தவ்பா கோருவதில் ஆறு விஷயங்கள் இணைந்திருக்க வேண்டும்.
1. தன்னிடமிருந்து நிகழ்ந்துவிட்ட பாவத்திற்காக வருந்த வேண்டும்.
2. தான் நிறைவேற்றாமல் விட்டுவிட்ட கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
3. பிறர் உரிமையை அவர் அபகரித்து இருந்தால் திரும்ப கொடுக்க வேண்டும்.
4. தம்மால் பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் .
5. மீண்டும் அந்த பாவத்தை செய்யாமல் இருக்க உறுதி எடுக்க வேண்டும்.
6. இதற்கு முன்னர் நீ உன் மனதை பாவங்களின் அடிமையாக வைத்திருந்த அதைப்போன்று அதை இனி இறைவனுக்கு கீழ்ப்படியும் படி அடிமையாய் இருக்கும் படி செய்திட வேண்டும்.
இதற்கு முன்னர் நீ உன் மனதுக்கு பாவங்களின் சுவையூட்டி வளர்த்ததை போன்று இனி அதற்கு இறைவனுக்கு கீழ்ப்படிவதன் சுவையை ஊட்டி வளர்க்க வேண்டும்.
நூல் : தஃப்ஹீமுல் குர்ஆன்