உண்மைச்சம்பவம்
நம் வாசகர் ஒருவர் சென்னையில் பட்டரை நடத்துகிறார். மனிதாபிமான அடிப்படையில் பதினான்கு வயதுக்கு உட்பட்ட, பெற்றோர் இல்லாத, படிப்புவராத தன்பேரனுக்கு, அவனது பாட்டி கேட்டதால் வேலை கொடுத்தார். வேலை நேரத்தில் சோதனைக்கு வந்த தொழிற்சாலை ஆய்வாளர்கள் பிடித்து எழும்பூரில் குற்றவியல் வழக்கு போட்டுவிட்டார்கள்.
இவர் நம் வழியில் வாதாடி இருந்தால் நடந்த அவனது பாட்டியையும், அவனையும் சாட்சி சொல்ல வைத்து, வழக்கில் உண்மையை நிலைநாட்டி இருக்கலாம். இதுபோன்ற சிறுவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை வழக்குபோட்ட முட்டாளுக்கும் கற்று கொடுத்து இருக்கலாம்.
ஆனால் இவரோ தானேவாதாட பயந்து பொய்யர்களின் வழியில் சென்று, 'எனது சொந்தக்காரரின் மகன் என்பதால் வேலை கொடுத்தேன் என்று சாட்சியம் கொடுத்து விட்டார்'. இப்படிச் சொல்லி தப்பித்து விடலாம் என்று வக்கீழ் பொய்யர் பொய்ச்சொல்லச் சொல்லி இருக்கார்.
எனக்கு தெரிய இவர் பொய் பேசமாட்டார். ஆனாலும், பொய்யர் நம்மை வசமாக சிக்கவைக்கப் போகிறார் என்பது புரியாமல் வேறுவழியின்றி சொல்லிவிட்டார்.
ஆமாம், நீங்கள் எவ்வளவுதான் உண்மை பேசுபவராக இருந்தாலும் நான் ஏற்கெனவே சொன்னது போல, பொய்யர்களிடம் போய்விட்டால் உனக்கு நான் அடிமையே என வக்காலத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ள அடிமையே. ஆகையால், அவர்கள் சொல்வதை கட்டாயம் கேட்டு கெட்டுத்தான் ஆகவேண்டும்.
எனவே, பொய்யரை நம்பி பொய்சொன்ன இவரை குறுக்கு விசாரணை செய்து, "அந்த சிறுவன் வேறு சாதியை சார்ந்தவன்" என்பதை மிக எளிதாக ஒப்புக்கொள்ள வைத்து குற்றவாளியாக அறிவித்து ரூபாய் பத்தாயிரத்தை அபராதம் விதித்தார்கள். இதற்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கமுடியும்.
குற்றம் புரிந்தவர்களே குற்றங்களை ஒப்புக்கொள்ள முன் வராத நிலையில், குற்றம் புரியாதவரைப் பொய்ச் சொல்ல வைத்து குற்றவாளி என அறிவித்தால், அவரின் மனம் எவ்வளவு வேதனைப்படும்.
வயதில் பெரியவராக இருந்தாலும், என்னை அய்யா என்றே அழைப்பார்; அன்பாக பேசுபவர். நம் சட்ட விழிப்பறிவுணர்வில் மிகுந்த நம்பிக்கை கொண்டு நிதி உள்ளிட்ட உதவிகளை செய்தவர், உண்மையாய் இருப்பவர், பொய்யரிடம் போய் குற்றவாளியானார் என்றால், இதெல்லாம் கர்மவினை என்று சொல்வதை தவிர வேறென்னச்சொல்ல?! இதைத்தானே கவிமணிப் பிள்ளையவர்களும் உவமையாக கேள்விகேட்கிறார்??
உவமை !
புற்றைவிட்டுப் புறம்போகாமல்
பட்டினி கிடக்கும்பாம்பின் வாயில்
தேரை குதித்துச் சென்றுவிழுவது
நாகம் முன்செய்த நல்வினைப்பயனோ?
தேரை முன்செய்த தீவினைப்பயனோ?
தேரை - வழக்காளி
பாம்பு - சட்டத்தொழில் பொய்யர்கள்
பாடல்: கவிமணிப்பிள்ளை
குறைந்தபட்ச கூலியை கொடுத்து, சிறுவனை வேலையில் அமர்த்தி கொடுமை செய்வதே குற்றம் என்பதே சட்டத்தின் சாரம். ஆனால், தொழிற்சாலையை ஆய்வு செய்யும் அடிமை முட்டாள்களோ, உண்மையிலேயே கொத்தடிமைகளாக நடத்தும் இடங்களில் ஆய்வுசெய்து தடுக்கமாட்டார்கள்.
அங்கெல்லாம் இவர்கள் சென்றால் உயிரோடே திரும்ப முடியாது. ஆங்கேயே புதைத்து சமாதி கட்டிவிடுவார்கள்.
ஆகையால் நாங்களும் வாங்கும் பெறுங்கூலிக்கு வேலை பார்த்தோம் என்பதை ஆவணப்படுத்த, மனிதாபிமானத் தோடு வேலை கொடுத்தவர்களை குற்றவாளிகள் ஆக்கி விடுவார்கள்.
மனிதாபிமான அடிப்படையில் வேலை கொடுத்ததற்கு மன உளைச்சலோடு மூன்றாண்டுகள் வழக்கை நடத்தி, பொய்யர்களுக்கு கூலி கொடுத்து குற்றவாளி ஆனதுதான் மிச்சம். குறைந்தது ஐம்பதாயிரமாவது செலவு செய்திருப்பார். இனி, இவருக்கெல்லாம் சமூக சிந்தனை சாதாரணமா வருமா?! இதில் கொடுமை என்னவென்றால், இது போன்ற சிறுவர்களுக்கும் வேலை கொடுக்க தனி சட்டமே உள்ளது. சிறு வயது என்பது கற்கும் பருவம். இப்பருவத்தில் கல்வி மீது பற்றில்லாத சிறுவர்களை அப்படியே விட்டு விட முடியாதே! ஆகையால்,யார் எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை. சமூகத்தைப் பற்றி சிந்திப்பவர்கள் முதலில் சட்டத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். என் சட்ட விழிப்பறிவுணர்வு கடமை தங்கு தடையின்றி வெற்றிநடை போடக் காரணமும் இதுவே!
நீ(தி) வாழ நீயே வாதாடு!
வாழ்க வளமுடன் நீதிமான்
வாரண்ட் பாலா
Our Telegram channel link
🪶🪶🪶🪶🪶🪶
https://t.me/lawterrorist2