📚 நூல் அரங்கம் @noolarangam Channel on Telegram

📚 நூல் அரங்கம்

@noolarangam


தமிழ் நாவல்கள் | கதைகள் | அனைத்து நூல்களும் இலவச பதிவிறக்கம்.

@NoolArangam

📚 நூல் அரங்கம் (Tamil)

📚 நூல் அரங்கம் சேனல், தமிழ் மொழியில் நாவல்கள், கதைகள், புதிய இதழ்கள் மற்றும் இலவச நூல்கள் பற்றிய அற்புதமான அறிக்கைகள் அடங்கும் இடம். இதன் மூலம், நூல் உற்பொருளங்களை அடிப்படையாகக் கண்களில் கொண்டுகொள்ள முடியும். நூல் அரங்கம் சேனலில், புதிய நாவல்கள் மற்றும் கதைகளை உங்கள் மகிழ்ச்சிக்கு உட்கார்ந்து நீங்கள் பிடித்துக் கொள்ளலாம். இது எப்படி உங்கள் அனைத்து நூல்களையும் ஒரு இடத்தில் கொண்டுவைக்கும் ஆக்கம். @NoolArangam சேனலை உங்கள் நண்பர்களுடன் பகிரவும், உங்கள் அனுபவங்களை பகிரவும், மற்றும் நூல்களின் பரிமாற்றங்களை அறிந்து கொள்ளவும். நூல் அரங்கம் சேனல் உங்களை நல்ல அறிக்கையை நீங்கள் பெற உதவும்!

📚 நூல் அரங்கம்

27 Nov, 15:48


நிலவுக்கு ஏன் கோபம் - இந்திரா செல்வம்
http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_46.html

தேன் நிலா அம்சம் நீயோ - ஜவின்
http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_17.html

இந்திய நேரம் 2 AM துருப்புச் சீட்டு - பட்டுக்கோட்டை பிரபாகர்
http://tamilbookspdff.blogspot.com/2024/11/2-am.html

உன்னிடம் மயங்குகிறேன் - அருணா ஹரி
http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_95.html

சின்னப் பூவே மெல்லப் பேசு - ரம்யா
http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_77.html

தென்றலென வந்தவளே- விஜி பிரபு
http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_7.html

கல்லில் வடிக்காத சிற்பங்கள் - சி வி இந்திராணி
http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_79.html

பந்தநல்லூர் பாமா - கொத்தமங்கலம் சுப்பு
http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_40.html

இதோ ஓர் இதயம் - லக்ஷ்மி
http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_78.html

வானவில்லே வண்ண நிலவே - அருணா ஹரி
http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_51.html

📚 நூல் அரங்கம்

27 Nov, 15:23


துங்கபத்திரை - எஸ் எஸ் தென்னரசு

வரலாற்று நாவலாகக் கருதப்படும் துங்கபத்திரை என்னும் இந்நாவல் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் உச்ச நிலையான மைய காலத்தையும், பாண்டிய மண்டலத்தின் நாயக்க வம்சத்தின் தொடக்கக் காலத்தையும் இணைக்கும் வரலாற்றுப் புதினமாக உள்ளது. கிருஷ்ணதேவராயருடைய மகள் துங்கப்பத்திரை. துங்கபத்திரை என்பது விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் வட எல்லையாகவும், முகமதிய சாம்ராஜ்ஜியத்தின் தென் எல்லையாகவும் அமைந்த ஜீவநதி. அதன் மீது எப்பொழுதும் கவனமாக இருக்கவேண்டும் என்பதை நினைவூட்டவே கிருஷ்ணதேவராயர் தம் மகளுக்கு துங்கபத்திரை எனப்பெயரிட்டார் என்பது செய்தி.
விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் இளவரசி துங்க பத்திரைக்கு, மதுரை நாயக்க சாம்ராஜ்ஜியத்தின் மன்னன் துணையாயிருந்து மதுரைச் சிம்மாசனத்தை அலங்கரித்தான் என்பதுதான் கதை. ஆசிரியர் எஸ்.எஸ். தென்னரசு அவர்கள் வரலாற்று நிகழ்வுகளை மிகக் கவனமாக கையாண்டு கற்பனைப் புனைவுகளுடன் கதையினைச் சிறப்பாக எழுதியுள்ளார்.

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_0.html

📚 நூல் அரங்கம்

27 Nov, 14:43


பூஞ்சோலைக் கிளிகள் - சத்யா இராஜ்குமார்

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_86.html

📚 நூல் அரங்கம்

26 Nov, 08:06


TNPSC GROUP-II,IIA Revision Question Bank-1-10TNPSC குரூப்-2,2ஏ: திருப்புதல் வினா வங்கி-1-10

http://tamilbookspdff.blogspot.com/2024/11/tnpsc-group-iiiia-revision-question_26.html

📚 நூல் அரங்கம்

24 Nov, 16:53


TNPSC GROUP-II,IIA Revision Question Bank-4

TNPSC குரூப்-2,2ஏ: திருப்புதல் வினா வங்கி-4

பள்ளிப்பாட புத்தகத்திலிருந்து அறிவியல் (இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல்) குறிப்புகள் அனைத்து TNPSC குரூப் தேர்வுகளுக்கும் பயன்படும் வகையில் நித்ராவின் TNPSC குழுவினரால் ஆராய்ந்து தொகுக்கப்பட்டுள்ளது. 6 முதல் 10-ஆம் வரையிலான வகுப்பு வரையிலான முக்கிய குறிப்புகளை மட்டும் தொகுத்து, நீங்கள் அரசு வேலைக்கு எளிதாக பயிற்சி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட நித்ராவின் TNPSC பொது அறிவியல் (இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல்) புத்தகத்தை வாங்கி பயிற்சி செய்யுங்கள்.

http://tamilbookspdff.blogspot.com/2024/11/tnpsc-group-iiiia-revision-question.html

📚 நூல் அரங்கம்

24 Nov, 15:02


அபாயகரம் பா ராகவன்
இந்தப் புத்தகத்தில் உள்ள ஏதேனும் ஒரு வரி அல்லது ஒரு சில வரிகள் உங்களுக்குக் கவிதை போலத் தோன்றிவிடுமானால் அது பிழை. இது கவிதைத் தொகுப்பல்ல. கவிதை எழுத முயற்சி செய்த ஒருவனின் தோல்விச் சான்றுகள் மட்டுமே.

எழுத்தின் அனைத்து சாத்தியங்களையும் முயற்சி செய்து பார்க்கவேண்டும் என்பது என் விருப்பம். சிறுகதை, நாவல், கட்டுரை, சில பா வகைகள் (வெண்பா, ஆசிரியப்பா, விருத்தங்கள்) நாடகம், திரைக்கதை இவையெல்லாம் நான் முயற்சி செய்து, ஓரளவு வசப்பட்ட வடிவங்கள். இந்த நவீன கவிதை மட்டும் இன்றுவரை ஆட்டம் காட்டிக்கொண்டேதான் இருக்கிறது.
http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_75.html

📚 நூல் அரங்கம்

24 Nov, 14:58


மண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை - பா ராகவன்

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_76.html

📚 நூல் அரங்கம்

24 Nov, 14:50


நிழலற்றவன் - பா ராகவன்

இத்தொகுப்பில் உள்ள முப்பது கதைகளும் வேறு வேறு கருப்பொருள்களால் ஆனவை என்றாலும் இக்கதைகளின் தொனி, ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் குரலைப் பிரதிபலிப்பதைக் காணலாம்.

ஒரு கொள்ளை நோய் 2020ம் ஆண்டைத் தன் வசப்படுத்தி உலக மக்களை வீடொடுங்கிக் கிடக்கச் செய்யும் என்று யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள். சுமார் நூறு தினங்கள் அப்படி அடங்கியிருந்த நாள்களில் எழுதிய கதைகள் இவை. நோய்க் கிருமி குறித்த அச்சமும் அதன் பரவல் குறித்த பதற்றமும் குறையாமல் நமது செய்தி நிறுவனங்கள் பார்த்துக்கொண்டன. ஒவ்வொரு நாள் மனநிலையையும் அப்பதற்றமே வடிவமைத்தது. கிருமியிடமிருந்து தப்பிக்க வீட்டில் இருந்தால் போதும். பதற்றத்தில் இருந்து தப்பிக்க ஒரு பதுங்கு குழி வேண்டியிருக்கிறது. இக்கதைகள் அத்தகைய பதுங்கு குழிகளாக இருந்தவை.

எளிய நகைச்சுவைக் கதைகள் முதல் தீவிரமான தத்துவ முடிச்சுகளை அவிழ்க்கப் பார்க்கும் கதைகள் வரை பலதரப்பட்டவை இத்தொகுப்பில் உண்டு.

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_61.html

📚 நூல் அரங்கம்

24 Nov, 14:46


ஜன கண மன - மாலன்

காந்தியின் கொலைக்குப் பின்னால் உள்ள அரசியல் சமூகக் காரணங்களை அண்மைக்கால வரலாறு போதியமட்டும் நமக்கு அளித்து விட்டது. ஆனால் வரலாறு சொல்லத் தவறிய விஷ்யங்கள் பற்பல. கோட்சே எப்படி சிந்தித்தான், காந்தியைக் கொல்வது என்று முடிவெடுத்தபின் அவனது மனநிலை எப்படி இருந்தது? எப்படித் திட்டமிட்டார்கள்? எப்படி செயல்படுத்தினார்கள்? கோட்சே எப்படிப்பட்ட மனிதன்?

வெறும் பெயராகவும், புகைப்படமாகவும் நமக்கு இதுவரை அறிமுகமாகியுள்ள நாதுராம் கோட்சே முதல் முறையாக மாலனின் ஜன கண மனவில் நமக்கு அறிமுகமாகிறான்.

வரலாறு எங்கு முடிகிறது, புனைவு எங்கே தொடங்குகிறது என்று பிரித்துப் பார்க்க ஒரு நொடி அவகாசம் கூட அளிக்காமல் விறுவிறுவென்று இந்த நாவலைக் கொண்டு செல்கிறார் மாலன்.

பத்திரிகையில் வெளிவந்த போது ஏராளமான சர்ச்சைகளையும் பாராட்டுக்களையும் ஒருசேரப் பெற்ற இந்நாவல் மாலனின் மிக முக்கியப்படைப்பாக இன்றுவரை கொண்டாடப்படுகிறது

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_59.html

📚 நூல் அரங்கம்

24 Nov, 14:45


சிந்திக்க வைக்கும் ஜென் கதைகள்

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_74.html

📚 நூல் அரங்கம்

24 Nov, 10:25


பிரதோஷ_பூஜா_விதி.pdf
Download https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_28.html?m=1

📚 நூல் அரங்கம்

24 Nov, 10:21


கருக்கு_பாமா

செவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். காரணம் நாம் சரித்திரத்தை வெகு வேகமாக மறப்பவர்கள். குறிப்பிட்டுச் சொன்னால் தலித்துகளின் வாழ்க்கைச் சரித்திரங்களையும், பெண்கள் வாழ்க்கைப் போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளிதாக இருக்கிறது. அப்படி எளிதாக்கிக்கொள்வது நமக்கு வசதியாக இருக்கிறது. மனத்தைக் குத்துபவைகளை அவை இல்லாதவை போல பாவனை செய்துகொண்டு இருப்பவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்க, அவர்களை முட்டி முட்டித் தொல்லை தர, அவர்களின் தடித்துப்போன தோல்களைக் கீறிவிட ‘கருக்கு’ தேவைப்படுகிறது. உருவகமாகவும் புத்தகமாகவும்.

https://tamilbookspdff.blogspot.com/2021/05/blog-post_871.html?m=1

📚 நூல் அரங்கம்

24 Nov, 10:15


செல்லாத_பணம்_இமையம்

நாவலில் உணர்வு என்றும், சிந்தனை என்றும் ஒவ்வொன்றும் தன்னைத் தனித்தனியாக அடையாள்ம் காட்டிக்கொண்டு வருவதில்லை.
இரண்டின் கலவை என்றும் எதையும் சொல்ல முடியாது. அங்கே இருப்பது ஒரு அனுபவத்தின் முழுமை, உண்மையான மனித அனுபவத்தின் முழுமை...
வெறும் சிந்தனை நாவலாகாது என்பதைப் போலவே உணர்வு மட்டுமே நாவலாகாது. ‘செல்லாத பணம்’ படைப்பில் மனித அனுபவத்தின் முழுமை உண்டு. நமக்குத் தெரிந்த சிந்தனைச் சட்டகத்துள் அதைக் கொண்டுவந்து ஒழுங்குபடுத்திவிட முடியாது. இந்த அனுபவத்தின் முழுமையிலும் ஒரு சிந்தனை, தார்மீக நிலைப்பாடு போன்றவை தெரியலாம். ஆனால், அவை சிந்தனையின் வழக்கமான தன்மையைக் கொண்டிருப்பவை அல்ல. சிந்தனையின் மெய்வருத்தம் அனுபவத்தின் முழுமையைச் சிதைத்துவிடாதவாறு பார்த்துக்கொள்வதுதான் ‘செல்லாத பணத்’தின் சிறப்பு.

Download

📚 நூல் அரங்கம்

22 Nov, 15:01


குறத்தி முடுக்கு - ஜி நாகராஜன்

தமிழ்ப் பத்திரிகைகள் கொண்டு வந்து தள்ளும் ஆபாசத்திலிருந்து முற்றிலும் மாறான கலைப் படிவங்கள் ஜி. நாகராஜனின் கதைகள். பச்சைக் கதைகளும் சிவப்புக் கதைகளும் படித்துப் பழக்கமானவர்களுக்கு ஜி. நாகராஜன் முற்றிலும் மாறுபட்ட, ஜீரணிக்க முடியாத எழுத்தாளராக இருப்பதில் வியப்பொன்றுமில்லை. இப்படி இருப்பதுதான் அவரின் தனித்தன்மை என்று படுகிறது.

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_43.html

📚 நூல் அரங்கம்

22 Nov, 14:57


பதினெண் புராணங்கள் (நூல்) (The Eighteen Mythological), நர்மதா பதிப்பகம், சென்னை, 2011-ஆம் ஆண்டில் வெளியிட்டது. வியாசர் வடமொழியில் எழுதிய பதினெட்டு புராணங்களை, தமிழில் கீழ்க்கோவளவேடு கிருஷ்ணமாச்சாரியார், அஷ்ட தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள் எனும் தலைப்பில் ஒரே நூலாக தொகுத்துள்ளார். இந்நூல் பாமர மக்களுக்கும் எளிதில் புரியும்படி புராணங்கள் விளக்குகிறது.

இந்நூலின் உள்ளடக்கம்:

📙 பிரம்ம புராணம்
📘 பத்ம புராணம்
📕 விஷ்ணு புராணம்
📗 சிவ புராணம்
📕 லிங்க புராணம்
📙 கருட புராணம்
📘 நாரத புராணம்
📕 பாகவத புராணம்
📘 அக்னி புராணம்
📗 கந்த புராணம்
📙 பவிசிய புராணம்
📙 மார்க்கண்டேய புராணம்
📘 வாமன புராணம்
📕 வராக புராணம்
📙 மச்ச புராணம்
📗 கூர்ம புராணம்
📘 பிரம்மாண்ட புராணம்
📕 வாயு புராணம்

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_67.html

📚 நூல் அரங்கம்

22 Nov, 14:45


புத்தனாவது சுலபம்: எஸ். ராமகிருஷ்ணன்

மனிதர்கள் கசப்பையும் ஏமாற்றத்தையுமே வாழ்நிலையாகக் கொண்டுவிட்ட ஒரு காலத்தின் சாட்சியங்கள் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகள். மனித மனதின் சொல்லித் தீராத விசித்திரங்களிலிருந்து பிறக்கும் அபத்த நிலைகளின் வழியே புறக்கணிப்பின், தனிமையின் அவமதிப்பின் எல்லையற்ற கனத்த இருளின் வழியே இக்கதைகளின் பாத்திரங்கள் நடந்து செல்கின்றன. அவை சிதறுண்ட குடும்பங்களின் உடைந்துபோன மனங்களின் வழியே தமது சொற்களை உருவாக்கிக் கொள்கின்றன.

புருனோ துவங்கி அஷ்ரப் வரை இந்தக் கதைகளில் வரும் மனிதர்களை தமிழ் சிறுகதையுலகம் முன் கண்டறிந்ததேயில்லை. தனித்துவமிக்க கதைமொழி நுட்பமான கதையாடல் வாழ்வின் பேருண்மைகளைச் சுட்டிக்காட்டிச் செல்லும் உரையாடல்கள் என்று இக்கதைகள் சமகால தமிழ் சிறுகதை உலகிற்குப் புதிய திசையை அறிமுகம் செய்து வைக்கின்றன.

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_87.html

📚 நூல் அரங்கம்

21 Nov, 02:45


மாயா விநோதப் பரதேசி - வடுவூர் கே துரைசாமி ஐயங்கார்

3 பாகங்களுடன்

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_69.html

இந்த நூல் வடுவூர் கே. துரைசாமி அய்யங்கார் எழுதிய மாயா விநோத பரதேசி என்னும் துப்பரியும் நாவல்

📚 நூல் அரங்கம்

20 Nov, 22:24


வாக்கப்பட்ட பூமி - சுசி கணேசன்

இன்று கிராமங்களின் உண்மையான உணர்வையும், இனிமையையும் கலந்து அதன் பழைமையை இன்னும் கட்டிக்காத்துக் கொண்டிருப்பது கிராமத்துப் 'பெரிசுகள்' தான்!! இந்த மூத்த தலைமுறை முடிந்து போனால் நிஜமான கிராமத்து வாசனையும், நடந்து கொண்டிருக்கும் நாகரீகப் புரட்சியினால் மறைந்து போகும். அதற்குள் அந்தத் தூய மனத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்கிற நூல்தான் வாக்கப்பட்ட பூமி.....

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_15.html

📚 நூல் அரங்கம்

20 Nov, 22:17


கண்ணா ஆங்கிலம் பேச ஆசையா

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_26.html

📚 நூல் அரங்கம்

15 Nov, 05:56


மாயம்

பெருமாள்முருகன் 2020இல் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் உள்ள கதைகள் முழுக்கவும் பதின்பருவத்தினர் பற்றியவை. வெவ்வேறு களங்கள்; தொழிற் சூழல்கள். எனினும் அவர்கள் கொள்ளும் மன உணர்வுகள் ஒருமை கொண்டுள்ளன. சமகால விளிம்பு நிலை வாழ்வை வெகுஇயல்போடு காட்சிப்படுத்தியிருக்கும் இவை நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்குபவை. இத்தொகுப்பில் மூன்று கதைகள் தவிர்த்துப் பிற கதைகள் அனைத்தும் இதுவரை பிரசுரம் பெறாதவை. ஆவேசத்தைக் காப்பாற்றிக் கொண்டு எறும்பு வரிசை போல இருபது கதைகள் எழுதிவிட்டேன். ஒன்றின் காலை ஒன்று பற்றிக்கொண்டும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து கொண்டும் இவை செல்கின்றன. இரண்டு மூன்று சேர்ந்து பெருமூட்டை சுமக்கின்றன. வளைந்தும் நெளிந்தும் கலைந்தும் கூடியும் எதையோ தேடி வரிசை போய்க் கொண்டேயிருக்கிறது. ஆம். இவற்றை எறும்பு வரிசைக் கதைகள் என அடையாளப்படுத்தலாம்.

https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_90.html

📚 நூல் அரங்கம்

14 Nov, 02:27


ஆளண்டாப் பட்சி - பெருமாள் முருகன்

பெருமாள்முருகனின் ஆறாவது நாவல் இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும்சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக்கொள்ளலாம், பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் தேவையில்லை, அற்பமான ஒன்றே போதுமானது. கூட்டுக்குடும்பப் பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்ப்பந்தத்தால் விடுபட்டுப் புலம்பெயர்ந்து வேற்றிடத்தில் நிலைகொள்ளும் உழவுக் குடும்பம் ஒன்றின் போராட்டமே இந்நாவல். மனிதர்களை அண்டவிடாத அதேசமயம் நல்லவர்களுக்கு உதவும் பண்பும் கொண்ட பிரம்மாண்டமான பறவையாகக் கொங்கு நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஆளண்டாப் பட்சியின் இயல்புகள் இந்நாவல் மாந்தர்கள் பலருக்கும் பொருந்திப் போகின்றன.

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_13.html

📚 நூல் அரங்கம்

14 Nov, 02:20


சோமசுந்தரத்தின் காதல் கதை

வாழ்க்கையை வாழ வந்தவர்கள் மத்தியில் சோமசுந்தரம் வாழ்க்கையை வேடிக்கை பார்க்க வந்தவன். எதிலும் நிலையானவன் இல்லை. தான் பயணிக்கவேண்டிய வழியை இதுவரை தனக்காகப் போட்டுக்காட்டியவர்களை ஒரு காதலால் இழக்கிறான். வேடிக்கை பார்ப்பதை நிறுத்திவிட்டு வாழவேண்டிய சூழல் ஏற்படுகிறது. யாரெல்லாம் அவன் வாழ்க்கையில் வந்தார்கள்? வாழப்பழகிக்கொண்டானா இல்லையா? மதத்திலும், சாதியிலும், கலாச்சாரத்திலும் உழலும் மக்களுக்கு சாதாரணமான வாழ்க்கை கூட ஏன் கடினமாக இருக்கிறது? என பல கேள்விகளுக்கு விடை தேடுகிறான். வழியில் தினுஷா, ராஜபாண்டி, இழவு மாமா, கோவிந்தி அம்மாள் என பலரும் அவனுடன் பயணிக்கிறார்கள். எல்லோரைப் பற்றியும் உங்களுக்குச் சொல்லுவான். கூடவே அவன் காதல் கதையையும்.

https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_65.html

📚 நூல் அரங்கம்

11 Nov, 15:55


மின்சாரப்பூ - மேலாண்மை பொன்னுசாமி

தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையும், வெவ்வேறு பிரச்சனைகளை வெவ்வேறு கோணத்தில் பேசுகிற கதைகளாகும். இதன் பன்முகத்தன்மையே இதன் தனிச் சிறப்பான ஒரு விஷயம். 'மின்சாரப்பூ' ஒரு சற்றே பெரிய சிறுகதையாகும். 'அன்பெழுத்து' வில் வருகிற சொர்ணச்சாமி, மேலாண்மை பொன்னுச்சாமி தான். நான் சிகரெட் புகைக்கிற பழக்கத்தை விட்ட அனுபவம் கூட ஒரு சிறுகதைக்குரிய பாடு பொருளாகியிருக்கிறது. 'நீரில்லாமீன்' கதை தனித்துவமானது. சில்லறைக் கடைக்காரனாக இருந்து வாழ்கிற என்னால் தான், இந்த உள்ளடக்கத்தை கையாள முடியும். இந்த மாதிரியான அனுபவங்கள், மத்திய தர வர்க்கத்துப் படிப்பாளியாக இருந்து படைப்பாளியானவர்களுக்கு கிடைக்கிற வாய்ப்பே இல்லை.

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_49.html

📚 நூல் அரங்கம்

11 Nov, 15:42


பாண்டிச்சி (நாவல்)

அழகிய இயற்கைச் சூழலை தங்கள் உயிரென பாதுகாக்கும் ஆதிமக்களின் பேரன்பு, மன ஒழுக்கம் ததும்பும் காதல்,வியப்பூட்டும் அரசியல், இவைகளுக்குள் ஊடுருவி நிற்கும் மலைமக்களின் கொண்டாட்டங்கள் நம்பிக்கைகள் இவைகளைச் சொல்லிச்செல்கிறது. இந்நாவல்.கேரளதமிழக எல்லையின் இயற்கைப் பேரெழிலின்பின்னணியில் பாண்டிச்சியின் ஆளுமையில் விரிகிறது இக்கதை.!

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_57.html

📚 நூல் அரங்கம்

11 Nov, 14:38


ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம் - அம்பை

மும்பாய் நகரத்தைத் தூங்காத நகரம் என்பார்கள். அதன் இயக்கத்தினுள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பவர்கள் அநேகம். வேகம் கொண்ட அதன் அன்றாடச் சுழற்சியில் வாழ்க்கையை இயல்பாக அமைத்துக்கொண்டு விழுந்தும் எழுந்தும் வாழ்பவர்கள், இந்த நகரத்தில் மட்டுமேதான் வாழ முடியும் என்று நினைப்பவர்கள், இந்த நகரத்தில் உறவுகளுக்கான அர்த்தங்களைப் புரிந்துகொள்பவர்கள், இவர்களுடன் அதன் சக்கரத்தின் பற்களில் சிக்கி நசுங்கிப்போய்விடுபவர்களும் உண்டு. சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்கள் மூலம் மும்பாய் நகரம் இயங்கும் விதங்களைக் கூறும் நான்கு நீண்ட கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_96.html

📚 நூல் அரங்கம்

10 Nov, 12:00


மணிபல்லவம் - நா பார்த்தசாரதி

இது என்னுடைய இரண்டாவது சரித்திர நாவல். நான் முதலாவது என்று மனப்பூர்வமாக நினைக்கக் கூடிய இந்த நாவல் படைத்த முறைப்படி வருகிற எண்ணிக்கையில் இரண்டாவது வரிசையில் நிற்கிறது. இந்த நாவலை எழுதத் திட்டமிடுவதற்கு முன்பே சில கொள்கைகளைச் சிறப்பாகவும் சிரத்தையாகவும் வகுத்துக் கொண்டேன் என்பதை நான் இப்போது மீண்டும் நினைவு கூர்கிறேன். வரலாற்றையே முழு நிலைக்களனாக எடுத்துக் கொள்ளாமல் வரலாற்றுப் பின்னணியையும், சூழ்நிலைகளையும் அமைத்துக் கொண்டு அழகும் ஆழமும் மிகுந்த ஒரு கதையைப் புனைய வேண்டுமென்று நான் எண்ணியிருந்த எண்ணம் இந்த நாவலில் ஓரளவு நன்றாகவே நிறைவேறியிருக்கிறது. இந்த நாவல் பொழுதுபொக்கிற்கு மட்டுமன்று ,சிந்தனைக்கும் சேர்த்துதான். இதில் அழகு எவ்வளவு உண்டோ அவ்வளவிற்கு ஆழமும் உண்டு. படிப்பவர்கள் அந்த நோக்குடன் இதைப் படிக்க வேண்டும். -நா.பார்த்தசாரதி

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_47.html

📚 நூல் அரங்கம்

10 Nov, 05:33


கி.மு. கி.பி. - மதன்

இந்த நூலுக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. உலகம் தோன்றியது, மனிதன் பிறந்தது, நாகரிகங்கள் உண்டானது, மதங்கள் வளர்ந்தது, போர்கள் உண்டது என வரலாறு தெரிந்து கொள்ளலாம்.

இன்னொரு சிறப்பு, இதையெல்லாம் சரித்திரப் பாடல்கள்போல போரடிக்காமல் மதன் ஸ்டைலில் படுஜாலியாகவே ருசிக்கலாம்!

https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_12.html

📚 நூல் அரங்கம்

10 Nov, 05:13


மனிதனுக்குள் ஒரு மிருகம் - மதன்

மனிதனுக்குள்ளாக இருக்கும் மிருகத்தைப் பற்றியும், சீரியல் கொலைகாரன் தொடங்கி, தனிமனித சர்வாதிகார கொலை வெறியர்களின் வாழ்க்கை பற்றியும், மனிதன் என்பவன் எத்தனை பெரிய வளர்ச்சி அடைந்த நாகரீகமுடையவனாக இருந்தாலும், வராலாறு முழுதும் அவனுடைய கொலைவெறி, தனது இனத்தையே அழிக்கும் கீழ்த்தரமான ஒரு நிலைக்கு மனம், அனுபவங்கள் அவனை இட்டுச் செல்கிறது என்பதையும் புத்தகம் வாசித்து முடித்த பின் உணர்ந்து கொண்டேன், பல தகவல்கள் கிடைக்கிறது. இலகுவான எழுத்து நடை

https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_27.html

📚 நூல் அரங்கம்

08 Nov, 18:04


தமிழ் மதுரா நாவல்கள்

https://tamilbookspdff.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE?&max-results=25

📚 நூல் அரங்கம்

06 Nov, 02:29


சித்தம் உனதானேன் ராகவி


பரம்பரைத் தொழிலை காப்பாற்ற தந்தையால் தேந்தெடுக்கப்பட்ட பெண் ஒரு புறம். புகழ் பெற்ற மாடலோடு ஓடிக்கொண்டிருக்கும் உறவு ஒரு புறம். மூழ்கிக்கொண்டிருக்கும் தொழில் ஒரு புறம்.

ஆடு, புலி புல்லுக்கட்டு என்று மூன்றையும் சமாளித்து கரையேறுவானா அரவிந்த் ? அப்படியே வந்தாலும் அவன் மனமும் மூளையும் ஒருங்கே சொல்லப்போகும் செய்தி என்ன ?

A woman wronged.... என்பதன் முழுப் பரிணாமமும் உணரும்போது அவன் நிலை....

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_97.html

📚 நூல் அரங்கம்

05 Nov, 16:07


அகந்தை அழிந்ததடி பூந்தளிரே - பிரியா மெகன்

அகந்தை பிடித்த திமிராளன் பூந்தளிர் போன்ற பெண்ணை பாடாய் படுத்துகிறான்.

பக்கா ஆன்டிஹீரோ ஸ்டோரி.

https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_99.html

📚 நூல் அரங்கம்

05 Nov, 15:18


விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்

தலைமுறை தலைமுறையாகத் தமிழகத்தின் தனிப்பெரும் நாடோடிக் கதையாக விளங்கிவரும் விக்கிரமாதித்தன் கதைகள் இந்தியாவின் பல மொழிகளிலும் பல்வேறு வடிவங்களுடன் வழங்கி வருகின்றன.

வெகு காலமாகவே ஜனரஞ்சகமாய் தமிழில் வழங்கி வரும் விக்கிரமாதித்தன் கதைகள் அனைத்தும் இந்நூலின் உணர்ச்சியோட்டம் மிக்க புதுமை தமிழில் விரிவாகத்தரப்பட்டுள்ளன அத்துடன் வடமொழி மூலங்களைப் பரிசோதித்து, இதுவரை தமிழில் வெளிவராத பல புதிய கதைகளும் சேர்க்கபட்டுள்ளன

https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_80.html

📚 நூல் அரங்கம்

05 Nov, 14:33


ரம்மி & ஜோக்கர் - பட்டுக்கோட்டை பிரபாகர்

பரத் சுசிலா வரிசை-5

ஆறு நாவல்கள்....

ஒரு திரைப்படம் போல் ஆறு நாவலும் அவ்வளவு விறுவிறுப்பு. பிரபல கற்பனை கதாபாத்திரங்கள் ஆன கணேஷ் & வசந்த், கிரண்&ராவ்&அலெக்ஸ், விவேக் & விஷ்ணு, நந்தினி & வந்தியத்தேவன், சேட்டை கோபி, அப்புசாமி என இவ்வரிசையில் பரத் & சுசீலாவும் உண்டு இவர்கள் அனைவரும் எனக்கு பிடித்தவர்களும் கூட. இந்நாவலில் வரும் அனைத்து கதையும் கால்பந்து போட்டி போல் அவ்வளவு வேகம். பி.கே.பி மற்றும் பரத் & சுசீலா என இருவரும் நம்மை ஆட்கொள்கிறார்கள்.

http://tamilbookspdff.blogspot.com/2024/11/and.html

📚 நூல் அரங்கம்

05 Nov, 14:27


இதயம் விழித்தேன் - நித்யா ஆர்

இதயத்துக்கு காதலை பிடிக்குமா, இல்லை காதலுக்கு இதயத்தை பிடிக்குமா, இப்படி பிரித்தே பார்க்க முடியாத படி, காதலுக்கான சின்னமாக இதயம் விளங்குகிறது.

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_64.html

📚 நூல் அரங்கம்

05 Nov, 13:45


படிகள்_கமலா சடகோபன்

இவரது 'படிகள்' என்ற புதினத்திற்காக 1978 ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசை அந்த ஆண்டுக்கான சிறந்த புதின எழுத்தாளராகப் பெற்றார்.

http://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_68.html

📚 நூல் அரங்கம்

05 Nov, 13:34


நிவேதிதா - யத்தனபூடி சுலோசனா

நிவேதிதா! கதையின் நாயகி! வாழ்க்கையில் பல பிரச்னைகளை அவள் சந்திக்கிறாள். இளமையிலேயே கணவர் விபத்தில் இறந்து போனபின் குழந்தைகளுடன் தனித்து விடப்படுகிறாள். வாழ்க்கையுடன் போராடி, வெற்றி பெறுகிறாள். குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தருகிறாள். இதற்கு நேரமாறான வாழ்க்கை ஹேமாவுடையது. எல்லா வசதிகள் இருந்தும் தவறான பாதையை தேர்ந்து எடுத்த காரணத்தினால் அவளுடைய வாழ்க்கை சீரழிந்து போகிறது. பெண்கள் தனித்தன்மையை வளர்த்துக் கொண்டால் எப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்க முடியும். சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும் என்ற கருத்தை வலியுறுத்தும் புதினம்

https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_5.html

📚 நூல் அரங்கம்

02 Nov, 15:24


விடியும் வரை நிலவு - அமுதா சுரேஷ்
https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_81.html

கவிதை அரங்கேறும் நேரம் - தேவி பாலா
https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_2.html

விடியல் - யத்தனபூடி சுலோசனா - கௌரி கிருபானந்தன்
https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_54.html

பதியன் ரோஜா - எண்டமூரி வீரேந்திரநாத்
https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_32.html


நெருப்பு நிலா - வித்யா சுப்ரமணியம்
https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_11.html

செகரெட்ரி - யத்தனபூடி சுலோசனா - கௌரி கிருபானந்தன்
https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_55.html

சாரதாவின் டைரி - எண்டமூரி வீரேந்திரநாத்
https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_34.html

சிஐடி சந்துரு - தேவன்
https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_85.html

ராஜாமணி - எஸ் வி வி - அல்லயன்ஸ்
https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_56.html

📚 நூல் அரங்கம்

01 Nov, 20:44


உன்னில் என் நெஞ்சம் தடுமாறுதே

இலங்கையைக் களமாகக் கொண்டு நகரும் கதை, யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இன்னும் சில மாவட்டங்களுக்குமாகப் பயணப்படுகையில், உங்களையும் கைபிடித்து அழைத்துச் செல்லும் என்பது நிச்சயம்.

நாயகி பூஜா, தான் உணர்ந்த காதலை, உற்றவர்களின் நலனை முதன்மையாகக் கொண்டு எதிர்கொள்கிறாள்.

முடிவு?

அவள் நேசத்துக்கு ஜெயம் கிட்டியதா?

என்பதற்கான விடையாக நகரும் கதையில் வரும் மாந்தர் அனைவருமே உங்கள் நெஞ்சங்களை கொள்ளை கொள்வார்கள்.

https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_9.html

📚 நூல் அரங்கம்

01 Nov, 14:11


உன்னுடன் நான் என்னுடன் நீ

உறவின் அருமை அறியா பணக்கார நாயகன் ..உறவுகளின் உயிரான நாயகி ..இருவரின் வாழ்க்கையையும் ..அவர்களது காதலையும் சொல்லும் அழகான ..உறவின் அருமையை உணர்த்தும் கதை இது .

https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post_1.html

📚 நூல் அரங்கம்

01 Nov, 13:53


How to download book

Download செய்வது பற்றி

📚 நூல் அரங்கம்

01 Nov, 13:41


காதலின் சாரலிலே
திருமதி லாவண்யா

ஐந்து நண்பர்களைப் பற்றிய கதை. குடும்பப் பின்னணியில் இவர்களின் காதல், நட்பு மற்றும் காதலில் ஏற்படும் இடர்கள், அதை அவர்கள் ஒவ்வொருத்தரின் உதவியுடன் எவ்வாறு கடக்கின்றனர் என உணர்வுப்பூர்வமாகவும் நகைச்சுவையாகவும் சொல்லும் கதை.

https://tamilbookspdff.blogspot.com/2024/11/blog-post.html

📚 நூல் அரங்கம்

01 Nov, 02:39


முகிலினமே முகவரி கொடு
உமா சரவணன்

http://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_40.html

📚 நூல் அரங்கம்

31 Oct, 16:22


உண்மை அறிவாயோ வண்ண மலரே - ரமணிசந்திரன்

எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. “கட்டாயம் வருவேன் அதுவும் உன் அழைப்பின் பேரிலேயே வருவேன். ஏனெனில் நீ நம்பியிருக்கும் ஆள் சரியில்லை”, என்று சசாங்கன் மஞ்சரியிடம் சூளுரைத்தான். இதனால் விளைந்த விளைவுகள் என்ன? இன்றே முந்துங்கள்,

https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_96.html

📚 நூல் அரங்கம்

31 Oct, 16:19


ஆளப்பிறந்தவர் நீங்கள் - சோம வள்ளியப்பன்

"தலைமைப் பண்பு என்பது, தானே வருவதல்ல. வளர்த்துக் கொள்வது. எப்படி எல்லாம் நம்மை தலைமைப் பதவிக்குத் தயார்படுத்திக் கொள்வது என்பது ஒரு கலை. சிந்தனையில் வித்தியாசம். செயலில் வித்தியாசம். முடிவெடுப்பதில் வித்தியாசம். அணுகுமுறையில் வித்தியாசம். இதுதான் ஆதாரம். பிறகு, ஆளுமை மேம்பாடு. மனத்தளவில் நம்மை நாமே உயரே தூக்கி உட்காரவைத்து அழகு பார்ப்பது அவசியம். கனவில்லாமல் காரியமில்லை. உங்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் தலைமைக் குணத்தைத் தட்டியெழுப்பி. எந்தத் துறையில் இருப்பவரானாலும் உங்களை அந்தத் துறையின் ‘நம்பர் 1ஆக’ மாற்றும் பணியைச் செய்கிறது இந்தப் புத்தகம். அள்ள அள்ளப் பணம், காலம் உங்கள் காலடியில், உஷார்! உள்ளே பார்!, மனதோடு ஒரு சிட்டிங், இட்லியாக இருங்கள் போன்ற சூப்பர் ஹிட் வெற்றி நூல்களின் ஆசிரியரான சோம. வள்ளியப்பனின் இந்தப் புதிய புத்தகம் சந்தேகமில்லாமல் உங்களை ஒரு தலைவனாக்கப் போகிறது. மாபெரும் சபைகளில் நீங்கள் நடக்கும்போதெல்லாம் மாலைகள் விழுவதற்கு வழி செய்யப்போகிறது."

http://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_54.html

📚 நூல் அரங்கம்

31 Oct, 16:10


ஓவியனின் தூரிகையாய்
உமா சரவணன்
http://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_31.html

📚 நூல் அரங்கம்

26 Oct, 15:27


விரல்கள் செய்யும் விந்தை

Author : மருத்துவர் கல்பனாதேவி

மனிதனுக்கு வரும் நோய்களைக் குணமாக்கும் மருந்து நம் விரல்களிலேயே இருக்கிறது என்றால் விந்தையாக இருக்கிறதல்லவா? ஆம், விரல்களைக் கொண்டு செய்யும் முத்திரைகளால் நோய் விலகிவிடும் என்பதை கடவுளர்களின் விக்கிரகங்களைப் பார்த்தாலே புரியும். இயற்கையிலேயே சில முத்திரைகள் நம் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தாயின் வயிற்றில் இருக்கும் சிசு தன் இரண்டு கைகளையும் அழுத்தமாக மூடிப் பிடித்திருக்கும் முத்திரை, ஆதி முத்திரை. வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச் சிதறல்களிலிருந்து விடுபட இந்த முத்திரை உதவுகிறது. இதுபோன்று ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. உடல், மனம் சார்ந்த அனைத்து நோய்களையும் நமது விரல்களால் செய்யும் முத்திரைகளால் சரிசெய்யலாம். முத்திரைகள் நமது விரல்கள் வழியே, ஐம்பெரும் சக்திகள் மற்றும் உயிர் ஆதாரங்களையும் தூண்டி நோய் நிலைகளைச் சரிசெய்கிறது. முத்திரை என்பது ஓர் உயர் யோகக்கலை, யோகாசனப் பயிற்சிகளின் உச்சம்.

http://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_75.html

📚 நூல் அரங்கம்

26 Oct, 15:16


நீலகண்டப் பறவையைத் தேடி - அதீன் பந்த்யோபாத்யா

நாவலாக உருப்பெறுவதற்கு முன்பாக பதினெட்டு அத்தியாயங்களும் சிறுகதைகளாக வெளிவந்தன. ஆகவே அத்தியாயங்கள் தனித்து நிற்கக் கூடியவை. ஆயினும் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்தவை. ஒரே பாத்திரதையோ அல்லது அந்த பாத்திரம் சம்பந்தப்பட்ட சம்பவங்களையோ மட்டும் வைத்துச் சொல்லப்படும் கதையல்ல: அது பல்கோண ஆராய்ச்சியின் விளைவு. ரொமாண்டிக் உணர்ச்சிப் பெருக்கு, குடும்பம் சீர்குலையும் பரிதாபம், பசி, பசிக்கு எதிரான போராட்டம், மதவெறி, மனித மதிப்பீடுகள் - இவையெல்லாவற்றையும் உள்ளடக்கிய புதினம்.

http://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_72.html

📚 நூல் அரங்கம்

22 Oct, 01:51


காத்திருக்கு கறுப்பு நிலா - ராஜேஷ்குமார்

https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_20.html

📚 நூல் அரங்கம்

22 Oct, 01:51


துறவி தொடர் கதை - சாண்டில்யன்

https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_53.html

📚 நூல் அரங்கம்

22 Oct, 01:48


செண்பக தோட்டம் - சாண்டில்யன்

செண்பகத் தோட்டத்'தில் கதையிருப்பதை பார்ப்பீர்கள். கதையையும் மீறி கதாபாத்திரங்கள் அதாவது சமூகத் தோழர்கள் உங்கள் கண்முன்னே காட்சி அளிப்பதைப் பார்ப்பீர்கள். அச்சமோ, விருப்பு வெறுப்போ இல்லாமல் தமிழ் நாட்டின் மக்களை அவர்களுடைய குணதோஷங்களுடன் உங்கள் கண்முன்பாக நிறுத்தப் பிரயத்தனப்பட்டிருக்கிறேன். வெளிவேஷ வராஹாச்சாரி, இனத்துவேஷ அழகண்ணல், தாஷ்டிகக் குருக்கள், கம்பராமாயண உத்திராதி படையாச்சி, ராஜபார்ட் ராமலிங்கம் - இவர்கள் அனைவரையும் நீங்கள் பெரிதும் விரும்புவீர்கள் என்று நினைக்கிறேன்.
இந்தக் கதையை எழுதியதில் எனக்கு மிகவும் திருப்தி. வாசகர்களாகிய உங்களுக்கு இது எத்தனை தூரம் திருப்தியளிக்குமோ எனக்குத் தெரியாது. இதற்கு நீங்கள் ஆதரவளித்தால் இதுபோன்ற இன்னும் பல கதைகளை எழுத உத்தேசித்திருக்கிறேன்.

https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_17.html

📚 நூல் அரங்கம்

22 Oct, 01:46


மானிடப் பயணம் - ஏற்காடு இளங்கோ

https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_63.html

📚 நூல் அரங்கம்

22 Oct, 01:45


புது வெள்ளம் - கி வா ஜகந்நாதன்

https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_79.html

📚 நூல் அரங்கம்

22 Oct, 01:44


தூக்குத் தண்டனை - கல்கி

https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_68.html

📚 நூல் அரங்கம்

22 Oct, 01:43


அட்டை பெட்டி மர்மம் - சு சோமு

https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_37.html

📚 நூல் அரங்கம்

20 Oct, 14:40


மூங்கில் கோட்டை:

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.

யானைக்கண்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறை - சேர மன்னன்

இருபதே வயதினனான பாண்டிய மன்னன் சேரமன்னனைத் தலையாலங்கானத்தில் தோற்கடித்து யாரும் புகமுடியாத மூங்கில் கோட்டையில் சிறை வைக்கிறான்.

சேரநாட்டுப் படை வீரன் இளமாறன் - கதையின் நாயகன். இவன் தந்தை யார்? - கதையில் வரும் மர்மம்.

இமய வல்லி - பாண்டிய நெடுஞ்செழியனின் சகோதரி - கதையின் நாயகி.

குறுங்கோழியூர்க்கிழார் - சேரமன்னன் இரும்பொறையின் நண்பர் - புலவர். மதுரையில் இருக்கிறார். பாண்டிய மன்னனுக்கு தமிழைப் பயில்விக்கும் ஆசான்.

சித்தர் - இவர் மருத்துவத்திலும், கத்திச் சண்டையும் வாள் வீச்சு, சிலம்பம், மற்போர், குதிரையேற்றம் அனைத்திலும் கரை கண்டவர். இவர் மருத்துவக் கூடமும், வீரர்களுக்கு போர் வித்தைகளைக் கற்றுத்தரும் பயிற்சிக் கூடமும் பாண்டிய நாட்டில் நடத்தி வருகிறார். பாண்டிய மன்னனே இவர் பள்ளியில் பயிலும் மாணவன். இவர் யார் என்பதும் கதையின் பின்னால் தெரிய வரும். அது ஒரு சுவாரஸ்யமான மர்மம்!

சிறையிலிருக்கும் சேர மன்னனை மீட்டு சேர நாட்டுக்கே சேர்த்து வைப்பதில் புலவருக்குப் பெரும்பங்கு உண்டு. மீட்பது இளமாறன்.

சேர மன்னன் தப்பிக்க இளமாறன் உதவுகிறான். இளமாறன் சிறைபடுகிறானா? அல்லது சுபமான முடிவா?

சாண்டில்யன் 1967ல் எழுதிய ஒரு விறுவிறுப்பான சரித்திரக் காவியம்.
ஒரு சிற்றோடை போன்றதுதான். 256 பக்கங்கள் மட்டுமே.

தமிழை நேசிப்போர் சாண்டில்யனின் தென்றல் நடையைச் சுவைக்க வேண்டுகிறேன்.

📚 நூல் அரங்கம்

20 Oct, 14:40


மூங்கில் கோட்டை - சாண்டில்யன்

https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_88.html

📚 நூல் அரங்கம்

01 Oct, 17:08


இரும்பின் இதயம் - நித்யா கார்த்திக்

இதயமற்ற இரும்பு மனிதன் ஜெய்சந்திரன். அவனுக்குள் இதயத்தை உருவாக்கி அதில் எப்படி இடம்பிடிக்கிறாள் சாருமதி என்பதே இரும்பின் இதயம்.

https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_1.html

📚 நூல் அரங்கம்

01 Oct, 17:07


கரிப்பு மணிகள் - ராஜம் கிருஷ்ணன்

1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம். அந்நாட்களில் நான் தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரையிலுமாக நீண்டிருக்கும் கடற்கரை ஊர்களில் வாழும் மீனவர் வாழ்க்கையை ஆராய்ந்து, ஓர் புதினம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது இலக்கியக் கூட்டமொன்றில் சிறந்த எழுத்தாளரும், திறனாய்வாளருமாகிய மதிப்புக்குரிய நண்பர் திரு.சிட்டி (சுந்தரராஜன்) அவர்களைச் சந்தித்தேன். அவர் நான் தூத்துக்குடியில் தங்கியிருந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டு அன்புடன் விசாரித்தார். அத்துடன் "நீங்கள் தூத்துக்குடிப் பகுதியில் இன்னும் ஓர் களத்தை ஆராய்ந்து நாவல் எழுத வேண்டும். மனித வாழ்வுக்கு மட்டுமல்ல, விலங்கினங்களுக்கும் கூட உயிர் வாழ இன்றியமையாத ஓர் பொருள் உப்பு.

https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_15.html

📚 நூல் அரங்கம்

01 Oct, 17:05


உத்தர காண்டம் - ராஜம் கிருஷ்ணன்

இராமாயணம், இராமனின் முடிசூடுதலுடன் முடிந்து விடுவதில்லை. அதேபோல் குருட்சேத்திரப் போருடன் மகாபாரதம் நிறைவு பெற்றுவிடவில்லை. சீதை வனவாசம் தொடருகிறது; யாதவர்களின் அழிவும் நிகழ்கிறது. நம் சுதந்தரப் போராட்டமும் ஒரு காப்பியம் போன்றதுதான். அரசியல் விடுதலையைத் தொடர்ந்து இந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் சரிவுகளும் மோதல்களும் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. காரிருள் கவியும் போதே, விடிவெள்ளி தோன்றும் என்பது நிச்சயமாகிறது. உறைபனியில் கருகும் பசுமைகள் மீண்டும் உயிர்க்கின்றன. எனவே ‘உத்தர காண்டம்’ என்ற தலைப்பிட்ட இந்தப் புதினத்திலும் அந்த நம்பிக்கை விடிவெள்ளிகளைக் காட்டியிருக்கிறேன். ராஜம் கிருஷ்ணன்

https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_10.html

📚 நூல் அரங்கம்

01 Oct, 17:04


மரணத்தின் வாசனை - த அகிலன்

போரில் ஈடுபாடு காட்டாத, போரில் போரிடும் இரு தரப்புகளுக்கும் அப்பால் உள்ள மக்களின் துயரங்களை இக்கதைகள் சொல்லுகின்றன. த.அகிலன் அவர்கள் ஈழப் போரின் போது பிறந்து வளர்ந்ததால், அவர் சொல்லும் நெருங்கிய உறவுகள், ஊர்க்காரர்கள், பள்ளி நண்பர்கள், இன்ன பிறரின் துயரங்கள், அலைகழிப்புகள், சித்ரவதைகள், ஊர்ஊராய் அலைந்தது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அகதிகளானது, கடைசியில் மரணம் … நம்மை அதிரவைக்கிறது. இந்த மரணங்களின் வாசனை போர் நின்ற சனங்களின் கதை போரின் கொடூரத்தை நமக்கு உணர்த்துகிறது.

https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_46.html

📚 நூல் அரங்கம்

01 Oct, 16:01


நாதுராம் கோட்சே - திரேந்திர கே ஜா - இ பா சித்தன்

நூல் விளக்கம்

நாதுராம்

கோட்சே

உருவான

வரலாறும் இந்தியா குறித்த அவனது
பார்வையும்

- திரேந்திர கே. ஜா

தமிழில்... இ.பா. சிந்தன்

நூலிலிருந்து....

"காந்தியைக்

கொன்ற

ஒரு

வெறியனுக்குப்

பின்

இருந்த

அரசியலையும்

உளவியலையும்

தகுந்த ஆதாரங்களுடன் இந்நூலில்
திரேந்திர ஜா தோலுரித்துக்
காட்டுகிறார். அதே போல நவீன
இந்தியாவின் ஒரு மோசமான ரகசிய
வரலாற்றையும்
அவர்
வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.
நாசகரமான நிகழ் காலத்தைப்
புரிந்து கொள்வதற்கு இந்நூலில்
எழுதப்பட்டிருக்கும் கடந்த கால
வரலாறு மிகவும் அவசியமானதாகும்"



எழுத்தாளர் பங்கஜ்மிஸ்ரா

https://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_35.html

📚 நூல் அரங்கம்

01 Oct, 15:50


மூட்டம் நெல்லை - சு சமுத்திரம்

பாபர் மசூதியை இடித்து இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றினார்களே, அந்தக் கொடுமையை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல் தமிழ் நவீனம் இதுவாகத்தான் இருக்கும். தன் காலத்தில், தன் கண் முன்னால் நடக்கிற அவலங்களை, அநீதிகளைக் கருப்பொருள் ஆக்குவதுதான் ஒரு சமூகப் பொறுப்புள்ள படைப்பாளியின் கடமையாக இருக்கும். பாரதியின் கவிதைகளில் மட்டுமல்ல, அவரின் கதைகளிலும் கூட அந்தக்காலத்தின் ஆகப்பெரும்பிரச்சினையான அடிமை விலங்கு அடிச்சரடாய் வந்துள்ளது.

http://tamilbookspdff.blogspot.com/2024/10/blog-post_48.html

📚 நூல் அரங்கம்

28 Sep, 14:29


நூல்: எல்லையில்லா பிரபஞ்சம்

நூலாசிரியர்: மதிமாறன்

மனித அறிவால் அறிந்த கோள்கள் சில; அறியாத கோள்கள் பல. அனைத்து கோள்களையும், பால்வெளிகளையும் உள்ளடக்கிய கற்பனைக்கு எட்டாத இந்த அண்டத்தின் விந்தை அளப்பரியது. பயிலப்பயில வியப்பைத் தருவது.
எண்ணிக்கையில் அடங்கா கோள்களை உள்ளடக்கிய இந்த பிரபஞ்சத்தின் செறிந்த அறிவியல், பொருளியல் உண்மைகளைத் தமிழில் விளக்க முற்படும் நுால் இது.

அகன்று விரிந்த இந்த அண்டத்தின் தோற்றம், அதன் வயது, அளவு, வடிவம், ஆய்வுகள் ஆகியவை உலகெங்கும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன.
அண்டத்தின் ஆதி அந்தத்தை அந்த இறைவனைத் தவிர யாரோ அறிந்தவர் எனும் ஆன்ம தத்துவப்பார்வையைக் கடந்து, மனித ஆய்வுக்குட்பட்ட பல்வேறு அனுமானங்களும் கோட்பாடுகளும் புதிது புதிதாக வந்த வண்ணம் உள்ளன.

https://tamilbookspdff.blogspot.com/2024/09/blog-post_28.html

📚 நூல் அரங்கம்

28 Sep, 14:24


பேசும் பொம்மைகள் - சுஜாதா

ஒரு மனித மனத்தின் அத்தனை எண்ணங்களையும் ஓர் இயந்திரத்துக்கு மாற்றிப் புகட்ட முடியுமா என்று பலர் வியந்து இதுசாத்தியமே இல்லை என்றார்கள். இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சி நிலையில் இது சாத்தியமில்லைதான். ஆனால் இன்று அமெரிக்கா போன்ற முன்னேற்ற நாடுகளின் முற்போக்கு ஆராய்ச்சி நிலையங்களில் 'செயற்கை அறிவு' என்ற இயலின் ஒரு பிரிவாக இத்தகைய மூளைச் செய்தி மாற்றும் ஆராய்ச்சிகள் செய்து சிறிதளவு வெற்றி கண்டும் இருக்கிறார்கள். இந்த வெற்றியின் ஒரு கற்பனை விரிவாக்கம்தான் 'பேசும் பொம்மைகள்'.

https://tamilbookspdff.blogspot.com/2024/09/blog-post_49.html

📚 நூல் அரங்கம்

28 Sep, 14:20


உச்சவழு - ஜெய மோகன்:

எழுத்தாளர் ஜெயமோகன் சென்ற இரண்டாண்டுகளில் எழுதிய புதிய சிறுகதைகளின் தொகுப்பே இப்புத்தகம்.

'இக்கதைகள் மானுடவாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களிலிருந்து ஒட்டுமொத்தமான கேள்விகளை நோக்கிச் செல்கின்றன'.

https://tamilbookspdff.blogspot.com/2024/09/blog-post_44.html