சீன மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும் ஆனால் செடி வளரவே வளராது.
முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும்.
செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும்.
ஆனால் அதற்கு அடுத்த பருவத்தில் அந்த மூங்கில் வளரத் துவங்கும். அதுவும் அசுர வளர்ச்சி.
உயரம் எவ்வளவு தெரியுமா ? 80 அடிகள். அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது ?
ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஒரு ரகசியம் இதில் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.
முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களை பூமியில் நன்றாக இறக்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது.
ஐந்தாவது ஆண்டில் நான் எண்பது அடி உயரமாக வளரப் போகிறேன்,என்னைத் தாங்கிப் பிடிக்கும் வல்லமை என் வேர்களுக்குத் தேவை என அது முழு மூச்சாய்த் தன்னைத் தயாரிக்கும்.
அதனால் தான் ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும் போது அது தடுமாறுவதும் இல்லை, தடம் புரள்வதும் இல்லை,பொறுமை உயரமான வெற்றிகளை உருவாக்குகிறது.
அவசரப் பட்டு முளைத்து, வீழ்ந்து விடாமல், நமது அடித்தளத்தை வலுவாக்கிக் கொண்டு முன்னேறுவது சிறப்பு