே உங்களுக்கு ஆயுள் கெட்டி” என்றான்.

அதைக் கேட்டதும் மன்னன் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான். ‘நீர் ஜோசியர்’ என்று பாராட்டி அந்த ஜோதிடனுக்கு நிறைய பரிசுகளை அள்ளிக் கொடுத்தான்.

இரண்டு ஜோதிடர்களும் சொன்னது என்னவோ ஒரே விஷயத்தைத்தான். சொன்ன விதம்தான் வேறு, வேறு. நம்முடைய பேச்சின் தொடக்கம் கேட்பவர் சந்தோஷப்படும் வகையில் இருந்தால் நமக்கு பரிசுகள் கிடைக்கும். சங்கடம் தரும் வகையில் இருந்தால் பிறரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

யாருடனும் தொடங்குமுன், நீங்கள் பேசுபவர்களின் நல்ல தன்மையை முதலில் பாராட்டிவிட்டு, பேச்சைத் தொடங்குங்கள். அவர் உங்கள் பேச்சை ஆர்வமாக கேட்பதுடன், அன்றிலிருந்து உங்கள் பேச்சு குறித்தும் ஒரு மதிப்பு அவரிடம் இருக்கும்.

யாரைச் சந்தித்தாலும் வாழ்த்திவிட்டு பேச்சைத் தொடங்குங்கள். உங்கள் முகநூலில் யாரும் தனக்கு பிறந்த நாள், மணநாள் என்று அறிவித்தவுடனே ஒரு லைக்போடுங்கள். முடிந்தால் நாலு வார்த்தை வாழ்க நலமுடன் என்று கமெண்ட் போடுங்கள். முகம் தெரியாத அந்த மனிதர் அன்று முதல் நண்பராகி விடுவார். நட்பு இப்படித்தான் ஆரம்பமாகிறது. இதுவே சந்தோஷத்தின் தொடக்கம்.

தொடரும்...

நன்றி - சபீதா ஜோசப்

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

24 Dec, 08:51


நம்முடைய பேச்சின் தொடக்கம் கேட்பவர் சந்தோஷப்படும் வகையில் இருந்தால் நமக்கு பரிசுகள் கிடைக்கும். சங்கடம் தரும் வகையில் இருந்தால் பிறரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

08 Nov, 01:21


சந்தோஷத்தின் சூட்சுமம் (தன்னம்பிக்கை கட்டுரைகள்)

5. ஆமை பொறாமை

பொறாமைக்காரனின் சந்தோஷத்தின் ஆயுள் ஐந்து நிமிடம்தான். ஏனென்றால் ஒன்றில் அவன் சந்தோஷம் காண்பதற்குள் இன்னொரு வயிற்றெரிச்சல் சம்பவத்தில் தள்ளப்பட்டுவிடுவான்.

போதும் என்ற மனம் இல்லாதவரைக்கும் அடுத்தவனைப் போன்று தான் உயரவில்லையே என்று நினைப்பவனுக்கு ஆற்றாமையின் இயலாமையின் வெளிப்பாடாக பொறாமை வெளிப்படுகிறது.

“நெருப்பு விறகைத் தின்பது போன்று, பொறாமை உங்களுடைய நன்மைகளைத் தின்றுவிடுகிறது” என்கிறார் நபிகள் நாயகம் (ஸல்).

தன் நாட்டுக்குப் புதிய தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் பக்கத்து நாட்டைச் சேர்ந்தவர், நல்ல அறிவாளி. அவரை வார்த்தையால் வெல்ல முடியாது என்று மன்னரிடம் சொல்லப்பட்டன. தன்னைவிட அறிவாளி யாருமில்லை என்று சொல்லப்பட்ட மன்னருக்கு இது ஏதோ செய்தது. எனவே ஆரம்ப நிலையிலேயே அந்த தூதரை மட்டம் தட்டிவிட வேண்டும் என்று நினைத்தார்.

‘இங்கே வரும்போது, அவரை எப்படியாவது அவமதிக்க வேண்டும் அமைச்சரே’ என்று சொல்ல, “கவலை வேண்டாம் மன்னா! அவர் சபைக்கு வரும்போது நான் ஒருவனுடைய கண்ணில் துணியைக் கட்டி அழைத்துவரச் செய்வேன். ‘இவன் யார்? என்று நீங்கள் கேட்க வேண்டும். ‘பக்கத்து நாட்டுக்காரன். திருடன்’ என்று நான் கூறுவேன். இது போதும் அறிவாளித் தூதனை மண் கவ்வச் செய்ய” என்று அமைச்சர் திட்டத்தைச் சொல்ல. ‘ஆஹா.. அப்படியே ஆகட்டும்’ என்றார் மன்னர்.

மறுநாள் தூதரும் வந்தார். மன்னரும் வரவேற்று விருந்தளித்தார். அப்போது கண்களைக் கட்டி, ஒருவனை இழுத்துப் போனார்கள். “யார் இவன். என்ன குற்றம் செய்தான்? என்று மன்னர் கேட்டதும், இவன் பக்கத்து நாட்டுக்காரன், இங்கே வந்து திருடியதாக கைது செய்யப்பட்டான் மன்னா” என்றார் அமைச்சர்.

மன்னர் சந்தோஷப் பெருக்கில் தூதரைப் பார்த்துச் சொன்னார். “பக்கத்து நாட்டுக்காரர்கள் திருடுவதில் கைதேர்ந்தவர்களோ?”

தூதர் அமைதியாகச் சொன்னார். “மன்னா! ஆற்றுக்குத் தெற்கே அதாவது உங்கள் நாட்டில் நடப்படும் கிச்சிலி மரமானது. கிச்சிலிப் பழங்களையும் ஆற்றுக்கு வடக்கே நடப்படும் அதே மரம் ஆரஞ்சுப் பழங்களையும் தருவதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இரண்டு மரங்களின் இலைகள் ஒன்றுபோலவே இருந்தாலும், அவை தரும் பழங்கள், வேறு வேறாக உள்ளன. இதற்கு என்ன காரணம்? யார் காரணம்..? இயற்கைச் சூழலும் கால நிலையும்தான் காரணம்.

எங்கள் நாட்டில் பிறந்தவர்கள் திருடுவதில்லை. ஆனால் உங்கள் நாட்டுக்கு வந்தால் அவர்கள் திருடர்களாக மாறிவிடுகிறார்கள். உங்கள் நாட்டின் சூழல் அவர்களை திருடுமாறு தூண்டிவிடுவதாக இருக்குமோ என்று நான் நினைக்கிறேன்” என்று தூதர் சொன்னதும், மன்னரின் சந்தோஷம் காணாமல் போனது.

அசட்டு சிரிப்புச் சிரித்து, “உங்களை வெல்ல முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன்” என்று எதுவும் நடக்காதுபோல மன்னர் சொன்னார். ஆனால் அவருக்குள் அடுத்து எப்போது அந்தத் தூதனை அவமானப்படுத்துவது என்பதிலே யோசனை இருந்தது. ஆக பொறாமை சாதாரண விஷயத்திற்காகவும் வரும் நிம்மதியைக் கெடுக்கும்.

“பொறாமைப் பிடித்தவர்களின் பேச்சைப் பொருட்படுத்தாதே, தவளைகள் எவ்வளவுதான் சத்தம் போட்டாலும் தாமரை மலரை நோக்கி வண்டுகள் வருவதை குறைத்துவிடாது” என்பது முகநூல் நண்பர் ரௌத்திரனின் தகவல்.

உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்பது பைபிள் வாசகம். அதற்காக வீட்டிலேயே சும்மா உட்கார்ந்திருப்பது எப்படி சந்தோஷத்தைக் கொண்டு வரும்? உழைப்பின்மீதும் ஆர்வமும் அடுத்தவர்மீது அன்பும் கொண்டிருப்பவர்களை துக்கம் பாதிக்காது.

பொறாமைப்படாதீர்கள் பொறாமையால் சின்னச் சின்ன சந்தோஷங்கள்கூட சங்கடங்களாக மாறிவிடும். பிறர் வளர்ச்சியை வாழ்த்துங்கள். அவர் உங்களுடன் தோழமை கொள்வார். அதனால் உங்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படும்.

தொடரும்...

நன்றி - சபீதா ஜோசப்

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

08 Nov, 01:20


பொறாமைப்படாதீர்கள் பொறாமையால் சின்னச் சின்ன சந்தோஷங்கள்கூட சங்கடங்களாக மாறிவிடும். பிறர் வளர்ச்சியை வாழ்த்துங்கள். அவர் உங்களுடன் தோழமை கொள்வார். அதனால் உங்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படும்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

03 Nov, 09:06


‘ஆற்று நீர் வாதம் போக்கும்
அருவி நீர் பித்தம் போக்கும்
எட்டியும் எருக்கும் நஞ்சு போக்கும்
நல்ல காற்று ஆயிரம் அவுன்ஸ் மருந்துக்குச் சமானம்
சூரியன் போகாத இடத்தில் வைத்தியர் நுழைவார்
தண்ணீர்தான் உணவின் அரசன்.
ஆயுளை நீடிக்க உணவுகளைக் குறையுங்கள்
மனிதன் எதை உண்கிறானோ அதன்படியே மாறுகிறது
இந்த இயற்கை மருத்துவ குறிப்புகளை மனதில் வையுங்கள்.’

ஆரோக்கியம் வாழ்வில் வந்தால் சந்தோஷம் நம் வாழ்வில் படர்ந்திருக்கும். ஆரோக்கியமும் ஒரு ஆனந்தம் தான் என்பதை உணருங்கள்.

தொடரும்...

நன்றி - சபீதா ஜோசப்

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

03 Nov, 09:05


சந்தோஷத்தின் சூட்சுமம் (தன்னம்பிக்கை கட்டுரைகள்)

4. ஆரோக்கியம் நம் கையிலே

சந்தோஷமாக சிரிக்கத் தெரிந்தவர்கள் இளமையாக மிளிர்ந்து கொண்டிருப்பார்கள். சிரிக்க மறந்தவர்கள் நாளும் கறுத்தமுகமாய் தோல்விகளை நோக்கி சென்று கொண்டிருப்பார்கள்.

“நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது” என்று ஒரு கிழவரிடம் சிலர் கேட்டார்கள். கிழவிகளிடம் எனக்கு அவ்வளவு பிரேமை கிடையாது என்றார் கிழவர்.

“உங்களிடம்தான் பணம் இருக்கிறதே. அழகான ஓர் இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாமே?”

கிழவனான எனக்கு கிழவிகளிடம் ஆசை இல்லாதபோது இளமை தவழும் ஒரு பெண். என்னைப் போன்ற கிழவனை எப்படி மணந்து கொள்வாள்?” என்றாராம் அந்த மூத்த குடிமகன்.

“கோடைக் காலத்தில் பழுத்துக் குலுங்கும் மரம் குளிர்காலத்தில் ஒரு இலைகூட இல்லாமலாகி விடுகிறது. இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளாதவன் தனக்கு ஒரு கஷ்ட காலம் வரும் என்பதை மறந்து விடுகிறான்.” இப்படித்தான் பலர் தன்னை சூழ்ந்துள்ள உலகைப் புரிந்து கொள்ளாத சோம்பேறிகளாக இருக்கிறார்கள்.

குதிரைக்கு வைத்தியம் செய்யும் ஒருவனிடம் தன் கண்நோய்க்கு மருந்து கேட்டுச் சென்றானாம் ஒருவன். அவன் குதிரைக்குப் போடும் மருந்து கண்ணில் போட அவனுக்கு கண்பார்வை போய்விட்டது. வழக்கு நீதிமன்றத்துக்குப் போனது. நீதிபதி யாரிடம் குறையுள்ளது என்பதை அறிந்தார். ‘வைத்தியனை விட்டு, குதிரை வைத்தியனிடம் சென்ற இவன் ஒரு கழுதை போன்றவன்’ என்றாராம்.

காரியத்தின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொண்டவன், திறமையில்லாதவனிடம் அந்த வேலையை ஒப்படைக்க மாட்டான். இதனால் அவனுக்கு அவமானம்தான் நேரிடும். அதாவது கோரைப்புல்லினால் பாய் நெய்பவனிடம் போய் பட்டு நூலைக் கொடுத்து நேர்த்தியான பட்டுத்துணி நெய்து தரும்படி சொன்னால் எப்படி இருக்கும்...?

ஆக யாரிடம் எந்த வேலையை ஒப்படைக்க வேண்டும் என்பதை அறியாதவன் தானும் நஷ்டப்பட்டு பிறரையும் நஷ்டத்துக்குள் ஆக்குவான் என்பதை இப்படி விளக்குகிறார் சிந்தனையாளர் சா அதி.

ஹிட்லர் தன்னுடைய மேஜையின் மேல் எப்பொழுதும் மூன்று கலர் பென்சில்களை வைத்திருப்பான். அந்த ஒவ்வொரு கலரும் ஒரு தன்மையுடையது. அதேபோல அவன் எந்தக் கலரில் எழுதினால் அது யாருக்கு எழுதுவான் என்பது அவன் மட்டும் அறிந்த விஷயம்.

அவன் தனது நண்பர்களுக்கு கடிதம் எழுதும்போது பச்சை நிறப் பென்சிலையும், தன் எதிரிகளுக்கு கடிதம் எழுதும்போது சிவப்பு பென்சிலையும், தான் முன்ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய செய்திகள் பற்றி குறிப்பெடுக்க, நீல நிறப்பென்சிலையும் உபயோகித்து வந்தான்.

எந்தத் துறையைச் சேர்ந்தவராகவும் நீங்கள் இருங்கள். ஆனால் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். அதிலும் குறிப்பாக மருத்துவத் துறையிலும், ஆன்மிகத் துறையிலும் இருப்பவர்கள் சற்று கூடுதலான கவனத்துடன் இருக்க வேண்டியது மிக முக்கியம்.

ஏன் என்றால், மக்கள் மருத்துவரிடம் தங்கள் உயிரையும், ஆன்மிகத் தலைவர்களிடம் தங்கள் நம்பிக்கையையும் முழுமையாக ஒப்படைக்கிறார்கள்.

ஒருசில மனிதர்களைப் பார்த்து அந்தக் காலத்து ஆளுப்பா’ அதான் உடம்பும் ஆளும் அப்படியிருக்கு என்பார்கள் சிலர். அந்தக் காலம் என்பதில் நம் வரலாறு மறைந்திருப்பது காணலாம்.

அந்தக் காலத்தில் நீர், நிலம், காற்று எல்லாம் தூய்மையாக இருந்தது. அதனால்தான் அந்த சுத்தமான நீரைப் பருகியும் சுத்தமான நிலத்தில் விளைந்ததை சாப்பிட்டும் சுத்தமான நிலத்தில் உயர்ந்து வளர்ந்த மரங்களில் இருந்துவந்த சுத்தமான காற்றை சுவாசித்தும் வளர்ந்ததால் அவர்கள் உடல், உள்ளம் ஆரோக்கியமாக இருந்தது.

அதுமட்டுமல்ல.. அந்த மக்கள் வீட்டிலும் வெளியிலும் நாளும் உழைத்தார்கள். மண்பாண்டங்களில் சமைத்தார்கள். ஓடும் ஆற்றில் நீராடினார்கள். பக்கத்துக்கு தெருவுக்குகூட டூவீலரில் நாம் செல்வதுபோல் செல்லாமல் நடந்தே சென்று வந்தார்கள். இதனால் உடல் வலுப்பெற்றது. தெருவாசிகளிடம் நட்பு வலுப்பெற்றது. ஆக இப்படி ஆரோக்கியமான சூழலில் வளர்ந்து வாழ்ந்த மக்கள் அவர்கள் என்பதால் தான் அப்படிச் சொல்லப்படுகிறது.

ஆனால் இன்றைக்கு அதுபோன்ற சுற்றுச்சூழல் உள்ளதா? நீரில் சுத்தமில்லை. நிலத்தில் மாசுக்கலவை, காற்றில் சுத்தமில்லை. பிறகு எப்படி இந்தக் காலத்து மக்கள் ஆரோக்கியமானவர்கள் என்று சொல்லமுடியும்.

இது மேலும் சீரழிவை நோக்கியே போய்க்கொண்டிருக்கிறது. பூமியில் வெப்பம் கூடிக்கொண்டே இருக்கிறது. பனிமலைகள் கரைந்து கொண்டிருக்கின்றன. இனி அடிக்கடி பூகம்பம், சுனாமிகள் நிகழலாம். என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்பதை நிஜமாக்கி இயற்கையை மறுபடியும் செழிக்க வைத்தால் அந்த எச்சரிக்கையிலிருந்து தப்பிக்கலாம். எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நினைத்தால் சுற்றுச் சூழலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நல்லது.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

03 Nov, 09:04


கோடைக் காலத்தில் பழுத்துக் குலுங்கும் மரம் குளிர்காலத்தில் ஒரு இலைகூட இல்லாமலாகி விடுகிறது. இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளாதவன் தனக்கு ஒரு கஷ்ட காலம் வரும் என்பதை மறந்து விடுகிறான்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

02 Nov, 02:35


சந்தோஷத்தின் சூட்சுமம் (தன்னம்பிக்கை கட்டுரைகள்)

3. முயற்சிக்குத் தகுந்த பலன் உண்டு


மற்றவர்களுக்கு சந்தோஷம் தருகின்ற செயல்களில் தர்மமும் ஒன்று. இல்லையென்று கூறாமல் தர்மம் செய்ய வேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்தும் வள்ளல் நபிகள், ‘பிச்சை எடுக்கும் செயலை இழிவான தொழில்’ என்கிறார்.

ஒருநாள் ஒரு வாலிபன் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து பிச்சை கேட்டான். தோழர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த நபிகள் அந்த வாலிபனைப் பார்த்துக் கேட்டார். ‘உன் வீட்டில் ஏதேனும் பொருள் இருக்கிறதா?’

‘ஒரு ஒட்டகத் தோல் இருக்கிறது. அதை விரித்துப் படுக்கிறோம். ஒரு பாத்திரமும் இருக்கிறது. தண்ணீர் குடிப்பதற்கு அதைப் பயன்படுத்துகிறோம். இந்த இரண்டும்தான் எங்கள் சொத்து’ என்றான் வாலிபன்.

‘வீட்டுக்குச் சென்று அந்த இரண்டு பொருட்களையும் என்னிடம் கொண்டு வா’ என்றார் நபிகள் நாயகம். அப்படியே அந்த வாலிபன் சில நிமிடங்களில் இரண்டு பொருட்களையும் எடுத்து வந்தான். நபிகள் தம்முடைய தோழர்களைப் பார்த்து ‘யாரேனும் இவைகளை விலை கொடுத்து வாங்குவீர்களா?’ எனக் கேட்டதும், ஒரு தோழர் ‘நான் ஒரு திர்ஹம் (அரபு நாணயம்) தருகிறேன்’ என்றார். ‘எவரேனும் அதிக விலை கொடுக்க முடியுமா...’ என நபிகள் கேட்டார். இன்னொரு தோழர் ‘நான் இரண்டு திர்ஹம் கொடுக்கிறேன்’ என்றார்.

அந்தத் தோழரிடம் இரண்டு திர்ஹம் பெற்று அதை வாலிபனிடம் கொடுத்து ‘வாலிபனே’! இதில் ஒரு திர்ஹம் கொண்டு போய் உணவு தானியம் வாங்கிக் கொள். அதை சமைத்து நீயும் உன் வீட்டாரும் உண்ணுங்கள். மற்றொரு திர்ஹம் கொண்டுபோய் ஒரு கோடரி வாங்கிக்கொண்டு என்னிடம் வா’ என்று நபிகள் நாயகம் சொல்லி அனுப்பினார்.

வாலிபன் அப்படியே செய்தான். சிறிதுநேரத்தில் கோடரியுடன் வந்தான். அந்தக் கோடரிக்கு கம்பு தயாரித்துக் கொடுத்த நபிகள் நாயகம்.. “காட்டுக்குச் செல்! இந்தக் கோடரியால் காய்ந்த மரக்கிளைகளை வெட்டிக் கொண்டு வா. அதைக் கடைத்தெருவில் விற்பனை செய். பிறகு 15 நாள் கழித்து என்னிடம் வா; உனக்கு எவ்வளவு லாபம் கிடைத்தது என்று சொல்” என்று கூறி அனுப்பினார்கள்.

15 நாட்கள் கடந்தன. அந்த வாலிபன் நபி பெருமானார் முன் வந்தான். அவன் முகத்தில் தெளிவும் சந்தோஷமும் இருந்தது. “நாயகம் அவர்களே! இந்த 15 நாளில் நான் பத்து திர்ஹம் சம்பாதித்தேன். அதில் உடுத்திக் கொள்ள ஆடையும் வாங்கினேன். நான் சந்தோஷமாக இருக்கிறேன். பிறரை நம்பிப் பிழைக்க வேண்டிய அவசியம் இனி எனக்கு இல்லை” என்றான்.

அதைக் கேட்டு நாயகம் (ஸல்) சொன்னார்கள். “எனக்கும் அளவுகடந்த சந்தோஷம்தான்! முயற்சிக்குத் தகுந்த பலனை இறைவன் கொடுக்கின்றான் என்பதை மறந்து விடாதே! பிச்சை கேட்போரை இறைவன் விரும்புவதில்லை.”

“சந்தோஷம் என்பது ஒரு வாசனைத் திரவியம். அதை மற்றவர்மீது நீ தெளிக்கும்போது உன்மீதும் ஒரு சில சொட்டுகள் விழும்“ என்பது எமர்சன் வாக்கு. எனவே பிறர் சந்தோஷமாக வாழ வழி செய்யுங்கள். அதனால் இருவருக்கும் சந்தோஷம் கிட்டும்.

“சுவாசிப்பது எவ்வளவு முக்கியமோ, நீர் அருந்துவது எவ்வளவு முக்கியமோ, உணவு உண்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று நாம் சாதனை எதையாவது நிகழ்த்த வேண்டும் என்பதும் மிக முக்கியம்.

சும்மா உறங்கி காலத்தை வீணாகக் கழிப்பதற்காக நாம் பிறக்கவில்லை. நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் சாதிக்கும் வேட்கை ஏற்பட்டே தீர வேண்டும். எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும். அதை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். அதன் மூலம் சாதனைகளைப் படைக்க முடியும். முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்“ இப்படி தன்னம்பிக்கை வார்த்தைகளை நம்முன் இட்டு நிரப்புகிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம். சாதிக்க நினைப்பவர்கள் இந்த வார்த்தைகளை மனதில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு அழகான வண்ணத்துப் பூச்சி தன் அருகில் பறந்து திரிவதைப் பார்த்து விட்டது ஒரு கருவண்டு. தனக்குள் புகைந்து புலம்பியது. “எனக்கு மட்டும் அந்த வண்ணச்சிறகு இருந்தால் எவ்வளவு நல்லது. நான் ஒரு தரித்திரம். யாரும் என்னைக் கண்டு கொள்வதில்லை” என ஏங்கியது.

சிறிது நேரத்தில் விளையாட்டுக் குழந்தைகளின் கையில் அந்த வண்ணத்துப் பூச்சி அகப்பட்டு அவஸ்தைப்பட்டது. இதைப் பார்த்த கருவண்டு, ‘நமக்கு அழகு இல்லை என்பதைவிட அடுத்தவரின் தொந்தரவு இல்லை. அமைதியாய் வாழ முடிகிறதே’ என்று சந்தோஷப்பட்டது. இதைத்தான் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும் என்பது.

‘மற்றவர்களை சந்தோஷப்படச் செய்வதே ஒருவன் பெற்றிருக்க வேண்டிய நல்ல பண்புகளில் மிகவும் மேலான பண்பு’ என்றார் செமஸ்டர் பீல்ட்பிரபு. அந்த நல்ல பண்பை வளர்த்துக்கொள்வோம்.

தொடரும்...

நன்றி - சபீதா ஜோசப்

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

02 Nov, 02:35


சந்தோஷம் என்பது ஒரு வாசனைத் திரவியம். அதை மற்றவர்மீது நீ தெளிக்கும்போது உன்மீதும் ஒரு சில சொட்டுகள் விழும்“ என்பது எமர்சன் வாக்கு. எனவே பிறர் சந்தோஷமாக வாழ வழி செய்யுங்கள். அதனால் இருவருக்கும் சந்தோஷம் கிட்டும்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

30 Oct, 02:01


முன்பின் யோசிக்காமல் முரட்டுத்தனமாகப் பேசி விடுபவன் படித்தவர்கள் முன்னிலையில் அழுகிப்போன தக்காளி போலாவான். நகைக்கடையில் கண்ணாடி முத்துக்கு ஒரு தானிய மணியின் மதிப்புக்கூடக் கிடைக்காது. சூரியனுக்கு எதிரில் தீக்குச்சி கொளுத்துவது போல்” என்கிறார்.

நல்லாபேசுங்க, நல்லதையே பேசுங்க. பயனில்லாத பேச்சால் இருவருக்கும் காலமும் மூச்சும் வேஸ்ட், அடுத்தவர் மனமும் முகமும் மலரும் வண்ணம் சந்தோஷம் கலந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். உங்களைச் சுற்றி சந்தோஷம் சூழும். நண்பர்கள் வட்டம் பெருகும்.

தொடரும்...

நன்றி - சபீதா ஜோசப்

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

30 Oct, 02:01


சந்தோஷத்தின் சூட்சுமம் (தன்னம்பிக்கை கட்டுரைகள்)

2. சந்தோஷம் எங்கே இருக்கிறது?


அழகானவை நல்லவை என்பார்கள். அப்படி யென்றால் நல்லவர்கள் அழகானவர்கள் தானே. சந்தோஷம் உள்ளே இருந்தால் முகத்தில் பிரகாசம் இருக்கும் என்பார்கள். அப்படியென்றால் சந்தோஷமானவர்கள் அழகானவர்கள்தானே..

நம் செயல்கள் அழகானவையாக இருந்தால் நாமும் பிறருக்கு அழகாகத் தெரிவோம். பிறரின் கவனத்தில் இருப்போம்.

“நம்மள்ல நிறையப் பேருக்குச் சந்தோஷம்கறது ஏதோ, இன்னும் கொஞ்ச நாளில் கிடைக்கப் போற விஷயமாகத்தான் இருக்கு. வேலையில்லாம கஷ்டப்படறவங்க வேலை கிடைச்சதும் சந்தோஷம் வந்துடும்னு நினைக்கிறாங்க. வேலை கிடைச்சவங்களுக்கு கல்யாணம் ஆனால் சந்தோஷம் வந்துடும்னு நம்பிக்கை. கல்யாணம் ஆனவங்களுக்கு ஒரு குழந்தை பொறந்தால் சந்தோஷம். குழந்தை உள்ளவங்களுக்கு அது படிச்சு, ஒரு பக்குவத்துக்கு வரணுமேங்கிற கவலை.

இப்படி நாம ஏதாவது ஒரு இலக்கை வைத்து, சந்தோஷத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டே போகிறோம். ஒரு இலக்கை அடைஞ்சா, உடனடியாக இன்னொரு ஏக்கம் வந்து சந்தோஷத்தைத் தள்ளி விட்டுவிட்டு, வாழ்க்கையோட கடைசி வரைக்கும் இதே விளையாட்டுதான்.

ஆனால் சந்தோஷம் என்பது தள்ளிப்போட வேண்டிய விஷயமில்லை. அந்தந்த காலகட்டத்துல, உணர வேண்டிய அற்புதமான அனுபவம்.

“நிகழ்காலத்துல வாழ ஆசைப்படுகிற பெண் நான், அந்தந்த நிமிஷத்துல எனக்குக் கிடைக்கிற விஷயங்களை நினைத்து சந்தோஷப்பட நான் மறக்கறதே இல்லை.

வைத்த செடி பூப்பூத்தால் ஒரு சின்னக் குழந்தையோட சிரிப்பைப் பார்த்தால், எழுபது வயது அம்மா ஒருவர் டூ வீலர் ஓட்டிட்டுப் போனால்... இதெல்லாமே எனக்குள் சந்தோஷத்தைப் பூக்க வைக்கிற விஷயங்கள், கனவுகளையும் ஏக்கங்களையும் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு வாழ்க்கையோட அந்தந்த தருணங்களில் வாழ்ந்து பாருங்கள்.. அதுதான் வாழ்க்கை!”

“என்னோட சந்தோஷத்துக்கு நான் கையாள்கிற இன்னொரு யுக்தி. ஒவ்வொரு நாளும் தூங்குறதுக்கு முன்னாடி அன்னிக்கு எனக்குக் கிடைத்த நல்ல விஷயங்களை மட்டும் அசைபோட்டு மனசுல பதிய வைக்கிறதுதான். அடிக்கடி ஞாபகப்படுத்திக்கற விஷயங்கள் நம்ம மனசுல ஆழப்பதியும்ங்கறது உங்களுக்கே தெரிஞ்சதுதானே!” இப்படி தான் அறிந்த சந்தோஷத் தருணங்களை ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார் தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான திலகவதி.

எங்கே இருக்கிறது சந்தோஷம்.. அது நம்மிடம்தான் இருக்கிறது. சிலருக்கு வெகுதூரத்தில், சிலருக்கு கைக்கு எட்டும் தூரத்தில், இன்னும் சிலருக்கு கண்ணுக்கும் வாய்க்கும் உள்ள தூரத்தில் இருக்கும். சிலருக்கு கை அருகே இருக்கும். சிலருக்கு கண்ணுக்குள் இருக்கும். சிந்தனையில் இருக்கும். உங்களின் சந்தோஷம் எங்கே இருக்கிறது...?

எவ்வளவு தூரத்தில் இருக்கிறது. தெரிந்துவிட்டீர்களா.. அல்லது இப்போதுதான் தேடிப் புறப்பட்டிருக்கிறீர்களா.. நன்றாகத் தேடிப்பாருங்கள். அது உங்கள் அருகில்தான் இருக்கும்.

சிலருக்கு வாயில் இருக்கிறது சந்தோஷம். அவர் பேசப் பேச கேட்டுக்கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு எனர்ஜி அவர் பேச்சில் இருக்கும். அதனால் கேட்கிறவர்க்கும் சந்தோஷம். சொல்கிறவர்க்கும் அதில் பங்கு உண்டு.

சிலர் பேச்சு எரிச்சல் தரும். சிலர் பேச்சு முகம் சுளிக்க வைக்கும். சிலர் பேச்சு அதை பேச்சு என்பதை விட புலம்பல் எனலாம். அவர்கள் தோற்றுப் போனதையும் தனக்கு முன்னால் கைகட்டி நின்றவர் எங்கோ உயர்ந்து விட்டதையும் சொல்லி தமது தாழ்வு மனப்பான்மையை நமக்கும் கொடுத்து விடுவார்கள். இப்படிப்பட்டவர்களுடன் அதிகம் பேசாதிருப்பது நல்லது. இன்னும் சிலர் பழங்கதை பேசி தங்களை பழுத்த ஞானப்பழம் என பிரகடனப்படுத்திக் கொள்வார்கள்.

மேன்மக்கள் பேச்சு மென்மையாகவும் இருக்கும் மேன்மையாகவும் இருக்கும்.

பேசத் தெரிந்தவன் மனிதன், கண்டதைப் பேசுகிறவன் கிறுக்கன், வார்த்தைகளின் மதிப்பு அறிந்து, புரிந்து பேசுவான் தலைவன் அவன் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசமாட்டான். அப்படிப் பேசினால் அவன் தலைமைப் பண்பை இழந்து விடுவான். நம்முடைய பேச்சு முறை எப்படியிருக்க வேண்டும் என அறிஞர் ஷா அதி சொல்கிறார்.

சிறந்த பேச்சாளன் தன் அனுபவ முதிர்ச்சியில் ஆழமான கருத்துக்களை தேர்ந்தெடுத்து அழகிய வார்த்தைகளை உபயோகித்துத்தான் தன் கருத்துக்களை வெளியிடுவான். யோசிக்காமல் எதையும் பேசி உன் மூச்சை வீணாக்காதே, காரணத்துடன் பேசு.

உன் பேச்சை, நன்றாக யோசித்து, ஒழுங்குப்படுத்திக்கொள். அதன் பிறகு பேசு. ஆனால் கேட்பவர்கள், நீ உன் பேச்சை முடித்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பதற்கு முன்னால் பேச்சை முடித்துக் கொள்.

பேச்சு என்னும் திறமை இருப்பதனால்தான் மனிதன் மிருகங்களைவிட உயர்ந்தவனாக இருக்கிறான். ஆனால் நீ முறை தவறிப் பேசும்போது மிருகம் உன்னைவிட உயர்ந்ததாகிவிடும்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

30 Oct, 02:01


என்னோட சந்தோஷத்துக்கு நான் கையாள்கிற யுக்தி: ஒவ்வொரு நாளும் தூங்குறதுக்கு முன்னாடி அன்னிக்கு எனக்குக் கிடைத்த நல்ல விஷயங்களை மட்டும் அசைபோட்டு மனசுல பதிய வைக்கிறதுதான். அடிக்கடி ஞாபகப்படுத்திக்கற விஷயங்கள் நம்ம மனசுல ஆழப்பதியும்தானே!”

- திலகவதி ஐ.பி.எஸ்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

29 Oct, 04:50


உழைக்க வேண்டும். வாழவேண்டும் என்கிற விருப்பம் உள்ளவர்களுக்கு எல்லாம் வசப்படும். சந்தோஷம் வேண்டும் என்றால் அதற்கான சூழல் உருவாக்க வேண்டும். சந்தோஷம் எங்கும் இல்லை. அது நம்மிடம்தான் இருக்கிறது. அதை நமக்குள் கொண்டுவரும் ஆற்றலும் நம்மிடம்தான் இருக்கிறது. இதை உணர்ந்தால் சந்தோஷம் பிடிபடும்.

தொடரும்...

நன்றி - சபீதா ஜோசப்

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

29 Oct, 04:50


சந்தோஷத்தின் சூட்சுமம் (தன்னம்பிக்கை கட்டுரைகள்)

1. தேடு: கிடைக்கும்!


‘மலர்ந்த முகத்துடன் விளங்குங்கள்; அப்படிப்பட்ட வர்களையே ஆண்டவன் நேசிக்கிறான், முகம் சிவந்து கடுகடுப்புடன் இருப்பவர்களை இறைவன் நேசிப்பதில்லை’ என்பது நபிகள் நாயகம் (ஸல்) வாக்கு. கடுகடுப்பான முகத்துடன் இருப்பவரை கடவுள்கூட கண்டு கொள்வதில்லை என்றால் சக மனிதர்கள் அவன் அருகில்கூட நெருங்க மாட்டார்கள்.

நாம் எல்லோரும் சந்தோஷம் இருக்கும் இடத்தில் வாழத்தான் நினைப்போம். விருந்தில், முதலில் இனிப்பை சுவைக்கத் தான் நினைப்போம். சிரிக்க சிரிக்க பேசும் மனிதரைச் சுற்றியே இருப்போம். இனிப்பு உள்ள இடத்தைத்தான் ஈயும் எறும்பும் சுற்றும்.

சந்தோஷம் இருக்கும் இடத்தில் வாழ நினைக்கும் நீங்கள், இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உண்டாக்கப் பழகுங்கள். யாம் பெற்ற சந்தோஷம் பெறுக பிறமனிதரும் என சந்தோஷத்தை பகிர்ந்து வாழுங்கள்! அப்போது உங்கள் வாழ்க்கை நிறைவாக இருக்கும். அர்த்தம் நிறைந்ததாக இருக்கும்.

சிலரிடம் செல்வம் இல்லையென்றால் பணம் சம்பாதிப்பது ஒன்றே தங்கள் வாழ்வின் முக்கிய வேலை என்பதுபோல் தீவிரமாக அதற்கான தேடலில் இருப்பார்கள். சிலருக்கு அன்பு தேவைப்படுகிறது என்றால், அது மட்டுமே வாழ்வின் மிக முக்கிய தீர்வு என்பதுபோல் அன்பைத் தேடுவார்கள். எது தன்னிடம் இல்லையோ அதையே தேடுவதுதான் மனித இயல்பு.

ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தன் மாணவர்களைப் பார்த்து, ‘கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன கேட்பீர்கள்?’ என்று கேட்டார். ‘சைக்கிள் வேண்டும் என்று கேட்பேன்’ என்றான் ஒரு மாணவன். ‘நான் கார் கேட்பேன்’ என்றான் இன்னொரு மாணவன். ‘பத்து லட்சம் ரூபாய் பணம் கேட்பேன்’ என்றான் மற்றொரு மாணவன். ஆசிரியருக்கு கோபம் வந்துவிட்டது. “அட முட்டாள்களே! கடவுளிடம் இதெல்லாமா கேட்பது... கடவுள் என் முன்பு தோன்றினால் நான் என்ன கேட்பேன் தெரியுமா.. நிறைய அறிவும் ஞானமும் வேண்டும் என்று கேட்பேன்” என்றார் ஆசிரியர்.

அப்போது ஒரு மாணவன் அமைதியாக எழுந்து சொன்னான்.. “ஆமாம் அய்யா! யாரிடம் என்னென்ன இல்லையோ அதைத்தானே கேட்க முடியும்” என்றான். தன்னிடம் இல்லாததைத் தேடுவதையே ஆன்மிகம் என்று பலரும் கருதுகிறார்கள். இப்படிக் கேட்டுக் கொண்டே போனால் அதற்கு எல்லையே இல்லாமல் போகும். உங்களிடம் இருப்பது மிகக் குறைவு. உங்களிடம் இல்லாததை கேட்க ஆரம்பித்தால் ஆயிரம் ஆண்டுகளானாலும் போதாது, ஆசைக்கு எல்லை ஏது...?

எதையுமே தேடவில்லை என்றால் எங்கும் செல்ல வேண்டியதில்லை. ஏதோ ஒன்றைத் தேடுவதும் அதைத் தொடர்ந்து போவதுமே சிலருக்கு வாழ்க்கையாகி விட்டது. காலத்திற்கு ஏற்ப தேடுகின்ற பொருட்கள் மாறலாம். ஒரு காலத்தில் பணத்தைத் தேடுவதும் இன்னொரு காலத்தில் நல்ல வேலையைத் தேடுவதும் சொந்த வீடு வேண்டும் என தேடுவதும் இப்படித் தேடுகின்ற விஷயங்கள் மாறுமே தவிர உங்கள் வாழ்க்கை நிலை மாறுவதில்லை. இவை யாவும் தேடிப் போய் அலைந்து வாழ்க்கையை விட்டுவிடாதீர்கள்.

இப்போது இந்த நொடியை எப்படி அனுபவத்தில் உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே வாழ்க்கையின் சாரம் இருக்கிறது. ஆகவே வாழ்க்கையை இன்னும் மேம்பட்ட நிலையில் அனுபவிக்க வேண்டுமென்றால் நீங்கள் விரும்பும் பொருட்களை மாற்றிக்கொண்டே போவதால் எதுவும் ஆகுவதில்லை. வாழ்க்கையை கையாளும் முறையில்தான் வித்தியாசம் இருக்கும் அவ்வளவுதான். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை அமைதியானதாகவும் அழகானதாகவும் மாறினாலும்கூட அப்போதும் ஏதோ ஒரு தேடல் இருந்துகொண்டே இருக்கும். வாழ்வில் ஒரு நிறைவின்மை தெரியும். சாப்பாடு விஷயத்தில் மட்டும் போதும் எனச் சொல்ல தோன்றும்.

“வாழ்க்கையே சந்தோஷத்தைத் தேடுவதாகத்தான் இருக்கிறது. வருத்தமாக இருக்கிறபோது நீங்கள் செய்வதைவிட சந்தோஷமான சூழ்நிலையில் இருக்கும்போது உற்சாகத்தின் காரணமாக அதிகமாக வேலை செய்கிறீர்கள். உழைக்கிறீர்கள். ஏனென்றால் அப்போது நீங்கள் முழு திடத்துடன் இருக்கிறீர்கள். சூழலும் உங்களை எதுவும் கீழ் இழுக்க முடியாது” என்கிறார் ஜக்கி வாசுதேவ்.

அழுகின்ற வினாடியும் சிரிக்கின்ற நிமிடங்களும் நம்முடைய வாழ்க்கை என்ற கால கடிகாரத்தில் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. ஆனாலும் சந்தோஷத்தைவிட சஞ்சலத்தில்தான் அதிகம் மனம் கிடந்து அடித்துக் கொள்கிறது. “மாலையில் மரணம் நிச்சயம் என்பது தெரிந்தும் காலையில் மலர்கள் அழுவதில்லை. நாம் மட்டும் சோகங்களை நினைத்து வாடுவது அழகா.. நினைத்துப் பாருங்கள்!”

“இன்பத்திலும் துன்பத்திலும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று மட்டும்தான். இந்த நிமிடம் நிரந்தரமில்லை. இதுவும் கடந்து போகும்” - சாந்தாவேலன்

“வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்? ஆழக் கடலும் சோலையாகும். ஆசை இருந்தால் நீந்தி வா!” என்பது கண்ணதாசன் வாக்கு!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

29 Oct, 04:50


சந்தோஷம் வேண்டும் என்றால் அதற்கான சூழல் உருவாக்க வேண்டும். சந்தோஷம் எங்கும் இல்லை. அது நம்மிடம்தான் இருக்கிறது. அதை நமக்குள் கொண்டுவரும் ஆற்றலும் நம்மிடம்தான் இருக்கிறது. இதை உணர்ந்தால் சந்தோஷம் பிடிபடும்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

24 Jun, 06:15


மனம் எனும் மாய தேவதை (ஒரு மனோதத்துவ சுய முன்னேற்ற நூல்)

நூலாசிரியர் : ரா.பிரபு

மொழி : தமிழ்

நூல் வகை : மனநலம், தன்னம்பிக்கை, விழிப்புணர்வு, சுயமுன்னேற்றம், மனோதத்துவம்,

வருடம் :
2017

இந்த புத்தகத்தை இணையத்தளத்தில் படிக்க விரும்பினால் இந்த முகவரிக்குச் செல்லுங்கள் https://reghahealthcare.blogspot.com/2024/06/blog-post_09.html

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

24 Jun, 06:12


மனம் எனும் மாய தேவதை (ஒரு மனோதத்துவ சுய முன்னேற்ற நூல்)

நூலாசிரியர் : ரா.பிரபு

மொழி : தமிழ்

நூல் வகை : மனநலம், தன்னம்பிக்கை, விழிப்புணர்வு, சுயமுன்னேற்றம், மனோதத்துவம்,

வருடம் : 2017

குறிப்பு :

மனம் எனும் மாய தேவதை குறித்து உலகளவில் நம் நாட்டினர் போல ஆழமாக அலசிய அறிஞர்கள் உலகின் வேறு எந்த மூலையிலும் இல்லை.

மு. வரதராசனார் எழுதிய "நலவாழ்வு" என்ற புத்தகம் தொடங்கி சுகி சிவம் அவர்களின் மனசே நீ ஒரு மந்திர சாவி வரை, எம். எஸ். உதயமூர்த்தி அவர்கள் எழுதிய தன்னம்பிக்கை நூல்கள் முதல் விவேக்கானதர் புத்தகங்கள் வரை, கீதையில் கண்ணன் முதல் ஓஷோவின் புத்தகங்கள் வரை இந்த மனம் எனும் மாய தேவதை பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்கள்.

அப்படி படித்த பல புத்தகங்களில் இருந்த நல்ல கருத்துகளைத்தான் நான் இந்த தொடரில் எனது பாணியில் பகிர்ந்து உள்ளேன். மனம் எனும் மாய தேவதையை காதலிக்க வேண்டும் என்றால் அப்புத்தகங்களை தேடி படித்து பாருங்கள் நிறைய தெளிவுகள் கிடைக்கும்.

உங்கள் அனைவருக்கும் மனம் எனும் மாய தேவதை வசமாகி வளமான மனமும் வாழ்க்கையும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

இந்த புத்தகத்திலிருந்து சில வரிகள்...

* உங்களிடம் ஒரு கருவி உள்ளது அதை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்... என்று வைத்து கொள்ளுங்கள். அந்த கருவி பற்றி அது செயல்படும் விதம் பற்றி தெரிந்து வைத்து கொண்டால் அதை இன்னும் சிறப்பாக நீங்கள் செயல்படுத்த முடியும் அல்லவா... இந்த உண்மை மனதிற்கும் பொருந்தும்.

* முழு மக்கா சோளத்தில் ஒரே ஒரு கடி கடித்து தூக்கி போடுவது போல மூளையில் ஒரு குறிபிட்ட பகுதி பயன்பாட்டோடு நிறுத்தி கொள்கிறோம். பயன் படுத்தாத பொருட்கள் கால போக்கில் மங்கி போகும் என்பது இயற்கை விதி. அப்படி மூளையை பல இடங்களில் சரியாக பயன்படுத்தாமல் விட்டதன் விளைவு இன்று மிருகங்களின் உணர்வு நிலையை விட நாம் நிறைய பின் தங்கி விட்டோம்.

* பயன் படுத்தாமல் விட்ட மூளை என்ன ஆகும் என்று சோதிக்க நீங்கள் பெரிதாக பரிணாம கோட்பாடு எல்லாம் படிக்கத் தேவையில்லை. இன்று கால்குலேட்டர் இல்லாமல் கணக்கு போட முயற்சி செய்து பார்த்தால் போதும். ஒரு 10... 20 ஆண்டுகளுக்கு முன் நாம் போட்ட மன கணக்கு இன்று ஏன் சாத்தியப்படவில்லை என்று புரியும்.

* தியானம் என்பதை பற்றி ஒரு அடிப்படை விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ ஒரு பொருள் அல்லது கருத்து மீது கவனத்தை குவிப்பது "Meditation" அல்ல. அது "Concentration''. எதையோ ஒன்றை பற்றியே சிந்திப்பது தியானம் அல்ல அது "Thinking". தியானம் என்பது செயல் அல்ல அது ஒரு நிலை. ஏதும் செய்யாது அனைத்தையும் உள்வாங்கும் விழிப்பு நிலை.

* தேம்ஸ் நதிக்கரையில் இளைஞர்கள் சிலர் ஆற்றில் மிதந்து வரும் முட்டை ஓட்டை சுடும் பயிற்சி மேற்கொண்டு இருந்தார்கள். அவர்களை உற்று கவனித்த விவேகானந்தர் அவர்களிடம் துப்பாக்கி கேட்டு வாங்கி அதை சுட்டு பார்த்தார். ஒரு குறி கூட தவறாமல் அனைத்தையும் அடித்ததை பார்த்த இளைஞர்கள், "எத்தனை வருட பயிற்சி அய்யா" என்று கேட்டார்கள். "நான் துப்பாக்கி பிடிப்பது இதான் முதல் தடவை" என்றார் விவேகானந்தர். அதெப்படி சாத்தியம் என்று திகைத்து போய் கேட்டவர்க்கு "இது ஒன்னும் அற்புதம் அல்ல மனதை ஒருங்கிணைக்க கற்று கொண்டால் யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம்" என்றார்.

* உங்களை கோபப்படுத்தும் அல்லது எரிச்சலூட்டும் மனிதர்கள் அல்லது வெளி சூழ்நிலைகளுக்கு மறுமொழி ஆற்றாதீர்கள். காரணம் உங்கள் மறுமொழி இல்லாமல் அவைகள் சக்தி அற்றவைகள். அவைகளுக்கு சக்தி கொடுபதே நீங்கள் தான். நாம் நமக்குள் இருந்து செயலாற்றாத வரை வெளி சூழ்நிலைகள் நம்மை எந்த வகையிலும் மாற்றவோ பாதிக்கவோ முடியாது என்பது மிக பெரிய உண்மை.

* இயற்கை தனது கொடையை ஒரு மழை போல எப்போதும் நம்மீது பொழிந்து கொண்டே தான் இருக்கிறது. அதை உள்வாங்க நமது பாத்திரத்தை நாம் கவிழ்த்து வைத்து இருக்கிறோமா அல்லது திறந்து வைத்து இருக்கிறோமா என்பது தான் இங்கு கேள்வி.

* வாழ்க்கையில் ஒரு விஷயத்தை வேலையாக பார்க்காமல் விளையாட்டாக அல்லது சவாலாக பார்க்கும் மனநிலையை நம்மால் ஏற்படுத்தி கொள்ள முடியுமென்றால் வேதனையான விஷயங்கள் கூட ஆனந்தமான விளையாட்டாக மாறிப் போகும். இந்த எளிய உண்மை தான் மனோபாவம். மனோபாவத்தை மாற்றுவதன் மூலம் நம்மை சுற்றி உள்ள சூழலின் தன்மையை மாற்ற முடியும். இந்த உலகத்தையே மாற்ற முடியும். உலகின் பெரிய பெரிய செயல்களை செய்தவர்களை அந்த செயலை செய்வித்தது அவர்களின் மனோபாவம் தான்.

* தொடர்ந்து நாம் யோசிக்கும் ஒரு எண்ணம் தான் செயல் ஆகிறது. தொடர்ந்து செய்யும் செயல் தான் பழக்கம் ஆகிறது. தொடர்ந்து செய்யும் பழக்கம் தான் ஒருவன் குணாதிசயமாகிறது. தொடர்ந்து இருக்கும் குணாதிசயம் தான் அவனை சுற்றி உள்ள சூழ்நிலையை உண்டாக்குகிறது .அவன் விதியை எழுதி அவன் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

24 Jun, 06:09


மனம் எனும் மாய தேவதை (ஒரு மனோதத்துவ சுய முன்னேற்ற நூல்)

நூலாசிரியர் : ரா.பிரபு

மொழி : தமிழ்

நூல் வகை : மனநலம், தன்னம்பிக்கை, விழிப்புணர்வு, சுயமுன்னேற்றம், மனோதத்துவம்,

வருடம் : 2017

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

24 Jun, 04:35


மனம் எனும் மாய தேவதை

பாகம் 12 : தேவதை தரிசனம்


நல்ல மாட்டிற்கும் கெட்ட மாட்டிற்கும் சண்டை வந்தால் எது ஜெயிக்கும்? எந்த மாட்டிற்கு நீ அதிக தீவனம் போட்டு அதிக ஊட்டம் கொடுத்து வைத்து இருக்கிறாயோ அதுவே ஜெயிக்கும். நமக்குள் தீய எண்ணங்கள் இருப்பது இயல்பு ஆனால் நாம் அதற்கு ஊட்டம் கொடுக்காமல் நல்லதிற்கு ஊட்டம் கொடுப்பது நமது கையில் கொடுக்கப்பட்ட சுதந்திர வாய்ப்பு.

தொடர்ந்து நாம் யோசிக்கும் ஒரு எண்ணம் தான் செயல் ஆகிறது. தொடர்ந்து செய்யும் செயல் தான் பழக்கம் ஆகிறது. தொடர்ந்து செய்யும் பழக்கம் தான் ஒருவன் குணாதிசயமாகிறது. தொடர்ந்து இருக்கும் குணாதிசயம் தான் அவனை சுற்றி உள்ள சூழ்நிலையை உண்டாக்குகிறது .அவன் விதியை எழுதி அவன் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

24 Jun, 04:35


மனம் எனும் மாய தேவதை

பாகம் 11 : சரியான சிந்தனைக்கு சில சூட்சமங்கள்


உனக்கெல்லாம் கணக்கு ஜென்மத்துல வராது என்று அவன் கல்வி காலம் முடிவிற்குள் குறைந்தது 100 முறை ஒருவனை கூறும் ஆசிரியர் நிஜமாகவே அவனுக்கு கணக்கு வரும் சாத்தியத்தை குறைத்து விடுகிறார். குற்றவுணர்வு ஒருவன் மனதின் வளர்ச்சியை கொல்கிறது... நல்ல செழிப்பான மனங்களை உண்டாக்க நினைத்தால் ஒரு போதும் நீங்கள் அந்த மனதிற்கு குற்ற உணர்வை கொடுக்கக் கூடாது. உலகின் எவ்ளோ பெரிய குற்றத்தை செய்தாலும் நம்மால் அதில் இருந்து வெளி வர முடியும் என்று நம்பிக்கையை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

24 Jun, 04:33


மனம் எனும் மாய தேவதை

பாகம் 10 : தொடர்பு சூட்சமம்


இயற்கை தனது கொடையை ஒரு மழை போல எப்போதும் நம்மீது பொழிந்து கொண்டே தான் இருக்கிறது. அதை உள்வாங்க நமது பாத்திரத்தை நாம் கவிழ்த்து வைத்து இருக்கிறோமா அல்லது திறந்து வைத்து இருக்கிறோமா என்பது தான் இங்கு கேள்வி.

வாழ்க்கையில் ஒரு விஷயத்தை வேலையாக பார்க்காமல் விளையாட்டாக அல்லது சவாலாக பார்க்கும் மனநிலையை நம்மால் ஏற்படுத்தி கொள்ள முடியுமென்றால் வேதனையான விஷயங்கள் கூட ஆனந்தமான விளையாட்டாக மாறிப் போகும். இந்த எளிய உண்மை தான் மனோபாவம். மனோபாவத்தை மாற்றுவதன் மூலம் நம்மை சுற்றி உள்ள சூழலின் தன்மையை மாற்ற முடியும். இந்த உலகத்தையே மாற்ற முடியும். உலகின் பெரிய பெரிய செயல்களை செய்தவர்களை அந்த செயலை செய்வித்தது அவர்களின் மனோபாவம் தான்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

24 Jun, 04:33


மனம் எனும் மாய தேவதை

பாகம் 9 : இயற்கையுடன் இயைந்து


விலங்குகள் பலவகை ஆற்றலில் நம்மை விட மேம்பட்டு இருப்பதற்கு முக்கிய காரணம் அவைகள் உயிர்வாழ அந்த திறமைகளை தான் சார்ந்து இருக்கின்றன. அவைகளை இன்னும் தொடர்ந்து பயன்படுத்துகின்றன எனவே அவைகள் அழியாமல் அவைகளுக்குள் தொடர்கிறது. மனிதன் தனது தர்க்க ரீதியான அறிவை மட்டுமே பயன்படுத்த தொடங்கியதன் விளைவு இயற்கை வழங்கும் பல கொடைகளை அவன் இழந்து விட்டான்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

24 Jun, 04:32


மனம் எனும் மாய தேவதை

பாகம் 8 : நீர் இல்லாத கிணறு


உங்களை கோபப்படுத்தும் அல்லது எரிச்சலூட்டும் மனிதர்கள் அல்லது வெளி சூழ்நிலைகளுக்கு மறுமொழி ஆற்றாதீர்கள். காரணம் உங்கள் மறுமொழி இல்லாமல் அவைகள் சக்தி அற்றவைகள். அவைகளுக்கு சக்தி கொடுபதே நீங்கள் தான். நாம் நமக்குள் இருந்து செயலாற்றாத வரை வெளி சூழ்நிலைகள் நம்மை எந்த வகையிலும் மாற்றவோ பாதிக்கவோ முடியாது என்பது மிக பெரிய உண்மை.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

24 Jun, 04:32


மனம் எனும் மாய தேவதை

பாகம் 7 : இவன் அசாதாரணன்


தேம்ஸ் நதிக்கரையில் இளைஞர்கள் சிலர் ஆற்றில் மிதந்து வரும் முட்டை ஓட்டை சுடும் பயிற்சி மேற்கொண்டு இருந்தார்கள். அவர்களை உற்று கவனித்த விவேகானந்தர் அவர்களிடம் துப்பாக்கி கேட்டு வாங்கி அதை சுட்டு பார்த்தார். ஒரு குறி கூட தவறாமல் அனைத்தையும் அடித்ததை பார்த்த இளைஞர்கள், "எத்தனை வருட பயிற்சி அய்யா" என்று கேட்டார்கள். "நான் துப்பாக்கி பிடிப்பது இதான் முதல் தடவை" என்றார் விவேகானந்தர். அதெப்படி சாத்தியம் என்று திகைத்து போய் கேட்டவர்க்கு "இது ஒன்னும் அற்புதம் அல்ல மனதை ஒருங்கிணைக்க கற்று கொண்டால் யார் வேண்டுமானாலும் இதை செய்யலாம்" என்றார்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

24 Jun, 04:31


மனம் எனும் மாய தேவதை

பாகம் 6 : "நான்" அற்ற நொடிகள்


நீங்கள் எந்த பிரச்சனையை தீர்க்க நினைக்கிறீர்களோ அதை பற்றி மிக ஆழமாக சிந்திக்க வேண்டும். தொடர்ந்து மிக அழுத்தமாக அந்த சிந்தனை இருக்க வேண்டும். இதற்கு மேல் அதை பற்றி சிந்திக்கவே முடியாது என்கிற எல்லை வரை நீங்கள் அதை பற்றி பல கோணங்களில் தொடர்ந்து சிந்திக்க வேண்டும். உங்கள் முயற்சியின் எல்லைக்கு அதை கொண்டு போக வேண்டும். பிறகு திடீரென்று அதை பற்றி மறந்து விட வேண்டும். ஆம் அதை பற்றி துளியும் கவலை கொள்ளாமல் வேறு வேலை பார்க்க வேண்டும். திடீரென்று அந்த உண்மை உங்களுக்குள் உதிக்கும்.

- ஜேம்ஸ் ஆலன்

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

24 Jun, 04:30


மனம் எனும் மாய தேவதை

பாகம் 5 : தர்க்க அறிவும் பிரபஞ்ச அறிவும்


மிக தீவிரமாக தர்க்க அறிவோடு காரண காரியத்தை ஆராய்ந்து கண்டு பிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகளை விட மனிதன் சிந்தனை ஏதும் இல்லாத நேரத்தில் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் தான் அதிகம். பிரபஞ்ச அறிவு என்ற எல்லாம் தெரிந்த அறிவு ஒன்று இருக்கிறது. மனித மூளையால் அதை தொடர்பு கொள்ள முடியும். குறிப்பிட்ட வகை சிந்தனை போக்கை கையாள்வது மூலம் அந்த பிரமாண்ட அறிவு பெட்டகத்தில் இருந்து உண்மைகளை நம்மால் இழுத்து வர முடியும்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

24 Jun, 04:30


மனம் எனும் மாய தேவதை

பாகம் 4 : விழிப்புணர்வு, தியானம்


தியானம் என்பதை பற்றி ஒரு அடிப்படை விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ ஒரு பொருள் அல்லது கருத்து மீது கவனத்தை குவிப்பது "Meditation" அல்ல. அது "Concentration''. எதையோ ஒன்றை பற்றியே சிந்திப்பது தியானம் அல்ல அது "Thinking". தியானம் என்பது செயல் அல்ல அது ஒரு நிலை. ஏதும் செய்யாது அனைத்தையும் உள்வாங்கும் விழிப்பு நிலை. அந்த நிலையில் நாம் நம்மை வைத்துக் கொள்ள முடியும். குறிப்பாக உட்கார்ந்து கொண்டு செய்வது தான் தியானம் என்பது தவறான கருத்து. தியானம் என்ற நிலையில் நாம் நடக்கலாம் குளிக்கலாம் படலாம் ஆடலாம். எந்த செயலையும் நமது முழு விழிப்போடு நிகழ் காலத்தில் இருந்து செய்தால் அது தான் தியானம்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

24 Jun, 04:29


மனம் எனும் மாய தேவதை

பாகம் 3 : தொலைந்த தொடர்பு


பயன் படுத்தாமல் விட்ட மூளை என்ன ஆகும் என்று சோதிக்க நீங்கள் பெரிதாக பரிணாம கோட்பாடு எல்லாம் படிக்கத் தேவையில்லை. இன்று கால்குலேட்டர் இல்லாமல் கணக்கு போட முயற்சி செய்து பார்த்தால் போதும். ஒரு 10... 20 ஆண்டுகளுக்கு முன் நாம் போட்ட மன கணக்கு இன்று ஏன் சாத்தியப்படவில்லை என்று புரியும்.

மனிதனின் மூளையில் ஒளிந்துள்ள ஆற்றல் மனித கற்பனைக்கும் அப்பாற்பட்டது. அதைப் பெற்றவர்கள் வாழ்க்கையை வேறு விதத்தில் பார்க்கிறார்கள்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

24 Jun, 04:28


மனம் எனும் மாய தேவதை

பாகம் 2 : மூளையின் 20 வாட்ஸ்


முழு மக்கா சோளத்தில் ஒரே ஒரு கடி கடித்து தூக்கி போடுவது போல மூளையில் ஒரு குறிபிட்ட பகுதி பயன்பாட்டோடு நிறுத்தி கொள்கிறோம். பயன் படுத்தாத பொருட்கள் கால போக்கில் மங்கி போகும் என்பது இயற்கை விதி. அப்படி மூளையை பல இடங்களில் சரியாக பயன் படுத்தாமல் விட்டதன் விளைவு இன்று மிருகங்களின் உணர்வு நிலையை விட நாம் நிறைய பின் தங்கி விட்டோம்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

24 Jun, 04:27


மனம் எனும் மாய தேவதை

பாகம் 1 : மனம் எனும் கருவி


உங்களிடம் ஒரு கருவி உள்ளது அதை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்... என்று வைத்து கொள்ளுங்கள். அந்த கருவி பற்றி அது செயல்படும் விதம் பற்றி தெரிந்து வைத்து கொண்டால் அதை இன்னும் சிறப்பாக நீங்கள் செயல்படுத்த முடியும் அல்லவா... இந்த உண்மை மனதிற்கும் பொருந்தும்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

24 Jun, 04:25


மனம் எனும் மாய தேவதை - அறிமுகம்

(ஒரு மனோதத்துவ சுய முன்னேற்ற தொடர்)

நன்றி - ரா.பிரபு, JR, Music by Lakshmikanth, Visual Effects done by CB Kannan

மனம் எனும் மாய தேவதை குறித்து உலகளவில் நம் நாட்டினர் போல ஆழமாக அலசிய அறிஞர்கள் உலகின் வேறு எந்த மூலையிலும் இல்லை.

மு. வரதராசனார் எழுதிய "நலவாழ்வு" என்ற புத்தகம் தொடங்கி சுகி சிவம் அவர்களின் மனசே நீ ஒரு மந்திர சாவி வரை, எம். எஸ். உதயமூர்த்தி அவர்கள் எழுதிய தன்னம்பிக்கை நூல்கள் முதல் விவேக்கானதர் புத்தகங்கள் வரை, கீதையில் கண்ணன் முதல் ஓஷோவின் புத்தகங்கள் வரை இந்த மனம் எனும் மாய தேவதை பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்கள்.

அப்படி படித்த பல புத்தகங்களில் இருந்த நல்ல கருத்துகளைத்தான் நான் இந்த தொடரில் எனது பாணியில் பகிர்ந்து உள்ளேன். மனம் எனும் மாய தேவதையை காதலிக்க வேண்டும் என்றால் அப்புத்தகங்களை தேடி படித்து பாருங்கள் நிறைய தெளிவுகள் கிடைக்கும்.

உங்கள் அனைவருக்கும் மனம் எனும் மாய தேவதை வசமாகி வளமான மனமும் வாழ்க்கையும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

🙏

ரா.பிரபு

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

01 Mar, 14:09


யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான்.

இந்தப் பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.

கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள்.

மனக்குழப்பம்

“ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்” என்று அதில் எழுதி இருந்தது.

அந்தப் பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்தத் தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது.

அது இயங்காவிட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான்.

தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது.

ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது.

இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.

மனசாட்சிப்படி செயல்பட்டான்

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது.

தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பல‌ படிப்பினைகள் உள்ளன.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது.

இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.

“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

மனநிறைவு

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு; விருது.

நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா?

இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

கொடுங்கள், கிடைக்கும்

அடுத்தப் படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதைக் கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம்.

மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான்.

எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகித் திரும்பவும் உங்களை வந்து சேரும்.

கொடுத்து மகிழ்வோம்; இறைவன் அருள்வார்!

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

01 Mar, 14:08


எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகித் திரும்பவும் உங்களை வந்து சேரும்.

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

22 Jan, 02:16


வெ. இறையன்பு அவர்கள் எழுதிய கேள்வியும் நானே பதிலும் நானே! புத்தகத்திலிருந்து...


🪔 சில உண்மைகளை பட்டென்று கூறுவது தான் மற்ற புத்தகங்களிலிருந்து இந்தப் புத்தகத்தைப் பிரித்துக் காட்டுகிறது.

🪔 அவற்றில் சில கேள்வி பதில்களை இங்கு பார்ப்போம்.



1. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் எது?


நாட்டுப்பண்ணும்! தமிழ்த்தாய் வாழ்த்தும்!


2. எது சிறந்த உதவி?


செய்த உதவியை மற்றவர்களுக்குச் சொல்லாமல் இருப்பது!


3. நமக்கு நாமே எதிரியாவது எப்போது?



உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடும்போது! நாம் செய்த நல்ல செயல்கள் எல்லாம் காற்றில் பறந்து போய்விடுகின்றன. அப்போது நமக்கு நாமே எதிரியாகி விடுகிறோம்.


4. மனிதன் எப்போது ஞானம் அடைகிறான்?


தான் ஒன்றுமில்லை என்று உணர்கிற போது!


5. குழந்தைகள் வளர்ப்பில் உள்ள இன்றைய பிரச்சினைகள் என்ன?


இன்றுள்ள குழந்தைகள் எந்த வரிசையிலும் காத்திருப்பதற்காகப் பழக்கப்படவில்லை. அனைத்தையுமே ஆன்லைன் மூலம் பெற்றுவிடுகிறார்கள். எனவே அவர்கள் ஏமாற்றுத்துக்குப் பழக்கப்படாமல் வாழ்கிறார்கள். ஒரு சின்ன தோல்வி ஏற்பட்டாலும் அவர்களால் தாங்கிக்கொள்ள இயலவில்லை...


6. நன்றாகப் பேச எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்?


மௌனத்தை…


7. அன்பு முக்கியமா… அறம் முக்கியமா?


அறத்துக்கும் அன்பே ஆதாரம்!


8. நண்பர்களுக்கும்… சந்தர்ப்பவாதிகளுக்கும் என்ன வேறுபாடு?


நெருக்கடி வந்தால் அதை உதவி செய்யும் சந்தர்ப்பமாகக் கருதுபவர்கள் நண்பர்கள். விட்டுவிட்டு ஓடுபவர்கள் சந்தர்ப்பவாதிகள்.


9. புறம் சொல்பவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?


புறம் சொல்வது சிலருக்குப் பொழுதுபோக்கு.


ஆற்றில் குளித்து முடித்துவிட்டு வந்த யானை ஒன்று, அழுக்கில் புரண்டு வந்த பன்றியைப் பார்த்ததும் ஓரமாக ஒதுங்கிச் சென்றது.


உடனே பன்றி, ‘இவ்வளவு பெரிய உருவத்தோடு இருந்தாலும்… என்னைப் பார்த்து பயந்துவிட்டாயே!‘ என்று பரிகசித்தது.


அதற்கு யானை, ‘நீ மோதினால் மறுபடி குளிக்க வேண்டுமே என யோசிக்கிறேன். உன்னை ஒரே மிதியில் என்னால் துவம்சம் செய்ய முடியும்!' என்று சொன்னது.

புறம் சொல்பவர்களிடம் அந்த யானையைப் போல் நாம் நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பன்றிகளின் சேறு நம் உடலெல்லாம் ஒட்டிக் கொள்ளும்.


10. சோம்பலின் உச்சம் எது?


கையில் இருக்கும் மிட்டாயை வாயில் போட கொட்டாவி வருவதற்காகக் காத்திருப்பது.


11. ஒருவரை புண்படுத்தாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?


சில உண்மைகளைப் பேசாமல் இருந்தால் போதும்!


12. துன்பம் வரும்போது சிரிக்க முடியுமா?


பலருக்கும் முடியும்… அடுத்தவர்களுக்கு வரும்போது!


13. தகுதியற்றவர்களும் புகழ் பெறக் காரணம் என்ன?


தகுதியற்றவர்களை ஆர்வப்பட்டு தூக்கிப் பிடிப்பதாலும் தரம் பிரிக்கத் தெரியாதவர்களை அவசரப்பட்டு முன்மொழிவதாலும் இது போன்ற விபத்துக்கள் நிகழ்வதுண்டு. ஆனால் அது புகழ் அல்ல. பிரபலம் மட்டுமே! வளரும்போது வாத்துக்களுக்கும் அன்னத்துக்குமான வேறுபாடு வெளியில் தெரிந்துவிடும். கண்கள் சொல்லாததைக் காலம் சொல்லிவிடும்.


14. திருமணம் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும்?


கணவனும் மனைவியும் நண்பர்களைப் போல பழக வேண்டும். ஒரே ரசனையை உள்ளவர்களைவிட … அடுத்தவர் ரசனையை மதிக்கத் தெரிந்தவர்களே மிக நல்ல இணையர்கள்.


15. எது அழகு?

செயற்கை ஒப்பனைகளின்றி இயல்பாக இருப்பதே அழகு!


16. பிரபலமானவர்களைப் பற்றி ஏன் வதந்திகள் அதிகமாக உருவாகின்றன?


பிரபலமானவர்கள் மீது மக்களின் இதயத்தில் ஒரு சின்ன பொறாமை இருக்கிறது. அவர்களைப் போல நாமும் பலருக்குத் தெரியவில்லையே என்கிற வருத்தம் மேலிடுகிறது. அவர்களுக்கு அவதூறு நேர்ந்தால்… தாங்கள் அவர்களைவிடப் புனிதமானவர்கள் என்பதைப் போன்ற எண்ணமும் சமாதானமும் ஏற்படுகிறது. அந்தப் பரபரப்பை வைத்தே வதந்திகளைப் பரப்புகிறவர்கள் இயங்குகிறார்கள்.


17. எந்தப் பஞ்சம் கொடியது?


இயற்கை தவறுவதால் ஏற்படும் பஞ்சத்தை விட… இருப்பவர்கள் பதுக்குவதால் உண்டாகும் பஞ்சம் கொடியது.


18. யாருடைய மரணம் அழகு?


இறந்த பிறகும் வாழ்பவர்களின் மரணம்!


19. எப்போது தவறுகள் மறைகின்றன?

அவற்றை மனதார ஒத்துக்கொள்ளும் போது!


20. கோபத்திலும் யார் அழகாக இருப்பார்கள்?


கோபம் வருகிறபோது உலக அழகிகள் கூட பொலிவை இழந்துவிடுவார்கள். ஆனால் கோபத்திலும் அழகாக இருப்பவர்கள் குழந்தைகள்.


படித்ததில் பிடித்தது!

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்! புத்தகங்கள்

22 Jan, 02:16


கேள்வியும் நானே பதிலும் நானே! புத்தகத்திலிருந்து...

புறம் சொல்பவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

ஆற்றில் குளித்து முடித்துவிட்டு வந்த யானை ஒன்று, அழுக்கில் புரண்டு வந்த பன்றியைப் பார்த்ததும் ஓரமாக ஒதுங்கிச் சென்றது.

உடனே பன்றி, ‘இவ்வளவு பெரிய உருவத்தோடு இருந்தாலும்… என்னைப் பார்த்து பயந்துவிட்டாயே!‘ என்று பரிகசித்தது.

அதற்கு யானை, ‘நீ மோதினால் மறுபடி குளிக்க வேண்டுமே என யோசிக்கிறேன். உன்னை ஒரே மிதியில் என்னால் துவம்சம் செய்ய முடியும்!' என்று சொன்னது.

புறம் சொல்பவர்களிடம் அந்த யானையைப் போல் நாம் நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பன்றிகளின் சேறு நம் உடலெல்லாம் ஒட்டிக் கொள்ளும்.

1,763

subscribers

453

photos

7

videos