Tamil BIBLE SECRETS @tamilbiblesecrets Channel on Telegram

Tamil BIBLE SECRETS

@tamilbiblesecrets


#மறைபொருள்!
பரிசுத்த வேதாகமத்தின் இரகசியங்கள்! அறிய வேண்டிய ஆச்சரியங்கள்!

Tamil BIBLE SECRETS (Tamil)

தமிழ் பைபிள் ரகசியங்கள் தொடர் செய்திகள்nn"தமிழ் பைபிள் ரகசியங்கள்" என்ற டெலிகிராம் சேனல், தமிழ் மொழியில் ஜெகாரட் சிறப்புகள், புத்தகங்கள், செய்திகள் மற்றும் மொழியை தரும் கிறித்தவர்களுக்கான ஒரு அனைத்து பைபிள் செய்திகள் மொழியிலும் அந்தஸ்துதி செய்ய இந்த சேனலை பரிசாரம் செய்யலாம். இந்த சேனலைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, நீங்கள் பைபிள் படிக்க முயன்றதாக அனுபவிக்கலாம். இந்த சேனல் உங்கள் பைபிள் அறையை மெல்ல உயர்த்தும் உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது. செய்திகள், உற்சாகங்கள், ஆலோசனைகள், பொழுதுபோக்குகள் மற்றும் பல அச்சங்களைக் கொண்டு இந்த சேனலை உங்களுக்கு அழைக்கின்றோம். இந்த சேனல் உங்களுக்கு பைபிள் மேல் இருந்து பல உபகாரங்களை வழங்கும் என்பதை உறுதி செய்கிறது.

Tamil BIBLE SECRETS

19 Feb, 01:42


*"வருகிறவர் நீர்தானா?"*

*இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து, நீங்கள் இயேசுவினிடத்திற்குப் போய்: "வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா?" என்று கேளுங்கள் என்று, சொல்லி அனுப்பினான்.* (லூக்கா 7:18,19).

நாயீன் ஊரிலே மரித்துப்போன வாலிபனை, இயேசுகிறிஸ்து உயிரோடு எழுப்பிய செய்தி, யூதேயா தேசம் முழுவதிலும், அதைச் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும், பிரசித்தமாயிற்று. இக்காலத்தில் யோவான்ஸ்நானன் காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார். யோவானுடைய சீஷர்கள், இந்தச் செய்தியை சிறைச்சாலையில் காவல் பண்ணப்பட்டிருக்கும் யோவானுக்கு அறிவிக்கிறார்கள். யோவான் காவலில் கட்டப்பட்டிருந்தாலும், இயேசுகிறிஸ்துவின் வார்த்தையை யாராலும் கட்டி வைக்கமுடியாது. இயேசுகிறிஸ்துவின் கிரியைகளை யாராலும் அடக்கி வைக்கமுடியாது. *இயேசுகிறிஸ்துவின் செய்தி சிறைச்சாலைக்குள்ளும் பிரசித்தமாயிற்று.*

இயேசுகிறிஸ்து நடப்பித்த அற்புதத்தைக் கேட்டவுடன், அவன் தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து, அவர்களை இயேசுகிறிஸ்துவிடம் அனுப்புகிறான். "வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா" என்று இயேசுகிறிஸ்துவிடம் கேட்பதற்காக அனுப்புகிறான்.

"வருகிறவர் என்பது, யூதர்கள் நெடுங்காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும், வாக்குப்பண்ணப்பட்ட மேசியா ஆவார்!"
யோவான்ஸ்நானன் தன்னுடைய விசுவாசத்தை உறுதிபண்ண விரும்புகிறார். இயேசுதான் வரவேண்டிய மேசியாவா என்பதை உறுதிபண்ணுவதற்காக, தன்னுடைய சீஷரில் இரண்டுபேரை அவரிடத்தில் அனுப்புகிறார்.

இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வந்தபோது, யூதமார்க்கத்தார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் இயேசுவை மேசியா என்று அங்கீகரிக்கவில்லை. "மேசியா இப்படித்தான் வருவாரென்று யூதர்கள் கற்பனை செய்து சில காரியங்களை எதிர்பார்த்தார்கள்." ஆனால் அவர்கள் எதிர்பார்த்த பிரகாரமாக மேசியா ஆடம்பரமாகவும், விளம்பரமாகவும் வரவில்லை. இந்த உலகத்திற்கு அவர் சாதாரண மனுஷகுமாரனாகவே வந்தார். ஆகையினால்தான், இயேசுவை பார்த்தபோது யூதமார்க்கத்துத் தலைவர்கள் அவரை "நீர்தான் மேசியாவா?" என்று கேட்கிறார்கள். யூதர்கள் எதிர்பார்க்கும் அடையாளமோ, ஆடம்பரமோ இயேசுகிறிஸ்துவிடம் காணப்படவில்லை. யோவான்ஸ்நானனும் இயேசுதான் மேசியாவா என்னும் சத்தியத்தை உறுதிபண்ண விரும்புகிறார். ஆகையினால், "வருகிறவர் நீர்தானா" என்னும் கேள்வியை அவரிடத்தில் கேட்பதற்கு தன் சீஷரில் இரண்டு பேரை அனுப்புகிறார்.

யோவான்ஸ்நானன் இந்த வேளையில் சிறைச்சாலையில் அடைக்கப் பட்டிருக்கிறார். (மத் 4:12; மத் 9:14) இயேசு கிறிஸ்து மரித்தோரை எழுப்புகிறார். அப்பேர்ப்பட்ட வல்லமையுள்ளவர் இருக்கும்போது, தான் ஏன் சிறைச்சாலையில் அடைப்பட்டிருக்க வேண்டும் என்று ஆச்சரியப்பட்டிருப்பார்.

இயேசுவிற்கு யோவான்ஸ்நானன் ஞானஸ்நானம் கொடுத்தார். அவருக்கு இயேசுவைப் பற்றி நன்றாகத் தெரியும். இருந்தாலும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறார். அவர் இயேசுவைப் பற்றிச் சாட்சிக் கூறியிருக்கிறார். (மத் 3:11; யோவான் 1:29#33). யோவானுடைய கேள்விக்கு இயேசு கிறிஸ்து நேரடியாகப் பதில் கூறாமல், அவனுடைய சீஷர்களிடம் *நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்* என்று பதில் கூறுகிறார். *தாமே மேசியா என்பதுதான் இதன் பொருள்*. தம்மைப் பற்றி தீர்க்கதரிசிகள் முன்னறிவித்த காரியங்களை இயேசு கிறிஸ்து யோவானின் சீஷர்களுக்கு முன்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். வேதவாக்கியம் இயேசு கிறிஸ்து மூலமாக நிறைவேறுகிறது. ( 7:21#23) *நம்மிடத்திலும் அவர் தம் பரிபூரண சித்தத்தை நிறைவேற்றுவார்! ஆமென்!*
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

18 Feb, 02:23


*அழாதே!*

*கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: "அழாதே" என்று சொல்லி...* (லூக் 7:13)

மரித்துப்போன ஒரு வாலிபனை அடக்கம்பண்ணுவதற்காக, அவனை பாடையில் சுமந்துகொண்டுபோனபோது, இயேசுகிறிஸ்துவும் அவருடைய சீஷரில் அநேகரும் அந்த வழியாக வருகிறார்கள். மரித்துப்போன தன் மகனுக்காக துக்கத்தோடு அழுது புலம்பும் கைம்பெண்ணைப் பார்த்து இயேசுகிறிஸ்து அவள்மேல் மனதுருகுகிறார். தன் மகனை அடக்கம்பண்ணும் கல்லறைவரையிலும் தானும் கூடப்போகவேண்டுமென்று, அவனுடைய தாய் பாடையின் பின்னே போகிறாள்.

தன்னுடைய மகன் உயிரோடு எழும்ப வேண்டுமென்று, இந்த தாய் இயேசுகிறிஸ்துவிடம் விண்ணப்பம் பண்ணவில்லை. அந்த ஊரிலுள்ள ஜனங்களில் யாரும், இவன் மறுபடியும் உயிர் பெறவேண்டுமென்று இயேசுவிடம் வேண்டிக்கொள்ளவில்லை. *தம்மிடத்தில் ஒருவரும் வேண்டிக்கொள்ளாவிட்டாலும், அழுது புலம்பும் அந்த தாயைப்பார்த்து இயேசுகிறிஸ்து அவள்மேல் மனதுருகுகிறார். அவளைப்பார்த்து "அழாதே" என்று ஆறுதலாக கூறுகிறார்.*

இயேசுகிறிஸ்து கிருபையும் இரக்கமும் நிறைந்தவர். தமது மிகுதியான அன்பினால் ஜனங்களுக்கு நன்மை செய்கிறவர். மனதுருக்கமுள்ளவர். இயேசுகிறிஸ்துவின் மனதுருக்கத்தைப்போல அவருடைய பிள்ளைகளாகிய நமக்கும் மனதுருக்கம் வேண்டும். அழுது புலம்பும் அந்த தாயைப்பார்த்து இயேசுகிறிஸ்து ஆறுதலாக அழாதே" என்று கூறுகிறார். தாம் அவளை "அழாதே" என்று கூறுவதற்கு இயேசுகிறிஸ்துவுக்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது. இந்த தாய் மரித்துப்போன தன் மகனுக்காக அழவேண்டியதில்லை. ஏனெனில் மரித்தவன் இப்போது மறுபடியும் உயிரோடு எழும்பப்போகிறான்.

மரித்துப்போன இந்த வாலிபன் மாத்திரமல்ல, *கர்த்தருக்குள் மரித்திருக்கும் அவருடைய பிள்ளைகள் எல்லோருமே ஒரு நாளில் உயிரோடு எழுந்திருப்பார்கள்.* உயிர்த்தெழுதலில் நம்பிக்கையில்லாதவர்கள் சரீர மரணமே நித்திய முடிவு என்று தவறாக நினைக்கிறார்கள். ஆகையினால் இப்படிப்பட்டவருக்கு சரீர மரணம் ஏற்படும்போது, அவருடைய உற்றாரும் உறவினரும் அதை நிரந்தர பிரிவு என்று நினைத்து அழுது புலம்புகிறார்கள்.

விசுவாசிகளாகிய நமக்கு நம்முடைய சரீர மரணம் ஒரு நித்திரையைப் போலிருக்கிறது. நம்பிக்கையற்றவர்கள் நித்திரையடைந்தவர்கள் நிமித்தம் துக்கித்துப் புலம்புகிறார்கள். ஆனால் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமோ அவிசுவாசிகளைப்போல நித்திரையடைந்தவர்களுக்காக துக்கித்துப் புலம்பக்கூடாது என்று பவுல் உபதேசம்பண்ணுகிறார். "அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போல துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து, பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே, அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூட கொண்டுவருவார்" (1தெச 4:13,14).

நமக்கு மற்றவர்கள்மீது இரக்கம் இருக்கலாம். நாம் மற்றவர்மீது அன்புகூரலாம். இயேசுகிறிஸ்து மனதுருகியதுபோல, நாமும் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மனதுருக வேண்டும். *மரணத்தின்மீது இயேசுகிறிஸ்து அதிகாரமுள்ளவராக பேசியதுபோல, நமது வார்த்தைகளும் அபிஷேகிக்கப்பட்ட, வல்லமையுள்ள வார்த்தைகளாக இருக்கவேண்டும். ஆமென்!*
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

17 Feb, 01:24


*"தயவு செய்கிறதற்குப் பாத்திரன்!"*

*அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு: நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான். அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெபஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்!* (லூக் 7:4,5).

யூதருடைய மூப்பர் நூற்றுக்கு அதிபதிக்காக இயேசுகிறிஸ்துவிடம் பரிந்து பேசுகிறார்கள். அவரிடம் கருத்தாய் வேண்டிக்கொள்கிறார்கள். நூற்றுக்கு அதிபதிகூட, தன்னைக் குறித்து இந்த மூப்பர்கள் கூறிய வார்த்தைகளை சுயவிளம்பரமாக, பேசியிருக்கமாட்டான். அப்படிப்பட்ட நல்வார்த்தைகளை மூப்பர்கள் இயேசுகிறிஸ்துவிடம் கூறுகிறார்கள்.

*நீர் இந்த தயவு செய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான்* என்று யூதருடைய மூப்பர் இயேசுகிறிஸ்துவிடம் கருத்தாய் வேண்டிக் கொள்கிறார்கள். ஆனால் நூற்றுக்கு அதிபதியோ *ஆண்டவரே, நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் பாத்திரனல்ல* என்று இயேசுவிடம் கூறுகிறான். (மத் 8:8). ஆனால் "யூதருடைய மூப்பரோ, இயேசுகிறிஸ்து இந்த தயவு செய்கிறதற்கு நூற்றுக்கு அதிபதி பாத்தினாயிருக்கிறான்" என்று, அவனைக் குறித்து சாட்சி கூறுகிறார்கள்.

நூற்றுக்கு அதிபதி புறஜாதி மார்க்கத்தைச் சேர்ந்தவன். ஆயினும் யூதருடைய தேசத்தின்மீதும், யூதமார்க்கத்தின்மீதும் அவன் மிகுந்த கரிசனையோடிருக்கிறான். யூதஜனத்தை அவன் நேசிக்கிறான். பொதுவாக புறஜாதியார் யூதஜனத்தை நேசிப்பதில்லை. அதிகாரத்திலிருப்பவர்களும், யுத்தத்தில் வெற்றி பெற்றவர்களும், தோல்வியடைந்த ஜனங்களை மதிப்பதில்லை. தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, தங்களுக்கு கீழ் உள்ளவர்களை ஒடுக்குவார்கள். ஆனால் இந்த நூற்றுக்கு அதிபதியோ, புறஜாதியானாக இருந்தாலும், தனக்கு கீழ் கட்டுப்பட்டிருக்கும் யூதஜனத்தை நேசிக்கிறான்.

யூதஜனத்தை நேசிப்பதோடு அவர்களுடைய மார்க்கத்தையும், ஆராதனையையும் நேசித்து அதற்கு மதிப்பு கொடுக்கிறான். யூதருக்காக கப்பர்நகூமில் அவன் ஒரு ஜெபாலயத்தையும் கட்டிக்கொடுத்திருக்கிறான். இஸ்ரவேல் தேசத்தின் தேவன்மீது, நூற்றுக்கு அதிபதி பக்தியோடிருக்கிறான். இஸ்ரவேலின் தேவனை ஆராதிப்பதில், இவன் உண்மையும் ஆர்வமும் உள்ளவனாக இருக்கிறான். மார்க்க ஆராதனைக்காக ஒரு ஆலயத்தைக் கட்டுவது, அன்றைக்கு மிகப்பெரிய நற்கிரியை ஆகும்!

ஆனால், நூற்றுக்கதிபதியோ தனக்கு எந்த புகழ்ச்சியையும் நாடவில்லை. இயேசு கிறிஸ்து தனது வீட்டிற்கு வருவதற்குக்கூட தான் பாத்திரவான் அல்ல என்று தன்னைத் தாழ்த்துகிறான். (லூக்கா 7:6#8) இயேசு கிறிஸ்து அவ்விரண்டு பிரிவினருடைய பேச்சுக்குச் செவிகொடுக்காமல், *நூற்றுக்கதிபதியிடம் காணப்படும் விசுவாசத்தைக் கண்டார்.* *இயேசுகிறிஸ்து ஒரு வார்த்தை மாத்திரம் சொன்னால் போதும். அப்போது தன் வேலைக்காரன் சொஸ்தமாவான்* என்று நூற்றுக்கதிபதி நம்பினான். (லூக்கா 7:7#9) *உண்மையாகவே, நம்முடைய ஜெபங்களுக்கு, நமது விசுவாசத்திற்கு ஏற்ற பிரகாரம் கர்த்தர் பதில் தருவார். இது நிச்சயம்! ஆமென்!*
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

16 Feb, 07:47


*நீதிமொழிகள் 31 வாசிச்சு இருக்கீங்களா?*
*அதில் சொல்லப்பட்ட லேமுவேல், அவரது தாயார் யார் தெரியுமா?*
*வரலாற்று தகவல்கள் அறிவோம் வாங்க!*

https://youtu.be/yHMD5Ycofig

Tamil BIBLE SECRETS

15 Feb, 12:36


*குழப்பமான வேதவசனங்களின் "சரியான அர்த்தத்தை" எளிதாக அறிவது எப்படி? "இதனைப் பயன்படுத்துங்கள்!"*

https://youtu.be/8deLLIducBM

Tamil BIBLE SECRETS

15 Feb, 02:03


*"நல்ல பொக்கிஷம்!"*

நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்! (லூக் 6:45).

"நம்முடைய இருதயம் ஒரு பொக்கிஷத்தைப் போலிருக்கிறது. நம்முடைய வார்த்தைகளும் செயல்களும் அந்த பொக்கிஷத்திலிருந்து எடுக்கப்படும் பொருட்களைப் போன்றவை.* நம்முடைய இருதயத்தை, தேவனுடைய அன்பு ஆளுகை செய்தால், நமது வார்த்தைகளும் செய்கைகளும் சுத்தமாக இருக்கும். அவை நன்மையாக இருக்கும். மனுஷருக்கு அவை பிரயோஜனமுள்ளவையாக இருக்கும். நல்ல பொக்கிஷத்தினால் நற்காரியங்களை செய்யலாம். மற்றவர்களுக்குப் பிரயோஜனமாக அவற்றை செலவுபண்ணலாம்.

நம்முடைய இருதயம், உலகத்தின் மேலுள்ள ஆசையினாலும்; மாம்ச இச்சையினாலும் நிறைந்திருந்தால், அது பொல்லாத பொக்கிஷமாக இருக்கும். பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாத காரியங்களையே எடுக்க முடியும். பொல்லாத மனுஷன், தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்.

இருதயத்தின் நிறைவினால், அவனவன் வாய் பேசும். நம்முடைய இருதயத்திலுள்ள சிந்தனைகளே, பொதுவாக நம்முடைய வாயின் வார்த்தைகளாக வெளிவரும். "நல்லவர்கள்கூட சில சமயங்களில் தீயவார்த்தையை பேசிவிடுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் நல்லவன் தான் செய்த தவற்றிற்கு மனம் வருந்துவான். தீயவனோ நல்ல வார்த்தையைக்கூட தீயகாரியத்திற்கு பயன்படுத்துவான்." தீயவனுடைய இருதயம் பொல்லாததாக இருக்கிறது. பொல்லாத இருதயத்தில் பொல்லாத சிந்தனை நிரம்பியிருக்கும். அவனுடைய வாயின் வார்த்தைகளும் பொல்லாததாக இருக்கும். நல்லவனின் இருதயமோ நற்காரியங்களினால் நிரம்பியிருக்கும். அவனுடைய வார்த்தையும் செயலும் நல்லதாக இருக்கும்.

நாம், வீண் சிந்தனைகளை வெறுத்து, வேத வசனங்கள் மேல் வாஞ்சையாக இருந்தால், நம்முடைய இருதயம், நல்ல பொக்கிஷமாக நன்மைகளால் நிறைந்திருக்கும். ஆமென்!
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

14 Feb, 01:49


*காதலில் வாழ்ந்தவர்களை விட, வீழ்ந்தவர்கள் அதிகம்!*

*"கர்த்தரின் பிள்ளையே கவனம்!"*

https://youtu.be/wRcEmlV0G74

Tamil BIBLE SECRETS

14 Feb, 01:39


*"சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்!"*

*உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள். உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே!* (லூக் 6:28,29).

*நமக்கு விரோதமாக குற்றம் செய்கிறவர்களை மன்னிப்பதில் நாம் தாராள மனப்பான்மையோடு நடந்துகொள்ளவேண்டும்.* நமக்கு தீங்கு செய்தவர்களையும், நம்மை காயப்படுத்தியவர்களை நாம் மன்னிக்க வேண்டும். *நமது உரிமை பறிக்கப்படும்போதும்கூட, அந்த உரிமையை நிலைநாட்டுவதில் வைராக்கியமாக இருக்கக்கூடாது.* நம்முடைய அங்கியை எடுத்துக்கொள்கிறவனுக்கு நம்முடைய வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ள தடைபண்ணக்கூடாது. *அவனோடு சண்டை போடுவதற்குப் பதிலாக விட்டுக்கொடுக்க வேண்டும்.* நம்மிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடுக்கவேண்டும். நம்முடையதை எடுத்துக்கொள்கிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேட்கக்கூடாது.

*நம்மிடத்தில் யாராவது கடன்பட்டு அவன் தரித்திரனாகப் போய்விட்டால், கடனைத் திரும்பக் கொடுப்பதற்கு அவனுக்கு திராணியில்லாமல் போய்விட்டால், அவனுடைய தொண்டையை நெரித்து கடனை நமக்கு கொடுத்துத் தீர்க்க வேண்டுமென்று கேட்கக்கூடாது!* (மத் 18:28).

நம்மை ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் அவனுக்கு அறைவதற்கு திருப்பி கொடுக்கவேண்டும். பழிவாங்கக்கூடாது. நம்மை ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்துவிட்டால் அவனை திரும்ப அடிக்கக்கூடாது. அவனிடமிருந்து மற்றொரு அடியை வாங்குவதற்கு நம்மை ஆயத்தப்படுத்த வேண்டும். *நம்முடைய பிரச்சனைகளையும் நம்முடைய காரியங்களையும் நாம் கர்த்தருடைய பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.*

*"மனுஷருக்கு அடிமையாவதைவிட, மனுஷரோடு போராடுவதைவிட தேவனுடைய பாதத்தில் அவருக்கு அடிமையாவது நமக்கு ஆசீர்வாதமானது."*

நமக்கு தீங்கு செய்தவர்களுக்கு நாம் பதிலுக்கு தீமை செய்யாமல், அவர்களுக்கு நன்மை செய்யவேண்டும். *இயேசுகிறிஸ்துவின் உபதேசம் மிகவும் மென்மையானது. அதே சமயத்தில் வல்லமையுள்ளது.* நாம் யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது. எல்லோரிடத்திலும் அன்பாகவும் கரிசனையாகவும் இருக்கவேண்டும். நமக்கு யாராவது காயம் உண்டாக்கினால்கூட அவர்களையும் பகைக்கக்கூடாது. அவர்களை சிநேகிக்க வேண்டும்.

நம்முடைய சத்துருக்களை சிநேகித்தால் மாத்திரம் போதாது. *நாம் அவர்களுக்கு நன்மையும் செய்யவேண்டும்.* பழிவாங்கும் உணர்வு நம்முடைய உள்ளத்தில் சிறிதும் காணப்படக்கூடாது. நம்மை சபிக்கிறவர்களையும் நாம் ஆசீர்வதிக்க வேண்டும். *நம்மைப்பற்றி குறைவாக பேசுகிறவர்களையும் நாம் உயர்வாக பேசவேண்டும்.*

வார்த்தையினாலும், செய்கையினாலும் நமக்கு யாராவது தீங்கு செய்துவிட்டால் அவர்களை பழிவாங்கவேண்டுமென்று துடிக்கக்கூடாது. அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும். அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். நம்மால் முடிந்த வரையிலும் அவர்களைப்பற்றி நன்றாக பேசி அவர்களுக்கு நன்மை செய்யவேண்டும். *அவர்கள் நன்றாக இருக்க வேண்டுமென்று தேவனுடைய சமுகத்தில் அவர்களுக்காக பரிந்து பேசவேண்டும்.*

"அங்கி" என்பது பிரயாணம் செய்யும் போது அல்லது வேலையில்லாமல் ஓய்வாக இருக்கும் போது சரீரத்திற்கு வெளியே அணியும் வஸ்திரமாகும். அப்படி, முக்கியமானதையும் விட்டுக்கொடுக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். *அதுதான், கிறிஸ்துவின் சிந்தை! அது, உலகத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது! ஆமென்!*
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

13 Feb, 01:35


*"இராமுழுவதும் ஜெபம்..."*

*அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார்.* (லூக் 6:12).

*வேதபாரகரும் பரிசேயரும் இயேசுகிறிஸ்துவின்மீது மூர்க்கவெறி கொள்கிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ அதைப்பற்றி கவலைப்படாமல், ஜெபம்பண்ணும்படி, ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறார்.* இயேசுகிறிஸ்து தனித்திருந்து ஜெபம்பண்ணிய பல சம்பவங்களை, லூக்கா இந்த சுவிசேஷத்தில் எழுதியிருக்கிறார். *ஜெபம்பண்ணாமல் நம்முடைய ஆத்துமா விருத்தியடையாது.* நமது ஆத்துமாவின் பாதுகாப்பிற்கும், பராமரிப்பிற்கும் *ஜெபம் அவசியம்.* அந்நாட்களில் இயேசுகிறிஸ்துவின் சத்துருக்கள் அவருக்கு விரோதமாக மூர்க்கவெறி கொண்டிருந்தபோது, இயேசுகிறிஸ்துவோ ஜெபித்துக்கொண்டிருக்கிறார்.

இயேசுகிறிஸ்து ஒரு மலையின்மேல் ஏறி பிதாவாகிய தேவனிடத்தில் தனித்து ஜெபிக்கிறார். இங்கு அவருடைய ஜெபத்திற்கு இடையூறாக திரளான ஜனங்கள் கூடிவரமாட்டார்கள். தேவனோடு தனித்திருப்பதற்கு, இங்கு அவருக்கு எந்த தொந்தரவும் இருக்காது. இந்த இடத்தில் இயேசுகிறிஸ்து, இரவு முழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு விசுவாசிக்கும், தங்களுடைய ஜெபவேளை மிகவும் முக்கியமான வேளையாகும். சில சமயங்களில், ஒரு மணி நேரம் தேவனோடு ஜெபிப்பதற்கே வருத்தப்படுகிறோம். ஆனால், இயேசுகிறிஸ்துவோ இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறார். தேவனுடைய கிருபாசனத்தண்டையில் நாம் பணிந்து வந்து, அவரிடத்தில் நமது துதிகளையும், ஸ்தோத்திரங்களையும், வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் ஏறெடுக்க வேண்டும். தேவனோடு ஜெபிக்கும் வேளை, நமக்கு சந்தோஷமான வேளையாக இருக்கவேண்டும். ஜெபிப்பதில் நமக்கு பிரியம் உண்டாகவேண்டும். பிரியமும் சந்தோஷமும் இருந்தால், நாம் தனியாக, நீண்ட நேரம் ஜெபிப்போம். ஜெபத்தில் ஆர்வமில்லையென்றால், அவசரம் அவசரமாக ஜெபித்துவிட்டு, நமது ஜெபத்தை சீக்கிரமாக முடித்துவிடுவோம்.

நமது ஊழியத்தில், ஆண்டவர் நமக்கு ஒரு வெற்றியைத் தரும்பொழுது, நாமும் தேவனிடம் அதிக நேரம் ஜெபம்பண்ண வேண்டும். இப்படி ஜெபம் பண்ணினால், நமக்குள் பெருமை வராது. ஆண்டவர் நம்மைத் தொடர்ந்து நடத்துவார். தேவனுடைய சமூகத்தில், நம்மை எப்போதும் தாழ்த்தவேண்டும். இதற்கும் தேவனுடைய உதவி தேவை. ஆகையினால் நம்முடைய ஊழிய அனுபவங்களில் தோல்விகள் ஏற்பட்டாலும், வெற்றிகள் ஏற்பட்டாலும் தேவனிடத்தில் அதிகநேரம் நம்மைத் தாழ்த்தி, ஜெபிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

12 Feb, 00:51


*எது நியாயம்?*

*அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்று கேட்டு, அவர்களெல்லாரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று!* (லூக் 6:9,10).

சூம்பின கையையுடைய மனுஷனை ஜனங்களுக்கு முன்பாக நிறுத்தி, தம்மிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கும்படி நோக்கமாக இருக்கிறவர்களிடம் இயேசுகிறிஸ்து சில காரியங்களைப் பேசுகிறார். ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்று அவர்களிடம் கேட்கிறார். அவர்களுடைய துன்மார்க்கமான சிந்தனைகளை அறிந்து இயேசுகிறிஸ்து அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்.

*தம்முடைய சத்துருக்கள் தம்மைக் குற்றப்படுத்துவார்கள் என்பதை தெரிந்திருந்தும் இயேசுகிறிஸ்து சூம்பின கையையுடைய மனுஷனை சொஸ்தமாக்குகிறார்.* மனுஷரைப் பிரியப்படுத்துவதற்குப் பதிலாக, இயேசுகிறிஸ்து தேவனுடைய சித்தத்தின் பிரகாரம் கிருபை நிறைந்தவராக, ஓய்வுநாளில், சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி "உன் கையை நீட்டு" என்கிறார். அப்படியே அவன் தன் கையை நீட்டுகிறான். உடனே அவன் கை மறுகையைப்போல சொஸ்தமாயிற்று. இந்த மனுஷன் தான் சொஸ்தமானதற்காக மிகவும் சந்தோஷப்படுகிறான். ஆனால் இயேசுகிறிஸ்து ஓய்வுநாளில் இவனை சொஸ்தப்படுத்தியதற்காக வேதபாரகரும் பரிசேயரும் கோபப்படுகிறார்கள்.

தேவனுடைய சித்தத்தை இயேசு வெளிப்படுத்துகிறார். ஓய்வுநாளாக இருந்தாலும் வேறு எந்த விசேஷித்த நாளாக இருந்தாலும், தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற வேண்டும். பிரமாணம் மனுஷருக்காக உண்டாக்கப் பட்டிருக்கிறது. மனுஷர் பிரமாணத்திற்காக உண்டாக்கப்படவில்லை. ஆண்டவர் மனுஷனைப் பிரமாணத்திற்கு அடிமையாக்கவில்லை. மனுஷன் ஓய்வுநாளுக்கும் எஜமானனாக இருக்கிறான். ஓய்வுநாளில் நற்கிரியைகளைச் செய்வதற்கு மனுஷனுக்கு உரிமையுண்டு.

"அவர்களெல்லாரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்" என்னும் இந்த வாக்கியத்தை மாற்கு எழுதும்போது, இயேசு கிறிஸ்து அங்கு கூடியிருந்தவர்களுடைய இருதயக் கடினத்தினிமித்தம் அவர்களைக் கோபத்தோடு பார்த்ததாகக் கூறுகிறார். பரிசேயரும், வேதபாரகரும் இயேசுவின் கேள்விகளுக்குப் பதில் கூறவில்லை. ஆகையினால், தமக்குப் பிரச்சனை வருமென்று தெரிந்தபோதிலும், பரிதாபமாக இருக்கும் சூம்பின கையையுடைய மனுஷனுக்கு உதவி புரிகிறார். ஓய்வுநாளில் இயேசு கிறிஸ்து கிரியை செய்கிறார். பாவம் செய்யவில்லை. பரிதாபமான அந்த மனுஷனுக்கு உதவிபுரிகிறார். இது தேவனுடைய சித்தத்திற்கு விரோதமான செயல் ஆகாது. (எபே 4:26). *அது எந்த நாளாக இருந்தாலும், யாவருக்கும் நன்மை செய்வதே தேவசித்தம்! ஆமென்!*
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

11 Feb, 12:23


*பைபிளின் எபிரேய, கிரேக்க அர்த்தங்கள் தமிழில் அறிய எளிய வழி!*

*பைபிளை இன்னும் ஆழமாக கற்க வேண்டுமா? காணுங்கள்!!!*

https://youtu.be/MAktecUFcdc

Tamil BIBLE SECRETS

11 Feb, 01:54


*குற்றம் சொன்னாலும்...*

*பஸ்காபண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர்வழியே நடந்து போகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித் தின்றார்கள். பரிசேயரில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யத்தகாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.* (லூக்கா 6:1,2).

இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் பயிர் வழியே நடந்துபோகிறார்கள். அது ஓய்வுநாளாக இருக்கிறது. அவர்கள் பசியாயிருக்கிறார்கள் ஓய்வுநாளாக இருந்தாலும் தங்கள் பசியைப் போக்குவதற்காக கதிர்களைக் கொய்து கைகளினால் நிமிட்டித் தின்கிறார்கள். மற்ற சுவிசேஷங்களில் இந்த சம்பவத்தைப் பற்றி எழுதப்பட்டிருந்தாலும், லூக்கா எழுதின சுவிசேஷத்தில் இந்த ஓய்வுநாளைப்பற்றி விளக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. இது பஸ்கா பண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வு நாள். (இந்த ஓய்வுநாளிலிருந்து பெந்தெகொஸ்தே பண்டிகைக்கு, ஏழு வாரங்கள் ஆகுமென்று யூதர்கள் கணக்கிடுவார்கள்.)

இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் தங்களுக்கு ருசியான உணவு வேண்டுமென்று எதிர்பார்க்கக்கூடாது. போஜனப்பிரியராகவும் இருக்கக்கூடாது. தங்களுக்கு கிடைக்கும் உணவை ஸ்தோத்திரத்தோடே புசித்து அதற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்தவேண்டும். சீஷர்கள் கதிர்களைக் கொய்து அதைப் புசிக்கிறார்கள். இது சுவையான உணவல்ல. மிகவும் சாதாரணமான உணவுதான்.

இவர்கள் எளிமையான உணவைப் புசித்தாலும் பரிசேயரில் சிலர் இவர்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள். *நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதைப்பற்றி குறை கூறுவதற்கென்றே ஒரு சிலர் இருப்பார்கள். நம்முடைய செயல்களில் கள்ளம் கபடம் இல்லாவிட்டாலும், நம்முடைய கிரியைகளினால் மற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாவிட்டாலும், அதைப் பெரிதுபடுத்தி நம்மைக் குற்றப்படுத்துகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.* அதுபோலத்தான் சீஷர்கள் சாதாரணமாக கதிர்களைக் கொய்து புசித்ததை, பரிசேயரில் சிலர், அதை பெரிய காரியமாக சித்தரித்து ஏதோ செய்யத்தகாத பாவத்தை அவர்கள் செய்து விட்டதாக, அவர்கள்மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

பரிசேயர்கள் ஓய்வுநாளில் சுவையான உணவைப் புசிப்பது வழக்கம். ஆனால் சீஷர்களோ ஓய்வுநாளில் சாதாரண கதிர்களைக் கொய்து புசித்ததை, ஓய்வுநாளில் செய்யத்தகாததை அவர்கள் செய்து விட்டதாக வியாக்கியானம் பண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்காக பரிந்து பேசுகிறார். சீஷர்கள் செய்தது நியாயப்பிரமாணத்தின்படி தவறானது அல்ல என்பதை இயேசுகிறிஸ்து அவர்களுக்கு விவரித்துக் கூறுகிறார். "முன்னோர்களின் பாரம்பரியமும், நியாயப்பிரமாணமும் தடைபண்ணியிருக்கும் காரியங்களில் பலவற்றை இயேசுகிறிஸ்து அங்கீகரிக்கிறார். அவசியமான தேவை ஏற்படும்போது, ஓய்வு நாள் பிரமாணத்தின் நியதிகளை மீறுவதினால் தவறு இல்லையென்று பரிசேயருக்கு விவரித்துக் கூறுகிறார். பாரம்பரியத்தைவிட, மனுஷருடைய தேவைகள் சந்திப்படவேண்டுமென்பதில் நாம் அதிக கவனம் செலுத்தவேண்டும்." ஏனென்றால்,

*பின்பு அவர்களை நோக்கி: "மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது".* (மாற்கு 2:27)

புளிப்பில்லா அப்பப்பண்டிகை ஏழு நாட்களுக்கு ஆசரிக்கப்படும். நிசான் மாதம் 15ஆம் நாளில் இப்பண்டிகை துவங்கும். (லேவி 23:6#8) ஏழு நாள் பண்டிகை, விசேஷித்த ஓய்வுநாளாக ஆசரிக்கப்படும். இது தவிர, ஒவ்வொரு வாரத்திற்கும் ஓய்வுநாளும் உண்டு. "பஸ்காபண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே" என்று இந்த வசனத்தில் கூறப்படுவது வாரத்தின் ஓய்வுநாளாகும். (மத் 12:1#8)

ஓய்வுநாளில் பரிசேயர்களும் சில காரியங்களைச் செய்வார்கள். "சிறுபிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்வார்கள்". "பள்ளத்தில் விழுந்துவிட்ட விலங்குகளை வெளியே தூக்கிவிடுவார்கள்". (மத் 12:5,11) ஆனால் மனுஷரைப் பராமரிக்கும் காரியங்களைப் பொறுத்த அளவில் ஒன்றும் செய்யக்கூடாது. ஓய்வுநாளில் அவை தடைபண்ணப்பட்டிருக்கிறது என்பார்கள். (லூக்கா 6:6#11; லூக்கா 13:10#17). (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

10 Feb, 01:41


*பழைய ரசம்; புதிய ரசம்!*

*அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.* (லூக் 5:39)

இயேசுகிறிஸ்து நம்முடைய பெலத்திற்கு தகுந்தவாறே நமக்கு ஊழியத்தைக் கொடுக்கிறார். நமது பலத்தை அறிந்து நம்மால் தாங்கிக்கொள்ளக்கூடிய அளவிற்கு தமது ஊழியத்தில் நம்மை ஈடுபடுத்துவது தேவனுடைய விசேஷித்த கிருபை. அவர் புதிய வஸ்திரத்துண்டை பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டார். புது திராட்சரசத்தை பழந்துருத்திகளில் வார்த்து வைக்கமாட்டார்.

இயேசுகிறிஸ்து தம்மைப் பின்பற்றி வருமாறு சீஷர்களை அழைத்தவுடன், அவர்களை கடினமான பயிற்சிகளுக்கு உட்படுத்தவில்லை. அவர்கள் இப்போதுதான் உலகப்பிரகாரமான காரியங்களிலிருந்து வேறுபிரிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்துவை பின்பற்றி வந்திருக்கிறார்கள். ஆரம்பத்திலேயே இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு கடினமான பயிற்சிகளைக் கொடுத்தால், அவர்கள் இயேசுகிறிஸ்துவை விட்டு ஓடிப்போய்விடுவார்கள். ஆகையினால் கொஞ்சம் கொஞ்சமாக, தமது சீஷர்களால் தாங்கிக்கொள்ளக்கூடிய அளவுக்குத்தக்கதாக, இயேசுகிறிஸ்து அவர்களுக்கு ஆவிக்குரிய பயிற்சிகளை கொடுத்து வருகிறார்.

ஒருவன் பழைய ரசத்தைக் குடித்தவுடனே, புது ரசத்தை விரும்பமாட்டான். பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான். ஏனெனில், அவன் பழைய ரசத்தில் பழகிப்போயிருக்கிறான். சீஷர்களுக்கு ஆரம்பத்திலேயே கடினமான பயிற்சிகளைக் கொடுத்தால், அவர்கள் தங்களுடைய பழைய ஜீவியமே நல்லது என்று சொல்லுவார்கள். தாங்கள் அழைக்கப்பட்ட அழைப்பை சீஷர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்த அழைப்புக்கு தங்களை ஆயத்தப்படுத்தி பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான், இயேசுகிறிஸ்து கொடுக்கும் புதிய ஜீவன், அவர்களுக்கு மேன்மையானதாக தெரியும்.

நியாயப்பிரமாணத்தையும், சுவிசேஷத்தையும் ஒன்றாகக் கலக்க முடியாது. *சுவிசேஷத்தில் பங்குபெற வேண்டுமானால் நாம் மறுபடியும் பிறக்க வேண்டும்.* பழைய மார்க்கத்தில் மூழ்கியிருக்கிறவர்கள் முதலாவதாக மனம்மாறி, புதுசிருஷ்டியாக வேண்டும்.
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

09 Feb, 01:32


*தடைகளின் மத்தியில் ஊழியம்!*

*பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று.* (லூக்கா 5:17)

இயேசுகிறிஸ்து உபதேசித்துக்கொண்டிருக்கும்போது, அங்கு பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருக்கிறார்கள். இயேசுவின் உபதேசத்தைக் கேட்டு, சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்காக அவர்கள் இயேசுவின் பாதபடியில் அமர்ந்திருக்கவில்லை. குணமாக்கத்தக்கதாக கர்த்தருடைய வல்லமை அங்கு விளங்கியபோதிலும், பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் குணமாக்கப்படவில்லை. காரணம், அவர்கள் தங்கள் இருதயத்திற்குள், தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக யோசனைபண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தைத் தேவதூஷணம் என்று வியாக்கியானம்பண்ணுகிறார்கள்.

இயேசுகிறிஸ்து உபதேசித்துக்கொண்டிருக்கும் வீட்டில், பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் பார்வையாளர்களாகவும், வேவுகாரர்களாகவும் உட்கார்ந்திருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் வார்த்தையில் ஏதாவது குற்றம் கண்டுபிடிக்கலாமா என்று, அவருடைய உபதேசத்தைக் கேட்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை குற்றப்படுத்துவதுதான் அவர்களுடைய பிரதான நோக்கம். தாங்கள் குணப்படவேண்டுமென்னும் ஆர்வம் அவர்களிடத்தில் சிறிதும் இல்லை.

நாம், சபை ஆராதனையில் கலந்துகொள்ளும்போது, நம்முடைய ஆத்துமாவும் சரீரமும் குணப்படவேண்டுமென்று எதிர்பார்போடு அங்கு அமர்ந்திருக்க வேண்டும். உபதேசிக்கப்படும் வார்த்தையின்கீழ், நாம் பயபக்தியோடு அமர்ந்திருக்க வேண்டும். *தேவனுடைய வார்த்தை பிரசங்கிக்கப்படும்போது, அதைப் பார்க்கும் பார்வையாளர்களாக இருப்பதினால் நமக்கு பிரயோஜனம் எதுவுமில்லை.* கர்த்தருடைய வார்த்தை பிரசங்கிக்கப்படும்போது அது நமக்காக சொல்லப்படும் கதை என்று நினைக்கக்கூடாது. *அது பரலோகத்திலிருந்து நமக்காக அனுப்பப்பட்டிருக்கும் தேவனுடைய செய்தி என்று, அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.*

பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் மனுஷருக்கு முன்பாக பிரசங்கம்பண்ணுவார்கள். ஆனால் அவர்களுடைய பிரசங்கம் மனுஷருடைய இருதயத்தில் பிரசங்கிக்கப்படாது. பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் கலிலேயா, யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும் எருசலேம் நகரத்திலுமிருந்து வந்திருக்கிறார்கள். தேசத்தின் எல்லா பாகங்களிலிருந்தும் இவர்கள் இயேசுகிறிஸ்துவிடம் வந்திருக்கிறார்கள். தம்மை இவர்கள் கண்ணியில் சிக்க வைப்பார்கள் என்பதை தெரிந்திருந்தும், தமது உபதேசத்தை தவறாக வியாக்கியானம் பண்ணுவார்கள் என்பதை தெரிந்திருந்தும், இயேசுகிறிஸ்து அந்த இடத்தில் தேவனுடைய வார்த்தையை உபதேசம் பண்ணுகிறார். பிணியாளிகளை சொஸ்தமாக்குகிறார். பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் அந்த இடத்தில் இருப்பதினால் இயேசுகிறிஸ்துவின் ஊழியம் தடைபடவில்லை.

*எவ்வளவு தடைகள் இருந்தாலும், உங்கள் ஊழியம் தடைப்படக்கூடாது. சத்தியம் சத்தியமாக சொல்லப்பட வேண்டும். அங்கே தேவ வல்லமை விளங்கும்...* (தொடரும்)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

08 Feb, 01:52


*இதை ஒருவருக்கும் சொல்லாமல்...*

*"அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாக பலி செலுத்து என்று கட்டளையிட்டார்."* (லூக் 5:14).

இயேசுகிறிஸ்து நம்முடைய வியாதியிலிருந்து நம்மை சொஸ்தமாக்கும்போது, அவர் நம்மிடத்திலிருந்து சில காரியங்களை எதிர்பார்க்கிறார். முதலாவதாக இயேசுவின் கிருபையைப் பெற்றுக்கொண்ட *நாம் மிகுந்த மனத்தாழ்மையோடு இருக்க வேண்டும்*. நாம் குணமாக்கப்பட்ட செய்தியை நம்முடைய சுய பெருமைக்காக எல்லோரிடத்திலும் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கக்கூடாது. *இயேசுகிறிஸ்து நம்மை சுத்தமாக்கியது அவருடைய சுத்தக்கிருபை. நமது சுயபக்தியினாலோ அல்லது சுயசித்ததினாலோ நாம் குணமடையவில்லை. இயேசுகிறிஸ்துவே தமது கிருபையினால், தமது சித்தத்தினால் நம்மைக் குணப்படுத்தியிருக்கிறார்.*

இயேசுகிறிஸ்து சுத்தமாக்கப்பட்ட குஷ்டரோகியை நோக்கி "நீ இதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம்" என்று கூறுகிறார். தன்னுடைய சுயபெருமைக்காக இந்த சம்பவத்தை இவன் எல்லோருக்கும் விளம்பரப்படுத்தக்கூடாது. இயேசுகிறிஸ்து நம்முடைய வியாதியிலிருந்து நம்மை சொஸ்தமாக்கி சுத்தப்படுத்தும்போது, நமது சுயபெருமைக்கு அங்கு இடமேயில்லை. நாம் சுத்தமானதற்காக தேவனுக்கு நன்றி சொல்லவேண்டும். தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும்.

குஷ்டரோகியை சுத்தப்படுத்தியதற்காக இயேசுகிறிஸ்து அவனிடமிருந்து பணத்தை வசூலிக்கவில்லை. ஆனால் தேவனைத் துதிக்கும் ஸ்தோத்திர பலிகளை அவன் ஏறெடுக்க வேண்டுமென்று கட்டளையிடுகிறார். நமது கடமைகளை நாம் நிறைவேற்ற வேண்டும். சுத்தமாக்கப்பட்ட குஷ்டரோகி தன்னை ஆசாரியனுக்குக் காண்பிக்க வேண்டும். தேவாலயத்திற்குப் போகவேண்டும். தான் சுத்தமானதை ஆசாரியன் மூலமாக உறுதி பண்ணவேண்டும். மோசே கட்டளையிட்டபடியே அவர்களுக்குச் சாட்சியாக தேவனுக்கு பலி செலுத்த வேண்டும்.

குஷ்டரோகம் சுத்தமானவுடன் தன்னுடைய சொந்த வேலையை பார்க்கப் போய்விடக்கூடாது. தேவனுக்குரியதை தேவனுக்குச் செலுத்துவதில் முன்னுரிமை கொடுக்கவேண்டும். *மனுஷர் மத்தியில் தான் சுத்தமானதை விளம்பரப்படுத்துவதைவிட, தேவனுடைய ஆலயத்தில் தேவனுக்கு ஸ்தோத்திர பலிகளை ஏறெடுப்பதே மிகவும் முக்கியமானது.* (யோவா 5:14). அதிக கேடு ஒன்றும் தங்களுக்கு வராதவாறு, சொஸ்தமானவர்கள் இனிமேல் பாவம் செய்யக்கூடாது.

இந்த மனுஷன் முழுவதுமாக சுத்தமாக்கப்பட்டான் என்று ஆசாரியர் சாட்சி கூறவேண்டுமென்று இயேசு கிறிஸ்து விரும்பினார். தேவனுடைய வல்லமைக்கு ஆசாரியர் சாட்சி பகரவேண்டும். ஆகையினால் சுத்தமாக்கப்பட்ட அந்த மனுஷனை ஆசாரியரிடத்திற்கு இயேசு கிறிஸ்து அனுப்புகிறார்...(தொடரும்)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

07 Feb, 01:42


*அவருக்குப் பின்சென்றார்கள்...*

*"அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்".* (லூக் 5:11)

சீமோனும், அவரது கூட்டாளிகளும், இயேசுவின் உபதேசத்தைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவுக்குப் பின் செல்லவேண்டுமென்று தீர்மானம்பண்ணுகிறார்கள். தங்களுடைய படகுகளை கரையிலே கொண்டுபோய் நிறுத்துகிறார்கள். தம் பின்னே வருமாறு, இயேசுகிறிஸ்து இவர்களை அழைக்கிறார். உடனே இவர்கள் எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்செல்கிறார்கள். இவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டாலும், தங்கள் பொறுப்பிலுள்ள படவுகளை, பொறுப்பாக கரையிலே கொண்டுபோய் நிறுத்தினபின்புதான், இயேசுவுக்குப் பின் செல்கிறார்கள்.

தங்களுக்கு மிகுதியான மீன்கள் கிடைத்திருக்கும்போது, இவர்கள் அவையெல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவுக்குப் பின் செல்ல வேண்டுமென்று தீர்மானம்பண்ணுகிறார்கள். *திரளான மீன்கள்மீது தங்களுடைய இருதயத்தை பதித்து வைக்காமல், இயேசுகிறிஸ்துவின் வார்த்தைக்கு கீழ்ப்படிகிறார்கள்*.

நம்முடைய வாழ்க்கையில் ஐசுவரியம் மிகுதியாகும்போது, அந்த ஐசுவரியத்தின்மீது நாம் பற்று வைப்பதற்கு வாய்ப்புள்ளது. *ஐசுவரியத்தின்மீது ஆசை வைப்பது ஒரு சோதனை.* ஆனால், நாமோ ஐசுவரியத்தை நம்பாமல், *இயேசுவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அவருக்குப் பின்னே செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும்.*

சீஷர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். *சுவிசேஷம் நம்மிடம் எதிர்பார்க்கும் காரியம் இதுதான்.* (மத் 19:27#30) *நாம் செலுத்த வேண்டிய கிரயம் எதுவாக இருந்தாலும், அதைச் செலுத்தி, கர்த்தரை மனப்பூர்வமாக பின்பற்றிச் செல்வதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்.*

நமக்கு இருக்கும் பொறுப்புக்களை உதறித்தள்ளிவிடவேண்டும் என்பது இதன் பொருளல்ல. எல்லாவற்றையும் விட்டு, அவரைப் பின்பற்றிச் சென்ற இவர்களுக்குக் குடும்பப் பொறுப்புக்களும், இதர பொறுப்புக்களுக்கும் இருந்தன. (1தீமோ 5:8) இந்த வசனத்தின் மையக்கருத்து என்னவென்றால், *நமது ஜீவியத்தில் கர்த்தருக்கு முதலிடம் தரவேண்டும் என்பதுதான்.* (மத் 22:37; லூக்கா 14:16#27). (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

06 Feb, 02:37


*அந்தப்படியே அவர்கள் செய்து...*

*"அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள். அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்."* ( 5:6,7).

*இயேசுவின் வார்த்தையின்படியே அவர்கள் வலையைப்போடுகிறார்கள். அப்போது தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களை அவர்கள் பிடிக்கிறார்கள்*. "இதற்கு முந்தின இரவில், இராமுழுவதும் பிரயாசப்பட்டும் அவர்கள் ஒரு மீனும் பிடிக்கவில்லை. ஆனால் இப்போதோ அவர்கள் மிகுதியான மீன்களைப் பிடிக்கிறார்கள்." அவ்வளவு மீன்களையும் இந்த வலையினால் அடக்கி வைக்க முடியவில்லை. வலை கிழிந்து போகத்தக்கதாக அவர்கள் மிகுதியான மீன்களைப் பிடிக்கிறார்கள். அப்பொழுது மற்ற படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படி சைகை காட்டுகிறார்கள். அவர்கள் வந்து இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக அவற்றை மீன்களினால் நிரப்புகிறார்கள். அளவுக்கதிகமாக படகுகளில் மீன்களை நிரப்புவதினால், அந்த படகுகள் அமிழக்கூடிய சூழ்நிலை உருவாயிற்று

*இயேசுகிறிஸ்து இந்த அற்புதத்தைச் செய்து, தரையின்மீது மாத்திரமல்ல, சமுத்திரத்தின்மீதும் தமக்கு அதிகாரம் இருப்பதை காண்பிக்கிறார்.* அலைகளின்மீதும், சமுத்திரத்திலுள்ள மச்சங்களின்மீதும் இயேசுகிறிஸ்துவுக்கு சர்வ அதிகாரமுள்ளது. *சற்று நேரத்திற்கு முன்பு இயேசுகிறிஸ்து பேதுருவின் படவில் அமர்ந்து ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார். அந்த உபதேசத்தை உறுதிபண்ணும் விதமாக இப்போது இங்கு அற்புதம் நடைபெற்றிருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள் அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் உறுதிபண்ணப்படுகிறது.*

இயேசுகிறிஸ்து படவில் ஏறி அமர்ந்து பிரசங்கம்பண்ணியபோது, அந்த பிரசங்கத்தைக் கேட்ட ஜனங்களில் பலர் இன்னும் கடற்கரையிலேயே இருக்கிறார்கள். *அவர்களுக்கும் மிகுதியான மீன்கள் கிடைத்த அற்புதத்தைக் காணும் சிலாக்கியம் உண்டாயிற்று.* இயேசுகிறிஸ்து போதகம்பண்ணி முடித்தபின்பு, அவர் அடுத்து என்ன செய்வார் என்பதை பார்ப்பதற்கு அவர்கள் அங்கு ஆவலோடு காத்திருக்கலாம். *இங்கு நடைபெற்றிருக்கும் அற்புதம் அவர்களுடைய விசுவாசத்தை உறுதிபண்ணியிருக்கும். இயேசுகிறிஸ்து மெய்யாகவே தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்பதை ஜனங்கள் புரிந்துகொண்டிருப்பார்கள்.*

கடலிலிருந்து ஜனங்களுக்கு போகதம்பண்ண இயேசுகிறிஸ்துவுக்கு ஒரு படகு தேவைப்பட்டது. சீமோன் இயேசுகிறிஸ்துவுக்கு தன்னுடைய படகைக்கொடுத்து உதவிபுரிந்தார். தமக்கு உதவிபுரிந்த சீமோனை இயேசுகிறிஸ்து ஆசீர்வதிக்க விரும்புகிறார். *இரட்சகர் இயேசுகிறிஸ்துவுக்காக நாம் ஊழியம் செய்யும்போது, நம்முடைய பிரயாசங்கள் எல்லாவற்றையும் அவர் தம்முடைய ஞாபகபுஸ்தகத்தில் எழுதிவைத்து, தம்முடைய கிருபையின்படியும், இரக்கத்தின்படியும், தம் மகிமையின் ஐசுவரியத்தின்படியும், நம்மை ஆசீர்வதிப்பார் என்பது, எவ்வளவு நிச்சயம்!*

சீமோன் பேதுரு இயேசுவின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வலையைப் போட்டபோது, மிகுதியான மீன்கள் கிடைத்தது. *இந்த சம்பவம் கர்த்தருடைய பிள்ளைகள் எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியாக நடைபெற்றிருக்கிறது. நாமும் நம்முடைய காரியங்களை இயேசுகிறிஸ்துவின் ஊழியத்திற்கு ஒப்புக்கொடுக்கும்போது அவர் நம்மையும், தம் கிருபையால் நிரப்பி ஆசீர்வதிப்பார். நம்முடைய தோல்விகள் வெற்றியாக மாறும். ஏமாற்றங்கள் மறையும். நமது பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்படும். அந்த ஆசீர்வாதம், அநேக மனிதரின் இரட்சிப்புக்கு பயன்படும்...* (தொடரும்)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

05 Feb, 01:06


*"ஒரு விசேஷித்த படகு!"*

*அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலைசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்...* (லூக் 5:2,3).

இயேசுகிறிஸ்து, கெனேசரேத்து கடலருகே நின்று கொண்டிருக்கிறார். திரளான ஜனங்களுக்கு போதகம்பண்ண, இந்த இடம் வசதியாக இல்லை. ஜனங்களெல்லோரும் அவரை நெருக்குகிறார்கள். ஜனங்கள் திரளாக இருப்பதினால், அவர்களால் இயேசுகிறிஸ்துவின் முகத்தை சரியாகப் பார்க்கமுடியவில்லை. அவருடைய போதகத்தையும் சரியாக கேட்கமுடியவில்லை. திரளான ஜனங்கள் மத்தியில் இயேசுகிறிஸ்து சிக்கிக்கொண்டிருக்கிறார். ஆகையினால், எல்லோரும் தம்மைக் காணும் விதத்திலும், எல்லோரும் போதகத்தை கேட்கும் விதத்திலும் இயேசுகிறிஸ்து ஓர் காரியம் பண்ணுகிறார்.

கடற்கரையில் அந்த வேளையில் இரண்டு படவுகள் நிற்கிறது. ஒரு படகு சீமோனுடையது. மற்றொன்று செபதேயுவின் குமாரருடையது. அவர்களோடு மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களெல்லோரும் அவர்களை விட்டுப் போய்விடுகிறார்கள். அந்த சூழ்நிலையில் இயேசுகிறிஸ்து அங்கு நின்றிருந்த இரண்டு படவுகளில் ஒன்றில் ஏறுகிறார். அது சீமோனுடைய படவாயிருக்கிறது.

இயேசுகிறிஸ்து சீமோனுடைய படவில் ஏறி, அந்தப்படவை கரையிலிருந்து சற்றே கடலுக்குள் தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொள்கிறார். ஜனங்களெல்லோரும் கடற்கரையில் இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவோ, கடற்கரையிலிருந்து சற்று தள்ளி கடலுக்குள் இருக்கும் படகில் உட்கார்ந்திருக்கிறார். இதனால் இயேசுகிறிஸ்துவின் போதகத்தைக் கேட்பதற்கு ஜனங்களுக்கு பிரச்சனை உண்டாகலாம். அவருடைய சப்தத்தை கடற்கரையில் கூடியிருக்கும் ஜனங்களால் தெளிவாக கேட்க முடியாமல் போகலாம். ஆனால் இயேசுகிறிஸ்துவின் சத்தம் வல்லமையுள்ளது. கிறிஸ்துவின் சத்தம் ஜீவனுள்ளது.

அவர் கடலில் இருப்பதினால், கடற்கரையில் கூடியிருக்கும் எல்லா ஜனங்களாலும் அவரை தெளிவாக தரிசிக்க முடிகிறது. இயேசுகிறிஸ்து உயர்த்தப்படும்போது அவர் தம்மிடத்தில் எல்லா ஜனங்களையும் சேர்த்துக்கொள்கிறார். இயேசுகிறிஸ்து கடலிலிருந்த அந்தப் படவில் உட்கார்ந்து ஜனங்களுக்குப் போகதம் பண்ணுகிறார். தேவவசனத்தை அவர்களோடு பேசுகிறார். தேவனைப்பற்றிய வெளிப்பாடுகளை அவர்களிடத்தில் விளக்கிக் கூறுகிறார்.

இந்த மீனவர்கள்மீது இயேசுகிறிஸ்து விசேஷித்த பிரியத்தோடிருக்கிறார். இதற்கு முன்பு இயேசுகிறிஸ்துவின் பிரசங்கத்தை இவர்கள் ஓரளவு கேட்டிருக்கிறார்கள் (யோவா 1:40,41). கலிலேயாவிலுள்ள கானா ஊரிலும் (யோவா 2:2), யூதேயாவிலும் (யோவா 4:3) இவர்கள் இயேசுகிறிஸ்துவோடு கூடியிருந்திருக்கிறார்கள். அந்த சம்பவங்களில், இயேசுகிறிஸ்து பேதுருவையும் மீன் பிடிக்கிற மற்றவர்களையும் தம்மைப் பின்பற்றி வருமாறு அழைக்கவில்லை. ஆனால் இப்போதோ இயேசுகிறிஸ்து இவர்களை தம்மைப் பின்பற்றி வருமாறு அழைக்கிறார்.

*"கலிலேயாக்கடலில் எப்போதுமே நாலாயிரம் படவுகளுக்கு மேல் இருக்குமென்று கூறுகிறார்கள். அந்தப் படவுகளில் அந்த ஒரு படவு விசேஷித்தது. அது, பேதுருவிற்குரியது."* (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

04 Feb, 01:44


*"கெனேசரேத்துக் கடலருகே..."*

*பின்பு அவர், கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்.* (லூக் 5:1).

இயேசுகிறிஸ்து, பேதுருவையும் அந்திரேயாவையும், மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்று கூறி அழைக்கிறார். இந்த சம்பவம் மத்தேயு எழுதின சுவிசேஷத்திலும் (மத் 4:18), மாற்கு எழுதின சுவிசேஷத்திலும் (மாற் 1:16) சுருக்கமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. "லூக்கா இந்த சம்பவத்தை எழுதும்போது, பேதுரு கடலில் மிகுதியான மீன்களைப் பிடித்த அற்புத சம்பவத்தை எழுதியிருக்கிறார்." மற்ற சுவிசேஷங்களிலோ இயேசுகிறிஸ்து இவர்களை தம்முடைய சீஷர்களாக அழைத்த சம்பவம் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. (இயேசுகிறிஸ்து நடப்பித்த அநேக அற்புதங்களை லூக்கா விரிவாக எழுதியிருக்கிறார். மற்ற சுவிசேஷங்களில் எழுதப்படாத பல சம்பவங்கள் லூக்கா சுவிசேஷத்தில் எழுதப்பட்டிருக்கிறது.)

இயேசுகிறிஸ்துவின் பிரசங்கத்தைக் கேட்பதற்கு திரளான ஜனங்கள் கூடிவருகிறார்கள். தேவவசனத்தைக் கேட்கும்படி இயேசுகிறிஸ்துவிடத்தில் நெருங்குகிறார்கள். அவருடைய உபதேசத்திற்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறார்கள். எல்லோரும் அவரை நெருங்குகிறார்கள். கூட்டம் திரளாக இருக்கிறபடியினால் எல்லோரும் இயேசுகிறிஸ்துவுக்கு அருகாமையில் இருக்கவேண்டும் என்று விரும்பி அவர்கள் இயேசுகிறிஸ்துவை நெருங்கியிருக்கலாம். "இது அன்பினாலும் ஆர்வத்தினாலும் உண்டான நெருக்கம்."

பரிசேயர்களும்; பிரபுக்களும், இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கவில்லை. கிறிஸ்துவின் உபதேசத்தைக் கேட்பதற்காக இவர்கள் இதுபோல திரளாகக் கூடிவரவில்லை. இயேசுகிறிஸ்துவின் பார்வையில் மனுஷருடைய ஆத்துமா விலையேறப்பெற்றதாக இருக்கிறது. *மனுஷருடைய உலகப் பிரகாரமான அந்தஸ்தை வைத்து இயேசுகிறிஸ்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எல்லோருமே அவருக்கு முக்கியமானவர்கள்தான்.* இயேசுகிறிஸ்துவைச் சுற்றிலும் சாதாரண ஜனங்கள்தான் திரளாகக் கூடியிருக்கிறார்கள். யூதமார்க்கத்தின் தலைவர்களோ, ஆசாரியர்களோ, ஐசுவரியவான்களோ அங்கு கூடிவரவில்லை.

தேவனுடைய ராஜ்யத்தில் ஜனங்களைக் கூட்டிச்சேர்ப்பதுதான், இயேசுகிறிஸ்துவின் ஊழியம். பாவிகளை இரட்சிப்பதற்காக இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வந்திருக்கிறார். *ஜனங்கள் ஏழைகளாக இருந்தாலும், செல்வந்தர்களாக இருந்தாலும் தாங்கள் செய்த பாவங்களுக்கு மனம்வருந்தி, மனந்திருந்தி இயேசுகிறிஸ்துவிடம் மன்னிப்பு கேட்கும்போது, அவர் அவர்களுடைய பாவங்களை அவர்களுக்கு மன்னிக்கிறார்.* நல்ல பிரசங்கத்தைக் கேட்கவேண்டுமென்று ஜனங்கள் விரும்புகிறார்கள். தேவனுடைய வசனத்தைக் கேட்கும்படி அவர்கள் ஆர்வத்தோடு இயேசுகிறிஸ்துவிடம் கூடிவருகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் வாயிலிருந்து வீணான வார்த்தைகள் வராது என்பதும், தேவவசனங்களே வரும் என்பதும் ஜனங்களுக்குத் தெரியும். ஆகையினால் மிகுந்த எதிர்பார்ப்போடு, வசனத்தைக் கேட்க வேண்டும் என்னும் வாஞ்சையில், திரளான ஜனங்கள் இயேசுகிறிஸ்துவிடம் கூடிவந்து அவரிடத்தில் நெருங்குகிறார்கள்.

*ஆவிக்குரிய எழுப்புதல் ஏற்படும்பொழுது, ஜனங்கள் திருவசனத்தைக் கேட்பதற்காகக் கூடி வருவார்கள். எழுப்புதலுக்கு இதுதான் அடையாளம். ஆகையினால், சபையில் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணும் காரியம், தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.*

"கெனேசரேத்துக் கடல்" என்பதன் மறுபெயர்கள், திபேரியாக்கடல் (யோவான் 21:1), கின்னரேத்துக் கடல் (எண் 34:1); கலிலேயாக்கடல் (மத் 4:18) என்பதாகும். (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

03 Feb, 01:48


*இயேசுவும், ஏசாயா புத்தகச்சுருளும்!*

*"தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார். அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது..."* (லூக் 4:16,17)

இயேசுகிறிஸ்து ஜெபாலயங்களில் உபதேசித்து வருகிறார். தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு இயேசுகிறிஸ்து வருகிறார். அங்குள்ள ஜெபாலயத்தில், ஒரு ஓய்வுநாளில் இயேசுகிறிஸ்து வசனத்தைப் பிரசங்கம்பண்ணுகிறார். இதுவரையிலும் இயேசுகிறிஸ்து, மற்ற ஜெபாலயங்களில் உபதேசித்தபோது அவர் எல்லோராலும் புகழப்பட்டார். ஆனால் நாசரேத்திலுள்ள ஜெபாலயத்தில் அவர் பிரசங்கம்பண்ணியபோதோ, ஜனங்கள் இயேசுகிறிஸ்துவைத் துன்புறுத்துகிறார்கள்.

மற்ற இடங்களில் அவருடைய கீர்த்தி வெகுவாக பரம்பிற்று. தம்முடைய வழக்கத்தின் பிரகாரம் அவர் நாசரேத்திலுள்ள ஜெபாலயத்தில் பிரவேசிக்கிறார். *இயேசுகிறிஸ்து எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரிலுள்ள ஜெபாலயத்தில் பிரவேசித்து அங்கு ஜனங்களுக்கு உபதேசம் பண்ணுவது வழக்கம்.* ஓய்வுநாளில் யூதர்கள் ஜெபாலயங்களில் கர்த்தரை ஆராதிப்பதற்காகவும், வேதத்தை தியானிப்பதற்காகவும் கூடிவருவது வழக்கம். "கடினமாக உழைத்துவிட்டு ஓய்வெடுப்பதற்காக யூதர்கள் ஜெபாலயத்திற்கு வரமாட்டார்கள். கர்த்தரை ஆராதிப்பதற்காகவும், அவருடைய வார்த்தையை தியானிப்பதற்காகவும் யூதர்கள் ஜெபாலயத்திற்கு வருவது வழக்கம்".

ஓய்வுநாளில் ஜெபாலயத்தில் பிரவேசிப்பது இயேசுகிறிஸ்துவுக்கும் வழக்கமாக இருக்கிறது. தம்முடைய வழக்கத்தின் பிரகாரம் ஜெபாலயத்தில் கர்த்தருடைய வார்த்தையை வாசிப்பதற்கு எழுந்து நிற்கிறார்.

"ஒவ்வொரு ஓய்வுநாளிலும், ஜெபாலயத்தில் ஏழுபேர் வேதபாடத்தை வாசிப்பார்கள். முதலாவதாக ஒரு ஆசாரியரும், அதன்பின்பு ஒரு லேவியரும் அதன்பின்பு அந்த ஜெபாலயத்தைச் சேர்ந்த ஐந்து இஸ்ரவேல் புத்திரரும் வேதப்பகுதியை வாசிப்பார்கள்."

*இயேசுகிறிஸ்து நாசரேத்திலுள்ள ஜெபாலயத்தில் ஒரு அங்கத்தினாராக இருப்பதினால், இவருக்கு வேதத்தை வாசிப்பதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. மற்ற ஊரிலுள்ள ஜெபாலயங்களில் இயேசுகிறிஸ்து வேதம் வாசித்ததாக சுவிசேஷப் புஸ்தகங்களில் குறிப்பு எதுவுமில்லை.*

ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் இயேசுகிறிஸ்துவினிடத்தில் கொடுக்கப்படுகிறது. அக்காலத்தில் பழைய ஏற்பாட்டு புஸ்தகங்களெல்லாம் சுருள்களில் எழுதி சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். "அந்த ஓய்வுநாளின் வழக்கத்தின்படி இயேசுகிறிஸ்து இரண்டாவது வேதபாடம் வாசிக்கிறார். இந்த வேதபாடம் ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கிறது."

"இயேசுகிறிஸ்து வேதவாக்கியத்தை வாசிக்க எழுந்து நின்றார். வேதவாக்கியங்களை வாசிக்கிறவர்கள் வாசிக்கும்போதும், ஜெபிக்கும்போதும் எழுந்து நிற்க வேண்டும். இது ஜெபாலயத்து வழக்கம். . தேவனுக்கும், அவருடைய வார்த்தைக்கும் கொடுக்கப்படும் பயபக்தியையும், மரியாதையையும் எழுந்துநிற்பதன் மூலமாக வெளிப்படுத்துகிறார்கள்."

புதிய ஏற்பாட்டில் ஏசாயாவின் பெயர் 21 இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 12 இடங்களில் ஏசாயா தீர்க்கதரிசன புஸ்தகத்தில் உள்ள வசனங்கள் மேற்கோளாகக் கூறப்பட்டிருக்கிறது. பெரிய தீர்க்கதரிசிகளின் புஸ்தகங்ளெல்லாம் ஒரே புஸ்தகமாக கோர்க்கப்பட்டிருக்கும். 12 சிறிய தீர்க்கதரிசிகளின் புஸ்தகங்கள் தனியாக வேறொரு புஸ்தகமாகக் கோர்க்கப்பட்டிருக்கும். (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

01 Feb, 02:21


*"இயேசு வென்றது நமக்காக!"*

*பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்...* (லூக் 4:13).

பிசாசானவன் இயேசுகிறிஸ்துவை சோதித்து முடிக்கிறான். இந்த சோதனையில் இயேசு ஜெயம் பெறுகிறார். *அவர் தமக்காக மாத்திரம் சாத்தானை ஜெயிக்காமல் நமக்காகவும் அவனை ஜெயிக்கிறார்.*

பிசாசானவன் தன் சோதனையையெல்லாம் முடிக்கிறான். இயேசுகிறிஸ்துவும் பிசாசின் எல்லா சோதனைகளையும் மேற்கொள்கிறார். அந்த சோதனைகளின் வழியாக கடந்து போகிறார். எல்லா சோதனைகளும் முடிவு பெறும் வரையிலும் இயேசு சாத்தானை எதிர்த்து நிற்கிறார். *நம்முடைய வாழ்விலும் நமக்கு சோதனையின் காலம் வரலாம். சோதனையைப் பார்த்து பயந்துவிடக்கூடாது. இயேசுகிறிஸ்துவைப்போல பிசாசுக்கு எதிர்த்து நிற்கவேண்டும். அப்போது அவன் ஓடிப்போவான்.* நாம் சோதிக்கப்படும்போது சோதனைக்குப் பயந்து பாதியிலேயே ஓடிப்போய்விடக்கூடாது. *நமக்கு சோதனை நியமிக்கப்பட்டிருந்தால் அதை மேற்கொள்வதற்கு தேவன் நம்மை பெலப்படுத்துவார். முடிவு வரையிலும் நிலைத்து நிற்கவேண்டும்.*

பிசாசானவன் இயேசுகிறிஸ்துவைச் சோதித்த பின்பு அவரை விட்டு விலகிப்போகிறான். இயேசுவை இனிமேலும் சோதிப்பதினால் தனக்கு ஒரு பிரயோஜனமுமில்லையென்பதை சாத்தான் புரிந்துகொள்கிறான். இயேசுகிறிஸ்துவின் எல்லா பக்கமும் பாதுகாப்பாக இருக்கிறது. அவரிடத்தில் எந்தவிதமான பலவீனமும் காணப்படவில்லை. "சாத்தான் இயேசுவிடம் உலகப்பிரகாரமான ஆசையை காண்பிக்கிறான். சரீரப்பிரகாரமான ஆசையை காண்பிக்கிறான். வீண்பெருமையை காண்பிக்கிறான். இயேசுகிறிஸ்து சாத்தானின் எந்த சோதனைக்கும் தம்மை உட்படுத்தவில்லை. எல்லா சோதனையிலும் இயேசு பிசாசுக்கு எதிர்த்து நிற்கிறார்." பிசாசு ஓடிப்போகிறான். இயேசுவைப்போலவே நாமும் பிசாசுக்கு எதிர்த்து நிற்கும்போது அவன் நம்மைவிட்டு ஓடிப்போவான்.

சாத்தான் சில காலம் மாத்திரமே இயேசுகிறிஸ்துவை விட்டு விலகிப்போகிறான். தற்பொழுது அவன் தன் சோதனையையெல்லாம் முடித்திருக்கிறான். இயேசுகிறிஸ்துவின் சோதனைக்காலம் நிரந்தரமாக முடியவில்லை. தற்காலிகமாகவே முடிந்திருக்கிறது. ஆகையினால் சில காலம் பிசாசு இயேசுவைவிட்டு விலகிப்போகிறான். பிசாசானவனுடைய கட்டுக்கள் அவிழ்க்கப்படும்போது அவன் மறுபடியும் வந்து இயேசுவைச் சோதிப்பான். பிசாசின் சோதனையை இயேசுகிறிஸ்து அந்தகாரத்தின் அதிகாரமென்றும் கூறுகிறார். (லூக் 22:53). இயேசுகிறிஸ்து பிசாசானவனை இந்த உலகத்தின் அதிபதியென்றும் கூறுகிறார். இந்த உலகத்தின் அதிபதி இனிமேல் வருவான் என்றும் இயேசு அவனைப்பற்றி குறிப்பிடுகிறார். (யோவா 14:30).

நம்முடைய வாழ்க்கையில் பிசாசு ஒரு தடவை நம்மை சோதிக்கும்போது அதுவே அவனுடைய சோதனையின் முடிவு என்று நாம் கவனமில்லாமல் இருந்துவிடக்கூடாது. அவன் நம்மைவிட்டுப்போனாலும் சிலகாலம் மாத்திரமே நம்மைவிட்டுப் போகிறான் என்பதையும், அவன் மறுபடியும் வரலாம் என்பதையும் புரிந்துகொண்டு, *அவனுடைய சோதனைகளை மேற்கொள்வதற்கு நாம் எப்போதுமே ஆயத்தமாக இருக்கவேண்டும்.* (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

31 Jan, 01:29


இதற்கு மேலும் இந்த தெய்வீக வெளிப்பாட்டை உறுதிபண்ணுவதற்கு புதிய அடையாளமோ, புதிய அற்புதமோ தேவையற்றது. (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

31 Jan, 01:29


*கர்த்தரை பரீட்சைபாராதிருப்பாயாக!*

*"அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் என்றும், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்"* ( லூக் 4:9#12).

குமாரனாகிய இயேசுகிறிஸ்து பிதாவாகிய தேவனுடைய தெய்வீக பராமரிப்பில் இருக்கிறார். ஆனால் சாத்தானோ அந்தப் பாதுகாப்பையே சந்தேகப்படுமாறு இயேசுகிறிஸ்துவைச் சோதிக்கிறான். சாத்தான், இயேசுவைத் தேவாலயத்து உப்பரிகையின்மேல் நிறுத்துகிறான். இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரனேயானால், அவரை அந்த உப்பரிகையிலிருந்து தாழக்குதிக்குமாறு கூறுகிறான். *தாம் தேவனுடைய குமாரன் என்பதில் இயேசுகிறிஸ்துவுக்கு எந்தவிதமான சந்தேகமுமில்லை. இந்த சத்தியத்தை உறுதிபண்ணுவதற்கு அவருக்கு அற்புதங்களோ அடையாளங்களோ தேவைப்படவில்லை.* ஆனால் சாத்தானோ இயேசுகிறிஸ்துவின் தெய்வீக குமாரத்துவத்தை மேலும் ஒரு அற்புதத்தினால் உறுதிபண்ணவேண்டுமென்று கூறுகிறான்.

இயேசுகிறிஸ்து யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றபோது வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. அப்போது "நீர் என்னுடைய நேசகுமாரன்" என்று, பிதாவாகிய தேவன் இயேசுகிறிஸ்துவைத் தமது குமாரனாக அங்கீகரித்தார். பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல இயேசுகிறிஸ்துவின்மேல் வந்திறங்கினார். இந்த அற்புதமும் அடையாளமும் சாத்தானுக்குப் போதவில்லை.

பிதாவாகிய தேவன், இயேசுகிறிஸ்துவை தமது குமாரனாக, இந்த உலகத்திற்கு ஏற்கெனவே வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த வெளிப்பாடு போக, மேலும் ஒரு வெளிப்பாடு வேண்டுமென்று சாத்தான் இயேசுவைச் சோதிக்கிறான். சாத்தான் இயேசுவை எருசலேமிலுள்ள தேவாலயத்திற்கு கொண்டு போகிறான். அங்கு யூதமார்க்கத்துத் தலைவர்களெல்லாம் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில், இயேசு தம்மை தேவனுடைய குமாரனாக நிரூபிக்க வேண்டுமென்று, சாத்தான் அவரை சோதிக்கிறான். அதற்காக, தேவாலயத்தின் உப்பரிகையிலிருந்து தாழக்குதிக்குமாறு கூறுகிறான்.

இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரனென்றும், தங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக, பிதாவாகிய தேவன் தமது ஒரே பேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை, இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறாரென்றும், ஜனங்கள் விசுவாசிக்க வேண்டும். *இந்த விசுவாசத்தை உறுதிபண்ணுவதற்கு அடையாளமோ அல்லது அற்புதமோ தேவையில்லை.* சாத்தானுடைய சோதனையின் பிரகாரம், ஒருவர் தேவாலயத்து உப்பரிகையிலிருந்து தாழக்குதித்தால், ஒரு வேளை அவருக்கு சரீர மரணம் உண்டாகலாம். பிதாவின் சித்தத்தின் பிரகாரம், கல்வாரி சிலுவையில் மரிப்பதற்குப் பதிலாக, தேவாலயத்து உப்பரிகையிலிருந்து தாழக்குதிப்பதினால் அவருக்கு சரீர மரணம் உண்டாகலாம். இயேசுகிறிஸ்து இதுபோல மரித்துவிட்டால், தன்னை எதிர்த்து நிற்பதற்கு யாரும் இருக்க மாட்டார்களென்று சாத்தான் சதி ஆலோசனை பண்ணுகிறான்.

இயேசுகிறிஸ்துவை சோதிக்கும்போது சாத்தானும் மிகவும் வஞ்சனையாக வேதவாக்கியத்தை மேற்கோளாக கூறுகிறான். இயேசுகிறிஸ்து கூறியதுபோலவே சாத்தானும் "வேதத்தில் எழுதியிருக்கிறது' என்று கூறுகிறான். *இயேசுகிறிஸ்து சாத்தானுக்கு விரோதமாக வேதவசனத்தைப் பயன்படுத்துகிறார்.* சாத்தானோ தனக்கும் வேதவாக்கியத்தை மேற்கோளாக பயன்படுத்தத் தெரியும் என்று தன்னுடைய கபட சுபாவத்தை வெளிப்படுத்துகிறான்.

சாத்தான் கூறிய வேதவாக்கியம் மெய்யானது தான். தேவன் நிச்சயமாகவே தம்முடைய பிள்ளைகளை பாதுகாப்பார். தேவதூதர்களை அனுப்பி நம்முடைய பாதங்கள் கல்லில் இடறாதபடிக்கு பாதுகாத்துக்கொள்வார். *தேவனை நாம் விசுவாசிக்க வேண்டும் என்பதை, உற்சாகப்படுத்துவதற்காக வேதத்தில் இந்த வாக்கியம் எழுதப்பட்டிருக்கிறதேயல்லாமல், தேவனை சோதிப்பதற்காக இந்த வாக்கியம் எழுதப்படவில்லை.*

*"தேவனுடைய பிரசன்னம் நம்மோடு கூடயிருக்கும் என்பதும், தேவதூதர்கள் நமக்கு பணிவிடைசெய்யும் ஆவிகளாக இருப்பார்களென்பதும் வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் எழுதப்பட்டதற்கு மிஞ்சி நாம் நினைக்கக்கூடாது."*

தேவனுக்கு சித்தமில்லாமல் தேவாலயத்து உப்பரிகையிலிருந்து கீழே குதித்து நமது கை கால்களை உடைத்துக்கொள்ளக்கூடாது. இதனால் நமது எலும்பு முறிந்தாலும் அல்லது ஜீவன் போனாலும் தேவனே இதற்கு பொறுப்பு என்று விவாதம் பண்ணக்கூடாது.

இயேசுவை சோதிப்பதற்காக சாத்தான் வேதவாக்கியத்தைப் பயன்படுத்துகிறான். அவனுடைய சோதனையை முறியடிப்பதற்காக இயேசுகிறிஸ்துவும் *"உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சை பாராதிருப்பாயாக"* (உபா 6:16) என்னும் வேதவாக்கியத்தை பயன்படுத்துகிறார். இயேசுகிறிஸ்துவே தேவனுடைய குமாரனென்பதற்கு போதுமான சான்று ஏற்கெனவே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

Tamil BIBLE SECRETS

30 Jan, 01:09


*எழுதியிருக்கிறதே! (2)*

*பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: இவைகள் எல்லாவற்றின் மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான். "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக, எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே" என்றார்...* ( 4:5#8).

பிசாசானவன் இயேசுகிறிஸ்துவை மேலும் இரண்டு சோதனைகளினால் சோதிக்கிறான். தன்னை பணிந்துகொண்டால், இந்த உலகத்தின் அதிகாரத்தையும் மகிமையையும் இயேசுவுக்குத் தருவதாக சாத்தான் கூறுகிறான். மத்தேயு எழுதின சுவிசேஷத்தில் இந்த சோதனை மூன்றாவதாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் லூக்கா எழுதின இந்த சுவிசேஷத்திலோ இது இரண்டாவதாக வந்திருக்கிறது.

சாத்தான் இயேசுவை தொடர்ந்து சோதிக்கிறான். இந்த உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒரு நிமிஷத்திலே காண்பிக்கிறான். இதை செய்வதற்காக பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோகிறான். எல்லாமே ஒரு நிமிஷத்தில் நடைபெறுகிறது. அதை தன்னால் ஒரே நிமிஷத்தில் தரவும் முடியுமென்று ஒரு மாயத்தோற்றத்தை உண்டுபண்ணுகிறான்.

இந்த உலகத்திலுள்ள எல்லா ராஜ்யங்கள் மேலுள்ள அதிகாரமும், இவைகளின் மகிமையும் தனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருப்பதாக சாத்தான் தைரியமாக பொய்கூறுகிறான். அத்தோடு இவற்றை தனக்கு இஷ்டமானவனுக்குக் கொடுக்க தனக்கு அதிகாரமுண்டு என்றும் கூறுகிறான். இயேசுகிறிஸ்துவுக்கு இவை எல்லாவற்றையும் கொடுக்க வேண்டுமென்றால், அவர் தன்னை பணிந்துகொள்ள வேண்டும் என்னும் வஞ்சக நிபந்தனையையும் கூறுகிறான்.

இயேசுகிறிஸ்துவே மகிமைக்குப் பாத்திரர். நமது துதிகளுக்கும் ஆராதனைக்கும் அவர் பாத்திரராக இருக்கிறார். ஆனால் பிசாசானவனோ தன்னைப் பணிந்துகொள்ள வேண்டுமென்று இயேசுவிடம் கூறுகிறான்.

சாத்தானுடைய சோதனையை இயேசுகிறிஸ்து தமது வார்த்தையினால் மேற்கொள்கிறார். அவனைக் கடிந்துகொள்கிறார். "எனக்குப் பின்னாகப் போ சாத்தானே" என்று அவனைக் கடிந்து துரத்துகிறார். *சாத்தானுடைய சோதனைகள் இதுபோன்று வரும்போது நாம் அதை உடனடியாக புறக்கணித்துவிடவேண்டும். அது பற்றி சிந்திக்கவோ, தியானிக்கவோ கூடாது.*

"உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக" என்று வேதத்தில் எழுதியிருக்கிறது. இயேசுகிறிஸ்து இந்த வாக்கியத்தை சாத்தானிடம் கூறுகிறார். நாம் தேவனை மாத்திரமே ஆராதனை செய்யவேண்டும். வேறு யாரையும், எதற்கும் பணிந்து கொள்ளக்கூடாது. மனுஷர்கள் சாத்தானுடைய அதிகாரத்திலிருந்து விடுதலைபெற்று தேவனிடத்தில் திரும்பி வரவேண்டும். சாத்தானை ஆராதிக்கும் தங்கள் அறியாமையிலிருந்து மனந்திரும்பி, ஜீவனுள்ள ஒரே தேவனாகிய இயேசுகிறிஸ்துவை ஆராதிக்க வேண்டும். இதுவே தெய்விக பிரமாணம். இந்த பிரமாணத்தை மனுஷர் மத்தியிலே ஸ்தாபிப்பதற்காகவே இயேசுகிறிஸ்து இந்த பூமிக்கு வந்திருக்கிறார். நாம் தேவனுக்கு மாத்திரமே கீழ்ப்படிய வேண்டும். அவருக்கு மாத்திரமே ஆராதனை செய்யவேண்டும்.

சாத்தான் இந்த உலகத்தின் அதிபதி என்றாலும், இந்த உலகத்தை ஆளும் அதிகாரம் அவனுக்கு இல்லை. தனக்கு அதிகாரம் இருப்பதுபோன்று ஏமாற்றுகிறான். தேவனே சர்வ வல்லமையுள்ளவர். தேவனுடைய வல்லமையைச் சாத்தானால் தனக்கு இஷ்டமானவனுக்குக் கொடுக்க முடியாது. (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

29 Jan, 01:57


தேவன் தமது பிள்ளைகளை பலவிதமான வழிகளினால் போஷிக்கிறார். அவர்களுடைய தேவைகளை விதவிதமாக சந்திக்கிறார். எல்லா சூழ்நிலைகளிலும் நம்முடைய தேவைகள் சந்திக்கப்படுவதற்காக நாம் தேவனையே சார்ந்திருக்க வேண்டும். தேவனை சார்ந்திருக்கும் எவரும் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. தேவன் நமக்கு நியமித்திருக்கும் கடமைகளை குறைவில்லாமல் செய்யவேண்டும். நம்மை போஷிப்பதும், நம்மை பாதுகாத்து பராமரிப்பதும் தேவனுடைய காரியம். (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

29 Jan, 01:57


*"எழுதியிருக்கிறதே..."*

*அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: "மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" என்று எழுதியிருக்கிறதே என்றார்* (லூக் 4:3,4)

இயேசுகிறிஸ்து தம்முடைய ஒவ்வொரு காரியத்திற்கும் பிதாவாகிய தேவனையே சார்ந்திருக்கிறார். பிதாவை நம்புவதினால் இயேசுவுக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லையென்று கூறி பிசாசானவன் அவரை சோதிக்கிறான். "நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும்" என்று கேட்கிறான். சாத்தானுடைய வார்த்தையில் வஞ்சகம் நிறைந்திருக்கிறது. பிதாவாகிய தேவன் இயேசுகிறிஸ்துவை மறந்துவிட்டாரென்றும், அவரைக் கைவிட்டுவிட்டாரென்றும் சாத்தான் விஷ வார்த்தைகளை கூறுகிறான். தம்முடைய குமாரனை பிதாவாகிய தேவன் ஒருபோதும் கைவிடுவதில்லை. அவருடைய கிருபையும் தெய்வீக பராமரிப்பும் இயேசுகிறிஸ்துவுக்கு எப்போதுமே தாராளமாக கொடுக்கப்படுகிறது.

நம்முடைய வாழ்க்கையிலும் நாம் நம்முடைய சுயமுயற்சியின்மீது சார்ந்திருக்கக்கூடாது. தெய்வீக பராமரிப்பை எதிர்பார்த்து, அதுவே நமக்கு போதுமானதென்று நினைக்கவேண்டும். தேவனுடைய தெய்வீக பராமரிப்புக்கு விரோதமான வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்கக்கூடாது. சுயபெருமையை நாம் புறக்கணித்துவிடவேண்டும். தேவனுடைய உதவியில்லாமல் நம்மால் ஜீவிக்க முடியும் என்னும் யோசனை சாத்தானிடமிருந்தே வருகிறது.

இயேசுகிறிஸ்துவினால் கல்லை அப்பமாக மாற்றமுடியவில்லையென்றால், அவர் தேவனுடைய குமாரனல்ல என்று சாத்தான் இந்த உலகத்திற்கு அறிவிக்க விரும்புகிறான். உலகத்திற்கு மாத்திரமல்ல, இயேசுகிறிஸ்துவுக்கும் தன்னுடைய செய்தியை கூறவிரும்புகிறான். ஆனால் இயேசுகிறிஸ்துவோ சாத்தானுடைய சோதனைக்கு தம்மை ஒப்புக்கொடுக்கவில்லை. சாத்தானுடைய கட்டளைக்கு இயேசு ஒருபோதும் கீழ்ப்படிவதில்லை. அவனுடைய வேண்டுதல்களுக்கும் விண்ணப்பங்களுக்கும் இயேசு செவிகொடுக்கமாட்டார். இயேசு சாத்தானின் காரியங்களை நிறைவேற்றமாட்டார். நம்முடைய ஜீவியத்திலும் நாம் சாத்தானுக்கு இடங்கொடுத்து விடக்கூடாது. அவனுடைய வார்த்தைக்கு செவிகொடுத்து சோதனையில் சிக்கிக்கொள்ளக் கூடாது.

தம்முடைய உபதேசங்களை உறுதிபண்ணுவதற்காக இயேசுகிறிஸ்து தம்முடைய வார்த்தைகளை அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் உறுதிபண்ணுகிறார். ஆகையினால் அவர் தமது உபதேசத்தைப் பிரசங்கம் பண்ணும் வரையிலும், அவர் அற்புதத்தை நடப்பிக்கமாட்டார்.

இயேசுகிறிஸ்து ஒருபோதும் தமது சுயவிளம்பரத்திற்காகவோ, தம்முடைய சுயதேவைகள் சந்திக்கப்படவேண்டும் என்பதற்காகவோ அற்புதம் செய்வதில்லை. கானா ஊரிலே நடைபெற்ற கலியாண வீட்டில் இயேசுகிறிஸ்து தண்ணீரை திராட்சரசமாக மாற்றினார். இந்த அற்புதம் இயேசுகிறிஸ்துவின் தேவைகள் சந்திக்கப்படவேண்டும் என்பதற்காக நடைபெற்ற அற்புதமல்ல. கலியாண வீட்டாருக்காக இந்த அற்புதம் நடைபெற்றது.

தாம் தேவனுடைய குமாரன் என்பதை நிரூபிப்பதற்கு இயேசுகிறிஸ்துவிற்கும் பல வழிகள் உள்ளன. தமக்கு சித்தமான வார்த்தையின் மூலமாகவும், தமக்கு சித்தமான கிரியைகளின் மூலமாகவும் தம்மை தேவனுடைய குமாரனென்று இயேசுகிறிஸ்து உறுதிபண்ணுகிறார். சாத்தான் சொன்ன பிரகாரமாக கல்லை அப்பமாக்கி தம்முடைய தெய்வத்துவத்தை உறுதிபண்ணுவது இயேசுகிறிஸ்துவின் சித்தமல்ல. இயேசு எப்போதுமே பிதாவின் சித்தத்தையே நிறைவேற்றுகிறவர்.

தாம் பிதாவை விசுவாசிக்கவில்லை என்பதுபோல சித்தரிக்கப்படும் எதையுமே இயேசுகிறிஸ்து செய்வதில்லை. தேவனுடைய மற்ற பிள்ளைகளைப்போலவே இயேசுகிறிஸ்துவும் பிதாவுக்கு கீழ்ப்படிந்து ஜீவிக்கிறார். அவருடைய தெய்வீக பராமரிப்பில் சார்ந்து ஜீவிக்கிறார். அவருடைய வாக்குத்தத்தங்களை விசுவாசித்து, அவை நிறைவேறுமென்று எதிர்பார்த்து ஜீவிக்கிறார்.

சாத்தானுடைய கேள்விக்கு இயேசுகிறிஸ்து வேதவாக்கியத்தில் 'எழுதியிருக்கிறதே' என்று பதில் கூறுகிறார். இயேசுகிறிஸ்து தமது தீர்க்கதரிசன ஊழியத்திற்கு அபிஷேகம்பண்ணப்பட்ட பின்பு அவர் கூறிய முதல் வார்த்தையே "வேதவாக்கியத்தில் எழுதியிருக்கிறதே" என்பதாகும். பழைய ஏற்பாட்டிலிருந்து இந்த வார்த்தையை இயேசுகிறிஸ்து மேற்கோளாக குறிப்பிடுகிறார்.

தேவனுடைய வார்த்தை நமக்குப் பட்டயமாக இருக்கிறது. தேவனுடைய வார்த்தையில் நாம் வைக்கும் விசுவாசமே நமக்கு கேடகமாக இருக்கிறது. ஆகையினால் நாம் வேதவாக்கியங்களில் பெலப்படவேண்டும். இயேசுகிறிஸ்து கூறிய "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல' என்னும் வாக்கியம் பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது (உபா 8:3). சாத்தான் காண்பித்த கல்லை அப்பமாக்க வேண்டிய அவசியம் இயேசுகிறிஸ்துவுக்கு இல்லை. ஏனெனில் *மனுஷன் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.* தேவன் நமக்கு கொடுத்திருக்கும் தெய்வீக பராமரிப்பின் பிரகாரமாக நாம் ஜீவிக்க வேண்டும்.

Tamil BIBLE SECRETS

28 Jan, 08:32


*சோதனையும், சாதனையும்!!!*

*"இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு..."* (லூக் 4:1)

இயேசுகிறிஸ்து, சோதனையை மேற்கொள்வதற்கு தம்மை ஆயத்தப்படுத்துகிறார். இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல ரூபங்கொண்டு இயேசுகிறிஸ்துவின்மீது வந்திறங்கியிருக்கிறார். *மிகப்பெரிய சோதனைகளை மேற்கொள்கிறவர்கள் எல்லோருமே பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள்.*

நாமும் தேவனோடு நல்ல ஐக்கியத்தோடு இருக்க வேண்டும். அப்போது தேவனுடைய விசேஷித்த சிலாக்கியங்கள் நமக்கும் கிடைக்கும். தேவன் நமக்கு கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்களையும் சிலாக்கியங்களையும் நாம் கண்டுபிடித்துக்கொள்ளலாம்.

*தேவனிடத்தில் அதிக சிலாக்கியங்களைப் பெற்றிருப்பவர்களை, சாத்தான் சோதிப்பதற்கு வாய்ப்புள்ளது. "ஐசுவரியம் மிகுந்த கப்பலைத்தான் கடல் கொள்ளைக்காரர்கள் திட்டமிட்டு தாக்குவார்கள்." அதுபோலவே, "தேவனுடைய கிருபையின் ஐசுவரியத்தினால் நிறைந்திருப்பவர்களைத்தான் சாத்தான் குறிவைத்து தாக்குவான்".*

இயேசுகிறிஸ்துவை சோதிப்பதற்கு தேவனும் அனுமதி கொடுக்கிறார். "இந்த சோதனையின் மூலமாக தேவனுடைய கிருபை வெளிப்படுத்தப்படும். அவருடைய நாமம் மகிமைப்படும்."

இயேசுகிறிஸ்து பரிசுத்த ஆவியானவராலே வனாந்தரத்திற்கு கொண்டு போகப்படுகிறார். அவர் வனாந்தரத்திலிருப்பது சோதனைக்காரனுக்கு மிகவும் நல்ல வாய்ப்பாக இருக்கிறது. *ஒருவன் தனிமையிலிருக்கும்போது பிசாசானவன் அவனை எளிதாக சோதிப்பான். ஆகையினால் நாம் தனியாக இருந்தாலும், தேவனோடு நெருங்கிய ஐக்கியத்திலிருக்க வேண்டும்.* "இயேசுகிறிஸ்து வனாந்தரத்தில் தனிமையாக இருக்கிறார். ஆனால் அவர் பிதாவோடு நெருங்கிய ஐக்கியத்திலும் இருக்கிறார்."

சாத்தான் சுயபெருமையுள்ளவன். அவனுடைய பலவீனம் என்னவென்று அவனுக்கே தெரியாது. இயேசுகிறிஸ்து நாற்பது நாளாக ஒன்றும் புசியாமல் உபவாசித்திருக்கிறார். இந்த நாற்பது நாட்களும் இயேசுகிறிஸ்து பிதாவிடத்தில் அதிகமாக ஜெபித்து அவரோடு நெருங்கிய ஐக்கியத்திலிருக்கிறார். மோசே சீனாய் மலையில் நாற்பது நாட்கள் இரவும் பகலும் உபவாசித்து ஜெபித்ததுபோல, இயேசுகிறிஸ்துவும் வனாந்தரத்தில் உபவாசித்து ஜெபிக்கிறார். இயேசுகிறிஸ்துவின் உபவாசமும் ஜெபமும் சாத்தானுடைய சோதனையை மேற்கொள்வதற்கு அவரைப் பெலப்படுத்திற்று.

இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவர். இயேசு கிறிஸ்துவைப் பொருத்தவரையில், ஆவியானவர் அவரை அளவிடமுடியாத அளவிற்கு அல்லது பூரண நிறைவாக அபிஷேகம் பண்ணினார். பழைய ஏற்பாட்டுக் காலங்களில் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தின் அளவு ஒரு வரையறைக்குட் பட்டிருந்தது. ஒருகுறிப்பிட்ட வரத்தினால், குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட ஆற்றலில் பரிசுத்த ஆவியானவர் தனி நபர்களைத் தெரிந்தெடுத்து, அவர்களை நிரப்பினார். பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின்பு பரிசுத்த ஆவியானவர் மனுஷரை நிறைத்தார். "தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் பரிசுத்த ஆவியானவர் மனுஷரை நிறைத்தார்". (எபே 3:19; ரோமர் 15:29) - (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

28 Jan, 02:25


*கிறிஸ்து இயேசுவின் பூமிக்குரிய வம்ச வரலாறு!*

அப்பொழுது *இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார்.* அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்; (லூக்கா 3:23)

இயேசுகிறிஸ்துவின் வம்ச வரலாற்றை லூக்கா மிகவும் விரிவாக எழுதுகிறார். மத்தேயு எழுதின சுவிசேஷத்தில், இயேசுவின் வம்சவரலாறு சுருக்கமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இயேசுவுக்கு இப்போது ஏறக்குறைய முப்பது வயதாயிற்று. (இஸ்ரவேலின் ஆசாரியருக்கு முப்பது வயதாகும்போது, அவர்கள் ஆசாரிய ஊழியம் செய்வதற்கு பூரண தகுதி பெறுகிறார்கள்.)

லூக்காவைப்போலவே மத்தேயுவும் இயேசுவின் வம்சவரலாற்றை எழுதியிருக்கிறார். மத்தேயு இயேசுவின் முன்னோர்களைப் பற்றி குறிப்பிடும்போது ஆபிரகாமிலிருந்து ஆரம்பிக்கிறார். ஆனால் லூக்காவோ, ஆதாமிலிருந்து இயேசுவின் வம்சவரலாற்றை விவரமாக எழுதுகிறார். (இயேசுகிறிஸ்துவை ஆபிரகாமின் குமாரனாக காண்பிப்பதே மத்தேயுவின் திட்டம். ஏனெனில் ஆபிரகாமில் பூமியிலுள்ள எல்லாக் குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்பது தேவனுடைய வாக்குத்தத்தம். தாவீதின் சிங்காசனத்திற்கு இயேசுகிறிஸ்து உரிமை பெற்றவராக இருக்கிறார். யோசேப்பின் தகப்பனாகிய யாக்கோபு வரையிலும் இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாற்றை மத்தேயு விவரிக்கிறார். யோசேப்பு தாவீதின் குடும்பத்தில் ஆண் வாரிசாக இருக்கிறவர்.)

இயேசுவின் வம்சவரலாற்றை விவரிக்கும்போது "அவரை ஸ்திரீயின் வித்தாக சித்தரிப்பதே" லூக்காவின் நோக்கம். ஸ்திரீயின் வித்தானவர் சர்ப்பத்தின் தலையை நசுக்குவார். ஆகையினால் இயேசுகிறிஸ்துவின் முன்னோராக ஆதாமையே லூக்கா குறிப்பிட்டுக் கூறுகிறார். (இயேசுவின் முன்னோர்களைப் பற்றி எழுதும்போது, ஏலியிலிருந்து ஆரம்பிக்கிறார். ஏலி யோசேப்பின் தகப்பனல்ல. இவர் மரியாளின் தகப்பன்.)

மத்தேயு இயேசுவின் வம்சவரலாற்றை எழுதும்போது சாலொமோன் ராஜா வழியாக அவருடைய சந்ததி வருவதாக குறிப்பிடுகிறார். இவருடைய இயற்கையான வம்சம் எகோனியாவோடு முடிவுபெறுகிறது. அதன்பின்பு இந்த வம்சத்தின் சட்டப்படியான உரிமைகள் சலாத்தியேலுக்கு மாற்றப்படுகிறது. இவர் நாத்தானின் குடும்பத்தைச் சேர்ந்தவர். நாத்தானும் சாலொமோனைப்போல தாவீதின் குமாரர்களில் ஒருவர். லூக்கா எழுதியிருக்கும் வம்சவரலாற்றில் யூதாதேசத்தின் ராஜாக்களுடைய பேர்கள் இடம்பெறவில்லை.

இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாற்றை மத்தேயுவும் லூக்காவும் வித்தியாசமாக எழுதியிருக்கிறபோதிலும், "இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாற்றிற்கும் நமது இரட்சிப்புக்கும் சம்பந்தம் எதுவுமில்லை". வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும் என்னும் நோக்கத்தில்தான் இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு சுவிசேஷப் புஸ்தகங்களில் எழுதப்பட்டிருக்கிறது. இதைத் தியானிக்கும்போது யூதருடைய பாரம்பரிய வம்சவரலாற்றை நாம் தெரிந்துகொள்ளலாம். *ஏராளமான யூதர்களுடைய வம்சவரலாறு காலப்போக்கில் காணாமல் போயிற்று. ஆனால் இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறோ தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது.*

இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாற்றை முடிக்கும்போது, அவர் ஆதாமின் குமாரனென்றும், ஆதாம் தேவனால் உண்டானவனென்றும் லூக்கா எழுதுகிறார். "இயேசுகிறிஸ்து ஆதாமின் குமாரனாகவும், தேவனுடைய குமாரனாகவும் இருக்கிறார்." தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தராக இருக்கும் இயேசுகிறிஸ்து, தேவனுடைய குமாரனாகவும் ஆதாமின் குமாரனாகவும் இருப்பது மிகவும் சிறப்பானதாகும். *ஆதாமின் சந்ததியாரை தம் மூலமாக தேவனிடத்தில் அழைத்து வருவதே இயேசுகிறிஸ்துவினுடைய மத்தியஸ்த ஊழியமாகும்.* இயேசுகிறிஸ்துவின் மூலமாக ஆதாமின் பிள்ளைகளாக இருக்கும் நாம் எல்லோரும், தேவனுடைய பிள்ளைகளாக ஆகும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.

இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். இயேசுவுக்கு முப்பது வயது ஆயிற்று. நியாயப்பிரமாணத்திற்குக் கீழேயுள்ள ஆசாரியர்கள், இந்த வயதில்தான் ஆசாரிய ஊழியத்தைச் செய்ய ஆரம்பிப்பார்கள். "ஆசாரியர்கள் கிறிஸ்துவின் அடையாளமாக இருக்கிறார்கள்." எண் 4:23; 1நாளா 23:3)

இயேசுகிறிஸ்து யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். இயேசு சட்டப்படியாக யோசேப்பின் குமாரன். ஆனால் உண்மையில் அவர் தேவனுடைய ஒரேபேறான குமாரன். மரியாளின் வயிற்றில் உற்பத்தியானவர். (மத் 1:18#25; லூக்கா 1:35) யோசேப்பு யாக்கோபின் குமாரன். இந்த உறவு அவர்களுடைய சரீரப்பிரகாரமான உறவுகளினால் வருகிறது. ( 1:16)

இயேசுகிறிஸ்து யோசேப்பின் குமாரன் என்று அழைக்கப்படுகிறார். வம்சவரலாற்றை எழுதும்போது பெண்களின் பெயரைக் குறிப்பிடுவதில்லை. இந்த வம்சவரலாற்றில், ஏலி மரியாளின் இடத்திற்கு வருகிறார். வம்சவரலாறு எழுதப்படுகின்ற நியமனத்தின்படி ஆண்களுடைய வம்சவரலாறுகளே எழுதப்படும். இந்த அதிகாரத்தில் யோசேப்பின் வம்சவரலாறு சொரொபாபேல் வரையிலும் எழுதப்படுகிறது. (லூக்கா 3:23#27) இவரது பெயர் பழைய ஏற்பாட்டில் காணப்படவில்லை. இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு ஒருசில தலைமுறைகளுக்கு முந்தினவராக இவர் இருக்கக்கூடும். (தொடரும்!)

Tamil BIBLE SECRETS

28 Jan, 02:25


_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

27 Jan, 01:09


*நேசகுமாரன்!*

*"பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேச குமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது..."* (லூக் 3:22).

இயேசுகிறிஸ்து ஜெபம்பண்ணும்போது வானம் அவருக்குத் திறக்கப்படுகிறது. மனுஷருடைய பாவம் பரலோகத்தின் வாசலை அடைத்துவிடுகிறது. ஆனால் இயேசுகிறிஸ்துவின் ஜெபமோ வானத்தின் வாசலை திறக்கிறது.

பரிசுத்த ஆவியானவர் இயேசுகிறிஸ்துவின்மீது ரூபங்கொண்டு புறாவைப்போல இறங்குகிறார். இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தை பரிசுத்த ஆவியானவர் அங்கீகரித்து பலப்படுத்துகிறார். கிறிஸ்து யார் என்று தெரியாமல் ஜனங்கள் குழப்பத்திலிருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு இயேசுகிறிஸ்துவின்மீது வந்திறங்கியதினால், அவரே மேசியா என்பது உறுதியாயிற்று. தேவன் தமது வார்த்தையை அற்புதத்தினாலும் அடையாளத்தினாலும் உறுதிபண்ணுகிறார்.

இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாயிற்று. இதன் மூலமாக கிறிஸ்துவானவர், பிதாவாகிய தேவனால் கனத்தையும் மகிமையையும் பெற்றுக்கொள்கிறார்.. (2பேது 1:17). "நீர் என்னுடைய நேசகுமாரன்" என்னும் வாக்கியத்தை தேவன் இயேசுகிறிஸ்துவிடம் கூறியதாக, லூக்காவும் மாற்குவும் எழுதியிருக்கிறார்கள். மத்தேயு இந்த சம்பவத்தைப்பற்றி எழுதும்போது "இவர் என்னுடைய நேசகுமாரன்" என்று தேவன் இயேசுவைப்பற்றிக் கூறியதாக எழுதியிருக்கிறார். (மத் 3:17).

மேசியாவைப்பற்றி, பழைய ஏற்பாட்டில் "நான் அவனுக்கு பிதாவாயிருப்பேன் அவன் எனக்கு குமாரனாயிருப்பான்" (2சாமு 7:14) என்று தீர்க்கதரிசனமாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது. *"இதோ நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்கு பிரியமானவரும் இவரே, என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்."* (ஏசா 42:1) என்று இயேசுகிறிஸ்துவைப்பற்றி, ஏசாயா தீர்க்கதரிசனமாக முன்னறிவித்திருக்கிறார். பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கும் தீர்க்கதரிசன வார்த்தைகளை உறுதிபண்ணும் விதமாக "நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன்" என்னும் ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று.

வானத்திலிருந்து உண்டான சத்தம், திரித்துவத்தைத் தெளிவாக விளக்கும் வாக்கியமாகும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய மூவருமே வெவ்வேறு ஆள்தத்துவப் பண்புடையவர்கள்.

இந்த வசனத்திலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய சத்தியங்கள்...

1. பிதா, வானத்திலிருந்து பேசுகிறார்.

2. குமாரன், பூமியிலிருந்து வானத்திலிருக்கும் பிதாவிடம் ஜெபிக்கிறார்.

3. பரிசுத்த ஆவியானவர் பரலோகத்திலுள்ள பிதாவிடமிருந்து இறங்கி வந்து, பூமியிலுள்ள குமாரனை அபிஷேகம் பண்ணுவதற்காகவும், வல்லமையினால் நிரப்புவதற்காகவும் வருகிறார்.

"நீர் என்னுடைய நேச குமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன்" என்னும் இந்த வசனம் மத் 3:17#இல் வேறு விதமாகக் கூறப்பட்டிருக்கிறது. பிதா இவ்விரண்டு வாக்கியங்களையும் கூறியிருக்கலாம். அல்லது பிதா கூறியதன் கருத்தை இவ்விரண்டு சுவிசேஷ ஆசிரியர்களும் தங்களுடைய இலக்கிய நடையில் எழுதியிருக்கலாம். "பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு, எழுதப்படும்போது" என்பது சில சமயங்களில் "கருத்துக்கள் மட்டும்" ஏவப்பட்டிருக்கும். வார்த்தைகள் ஏவப்பட்டிருக்காது. ஆனாலும், பயன்படுத்திய வார்த்தைகளில் / கருத்துக்களில், முரண்பாடு எதுவும் இருக்காது. பரிசுத்த ஆவியானவர் தங்களுக்கு ஏவியிருக்கிற கருத்துக்களை, வேதாகம ஆசிரியர்கள், தங்களுடைய இலக்கிய நடையிலேயே சுதந்திரமாக எழுதியிருக்கிறார்கள். (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

25 Jan, 02:04


*இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று...*

*"ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது..."* (லூக் 3:21)

இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்ற சம்பவத்தை எழுதுவதற்கு முன்பாகவே, யோவான்ஸ்நானன் காவலில் அடைக்கப்பட்ட சம்பவத்தை (3:20) லூக்கா எழுதுகிறார். யோவான்ஸ்நானனுடைய ஊழியத்தில் நடைபெற்ற சம்பவங்களை எழுதி முடித்துவிட்டு, அதன்பின்பு இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தை அறிமுகப்படுத்த வேண்டுமென்பது லூக்காவின் எண்ணமாக இருக்கலாம். (யோவான்ஸ்நானன் சிறையில் அடைக்கப்படுவதற்கு சுமார் ஒரு வருஷத்திற்கு முன்பாகவே இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கிறார். அதன்பின்புதான் யோவான்ஸ்நானன் காவலில் அடைத்து வைக்கப்படுகிறார்.)

யோவான்ஸ்நானனிடம் ஞானஸ்நானம் பெறுவதற்கு ஏராளமான ஜனங்கள் புறப்பட்டு வருகிறார்கள். மற்ற ஜனங்களைப்போலவே இயேசுகிறிஸ்துவும் ஞானஸ்நானம் பெறும்படிக்கு யோவான்ஸ்நானனிடம் வருகிறார். ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்ற பின்பு, இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெறுகிறார். (ஒருவேளை இயேசு எல்லோருக்கும் கடைசியாக ஞானஸ்நானம் பெற்றிருக்கலாம்.) சாதாரண ஜனங்களைப்போலவே இயேசுகிறிஸ்து தம்மை வெளிப்படுத்தியிருக்கிறார். எல்லோருக்கும் அவர் தம்மைக் கடைசியானவராக காண்பிக்கிறார்.

இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டபோது ஜெபம்பண்ணுகிறார். இந்த ஜெபத்தைப்பற்றி மத்தேயு குறிப்பிடவில்லை. மற்றவர்கள் ஞானஸ்நானம் பெறும்போது ஜெபம்பண்ணியதுபோலவே இயேசுகிறிஸ்துவும் ஜெபம்பண்ணுகிறார். பிதாவோடு ஜெபத்தில் தமக்குள்ள ஐக்கியத்தை இயேசுகிறிஸ்து காத்துக்கொள்கிறார். பிதாவின் விசேஷித்த கிருபையும் சிலாக்கியமும் தமக்கு கிடைக்கவேண்டுமென்றும், பரிசுத்த ஆவியானவர் தம்மீது இறங்கி வரவேண்டுமென்றும் இயேசுகிறிஸ்து ஜெபிக்கிறார். தமக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட காரியங்களை இயேசுகிறிஸ்து ஜெபத்தின் மூலமாக பெற்றுக்கொள்கிறார். இயேசுகிறிஸ்து பிதாவினிடத்தில் கேட்பது எதுவோ அது அவருக்கு கொடுக்கப்படும்.

இயேசுவும் ஞானஸ்நானம் பெற்றார். பாவங்களைக் கழுவுவதற்காகவோ அல்லது பாவங்களை மன்னிப்பதற்காகவோ யாரும் ஞானஸ்நானம் பெறுவதில்லை. ஏனெனில் ஒருபாவமும் செய்யாத இயேசு கிறிஸ்துவும் ஞானஸ்நானம் பெற்றார். (1பேதுரு 2:21#23) *கிறிஸ்துவின் மரணம், அடக்கம்பண்ணுதல், உயிர்த்தெழுதல் ஆகியவற்றிற்கு அடையாளமாகவே விசுவாசிகள் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்.* (1பேதுரு 3:21) *இயேசு கிறிஸ்துவோ, தமது மரணம், தாம் அடக்கம்பண்ணப்படுதல், தமது உயிர்த்தெழுதல் ஆகியவற்றிற்கு அடையாளமாகவே ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார்.* (யோவான் 1:31) (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

24 Jan, 02:20


*"வருங்கோபமும்; தப்பிக்கும் வழியும்!"*

*அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டுவந்த திரளான ஜனங்களை நோக்கி: விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?* (லூக் 3:7)

யோவான்ஸ்நானனிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்கு திரளான ஜனங்கள் புறப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு யோவான்ஸ்நானன் பொதுவான எச்சரிப்பின் வார்த்தைகளையும், ஆவிக்குரிய ஆலோசனைகளையும் கொடுக்கிறார். மத்தேயு எழுதின சுவிசேஷத்தில், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்கு வந்த பரிசேயருக்கும் சதுசேயருக்கும் உபதேசம் பண்ணியதாக எழுதப்பட்டிருக்கிறது. (மத் 3:7#10). ஆனால் இந்த வசனத்திலோ தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்கு வந்த திரளான ஜனங்களுக்கு யோவான்ஸ்நானன் பிரசங்கம்பண்ணுகிறார்.

தன்னிடத்தில் வருகிற யாரையும் யோவான்ஸ்நானன் புறக்கணித்து விடவில்லை. எல்லோருக்கும் பிரசங்கம் பண்ணுகிறார். திரளான ஜனங்கள் தன்னிடத்தில் வருவதற்காக பெருமைப்படவில்லை. ஆனால், அவர்களுக்கு பாவத்தைக்குறித்தும், தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் குறித்தும் எச்சரித்து, சத்தியத்தை பேசுகிறார். சதுசேயருக்கும் பரிசேயருக்கும் எச்சரிப்பின் சத்தத்தைச் சொன்னதுபோலவே திரளான ஜனங்களுக்கும் எச்சரிப்பின் சத்தத்தைக் கூறுகிறார். பரிசேயர்களின் பாவங்கள் வித்தியாசமாக இருக்கலாம். சாதாரண ஜனங்களுடைய பாவங்கள் வித்தியாசமாக இருக்கலாம். *தேவனுக்கு விரோதமாக செய்யப்படும் எல்லாக் காரியங்களும் பாவகாரியங்களே.*

தன்னிடத்தில் வந்த திரளான ஜனங்களை விரியன் பாம்புக்குட்டிகளே என்று யோவான்ஸ்நானன் அழைக்கிறான். விரியன் பாம்பின் சரீரத்தில் விஷம் நிறைந்திருக்கும். இந்த பாம்புகள் மற்றவர்களைக் கடிக்கும்போது அவர்களுக்கும் விஷம் ஏறிவிடும். இந்த ஜனங்கள் விரியன் பாம்புகளைப் போல இருக்கிறார்கள். தேவனுக்கும் எதிர்த்து நிற்கிறார்கள். மனுஷருக்கும் எதிர்த்து நிற்கிறார்கள்.

பாவத்தில் மூழ்கியிருக்கும் இந்த சந்ததியார், வருங்கோபத்திற்கு தப்பித்துக்கொள்ள வேண்டும். தப்பிக்கவில்லையென்றால் தேவனுடைய கோபத்தில் சிக்கி அழிந்துபோவார்கள். *நம்முடைய ஊழியத்திலும் நாம் தேவனுடைய கோபாக்கினையைக் குறித்து ஜனங்களிடம் எச்சரித்துக் கூறவேண்டும். அதேவேளையில் அந்த கோபாக்கினையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வழியையும் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.* "மனந்திரும்புவது மாத்திரமே தேவகோபாக்கினையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் ஒரே வழியாகும்." *நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறார்.* (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

23 Jan, 02:32


*யோர்தான் நதியின் கரைகளில்...*

*"அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்."* (லூக்கா 3:6)

ஆதிகாலத்து இஸ்ரவேல் புத்திரர்கள் கானான் தேசத்தை சுதந்தரித்தபோது, யோர்தான் நதிக்கு அருகான தேசத்தைத்தான் முதன்முதலாக சுதந்தரித்தார்கள். அதே இடத்தில்தான் இப்போது சுவிசேஷ ஊழியம் ஆரம்பமாயிற்று. "யோவான்ஸ்நானன் தன் வாழ்நாளெல்லாம் வனாந்தரத்தில் தனிமையாக வாழ்ந்திருக்கிறார். ஆனால் தேவனுடைய வார்த்தை உண்டானபோதோ, அவன் தன் வனாந்தர வாழ்க்கையைவிட்டு வெளியேறி, ஜனங்கள் குடியிருக்கும் தேசத்திற்கு வருகிறார்..."

நம்முடைய வாழ்க்கையிலும் நாம் வசதியாகவும், ஓய்வாகவும், திருப்தியாகவும் ஓரிடத்தில் வாசம்பண்ணிக்கொண்டிருக்கலாம். தேவன் தம்முடைய ஊழியத்தை செய்யுமாறு நம்மை அழைக்கும்போது, நம்முடைய வசதியான ஸ்தலங்களைவிட்டு கர்த்தர் காண்பிக்கும் ஸ்தலங்களுக்குச் சென்று ஊழியம் செய்ய ஆயத்தமாக இருக்கவேண்டும்.

யோவான்ஸ்நானன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும்போய் ஒரு புதிய ஞானஸ்நானத்தைக்குறித்து பிரசங்கம்பண்ணுகிறார். ஞானஸ்நானம் ஓர் அடையாளம். இது ஒரு சடங்கு. கர்த்தர் நியமித்திருக்கும் ஒழுங்குகளில் இதுவும் ஒன்று. யூதர்கள் தண்ணீரினால் தங்களை சுத்தம்பண்ணுவது வழக்கம். புறஜாதியார்கள் யூதமார்க்கத்தை ஏற்றுக்கொள்ளும்போது அவர்களை தண்ணீரினால் சுத்தப்படுத்தி யூதமார்க்கத்தில் சேர்த்துக்கொள்வார்கள். இதுதான் யூதர்களுடைய ஞானஸ்நான முறைமை. ஆனால் யோவான்ஸ்நானனோ இங்கு ஒரு புதிய ஞானஸ்நானத்தை அறிமுகம் செய்து வைக்கிறார். *இது மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானமாகும்.*

இந்த ஞானஸ்நானத்தை பெற்றுக்கொள்கிறவர்கள், முதலாவதாக தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்ப வேண்டும். தாங்கள் இதுவரையிலும் செய்த பாவத்திற்காக மனம் வருந்தி, இனிமேல் பாவம் செய்வதில்லையென்று தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும். தாங்கள் அறிக்கை செய்த வார்த்தைக்கு உண்மையுள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும். தாங்கள் செய்யும் தொழில்களை, நேர்மையாகவும் கண்ணியமாகவும் நடத்தவேண்டும். *மற்றவர்களுக்கு தங்களால் முடிந்தவரையிலும் நன்மைசெய்யவேண்டும்.*

யோவான்ஸ்நானனுடைய ஊழியம் மனுஷருடைய மனதையும், அவர்களுடைய வழிகளையும் மாற்றும் ஊழியமாக இருக்கிறது. அவர்களுடைய இருதயம் புதுப்பிக்கப்படவும், அவர்களுடைய ஜீவியம் புதுப்பிக்கப்படவும் யோவான்ஸ்நானன் பிரசங்கித்து ஊழியம் செய்கிறார்.

பாவிகள் மனந்திரும்பும்போது அவர்களுக்கு பாவமன்னிப்பின் நிச்சயம் உறுதிபண்ணப்படுகிறது. பாவமன்னிப்புக்கென்று யோவான்ஸ்நானன் ஞானஸ்நானம் கொடுக்கும்போது, ஞானஸ்நானம் பெறுபவர்களைத் தேவனுடைய கிருபை முத்திரையிடுகிறது. தாங்கள் இனிமேல் பாவத்திற்கு மரித்து நீதிக்கு பிழைத்திருப்பதாக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் அறிக்கை செய்கிறார்கள். *அவர்கள் கர்த்தராகிய இயேசுவைப் போல வாழ, பரிசுத்த ஆவியானவர் உடனிருந்து உதவிகள் செய்கிறார்...* (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

22 Jan, 00:42


*ஊழியம் செய்தால்...*

*"அப்பொழுது: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும், மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுயிருக்கிறபிரகாரம்..."* (லூக் 3:3#5)

*யோவான்ஸ்நானனுடைய ஊழியத்தில் வேதவாக்கியம் நிறைவேறுகிறது.* இவருடைய ஊழியத்தைப்பற்றி குறிப்பிடும்போது, ஏசாயா தீர்க்கதரிசியினால் முன்னறிவிக்கப்பட்ட சம்பவத்தையும் சுவிசேஷ ஆசிரியர்கள் சேர்த்தே எழுதுகிறார்கள். ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில், நாற்பதாவது அதிகாரத்தில், மூன்றாவது வசனத்தில் எழுதியிருக்கிற பிரகாரம் யோவான்ஸ்நானனுடைய ஊழியம் நடைபெறுகிறது. *"தேவனுக்கான ஒருவரது ஊழியம், வேதவாக்கியங்களின்படி இருக்கவேண்டும்."*

வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாகும் என்று ஏசாயா முன்னறிவித்திருக்கிறார். யோவான்ஸ்நானனே அந்த சத்தமாக இருக்கிறார். கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்களென்றும், அவருக்கு வழியை செவ்வைப்படுத்துங்களென்றும் யோவான்ஸ்நானன் அறிவிக்கிறான். "இந்த வாக்கியம் மத்தேயு, மாற்கு ஆகிய சுவிசேஷங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது." லூக்காவோ இந்த வாக்கியத்தோடு சேர்த்து, ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்திருக்கும் மேலும் இரண்டு வசனங்களை (ஏசா 40:4#6) மேற்கோளாக குறிப்பிடுகிறார். "பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும்" என்று யோவான்ஸ்நானன் பிரசங்கம் பண்ணுகிறார்.

தாழ்மையுள்ளவர்கள் தேவனுடைய கிருபையினால் நிரப்பப்படுவார்கள். இருதயத்தில் பெருமையுள்ளவர்கள் தாழ்த்தப்படுவார்கள். சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும். பாவிகள் தேவனிடத்தில் மனந்திரும்பி வருவார்கள். கோணலானவைகள் செவ்வையாகும். கரடானவைகள் சமமாகும். பாவத்தினால் மனுஷருடைய பாதை கோணலாயிற்று. பாவியான மனுஷனுடைய ஆவியும் ஆத்துமாவும் கோணலாயிற்று. பாவத்தினால் கோணாலானதை தேவன் தமது கிருபையினால் செவ்வைபண்ணுகிறார். கோணலானதை நேராக்குகிறார்.

பரலோகத்திற்குச் செல்வதற்கு பலவிதமான தடைகள் உள்ளன. பரலோகத்திற்குச் செல்லும் பாதையைக் கடப்பது மிகவும் கடினமாக உள்ளது. கரடான அந்தப் பாதை செவ்வைப்படுத்தப்படும். செவ்வைப்படுத்தப்பட்ட பின்பு அந்தப் பாதையில் நடப்பதற்கு எளிதாக இருக்கும். பரலோகத்திற்கு செல்லும் கடினங்களும் தடைகளும் அகற்றப்படும்.

*இதற்கு முன்பு இருந்த காலத்தைவிட இப்போது இரட்சிப்பின் இரகசியம் பூரணமாக தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரகசியத்தை இரட்சிப்பட்டவர்கள் இரட்சிக்கப்படாத ஜனங்களுக்கு அறிவிக்கவேண்டும். மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.* யூதர்கள் மாத்திரமல்ல, புறஜாதியாரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள். வாழ்க்கையில் எல்லா நிலைகளில் இருப்பவர்களும், சமுதாயத்தின் எல்லா அந்தஸ்துக்களில் இருப்பவர்களும் தேவனுடைய இரட்சிப்பை கண்டு, அதைப் பெற்றுக்கொண்டு, அதன் மூலமாக வரும் ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள். (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

21 Jan, 01:29


*"தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று..."*

*அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று...* (லூக் 3:2).

யூதஜனங்கள், ரோமப்பேரரசின் ஆளுகைக்குட்பட்டிருந்தாலும், அவர்கள் தங்களைத்தாங்களே ஆளுகை செய்வதற்கு, ஒரு ஆளுகை முறைமையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். மார்க்க காரியங்களை கவனிப்பதற்கு, பிரதான ஆசாரியர்களை இவர்கள் நியமித்துக்கொள்கிறார்கள். தேவனுடைய பிரமாணத்தின்படி, யூதமார்க்கத்தாருக்கு ஒரே ஒரு பிரதான ஆசாரியன் மாத்திரமே இருக்கமுடியும். ஆனால், இந்தக் காலத்தில் அன்னாவும் காய்பாவும், இரண்டு பிரதான ஆசாரியர்களாக இருக்கிறார்கள். "இரண்டு பேர் பிரதான ஆசாரியர்களாகயிருப்பது இஸ்ரவேலின் வரலாற்றில் ஒரு புதுமையான சம்பவம்". (ஒரு வேளை ஒருவர் மரித்துப்போனால் அவருடைய ஊழியத்தை மற்ற பிரதான ஆசாரியர் செய்ய வேண்டும் என்னும் நோக்கத்தில் யூதர்கள் தங்களுக்கு இரண்டு பிரதான ஆசாரியர்களை தெரிந்தெடுத்திருக்கலாம்.)

அவ்வேளையில், யோவான்ஸ்நானனுடைய ஊழியம் பரலோகத்திலிருந்து ஆரம்பமாயிற்று. *யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று*. பழைய ஏற்பாட்டுக்காலத்து தீர்க்கதரிசிகளைப்பற்றி குறிப்பிடும்போது, "அவர்களுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று" என்னும் வாக்கியம் வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது (எரே 1:2). யோவான்ஸ்நானனும் ஒரு தீர்க்கதரிசி. (இவர் தீர்க்கதரிசியைவிட மேலானவர்.)

யோவான்ஸ்நானன் சகரியாவின் குமாரன் என்று, இங்கு அழைக்கப்படுகிறார். சகரியாவுக்கு கர்த்தருடைய தூதன் சொன்னபிரகாரமாக, அவன் தன் மகனுக்கு, யோவான் என்று பெயரிட்டிருக்கிறான். யோவான்ஸ்நானனுக்கு தேவனுடைய வார்த்தை வனாந்தரத்தில் உண்டாயிற்று. *தம்முடைய ஊழியத்தை செய்வதற்கு தகுதியான நபர்களை, அவர்கள் எங்கேயிருந்தாலும் தேவன் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்.* கர்த்தருடைய வார்த்தையை ஒரு சிறைச்சாலையில் பூட்டி வைக்கமுடியாது.

சகரியா ஒரு ஆசாரியன். தேவாலயத்தில் ஆசாரிய ஊழியம் செய்யும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறான். யோவான் ஒரு ஆசாரியனுடைய மகனாக இருக்கிறார்.

இப்போது யோவானுக்கு முப்பது வயதாயிற்று. தேவாலயத்தினுடைய வழக்கத்தின் பிரகாரம், முப்பது வயதான யோவான் தேவாலயத்தில் ஆசாரிய ஊழியம் செய்வதற்கு தகுதி பெற்றவனாகயிருக்கிறான். ஆனால் *தேவனோ யோவானைக்குறித்து விசேஷித்த திட்டம் ஒன்றை வைத்திருக்கிறார்.* தேவாலயத்தில் ஆசாரிய ஊழியம் செய்வதைவிட, அதிக கனமுள்ள ஊழியம் செய்வதற்காக கர்த்தர் யோவானை அழைக்கிறார்.

அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயிருந்தார்கள். சுழற்சி முறையில் பிரதான ஆசாரியரின் பட்டம் ஆசாரியருக்குக் கிடைக்கும். காய்பா, அன்னாவின் மருமகன். அன்னாவின்கீழ், தேவாலயத்தைக் காய்பா ஆட்சி புரிந்தான். (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

20 Jan, 01:02


*யோவான் ஸ்நானன் காலத்தில்...*

*திபேரியுராயன் ராஜ்யபாரம்பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், லிசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும்,* (லூக்கா 3:1)

யோவான்ஸ்நானன் ஞானஸ்நானம் கொடுத்து ஊழியம் செய்வது ஆவிக்குரிய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கிறது. யோவான்ஸ்நானனைப்பற்றி, லூக்கா எழுதின சுவிசேஷத்தில் பல முக்கியமான வரலாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது. "யோவான்ஸ்நானனின் பிறப்பினிமித்தமாக அநேகர் சந்தோஷப்படுவார்கள். அவன் கர்த்தருக்கு முன்பாக பெரியவனாகயிருப்பான். எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் கர்த்தருக்கு முன்னே நடந்துபோவான்" (லூக் 1:15,17).

யோவான்ஸ்நானன் பிறந்தபின்பு அவரது வாழ்க்கை வரலாற்றில் ஒரு சிறிய பகுதி மாத்திரமே சுவிசேஷத்தில் கூறப்பட்டிருக்கிறது. யோவான்ஸ்நானன் வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்கு தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களில் இருக்கிறார்... (லூக்கா 1:80).

யோவான்ஸ்நானன் எந்தக் காலத்தில் ஊழியத்தை ஆரம்பித்தார் என்பதை லூக்கா, அன்றைய வரலாற்றை ஆதாரமாக வைத்து எழுதுகிறார். யோவான்ஸ்நானன் ஊழியம் செய்த காலத்தில், யூதர்கள் ரோமப்பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டிருக்கிறார்கள். "ரோமப்பேரரசின் வரலாற்றில் பன்னிரண்டு ராயர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள்." இவர்களில் திபேரியுராயன் என்பவன் மூன்றாவது ராயன். இவன் ராஜ்ஜியபாரம்பண்ணின பதினைந்தாவது வருஷத்திலே யோவான்ஸ்நானனுடைய ஊழியம் ஆரம்பமாயிற்று. திபேரியுராயன் ஒரு துன்மார்க்கன். கொடியவன்.

ரோமப்பேரரசில் யூதர்கள் கவனிக்கப்படாமலிருந்தார்கள். இவர்களுக்கு முறைப்படி அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. தங்களுடைய உரிமைக்காக யூதர்கள் ரோமப்பேரரசிற்கு விரோதமாக பல போராட்டங்களை மேற்கொண்டார்கள். இதன் விளைவாக யூதர்களுக்கென்று தனியாக ஒரு தேசம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இந்த யூததேசம் ரோமப்பேரரசின் நேரடி ஆளுகையின்கீழ் கொண்டு வரப்பட்டது. திபேரியுராயன் யூததேசத்திற்கும் ராயனாகயிருக்கிறான்.

கர்த்தருடைய கொடுத்த சுதந்தரமான கானான் தேசத்தை, யூதர்களே ஆளுகை செய்வதற்குப் பதிலாக, ரோமப்பேரரசார் ஆளுகை செய்கிறார்கள். யூதர்களின் முன்னோர் சிறையிருப்புக்குப் போனதுபோலவே, இப்போது ரோமப்பேரரசின் ஆளுகையில் தங்களுக்கு எந்தவிதமான உரிமையுமில்லாமல், அடிமைகளைப்போல இருக்கிறார்கள். அதாவது, "தங்களுடைய சொந்த தேசத்திலேயே யூதர்கள் அந்நியர்களாக இருக்கிறார்கள்." யூததேசத்திற்கு பிலாத்து தேசாதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறான்.

(மற்ற சுவிசேஷங்களில் பிலாத்துவைப் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது. இவனும் ஒரு துன்மார்க்கன். துன்மார்க்கமாக ஆட்சிபுரிகிறான். இவனுடைய தவறான ஆட்சியைக் குறித்து விசாரிப்பதற்காக, ரோமப்பேரரசின் ராயன் இவனை ரோமாபுரிக்கு வரவழைத்து விசாரித்தான்.)

ஏரோது ராஜாவின் காலத்தில், ரோமப்பேரரசு நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பகுதிக்கும் காற்பங்கு என்று பெயர். காற்பங்கு தேசத்திலுள்ள பகுதிகளை ஆளுகை செய்வதற்கு தேசாதிபதிகள் நியமிக்கப்பட்டார்கள். இந்த தேசாதிபதிகள் எல்லோருமே ராயனுடைய ஆளுகைக்குட்பட்டவர்கள்.

யோவான்ஸ்நானன் தன் ஊழியத்தை ஆரம்பித்த காலத்தில் பொந்தியுபிலாத்து யூதேயாவுக்கு தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும் இருக்கிறார்கள்.

"திபேரியுராயன்" கி.பி. 14 முதல் 37 வரையிலும் ராஜ்யபாரம் பண்ணினான். "பிலாத்து" யூதேயாவின் தேசாதிபதி. ரோமப்பேரரசினால் நியமிக்கப்பட்டவன். (மத் 27:2) கலிலேயரைக் கொலைசெய்தவன். (லூக்கா 13:1); இயேசுவை விசாரணை செய்து அவரைச் சிலுவையில் அறைவதற்கு ஒப்புக் கொடுத்தவன். இயேசுவின் சரீரத்தை யோசேப்பிடம் கொடுத்தவன். (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

18 Jan, 02:04


*"இயேசுவானவர் விருத்தியடைகிறார்..."*

*இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.* (லூக் 2:52).

இயேசுகிறிஸ்துவின் சரீரம் வளர்ச்சி பெறுகிறது. அவர் ஞானத்திலும் வளர்த்தியிலும் விருத்தியடைகிறார். இயேசுகிறிஸ்துவின் ஆத்துமா ஞானத்தினால் நிறைந்திருக்கிறது. அவருடைய சரீரப்பிரகாரமான அவயவங்கள் வளர்ச்சி பெறுகிறது. தேவனுடைய ரகசியங்களைப் புரிந்துகொள்வதற்கு ஏற்ற விதத்தில் அவருடைய ஞானம் விருத்தியடைகிறது. தெய்வீக ரகசியங்களை மற்றவர்களுக்கு உபதேசிக்கவும்; போதிக்கவும், அவருடைய ஞானம் விருத்தியடைகிறது. *நம்முடைய ஆத்துமா வளர்ச்சி பெறும்போது தேவனிடத்திலிருந்து நாம் பெற்றுக்கொண்ட வரங்களும் வளர்ச்சி பெறும்.*

இயேசுகிறிஸ்து தேவகிருபையிலும் மனுஷர் தயவிலும் அதிகமாய் விருத்தியடைகிறார். தேவனுடைய சாயல் அவரிடத்தில் பரிபூரணமாக தெரிகிறது. குழந்தையாக இருந்த இயேசு, சரீரத்தில் வளர்ந்து இப்போது வாலிபராக இருக்கிறார். அவரிடத்தில் *சரீரப்பிரகாரமான வளர்ச்சியும் ஆவிக்குரிய வளர்ச்சியும் காணப்படுகிறது.*

(இயேசு கிறிஸ்துவிடம் தெய்வீகத் தன்மை இருந்தது. அந்தத் தன்மையை இயேசு தமது மானிடத் தன்மைக்குள் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.) அவர் பூமியிலே தமது மாம்சத்தில் இருந்த நாட்களில் அவர் தேவனாக இருந்தாலும் முழுவதுமாக மனுஷனாகவும் இருந்தார். இயேசு தமது சரீரத்தில் ஒரு பாவமும் செய்யவில்லை. மனுக்குலத்தார் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும் ஜீவியத்தை வாழ்ந்து காட்டினார். இயேசு கிறிஸ்து வாக்குத்தத்தம் பண்ணிய பிரகாரம் அவருடைய ஊழியத்தை வல்லமையோடு செய்வார். இயேசு தாமாக ஒரு கிரியையும் செய்யவில்லை என்று பல இடங்களில் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். (யோவான் 8:28) பரிசுத்த ஆவியானவரின் வரங்கள் இயேசு கிறிஸ்துவின் மூலமாக கிரியை நடப்பிக்கின்றன. விசுவாசிகளும், பரிசுத்த ஆவியானவரின் நடத்துதல் மூலமாக, கர்த்தருக்காக வல்லமையோடு ஊழியம் செய்யலாம்.

*ஆண்டவராகிய இயேசுவைப் போல, நாம் சிந்தனைகளும், பேச்சும், கிரியைகளும் மாறவேண்டும்! அதுதான் பூரண வளர்ச்சி! அதுதான் நம்மைக் குறித்த தேவ சித்தம்! ஆமென்!*
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

17 Jan, 02:33


*"போதகர் நடுவில் இயேசு!"*

*மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை விணாவவும் கண்டார்கள். அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்...* (லூக் 2:46,47).

இயேசுகிறிஸ்துவை அவருடைய தாய் தகப்பன்மார் மூன்று நாட்களாக தேடுகிறார்கள். மூன்று நாளைக்குப் பின்பு அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். "அவர் தேவாலயத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கவில்லை. போதகர்கள் பேசுகிறதை மிகவும் கவனமாக கேட்கிறார். அவர்களை வினவுகிறார்." இயேசுகிறிஸ்து வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு ஞானத்தினால் நிறைந்திருக்கிறார். தேவனுடைய கிருபை அவர்மேல் இருக்கிறது. தம்முடைய ஞானத்தை இன்னும் அதிகரிக்கச் செய்ய அவர் ஆவலுள்ளவராக இருக்கிறார். அதே சமயத்தில் தம்மிடத்தில் ஏற்கெனவே உள்ள ஞானத்தை மற்றவர்களுக்கு அறிவிக்கிறார்.

நம்முடைய வாலிபர்களுக்கும் இயேசுகிறிஸ்துவின் ஜீவியம் ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் சத்திய வசனம் அறிவிக்கப்படும் இடங்களில் நாம் தங்கியிருக்க வேண்டும். *உலகப்பிரகாரமான துன்மார்க்கருடைய கூட்டத்தில் தங்கியிருப்பதற்குப் பதிலாக, பக்தியுள்ளவர்கள் மத்தியில் தங்கியிருக்க வேண்டும்.* "வேடிக்கை காண்பிப்பவர்களோடும், விளையாட்டுத்தனமுள்ளவர்களோடும் நேரம் செலவு செய்வதற்குப் பதிலாக, கர்த்தருடைய வசனம் போதிக்கப்படும் இடங்களில் அமர்ந்திருந்து, ஆவிக்குரிய சத்தியங்களை கேட்கவேண்டும்."

ஆலயத்திற்கு பெற்றோரோடும் வரும் சிறு பிள்ளைகள், தங்களைப்போன்ற மற்ற சிறுபிள்ளைகளோடே விளையாடுவதிலேயே விருப்பம் காண்பிக்கிறார்கள். ஆனால் இயேசுகிறிஸ்துவோ தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கிறார். அவர்கள் பேசுகிறதைக் கேட்கிறார். அவர்களை வினவுகிறார். *கேட்பதற்கு கவனமாக இருக்கிறவர்கள் மாத்திரமே சத்தியத்தைக் கற்றுக்கொள்ள முடியும்.*

இயேசுகிறிஸ்து போதகர் பேசுவதை கேட்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவர்களை வினவுகிறார். இயேசுகிறிஸ்து கற்றுக்கொள்ளும் மாணவரைப்போல தம்மைத் தாழ்த்தி, அவர்கள் பேசுவதைக் கேட்கிறார். அதே சமயத்தில் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தினால் இயேசுகிறிஸ்து போதகராகவும் இருக்கிறபடியினால், அவர் அவர்களை வினவுகிறார். இயேசுகிறிஸ்து அவர்களை கேள்வி கேட்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், தாமும் அவர்களோடு பேசுகிறார். அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் கூறுகிறார். இயேசுகிறிஸ்துவின் புத்தியையும், அவர் சொன்ன மாறுத்தரங்களையும் கேட்ட யாவரும் அதைக் குறித்து பிரமிக்கிறார்கள்.

இயேசுகிறிஸ்து ஞானத்தினால் நிறைந்திருக்கிறார். அவர் கேட்ட கேள்வியிலும், அவர் கூறிய மாறுத்தரத்திலும் அவருடைய ஞானம் வெளிப்படுகிறது. *இயேசுகிறிஸ்துவின் ஞானமுள்ள வார்த்தையைக் கேட்டுத்தான் அவர்கள் பிரமிக்கிறார்கள்.* இயேசுகிறிஸ்துவைப்போல பன்னிரண்டு வயதுள்ளவர்கள் யாரும், இவ்வளவு தெய்வீக ஞானத்தோடு இதுவரையிலும் பேசியதில்லை.*

தேவாலயத்தில் அமர்ந்திருக்கும் போதகர்கள் யூதருடைய பிரமாணங்களை கற்றுத் தேறியவர்கள். அவர்களுக்கு இயேசுகிறிஸ்து தமது தெய்வீக ஞானத்தை வெளிப்படுத்துகிறார். கற்றுத் தேர்ச்சிப் பெற்ற போதகர்களால்கூட இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களால் அவருடைய வார்த்தையைக்கேட்டு பிரமிக்க மாத்திரமே முடிகிறது.

இயேசுவின் பெற்றோர் மூன்றுநாளைக்குப் பின்பு, அவரைத் தேவாலயத்தில் கண்டார்கள். இதன்பின்பு பிரயாணக்கூட்டத்தாரோடு சேர்ந்து பயணம் செய்வது கடினம். என்றாலும் அவர்கள் இயேசுவைக் கண்டார்கள். தேவாலயத்தில் பல இடங்களில் போதகர்கள் தங்கள் சீஷர்களுக்கு நியாயப்பிரமாணத்தை விளக்கிக் கூறுவார்கள். "தேவாலய ஆராதனை முடிந்த பின்பு, யாராவது போதகரிடம் நியாயப்பிரமாணத்திலிருந்து ஏதாவது சந்தேகம் கேட்டால் அந்தச் சந்தேகத்தை அவர்கள் நிவர்த்தி செய்வார்கள்."

இயேசுகிறிஸ்து பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங் குறித்துப் பிரமித்தார்கள். இயேசுவிற்குப் பன்னிரெண்டு வயதாகிறது. இந்த வயதிலேயே அவருக்குத் தெய்வீக வெளிப்பாடு அதிகமாக இருந்தது. இதுவரையிலும் இந்த வயதிலுள்ள யாரிடமிருந்தும் இப்படிப்பட்ட தெய்வீக ஞானத்தை யாரும் கேள்விப் பட்டதில்லை. (ஏசா 50:4) இயேசு சரீரப் பிரகாரமாக வளர்ச்சியடைந்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவருடைய சிந்தையில் உபதேசம்பண்ணிக்கொண்டு வந்தார். இயேசு கிறிஸ்துவிற்கு மார்க்கப்போதகர்கள் உபதேசம் பண்ணிக்கொண்டு வந்த போதிலும், ஞானத்திலும், அறிவிலும் அவர் தமது போதகர்களைவிடச் சிறந்தவராக விளங்கினார். (சங் 119:97#104). (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

16 Jan, 03:31


*"பன்னிரண்டு வயதில் இயேசு!"*

*அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள். அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப்போய்...* (லூக் 2:41,42)

இயேசுகிறிஸ்து சிறு குழந்தையாக இருந்த காலம் முதல், இஸ்ரவேல் தேசத்திற்கு தம்மை வெளிப்படுத்தி காண்பித்த காலம் வரையிலும் உள்ள சம்பவங்கள், இந்த வசனப்பகுதியில் மாத்திரமே எழுதப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் இளமைப்பருவத்தை அறிந்து கொள்வதற்கு சுவிசேஷத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்த வசனங்களைத் தவிர, வேறு வசன ஆதாரங்கள் எதுவுமில்லை. ஆகையினால் இந்த வசனங்களை மிகவும் கவனமாக தியானித்து, வேதத்தின் ரகசியங்களை புரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

இயேசுகிறிஸ்து தம்முடைய தாய் தகப்பன்மாரோடு எருசேலமுக்குப் போகிறார். யூதருடைய நியாயப்பிரமாணத்தின்படி, வருஷந்தோறும் பஸ்கா பண்டிகைக்கு, அவர்கள் எருசலேமுக்கு போவது வழக்கம். பிரயாண தூரம் அதிகமாக இருந்தாலும், பிரயாணத்திற்கு செலவுபண்ண அவர்களிடம் போதுமான அளவு பொருளாதாரம் இல்லாத குடும்பமாக இருந்தாலும், அவர்கள், நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து, வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போகிறார்கள்.

சபை கூடிவருவது பரிசுத்தமானது. வாய்ப்பு உண்டாகும்போதெல்லாம் சபை கூடிவரவேண்டும். சபை கூடிவருவதில் நாம் பங்கு பெறாமல் அதைப் புறக்கணித்து விடக்கூடாது. இல்லையேல், அதனால் வரும் நன்மைகளை இழந்து போவோம்!

யூதருடைய பாரம்பரிய வழக்கத்தின் பிரகாரம், யூதமார்க்கத்தைச் சேர்ந்த பிள்ளைகள் பன்னிரண்டு வயதானவுடன் உபவாசம் பண்ண ஆரம்பிக்க வேண்டும். உபவாச நாட்கள் ஒழுங்கு செய்யப்படும்போதெல்லாம் இவர்களும் அதில் பங்குபெறவேண்டும்.

தங்களுடைய பிள்ளைகள் உலகப்பிரகாரமான தொழில்களிலும், உத்தியோகங்களிலும் விருத்தியடைந்து முன்னேறிச் சென்றாலும், தங்கள் பிள்ளைகள் ஆவிக்குரிய காரியங்களிலும் வளர்ச்சி பெற்று முன்னேறிச் செல்லவேண்டுமென்று யூதர்கள் மிகவும் கருத்தாயிருப்பார்கள்.

கர்த்தருக்காக பிரதிஷ்டை பண்ணப்பட்ட பிள்ளைகளை ஆவிக்குரிய ரீதியாக வளர்க்கும் பொறுப்புக்களை பெற்றோர்கள் மிகுந்த கவனத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். சுவிசேஷத்தின் பஸ்கா விருந்திற்கு அவர்களை அழைத்து வந்து, ஆவிக்குரிய போஜனத்தினால் போஷிக்க வேண்டும். கர்த்தருடைய பந்தியில் பங்குபெறுவதற்கு அவர்களை வழிநடத்த வேண்டும். ஆவிக்குரிய பிள்ளைகள் ஒவ்வொருவரும் தங்களுடைய சிந்தனையினாலும், செயலினாலும், பேச்சினாலும், கர்த்தருக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து ஊழியம் செய்ய வேண்டும்.

இயேசுகிறிஸ்துவுக்கு பன்னிரண்டு வயதாயிற்று. இந்த வயதில் யூதமார்க்கத்து ஆண்பிள்ளைகள் அனைவரும் நியாயப் பிரமாணத்தின் குமாரராக ஆவார்கள். யோசேப்பு மீட்பின் கிரயம் செலுத்தி, இந்தப் பிரமாணத்தை நிறைவேற்றுகிறார். (எண் 3:47; எண் 18:16) இதன்மூலமாக அவர் சட்டப்படியான தந்தையாகிறார். அவருடைய குமாரன் தனக்குக் கீழ்ப்படியவேண்டும் என்று கோரும் உரிமை அவருக்கு வருகிறது. (லூக்கா 2:48#51) (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

15 Jan, 01:13


*"இயேசுவின் குழந்தைப் பருவம்!"*

*பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது...* (லூக் 2:40).

நாசரேத்து ஊரிலே பிள்ளையாக இருக்கும் இயேசுகிறிஸ்து வளர்கிறார். ஆவியிலே பெலன்கொள்கிறார். ஞானத்தினால் நிறைகிறார். மற்ற பிள்ளைகளைப்போலவே இயேசுகிறிஸ்துவும் சிறு பிள்ளையாக இருந்து, சரீரத்தில் வளர்ச்சி பெறுகிறார். நமக்கு குழந்தைப்பருவம், பிள்ளைப்பருவம், வாலிபப்பருவம் என்று பல்வேறு பருவங்கள் இருப்பதுபோல, இயேசுகிறிஸ்துவும் ஒவ்வொரு பருவங்கள் வழியாக வளர்ந்து வருகிறார்.

இயேசுகிறிஸ்துவின் சரீரமும் வளர்ச்சி பெறுகிறது. அவர் கடவுள் என்பதால், திடீரென தன் சரீரத்தை வளர்த்திக் கொள்ளவில்லை. தன்னுடைய மனுஷ ஆத்துமாவை அவர் புரிந்து கொள்கிறார். தன் ஆவியிலே அவர் பெலன்கொள்கிறார். தெய்வீக ஞானத்தினால் இயேசுகிறிஸ்து நிரப்பப்படுகிறார். தேவனுடைய ஆவியினால் இயேசுகிறிஸ்துவின் மானிட ஆவி பெலனடைகிறது. உலகப்பிரகாரமான மற்ற பிள்ளைகளெல்லாம் உலகத்தின் மாய்மாலத்தினாலும், வேஷத்தினாலும் நிறைந்திருக்கும்போது, இயேசுகிறிஸ்து தமது இருதயத்தில் ஞானத்தினால் நிரப்பப்பட்டிருக்கிறார். மற்ற பிள்ளைகள் தங்களை துன்மார்க்கத்திற்கும் முரட்டாட்டத்திற்கும் ஒப்புக்கொடுத்து ஜீவிக்கும்போது, இயேசுகிறிஸ்துவோ அவற்றுக்கெல்லாம் விலகி பரிசுத்தமாக ஜீவிக்கிறார். பாவமாகிய களை, இயேசுகிறிஸ்துவோடு வளரவில்லை. தம்மீது தேவனுடைய கிருபை நிறைந்திருப்பதை வெளிப்படுத்துகிறார். தேவனுடைய ஒரே பேறான இயேசுகிறிஸ்து அவருடைய அன்புக்கும் ஆதரவிற்கும் பாத்திரமானவர். தேவனுடைய கிருபையிலும் சிலாக்கியத்திலும் இயேசுகிறிஸ்து வளர்ச்சி பெறுகிறார். *ஆ... ஒரு மனிதனுடைய வளர்ச்சி இயேசுவைப்போல இருக்க வேண்டும்...*

இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சத்தியங்கள் இங்கே கூறப்பட்டிருக்கிறது. அவையாவன:

1. சரீரத்தில் வளர்ந்தார் (லூக்கா 2:40)

2. ஆவியிலே பெலன்கொண்டார் (லூக்கா 2:40)

3. ஞானத்தினால் நிறைந்திருந்தார் (லூக்கா 2:40)

4. தேவனுடைய கிருபையில் ஜீவித்தார் (லூக்கா 2:40)

5. உபதேசம் பண்ணும் வரம் அவரிடம் இருந்தது. (லூக்கா 2:47)

6. தமது ஊழியத்தைத் தெரிந்து வைத்திருந்தார். (லூக்கா 2:49)

7. எல்லோருக்கும் முன்மாதிரியாக இருந்தார். (லூக்கா 2:51)

8. ஞானத்தில் விருத்தியடைந்தார். (லூக்கா 2:52)

9. சரீரத்தில் வளர்ச்சி பெற்றார் (லூக்கா 2:52)

10. மனுஷரிடத்திலும், தேவனிடத்திலும் கிருபையில் வளர்ந்தார். (லூக்கா 2:52; சங்119:97#104; ஏசா 50:4)
(தொடரும்!!!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

14 Jan, 00:04


*"ஆராதித்த அன்னாள்!!!"*

*ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானது முதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயது சென்றவளுமாயிருந்தாள். ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள்...* (லூக் 2:36,37).

தேவாலயத்தில் அன்னாள் என்னும் பெயரில் ஒரு தீர்க்கதரிசினியிருக்கிறாள். மற்ற ஸ்திரீகளைவிட வேதவாக்கியங்களில் அன்னாளுக்கு அதிக ஞானம் உள்ளது. தமக்கு சாட்சியாக கர்த்தர், 84 வயதான அன்னாளையும் எழுப்பியிருக்கிறார். இவள் பானுவேலின் குமாரத்தி. அன்னாள் என்னும் பெயருக்கு கிருபை நிறைந்தவள் என்று பொருள். இவள் ஆசேர் கோத்திரத்தைச் சேர்ந்தவள். ஆசேர் கோத்திரத்தார் கலிலேயாவில் வாசம்பண்ணுகிறார்கள்.

*ஒருவர், எந்த வயதிலும் கர்த்தருக்கு சாட்சியாக வாழ முடியும்!* அன்னாள் அதிக வயது சென்றவளாகயிருக்கிறாள். விவாகமானது முதல் ஏழு வருஷம் மாத்திரமே புருஷனோடு வாழ்ந்தவள். ஆனால் இப்போதோ ஏறக்குறைய எண்பத்திநாலு வயதுள்ள விதவையாக இருக்கிறாள். தன் கணவன் மரித்தபின்பு, இவள் மறுபடியும் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அன்னாளின் நற்குணத்தை வெளிப்படுத்துவதற்காக, அவளுடைய குடும்ப வாழ்க்கையைப்பற்றிய செய்தி இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அன்னாள் தேவாலயத்திலேயே தங்கியிருக்கிறாள். தேவாலயத்தைவிட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருக்கிறாள். தேவாலயத்தில் நடைபெறும் எல்லா பரிசுத்த ஆராதனைகளிலும் இவள் பங்குபெறுகிறாள். தேவாலயத்தில் என்னென்ன பணிவிடைகளெல்லாம் செய்யப்படவேண்டுமோ, அதில் அன்னாளும் பங்குபெறுவதற்கு எப்போதுமே ஆயத்தமாக இருக்கிறாள். *"உலகப்பிரகாரமான ஜனங்கள் புசித்தும், குடித்தும், தூங்கியும் தங்களுடைய நேரங்களை செலவு செய்யும்போது, அன்னாளோ இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருக்கிறாள்."*

தன்னுடைய ஆராதனையின் மூலமாக அன்னாள் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறாள். ஜெபத்திலும் உபவாசத்திலும் தொடர்ந்து தரித்திருக்கிறாள். நம்முடைய வாழ்க்கையில் நமக்கு பலவேலைகள் இருக்கலாம். *"எல்லா வேலைகளுக்கு மத்தியிலும் நாம் தொடர்ந்து உபவாசம் செய்து, ஜெபம்பண்ணி வரவேண்டும். விசுவாசிகள் ஜெபத்தில் தரித்திருப்பது மிகவும் நல்லது."* அதிலும் விசேஷமாக வயதுசென்ற விசுவாசிகள் ஜெபத்திலும் உபவாசத்திலும் அதிக நேரம் செலவு பண்ணவேண்டும். நன்மை செய்வதில் சோர்ந்து போகக்கூடாது. "சோர்ந்து போகாமல் நன்மை செய்வதில் சந்தோஷப்பட வேண்டும்." அன்னாள் தேவாலயத்தில் பல வருஷங்களாக தங்கியிருந்து தேவனுக்கு ஆராதனை செய்து வருகிறாள். (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

13 Jan, 14:54


*"விழவும்! எழவும்!"*

*பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்...* (லூக் 2:34).

சிமியோன் யோசேப்பையும் மரியாளையும் ஆசீர்வதிக்கிறார். அவர்கள் சந்தோஷப்பட்டு களிகூருவதற்கான காரணத்தையும் அறிவிக்கிறார். கர்த்தர் இவர்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்றும், மற்றவர்களும் இவர்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்றும் ஜெபிக்கிறார். இஸ்ரவேலில் அநேகர் எழுந்திருக்கிறதற்கு இயேசுகிறிஸ்து நியமிக்கப்பட்டிருக்கிறார். இஸ்ரவேல் ஜனங்களில் ஏராளமானோர் பாவத்தில் மரித்து அடக்கம்பண்ணப்பட்டிருக்கிறார்கள். அவர்களெல்லோரும் மனந்திரும்பி பாவமன்னிப்பை பெற்றுக்கொண்டு இரட்சிக்கப்படவேண்டும். அப்போது அவர்கள் தங்கள் ஆவிக்குரிய மரணத்திலிருந்து எழுந்திருப்பார்கள்.

இஸ்ரவேல் ஜனங்களில் ஏராளமானோர் தங்கள் வருத்தத்திலும், கவலையிலும் மூழ்கியிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து இவர்கள் வருத்தத்தை நீக்கி சமாதானத்தையும் ஆறுதலையும் கொடுப்பார். இவர்களெல்லோரையும் இயேசுகிறிஸ்து எழுப்புவார். எழுப்பப்படும் இதே ஜனங்களே விழுவதற்கும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் விழுந்தாலும் மறுபடியும் எழும்புவார்கள். கர்த்தரை விசுவாசிக்கிறவர்கள் தங்கள் பாவங்களில் விழுந்தாலும், கர்த்தர் தமது கிருபையினாலும் வல்லமையினாலும் அவர்களை மறுபடியுமாக அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சித்து தூக்கிவிடுவார்.

சிமியோனின் ஆசீர்வாதமான வார்த்தைகள் யோசேப்பிற்கும் மரியாளுக்கும் ஒரு எச்சரிப்பின் வார்த்தையாகவும் அறிவிக்கப்படுகிறது. ஆகையினால் இவர்கள் சந்தோஷப்படும்போது மிகுந்த நடுக்கத்தோடே சந்தோஷப்பட வேண்டும். கர்த்தர் இவர்களை ஆசீர்வதித்திருக்கிறார். அதேவேளையில் இவர்களுடைய மாம்சத்தில் ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவ விசுவாசிகள் தங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்தில், ஸ்திரப்பட்டு நிலைத்திருப்பதற்கு இந்த முள் அவசியமாக இருக்கிறது.

இயேசுகிறிஸ்து இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பார். அதே வேளையில் இஸ்ரவேல் ஜனங்களில் சிலர் இயேசுகிறிஸ்துவினால் இடறலடைவார்கள். இயேசுவுக்கு விரோதமாக முறுமுறுப்பார்கள். இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கேட்டு சிலர் இரட்சிக்கப்படுவார்கள். வேறு சிலரோ அதே சுவிசேஷத்தினால் அவருக்கு விரோதமாக எழும்புவார்கள். இயேசுகிறிஸ்துவும் அவருடைய சுவிசேஷமும் ஏராளனமான ஜனங்களுடைய வாழ்வில் ஆசீர்வாதத்தைக் கொடுக்கிறது. (நித்திய ஜீவனைக்கொடுக்கிறது. அதே வேளையில் இதே சுவிசேஷத்தினால் ஒரு சிலர் நித்திய மரணத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்து விடுகிறார்கள்.)

இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும், எழுந்திருக்கிறதற்கும் இயேசுகிறிஸ்து நியமிக்கப்பட்டிருக்கிறார். அதுபோலவே இஸ்ரவேலில் அநேகர் விரோதமாக பேசப்படும் அடையாளமாவதற்கும் இயேசுகிறிஸ்து நியமிக்கப்பட்டிருக்கிறார். இயேசுகிறிஸ்துவை தங்கள் சந்தோஷத்தின் அடையாளமாக சிலர் அங்கீகரிக்கிறார்கள். ஆனால் வேறு சிலரோ கிறிஸ்துவுக்கு விரோதமாக பேசுகிறார்கள். இவர் அடையாளமாக இருப்பதினால் எல்லாக் கண்களும் இவரை நோக்கிப் பார்க்கிறது.

இயேசுகிறிஸ்து அடையாளமாக இருப்பதினால் எல்லா நாவுகளும் அவரைப்பற்றி பேசுகிறது. ஒரு சில நாவுகள் அவர் இரட்சகர் என்பதை அறிந்துகொண்டு, அவரைப் போற்றிப் புகழுகிறது. ஆனால் வேறு சில நாவுகளோ அவருக்கு விரோமாக பேசுகிறது. இயேசுகிறிஸ்துவின் மூலமாக அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படும். இயேசுவுக்கு முன்பாக யாரும் தங்களுடைய இருதயத்தை ரகசியமாக ஒளித்து வைக்கமுடியாது. இந்த உலகத்தில் அவருக்குத் தெரியாத ரகசியமோ, மறைபொருளோ எதுவும் இருக்க முடியாது.

நாம் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதன் மூலமாக நம்முடைய இருதயத்தின் ரகசியமான சிந்தனைகளெல்லாம் வெளிப்படுத்தப்படும். இயேசுகிறிஸ்து தமது இரத்தத்தினால் நம்மை சுத்திகரிப்பதினால் நம்முடைய இருதயத்தின் சிந்தனைகளும் சுத்தமாக இருக்கும். இரட்சிக்கப்படாதவர்களின் இருதயம் பாவத்தினாலும் பாவசிந்தனையினாலும் நிறைந்திருக்கும்.

மனுஷர்கள் தங்கள் இருதயத்தின் சிந்தனையினால் நியாயம்தீர்க்கப்படுவார்கள். அதிலும் விசேஷமாக இயேசுகிறிஸ்துவைக் குறித்து தங்களுடைய சிந்தனை எப்படிப்பட்டது என்பதின் பிரகாரம் அவர்களுடைய நியாயத்தீர்ப்பு அமைந்திருக்கும். தேவனுடைய வார்த்தை இருதயத்தின் சிந்தனைகளை வெளிப்படுத்துகிறது.

இயேசு கிறிஸ்துவை இஸ்ரவேலர்கள் மறுதலிக்கும்போது அவர்களுக்கு அவர் தடைக்கல்லாக இருந்து அவர்கள் விழுவதற்கு காரணமாக இருப்பார். அவர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது இஸ்ரவேலுக்கு இரட்சிப்பாக இருந்து, அவர்கள் எழுந்திருப்பதற்கு உதவி புரிவார். (தொடரும்!)

Tamil BIBLE SECRETS

13 Jan, 14:54


_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

11 Jan, 01:23


*"காத்திருந்த சிமியோன்..."*

*அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார். கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது...* (லூக் 2:25,26).

இயேசுவுக்காக மீட்பின் கிரயமாக ஐந்து சேக்கலை மரியாளால் செலுத்த முடியவில்லை. ஆகையினால் இரண்டு புறாக்குஞ்சுகளை தேவனுடைய சமுகத்தில் பலியாக செலுத்துகிறார். இயேசுகிறிஸ்து ஏழ்மையின் ரூபமாக இருந்தாலும், சிறப்பான பலிகளை செலுத்துவதற்கு அவருடைய தாய் தகப்பன்மாரிடம் போதுமான பணவசதியில்லாத போதிலும், *தேவன் தமது அநாதி தீர்மானத்தின் பிரகாரமாக அவரை வாழ்த்துவதற்கும், ஸ்தோத்திரப்பலிகளை ஏறெடுப்பதற்கும் தேவாலயத்தில் சிமியோன், அன்னாள் ஆகிய இரண்டு பேரை நியமித்திருக்கிறார்.*

சிமியோன் எருசலேமில் வாசம்பண்ணுகிறவர். தேவனிடத்தில் மிகுந்த பக்தியுள்ளவர். நீதியும் தேவபக்தியும் மிகுந்தவர். யூதமார்க்கத்தின் பிரமாணங்களை கற்றுத் தேறியவர். அன்றைய காலத்தில், எருசலேமில் வாழ்ந்த சிறப்பான வேதபண்டிதர்களில் இவனும் ஒருவர். இவரிடத்தில் தீர்க்கதரிசனத்தின் ஆவி இருப்பதாக யூதர்கள் விசுவாசிக்கிறார்கள். சிமியோனைப்பற்றி சொல்லும்போது அவர் வயது முதிர்ந்தவர் என்றும், இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருக்கிறவர் என்றும் கூறுகிறார்கள்.

கர்த்தருடைய கிறிஸ்துவை சிமியோன் காணும் முன்னே மரணமடையமாட்டானென்று பரிசுத்த ஆவியினாலே அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்துவை அவருடைய பெற்றோர் தேவாலத்திற்கு கொண்டு வந்தபோது சிமியோனின் வயது என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. ஆயினும் சிமியோன், இயேசுகிறிஸ்துவை தன் கைகளில் ஏந்திக்கொண்டு "தேவனை ஸ்தோத்திரித்து, ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்" என்று கூறுகிறார்.

கமாலியேல் என்னும் பரிசேயன் சிமியோனின் குமாரன் என்று வேதபண்டிதர்கள் கூறுகிறார்கள். பரிசேயர்கள் கிறிஸ்த மார்க்கத்திற்கு விரோதமாக கிரியை செய்தார்கள். இப்படிபட்ட பரிசேயக்கூட்டத்தை சேர்ந்திருந்த சிமியோன் தேவபக்தி மிகுந்த, நீதியுள்ள, இயேசுகிறிஸ்துவின்மீது விசுவாசமுள்ள மனிதராக இருக்கிறார். பரிசேய மார்க்கத்திலிருந்து மனம்மாறி கிறிஸ்துவின் மார்க்கத்தை பின்பற்றுகிறார். (ஆனால் இவரது குமாரனாகிய கமாலியேலோ, பரிசேயருடைய மார்க்கத்தில் மிகவும் தீவிரமாக இருக்கிறான். இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தை கமாலியேல் அங்கீகரிக்கவில்லை.) அப்போஸ்தலர் பவுல் மனம்மாறி இரட்சிக்கப்படுவதற்கு முன்பாக, கிறிஸ்தவர்களை துன்புறுத்தும் பரிசேயனாக இருந்தார். இவர் கமாலியேலின் மாணவர். கமாலியேலின் உபதேசத்தின்படி பிற்காலத்தில் பவுல் என்று அழைக்கப்பட்ட சவுல் கிறிஸ்தவர்களை துன்புறுத்தினான்.

சிமியோன் நீதியும் தேவபக்தியுமுள்ளவனாக இருக்கிறார். தேவனுக்கு முன்பாக பக்தியாகவும் மனுஷருக்கு முன்பாக நீதியாகவும் ஜீவிக்கிறார்.

நம்முடைய ஜீவியத்தில் நீதியும் தேவபக்தியும் இணைந்து காணப்படவேண்டும். இவற்றில் ஒன்று இல்லையென்றால்கூட நம்முடைய ஆவிக்குரிய ஜீவியம் குறைவுள்ளதாகவே இருக்கும். தேவபக்தியும் நீதியும் நம்முடைய ஜீவியத்தில் இணைந்து கிரியை செய்தால்தான் நமது ஆவிக்குரிய ஜீவியம் வளம்பெறும்.

சிமியோன் இஸ்ரவேலின் ஆறுதல் அதாவது மேசியாவின் வருகைக்காக காத்திருக்கிறார். *இயேசுகிறிஸ்து தம்முடைய இஸ்ரவேல் ஜனங்களுடைய ஆறுதலின் ஆதாரமாக இருக்கிறார்.* இயேசுகிறிஸ்துவின் அஸ்திபாரத்தின் மீதுதான் இஸ்ரவேல் புத்திரருக்கு சமாதானமும் ஆறுதலும் கட்டளையிடப்பட்டிருக்கிறது. இயேசு இல்லையென்றால் இஸ்ரவேலருக்கு ஆறுதலுமில்லை. சமாதானமுமில்லை.

மேசியாவின் வருகை தாமதமானாலும், பக்தியுள்ள இஸ்ரவேலர்கள் அவருடைய வருகைக்காக காத்திருக்கிறார்கள். மேசியாவின் வருகையை விரும்புகிறார்கள். பொறுமையோடும், நம்பிக்கையோடும் மேசியாவின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் சிமியோனும் ஒருவர். இஸ்ரவேலின் ஆறுதல் ஆறுதல் வருவதற்காக காத்திருப்பது மிகவும் நல்லது. எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இஸ்ரவேலின் ஆறுதலுக்காக காத்திருக்கலாம்.

பரிசுத்த ஆவியானவர் சிமியோன்மீது இருக்கிறார். அவர் பரிசுத்தத்தின் ஆவியாகவும் தீர்க்கதரிசனத்தின் ஆவியாகவும் சிமியோன்மீது அமர்ந்திருக்கிறார். சிமியோன் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறார்.

சிமியோன், மேசியாவைத் தன்னுடைய கண்கள் காணும் என்று எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட விசுவாசமுள்ளவர்கள்தான் தங்கள் மரணத்தை கூட பயப்படாமல் தைரியமாக சந்திப்பதற்கு ஆயத்தமாக இருப்பார்கள்.

Tamil BIBLE SECRETS

11 Jan, 01:23


*கிறிஸ்துவின் தரிசனம் ஒன்றே தங்களுக்குப் போதுமென்று வாஞ்சையோடிருப்பார்கள்.* சிமியோனுடைய இருதயத்தில் கர்த்தருடைய வார்த்தையும், அவருடைய முகத்தைத் தரிசிப்போமென்னும் விசுவாசமும் நிறைந்திருக்கிறது. (தொடரும்...)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

10 Jan, 01:52


*"நல்ல சேதி!"*

*தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.* (லூக்கா 2:10-12)

கர்த்தருடைய தூதன் மேய்ப்பர்கள் பயப்படுவதைப்பார்த்து, அவர்களை நோக்கி 'பயப்படாதிருங்கள்" என்று கூறுகிறான். அவர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை அறிவிக்கிறான். மேய்ப்பர்களுக்கு மாத்திரமல்ல, எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை கர்த்தருடைய தூதன் அவர்களுக்கு அறிவிக்கிறான். 'இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்" என்பதே அந்த நற்செய்தி.

மேசியா தாவீதின் ஊரிலே பிறப்பார் என்று பழைய ஏற்பாட்டில் முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, இரட்சகர் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். மேய்ப்பர்கள் உலகப்பிரகாரமாக சாதாரணமானவர்களாக இருந்தாலும், மேசியாவின் பிறப்பைப்பற்றிய நற்செய்தி இவர்களுக்கே முதன்முதலில் அறிவிக்கப்படுகிறது.

''நமக்கு" ஒரு பாலகன் பிறந்தார், "நமக்கு" ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் என்று, ஏசாயா தீர்க்கதரிசனமாக முன்னறிவித்திருக்கிறார் (ஏசா 9:6). ஆகையினால் இயேசுகிறிஸ்துவின் பிறப்பு எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கும் நற்செய்தியாகும். மேசியாவின் வருகைக்காக இஸ்ரவேல் ஜனங்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்த சம்பவம் இப்போது நடைபெற்றிருக்கிறது.

இயேசுகிறிஸ்துவின் பிறப்பைக் குறித்த நற்செய்தியை மேய்ப்பர்கள் விசுவாசிக்க வேண்டும். அவர்களுடைய விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணுவதற்காக கர்த்தருடைய தூதன் அவர்களுக்கு ஒரு அடையாளத்தையும் கொடுக்கிறான். ""பிள்ளையை துணிகளில் சுற்றி முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்" இதுவே அவர்களுக்கு அடையாளமாக கொடுக்கப்படுகிறது.

இயேசு கிறிஸ்து உன்னதமானவர். உயர்ந்தவர். ஆனால், இந்த பூமியில், அவர் பிறந்தபோது, அவருடைய ஆரம்பம் மிகவும் தாழ்மையாக இருக்கிறது. குழந்தை பிறந்தவுடன், மெல்லிய துணிகளில் குழந்தையைச் சுற்றுவார்கள். கை, கால் எதுவும் வெளியே தெரியாதபடி குழந்தையை மொத்தமாகச் சுற்றிவிடுவார்கள். தலையும் சுற்றப்பட்டிருக்கும். கண்கள் மட்டுமே வெளியே தெரியும். சீரான சரீர வளர்ச்சியை உறுதிப்படுத்த, கிழக்கு நாடுகளில் இப்படி ஒரு பழக்கம் இருந்தது...

பொதுவாக பிறந்த குழந்தை எதுவும் முன்னணையில் கிடத்தப்பட்டிருக்காது. சாதாரண துணிகளினால் பிள்ளை சுற்றப்பட்டிருக்காது. ஆனால், கழுதையின் மேல், பயண நேரத்தில் பயன்படுத்தும் சாதாரண துணிகளே குழந்தை இயேசுவுக்கு பயன்பட்டது. இப்படி, இயேசுகிறிஸ்து சாதாரணமாக பிறந்திருப்பதே மேய்ப்பர்களுக்கு அடையாளமாயிற்று. (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

09 Jan, 00:23


*"மேய்ப்பருக்கு மீட்பரின் செய்தி!"*

*அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்...* (லூக் 2:8).

இயேசுகிறிஸ்துவின் பிறப்பின்போது பல நிந்தையும், அவமானமும் உண்டாயிற்று. சத்திரத்தில் தங்குவதற்கு அவருக்கு இடமில்லை. சாதாரண துணியினால் இயேசுகிறிஸ்து சுற்றப்பட்டிருக்கிறார். இவையெல்லாம் அவருடைய ஏழ்மையின் நிமித்தமாக அவருக்கு உண்டானபோதிலும், அவருடைய மகிமை அவர்மீது எப்போதுமே தங்கியிருக்கிறது. இயேசு துணிகளில் சுற்றப்பட்டு, முன்னணையில் கிடத்தப்பட்டிருக்கிறபடியினால், இவர் தேவனுடைய குமாரனாக இருக்கமுடியாது என்று ஒரு சிலர் கூறலாம். இயேசுகிறிஸ்துவின் தாழ்மையையும், ஏழ்மையையும் இந்த வசனப்பகுதியில் விவரிக்கப்பட்டிருக்கும்போது, அவருடைய மகிமையும் இங்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து பிறந்தபோது பரமசேனையின் திரள் அவரை வாழ்த்துகிறது. இவர்களைக் கண்டோரும், அந்த வாழ்த்துப் பாடல்களை தங்கள் காதுகளால் கேட்டோரும், மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரனென்று அங்கீகரிக்கிறார்கள்.

மத்தேயு எழுதின சுவிசேஷத்தில் சாஸ்திரிகளைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. இவர்கள் புறஜாதி மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள். வானத்தில் தோன்றிய நட்சத்திரத்தைப் பார்த்து இவர்கள் ஏரோதுவின் அரண்மனைக்கு வந்தார்கள். லூக்கா எழுதின சுவிசேஷத்தில் வயல்வெளியில் மந்தையைக் காத்துக்கொண்டிருக்கும் மேய்ப்பர்களுக்கு இயேசுகிறிஸ்துவின் பிறப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பது விவரிக்கப்படுகிறது. இந்த மேய்ப்பர்கள் புறஜாதியார்களல்ல. யூதமார்க்கத்தைச் சேர்ந்தவர்கள். சாஸ்திரிகளைப்போல நட்சத்திரத்தின் மூலமாக மேசியாவின் பிறப்பு அறிவிக்கப்படாமல், கர்த்தருடைய தூதனே இவர்களிடத்தில் நேரடியாக வந்து மேசியாவின் பிறப்பை அறிவிக்கிறான். *தேவன் மனுஷரோடு பேசும்போது அவர்களுக்குப் புரியும் பாஷையிலும், அவர்களுக்கு புரியும் வழியிலும் பேசுகிறார்...*

மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கியிருக்கிறார்கள். ராத்திரியிலே தங்கள் மந்தையை காத்துக்கொண்டிருக்கிறார்கள். பிரதான ஆசாரியரை சந்திப்பதற்காகவோ, அல்லது வேதபாரகரையும் ஜனத்தின் மூப்பரையும் சந்திப்பதற்காகவோ கர்த்தருடைய தூதன் அனுப்பப்படவில்லை. சாதாரண மேய்ப்பர்களை சந்தித்து மேசியாவின் பிறப்பை அறிவிப்பதற்காகவே கர்த்தருடைய தூதன் அனுப்பப்பட்டிருக்கிறான்.

இஸ்ரவேலின் முற்பிதாக்களெல்லோரும் மேய்ப்பர்களாகவே இருந்திருக்கிறார்கள். மந்தையை மேய்க்கும் வேலை கண்ணியமானது. கர்த்தர் இந்த வேலையைக் கனப்படுத்துகிறார். மேய்ப்பர்கள் கள்ளம் கபடமில்லாதவர்கள். கர்த்தருடைய பார்வையில் விசேஷித்த கிருபை பெற்றிருக்கிறார்கள். இரவு வேளையில் இவர்கள் தங்கள் படுக்கைகளில் தூங்கிக்கொண்டிருக்கவில்லை. கர்த்தருடைய தூதன் இவர்களை இரவு வேளையில் சந்திக்க வந்தபோது இவர்கள் வயல்வெளியில் தங்கி, தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மேய்ப்பர்கள் விழித்திருக்கிறார்கள். ஆகையினால் இவர்கள் எதையும் தூக்க கலக்கத்தில் அரையும் குறையுமாக பார்க்கவில்லை. இவர்கள் பார்ப்பதை தெளிவாக பார்க்கிறார்கள். கேட்பதை தெளிவாக கேட்கிறார்கள். இவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலையில் இவர்கள் உண்மையுள்ளவர்களாக இருக்கிறார்கள். பயபக்தியோடு இவர்கள் ஜெபித்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இந்த மேய்ப்பர்கள் தங்கள் மந்தையை காத்துக்கொண்டிருக்கிறார்கள். *கர்த்தர் நம்மை வந்து பார்க்கும்போது, அவர் நம்மை அழைத்த அழைப்புக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.* "நாம் என்ன வேலை செய்தாலும், கர்த்தரே நம்முடைய மெய்யான எஜமானாக இருக்கவேண்டும். கர்த்தருக்குப் பயந்து நம்முடைய கைகளின் பிரயாசங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்." (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

06 Jan, 23:40


ரோமப்பேரரசில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக அகஸ்துராயன் தன்னுடைய பேரரசில் குடிமதிப்பு எழுதப்படவேண்டும் என்று கட்டளை பிறப்பித்திருக்கலாம். தன்னுடைய பேரரசின் பெருமையை உலகத்திற்கு அறிவிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் அகஸ்துராயன் இந்த ஆணையை பிறப்பித்திருக்கலாம். தன்னுடைய பேரரசின் ஆளுகைக்குட்பட்ட ஜனங்களை சீராக நிர்வாகம் பண்ணுவதற்கு இந்தக் குடிமதிப்பு எழுதப்பட்டிருக்கலாம்.

அகஸ்துராயானால் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று கட்டளை பிறப்பிக்கப்பட்டவுடன், குடிமதிப்பு எழுதப்படும்படிக்கு, ரோமப்பேரரசின் ஆளுகைக்குட்பட்டவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போகிறார்கள். இதனால் உலகம் முழுவதும் கஷ்டமும் பிரச்சனையும் உண்டாயிற்று. எல்லோரும் பிரயாணம் செய்கிறார்கள். முதியோரும், சிறியோரும், தாய்மார்களும், கர்ப்பவதிகளும் இந்தக் குடிமதிப்பிற்கு விலக்கு கொடுக்கப்படவில்லை. ஆகையினால் பிரயாணம் பண்ண முடியாதவர்கள்கூட வேறு வழியில்லாமல் பிரயாணம் பண்ணி தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போகிறார்கள்.

யோசேப்பு தாவீதின் வம்சத்தானும், குடும்பத்தானுமாக இருக்கிறார். கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில் வாசம்பண்ணுகிறார். தாவீதின் சொந்த ஊர் பெத்லகேம். ஆகையினால் யோசேப்பு, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத் ஊரிலிருந்து பிரயாணம் செய்து, யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் ஊருக்கு வந்து, தன்னுடைய குடும்பத்தை பதிவு பண்ண வேண்டும். இதற்காக யோசேப்பு தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டு, கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பு எழுதப்படும்படி பெத்லகேம் ஊருக்குப் போகிறார். (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

06 Jan, 23:40


*பெத்லகேம்...*

*"அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்."* (லூக்கா 2:3-5)

இயேசுகிறிஸ்து பிறந்த காலத்தில் ரோமப்பேரரசு முழுவதிலும் பொதுவான அமைதி நிலவிற்று. ரோமப்பேரரசில் யானஸ் என்னும் தெய்வத்திற்கு ஒரு பெரிய கோவில் கட்டப்பட்டிருந்தது. ரோமப்போர்வீரர்கள் யுத்தத்திற்குச் செல்லும்போது இந்தக் கோவிலில் வழிபட்டுவிட்டு செல்வது வழக்கம். யானஸ் ரோமர்களின் யுத்த தெய்வமாகும். இப்போது ரோமப்பேரரசில் பொதுவான அமைதி நிலவுவதால், யானஸ் தெய்வத்தின் கோவிலை ரோமாபுரியார் மூடிவிடுகிறார்கள். அதன்பின்பு இந்தக் கோவில் திறக்கப்படவில்லையென்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ரோமர்களின் யுத்த தெய்வமாகிய யானசின் கோவில் மூடப்பட்ட காலத்தில், சமாதான பிரபுவாகிய இயேசுகிறிஸ்து இந்த பூமியிலே அவதரிக்கிறார். சமாதானப் பிரபு நம்மோடிருக்கும்போது யுத்தத்திற்கு அவசியமேயில்லை.

இயேசுகிறிஸ்து பெத்லகேமிலே பிறக்கிறார். இயேசுகிறிஸ்து பெத்லகேமிலே பிறப்பாரென்று மீகா தீர்க்கதரிசினமாக கூறியிருக்கிறார். *எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்தி-ருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது* (மீகா 5:2).

இயேசுகிறிஸ்து பெத்லகேமிலே பிறப்பாரென்பதை யூதமார்க்கத்தின் பிரதான ஆசாரியரும், ஜனத்தின் வேதபாரகரும் அறிந்து வைத்திருந்தார்கள். கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்று ஏரோது ராஜா பிரதான ஆசாரியனிடத்திலும் ஜனத்தின் வேதபாரகரிடத்திலும் கேட்டபோது அவர்கள் ராஜாவுக்கு இவ்வாறு பதில் கூறுகிறார்கள்.*யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்: யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது* (மத் 2:5,6).

யூதமார்க்கத்தின் தலைவர்களைப்போலவே சாதாரண ஜனங்களும் இயேசுகிறிஸ்து பெத்லகேமிலே பிறப்பாரென்பதை அறிந்து வைத்திருந்தார்கள். ஒரு சமயம் இயேசுகிறிஸ்துவின் பிரசங்கத்தைக் கேட்ட ஜனங்கள் அவரைக்குறித்து, மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றும், இவர் கிறிஸ்து என்றும் கூறினார்கள். "*தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா*" என்று கிறிஸ்துவின் பிறப்பைப்பற்றி ஜனங்கள் அறிந்திருக்கிறார்கள். (யோவா 7:42).

பெத்லகேம் என்னும் பெயருக்கு அப்பத்தின்வீடு என்று பெயர். இயேசுகிறிஸ்து ஜீவ அப்பமாக இருக்கிறார். வானத்திலிருந்து இறங்கி வந்த ஜீவஅப்பம் இயேசுகிறிஸ்துவே. *ஜீவ அப்பமாகிய இயேசுகிறிஸ்து அப்பத்தின் வீடு என்று பொருள்படும் பெத்லகேமிலே பிறப்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.* பெத்லகேம் தாவீதின் நகரமாகும். தாவீது ராஜா பெத்லகேமில் பிறந்தவர். தாவீதின் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் தாவீதின் நகரமாகிய பெத்லகேமிலே பிறந்திருக்கிறார்.

சீயோனும், தாவீதின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. சீயோன் அதிகாரமும், ஆளுகையும், வல்லமையும் நிறைந்த இடம். ஆனால் இயேசுகிறிஸ்து சீயோனில் பிறக்கவில்லை. தாவீது பெத்லகேமிலே பிறந்தபோது மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்தார். ஆடுகளை மேய்க்கும் மேய்ப்பராக தன்னுடைய வேலையை செய்து வந்தார். இந்த ஊரையே தாம் பிறக்க வேண்டிய ஊராக மேசியா தெரிந்தெடுத்திருக்கிறார். இயேசுகிறிஸ்து தாழ்மையில் நம்மைத் தேடி வந்திருக்கிறார். சீயோன் அதிகாரத்திலும் செழிப்பிலும் சிறந்து விளங்கிற்று. *"இயேசுகிறிஸ்து அதிகாரத்தினால் ஆளுகை செய்யப்படும் சீயோனைத் தெரிந்தெடுக்காமல், மிகவும் தாழ்மையான பெத்லகேமை தெரிந்தெடுத்து அந்த ஊரிலே பிறக்கிறார்."*

கன்னி மரியாள் இப்போது கர்ப்பவதியாக இருக்கிறாள். அவளுக்கு பிரசவ காலம் நெருங்கிற்று. இக்காலத்தில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகஸ்துராயனால் கட்டளை பிறந்திருக்கிறது. ரோமப்பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லோரும் வரி செலுத்த வேண்டும் என்பதற்காக இந்தச் சட்டம் இயற்றப்படுகிறது. இதற்காக ரோமப்பேரரசின் ஆளுகைக்குட்பட்டவர்கள் எல்லோரும் தங்களுடைய வம்சத்தின் பிரகாரமாகவும், குடும்பத்தின் பிரகாரமாகவும், தங்கள் தங்கள் ஊர்களில், தங்கள் பெயர்களை பதிவுபண்ண வேண்டும்.

Tamil BIBLE SECRETS

06 Jan, 02:25


*"கதை அல்ல! வரலாறு!"*

*"அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று."* (லூக்கா 2:1-2)

தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை இந்த உலகத்தில் அனுப்புவதற்கு ஏற்ற வேளை வந்தது. மேசியா பெத்லகேமிலே பிறப்பார் என்று ஏற்கெனவே முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயேசுகிறிஸ்து அகஸ்துராயனுடைய ஆட்சிக்காலத்திலே பிறந்தார். அன்றைக்கு, ரோமப்பேரரசின் எல்லை பல தேசங்களுக்கும் விரிந்து பரவிற்று. ஆகையினால் ரோமப்பேரரசின் பரந்த எல்லையைக் குறிப்பதற்கு "உலகமெங்கும்" என்னும் வார்த்தையை லூக்கா பயன்படுத்தியிருக்கிறார். "உலகமெங்கும்" என்பது ஒரு உருவகச்சொல். அந்தப் பிரதேசம் முழுவதிலும் என்று பொருள்படும். அக்காலத்தில் எல்லா தேசங்களுமே ரோமப்பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. அக்காலத்து நாகரீகத்தில் ஒரு சில தேசங்கள் மாத்திரமே ரோமப்பேரரசின் ஆளுகைக்குட்படாமல் தனியாக ஆட்சிபுரிந்தன. ஆயினும் தங்களுடைய வியாபாரம், பொருளாதாரம், தொழில் ஆகிய எல்லாவற்றிற்கும் அந்த தேசங்கள் ரோமப்பேரரசையே சார்ந்திருந்தன.

இயேசுகிறிஸ்து பிறந்த சமயத்தில் ரோமப்பேரரசில் நான்காம் பேரரசனாகிய அகஸ்துராயனின் ஆட்சிக்காலம் சிறப்பாக நடைபெற்று வந்தது.

"அகஸ்துராயன்" ஜுலியஸ் சீசருக்குப் பின்பு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவன். இவனுடைய சுவீகாரப் புத்திரன். கி.மு. 29 முதல் கி.பி. 14 வரையிலும் இவன் ஆட்சிபுரிந்தான். இவனுடைய மறுபெயர் காயூஸ் ஆக்டோவியஸ்

இயேசுகிறிஸ்து பிறந்தபோது, யூதா தேசமும் ரோமப்பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. யூதா தேசத்தார் ரோமப்பேரரசுக்கு வரிசெலுத்தி வந்தார்கள். மற்ற ஜனங்களைப்போலவே யூதஜனங்களும் ரோமப்பேரரசுக்கு வரிசெலுத்தி அவர்களுடைய ஆளுகைக்கு உட்பட்டிருந்தார்கள். வரியின் சுமை அதிகமாக இருந்ததினால் யூதர்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். இக்காலத்திற்கு அறுபது வருஷங்களுக்கு முன்பு, ரோமப்பேரரசின் படைத்தளபதி பாம்பி எருசலேம் பட்டணத்தைக் கைப்பற்றினான். இயேசுகிறிஸ்து பிறந்தபோது யூதா தேசத்தில் சீரியா தேசத்தின் தேசாதிபதியாகிய சிரேனியு என்பவன் ஆட்சிபுரிந்தான். யூததேசத்தின் வரலாற்றில், இக்காலத்தில்தான் யூதர்கள் ரோமப்பேரரசுக்கு முதன்முறையாக வரிசெலுத்த ஆரம்பிக்கிறார்கள்.

"சிரேனியு" என்பனை குறித்து வேதபண்டிதர்களும், சரித்திர ஆசிரியர்களும் பலவிதமான கருத்துக் கூறுகிறார்கள். இயேசு கிறிஸ்து பிறந்து பத்து அல்லது பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்பே இவன் சீரியா நாட்டிலே தேசாதிபதியாக இருந்தான். கி.மு. 12#இல் சிரேனியு ரோமப்பேரரசின் ஆலோசனைச் சங்கத்து உறுப்பினராக இருந்தான். இதன் மூலமாக தேசாதிபதியாக ஆவதற்குத் தகுதியைப் பெற்றான்.

இந்தக் காலக்கட்டத்தில்தான் குடிமதிப்பு உண்டாயிற்று. சீரிய நாட்டிலே இக்காலத்தில் சிரேனியு என்பவன் தேசாதிபதியாக இருந்தான் என்று லூக்கா எழுதுகிறார். (இந்த வாக்கியத்தில் "முதலாம்" குடிமதிப்பு உண்டாயிற்று என்பதை "சிரேனியு என்பவன் தேசாதிபதியாய் இருந்ததற்கு முன்பு குடிமதிப்பு உண்டாயிற்று" என்று புரிந்துகொள்ள வேண்டும்.)

*ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிறந்தது கதை அல்ல! அது வரலாறு!* (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

05 Jan, 01:47


இஸ்ரவேலுக்கு தன்னைக் காண்பிக்கும் நாள் வந்தவுடன் வனாந்தரத்திலிருந்து வெளிவந்து ஊழியம் செய்கிறார். *மறைந்திருக்கவும் ஒரு காலமுண்டு. வெளிப்படவும் ஒரு காலமுண்டு.* (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

05 Jan, 01:47


*அருணோதயம்!*

*அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம்தரவும். நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்தி-ருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான்...* (லூக் 1:78,79).

இரட்சிப்பின் சுவிசேஷம் நமக்கு தெளிவான, மெய்யான வெளிச்சத்தைத் தருகிறது. இதனால் நமது கால்கள் சமாதானத்தின் வழியில் நடக்கும். உன்னதத்திலிருந்து நம்மை சந்திப்பதற்காக அருணோதயம் தோன்றியிருக்கிறது. தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே உன்னத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மை சந்தித்திருக்கிறது. இயேசுகிறிஸ்துவே அதிகாலையில் தோன்றும் அருணோதயமாக இருக்கிறார். நாம் சரியான பாதையில் நடப்பதற்கு சுவிசேஷம் நமக்கு வெளிச்சத்தைத் தருகிறது. சுவிசேஷத்தின் வெளிச்சத்தில் நடக்கும்போது, புறஜாதியாரைப்போல இருளில் தள்ளாடவேண்டிய அவசியமில்லை. பழைய ஏற்பாட்டில் சத்தியங்களெல்லாம் அடையாளங்களாகவே எழுதப்பட்டுள்ளன. அடையாளத்தின் வெளிச்சம் நிலவின் வெளிச்சத்தைப் போன்றது. நிலவின் வெளிச்சத்தில்கூட நமது நடை தடுமாறுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் சுவிசேஷத்தின் வெளிச்சமோ பகல்பொழுதின் வெளிச்சத்தைப் போன்றது. இந்த வெளிச்சத்தில் நம்முடைய கால்கள் தள்ளாடாமல் சமாதானத்தின் வழியில் நடக்கும்.

சுவிசேஷத்திற்காக இதுவரையிலும் ஜனங்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றிய முன்னறிவிப்பை யோவான்ஸ்நானன் தன்னுடைய ஊழியத்தின் மூலமாக அறிவிக்கிறார்.

தேவரகசியத்தை கண்டுபிடிப்பதற்கு சுவிசேஷம் உதவிபுரிகிறது. அந்தகாரத்திலும் மரணஇருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு சுவிசேஷம் வெளிச்சம் தருகிறது. தேவனுடைய மகிமையைப்பற்றிய வெளிச்சமானது இயேசுகிறிஸ்துவின் மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது. சுவிசேஷம் நம்மைப் புதுப்பிக்கிறது. மரணஇருளில் உட்கார்ந்திருக்கிறவர்கள் பிழைப்போமென்று எந்தவிதமான நம்பிக்கையுமில்லாமல் தங்களுடைய மரண நாளுக்காக காத்திருப்பார்கள். மன்னிப்பு என்னும் வார்த்தையே இவர்களுடைய காதுகளில் ஒலிக்காது. தண்டனையும், தண்டனை நிறைவேற்றப்படும் நாளும் இவர்களுடைய மனத்தில் நிறைந்திருக்கும். இப்படி மரண இருளில் உட்கார்ந்திருக்கும் ஜனங்களுக்கு சுவிசேஷம் வெளிச்சத்தைத் தருகிறது. இதன் மூலமாக அவர்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டாகிறது. மரணத்திற்குப் பதிலாக நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ளும் வாய்ப்பு இவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

சுவிசேஷம் நம்முடைய கால்களை வழிநடத்துகிறது. சமாதானத்தின் வழியில் இது நம்மை வழிநடத்திச் செல்கிறது. சுவிசேஷத்தின் மூலமாக நாம் தேவனோடு சமாதானமாக ஜீவிக்கிறோம். பாவிகளுக்கு சமாதானத்தின் பாதையென்றால் என்ன என்றே தெரியாது. அவர்கள், தேவனுடைய பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டு சமாதானத்தின் வழியில் நடக்கலாம். *தேவனோடு முரண்பட்டு ஜீவிக்காமல், அவரோடு சமாதானமாக ஜீவிப்பது நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதமாகும்.*

அருணோதயம் என்பதற்கான கிரேக்க வார்த்தை "அனாதோலே" என்பதாகும். இதற்கு கிழக்கு, சூரியன் உதிக்கும் திசை, நட்சத்திரம் அல்லது சூரியன் ஆகியவற்றின் உதயம் என்று பொருள். சில இடங்களில் இந்தக் கிரேக்கச்சொல் கிழக்கு என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. யோவானுடைய வருகையினால் உதிக்கப் போகும் வெளிச்சம் என்றும் (யோவான் 5:35), *உலகத்தின் வெளிச்சமாகிய இயேசு கிறிஸ்து* என்றும் (மத் 4:16; லூக்கா 2:32; யோவான் 1:5#9) இந்த வார்த்தைக்கு பொருள் சொல்லலாம்.

*அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்.* (லூக் 1:80).

யோவான்ஸ்நானனுடைய பிள்ளைப்பருவம் இந்த வசனத்தில் சுருக்கமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. யோவான்ஸ்நானன் எனும் சிறுவன், தன்னுடைய உள்ளான மனுஷனில் வளர்ச்சி பெறுகிறான். ஆவியிலே பெலன்கொள்கிறான். கர்த்தருக்குள் பெலமுள்ளவனாக வளர்கிறான். *கர்த்தரில் பெலன் கொள்கிறவர்கள் ஆவியிலும் பலன்கொண்டிருப்பார்கள்.*

யோவான்ஸ்நானனுடைய புறம்பான மனுஷனும் வளர்ச்சி பெறுகிறான். அவன் வனாந்தரங்களில் தங்கியிருக்கிறான். யூதமார்க்கத்தின் வேதபாரகர்களைப்போல அவன் ரபீமார்களின் பாதபடிகளில் அமர்ந்து, கல்வி பயிலவில்லை. இதற்குப் பதிலாக வனாந்தரத்தில் தேவனுடைய சமுகத்தில் அமர்ந்திருந்து, கர்த்தரையும் அவருடைய வார்த்தையையும் தியானித்து, ஆவிக்குரிய ரீதியாக வளர்ச்சி பெறுகிறான்.

ஒரு சிலர் ஆவிக்குரிய ரீதியாக தங்களுடைய தகுதிகளை அதிகமாக வளர்த்துக்கொள்வார்கள். ஆனால் யாருக்கும் பிரயோஜனமில்லாமல் தங்களுடைய தாலந்துகளை புதைத்துவிடுவார்கள். வேறு சிலரோ தங்களுக்கு எந்த தாலந்துகளும் இல்லாவிட்டாலும், தங்களிடத்தில் எல்லா தாலந்துகளும் உள்ளதுபோல மாய்மாலமாக நடிப்பார்கள். ஆனால் யோவான்ஸ்நானனோ தன்னுடைய ஆவிக்குரிய வளர்ச்சியில் உண்மையுள்ளவனாக இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் மாத்திரமே வனாந்தரத்தில் தங்கியிருக்கிறார்.

Tamil BIBLE SECRETS

04 Jan, 01:29


அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான். (லூக்கா 1:63-64)

"யோவான்' என்னும் பெயருக்கு யெகோவாவின் கிருபை என்று பொருள். இயேசு கிறிஸ்துவின் மூலமாக வரப்போகிற சத்தியத்தையும், கிருபையையும் யோவான் அறிமுகப்படுத்தப்போகிறார். (யோவான் 1:17). தொடரும்!!!.
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

04 Jan, 01:29


*"யோவான் என்னும் பெயர்!"*

*எட்டாம் நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள். அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிடவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி, அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள்...* (லூக் 1:59#62).

எலிசபெத்திற்கு மகன் பிறந்து எட்டு நாளாயிற்று. எட்டாம் நாளில், யூதர்கள் ஆண் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் பண்ணுவது வழக்கம். புத்திரன் பிறந்ததற்காக, எலிசபெத்தோடுகூட சந்தோஷப்பட்ட அவளுடைய அயலகத்தாரும், பந்துஜனங்களும், பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும் இந்த சம்பவத்திற்கும் வருகிறார்கள். இவர்களுடைய குடும்பத்தின் சந்தோஷத்தில் மற்றவர்களும் சந்தோஷப்படுகிறார்கள். ஆண் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம்பண்ணும்போது யூதர்கள் அந்த பிள்ளையை கர்த்தரிடத்தில் உடன்படிக்கை செய்து, அவரிடத்தில் ஒப்புக்கொடுத்து, பிரதிஷ்டை பண்ணுகிறார்கள். இது யூதர்களுக்கு ஒரு சந்தோஷமான சம்பவம். *நம்முடைய குடும்பத்திலும் நம்முடைய பிள்ளைகளை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்து பிரதிஷ்டை பண்ணவேண்டும். பிள்ளைகளை கர்த்தருக்காக வளர்க்கவேண்டும்.*

யூதருடைய குடும்பங்களில் எட்டாம் நாளில் பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்போது, அதற்கு பேரிடுவது வழக்கம். தேவனிடத்தில் பிரதிஷ்டை பண்ணும் வரையிலும் பிள்ளைக்கு பேரிடாமல் இருக்கிறார்கள். பிரதிஷ்டை பண்ணும்போதோ அந்தப் பிள்ளைக்கு பேரிட்டு, அந்த பிள்ளையின் பெயரை உச்சரித்து, கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்து பிரதிஷ்டை பண்ணுவார்கள்.

அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் அந்தப் பிள்ளையின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்கு சகரியா என்று பேரிடவேண்டும் என்று கூறுகிறார்கள். சகரியாவுக்கு வயதாயிற்று. எலிசபெத்தும் வயது சென்றவளாக இருக்கிறாள். இயற்கையின் சரீர அமைப்பின்படி இனிமேல் அவர்களுக்கு குழந்தை பெறுவதற்கு வாய்ப்பில்லை. ஆகையினால் இந்த குழந்தைக்கு சகரியா என்று பேரிட்டு, இந்தப் பிள்ளையின் தகப்பனைக் கனப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறார்கள்.

பிள்ளையின் தாயோ அவர்களுடைய ஆலோசனையை அங்கீகரிக்கவில்லை. அந்தப் பிள்ளைக்கு யோவான் எனப் பேரிடவேண்டும் என்று கூறுகிறாள். தேவன் இந்தக் குழந்தைக்கு யோவான் என்று பேரிட்டிருக்கிறார். அந்தப் பெயரே இந்தப் பிள்ளைக்கு கொடுக்க வேண்டும் என்று எலிசபெத்து உறுதியாக இருக்கிறாள். யோவான் என்னும் பெயருக்கு "கிருபையுள்ளது" என்று பொருள். யோவான் கர்த்தருக்காக வழியை ஆயத்தம்பண்ணுவான். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிமுகம் செய்து வைப்பான். தேவனுடைய கிருபை இவன் மூலமாக பிரகாசமாக வெளிப்படும்.

எலிசபெத்தின் அயலகத்தாரும், பந்து ஜனங்களும் அவள் கூறிய பெயரைக்கேட்டு ஆச்சரியப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களுடைய உறவின் முறையாரில் இந்தப் பெயருள்ளவன் ஒருவனுமில்லை. சகரியா என்னும் பெயர் அவர்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், அவர்களுடைய உறவின் முறையாரின் பெயர்களில் வேறு எதையாவது ஒன்றை இந்தப் பிள்ளைக்கு கொடுக்கலாம் என்பது அவர்களுடைய எண்ணம்.

அவர்கள் எலிசபெத்தின் ஆலோசனையை அங்கீகரிக்காமல், பிள்ளையின் தகப்பனிடம் கேட்கிறார்கள். ஆனால், சகரியா பேசமுடியாத ஊமையாக இருக்கிறார். இந்தப் பிள்ளைக்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று அவர்கள் ஊமையாயிருக்கும் சகரியாவிடம் சைகையினால் கேட்கிறார்கள்.

சகரியாவின் அயலகத்தாரும், பந்து ஜனங்களும் தந்தையின் பெயரைப் பின்பற்றி குழந்தைக்குச் சகரியா என்று பெயரிடப் போனார்கள். ஆனால் அந்தக் குழந்தைக்கு யோவான் என்று பேரிட வேண்டும் என்பதாக தேவதூதன் சகரியாவிற்கு ஏற்கெனவே அறிவித்திருந்தான். (லூக்கா 1:13)

பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்போது பேரிடுவது வழக்கம். ஆபிராம், சாராய் ஆகியோரின் பெயரைத் தேவன் விருத்தசேதனத்தை நியமனம் பண்ணியபோது ஆபிரகாரம், சாராள் என்று மாற்றினார். (ஆதி 17) யூதமார்க்கத்துக் குருமார்கள் இதை மனதில் கொண்டு, குழந்தைக்கு விருத்தசேதனத்தின்போது பேரிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

பொதுவாகத் தந்தையின் பெயரை மகனுக்குச் சூட்டுவதில்லை. ஆனால் இங்கு சகரியாவின் பெயரைக் குழந்தைக்குச் சூட்டவேண்டுமென்று அயலகத்தாரும், பந்துஜனங்களும் தீர்மானம் பண்ணுகிறார்கள். இதற்கு ஏதாவது விசேஷித்த காரணம் இருக்கலாம்.

ஒவ்வொரு தேசத்திலும் பிள்ளைகளுக்கு விசேஷித்த நாட்களில் பெயரிடுவார்கள். ரோமர்கள் ஒன்பதாவது நாளிலும், கிரேக்கர்கள் பத்தாவது நாளிலும் மற்ற தேசங்களில் குழந்தை பிறந்து ஏழாவது நாளிலும் பெயர்சூட்டுவது வழக்கம்.

இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சகரியாவிடம் சைகையினால் கேட்டார்கள். ஒன்பது மாதங்களாக சகரியா பேசமுடியாத ஊமையாக இருக்கிறார். (லூக்கா 1:20).

Tamil BIBLE SECRETS

03 Jan, 02:11


*"தேவனுடைய இரக்கம்!"*

*"அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது. தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்."* (லூக்கா 1:50#52).

கன்னி மரியாள் இப்போது மேசியாவின் தாயாராகவும் இருக்கிறாள். இதுவரையிலும் அவள் தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தைப்பற்றியும் மாத்திரம் சிந்தித்துக் கொண்டிருந்தாள். ஆனால் இப்போதோ அவள் உலக இரட்சகரின் தாயாராக இருப்பதினால், அவளுடைய பார்வையும் தரிசனமும் இப்போது விஸ்தாரமடைகிறது. தன்னைப்பற்றியும், தனக்கு முன்பு இருந்த காரியங்களைப்பற்றியும், பல தலைமுறைகளைப்பற்றியும் மரியாள் சிந்தித்துப் பார்க்கிறாள். கர்த்தருடைய இரக்கம் அவருக்கு பயந்திருக்கிறவர்களுக்கு தலைமுறை தலைமுறைக்குமுள்ளது என்று அங்கீகரித்துக் கூறுகிறாள்.

தேவனிடத்தில் கிருபையும், இரக்கமும் தாராளமாக உள்ளது. நாம் பாவிகளாக இருக்கையில், பிதாவாகிய தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை, நம்மை இரட்சிப்பதற்காக அனுப்பியிருக்கிறார். இதன் மூலமாக அவருடைய கிருபையும் இரக்கமும் அன்பும் வெளிப்படுகிறது. *அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்கள்மீது இருக்கும்.* இந்த இரக்கத்தை தேவன் விரிவுபடுத்தி, மனுக்குலத்திலுள்ள எல்லோருடைய இரட்சிப்புக்ககாவும் மேசியாவை அனுப்பி, தமது இரக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் மூலமாக நமக்கு நித்திய இரட்சிப்பும், நித்திய நீதியும் கிடைத்திருக்கிறது. அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்கு, தலைமுறை தலைமுறைக்கும் அவருடைய இரக்கம் கிடைக்கிறது. *சுவிசேஷம் எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் கர்த்தருடைய இரக்கமும் வெளிப்படுத்தப்படுகிறது.*

கர்த்தருக்குப் பயந்திருக்கிறவர்கள் தேவனிடமிருந்து கிருபையைப் பெற்றுக்கொள்வார்கள். இருதயத்தில் தாழ்மையுள்ளவர்களை கனப்படுத்துகிறார். இரக்கம் காண்பிக்கும் இதே தேவன், மகிமையான காரியங்களையும் செய்கிறார். வல்லமையான காரியங்களையும் செய்கிறார்.

இருதயத்தில் அகந்தையுள்ளவர்கள், உலகப்பிரகாரமாக தங்களைப்பற்றி பெருமையாகவும் அகந்தையாகவும் சிந்திப்பார்கள். மற்ற எல்லோரையும்விட தாங்களே உயர்ந்தவர்கள் என்று ஆணவமாக இருப்பார்கள். ஆனால் கர்த்தரோ இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களை சிதறடித்துப் போடுகிறார். அவர்களைத் தாழ்த்துகிறார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளிவிடுகிறார். தம்முடைய புயத்தினால் பராக்கிரமம் செய்கிறார்.

பலவான்கள் தங்கள் ஆசனங்களில் அமர்ந்திருக்கும்போது, தங்கள் பதவியும் ஆசனங்களும் நிலைத்திருக்கும் என்றும், அதை யாராலும் அசைக்கமுடியாது என்றும் இறுமாப்போடிருக்கிறார்கள். ஆனால் கர்த்தரோ பலவான்களை அவர்களுடைய ஆசனங்களிலிருந்து தள்ளிவிடுகிறார். அவர்களைத் தாழ்த்துகிறார். அதேவேளையில் தாழ்மையானவர்களை உயர்த்துகிறார். இப்படிப்பட்ட பராமக்கிரமம் மிகுந்த காரியம் அனைத்தையும் கர்த்தர் தமது புயத்தினாலே செய்கிறார். தாழ்மையானவர்கள் தங்களது சுயமுயற்சியினால் உயரமுடியாது. ஆனால் கர்த்தரோ வல்லமையுடையவர். மகிமையான காரியங்களைச் செய்யக்கூடியவர். *தாழ்மையானவர்களை உயர்த்துவதும் கர்த்தருடைய வல்லமையான காரியமாகும்.*

ஐசுவரியவான்கள் தங்கள் ஐசுவரியங்களில் பெருமைப்படுவார்கள். பணத்தால் எதையும் செய்யமுடியுமென்று ஆணவத்தோடிருப்பார்கள். தரித்திரர் பசியோடிருப்பார்கள். புசிப்பதற்குக்கூட அவர்களிடத்தில் ஒன்றும் இருக்காது. தரித்திரருடைய முழுக்குடும்பமும் கஷ்டப்படும். ஆனால் கர்த்தரோ தமது தெய்வீக பராமரிப்பினால் தரித்திரருக்கும் இரங்குகிறார். பசியுள்ளவர்களை நன்மையினால் நிரப்புகிறார். அதேவேளையில் ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிடுகிறார்.

தங்களுடைய சுயமுயற்சியினாலும், சுயபராக்கிரமத்தினாலும், சுயபலத்தினாலும் தங்களால் எல்லாம் ஆகும் என்று சிலர் நினைத்து இறுமாப்பாக இருக்கிறார்கள். இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட துன்மார்க்கருடைய எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் கர்த்தர் அவமாக்கிப்போடுகிறார். இந்த உலகத்தில் தங்களுக்கு பெரிய காரியங்கள் கிடைக்குமென்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் கர்த்தரோ அவர்களை வெறுமையாய் அனுப்பிவிடுகிறார்.

"தேவன் நல்லவர். தங்களைத் தாழ்த்துகிறவர்களை அவர் உயர்த்துகிறார். கர்த்தருக்கு பயந்து ஜீவிக்கிறவர்களுக்கு அவர் இரக்கம் காண்பிக்கிறார். அவர்களுக்கு நன்மையான காரியங்களை நிறைவேற்றுகிறார். சுவிசேஷத்தில் தேவனுடைய கிருபையும் இரக்கமும் விரிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது."

Tamil BIBLE SECRETS

03 Jan, 02:11


புதிய ஏற்பாட்டுக்காலத்தில் பரிசேயரும் சதுசேயரும் ஆவிக்குரிய ரீதியாக மார்க்க காரியங்களில் தங்களைப் பெருமைப்படுத்திக் கொண்டார்கள். இயேசுகிறிஸ்துவோ இவர்களைப் புறக்கணித்துவிட்டு ஆயக்காரரையும் பாவிகளையும் தமக்கு சிநேகிதர்களாக்கிக்கொண்டார். பரலோக ராஜ்யத்திற்கு செல்லும் சிலாக்கியத்தை ஏழைகளுக்கும், பாவிகளுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் இயேசுகிறிஸ்து வாய்க்கப்பண்ணியிருக்கிறார். யூதர்கள் நியாயப்பிரமாணங்களைக் கடைபிடித்து நீதியாக ஜீவிக்கலாம் என்று நினைக்கிறார்கள். "ஆனால் நியாயப்பிரமாணத்தை தேடின இஸ்ரவேலரோ நியாயப்பிரமாணத்தை அடையவில்லை. நீதியை தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள். இது விசுவாசத்தினாலாகும் நீதியே!" (ரோம 9:30,31).

தம்முடைய சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணுவதற்கு மாம்சத்தின் பிரகாரம் பலவான்களையும், ஞானிகளையும் தேவன் தெரிந்தெடுக்கவில்லை. இந்த பூமியில் தம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கு கர்த்தர் மாம்சத்தின்படி ஞானிகளையோ, வல்லவர்களையோ, பிரபுக்களையோ தெரிந்தெடுக்கவில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளை தெரிந்துகொண்டார். பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளை தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாக பெருமைப்பராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார் (1கொரி 1:26#29). கர்த்தர் இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களை சிதறடிக்கிறார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தாழ்த்துகிறார். ஐசுவரியவான்களை வெறுமையாய் அனுப்பிவிடுகிறார். ஆனால் *தாழ்மையானவர்களையோ, உயர்த்துகிறார்.* (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

02 Jan, 14:45


*"மகிமையானவைகளை செய்யும் வல்லமையுடைவர்!"*

*"அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இது முதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். வல்லமையுடைவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது"* (லூக்கா 1:48,49).

மரியாளின் ஆத்துமா கர்த்தரில் களிகூருகிறது. ஏனெனில் கர்த்தர் மரியாளுக்கு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறார். *அவளுடைய அடிமையின் தாழ்மையைக் கர்த்தர் நோக்கிப் பார்த்திருக்கிறார்.* அவள் ஏழையாக இருந்தாலும், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும், அவளுடைய வயிற்றில் மேசியா பிறக்கவேண்டுமென்பது கர்த்தருடைய தெய்வீக திட்டம். ஆகையினால் இது முதல் எல்லா சந்ததிகளும் மரியாளை *பாக்கியவதி* என்பார்கள்.

இந்த சிலாக்கியம் கர்த்தர் மூலமாக மரியாளுக்கு கிடைத்திருக்கிறது. அவர் மரியாளின் தாழ்மையை நோக்கிப் பார்த்திருக்கிறார். எலிசபெத்தும் மரியாளை "ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள்" என்று ஆசீர்வதித்திருக்கிறாள். எல்லா சந்ததிகளும் மரியாளை பாக்கியவதி என்று அழைக்கும்போது, அந்த சந்ததியில் யூதரும் இருப்பார்கள். புறஜாதியாரும் இருப்பார்கள். ஆகையினால் *மரியாளின் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.*

கர்த்தர் வல்லமையுள்ளவர். அவர் மரியாளுக்கு மகிமையானவைகளை செய்திருக்கிறார். கன்னிகையாக இருக்கும் ஒரு ஸ்திரீ கர்ப்பம் தரிப்பது என்பது ஒரு மகிமையான / அற்புதமான காரியமாகும். அந்த கர்ப்பத்தில் மேசியா உற்பத்தியாவது மிகப்பெரிய மகிமையான காரியம். உன்னதத்திலுள்ள தேவனுடைய வல்லமையே இந்தக் காரியத்தை நடைபெறச் செய்கிறது. ஆகையினால் மரியாள் கர்த்தராகிய தேவனை துதிக்கும்போது அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது" என்று கூறி அவரை வாழ்த்துகிறாள். தனக்கு கர்த்தர் மகிமையான காரியத்தை செய்திருப்பதாக அங்கீகரித்திருக்கிறாள். *"நாமும் கர்த்தரிடமிருந்து மகிமையான காரியங்களை எதிர்பார்க்க வேண்டும். கர்த்தருடைய மகிமையான காரியம் வல்லமையுள்ளதாகவும் பரிசுத்தமுள்ளதாகவும் இருக்கும்."* அவர் எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். *அவரால் எல்லாம் ஆகும். எல்லாவற்றையும் அவர் நன்றாகவும், நமது நன்மைக்கு ஏதுவாகவும் செய்துமுடிப்பார்.* (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

02 Jan, 01:43


*"மரியாளின் இரட்சகர்!"*

*"அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது."* (லூக்கா 1:46-47)

எலிசபெத்தின் வாழ்த்துதல் செய்தியைக் கேட்டபின்பு மரியாள் கர்த்தரைத் துதித்துப் பாடுகிறாள். எலிசபெத்தின் தீர்க்கதரிசனம் மரியாளுடைய வாழ்த்துப் பாடலின் பிரதிபலிப்பாக இருக்கிறது. கன்னி மரியாள் நாசரேத்திலிருந்து நீண்ட தூரம் பிரயாணம்பண்ணி யூதாவிலுள்ள மலைத்தேசத்து பட்டணத்திற்கு வந்திருக்கிறாள். அவளுடைய சரீரத்தில் பிரயாணக் களைப்பு மிகுந்திருக்கும். ஆயினும் தன்னுடைய பிரயாணக் களைப்பு எல்லாவற்றையும் மறந்துவிட்டு, புதிய ஜீவனையும், புதிய சந்தோஷத்தையும், புதிய பெலனையும் பெற்றுக்கொள்கிறாள். *அவளுடைய விசுவாசம் உறுதிப்பட்டபடியினால் இந்தப் புதிய ஆசீர்வாதங்கள் மரியாளுக்கு கிடைக்கிறது.*

மரியாள் தன் சந்தோஷத்தின் மிகுதியினால் கர்த்தரைத் துதித்துப் பாடுகிறாள். தன்னுடைய சந்தோஷத்திற்கு தேவன் மாத்திரமே காரணம் என்பதை அங்கீகரித்து அவரைத் துதிக்கிறாள். "என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது" என்று கர்த்தரை பயபக்தியோடு துதிக்கிறாள்.

*தேவனுடைய கிருபையையும் இரக்கத்தையும் அதிகமாக பெற்றிருப்பவர்கள் மாத்திரமே, கர்த்தரைக் குறித்து இந்த அளவிற்கு மேன்மையாக தியானிப்பார்கள். தேவன் நம்மை எந்த அளவிற்கு உயர்த்துகிறாரோ அந்த அளவிற்கு நாமும் அவரை அதிகமாக உயர்த்தி, துதித்து, போற்றவேண்டும். அப்போதுதான் நம்முடைய துதியின் ஆராதனை அங்கீகரிக்கப்படும்.* நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குள் களிகூரவேண்டும். நம்முடைய முழுமனதும், முழுஆவியும் கர்த்தரைத் துதித்துப்பாடவேண்டும். அவரை மகிமைப்படுத்த வேண்டும். *கர்த்தரைத் துதிப்பது நமது ஆத்துமாவின் கடமை.*

"மரியாள் கர்த்தரைத் தன்னுடைய இரட்சகர் என்று அங்கீகரிக்கிறாள். என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது" என்று அவரைத் துதித்துப்பாடுகிறாள். மேசியாவின்மீது மரியாள் பயபக்தியோடிருக்கிறாள். "மேசியாவுக்கு தாயாராக இருக்கும் மரியாள், மேசியாவின் தேவத்துவத்தை உணர்ந்து அவரைத் தன்னுடைய இரட்சகராக அறிக்கை செய்கிறாள்."

கர்த்தருடைய தூதன் மரியாளிடம் பேசும்போது "மரியாளின் வயிற்றிலிருக்கும் குழந்தை பெரியவராக இருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்" என்று அறிவித்தான். அவருக்கு 'இயேசு என்று பேரிடுவாயாக" என்றும் தேவதூதன் மரியாளிடம் கூறினான். *இயேசு என்னும் வார்த்தைக்கு இரட்சகர் என்னும் பொருளும் உள்ளது.* மரியாள் இந்தப் பெயரின் பொருளைப் புரிந்துகொண்டு, இயேசுவை *என் இரட்சகராகிய தேவன்* என்று அறிவிக்கிறாள்.

மரியாள் இயேசுகிறிஸ்துவின் தாயாராக இருக்கிறபோதிலும், அவளுக்கும் ஒரு இரட்சகர் தேவைப்படுகிறார். இயேசுகிறிஸ்துவைப் பார்க்கும்போது மரியாள் அவரைத் தன்னுடைய இரட்சகராகவே பார்க்கிறாள். இயேசுகிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே மனுக்குலத்திலுள்ள அனைவருக்கும் இரட்சிப்பு நியமிக்கப்பட்டிருக்கிறது.

''என் இரட்சகர்" என்று மரியாள் கூறுகிறாள். மரியாளைப் பற்றி விளக்கம் தருகிறவர்களில் சிலர் அவளிடத்தில் பாவமேயில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் மரியாளோ இயேசுவை ""என் இரட்சகர்" என்று அழைக்கிறாள். இயேசு கிறிஸ்து மரியாளின் இரட்சகராக இருப்பார் என்றால் மரியாள் இரட்சிக்கப்படவேண்டியவளே. மரியாள் ஒரு பாவமும் செய்யவில்லையென்று எந்த வேதவசனமும் கூறவில்லை. (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

01 Jan, 03:37


(லூக்கா - 13): *"எலிசபெத்தின் தீர்க்கதரிசனம்!"*

*"உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது. தது. இதோ,! இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்"* (லூக்கா 1:42#45).

எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிறைந்து, *மரியாளை ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள்* என்று அறிவிக்கிறாள். மரியாளை தன்னுடைய ஆண்டவருடைய தாயார் என்றும் அங்கீகரிக்கிறாள். சாதாரண சப்தத்தில் பேசாமல், எலிசபெத்து உரத்த சத்தமாய் பேசுகிறாள். கர்த்தருடைய தூதன் மரியாளைப் பார்த்து "ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் (லூக் 1:28) என்று கூறினான். அதே வார்த்தையையே இங்கு எலிசபெத்தும் கூறுகிறாள். இத்துடன், மரியாள் ஏன் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதற்கான காரணத்தையும் எலிசபெத்து விவரிக்கிறாள். "மரியாளின் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது' என்று கூறி, "மரியாள் ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள்" என்று அறிவிக்கிறாள்.

எலிசபெத்து, ஆசாரியனாகிய சகரியாவின் மனைவி. பலவருஷங்களாக சகரியா தேவாலயத்தில் ஆசாரிய ஊழியம் செய்து வருகிறார். எலிசபெத்து, மரியாளைவிட வயதில் மூத்தவள். ஆயினும் ஆண்டவருக்கு தாயாராகும் சிலாக்கியம் மரியாளுக்கே கிடைத்திருக்கிறது. கன்னிகையாக இருந்தாலும் கர்ப்பந்தரித்து, மேசியாவுக்கு தாயாராகும் சிலாக்கியம் மரியாளுக்கு மாத்திரமே கிடைத்திருக்கிறது. இந்த சிலாக்கியத்தைப் பார்த்து எலிசபெத்து மரியாள்மீது பொறாமைப்படவில்லை. மரியாளைவிட தனக்கு கிடைத்திருக்கும் சிலாக்கியம் குறைவாக இருந்தாலும், அதற்காக எலிசபெத்து வருத்தப்படவில்லை. மரியாளின் சிலாக்கியத்தை நினைத்து சந்தோஷப்படுகிறாள்.

சில சமயங்களில் நமக்கு நல்ல தகுதியும் ஆற்றலும் இருக்கும். இவை இருந்தாலும் நம்முடைய தகுதிக்கு ஏற்றபடி கர்த்தருடைய சிலாக்கியம் நமக்கு கிடைக்காமல் போகலாம். நம்மைவிட தகுதியில் குறைந்தவர்களுக்கு அதிக சிலாக்கியம் கிடைக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நமது குறைவை நினைத்து வருத்தப்படக்கூடாது. மற்றவர்களுடைய நிறைவை நினைத்து பொறாமைப்படவும் கூடாது. நம்மைவிட மற்றவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டால் அவர்களோடு சேர்ந்து நாமும் சந்தோஷப்பட பழகிக்கொள்ளவேண்டும்.

எலிசபெத்து மரியாளின் வருகையை வரவேற்கிறாள். *என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது* என்று ஆச்சரியத்தோடு கேட்கிறாள். கன்னி மரியாளை எலிசபெத்து தன்னுடைய ஆண்டவருடைய தாயாராக அங்கீகரிக்கிறாள். மரியாளை தன் வீட்டிற்கு வரவேற்பது மாத்திரமல்ல, அவளுடைய வருகையினால் தனக்கு சிலாக்கியம் கிடைத்திருப்பதாகவும், அவளுடைய வருகைக்கு தான் பாத்திரமானவள் அல்ல என்றும் எலிசபெத்து தன்னைத் தாழ்த்துகிறாள். ஆகையினால் "இந்த சிலாக்கியம் தனக்கு எதினால் கிடைத்தது" என்று ஆச்சரியத்தோடு கேட்கிறாள்.

பரிசுத்த ஆவியினால் நிரப்பட்டிருக்கிறவர்கள் பெருமைப்படமாட்டார்கள். தங்களுக்கு பலவிதமான தகுதிகள் இருந்தாலும், ஆற்றல்கள் இருந்தாலும், தேவனுடைய சமுகத்தில் தங்களை தாழ்த்துவார்கள். தங்கள் சுயமுயற்சிக்கும், சுயபிரயோஜனத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், தேவனுடைய கிருபையையே உயர்வாக நினைப்பார்கள். எலிசபெத்தும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பட்டிருப்பதினால் தன்னைத் தாழ்த்தி, தேவனுடைய கிருபையை உயர்த்துகிறாள்.

மரியாள் தன்னை வாழ்த்தியவுடன் தனக்கு ஏற்பட்ட ஆச்சரியமான அனுபவத்தை எலிசபெத்து விவரிக்கிறாள். *"இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய் துள்ளிற்று"* என்று எலிசபெத்து கூறுகிறாள். எலிசபெத்தின் உள்ளமும் களிப்படைந்திருக்கிறது. எலிசபெத்தின் வயிற்றிலுள்ள பிள்ளையும் களிப்படைந்து துள்ளுகிறது. *மேசியாவின் வருகை வெகுவிரைவில் இருக்கப்போகிறது என்பதை நினைத்து, கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணப்போகிற அந்தப் பிள்ளை களிப்பாய் துள்ளிற்று.*

எலிசபெத்தின் வார்த்தையைக் கேட்டு, மரியாளின் விசுவாசம் வலுவடைந்திருக்கும். தேவதூதன் தன்னிடத்தில் கூறிய வார்த்தைகளை, எலிசபெத்து தன்னுடைய சொந்த அனுபவத்தின் மூலமாக உறுதிபண்ணுகிறாள். ஆவியில் நிறைந்து கர்த்தருடைய வார்த்தையை தீர்க்கதரிசனமாக அறிவித்து, மரியாளின் விசுவாசத்தை உறுதிபண்ணுகிறாள்.

மரியாளின் விசுவாசத்தை எலிசபெத்து உற்சாகப்படுத்துகிறாள். *"விசுவாசித்தவளே பாக்கியவதி என்றும், கர்த்தரால் அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும்"* என்றும் தீர்க்கதரிசனமாக கூறுகிறாள். "விசுவாசிக்கிற ஆத்துமாவே ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிற ஆத்துமா." கர்த்தருடைய வார்த்தையை நம்புகிறவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் *கர்த்தருடைய வார்த்தை, அதை நம்புகிறவர்களை ஒருபோதும் கைவிடாது.

Tamil BIBLE SECRETS

01 Jan, 03:37


கர்த்தருடைய வார்த்தைகள் நிச்சயமாகவே நிறைவேறும்.* கர்த்தராலே மரியாளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிச்சயமாகவே நிறைவேறும்.

*பரிசுத்தவான்களின் விசுவாசத்தை அங்கீகரித்து அவர்களை ஆசீர்வதிப்பதில் தேவன் உண்மையுள்ளவர்.* கர்த்தருடைய வாக்குத்தத்தங்களைப் பெற்றிருக்கும் விசுவாசிகள், தங்களைப்போல வாக்குத்தத்தங்களைப் பெற்றிருக்கும் மற்ற விசுவாசிகளையும் உற்சாகப்படுத்த வேண்டும். *"கர்த்தர் நமக்கு நன்மை செய்வதுபோலவே, மற்ற விசுவாசிகளுக்கும் நன்மை செய்வார் என்னும் மனப்பக்குவம் நமக்குள் வளரவேண்டும்."* (தொடரும்)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

31 Dec, 13:12


*புத்தாண்டு பரிசாக, இந்த மொபைல் app உங்களுக்கு...*

https://youtu.be/BlVpBrpTqJk?si=ZV8DX7USD6GQMqKn

Tamil BIBLE SECRETS

31 Dec, 01:35


லூக்கா (12) : *கர்ப்பத்தில் ஒரு துள்ளல்...*

*"அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய், சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள். எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, "அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று"; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு..."* (லுக்கா 1:39-41)

கர்த்தருடைய அனுக்கிரகத்தினால், மரியாளும் எலிசபெத்தும், இப்போது கர்ப்பவதிகளாக இருக்கிறார்கள். இவ்விரண்டு கர்ப்பவதிகளும் சந்தித்துப் பேசுகிறார்கள். *நல்லவர்களை ஒன்று சேர்ப்பது மிகச் சிறந்த ஊழியம்.* நல்லவர்கள் ஒன்று சேரும்போது அது அவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருக்கும், அவர்கள் மூலமாக மற்றவர்களும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வார்கள்.

மரியாள் எழுந்து எலிசபெத்தைப் பார்க்கப் புறப்பட்டுப் போகிறாள். தன்னுடைய வீட்டு வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு, அதைவிட முக்கியமான வேலையைக் கவனிப்பதற்காக மரியாள் அந்நாட்களில், அந்தக் குறிப்பிட்ட வேளையில் புறப்பட்டுப்போகிறாள். மிகுந்த கவனமாகவும், வேகமாகவும், தீவிரமாகவும், எதிர்பார்ப்போடும் மரியாள் புறப்பட்டுப்போகிறாள். மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்கு மரியாள் தீவிரமாய் போகிறாள். பிரயாண தூரம் அதிகம். இருந்தாலும் மரியாள் சோர்ந்துபோகாமல் தீவிரமாகப் பிரயாணம் பண்ணுகிறாள்.

தன்னுடைய விசுவாசத்தை உறுதிபண்ணுவதற்காகவும், தன்னுடைய இனத்தாளாகிய எலிசபெத்தின் சந்தோஷத்தில் பங்குபெறுவதற்காகவும் மரியாள் மலைநாட்டிலே யூதாவிலுள்ள அந்தப் பட்டணத்திற்குப் போகிறாள். *மரியாளுக்கு இப்போது ஆவிக்குரிய துணை தேவைப்படுகிறது.* நாசரேத்தில் மரியாளுக்கு உற்றார் உறவினர்களும், சிநேகிதர்களும் இருக்கிறார்கள். *ஆனால் அவர்கள் தேவனிடத்தில் மரியாள் பெற்றிருக்கும் கிருபையை பூரணமாக புரிந்துகொள்ள மாட்டார்கள். தன்னுடைய நிலமையை நன்றாக புரிந்து கொள்ளும் துணை மரியாளுக்கு தேவைப்படுகிறது.* (அந்த ஐக்கியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மரியாள் ஒருவேளை எலிசபெத்தைப் பார்ப்பதற்கு மலை தேசத்து பட்டணத்திற்கு தீவிரமாய் புறப்பட்டுப் போயிருக்கலாம்.)

கர்த்தருடைய தூதன் தனக்குச் சொன்ன செய்திகளை மரியாள் நாசரேத்திலுள்ள ஜனங்களுக்கு தெரியப்படுத்தினாளா என்பது தெரியவில்லை. இதைப்பற்றி பேசவேண்டும் என்னும் விருப்பம் அவளுக்கு இருந்திருக்கலாம். ஆயினும் பலவிதமான எண்ணங்கள் மரியாளின் உள்ளத்தில் குழப்பத்தை உண்டுபண்ணின படியினால், *அவள் தன்னுடைய நிலமையைப்பற்றி மற்றவர்களிடம் பேசாமல் அமைதியாக இருக்கிறாள். எலிசபெத்தைத் தவிர வேறு யாரிடமும் தன்னைப்பற்றி பேசமுடியாது என்றும், பேசினாலும் அவர்கள் தன்னை சரியாக புரிந்துகொள்ளமாட்டார்கள் என்றும் மரியாள் நினைக்கிறாள். ஆகையினால் மரியாள் எலிசபெத்தை சந்திப்பதற்காக தீவிரமாய் புறப்பட்டுப் போகிறாள்.*

நம்முடைய ஆத்துமாக்களில் தேவனுடைய கிருபை கிரியை செய்யும்போது, நம்மைப் போன்ற சகவிசுவாசிகளிடம் ஐக்கியம் வைத்துக்கொள்ள வேண்டும். தேவன் நமக்கு கொடுத்திருக்கும் கிருபையைப்போல வேறு யாருக்கு கொடுத்திருக்கிறார் என்று தேடிப்பார்த்து அவர்களிடம் ஐக்கியமாக இருப்பது நமக்கு நல்லது. *விசுவாசிகள் ஒருமித்து வாசம்பண்ணும்போது மனதிற்கு ஆறுதலாகவும் இன்பமாகவும் இருக்கும்.*

மரியாள் சகரியாவின் வீட்டிற்குள் பிரவேசிக்கிறாள். அங்கிருந்த எலிசபெத்தை வாழ்த்துகிறாள். எலிசபெத்தின் சந்தோஷத்தில் தானும் பங்குபெறுவதற்காக, மரியாள் இங்கு வந்திருக்கிறாள். *மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, எலிசபெத்துடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று.* கர்ப்பவதிகள் தங்கள் கர்ப்பத்திலிருக்கும் குழந்தையின் அசைவைப் புரிந்துகொள்வார்கள். ஆனால் *மரியாள் வாழ்த்தியபோது எலிசபெத்தின் வயிற்றிலிருந்த பிள்ளை சாதாரணமாக அசையாமல், அது துள்ளுகிறது. கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ண வந்திருக்கும். அந்தப் பிள்ளை இப்போதே ஆயத்தமாக இருக்கிறது.*

மரியாளின் வாழ்த்துதலைக்கேட்டு, எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்படுகிறாள். தீர்க்கதரிசன வார்த்தைகளைப் பேசுகிறாள். *மேசியாவின் பிறப்பு சமீபத்திலிருக்கிறது என்பதை எலிசபெத்து தீர்க்கதரிசனமாக அறிவிக்கிறாள்.* தன் வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளியதை உணர்ந்து, தனக்கு நடைபெறுவது தெய்வீக காரியம் என்பதை எலிசபெத்து புரிந்து கொள்கிறாள். இதைத் தொடர்ந்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை தீர்க்கதரிசனமாக அறிவிக்கிறாள்.(தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

30 Dec, 02:44


*லூக்கா* (11) : *"அவர் பெரியவராயிருப்பார்..."*

*"இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்."* (லூக் 1:31#33).

தேவதூதன் மரியாளுக்கு தரிசனங்கொடுக்கும்போது அவள் கன்னிகையாக இருக்கிறாள். அவளைப் பார்த்து *நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்* என்று தேவதூதன் கர்த்தருடைய வார்த்தையை அறிவிக்கிறான். மரியாள் கன்னிகையாக இருக்கும்போதே கர்ப்பவதியாக ஆகும் சிலாக்கியத்தைப் பெற்றுக்கொள்கிறாள். அவள் பெறும் குமாரனுக்கு *"இயேசு என்று பேரிடுவாயாக"* என்றும் தேவதூதன் கூறுகிறான்.

மரியாள் ஏழையாக இருந்தாலும் தேவனிடத்தில் அவள் கிருபை பெற்றிருக்கிறாள். மேசியாவுக்கு தாயாராக இருக்கும் சிலாக்கியம் மரியாளுக்கு கிடைக்கிறது. கன்னி மரியாளின் வயிற்றில் உற்பத்தியாயிருக்கும் *"இயேசு பெரியவராகயிருப்பார். அவர் உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார். கர்த்தருடைய பிள்ளைகளெல்லோரும் மெய்யாகவே பெரியவர்கள்தான்."*

நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்கு பராட்டின அன்பு மிகவும் பெரிது. "இப்பொழுது நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். இனி எவ்விதமாய் இருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. ஆகிலும் *"அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்போம். ஆகையினால் நாம் அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்."* (1யோவா 3:1,2).

கன்னி மரியாளின் வயிற்றில் பிறக்கும் இயேசுகிறிஸ்து பரலோகத்தில் பெரியவராக இருப்பார். அதே சமயத்தில் அவர் பூமியிலும் மிகவும் உயர்ந்தவராக இருப்பார். அவர் ஊழியக்காரராக இந்த பூமியில் அவதரித்த போதிலும், கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். யூதஜனங்கள் இயேசுகிறிஸ்துவுக்கு சிங்காசனத்தைக் கொடுக்கவில்லை. ஆனால் கர்த்தரோ அவர்களை ஆளுகை செய்யும் சர்வ அதிகாரத்தை இயேசுகிறிஸ்துவுக்கு கொடுக்கிறார். சீயோன் மலையில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து ராஜாதி ராஜாவாக, சர்வ ஜனங்களையும் ராஜரீகம் பண்ணுவார்.

இயேசுகிறிஸ்துவின் ராஜ்யம் பூமிக்குரியதல்ல. அது ஆவிக்குரியது. அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார். அவருடைய ராஜ்யத்திற்கு முடிவிராது. இந்த உலகத்தில் ஏராளமான ராஜ்யங்கள் தோன்றியுள்ளன. அவையெல்லாமே முடிந்துபோகும். ஆனால் இயேசுகிறிஸ்துவின் ராஜ்யமோ நித்தியமானது. *அவருடைய ராஜ்யத்திற்கு முடிவு இராது.*

இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான்கு சுவிசேஷங்களிலும் நான்கு முக்கியமான சத்தியங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவற்றை இந்த வசனம் தெளிவாகக் கூறுகிறது.

1. நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய் #"இதோ அந்த மனுஷன்" # லூக்காவின் விளக்கம்.

2. அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக # 'இதோ என் தாசன்* # மாற்குவின் விளக்கம்

3. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார் # ""இதோ உன் தேவன்* # யோவானின் விளக்கம்.

4. அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார் #""இதோ உன் ராஜா" # மத்தேயுவின் விளக்கம். (தொடரும்)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

28 Dec, 01:56


லூக்கா 10: *"கிருபை பெற்றவள்!"*

"அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: *கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்* என்றான். அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, *இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ* என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள். தேவதூதன் அவளை நோக்கி: *மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்."* (லூக்கா 1:28-30)

நாசரேத்து என்னும் ஊரில், கன்னிகையாகிய மரியாள் இருக்கும் வீட்டில், தேவதூதன் பிரவேசிக்கிறான். அவள் எதிர்பாராத விதமாக *கிருபை பெற்றவளே, வாழ்க* என்று கூறி வாழ்த்துகிறான். இந்த வார்த்தையைக் கேட்கும்போது, அவளுடைய விசுவாசம் உறுதிப்பட்டிருக்கவேண்டும். தேவன் தனக்கு காண்பித்திருக்கும் கிருபையை நினைத்து, மரியாள் சந்தோஷமடைந்திருப்பாள். "அவள் சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்தவளாக இருந்தாலும், அவள் கர்த்தருடைய கிருபையைப் பெற்றிருக்கிறாள்." *மரியாளைப்போல நாமும் சாதாரணமானவர்களாக இருந்தாலும், கர்த்தருடைய கிருபையைப் பெற்றுக்கொள்வதற்கு நமக்கும் வாய்ப்புள்ளது.*

மரியாளுக்கு கிடைத்திருக்கும் வாழ்த்து பரலோகத்திலிருந்து வந்திருக்கும் வாழ்த்தாகும். இது நற்செய்தியோடுகூடிய வாழ்த்து. சாதாரணமாக நாம் ஒருவரை வாழ்த்தும்போது "வாழ்க" என்று கூறி வாழ்த்துவோம். அதுபோலவே தேவதூதன் மரியாளை "வாழ்க' என்று கூறியும் வாழ்த்துகிறான். ஆயினும் தேவதூதனுடைய வாழ்த்துதலில் ஒரு விசேஷித்த முக்கியத்துவம் இருக்கிறது. தேவதூதன் அவளை "கிருபை பெற்றவளே என்று கூறியும் வாழ்த்துகிறான். மேசியாவுக்கு தாயாக இருக்கும் சிலாக்கியத்தை கர்த்தர் கன்னிகையாகிய மரியாளுக்கு கொடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட சிலாக்கியம் மரியாளுக்கு கிடைத்திருப்பதினால் அவள் கிருபை பெற்றவளாக இருக்கிறாள்.

கர்த்தர் மரியாளுடனே கூடயிருக்கிறார். கர்த்தருடைய சமுகம் அவளோடு கூடயிருக்கிறது. *தேவன் நம்மோடு கூடயிருக்கும்போது தேவனுடைய கிருபை நமக்கு கிடைக்கும்.* கர்த்தர் நம்மோடு கூடயிருக்கும்போது அந்தகார வல்லமை எதுவும் நம்மை மேற்கொள்ளாது. *கர்த்தர் நம்மோடே கூடயிருப்பது நமக்கு கிடைத்திருக்கும் சிலாக்கியம்.*

மரியாள் ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள். மரியாள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதுபோலவே, அவள் மூலமாக எல்லா சந்ததிகளும் ஆசீர்வதிக்கப்படும். *கர்த்தர் மரியாளின் தாழ்மையை நோக்கிப் பார்த்திருக்கிறார். இது முதல் எல்லா சந்ததிகளும் அவளை பாக்கியவதி என்பார்கள்.* (லூக் 1:48). "கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கும்போது மற்றவர்களும் நம்மை ஆசீர்வதிப்பார்கள். நாமும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்போம்."

ஆனால், மரியாள் தேவதூதனைக்கண்டு, அவன் வார்த்தையினால் கலங்குகிறாள். தேவதூதன் கூறிய மிகப்பெரிய ஆசீர்வாதத்திற்கு, தான் தகுதியற்றவள் என்னும் சிந்தனை அவளுடைய மனதில் ஏற்பட்டிருக்கலாம். தேவதூதனுடைய வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று மரியாள் சிந்தித்துக்கொண்டிருக்கிறாள். இந்த வாழ்த்துதல் பரலோகத்திலிருந்து வந்திருக்கிறதா அல்லது இது மனுஷருடைய வார்த்தையா என்று சிந்தித்து கலங்குகிறாள்.

கலக்கத்தில் இரண்டு வகை உள்ளது. ஒன்று முழுவதுமாகக் கலங்குதல். மற்றொன்று ஓரளவு கலங்குதல். இந்த வாக்கியத்தில் முழுவதுமாகக் கலங்குதல் என்று பொருள்படும் "டையடராசோ" என்னும்கிரேக்கச் சொல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. (ஓரளவு கலங்குதல் என்னும் பொருளைத் தரும் கிரேக்கச்சொல் "தராசோ".)

மரியாளின் சிந்தனையையும், கலக்கத்தையும் தேவதூதன் அறிந்து வைத்திருக்கிறான். தேவதூதனுடைய வார்த்தைக்கு மரியாள் ஒரு பதிலும் கூறவில்லை. அந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்து கலங்குகிறாள். மரியாள் பதில் பேசாததினால், அவளுடைய பயத்தைப் போக்குவதற்காக, தேவதூதன் அவளிடம் *"மரியாளே, பயப்படாதே"* என்று கூறுகிறான். மரியாள் தேவனிடத்தில் கிருபை பெற்றிருக்கிறாள். *பல வேளைகளில், நம்மைப்பற்றி நாம் நினைப்பதற்கும் அதிகமாக, தேவன் நம்மீது அன்புகூருகிறார். நாம் எதிர்பாராத அளவிற்கும் அதிகமாக, தேவன் தமது கிருபையை நமக்கு கொடுக்கிறார்.* தேவனுடைய கிருபையை நமது சுயமுயற்சியினால் பெற முடியாது. அவர் தாமாகவே மனமிரங்கி நமக்கு கிருபை தருகிறார். *"தேவனுடைய கிருபை நம்மோடுகூட இருக்கும்போது நமக்கு விரோதமாக யாரும் எழும்பி வரமுடியாது. தேவன் நமக்கு கொடுக்க விரும்பும் கிருபையை யாராலும் தடைபண்ணவும் முடியாது."* (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

27 Dec, 01:55


"லூக்கா -9": *"உயர்த்தப்பட்ட மரியாள்!"*

*"ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில்,
தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள்."* (லூக்கா 1:26-27)

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய பிறப்பைப்பற்றிய செய்தி இங்கு முன்னறிவிக்கப்படுகிறது. சகரியாவுக்கு தேவனுடைய செய்தியை அறிவித்த, அதே தூதனாகிய காபிரியேல் என்பவனே, இங்கு இயேசுகிறிஸ்துவின் பிறப்பையும் முன்னறிவிக்கிறான். "மகிமையுள்ள மீட்பின் ஊழியம் தொடர்ந்து நடைபெறுகிறது." கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணுவதற்காக இந்த உலகத்தில் யோவான்ஸ்நானன் பிறந்தார். மனுக்குலத்திற்கு மீட்பை உண்டுபண்ணுவதற்காக, இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் அவதரித்து, கல்வாரி சிலுவையில் தமது இரத்தத்தையே மீட்பின் கிரயமாக செலுத்தினார்.

இயேசுகிறிஸ்துவினுடைய தாயாரின் பெயர் மரியாள். பழைய ஏற்பாட்டில் மோசே, ஆரோன் ஆகியோரின் சகோதரியின் பெயர் மிரியாம் என்பதாகும். *எபிரெய பாஷையில் மிரியாம் என்னும் பெயரே, புதிய ஏற்பாட்டு கிரேக்க பாஷையில் மரியாள்* என அழைக்கப்படுகிறது. இந்தப் பெயருக்கு *உயர்த்தப்பட்டவர்* என்று பொருள்.

மரியாள் ஏழையாக இருந்தாலும், அவள் இஸ்ரவேலின் ராஜவம்சத்தைச் சேர்ந்தவள். தாவீதின் வம்சத்தில் இவள் பிறந்திருக்கிறாள். இவள் தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பது அவளுக்கும், அவளுடைய சிநேகிதரில் அனைவருக்கும் தெரியும். பழைய ஏற்பாட்டில் கர்த்தர் வாக்குப்பண்ணின பிரகாரமாக தாவீதின் வம்சத்தில் மேசியா வருகிறார். தேவனுடைய தெய்வீக பராமரிப்பின் பிரகாரம் யூதருடைய பரிசுத்தமான சந்ததி பாதுகாக்கப்பட்டு வருகிறது. யூதர்களும் தாங்கள் எந்த சந்ததியை சேர்ந்தவர்கள் என்பதை, மறந்து போகாமல் நினைவில் வைத்திருப்பது வழக்கம்.

ஒருசிலர் இந்த பூமியில் தாழ்மையானவர்களாக இருக்கலாம். இவர்கள்மீதும் இருந்தாலும் தேவனுடைய மகிமை வந்திறங்கலாம். தாவீதின் வம்சத்தைச் சேர்ந்தவர்களில் பலர் இப்போது சாதாரண ஏழைகளாக இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் தங்களை தாவீதின் குடும்பத்தார் என்று கூறி ஆறுதலடைகிறார்கள். அதுபோலவே மரியாளும் சாதாரண ஏழையாக இருந்தாலும், இவளும் தாவீதின் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவளாக இருக்கிறாள்.

மரியாள் கன்னியாக இருக்கிறாள். தன்னைப் போலவே, தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு கன்னிகையாகிய இந்த மரியாள் நியமிக்கப்பட்டிருக்கிறாள். இவளைப்போலவே யோசேப்பும், தாவீதின் வம்சத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், சாதாரண ஏழையாகவே இருக்கிறார். இவர் தாவீதின் குமாரன் என்று அழைக்கப்படுகிறார் (மத் 1:20).

இயேசுகிறிஸ்துவின் தாயார் ஒரு கன்னிகையாக இருக்கிறாள். இவள் யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறாள். இன்னும் திருமணம் நடைபெறவில்லை. திருமணத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கும் காலத்திலேயே இயேசுகிறிஸ்து கன்னிமரியாளின் கர்ப்பத்தில் உருவாகிறார். கர்த்தர் திருமண உறவை அங்கீகரிப்பதினால், யோசேப்பும் மரியாளும் திருமணத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கும் சம்பவம் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கன்னிகையாகிய மரியாள், நாசரேத்து என்னும் ஊரில் தங்கியிருக்கிறாள். இந்த ஊர் கலிலேயாவிலுள்ளது. யூதேயா தேசத்தின் ஒரு மூலையில் இந்தப் பிரதேசம் அமைந்திருக்கிறது. எருசலேமைப்போல மார்க்க காரியங்களில் இந்த ஊர் முக்கியத்துவம் பெற்றதல்ல. கற்றுத் தேறின பண்டிதர்களும் இந்த ஊரில் அதிகமில்லை. புறஜாதியார் தேசத்திற்கு அருகாமையில் கலிலேயா அமைந்திருக்கிறது. ஆகையினால் இது "புறஜாதியாரின் கலிலேயா" என அழைக்கப்படுகிறது. கர்த்தருடைய தூதனானவர், நாசரேத்து ஊரிலிருந்த மரியாளை சந்திப்பதற்காக வருகிறார். *கர்த்தருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நமக்கு தூரமும், நாம் இருக்கும் இடமும், ஒரு தடையாக இருக்காது.*

ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன் மரியாளிடத்திற்கு அனுப்பப்பட்டான். இந்த சம்பவம், எலிசபெத்து கர்ப்பவதியாகி ஆறு மாதத்திற்குப் பின்பு நடைபெறுகிறது. (லூக்கா 1:36) இதன் பிரகாரம் யோவான் ஸ்நானன் இயேசு கிறிஸ்துவைவிட ஆறு மாதங்கள் வயதில் மூத்தவர். "நாசரேத்து" இயேசு கிறிஸ்து வளர்ந்த ஊர். (லூக்கா 2:39; லூக்கா 4:23; மத் 13:54).

மரியாள் கன்னிகையாக இருந்தாள். ஏசா 7:14#இல் கூறப்பட்டிருக்கிற கிரேக்கச்சொல் "அல்மா', புதிய ஏற்பாட்டில் கன்னிகை என்று பொருள்படும் கிரேக்கச்சொல் "பர்த்தினோஸ்" ஆகும். புருஷனை அறியாதவள், இதுவரையிலும் சரீரப்பிரகாரமாக உடலுறவில் ஈடுபடாதவள் என்று பொருள். மரியாள் புருஷனை அறியாதவள் (லூக்கா 1:34). (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

26 Dec, 01:48


*"அவிசுவாச நேரத்தில், ஆண்டவரின் வல்லமை!"*
(லூக்கா -8)

*அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; "நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே" என்றான். தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: "நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்;" உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்...* (லூக்கா 1:18-19)

கர்த்தருடைய தூதன் முன்னறிவித்த முக்கியமான செய்தியை, சகரியா விசுவாசிக்கவில்லை. "இதை நான் எதினால் அறிவேன்" என்று அவிசுவாசத்தோடு சகரியா தூதனிடம் கேட்கிறார். *பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பல சம்பவங்களில் வயதான ஸ்திரீகளுக்கு குழந்தை பிறந்திருக்கிறது. பழைய சம்பவங்களை நினைத்துப் பார்த்து சகரியா தன் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.* ஆனால் சகரியாவோ அவிசுவாசம் மிகுந்து, "நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயது சென்றவளாயிருக்கிறாளே" என்று கூறுகிறார். கர்த்தருடைய தூதன் சொன்னதை தான் நம்பவேண்டுமென்றால் தனக்கு ஒரு அடையாளம் கொடுக்கப்பட வேண்டுமென்றும், இல்லையென்றால் அதை தன்னால் நம்ப இயலாது என்றும் அறிவித்துவிடுகிறார்.

கர்த்தருடைய வார்த்தை சகரியாவுக்கு, தேவாலயத்தில் இருக்கும்போது வருகிறது; ஜெபிக்கும்போது வருகிறது; தூபங்காட்டும்போது வருகிறது. கர்த்தருடைய சர்வல்லமையை விசுவாசித்துத்தான் சகரியா தேவாலயத்தில் கர்த்தருக்காக ஊழியம் செய்கிறார். *தேவனால் கூடாதகாரியம் ஒன்றுமில்லையென்று ஊழியக்காரர்கள் விசுவாசிக்க வேண்டும்.* சகரியாவும் கர்த்தரை விசுவாசிக்கிறார். ஆனால், தனக்கு கூறப்பட்ட கர்த்தருடைய வார்த்தையை விசுவாசிக்கவில்லை. "தன்னுடைய சொந்த சரீரத்தின் பலவீனத்தையும், தன் மனைவியினுடைய சரீரத்தின் பலவீனத்தையும் நினைத்துப் பார்த்து கர்த்தருடைய வார்த்தையை சித்திப்பதற்கு வாய்ப்பில்லை என்று முடிவு பண்ணிவிடுகிறார்". *ஆபிரகாமின் குமாரனாக இருக்கிறவர்கள், கர்த்தருடைய வார்த்தையையும் அவருடைய வாக்குத்தத்தையும் விசுவாசிக்க வேண்டும். விசுவாசியாமல் தேவனுக்குப் பிரிமாயிருப்பது கூடாதகாரியம்.*

தனக்கு வயதான காரணத்தினால் இனிமேல் பிள்ளை பெறும் சிலாக்கியம் தனக்கு இல்லை என்று சகரியா நினைத்தான். ஆகையினால் இந்தக் கேள்வியைக் கேட்கிறான். மரியாளுக்கோ திருமணம் ஆவதற்கு முன்பாகவே பிள்ளையைப்பெறவேண்டிய வாய்ப்பு வருகிறது. (லூக்கா 1:34) ஆக, *சகரியாவைக் காட்டிலும், இன்னும் அதிகமாக, மரியாள் விசுவாசிக்க வேண்டியிருக்கிறது.*

*"உண்மையில், நம்பவே முடியாத நேரங்களில், நாம் தேவனிடத்தில் வைக்கும் பெரிய விசுவாசம், பெரிய காரியங்களை செய்கிறது!"* "நம்முடைய அவிசுவாசமான நேரங்களில், தேவனுடைய வல்லமை அதனை சரி செய்கிறது."

*நான் காபிரியேல்...* : கர்த்தருடைய தூதன் சகரியாவின் வாயை அடைக்கிறார். இதை நான் எதினால் அறிவேன் என்று சகரியா கேட்டார். "நான் காபிரியேல்" என்பதை சகரியா அறிந்து கொள்வதற்காக அவனுடைய வாய் அடைக்கப்படுகிறது. காபிரியேல் என்னும் பெயருக்கு *தேவனுடைய வல்லமை* அல்லது *தேவனுடைய வல்லமையானவர்* என்பது பொருள். இந்தக் காபிரியேல் தேவசந்நிதானத்தில் நிற்கிறவர். சகரியாவுடன் பேசவும், அவருக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் காபிரியேல் அனுப்பப்பட்டு இங்கு வந்திருக்கிறார். "இந்த நற்செய்தியை சகரியா முழுமனதோடும், சந்தோஷத்தோடும் ஏற்றுக்கொள்ள வேண்டும்."

காபிரியேல், தானியேலிடம் வந்த அதே தூதன் (தானி 8:16; தானி 9:21) மரியாளிடம் அனுப்பப்பட்டவன் (லூக்கா 1:26) வேதாகமத்தில் நான்கு தூதர்களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கிறது. அவர்களில் இரண்டு பேர் விழுந்துபோன தூதர்களான லூசிபரும், அபத்தோனும். மற்ற இருவரும் நல்ல தூதர்கள். அவர்களின் பெயர் மிகாவேல், காபிரியேல். (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________

Tamil BIBLE SECRETS

25 Dec, 14:37


யோசபஸ் என்ற திருச்சபை வரலாற்று ஆசிரியர் யோவான்ஸ்நான்னுடைய ஊழியத்தைப் பற்றிக் கூறும்போது, "யோவான்ஸ்நானன் மிகவும் நல்லவன். தேவனிடத்தில் பக்தியாக இருக்க வேண்டுமென்றும், ஒருவருக்கொருவர் ஐக்கியமாகவும் நீதியாகவும் இருக்க வேண்டுமென்றும் யோவான்ஸ்நானன் உபதேசம்பண்ணினான்" என்று கூறுகிறார். யோவான்ஸ்நானன் பிதாக்களுடைய இருதயங்களையும், பிள்ளைகளுடைய இருதயங்களையும் தேவனிடத்திற்கும், ஒருவரோடொருவரிடத்திற்கும் திருப்பினான். கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்குத் திருப்பினார்.

நீதிமான்களுடைய ஞானமே மெய்யான மார்க்கமாகும். நாம் கர்த்தருக்கு செவிகொடுத்து அவருடைய கற்பனைக்கு கீழ்ப்படியவேண்டும் என்பது நமது கடமை. இதுவே நீதிமான்களுடைய ஞானம், கீழ்ப்படியாதவர்களும், அவிசுவாசிகளும் நீதிமான்களுடைய ஞானத்திற்கு திரும்பி வருவதற்கு வாய்ப்புள்ளது. தேவனுடைய கிருபை நமது அறியாமையை அகற்றும். சுயபெருமையை நீக்கும்.

"தேவனுடைய வீட்டிற்கு ஜனங்களை அழைத்து வருவதே சுவிசேஷத்தின் அடிப்படைத் திட்டம்." விசுவாசிகள் தேவனுடைய வீட்டிற்கு வரும்போது அவர்கள் மற்ற விசுவாசிகளோடு ஒருவருக்கொருவர் நெருங்கிய ஐக்கியத்தில் இருப்பார்கள். இதன் மூலமாக உத்தமமான ஜனம் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தப்படுவார்கள். உத்தமமானவர்கள் கர்த்தரிடத்தில் சந்தோஷமாக இருப்பார்கள். அவர்கள் கர்த்தரை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருப்பார்கள். "ஜனங்களை கிறிஸ்துவிடம் வருவதற்கு ஆயத்தப்படுத்துவது ஒரு உன்னதமான ஊழியம்", மனந்திரும்புதலின் உபதேசத்தை அவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை இயேசுகிறிஸ்துவிடம் அழைத்து வரவேண்டும். *இயேசுகிறிஸ்துவிடம் வரும்போது நம்முடைய பாவங்களெல்லாம் நமக்கு அருவருப்பாக இருக்கும். இயேசுகிறிஸ்துவோ நமக்கு விசேஷித்தவராக, விலையேறப்பெற்றவராக இருப்பார்.* (தொடரும்!)
_______
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________