வரலாற்றில் 🏹 இன்று @varalatril_intru Channel on Telegram

வரலாற்றில் 🏹 இன்று

வரலாற்றில் 🏹 இன்று
வரலாற்றில் இன்று
1,836 Subscribers
17,300 Photos
71 Videos
Last Updated 16.02.2025 18:33

Similar Channels

SPB Songs 🎧
7,637 Subscribers
Puthagavalam Tamil books
2,403 Subscribers

வரலாற்றில் இன்று: முக்கிய நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகள்

இன்று, உலகம் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை அனுபவிக்கிறது. வரலாற்றில் இன்று என்ன நடந்தது என்பது மனிதன் தனது வாழ்க்கையில் நினைவில் வைத்திருக்கும் ஒரு முக்கியப் உண்மை. இது சாதாரணமாக ஒருவருக்கொருவர் பேசப்படும் விவாதங்கள் அல்லது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படும் தகவல்கள் மூலம் வெளிப்படும். கடந்தகாலங்களில், ஜனநாயக மாற்றங்கள், பெரும்பான்மையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்கள், மற்றும் விஞ்ஞானத்திலிருந்து சமூகத்தை மேம்படுத்திய நவீன கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் கதை நமக்கு ஒரு வலுவான பன்முகத்தை வழங்குகிறது. இன்றைய நாளில், நாம் கடந்த காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் பற்றி ஆராய்வோம், அது உலகின் நிலைமைகளை எவ்வாறு மாற்றியது, மற்றும் இன்று நாம் இதைப் பற்றி என்ன கற்றுக்கொள்ள முடியும் என்பதை நமது கவனத்திற்கு கொண்டு வருவோம்.

வரலாற்றில் இன்று என்ன முக்கியமான நிகழ்வு நடந்தது?

இந்த நாளில், 1066ல் நார்மன்டி அருகே, விதிர் சண்டையால் இங்கிலாந்து வெல்லப்பட்டது. இது ஆங்கில வரலாற்றில் ஒரு மாறுபாட்டை ஏற்படுத்தியது, மேலும் ඒ காரணமாக நார்மன்களில் இருந்து பிரிட்டிஷ் அரசாங்கம் பல நிலைகள் மாறியது.

மேலும், 1977ல், நாங்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு முதலாவது இணையதளத்தை கண்டுபிடித்தோம். இதன் மூலம், தகவல்களின் பரிமாணம் முற்றிலும் மாற்றப்பட்டது, மேலும் தற்போதைய டிஜிட்டல் உலகத்தின் அடிப்படையை அமைத்தது.

வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் எவ்வாறு உலகத்தை மாற்றின?

பல்வேறு நிகழ்வுகள், நம்மால் பார்த்துள்ள நடைமுறைகளை மாற்றியுள்ளன. உதாரணமாக, 1945ல், இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததால், புதிய அதிகார அமைப்புகள் உருவாகின, மேலும் சர்வதேச உறவுகளின் வடிவம் மாறியது.

இதற்கான விளைவாக, உலகளாவிய அமைதிக்கான முன்னெடுப்புகள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டன, இது உலகின் நிலைபாட்டை முழுமையாக மாற்றியது.

இந்த நாளில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களின் தாக்கம் என்ன?

வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களின் தாக்கம் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் அனைத்து காடில்களிலும் காணப்படுகிறது. குறிப்பாக, அரசியல் மாற்றங்கள் புதிய சட்டங்கள் மற்றும் முக்கியமான நீயமங்களை உருவாக்குவதற்கான அடித்தளம் அமைத்தன.

இதன் விளைவாக, மக்கள் சுதந்திரம், உரிமைகள் மற்றும் பாதுகாப்புடன் தொடர்பான பல்வேறு பாடங்களில் முன்னேற்றங்களை காணக்கூடியதாக இருக்கிறது.

வரலாற்றில் இன்று நடந்த சம்பவங்கள் எப்படி நினைவூட்டுகின்றன?

வரலாற்றில் நடந்த சம்பவங்கள், கடந்த காலத்திலிருந்து இன்று வரை மனிதர்களுக்கு எவ்வளவு முக்கியமான பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளன என்பதை மீண்டும் நினைவூட்டுகின்றனர். இவை புதிய தலைமுறையினருக்கு அனுபவம் மற்றும் புரிதல்களை வழங்குகின்றன.

இந்த நிகழ்வுகள், மனிதர்கள் அதனை அடிப்படையாக கொண்டு, சந்தேகங்களை மறுபரிசீலனை செய்வதற்கும், புதிய பாதைகளை தேடும் வழியைக் கொடுக்கின்றன.

வரலாற்றின் முக்கியத்துவம் எப்படி விவாதிக்கப்படுகிறது?

வரலாற்றின் முக்கியத்துவம், அது நடத்தப்பட்டு வரும் உரையாடல்களில் பிரதானமாக உண்டு. வரலாற்று படிப்புகள், புதிய தலைமுறைகளுக்கான அறிவுத்தொகுப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இது சமூகத்தின் உள்ளடக்கத்தை புரிந்து கொள்ள, அவற்றின் அடிப்படைகளை அறிவதற்கு உதவுகிறது, மேலும் அது நடைபெறும் நிகழ்வுகளை விவாதிப்பதற்கு உதவுகிறது.

வரலாற்றில் 🏹 இன்று Telegram Channel

வரலாற்றில் இன்று என்பது ஒரு செய்தி தொலைபேசி சேனல் ஆகும். இது தமிழ் மொழியில் அனைத்தும் அழகான வரலாற்று செய்திகளையும், குறிப்புகளையும் உங்களுக்கு வழங்குகிறது. இந்த சேனலில் புதியதாக உள்ள வரலாற்று நிகழ்வுகள், வேட்பாளர்கள், மற்றும் குறிப்புகளைப் பார்க்க ஆர்வம் உள்ளவர்கள் அவசரமாக இந்த சேனலை சேருங்கள். வரலாற்றில் இன்று சேனல் உங்கள் அறிகுறிகளை பெற மறக்காது!

வரலாற்றில் 🏹 இன்று Latest Posts

Post image

வரலாற்று சுவடுகள்.

ஆசிரியர்: விசு

பகிர்வு : அ. கந்தன்


பிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு; பிளாஸ்டிக் (Plastic) பிறந்த கதை; History of Plastic by varalatru suvadugal.

ரேடியோ தயாரிப்பு, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் இந்த வகை பிளாஸ்டிக் மூலம் தான் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது.

இதன் 100% மின்கடத்தாத்திறன் பெரும்பாலான எலெக்ட்ரிகல் உபகரணங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 1926-ஆம் ஆண்டு பாலிவினைல் குளோரைடு (Polyvinyl Chloride, known as PVC Plastic (PVC Pipes)), வகை பிளாஸ்டிக் தயாரிக்கும் முறையை வால்ட்டர் செமொன் (Walter Semon) என்பவர் கண்டறிந்தார்.

இதன் பிறகுதான் குழாய்கள் (Pipe) தயாரிப்பிலும் பிளாஸ்டிக் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து 1937-ஆம் ஆண்டு பாலியூரித்தீன் (Polyurethane) வகை பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஓட்டோ பாயர் என்ற ஜெர்மனியை சேர்ந்த வேதியல் வல்லுனர் கண்டறிந்தார்,

இதன் பிறகு பாலிஸ்ட்ரீன் (Polystyrene) வகை பிளாஸ்டிக் புழக்கத்தில் வர ஆரம்பித்தது.  


இன்று பெருமளவில் புழக்கத்தில் உள்ள பாலிஎத்திலின் டெரெப்தலைட் (Polyethylene Terephthalate, known as PET (Soft Drinks Water Bottle)) வகை பிளாஸ்டிக்கை இங்கிலாந்தை சேர்ந்த வேதியல் வல்லுனர்களான ஜான் ரெக்ஸ் வின்பில்டு (John Rex Whinfield) மற்றும் ஜேம்ஸ் டெனன்ட் டிக்சன் (James Tennant Dickson) ஆகிய இருவரும் இணைந்து 1941-ஆம் ஆண்டு தயாரித்தனர்.

அதுவரையில் மனித சமுதாயத்திற்கு எந்தவித தீங்கையும் ஏற்படுத்தாமல் சென்றுகொண்டிருந்த பிளாஸ்டிக்கின் பயணம் தடம் புரண்டு அழிவுப்பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது PET பிளாஸ்டிக் கண்டறிந்த பின்புதான்..!

பிளாஸ்டிக் என்ற சொல் கிரீஸ் நாட்டின் கிரேக்க மொழியில் இருந்து பிறந்து கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. பிளாஸ்டிக் என்ற சொல்லுக்கு கிரேக்கத்தில் ‘எளிதில் வடிவமைத்துக்கொள்ள இயலும்’ என்று பொருளாம்.

இன்று உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உள்பட நாம் அன்றாடம் பயன்படுத்தும் செருப்பு முதற்கொண்டு அனைத்தும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு உலக சந்தையில் விற்க்கப்படுக் கொண்டிருக்கிறது,

ஏனைய உலோகங்களை காட்டிலும் இதன் மலிவான விலை, எளிதில் கையாளும் திறன், நீடித்து உழைக்கும் தன்மை ஆகிய காரணங்களால் பிளாஸ்டிக் மிகக் குறுகிய காலத்திற்குள் இமாலைய வளர்ச்சியை எட்டிப்பிடித்தது.

இன்று உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் பிளாஸ்டிக் பொருட்களை காணாமல் திரும்ப இயலாது.

16 Feb, 16:09
25
Post image

‘பூமாலை சூடாது பாய் தேடக் கூடாது’ என்று நாயகி சொல்வாள். ‘எல்லை தனை தாண்டாது பிள்ளை என தாலாட்டு’ என்பான் நாயகன். ’மஞ்சள் தரும் நாள் கூறு வஞ்சம் இல்லை தாள் போடு/ காமன் கணை ஏவல் எனை காவல் மீறத் தூண்டுதே/ செங்கமலம் சிரிக்குது சங்கமத்தை நினைக்குது’ என்று காதலும் காமமும் குழைத்து, ஒரு சினிமாப் பாடலுக்கு என்ன தேவையோ அதனுடன், தன் தமிழ் விளையாட்டையும் சங்கமித்தார் குருவிக்கரம்பை சண்முகம்.

பாக்யராஜைப் போலவே அவரின் சிஷ்யரான பாண்டியராஜனும் தன் படங்களில் குருவிக்கரம்பை சண்முகத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினார். இதன் பின்னர், மற்ற இயக்குநர்களின் படங்களிலும் பாடல்களை தந்து ஹிட்டாக்கினார்.

அதே காலகட்டத்தில், தன் கவிதைப் புத்தகங்களையும் வெளியிட்டுக் கொண்டே இருந்தார் குருவிக்கரம்பை சண்முகம். ’ஒரு குயிலின் குரல்’ புத்தகம் வெகுவாகப் பாராட்டப்பட்டது. ‘செந்நெல் வயல்’, ’விரல் விளக்குகள்’ அனைவராலும் ரசிக்கப்பட்டன. விருதுகளும் கிடைத்தன. ‘கவிதை அரங்கேறும் நேரம்’ எனும் தலைப்பில் வெளியிட்ட நூல், அடுத்தடுத்த பதிப்புக்குச் சென்று, அமோக விற்பனையாகின.

‘’குருவிக்கரம்பை சண்முகம் சாரோட கவிதைகள் எனக்குப் பரிச்சயமாகி இருந்துச்சு. ஆனா, அவர் யார்னு தெரியல எனக்கு. கோயம்புத்தூர்ல ஒரு கவியரங்கம். அதுக்கு என்னை தலைமையேற்க கூப்பிட்டிருந்தாங்க. அதுல குருவிக்கரம்பை சண்முகம் சார், கவிதை வாசிச்சார். பிடிச்சுப் போச்சு. சென்னைக்கு வந்ததும் சந்திச்சோம். ‘அந்த 7 நாட்கள்’ படத்துக்கு பாட்டெழுதினார். அதுதான் ‘கவிதை அரங்கேறும் நேரம்’னு செம ஹிட்டாச்சு. எம்.எஸ்.வி. அண்ணன், அப்படியே இவரைக் கட்டிப்புடிச்சிக்கிட்டு பாராட்டினார்’’ என குருவிக்கரம்பை சண்முகம் குறித்த நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் கே.பாக்யராஜ்.

தன் கவிதைத் தொகுப்பின் தலைப்பான ‘கவிதை அரங்கேறும் நேரம்’ என்பதையே, தன் திரையுலக அறிமுகப் பாடலுக்கும் பயன்படுத்திய திறமையும் உணர்வும் தான் குருவிக்கரம்பையாரின் தனித்துவம்!

பாண்டியராஜனின், ‘கன்னிராசி’யில், சிதம்பரம் ஜெயராமன் போல் மலேசியா வாசுதேவன் பாடியிருக்கும் ‘சுகராகமே சுகபோகமே’ என்ற பாடலும் இவர் எழுதியதுதான். ‘ஆண்பாவம்’ படத்தில் அதே மலேசியா வாசுதேவன், அட்டகாசமாகப் பாடிய ‘குயிலே குயிலே பூங்குயிலே’ என்று இன்றைக்கும் ஹிட் வரிசையில் இருக்கிற அழகான காதல் பாட்டுக்குச் சொந்தக்காரரும் குருவிக்கரம்பையார்தான்!

எல்லோருக்கும் வருவது போல், படம் தயாரிக்கும் ஆசை, குருவிக்கரம்பை சண்முகத்துக்கும் வந்தது. பாண்டியராஜனையும் யுவராணியையும் வைத்து, கதை, வசனமெல்லாம் எழுதி, ‘மாப்பிள்ளை மனசு பூப்போல’ என்ற படத்தைத் தயாரித்தார். படத்தின் படுதோல்வியை, ஏகப்பட்ட நஷ்டத்தை, பூ மாதிரி மனம் கொண்ட குருவிக்கரம்பையாரால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அன்றைக்கு அந்தத் தவறைச் செய்யாமல் இருந்திருந்தால், 2006-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி குருவிக்கரம்பை சண்முகம், மறைந்திருக்கமாட்டார். இன்னும் சந்த லயமும் தாள லயமும் தமிழ் நயமும் குழைத்து எண்ணற்ற பாடல்களைக் கொடுத்திருப்பார்.

‘ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை’ என்கிற வரிகளை எழுதியவருக்கு நேர்ந்த சோகமே, நம்மிடம் இருந்து அவரைப் பிரித்துக்கொண்டு சென்றுவிட்டது.

குருவிக்கரம்பையாரின் நினைவைப் போற்றுவோம்!

16 Feb, 08:19
71
Post image

பாக்யராஜின் பாட்டுக்காரர்: குயிலெனப் பாட்டுகள் தந்த குருவிக்கரம்பையார்!
16/2/2006 நினைவு தினம்

குருநாதரிடம் தொழில் கற்றாலும் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு, வெற்றிக் கொடி நாட்டியவர்களில் தனித்த ராஜபாட்டை நடத்தியவர் இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ். அவரின் கண்டுபிடிப்புகளில், முக்கியமான கவிஞராகத் திகழ்ந்தவர் குருவிக்கரம்பை சண்முகம்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா, தன் ஆரம்பகால படங்களில் இளையராஜா, நிவாஸ் என தனக்கென ஒரு வட்டத்தை வைத்துக் கொண்டு ஜாலங்கள் செய்தார். அப்போது கண்ணதாசனையும், கங்கை அமரனையும் பாடல்கள் எழுதவைத்தார். பிறகு இளையராஜா, வைரமுத்து ஜோடி உருவானது. தொடர்ந்து அவர்களையும் ஒளிப்பதிவாளர் பி.கண்ணனையும் பயன்படுத்தினார்.

ஆனால், பாக்யராஜ், பாரதிராஜாவிடம் இருந்து வந்து, முதல் படத்துக்கு கங்கை அமரனை இசையமைக்க வைத்தார். ‘ஒரு கை ஓசை’ படத்துக்கு மெல்லிசை மன்னரிடம் சென்றார். ‘மெளன கீதங்கள்’ படத்துக்கு கங்கை அமரன் இசையமைத்தார். ‘இன்று போய் நாளை வா’, விடியும் வரை காத்திரு’ படங்களுக்கு இளையராஜாவுடன் கைகோத்தார். கண்ணதாசன், கங்கை அமரன், முத்துலிங்கம் என்றெல்லாம் பாடல்கள் எழுதவைத்தவர், ‘அந்த 7 நாட்கள்’ படத்துக்கு மீண்டும் மெல்லிசை மன்னரை இசையமைக்கச் செய்தார். இந்தப் படத்தில்தான் குருவிக்கரம்பை சண்முகம் எனும் அற்புதமான பாடலாசிரியரை அறிமுகப்படுத்தினார்.

பேராவூரணிக்கு அருகில் இருக்கிற சிறிய கிராமம்தான் குருவிக்கரம்பை. இப்படியொரு ஊர் இருக்கிறது என்பது, ஒருங்கிணைந்த தஞ்சை ஜில்லாவில் பலருக்கும் தெரியாது. அப்படி தன்னையும் தன் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்ட ஊரையும் பிரபலமாக்கியவர் குருவிக்கரம்பை சண்முகம்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றினார். தமிழ் மீதும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மீதும் மிகுந்த பற்றுகொண்டிருந்த சண்முகம், கவிதையில் தனித்துவத்துடன் திகழ்ந்தார். புதுப்புது சிந்தனைகளும் புதுப் புது வார்த்தைகளுமாக பதிப்பக வட்டாரத்தை ஈர்த்தார். படைப்பு உலகில், இவருக்கென வாசகர் வட்டமே உருவானது.

அந்தச் சமயத்தில்தான், குருவிக்கரம்பை சண்முகத்தின் கவிதைகள் பாக்யராஜின் கைகளில் கிடைத்தன. கவிதைகளில் சொக்கிப் போன பாக்யராஜ், உடனே அவரை அழைத்து, ஒவ்வொரு வரிகயையும் சொல்லிப் பாராட்டினார். அத்துடன், ‘’சினிமாவுக்கு பாட்டெழுத விருப்பம் இருக்குங்களா?’’ என்று கேட்டறிந்தார். அவர் சம்மதம் சொன்னதும், அப்போது எடுத்துக் கொண்டிருந்த 'அந்த 7 நாட்கள்’ படத்திலேயே பாடல் எழுத வைத்தார்.

மெட்டுக்குப் பாட்டு என்பது குருவிக்கரம்பை சண்முகத்துக்கு புதிதுதான். ஆனாலும், தமிழின் எல்லா வார்த்தைகளும் தமிழ்த்துறைத் தலைவருக்குள் நர்த்தனமாடியதில், மொழி வளமையுடன் காட்சிக்கும் கதைக்குமான வரிகளைக் கோத்து தன் பாடலை அரங்கேற்றினார். அதுதான்... ‘கவிதை அரங்கேறும் நேரம்’.

'பார்வை உன் பாதம் தேடி/ வரும் பாவை என் ஆசை கோடி/ இனி காமன் பல்லாக்கில் ஏறி/ நாம் கலப்போம் உல்லாச ஊரில்/ உன் அங்கம் தமிழோடு சொந்தம்/ அது என்றும் திகட்டாத சந்தம்’ எனும் வரிகளில் மொத்தத் தமிழ்த் திரையுலக ரசிகர்களுமே கட்டுண்டு போனார்கள்.

இதைத் தொடர்ந்து தன் படங்களில் குருவிக்கரம்பை சண்முகத்துக்கான வாய்ப்புகளை தொடர்ந்தார் பாக்யராஜ். ‘’கவிஞர் குருவிக்கரம்பை சாரோட வரிகள் புதுசா இருக்கும். அதுல புலமையும் இருக்கும். நவீனமும் இருக்கும். முதல் தடவை கேக்கும்போதே, அந்தப் பாட்டைக் கேக்கறவங்களுக்குப் பிடிச்சிப் போயிரும். எனக்கும் அப்படித்தான்’’ என்று இயக்குநர் பாக்யராஜ், குருவிக்கரம்பையின் எழுத்தாளுமை குறித்துப் பாராட்டியுள்ளார்.

அடுத்து ‘டார்லின் டார்லிங் டார்லிங்’ படத்துக்கு சங்கர் - கணேஷ் இசையமைத்தார்கள். இவர்களுடன் பாக்யராஜ் இணைவது இதுவே முதல் முறை. இந்தப் படத்தில் இரண்டே இரண்டு பாடல்கள். அதிலொரு பாடலை குருவிக்கரம்பை சண்முகம் எழுதினார்.

‘ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள் ஏன் இன்று நீர்மேல் ஆடும் தீபங்கள்’ என்கிற பாடல். சோகமான பாடல். நம் மனதில் தனியிடம் பிடித்து உட்கார்ந்துகொண்ட பாடல்.

‘உள்ளக் கதவை நீ மெல்ல திறந்தால்/ அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்/ எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்/ கொத்தான முல்லை பித்தான என்னை/ எப்பொது முத்தாடுவாள்’ என்ற வரிகளை அப்போது முணுமுணுக்காத காதலர்களே இல்லை. இப்போதும் கூட, அந்தத் தாளமும் தாளத்துக்குக் கட்டுப்பட்டு மயக்கும் வரிகளும் நம்மை என்னவோ செய்யும்.

'தாவணிக் கனவுகள்’ என்ற படத்தில் எல்லாப் பாடல்களும் ஹிட் அடித்தன. இளையராஜாவின் இசையில் குருவிக்கரம்பை சண்முகம், இசைஞானியின் டியூனுக்குத் தக்கபடி தேன் வார்த்தைகளால் அழகு கூட்டினார். ‘முத்தம் இடும் மாலை/ வேளை/ மூடு விழா நாடகமோ/ நித்தம் இதழ் தேடும்/ நேரம்/ நாணம் எனும் நோய் வருமோ’ என்று வெட்கத்தை நோய்க்கு இணையாகச் சொல்லியிருப்பார்.

16 Feb, 08:19
57
Post image

பிப்ரவரி 16.

தாதாசாகெப் பால்கே.

Dadasaheb Phalke
30 ஏப்ரல் 1870-
16 பிப்ரவரி 1944.

இந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.

1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார்.
பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.

இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே. இந்தியாவிற்கு சினிமாவை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

By Covai women ICT_போதிமரம்

16 Feb, 06:57
40