Últimas Postagens de நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள் (@ourbodyitselfadoctorebooks) no Telegram

Postagens do Canal நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்
4,493 Inscritos
471 Fotos
3 Vídeos
Última Atualização 05.03.2025 19:47

Canais Semelhantes

Tamil books
14,085 Inscritos
#NNA SPIRITUAL NETWORK
3,814 Inscritos

O conteúdo mais recente compartilhado por நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள் no Telegram

நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

24 Nov, 12:18

521

• சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டதால் இரண்டு குழந்தைகள் இறந்தன. உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

• 2008. திருவள்ளூர் அருகேயுள்ள பென்னலூர்பேட்டை அங்கன்வாடி மையத்தில், கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக நடந்த தட்டம்மை தடுப்பூசி முகாமில் தட்டம்மை தடுப்பூசி போடப்பட்ட நான்கு குழந்தைகள் இறந்தன.

• 2008. சென்னை, அயனாவரம் மாநகராட்சி மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்ட ஐந்து மாத ஆண் குழந்தை சூர்யா இறந்துபோனான். குழந்தையின் தந்தை ராஜ்குமார், ஒரு தொலைக்காட்சித் தொடர் நடிகர்.

• அமெரிக்காவில் பத்தாண்டுகளில் (2004-15) தட்டம்மை வந்து ஒரு குழந்தையும் சாகவில்லை. ஆனால், தட்டம்மை தடுப்பூசி போட்டு 108 குழந்தைகள் இறந்துள்ளன என்கிறது ஒரு அறிக்கை.

“தடுப்பூசி போட்ட உடன் குழந்தை பலி?“ - வயிற்றில் அடித்து கதறும் தாய் -நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்

https://www.youtube.com/watch?v=5QwTZy1c77E

தடுப்பூசி செலுத்தப்பட்ட 4 மாத குழந்தை இறப்பு...

https://www.youtube.com/watch?v=MPaxWhF1lwQ
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

24 Nov, 12:18

402

கீழ்க்கண்ட கொடூரமான ரசாயன விஷங்கள் ஒவ்வொரு தடுப்பூசியிலும் உள்ளன. உலகில் தயாரிக்கப்படும் 74 வகையான தடுப்பூசி மருந்துகளிலும் இந்த ரசாயன நஞ்சுகள் அடங்கியுள்ளன. இந்த விஷங்களை நாம் நேரடியாக ரத்தத்தில் ஏற்றுகிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. நம் குழந்தைகள் ஆறு வயதைத் தொடும்போது இவை அனைத்தும் பரிசாகக் கிடைக்கிறது. இந்த அட்டவணையைக் கொஞ்சம் பாருங்கள்.

ரசாயன நஞ்சுகள் - பாதிப்படையும் பகுதிகள்

அம்மோனியம் சல்ஃபேட் - வயிறு, குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டல விஷம்

லாடெக்ஸ் ரப்பர் - திடீர் அதிர்ச்சி மற்றும் இறப்பு

எம்.எஸ்.ஜி. - பிறவிக் கோளாறு மற்றும் ஒவ்வாமை

அலுமினியம் - அலிமியர்ஸ் நோய், டிமென்ஷியா, வலிப்பு, கோமா

ஃபார்மால்டிஹைட் - மூளை மற்றும் குடல் புற்றுநோய்

பாலிசோர்பேட் 60 - நிரூபிக்கப்பட்ட புற்றுநோய்க் காரணி

டிரைபுடைல் பாஸ்பேட் - சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள்

குளுதரால்டிஹைட் - பிறவிக் குறைபாடுகளை ஏற்படுத்தும்

ஜெலடின், ஜெந்தாமைசின் சல்பேட் மற்றும் பாலிமைக்சின் பி - ஒவ்வாமை

பாதரசம் - வரலாற்றிலேயே கொடிய விஷமாகக் குறிப்பிடப்படுவது. மூளை, நரம்பு பாதிப்பை ஏற்படுத்தும். தொப்புள் கொடி வழியாகக் கருவில் வளரும் சிசுவை அடையும்.

நியோமைசின் சல்பேட் - சத்துகள் உறிஞ்சப்படுவதில் தடையை ஏற்படுத்தும், வலிப்பு மற்றும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டை ஏற்படுத்தும்

கார்பாலிக் அமிலம் - செல்களை பாதிக்கும் விஷம்

எதிலின்கிளைகால்/ பினோஜைதனால் போரக்ஸ் - எறும்புகளைக் கொல்லப் பயன்படும் விஷம்


இதெல்லாம் போதாதென்று, இவற்றோடு பாதிக்கப்பட்ட மனித, மிருக செல்களும் தேவைக்கேற்ப(!) சேர்க்கப்படுகின்றன. கருச்சிதைவு ஏற்பட்ட சிசுவின் திசுக்கள், பன்றி, ஆடு, குதிரைகளின் ரத்தம், முயலின் மூளைத் திசு, நாயின் சிறுநீரகப் பகுதிகள், பசுவின் இதயத் திசுக்கள் போன்றவையும் தடுப்பு மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன!

வேக்ஸின் இறப்புகள் - சில தகவல்கள்

சரி, இதெல்லாம் இருக்கட்டும். தடுப்பூசியால் ஏற்படும் உச்சபட்ச விளைவாகக் குறிப்பிடப்படுவது எது தெரியுமா? SIDSதான். SIDS என்றால் Sudden Infant Death Syndrome! அதாவது, குழந்தை திடீரென இறந்துபோய்விடும் என்பதைத்தான் டெக்னிகலாகச் சொல்கிறார்கள். நவீன கொலைகாரர்கள்!

இந்தத் தொடர்பில், சுற்றுச்சூழல் நலனுக்கான மருத்துவக் குழுவின் உறுப்பினர் டாக்டர் புகழேந்தி, தடுப்பூசி பற்றிக் கூறுவது கருத்தில் கொள்ளத்தக்கது:

‘ஒவ்வாமை காரணமாக எந்தத் தடுப்பு மருந்தும் இறப்பு உள்ளிட்ட பின்விளைவுகளை ஏற்படுத்த முடியும். அமெரிக்காவில் திம்மர்சால் வேதிப்பொருள் கலந்த தடுப்பூசிகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் தொடர்ந்து புழக்கத்தில் உள்ளது பற்றி அரசோ, மருத்துவர்களோ பேசுவதில்லை. தடுப்பூசி மருந்தில் கலப்படம் ஏற்பட்டாலோ அல்லது மருந்தின் திறனைக் காப்பதற்காகச் சேர்க்கப்படும் (Preservatives) வேதிப்பொருட்கள் வினை புரிந்தாலோ இறப்பு நிகழும் அபாயம் இருந்துகொண்டே இருக்கிறது என்பதை மருத்துவர்களும், பத்திரிகைகளும் வெளியிடுவதில்லை. மருந்துச் சந்தையின் பணம் காய்க்கும் மரமாக இருப்பது தடுப்பூசி. அதைப்பற்றி இப்போதாவது மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்’.

வேக்ஸின்கள் போட்டதால் ஏற்பட்ட சில மரணங்கள்


• 1870 – 71-களில் அம்மை நோய் ஜெர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. சுமார் 10 லட்சம் பேருக்கு அம்மை நோய் தோன்றியது. இவர்களில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் நூற்றுக்கு 96 பேர் அம்மை குத்திக் கொண்டவர்கள்!

• அமெரிக்கக் குழந்தைகளில் வாரத்துக்கு மூன்று பேர் தடுப்பூசியினால் இறக்கிறார்கள் என்று பெடரல் கவர்மென்ட் அறிக்கை கூறுகிறது.

• சாதாரண நிலையில் கக்குவான் இருமலால் இறப்பவர்கள் ஆண்டுக்குப் பத்துப் பேர்தான். கக்குவான் இருமலுக்கான தடுப்பூசிக்குப் பிறகு ஆண்டுக்கு 950 பேர் கக்குவான் இருமலால் இறக்கிறார்கள்.

• 2008. சென்னை திருவள்ளூர் அருகே நடந்த தடுப்பூசி முகாமில் தட்டம்மை தடுப்பூசி போட்டதில் நான்கு குழந்தைகள் இறந்தன. பெற்றோர்களுக்கு தலா மூன்று லட்ச ரூபாய்கள் இழப்பீடு கொடுக்கப்பட்டது.

• 2016. சென்னை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ராமாராவ் என்பவரின் மூன்று மாத பெண் குழந்தை தனுஜாஸ்ரீக்கு, ஓட்டேரியில் உள்ள மாநகராட்சி சுகாதார நிலையத்தில் மஞ்சள்காமாலை, ரனஜன்னி உள்ளிட்ட ஐந்து விதமான நோய்களில் இருந்து பாதுகாப்பதாகச் சொல்லப்படும் பென்ட்டாவாலன்ட் என்ற தடுப்பூசி போடப்பட்டது. ஊசி போட்ட சில நிமிடங்களில் குழந்தை இறந்துபோனது.

• தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபாகரன் - பரணி தம்பதியரின் ஆண் குழந்தைக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டது. கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுக் குழந்தை இறந்தது.
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

24 Nov, 12:18

413

நலம் நலமறிய ஆவல் - 32

தடுக்காத ஊசி மருந்துகள்! - 3


"நலம் நலமறிய ஆவல்" தொடரில் "தடுக்காத ஊசி மருந்துகள்!" என்னும் தலைப்பில் வெளியான அனைத்துப் பகுதிகளையும் கூடுதல் தகவல்களுடன் இணையத்தில் பார்க்க விரும்பினால் இந்த 👇 முகவரிக்குச் செல்லுங்கள்.

https://reghahealthcare.blogspot.com/2024/11/13.html

தடுப்பூசிகள் போடுவதாலும் தடுப்பு மருந்துகள் கொடுப்பதாலும் ஏற்படும் விளைவுகளைக் கொஞ்சம் பார்த்தோம். இந்தியாவில் நடந்தது என்ன என்பதைப் பற்றியும் வேக்ஸின்களால் ஏற்படும் உச்சபட்ச விளைவு என்ன என்பது பற்றியும் இப்போது பார்க்க இருக்கிறோம். பார்க்கலாமா?

இந்தியாவில் நடந்தது என்ன?

சில வருடங்களுக்கு முன்னர் அஸ்ஸாமில் போலியோ சொட்டு மருந்து கொடுத்த பின் 10 குழந்தைகள் இறந்தன. 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டன.

2002-ல் உ.பி.யில் போலியோ சொட்டு மருந்து கொடுத்தவுடன் 26 குழந்தைகளுக்குப் போலியோ ஏற்பட்டது. இந்திய அரசின் கோரிக்கையின் பேரில் உலக சுகாதார நிறுவனம் (WHO) நிகழ்த்திய பரிசோதனையில், போலியோ சொட்டு மருந்தில் 17 வகை கலப்படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு வழக்கம்போல் அந்த விஷயம் மறக்கப்பட்டது என்கிறார் உமர்!

இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவர் டாக்டர். ஜேக்கப் புலியேல், ஒரு ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரையில் 2006-ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்ததனால், இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 27000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் உள்ளது என்றும் கூறினார்.

2008 மே மாதம், போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஏழு மாவட்டங்களில் பத்து குழந்தைகள் இறந்தன. ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் தடுப்பு மருந்தின் பக்கம் திரும்பியது. அச்சம்பவத்தை ஆராய மத்தியக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. கடைசியில், ‘மருந்துகளில் பிரச்னையில்லை, அக்குழந்தைகள் தடுப்பூசியினால் இறக்கவில்லை. வேறு நோய்கள் ஏற்கெனவே இருந்திருக்கலாம்’ என்று சொல்லப்பட்டது.

இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர். சத்யமாலா, தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் இப்படியான மரணங்கள் எங்கு நிகழ்ந்தாலும் வழக்கமான இதே வரிகளோடு அவை மறக்கப்படுகின்றன (தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள், பக்கம் 23).

(ஹீலர் உமர் அவர்கள் எழுதிய "கிருமிகள் உலகில் மனிதர்கள்" புத்தகத்தை கட்டுரை வடிவில் இணையத்தில் படிக்க விரும்பினால் இந்த 👇 முகவரிக்கு செல்லுங்கள்.)

https://reghahealthcare.blogspot.com/2024/09/blog-post.html

தடுப்பூசி மருந்துகளால் நோயைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், அவை புதிய பாதிப்புகளை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்துவதுதான் கொடுமை. தடுப்பூசி மருந்துகள் பற்றிய ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கருத்துகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

நான்கு கிலோ எடையுள்ள ஒரு குழந்தைக்கு ஒரு நாளில் ஒரு தடுப்பூசி போடுவது 40 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 40 தடுப்பூசிகள் போடுவதற்குச் சமம்! அப்படியானால், விளைவுகளை நீங்களே கற்பனை செய்து பார்க்கலாம். ஆனால் வேக்ஸின் தயாரிக்கும் கம்பெனிகள் ஏதாவது எச்சரிக்கை கொடுக்கின்றனவா? ஆம். கொடுக்கின்றன!

ஒவ்வொரு தடுப்பூசி மருந்தோடும் அந்த மருந்து பற்றிய எச்சரிக்கை குறிப்பு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக டிஃப்தீரியா (தொண்ட அழற்சி நோய்), கக்குவான் இருமல் மற்றும் டெடனஸ் எனப்படும் இசிவு ஆகிய மூன்றையும் தடுப்பதற்காகக் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படும் DPT அல்லது DPT என்று அறியப்படும் தடுப்பூசியோடு ஒரு எச்சரிக்கை அறிக்கையும் தரப்படும். ஆனால், இதை நாம் யாரும் பார்த்திருக்கமாட்டோம். அவ்வளவு கவனமாக நாம் எப்போதுமே இருப்பதில்லை. டாக்டரும் நமக்கு அதைக் காட்டமாட்டார். சரி, அப்படி அதில் என்ன இருக்கும்? கீழே படித்துப் பாருங்களேன்:

1. அதிகப்படியான காய்ச்சல் (1050 அல்லது அதற்கு மேல்)

2. மந்தமாக இருத்தல்

3. நீடித்த அசதி

4. விட்டு விட்டு ஏற்படும் அலறல்

5. மூளை வளர்ச்சிக் குறைபாடு

6. அதிகப்படியான துறுதுறுப்பு

7. எப்பொழுதாவது வலிப்பு

8. மூளை பாதிப்பு

9. மயக்கம்

10. கண் நரம்புக் கோளாறுகள்

11. நரம்பு சம்பந்தமான நிரந்தரக் கோளாறுகள் அல்லது மனநலக் குறைபாடு


இப்படி ஒவ்வொரு தடுப்பூசி மருந்துடனும் வெவ்வேறு வகையான எச்சரிக்கைக் குறிப்புகளை இணைத்துத்தான் உலகம் எங்கும் விற்கப்படுகின்றன.
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

24 Nov, 12:17

621

‘ஒவ்வாமை காரணமாக எந்தத் தடுப்பு மருந்தும் இறப்பு உள்ளிட்ட பின்விளைவுகளை ஏற்படுத்த முடியும். அமெரிக்காவில் திம்மர்சால் வேதிப்பொருள் கலந்த தடுப்பூசிகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் தொடர்ந்து புழக்கத்தில் உள்ளது பற்றி அரசோ, மருத்துவர்களோ பேசுவதில்லை. மருந்துச் சந்தையின் பணம் காய்க்கும் மரமாக இருப்பது தடுப்பூசி. அதைப்பற்றி இப்போதாவது மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்’.

- டாக்டர் புகழேந்தி

"நலம் நலமறிய ஆவல்" தொடரில் "தடுக்காத ஊசி மருந்துகள்!" என்னும் தலைப்பில் வெளியான அனைத்துப் பகுதிகளையும் கூடுதல் தகவல்களுடன் இணையத்தில் பார்க்க விரும்பினால் இந்த 👇 முகவரிக்குச் செல்லுங்கள்.

https://reghahealthcare.blogspot.com/2024/11/13.html
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

14 Nov, 13:07

1,460

“1961-க்குப்பின் அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் - போலியோ சொட்டு மருந்துதான்” என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒப்புக்கொண்டார், போலியோ சொட்டு மருந்தைக் கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்! முதலில் ஆயிரக்கணக்கான குரங்குகளுக்கு அந்த மருந்தைக் கொடுத்து அவர் சோதித்தார். கடைசியில் தனக்கும், தன் மனைவிக்கும், மகனுக்கும் கொடுத்தார். குரங்கிலிருந்து வந்தவன்தான் மனிதன் என்ற கோட்பாட்டை ஒப்புக்கொண்டார் போலும்! அவர் கொடுத்த மருந்தால், பதினோரு பேர் இறந்துபோனார்கள்!

“போலியோவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிகளுக்குப் பின்னரும், அரசு ஆவணங்களை உற்று நோக்குகையில், இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதுமில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று சொன்னார் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கிய ஆல்பர்ட் சாபின்!

பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மஞ்சள்காமாலை ஊசி போடுவது கட்டாயம் என்ற சட்டம், 1990-களில் அமெரிக்காவில் நடைமுறையில் இருந்தது. அங்கே தடுப்பூசி சட்டங்கள் மிகவும் கடுமையானவை. பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பூசி போட்டே ஆக வேண்டும். போடாதவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதிலும், பள்ளியில் சேர்ப்பதிலும்கூட பிரச்னைகள் தொடரும்.

வாய்மொழி உத்தரவுகள் மூலம் நம் நாடும் அமெரிக்காவையே பின்பற்றுகிறது என்பது துரதிருஷ்டமே. அரசின் எச்சரிக்கைகளை மீறி குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட மறுக்கும் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளைப் பிரித்து காப்பகங்களுக்கு அனுப்பவும், பெற்றோர்களைச் சிறைக்குள் தள்ளவும்கூட அமெரிக்க அரசு தயங்குவதில்லை. ஆஹா, government of the people, by the people and for the people என்று ஆப்ரஹாம் லிங்கன் அழகாக எடுத்துரைத்த ஜனநாயகமா இது! ஆனால், போனால் போகிறதென்று தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தொடுத்த வழக்குகளை விசாரிக்க அமெரிக்காவில் தனியாக தடுப்பூசி வழக்குகளுக்கான நீதிமன்றம் (U.S. Vaccine Court) செயல்படுகிறது அமெரிக்காவில், இது எப்படி இருக்கு!

அம்மைத் தடுப்பூசி போலவே மஞ்சள்காமாலைத் தடுப்பூசியும் பதிமூன்று விதமான புதிய நோய்களை ஏற்படுத்துவதாக 1997-ல் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் ஆய்வில் கண்டறிந்தனர். வலிப்பு, ஜன்னி, கண்பார்வை பாதிப்பு, மூளைக் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட மஞ்சள்காமாலைத் தடுப்பூசிகள் காரணமாக இருப்பதையும் கண்டறிந்த பிறகு, 1997-ல் அமெரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத்தை நீக்கியது.

கட்டாயச் சட்டத்தை நம்பி ஏராளமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து குவித்திருந்த அமெரிக்க மருந்துக் கம்பெனிகள், என்னடா செய்வது என்று கவலைகொண்டிருந்தபோது அவர்களின் ஆபத்பாந்தவனாக வந்தார் நம் பில்கேட்ஸ். ஆமாம். அமெரிக்க அரசு வேண்டாம் என்று ஒதுக்கிய மஞ்சள்காமாலை தடுப்பூசிகளை தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் நம் நாட்டில் ஆந்திர மாநிலத்தின் நாலரை லட்சம் குழந்தைகளுக்கு இலவசமாகப் போடவைத்தவர் அவர்தான்! ஆஹா, இதுவல்லவா கர்மம், ஸாரி, தர்மம்!

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும்கூட தடுப்பூசி மரணங்கள் எங்கு நிகழ்ந்தாலும் அவை பெரிதுபடுத்தப்படுவதில்லை. காலப்போக்கில் மறக்கப்படுகின்றன. அப்படியானால், இந்தியாவில் என்ன நடந்தது என்று கொஞ்சம் பார்க்க வேண்டாமா? தடுப்பூசிகளின் உச்சபட்ச விளைவு என்னவென்றும் பார்க்க வேண்டாமா?

வாருங்கள் அதையும் தெரிந்துகொள்வோம்.

தொடரும்...

நன்றி - நாகூர் ரூமி மற்றும் தினமணி டாட்காம்

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

14 Nov, 13:07

1,149

வேக்ஸினேஷன் என்ற பெயரைக் கொடுத்தவரே ஜென்னர்தான். Vacceinus என்ற பசுவைக் குறிக்கும் லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதுதான் ‘வேக்ஸினேஷன்’. பசுவம்மை, பெரியம்மையைத் தடுத்தது அவரை அப்படி ஒரு சொல்லைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கலாம். கோமாதா நமக்கு எப்போதுமே பாதுகாப்பாகத்தான் இருந்துள்ளது!

ஜென்னர் உலகப் புகழ் பெற்றார். அரசர்களின் நண்பரானார். அரசாங்கத்திடமிருந்து நிறைய பணமும் வந்தது. தன்னுடைய கருத்தில் உறுதியாக இருந்த ஜென்னர், தன் பத்து மாத மகன் எட்வர்டின் கையைக் கீறி பசுவம்மை சீழை அதில் தடவினார். எட்டுநாள் கழித்து மகனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. ஆனாலும் அவன் மீண்டும் நலமாகிவிட்டான்.

இரண்டு ஆண்டுகள் கழித்து அவனுக்கு பெரியம்மை தடுப்பூசியைப் போட்டார். இந்த முறை மகன் மிகவும் நோய்வாய்ப்பட்டான். ஆனால், அடுத்த ஆண்டு மீண்டும் ஒருமுறை அவர் தன் மகனுக்கு பெரியம்மை தடுப்பூசி போட்டார். இதனால் அவன் மூளை பாதிப்புக்கு உள்ளாகி 21 வயதில் இறந்துபோனான். கசப்பான அந்த அனுபவங்களினால் தன் இரண்டாவது மகனுக்கு அம்மைத்தடுப்பூசியை அவர் போடவில்லை. பாவம், புகழுக்காக பரிசோதனை எலிகளைப்போல பெற்ற பிள்ளைகளைக் காவு கொடுத்துள்ளனர்!

அந்தக்கால ஐரோப்பாவில் அம்மை நோய் பாதிப்பு அதிகமாக இருந்தது. எனவே, அம்மை நோய்க்கான மருந்தாக இது அதிக அளவில் ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும் கொடுக்கப்பட்டது. “அக்காலத்து டாக்டர்கள் அனைவரும் இம்மருந்தைப் பையில் போட்டுக்கொண்டு பணம் சம்பாதிக்கத் துவங்கினார்கள்” என்று குறிப்பிடுகிறார் டாக்டர் ஹென்றி லிண்ட்லார்.

இம்மருந்துக்கு எதிராக மருத்துவர்களில் பலரும், விஞ்ஞானிகளில் ஒரு பிரிவினரும் உலகம் முழுவதும் இணைந்து தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து 1880-ம் ஆண்டில் உலக தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம் (International Anti-Vaccination League) உருவாக்கப்பட்டது. இதன் மாநாடு, 1880 டிசம்பரில் பாரீஸில் நடைபெற்றது. இதில் பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தடுப்பூசிகளை எதிர்க்கும், முறைப்படுத்தக் கோரும் பத்து தீர்மானங்கள் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

ஜெர்மனியில் ஏற்பட்ட தடுப்பூசி மருந்துகளின் பாதிப்பைத் தொடர்ந்து, அந்நாட்டின் மத்திய அமைச்சர் பிஸ்மார்க், 1888-ம் ஆண்டில் மாநில அரசுகளுக்குத் தடுப்பூசி பற்றிய சுற்றறிக்கையை அனுப்பினார். ‘‘சொரி, சிரங்கு, தோல் பாதிப்புகள் போன்ற புதிய நோய்கள் வருவதற்கு இந்த அம்மை மருந்து காரணமாகிவிட்டது. பசுவின் சீழிலிருந்து தயாரிக்கப்படும் இந்த அம்மை மருந்து நல்லதென்று பயன்படுத்தினோம். ஆனால் அம்மை நோயைவிட அந்த மருந்து கூடுதலான தீங்குகளைச் செய்துவிட்டது” என்று அந்த அறிக்கை சொன்னது. அந்த அறிக்கையைத் தொடர்ந்து, ஜெர்மன் மாநில அரசுகள் கட்டாயத் தடுப்பூசி சட்டத்தைக் கைவிட்டன.

அமெரிக்காவில், அம்மைத் தடுப்பூசி போடப்பட்ட 98 சதவீத குழந்தைகளை அம்மை நோய் தாக்கியிருந்தது. இங்கிலாந்தில் ஆண்டொன்றுக்கு 30,000 ஆயிரம் பேர் வலிப்பு நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அவர்களில் பெரும்பாலானவர்கள் அம்மைத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்றும் பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல் சொன்னது.

1889-ம் ஆண்டில் இங்கிலாந்தில் அம்மை மருந்தின் விளைவுகளை ஆராய Royal Commission on Vaccination ஏற்படுத்தப்பட்டது. ஏழு ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு ராயல் கமிஷன் தன் அறிக்கையை வெளியிட்டது. 1896-ல் வெளியிடப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து இங்கிலாந்தில் கட்டாயத் தடுப்பூசி சட்டம் நீக்கப்பட்டது.

அம்மை மருந்துகளின் விளைவுகள் மனிதர்களை மட்டுமல்லாமல் கால்நடைகளையும் விட்டுவைக்கவில்லை. ஸ்காட்லாண்டில் ஆடுகளுக்கு அம்மை நோய் ஏற்பட்டபோது இத்தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டன. தடுப்பூசிகள் போடப்பட்ட ஆடுகளுக்குப் பால் வற்றிப்போனது. இப்பாதிப்பைக் கொண்டு அம்மை மருந்தின் விளைவுகளை ஆராய்ந்த டாக்டர். லிண்ட்லார் இவ்வாறு கூறுகிறார் -

“அம்மை மருந்தால் உடலில் கொப்புளங்களும், சிரங்குகளும் முதலில் தோன்றுகின்றன. பின்பு ரசாயனப் பொருள் உடல் முழுவதும் பரவி பக்கவாதம், நரம்பு மண்டல பாதிப்பு, மூளைக்கோளாறு போன்றவை ஏற்படுகின்றன. இன்று அம்மை குத்தும் மருந்துகளை உற்பத்தி செய்வது வருமானம் தரக்கூடிய பெரிய வியாபாரம் ஆகிவிட்டது. இதன்மூலம் பல கம்பெனிகள் ஆண்டுக்குப் பல கோடி ரூபாய்களை லாபமாக ஈட்டுகின்றன. அம்மை மருந்தின் விளைவுகள் ஆடுகளிடமே இவ்வளவு கொடிய விளைவை ஏற்படுத்தினால், மனிதர்களைப் பற்றி என்ன சொல்ல? பத்தாயிரம் சிறுமிகள் பருவமடைவதற்கு முன்பே இரண்டு மூன்று முறை அம்மை மருந்து ஏற்றிக்கொண்டதால், பால் சுரப்பிகளின் வளர்ச்சி பாதிப்படைந்து, பிற்காலத்தில் குழந்தைப் பேற்றுக்குப் பின் அவர்களுக்குப் பாலே சுரக்கவில்லை”.
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

14 Nov, 13:07

727

வேக்ஸின்களின் விளைவாக குழந்தைகளுக்கு ஆட்டிஸம் எனப்படும் மூளை வளர்ச்சிக் குறைபாடு ஏற்படுகிறது என்று சொன்ன இன்னொரு அமெரிக்க மருத்துவர் டாக்டர் ஜெஃப்ரி ப்ராட்ஸ்ட்ரீட். அவர் 2015-ம் ஆண்டு இறந்துகிடந்தார். அது தற்கொலை என்று சொல்லப்பட்டது. ஆனால், வேக்ஸின் விற்கும் மருந்துக் கம்பனிக்காரர்களால் அவர் கொலை செய்யப்பட்டார் என்று அவர் குடும்பத்தினர் கூறினர். அவருடைய மகனே ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்டார். அவர் 15 மாதக் குழந்தையாக இருந்தபோது கொடுக்கப்பட்ட வேக்ஸின்தான் அவரது மூளை வளர்ச்சிக் குறைவுக்குக் காரணம் என்று சொன்ன டாக்டர் ப்ராட்ஸ்ட்ரீட், ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவத்தை சிபாரிசு செய்தார்.

ஒவ்வொரு வேக்ஸினும் தீமையே விளைவிக்கிறது (Every Vaccine Produces Harm) என்ற தலைப்பில் ஒரு புத்தகமே எழுதினார் டாக்டர் ஆண்ட்ரூ மூல்டென் என்பவர்!

Dr. Andrew Moulden: Every Vaccine Produces Harm (ஒவ்வொரு வேக்ஸினும் தீமையே விளைவிக்கிறது - டாக்டர் ஆண்ட்ரூ மூல்டென்) புத்தகத்தை இ-புத்தக வடிவில் பதிவிறக்கம் செய்து படிக்க விரும்பினால் இந்த 👇 முகவரிக்கு செல்லுங்கள்.

https://t.me/generalelibrary/972

“மனித வாழ்வின் விலைமதிப்பற்ற செல்வம் குழந்தைகள்தான். நாம் மிக அதிகக் கவனம் செலுத்தவேண்டியவர்களும் அவர்களே. தயவுசெய்து உங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுமுன் நன்கு ஆராய்ந்து செயல்படுங்கள்” என்று கனடாவின் VRAN (Vaccination Risk Awareness Network) அமைப்பு உலக மக்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறது. தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களால் உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு இது. இப்போது அது Vaccine Choice Canada என்ற பெயரில் இயங்கி வருகிறது. கனடாவில் வேக்ஸின் போடுவது கட்டாயமில்லை என்ற வாசகமும் அதன் வலைத்தளத்தில் உள்ளது. வேக்ஸின் போட்டதால் குழந்தைகள் என்னவிதமான கஷ்டங்களுக்கு உள்ளாயினர் என்ற கதைகளுக்குத் தனியாக இணைப்பு கொடுத்துள்ளது.

அதில் ஒரு கதை

டாக்டர் ரெபெக்கா என்ற ஒரு பெண் விஞ்ஞானி தன் 18 மாதப் பெண் குழந்தைக்கு ‘வாரிலெக்ஸ்’ என்ற சின்னம்மை தடுப்பு மருந்தைக் கொடுத்திருக்கிறார். உடனே குழந்தைக்கு anaphylaxis எனப்படும் கடுமையான ஒவ்வாமை வந்தது. எந்த உணவையும் குழந்தையின் உடலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எது கொடுத்தாலும் வயிற்றால் போனது, வாயில் சிவப்பு சிவப்பாக தடிமன்கள், புண்கள் ஏற்பட்டன. குழந்தையால் முன்புபோல இயல்பாக இருக்க முடியவில்லை. அதன் எதிர்வினைகள் குழந்தையை பின்னோக்கித் தள்ள ஆரம்பித்தன. ஓரிருமாதக் குழந்தைபோல ஆனது அது. பதினெட்டு மாதக் குழந்தைக்கான வளர்ச்சியும் முதிர்ச்சியும் எங்கே போனதென்று தெரியவில்லை.

ரெபெக்கா அதிர்ச்சியில் உறைந்துபோனார். வேக்ஸின் கொடுத்தன் விளைவுதான் அது என்று அவருக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. ‘என்னுடைய கல்வியே என்னைக் கற்பழித்துவிட்டது’ என்று அவர் கூறினார் (”Now I feel raped by my education”). குழந்தையை பழைய ஆரோக்கிய நிலைக்குக் கொண்டுவருவதே தன் வாழ்வின் லட்சியம் என்று அதற்காக உழைக்க ஆரம்பித்தார். ஐந்து ஆண்டுகள்! ஐந்து ஆண்டுகளுக்கு வெளியில், கடையில் வாங்கிய எந்த உணவையும் கொடுக்கவில்லை. வீட்டிலேயே சமைத்த உணவுதான். அதுவும் இயற்கை உணவுகள்! ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது!

வேக்ஸின்களின் வரலாறு

வேக்ஸின்களின் பின் விளைவுகள், பக்க விளைவுகள் பற்றியெல்லாம் கொஞ்சம் பார்த்தோம். அவற்றின் வரலாற்றைக் கொஞ்சம் பார்த்துவிடலாமா?

தடுப்பு மருந்துகளின் வரலாறு, அம்மை குத்துதலில் தொடங்குகிறது. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பதுபோல, எந்த நோயையும் அந்த நோயாலேயே குணமாக்க வேண்டும் என்ற கோட்பாடு அதற்கு அடிப்படையாக அமைந்தது. 1760-களில் இதைத் தொடங்கிவைத்தவர் எட்வர்ட் ஜென்னர் என்ற அறுவை சிகிச்சை நிபுணர். ‘நோய்த்தடுப்பியலின் தந்தை’ என்று இவர் அறியப்படுகிறார்.

பசுவம்மை (cowpox) என்ற நோயால் தாக்கப்பட்ட பால்காரப் பெண்களுக்கு பெரியம்மை வருவதில்லை என்பதை அவர் தெரிந்துகொண்டார். அப்பெண்களின் கைகளில் இருந்த கொப்புளங்களின் வழியாக வந்த சீழானது பெரியம்மை வராமல் அவர்களைக் காப்பாற்றியது என்று அவர் நினைத்தார். வீரியம் குறைவான பசுவம்மை வந்தவர்களை பெரியம்மை தாக்குவதில்லை என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

பசுவம்மை வந்த பால்காரப் பெண்ணின் கைக்கொப்பளத்தைக் கீறி, அதிலிருந்து கொஞ்சம் சீழை எடுத்து ஆரோக்கியமாக இருந்த தன் தோட்டக்காரனின் எட்டு வயது மகனின் உடலில் தேய்த்தார். ஆறு வாரங்கள் கழித்து அவனுக்கு பெரியம்மைக்கான வேக்ஸின் கொடுத்தார். அதாவது, பெரியம்மை நோய்க்கிருமியைக் கொஞ்சம் அவனுடைய உடலுக்குள் அனுப்பினார். அவனுக்கு பெரியம்மை வரவில்லை. ஏற்கெனவே கொஞ்சமாக உள்ளே அனுப்பிய பசுவம்மை சீழ் வேலை செய்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்தார்.
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

14 Nov, 13:06

704

நலம் நலமறிய ஆவல் - 31

தடுக்காத ஊசி மருந்துகள்! - 2


"நலம் நலமறிய ஆவல்" தொடரில் "தடுக்காத ஊசி மருந்துகள்!" என்னும் தலைப்பில் வெளியான அனைத்துப் பகுதிகளையும் கூடுதல் தகவல்களுடன் இணையத்தில் பார்க்க விரும்பினால் இந்த 👇 முகவரிக்குச் செல்லுங்கள்.

https://reghahealthcare.blogspot.com/2024/11/13.html

வேக்ஸின் விளைவுகள்

தடுப்பு மருந்துகளுக்குள் பல அசிங்கமான சமாசாரங்களும் ரசாயனங்களும் கலக்கப்படுகின்றன என்பதுவரை பார்த்தோம். அதைப்பற்றி விழிப்புணர்வு வந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். மனசாட்சியுள்ள மருத்துவர்களும் மெள்ள மெள்ள கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். வேக்ஸின்கள் பற்றிய தங்கள் கருத்துகளை வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

வேக்ஸின்கள் உண்மையிலேயே வேலை செய்கின்றனவா? எந்த நோய்க்காக குறிப்பிட்ட வேன்ஸின் போடப்படுகிறதோ அந்த நோய் குழந்தைக்கு வராமல் அது தடுக்கிறதா? இந்தக் கேள்விக்கான பதில்கள் சமீபகால வரலாறு முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன. கொஞ்சம் பார்க்கலாமா?

வேக்ஸின்கள்தான் மருந்துக் கம்பனிகளின் முதுகெலும்பு. குழந்தைகள் எல்லோரும் அக்கம்பனிகளுக்கு வாழ்நாள் கஸ்டமர்கள் ஆகிவிட்டனர் என்கிறார் டாக்டர் ஷெர்ரி டென்பென்னி. இவர் அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தில் பணிபுரிபவர். வேக்ஸின்களால் குழந்தைகளுக்கு ’ஆட்டிஸம்’ (Autism) எனப்படும் மூளை வளர்ச்சிக் குறைவு நோய் ஏற்படுகிறது என்றும் இவர் கூறுகிறார். Saying No to Vaccines என்று ஒரு புத்தகமும் இவர் எழுதியிருக்கிறார்.

Saying No to Vaccines புத்தகத்தை இ-புத்தக வடிவில் பதிவிறக்கம் செய்து படிக்க விரும்பினால் இந்த 👇 முகவரிக்கு செல்லுங்கள்.

https://t.me/generalelibrary/970

1853-ல் வேக்ஸின்கள் கட்டாயம் என்ற சட்டம் இயற்றப்பட்டதற்குப் பிறகுதான், மூன்று முறை கொள்ளைநோய்க்கு நாம் ஆளாகியிருக்கிறோம். 1857-ல் இருந்து 59-வரை பெரியம்மை வந்து 14,000 பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள். 1853-ல் இருந்து 65-வரையிலும் கொள்ளைநோய் இறப்புகள் 20,000-மாக உயர்ந்தது. 1871-72-ம் ஆண்டுகளில் 44,800 பேர் இறந்துள்ளனர் என்கிறார் டாக்டர் வால்டர் ஆர். ஹாட்வென் MD MRCS MRCP. கிருமிகள் மூலமாக நோய்கள் பரவுகின்றன என்ற கருத்தை இவர் தீவிரமாக எதிர்ப்பவர். இங்கிலாந்தின் க்ளஸ்டர் மாகாணத்தில் பணிபுரியும் மருத்துவர் இவர்.

வேக்ஸின்கள் டைம் பாம் போன்றவை. அடுத்தது எப்போது நம் குழந்தைகளை ஊனமாக்கும் அல்லது கொல்லும் என்று தெரியாது என்கிறார் லாரி குக். அமெரிக்கரான இவர் www.stopmandatoryvaccines.com என்ற வலைத்தளத்தை உருவாக்கி, வேக்ஸின்களால் குழந்தைகள் எவ்விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறார்.

ஏற்கெனவே பெரியம்மை வந்து செத்த ஒருவரின் சீழை ஊசி மூலம் ஒரு குழந்தைக்குச் செலுத்துவதால் அது குணமடையும் என்று நம்புவது முட்டாள்தனமானது என்று கொதிக்கிறார் டாக்டர் வில்லியம் ஹோவர்டு ஹே. இவர் நியூயார்க் நகர மருத்துவர்.

பெரியம்மைக்கு வேக்ஸினேஷன் கொடுப்பதால் ரத்தப் புற்றுநோய் வருகிறது. இதை நாம் அனுபவத்தில் கண்டுகொண்டோம் என்று அடித்துக் கூறுகிறார் போலந்து நாட்டு மருத்துவப் பேராசிரியரான ஜூலியன் அலெக்சாண்டரோவிக்ஸ்.

மெக்ஸிகோ, ஹைத்தி, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில், உலக சுகாதார நிறுவனத்தின் சிபாரிசின் பேரில் அங்கிருந்த குழந்தைகளுக்குப் புட்டாளம்மைக்கான வேக்ஸின்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், அதிக அளவில் குழந்தைகள் இறந்துபோனதால் அதை இப்போது நிறுத்திவிட்டார்கள் என்கிறார் டாக்டர் ஆலன் கான்ட்வெல் MD. இவர் நியூயார்க்கில் உள்ள தோலியல் மருத்துவர்.

ஆட்டிஸம், அலர்ஜி, ஆஸ்துமா, கேன்ஸர் இப்படி எல்லாமே தடுப்பு மருந்துகள், ஊசிகள் போடப்பட்ட குழந்தைகளுக்கு வருகிறது என்று அடித்துக் கூறுகிறார் தடுப்பூசி ஆராய்ச்சியாளரான டாக்டர் டெட் கோரன். யூட்யூபில் அவரது நேர்காணலும் கிடைக்கிறது. குழந்தைகளுக்கு வேன்ஸின்கள் கொடுப்பதால் என்னென்ன தீமைகள் ஏற்படுகின்றன என்று அவர் அதில் விளக்குகிறார்.

“தடுப்பூசிகளின் காரணத்தால் உலகில் ஒருநாள் ரத்த ஆறு ஓடும். நாளைய டாக்டர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி, முறையான ஆராய்ச்சியும் இல்லாமல் எந்த ஒரு நன்மையும் இல்லாத விஷத்தை நம்முடைய பிஞ்சுக் குழந்தைகளின் உடலில் ஏற்றி 21-ம் நூற்றாண்டு வரை கொண்டுசென்றுவிட்டோம் என்று புலம்புவார்கள்” என்று அங்கலாய்க்கிறார் டாக்டர் டெட் கோரன்.
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

14 Nov, 13:06

1,109

‘‘சொரி, சிரங்கு, தோல் பாதிப்புகள் போன்ற புதிய நோய்கள் வருவதற்கு இந்த அம்மை மருந்து காரணமாகிவிட்டது. அம்மை நோயைவிட அந்த மருந்து கூடுதலான தீங்குகளைச் செய்துவிட்டது” என்று ஜெர்மனி நாட்டின் மத்திய அமைச்சர் பிஸ்மார்க் அறிக்கை சொன்னது. அந்த அறிக்கையைத் தொடர்ந்து, ஜெர்மன் மாநில அரசுகள் கட்டாயத் தடுப்பூசி சட்டத்தைக் கைவிட்டன.

"நலம் நலமறிய ஆவல்" தொடரில் "தடுக்காத ஊசி மருந்துகள்!" என்னும் தலைப்பில் வெளியான அனைத்துப் பகுதிகளையும் கூடுதல் தகவல்களுடன் இணையத்தில் பார்க்க விரும்பினால் இந்த 👇 முகவரிக்குச் செல்லுங்கள்.

https://reghahealthcare.blogspot.com/2024/11/13.html
நாமே மருத்துவர்! நமக்கு ஏன் மருத்துவர்? புத்தகங்கள்

02 Nov, 12:43

1,766

இப்படி மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படும் குரங்குகள் உரிய சோதனைகளுக்குப் பிறகுதான் தேர்வு செய்யப்படுகின்றன. என்றாலும், பரிசோதனைகளின் மூலமே வரப்போகிற அல்லது வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நோய்கள் அனைத்தையும் கண்டுபிடித்துவிட முடியாது. இவ்வாறு 1950-களில் பரிசோதிக்கப்பட்ட குரங்குகளில் சிமியன் வைரஸ் 40 (SV 40) என்ற கிருமி பாதித்திருந்த விஷயம், மருந்துகள் தயாரிக்கப்பட்ட பிறகுதான் தெரியவந்தது. சொட்டு மருந்தின் மூலம் பரவும் இந்த வகை தாக்கத்தால், பல வருடங்கள் கழித்து மூளை, கல்லீரல், நுரையீரல் போன்ற பகுதிகளில் புற்று நோய் உருவாகவும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். (தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள், பக்கம் 26).

சீழ், பசு, குரங்கு வழியாக மனிதர்களுக்கு! அதுவும் நம் அன்புப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு! இதனால்தானோ என்னவோ ஒரு மருத்துவரிடம் வேக்ஸின்கள் பற்றிப் பேசுவதும் ஒரு கசாப்புக் கடைக்காரரிடம் சைவ உணவு பற்றிப் பேசுவதும் ஒன்று என்று சொன்னார் பெர்னார்ட் ஷா!

சரி, இப்படி கொடுக்கப்படும் வேக்ஸின்கள் உண்மையிலேயே நோயைத் தடுக்குமா? அல்லது நோயை உண்டாக்குமா? அல்லது வேறு பிரச்னைகளை ஏற்படுத்துமா?

பார்க்கத்தானே போகிறோம்…

தொடரும்...

நன்றி - நாகூர் ரூமி மற்றும் தினமணி டாட்காம்

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!