கீழ்க்கண்ட கொடூரமான ரசாயன விஷங்கள் ஒவ்வொரு தடுப்பூசியிலும் உள்ளன. உலகில் தயாரிக்கப்படும் 74 வகையான தடுப்பூசி மருந்துகளிலும் இந்த ரசாயன நஞ்சுகள் அடங்கியுள்ளன. இந்த விஷங்களை நாம் நேரடியாக ரத்தத்தில் ஏற்றுகிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. நம் குழந்தைகள் ஆறு வயதைத் தொடும்போது இவை அனைத்தும் பரிசாகக் கிடைக்கிறது. இந்த அட்டவணையைக் கொஞ்சம் பாருங்கள்.
ரசாயன நஞ்சுகள் - பாதிப்படையும் பகுதிகள்
அம்மோனியம் சல்ஃபேட் - வயிறு, குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டல விஷம்
லாடெக்ஸ் ரப்பர் - திடீர் அதிர்ச்சி மற்றும் இறப்பு
எம்.எஸ்.ஜி. - பிறவிக் கோளாறு மற்றும் ஒவ்வாமை
அலுமினியம் - அலிமியர்ஸ் நோய், டிமென்ஷியா, வலிப்பு, கோமா
ஃபார்மால்டிஹைட் - மூளை மற்றும் குடல் புற்றுநோய்
பாலிசோர்பேட் 60 - நிரூபிக்கப்பட்ட புற்றுநோய்க் காரணி
டிரைபுடைல் பாஸ்பேட் - சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள்
குளுதரால்டிஹைட் - பிறவிக் குறைபாடுகளை ஏற்படுத்தும்
ஜெலடின், ஜெந்தாமைசின் சல்பேட் மற்றும் பாலிமைக்சின் பி - ஒவ்வாமை
பாதரசம் - வரலாற்றிலேயே கொடிய விஷமாகக் குறிப்பிடப்படுவது. மூளை, நரம்பு பாதிப்பை ஏற்படுத்தும். தொப்புள் கொடி வழியாகக் கருவில் வளரும் சிசுவை அடையும்.
நியோமைசின் சல்பேட் - சத்துகள் உறிஞ்சப்படுவதில் தடையை ஏற்படுத்தும், வலிப்பு மற்றும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டை ஏற்படுத்தும்
கார்பாலிக் அமிலம் - செல்களை பாதிக்கும் விஷம்
எதிலின்கிளைகால்/ பினோஜைதனால் போரக்ஸ் - எறும்புகளைக் கொல்லப் பயன்படும் விஷம்
இதெல்லாம் போதாதென்று, இவற்றோடு பாதிக்கப்பட்ட மனித, மிருக செல்களும் தேவைக்கேற்ப(!) சேர்க்கப்படுகின்றன. கருச்சிதைவு ஏற்பட்ட சிசுவின் திசுக்கள், பன்றி, ஆடு, குதிரைகளின் ரத்தம், முயலின் மூளைத் திசு, நாயின் சிறுநீரகப் பகுதிகள், பசுவின் இதயத் திசுக்கள் போன்றவையும் தடுப்பு மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன!
வேக்ஸின் இறப்புகள் - சில தகவல்கள்
சரி, இதெல்லாம் இருக்கட்டும். தடுப்பூசியால் ஏற்படும் உச்சபட்ச விளைவாகக் குறிப்பிடப்படுவது எது தெரியுமா? SIDSதான். SIDS என்றால் Sudden Infant Death Syndrome! அதாவது, குழந்தை திடீரென இறந்துபோய்விடும் என்பதைத்தான் டெக்னிகலாகச் சொல்கிறார்கள். நவீன கொலைகாரர்கள்!
இந்தத் தொடர்பில், சுற்றுச்சூழல் நலனுக்கான மருத்துவக் குழுவின் உறுப்பினர் டாக்டர் புகழேந்தி, தடுப்பூசி பற்றிக் கூறுவது கருத்தில் கொள்ளத்தக்கது:
‘ஒவ்வாமை காரணமாக எந்தத் தடுப்பு மருந்தும் இறப்பு உள்ளிட்ட பின்விளைவுகளை ஏற்படுத்த முடியும். அமெரிக்காவில் திம்மர்சால் வேதிப்பொருள் கலந்த தடுப்பூசிகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் தொடர்ந்து புழக்கத்தில் உள்ளது பற்றி அரசோ, மருத்துவர்களோ பேசுவதில்லை. தடுப்பூசி மருந்தில் கலப்படம் ஏற்பட்டாலோ அல்லது மருந்தின் திறனைக் காப்பதற்காகச் சேர்க்கப்படும் (Preservatives) வேதிப்பொருட்கள் வினை புரிந்தாலோ இறப்பு நிகழும் அபாயம் இருந்துகொண்டே இருக்கிறது என்பதை மருத்துவர்களும், பத்திரிகைகளும் வெளியிடுவதில்லை. மருந்துச் சந்தையின் பணம் காய்க்கும் மரமாக இருப்பது தடுப்பூசி. அதைப்பற்றி இப்போதாவது மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்’.
வேக்ஸின்கள் போட்டதால் ஏற்பட்ட சில மரணங்கள்
• 1870 – 71-களில் அம்மை நோய் ஜெர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. சுமார் 10 லட்சம் பேருக்கு அம்மை நோய் தோன்றியது. இவர்களில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் நூற்றுக்கு 96 பேர் அம்மை குத்திக் கொண்டவர்கள்!
• அமெரிக்கக் குழந்தைகளில் வாரத்துக்கு மூன்று பேர் தடுப்பூசியினால் இறக்கிறார்கள் என்று பெடரல் கவர்மென்ட் அறிக்கை கூறுகிறது.
• சாதாரண நிலையில் கக்குவான் இருமலால் இறப்பவர்கள் ஆண்டுக்குப் பத்துப் பேர்தான். கக்குவான் இருமலுக்கான தடுப்பூசிக்குப் பிறகு ஆண்டுக்கு 950 பேர் கக்குவான் இருமலால் இறக்கிறார்கள்.
• 2008. சென்னை திருவள்ளூர் அருகே நடந்த தடுப்பூசி முகாமில் தட்டம்மை தடுப்பூசி போட்டதில் நான்கு குழந்தைகள் இறந்தன. பெற்றோர்களுக்கு தலா மூன்று லட்ச ரூபாய்கள் இழப்பீடு கொடுக்கப்பட்டது.
• 2016. சென்னை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ராமாராவ் என்பவரின் மூன்று மாத பெண் குழந்தை தனுஜாஸ்ரீக்கு, ஓட்டேரியில் உள்ள மாநகராட்சி சுகாதார நிலையத்தில் மஞ்சள்காமாலை, ரனஜன்னி உள்ளிட்ட ஐந்து விதமான நோய்களில் இருந்து பாதுகாப்பதாகச் சொல்லப்படும் பென்ட்டாவாலன்ட் என்ற தடுப்பூசி போடப்பட்டது. ஊசி போட்ட சில நிமிடங்களில் குழந்தை இறந்துபோனது.
• தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபாகரன் - பரணி தம்பதியரின் ஆண் குழந்தைக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டது. கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுக் குழந்தை இறந்தது.